sanchumahen
New member
அன்று
“வா மச்சான்” என்று தன்னைத் தேடிவந்த மூர்த்தியை வரவேற்றான் அழகன். இருவரும் வெவ்வேறு துறைகளில் பயிற்சி பெறுவதால் வெவ்வேறு இடங்களில் பயிற்சியில் இருந்தனர்.
“மச்சான் என்ற பேச்சே வேண்டாம் சின்னையா” என்ற மூர்த்தியை பார்த்த அழகன் "ஏன் வேண்டாம்?" என்று கேட்க தன்னிலை மறந்து ஆசைப்படுவதும் தப்பு. ஆசைப்பட வைப்பதும் தப்பு என்று இருபொருள்படக்கூற ---நெற்றியைச் சுருக்கி யோசனையுடன் பார்த்தவன்
“தத்துவ ஆசிரியர் ஆயிட்டீங்க போல மூர்த்தி சார்---ஆனால் ஒன்று தனது ஆசையை நிறைவேற்றத் தெரியாதவனுக்குத்தான் ஆசையை விதைப்பதைப் பற்றிய கவலை வரவேணும். எனக்கு அப்படி ஏதும் இல்லை. ஆசைப்பட்டதை செய்யும் புத்தியும் சக்தியும் நிரம்பவே எனக்கிருக்கு” என்று கூறியவன் முன் நிலத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து அழகனின் கால்கள் இரண்டையும் பற்றிக்கொண்ட மூர்த்தி ----
"சின்னையா தயவு பண்ணி எங்க குடும்பத்தை விட்டு விலகியிருங்க. நாங்க சாமானியர்கள் எங்களால தாங்க முடியாத சோதனைகளை தரதீங்க" என்று என்று கதற
பதறிப்போய் விலகிச் சென்றவன் உன்ரை டிறாமா எல்லாத்தையும் மூட்டைகட்டி வைச்சிட்டு எழும்பு என்று அதட்டலாக கூறிய த்வனியும் அவனின் உதாசீனமான அணுகுமுறையும் இவன் இதுவரை பார்த்திராதது. அழகனின் இந்த புதிய அவதாரம் வேதனையைத் தந்தது மூர்த்திக்கு.
காதல் மயக்கத்தின் முன் நட்பு என்பது ஓட்டைச் சொம்புதான் என்று பாவம் மூர்த்திக்குத்தான் தெரிந்திருக்கவில்லை.
“சின்னையா! நான் உங்களுக்கு மச்சானாக வரவிரும்பயில்லை கெஞ்சிக் கேட்கிறேன் எங்களின்ரை வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தாதீங்க என்று சொன்னவனின் கண்களிருந்த கண்ணீர் அவன் பயந்து போயிருக்கிறான் என்ற உணர்வைத் தர “மூர்த்தி யாருக்கும் பயப்பிட தேவையில்லை நீ எனக்கு மச்சான் தான் என்றதிலிருந்து நான் மாறப்போறதில்லை என்று உறுதிபடக்கூறியவனை பார்த்து விரக்தியுடன் சிரித்தான் மூர்த்தி
சின்னையா நாங்க ஏழைங்க----நான் உங்களது குடும்பத்தின்ரை தயவிலை படிக்கிறவன்----எங்களை தின்ற உப்புக்குத் துரோகம் செய்ய வெச்சிடாதீங்க எங்களை விட்டிடுங்க---இது எங்களுக்கு மட்டுமில்ல உங்களுக்கும்கூட நல்லதில்ல ----- சின்னையா உங்களுக்குப் புண்ணியமாகப் போகும் விட்டிருங்க என்று அரற்றியவனைப் பார்க்க பரிதாபத்திற்குப் பதிலாக மீண்டும் எரிச்சல்தான் வந்தது அழகனுக்கு.
"சாரி மூர்த்தி உன்ரை பயத்துக்கெல்லாம் பயந்து எந்த வாக்கும் என்னால தரமுடியாது. உனக்கு எல்லாம் தெரிஞ்சிட்டுது என்கிறது எனக்கு நிம்மதியாக இருக்கு ஆனால் ஒன்றை மட்டும் புரிஞ்சுகொள் எந்த காரணத்தைக் கொண்டும் என்ரை எண்ணத்தை நான் மாற்ற மாட்டேன் அப்படித்தான் உன்ரை தங்கையும் என்பது எனக்குத் தெரியும்" என்றவனை பரிதாமாகப் பார்த்து வைத்த மூர்த்தி ---
நீங்கள் சொல்லித்தான் நான் அவளைப்பற்றி தெரிஞ்சு கொள்ள வேணும் என்று நினைக்கிற உங்களின்ரை அப்பாவித்தனத்தை என்ன சொல்ல என்று மனதுள் நினைத்தவன்---
ஊர்சனம் சூடு போட்டதிலிருந்து இவர்கள் குடும்பத்தின் மீது வன்மம் வளர்த்துக் கொண்டிருக்கும் அவனது தகப்பன் மற்றும் தம்பி வசதியான வாழ்க்கைக்காகவும் இவனது தோற்றப் பொலிவிலும் மயங்கிக் கிடக்கும் தங்கை----
குடும்ப பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காத வடிவேல் அழகர்----இதையெல்லாம் கடந்து கடந்து திருமணம் முடித்து எப்படி சந்தோசமான வாழ்வை இந்த சின்னையா வாழமுடியுமா????
பவதியின்மீது பித்தாகிப் போயிருக்கும் அழகனை பேசி தன்வசப்படுத்த முடியாது எனக்கண்டவன் மனம் வெறுத்துப்போய்விட "நீங்கள் பூக்குழியில் விழ முடிவு செஞ்சிட்டீங்க இனி விதிவிட்டவழி" என்றபடி கதவைத்திறந்து வெளியேற விதி உதிர்த்த சொற்கள்தான் அவை எனப் புரியாது அவனைத் திருபம்ப அழைக்கும் நோக்கம் இன்றி பார்த்திருந்தான் அழகன்.
-----------------------------------------------------------------------------------------
லக்ஷ்மியின் குறைமாதபிரசவம் ஒரு பக்கம் சுணக்கத்தைத் தந்தாலும் தன்பிள்ளை எப்படியும் பிழைத்துக் கொள்வான் என்ற மாணிக்கராசனின் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் மீண்டு வந்தான் மகன்.
எந்நேரமும் தமக்கையின் மடியிலேயே துயில் கொள்பவன் தாயிடம் செல்வது பால் குடிக்கமட்டுமே. தம்பியைத் தன் மகனாக வரித்தவள் அவனுக்கு வாணி ரீச்சரிடம் கேட்டு சுயன் என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கினாள். அதுவும் மாணிக்கராசன் வைத்த பெயரில் இருந்து எழுத்துக்களைப் பொறுக்கி எடுத்து வாணிரீச்சர் இந்த பெயரைத் தெரிவுசெய்திருக்க காரணப் பெயராக அது பொருந்தியிருந்தது.
ஆம் உண்மைதான்---குறைப்பிரசவத்தில் இறந்துவிடுவான் என்று கணிக்கப்பட்டவன் பீனிக்ஸ் பறவைபோல் மரணத்திலிருந்து அசுரனைப்போல பிழைத்து வந்திருந்தான்.
மகன் பிறந்தது எவ்வளவுக்கு எவ்வளவு பூரிப்பைத் மாணிக்கராசனுக்குத் தந்ததோ அவ்வளவுக்கு அவ்வளவு பூரணிக்கும் மகிழ்ச்சியை தந்தது.
அவளது பாசம் முழுவதையும் வென்றவன் பால் உண்ணட மயக்கத்தில் தூங்க "அவளது அக்காவையும்" மகனையும் எந்தவித மனசுணக்கமும் இல்லாது பராமரித்துக் கொண்டவளுக்கு ஓயாத வேலைகள் காத்திருக்க விரைவாக அவற்றையெல்லாம் முடிப்பவள் ஓடிவந்து குழந்தைக்கு அருகில் அமர்ந்து கொள்வாள்.
குழந்தை பிறந்தபின் தனக்கும் தாயாகிப் போன தன்மகளை அப்போதுதான் ஆறஅமர கவனித்த லக்ஷமிக்கு அவளின் அப்பழுக்கற்ற அன்பும் அப்பாவித்தனமும் முன்எப்போதும் இல்லாத பாசத்தைத் தோற்றுவிக்க தன்மகளை முதன்முதலாக காணும் தாயைப்போல பாத்திருந்தவளுக்கு அவளை மீறி பூரணிமேல் அன்பு சுரந்தது என்னமோ உண்மைதான்.
வீட்டில் வேலைகள் அதிகரித்த போதும் நாளில் ஒரு தடவையாவது பெரிய வீட்டிற்குப் போக தவறாதவள் சின்னையாவிற்கு வரும் வைகாசி விசாக பொங்கல் தினத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதை எண்ணி எண்ணி பூரித்துப் போனாள்.
மாப்பிள்ளைக்கே தெரிவிக்கப்படாத நிச்சயதார்த்த ஏற்பாடல்லவா இது! வடிவேல் அழகர் தனது சாமர்த்தியம் எல்லாவற்றையும் காட்டி அழகன் ஆசைப்பட்ட பெண் என்றே மகனுக்கும் மருமகளுக்கும் புனிதாவை மணம்முடிக்க ஏற்பாடு செய்ததுடன் அழகனுக்கு பிறந்தநாள் பரிசாக இதைதானே தெரிவிப்பதாகத் தெரிவித்து மகனதும் மருமகளதும் வாய்க்கு பெரிய திண்டுக்கல் பூட்டாகப் போட்டுப்பூட்டிவிட்டார்.
வைகாசி விசாகப் பொங்கல் அன்றைய தினம் கந்தவேள் அழகருக்கும் வள்ளியம்மைக்கும் மணநாள் அத்துடன் அழகன் பிறந்தநாள் அடுத்துவரும் கிழமை வழமைபோல கந்தசுவாமி கோயில் மணவாளப் பெருவிழா வடிவேல் அழகர் வீட்டில் கொண்டாட்டத்திற்குப் பஞ்சமா இருக்கப்போகின்றது?
அறிவியல் நகரில் நடைபெறும் என்றிருந்த நிச்சயதார்த்தம் அழகர்புரத்தில் நடைபெற இருக்க பத்து நாட்களுக்கு முன்னமே வள்ளியம்மா வந்துவிடுவார் என்பதை அறிந்த நேரம் தொடக்கம் பூரணிக்கு கால் நிலத்தில் பரவமாட்டேன் என்றுதான் அடம்பிடிக்கின்றது.
தாயைவிட பரிவுகாட்டும் வள்ளியம்மாவிடம் அப்படியொரு பற்றுதல். வீட்டில் கூட லக்ஷ்மியிடம் வள்ளியம்மா வரப்போகிறார் பத்துநாள் நிற்பார் என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தவளை வேதனையுடன் பார்த்த லக்ஷ்மிக்கு தான் அவளுக்கு ஏற்படுத்தியிருக்கும் வெறுமைகூட காலங்கடந்து தெரிய ஏன் இவ்வாறு நடந்துகொண்டோம் என்ற கழிவிரக்கம் தவிர்க்கமுடியாமல் ஏற்பட்டிருந்தது.
இந்த கழிவிரக்கம் வள்ளியம்மா ஏன் வருகிறார் என்பதை கேட்க தூண்டவில்லை என்பதுடன் கேட்டிருந்தாலும் அதை பூரணி யாரிடமும் பகிர்ந்து கொண்டிருக்க மாட்டாள் என்பது வேறான விசயம்தான்.
அழகனது நிச்சயதார்த்தம் பெரியவீட்டிற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த போதும் மற்றவர்களுக்குத் தெரியாமல் பாதுகாக்கப்பட்டிருந்தது. பூரணிக்குச் சொன்ன காத்தாயிகூட வெளியில் மூச்சுவிடக்கூடாதென்றே சொல்லியிருக்க அதை தாண்டுவாளா பூரணி?
பெரியவீட்டினருடன் நெருங்கிப் பழகாத பவதி குடும்பத்திற்கு அழகனது நிச்சயதார்த்தம் பற்றி எதுவும் தெரியவரவில்லை. காவேரியும் அவளது இளைய மருமகளும் தமது போராட்டக் களத்தில் ஆழ்ந்துபோயிருக்க பவதிக்கு தகவல் தெரிவிப்பார்தான் யாருமில்லை.
அதுவும் கணேசனின் மனைவி வந்த பின்னர் மூர்த்தி என்னதான் சொல்லிச் சென்றானோ தெரியவில்லை இவள் எதையெல்லாம் சாட்டு வைத்து வெளியில் செல்வாளோ அதையெல்லாம் கச்சிதமாக வந்த மருமகள் செய்ய எதைச் சொல்லி வெளியில் போவது என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு கணேசன் எந்த நேரமும் மனைவியைச் சுற்றிக்கொண்டு வீட்டில் இருப்பது புதிய தலைவலியை ஏற்படுத்தியிருந்தது.
இவை எல்லாம் போதாதற்கு காவேரியின் பெரிய அண்ணன் இரத்தினம் பவதியைப் பெண்கேட்டு வந்தது உச்சக்கட்ட எரிச்சலை இவளுக்கு தர அந்த கருவாயனைக் கட்டமாட்டேன் என்று இவள்பிடித்த அடம் நாகராசனுக்கும் கணேசனுக்கும் ஆச்சரியத்தைத் தந்த தென்றால் வடிவேல் அழகரது தூண்டுதலின் பேரில்தான் பெரியமாமன் வந்திருக்கிறார் என்பது பதட்டத்தைத் தோற்றுவிக்க பத்து விரல்களில் இருந்த அத்தனை நகங்களையும் இரத்தம் வரும் வரையும் கடித்துத் துப்பிக் கொண்டவளுக்கு வந்த பதட்டம் அவள் இதுவரை அனுபவித்திராதது.
எதற்கு வடிவேல் அழகர் தனது திருமணத்தில் ஆர்வம் காட்டுகிறார் என்பதை புரியாத அழவிற்கு அவள் மக்கல்ல ஆனாலும் பொதுவாகவே பரோபகாரியான பெரியவர் ஊர்மக்கள் மீது கொண்ட அக்கறையில் செய்யும் நல்ல காரியம் தானோ இது என்ற சந்தேகமும் அவள் மனதில் ஓடிக்கொண்டுதான் இருந்தது.
அழகனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வென்று இவள் பலதையும் யோசித்துக் கொண்ருக்க வந்திறங்கிய மூர்த்தியைப் பார்த்தவள் அதிர்ந்துபோய் நின்றிருந்தாள்.
இன்று
இன்றுடன் விஷ்ணு வீட்டிற்கு வந்து மூன்று நாட்கள் கடந்திருந்தது. அவன் மீது சுமத்தப்பட்டிருந்த பொய்க்குற்றச் சாட்டுகள் மறுக்கப்பட்டிருந்தாலும் அவன் உடலிலும் உள்ளத்திலும் பட்ட காயங்களும் அவற்றின் வலிகளும் அவனை கண்மூடி துயில் கொள்ள விடாது தடுக்க ஒரு பைத்தியக்காரனைப் போலவே அந்த கராஜ்ஜின் ஒரு பக்கத்தில் படுத்திருந்தான்.
குருவப்பாவும் கணக்கர் சோமுவும் அவனைத் தேடிவந்து பேச முயன்றாலும் யாரிடமும் அவன் முகம் கொடுத்துப் பேசினான் இல்லை.
உண்மையில் அவனுக்கு அவன் போகும் பாதைபற்றிய தெளிவு தேவைப்பட தன்வாழ்வில் கடந்த சில மாதங்களாக தன்னைமீறி நடக்கும் எல்லா விசயங்களையும் சீர்துக்கிப் பார்க்கத் தொடங்கியவன் தான் நேரடியாகப் பார்க்கும் விசயங்களுக்குப் பின்னால் வேறு ஏதோ ஒளிந்து இருக்கின்றதோ என்று சந்தேகம் கொண்டான்.
குறிப்பாக இவனது மாமா எவ்வாறு தன்னுடன் நடந்து கொண்டார் என்பதைப் பார்த்தவனுக்கு இறப்பதற்கு முன்னர் அவர்காட்டிய பாசம் அதற்கான காரணங்கள் எவையும் புரியவில்லை.
அம்மா இறந்தபின் இவன் ஆச்சிரமத்தில் சேரும் வரையிலான அந்த இடைப்பட்ட சிலநாட்கள் இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருந்தது. அதிலும் பசியால் அவன் மயங்கி கிடந்த அன்றுதான் அங்கு வந்த ஜெயானந்தம் ஐயா அவனை ஆச்சிரமத்திற்குத் தூக்கிச் சென்றார்.
ஆச்சிரமவிதிகளின்படி அங்கிருந்து வெளியேறி சிலவருடங்கள் கராஜ்ஜில் மெக்கானிக்காக வேலை செய்தகாலம் தொடக்கம் டுபாய் போகும் வரையிலான காலப்பகுதியிலும் இதே வீட்டிலும் கராஜ்ஜிலும் தான் அவன் காலம் கழிந்தது. அப்போதும் இதே மாமா பார்த்துக் கொண்டு தானேயிருந்தார். பிறகு என்னதான் நடந்திருக்கும்??
அந்த குருவப்பா சொல்வது போல உண்மையிலேயே தன் தவறுகளை உணர்ந்து என்னை நாடிவந்திருப்பாரோ? சொந்தம் விட்டுப்போகக்கூடாது என்று இந்த காளியை எனக்கு கட்டி வைத்ததாகத்தானே எல்லோரும் பேசிக்கொண்டனர்.
இது தொடர்பான உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும்போது இந்த கதை முழுவதும் தெரிந்த ஒருசிலர் இவன் மனக்கண்முன்னே வந்து போயினர் அதில் குருவப்பா, கணக்கர் சோமு, அவனது அத்தை பாமதி மற்றும் அவரது அக்கா பார்வதி அடக்கம்.
நிச்சயமாக பாமதி மற்றும் பார்வதியிடமிருந்து எதையும் அவன் அறிய முடியாது. ஆனால் குருவப்பா கணக்கர் சோமு இவர்களிடமிருந்து தனக்கு வேண்டியதைப் பெறமுடியும் .
அதற்கு தனது தற்போதைய அணுகுமுறையை மாற்ற வேண்டும்--- மாற்றுறேன்---- கண்டுபிடிக்கிறேன் என்று முடிவெடுத்தவன் மூன்றாம் நாள் தனது வீட்டிற்குத் திரும்பிவந்திருந்தான் யாரது வேண்டுதல் வற்புறுத்தல்கள் எதுவுமின்றி.
அதற்காக அவளை மன்னித்துவிட்டான் என்றோ அவள் செய்த அனைத்தையும் மறந்துவிட்டான் என்றோ கூறமுடியாது. தனது அனுபவங்களை வலிக்க வலிக்க நினைத்து தனது பாதையை வடிவமைத்துக் கொண்டான் அவ்வளவேதான்
இந்த மூன்று நாட்களில் லயாவின் நிலைமைதான் மிகவும் துன்பமாகிப் போயிருந்தது. போலீஸ் ஸ்டேசனிலிருந்து தாயுடன் வீட்டிற்கு வந்தவளுக்கு அப்போது தான் அவளது அக்காக்கள் மற்றும் அத்தான்கள் செய்துவிட்ட வேலைகளின் முழுபரிமாணமும் தெரிய வந்திருந்தது.
விஷ்ணுவை போலீஸ் லாக்கப்பில் வைத்து விசாரணை நடத்தியதையும் அவனை மோசமாகத் தாக்கியதைப் பற்றியும் அறிந்து கொண்டவளுக்குக் குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல் போய்விட்டது. ஐயோ என்ன இப்படியாகிப் போச்சே ---- என்று மீண்டும் மீண்டும் தவித்தாள்.
என்ன மேடம் புதுசா இருக்கு! அவனுக்கு அடிபட்டதுக்கு துடிக்கிறீங்க லவ்வா? இல்லை இந்த சினிமாவில் வருமே மஞ்சள் கயிறு மேஜிக் என்று ஒரு வார்த்தை அதுவா? என்று கேட்ட மனச்சாட்சிக்கு சீச்சீ ---லவ்வும் இல்லை--- ஒரு மண்ணும் இல்லை--- ஒரு மேஜிக்கும் இல்லை.
என்னுடைய பொய்யான குற்றச்சாட்டால் இப்படியாகிவிட்டதே என்ற உறுத்தல்தான் காரணம்என்று துடித்த மனதிற்கு இவளின் இன்னொரு மனம் நியாயம் சொல்ல
அன்று அக்காக்களை அவன் வா என்று கூப்பிடாதபோது மறந்து போன நன்றியுணர்ச்சியெல்லாம் பொங்கிப் பிரவகிக்க தான் மனநிம்மதியுடன் தேர்விற்குப் போக இவன் அன்று என்னுடன் அழகர்புரம் வந்ததுதானே காரணம்--
சீ----நீயெல்லாம் என்ன பொம்பளயடி? படிச்சு என்ன பிரயோசனம்? ஒரு பத்திரத்தில் என்ன எழுதியிருக்கு என்று பார்த்து கையெழுத்துப் போட மாட்டியா? அதுவும் உன்னைக் கட்டாயக் கல்யாணம் செய்ததாக ----இப்ப என்ன பண்ணுறது என்று கையைப் பிசைந்தவளுக்கு வழியொன்றும் புலப்படவில்லை.
எப்போதுமே அப்படித்தான் ஏமாற்று சுத்துமாத்து இவை அவளுக்குச் சுட்டுப்போட்டாலும் வராது. நியாயமில்லாமல் யார் நடந்தாலும் அவளுக்குப் பொறுக்காது. தன்னிடம் தவறென்று அவளின் மனச்சாட்சிக்குத் தோன்றினால் உடனடியாக மன்னிப்பை கேட்கவும் அவள் தயங்குவதில்லை.
கல்லூரியில்கூட சீனியஸின் புறஜெக்டை மற்றவர்கள் காப்பியடித்து சப்மிட் பண்ணினாலும் தனது புறஜெக்டைச் தானே கஷ்டப்பட்டுத்தான் அவள் செய்வாள். அப்படிப்பட்டவளுக்கு இந்த உறுத்தல் இயல்புதானே..
தனது அப்பாவிடமிருந்து ஏதோ ஒன்றைச் செய்து தங்களது குடும்பத்துக்குரிய சொத்தை விஷ்ணு அபகரித்துவிட்டான் என்ற கோபம் இன்றுவரை அவளுள் இதனால் தான் கனன்றுகொண்டிருக்கிறது.
அக்காக்கள் வழக்கு வைக்கப் போகிறோம் சொத்துக்களைத் திரும்ப வாங்கப்போகின்றோம் நீ கெயெழுத்தைப் போடு என்று மட்டுமே சொல்லியிருந்தனர்.
இவளுக்கு வழக்குகள் பற்றியோ அவற்றின் நடைமுறை பற்றியோ எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் தங்களது சொத்துகள் யாவும் அவன் வசம்போனதைத் தாங்க முடியாமல்தானிருந்தது.
அவனைத் திருமணம் செய்ததன்மூலம் அவை தனக்கும் உரியானவையாக மாறிவிட்டன என்பதை அவள் உணர்வதற்கு அவள் தன்னை ஆராய்ந்து பார்க்காதது ஒருபுறம் என்றால் அக்காக்களின் வாழ்க்கை மறுபுறம்.
மனம் ஒப்பா திருமணமும் சகோதரபாசமும் அவன் சொத்துக்களைத் திருப்பி தராது எல்லாம் சேர்ந்து அவனிடமிருந்து சட்டப்படி அவற்றைப் பறிக்க வேண்டும் என்ற வாதத்திற்கு அவளைச் சாதகமாக நடத்திவிட்டிருந்தது.
உண்மையிலேயே விஷ்ணு அவளது மனதில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கிறானா??? அந்த கேள்வியை அவள் கேட்டுப் பார்க்க நினைத்ததில்லை என்பது தான் உண்மை---
அதுவும் வைத்திய பரிசோதனையில் அவளது இரண்டு அக்காக்களில் எந்த குறைபாடும் இல்லை என்று சொல்லப்பட்ட போதிலும் அத்தான்களை வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்த அவர்களது அம்மா அப்பா விடவில்லை என்று கூறி இருவரும் எந்தவிதமான பரிசோதனைகளும் செய்யவில்லை என்பது தெரிய வந்தபோது அவர்களின் தந்திரம் புரிந்து விக்கித்துப் போய்விட்டாள்.
மூன்றாம் நாள் மாலையில் வீட்டிற்கு வந்தவனைக் கண்டதும் இனி மகளுக்கு அவன் துணையிருப்பான் என்ற முடிவுடன் பாமதி கிளம்பிப்போனார் அவரின் ஊழ்வினை வந்து உறுத்த காத்திருக்கின்றது என்பதை அறியாமல்.
வந்தவனை பார்தவள் பயந்துதான் போனாள். ஒரு பக்க முகம் கன்றிப் போயிருந்தது. கடவுளே இப்படியா அடிப்பான்கள் என்று தன்னை நொந்து கொண்டவள் அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு இருந்தாள் எப்போதவது ஒரு இளக்கம் அவனிடம் காணப்பட்டால் தனது தவறிற்கு ஒரு சாரி சொல்வதற்காக
ஆனால் விஷ்ணு இவளது முகத்தையே ஏறெடுத்தும் பார்த்தானில்லை. வந்தவன் அந்த நிமிஷமே தனது கயிற்றுக் கட்டிலை எடுத்துக்கொண்டு அங்கு தற்காலிகமாக கட்டப்பட்டிருந்த தகர கொட்டிலுக்குள் போய் படுத்துக் கொண்டான்.
இவன் வெளியே எங்கோ படுத்திருக்க எப்படி வீட்டிற்குள் படுப்பது???? இது தான் அவளுக்கு தற்போதைய பிரதான பிரச்சினை. அவளுக்குத் தனிமையும் இருட்டும் எதிரிகள் பயத்தில் உயிரே போனமாதிரி ஆகிவிட்டது.
அந்த வீட்டின் பின்புறம் இருந்த கழிப்பறைக்குச் செல்ல இவளுக்கு ரொம்பவே பயம். அதுவும் ஆளண்டா தோட்ட வெளியில் இருந்த அந்த வீட்டில் எப்படிப்போவாள்?
ஒருதடவை இங்கு வந்தபின் வெளியில் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தவனை இவள் பயத்துடன் எழுப்பியிருந்தாள் அன்று தொடக்கம் இரவு வேளைகளில் இவள் றெஸ்ட் றூம் போக லைட்டைப் போட்டதும் எழும்பி வருபவன் கிணற்றடியில் போய் நின்று கொள்வான். இவள் மீண்டும் வந்து உள்ளே படுத்தபின்தான் உள்ளே வந்து கதவை மூடுவான்.
இன்று அவனுக்குப் பக்கத்தில் போகவே பயமாக இருந்தது. அதுவும் அவனது முகத்தில் இருக்கும் கண்டல் காயமும் வீக்கமும் மட்டுப்பட்டது போல இருந்தாலும் நிச்சயம் வலி இருக்கும்----
தான் ஏதாவது பேசப்போக அவன் அடித்துவிடுவான் என்ற பயம் மனதில் இருந்ததால் அவன் அருகில் போகவே அஞ்சியவள் இரவில் றெஸ்ட் றூம் போகமல் இருப்பதற்காக தண்ணீர் தாகமிருந்தும் குடிக்காமலிருந்தாள்.
மனச்சாட்சி அவளின் தப்பைச் சுட்டிக்காட்க்கொண்டிருக்க பயம் அவளை நடுங்க வைத்துக்கொண்டிருக்க மூளை வேலைநிறுத்தம் செய்திருக்க சார்ஜ்போன ஃபோனைப்போல வாளாதிருந்தாள்.
அவனோ இவள் இருக்கும் திசைப்பக்கமே பார்க்க மறுக்க இவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க ------ ஒரு வித்தியாசமான கோணத்தில் அவர்களின் கதை நகர தொடங்கியிருந்தது.
அதுவும் இன்று காலை அவள் கழுத்திலிருந்த தாலி அவளயைறியாமல் காணாமல் போயிருந்தது. காலேஜ்க்குப் போவதால் தாலியை மட்டும் ஒரு செயினில் கோர்த்துப் போட்ருந்தாள்.
அவனுக்கு கணவன் என்ற இடத்தைக் கொடுக்க தயங்கினாலும் அவன் கட்டிய தாலிக்கு உரிய இடம் அங்கே கிடைத்திருந்தது . குளிக்க என்று வந்தவளுக்கு தாலியைக் காணாததது பயத்தை தோற்றுவிக்க இரவு உடையை மீண்டும் அணிந்து கொண்டு குளியல் அறையிலிருந்து வீட்டுக்குள் ஓடிவந்து தேட அது எங்கேயும் கிடைக்கவில்லை.
இதயம் வேகமாக அடிக்க கண்கள் நீரில் நிரம்பியிருக்க அழுதுகொண்டு அந்த வீட்டில் அவள் உலாவித்திரிந்த இடமெல்லாம் தேடியும் அது கண்ணில் பட மறுத்தது.
தாலி தொலைந்து போவது நல்லதிற்கல்ல என்பது மட்டும் தெரிந்திருந்தவள் துடித்துத்துடித்து அழுதாள். அதை ஒரு தங்க ஆபரணமாக மட்டும் அவளால் எண்ணமுடியவில்லை என்பது ஒருபுறம் என்றால் இந்த தாலியும் அதனால் வரும் தீயதும் அவனுக்குரியதுதானே நான் ஏன் வருந்துகின்றேன் என்ற ஒரு கேள்வியை அவள் தன்னைத்தானே கேட்டிருந்தால் அவளது வாழ்க்கைப் பாதை அவளது மனம் இரண்டும் எதைநோக்கிச் செல்கின்றது என்பதை அவள் புரிந்திருப்பாளோ என்னவோ----ஆனால் விதி விடவில்லை------அவள் அறுவடை செய்யவேண்டியவை ஏராளமாக இருந்தன.
அழுது ஆகப்போவது ஒன்றும் இல்லை என்று நினைத்தவள் எதற்கும் கட்டிலை ஒழுங்கு படுத்திப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் அதிலிருந்த பெட்சீட் உட்பட அத்தனையையும் ஒவ்வொன்றாக உதறிப் பார்க்க தாலி மட்டும் அவளது கைக்கு வந்திருந்தது அதனை எடுத்த வேகத்தில் நெஞ்கோடு அணைத்துக் கொண்டவள்
அவன் கட்டியதால அவன்ரை புத்திதான் உனக்கும் இருக்கு----அவனும் என்னை சுத்தவிட்டுப் பார்க்கிறான் மன்னிப்புக்கூட கேட்க முடிமாமல் கெடக்கு. நீ ஒளிஞ்சிருந்து என்னை அலறவிடுறாய் என்ற படி அதைஎடுத்து சுவாமி படத்தின் முன் வைத்தவள் தனது தாலியைக் காப்பாற்றும்படி அவளது குலதெய்வமான வரமுத்துமாரியம்மனிடம் வேண்டியதுதான் இவை எல்லாவற்றிலுமே ஹைலைட்ஆக இருந்தது
அது சரி இவள் தாலியைக் காப்பாற்று என்று கேட்டது தங்கம் விற்கிற விலையினால் அல்ல என்பது அந்த வரமுத்துமாரியம்மனுக்கும் புரிய அவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லைபோலும் எங்கே தான் சத்தமாகச் சிரித்தால் இவள் சமாதியாகிவிடுவாளோ என்று பயந்தவர் புன்சிரிப்புடன் நிறுத்திக்கொள்ள இவள் அம்மனையும் தாலியையும் மாறிமாறிப் பார்த்திருக்க இவள் தாலியைக் கோர்த்து அணிந்திருந்த செயின் கதவின் பின்னாலிருந்து இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
மறுபடியும் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டவள் குளித்து முடித்து றூமுக்குள் நுழையவும் இவள் போன் அடிக்கவும் சரியாக இருந்தது. அதே நேரம் சார்ஜ் தீர்ந்து போனதால் தனது போனைச் சார்ஜில் போடுவதற்கு வந்தவனை இவளது உற்சாகமான போன் உரையாடல் தேக்க சற்று நிதானித்து அவளது பேச்சை உற்றுக்கேட்க----இவளது வாழ்க்கைப் பாதையில் மறக்க முடியாத சம்பவத்தைச் செய்யும் தீர்மானத்தை எடுத்திருந்தான். சாண் ஏற முழம் சறுக்கும் இவர்களின் வாழ்வு என்று தான் சீரான பாதையில் பயணிக்கும்???
“வா மச்சான்” என்று தன்னைத் தேடிவந்த மூர்த்தியை வரவேற்றான் அழகன். இருவரும் வெவ்வேறு துறைகளில் பயிற்சி பெறுவதால் வெவ்வேறு இடங்களில் பயிற்சியில் இருந்தனர்.
“மச்சான் என்ற பேச்சே வேண்டாம் சின்னையா” என்ற மூர்த்தியை பார்த்த அழகன் "ஏன் வேண்டாம்?" என்று கேட்க தன்னிலை மறந்து ஆசைப்படுவதும் தப்பு. ஆசைப்பட வைப்பதும் தப்பு என்று இருபொருள்படக்கூற ---நெற்றியைச் சுருக்கி யோசனையுடன் பார்த்தவன்
“தத்துவ ஆசிரியர் ஆயிட்டீங்க போல மூர்த்தி சார்---ஆனால் ஒன்று தனது ஆசையை நிறைவேற்றத் தெரியாதவனுக்குத்தான் ஆசையை விதைப்பதைப் பற்றிய கவலை வரவேணும். எனக்கு அப்படி ஏதும் இல்லை. ஆசைப்பட்டதை செய்யும் புத்தியும் சக்தியும் நிரம்பவே எனக்கிருக்கு” என்று கூறியவன் முன் நிலத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து அழகனின் கால்கள் இரண்டையும் பற்றிக்கொண்ட மூர்த்தி ----
"சின்னையா தயவு பண்ணி எங்க குடும்பத்தை விட்டு விலகியிருங்க. நாங்க சாமானியர்கள் எங்களால தாங்க முடியாத சோதனைகளை தரதீங்க" என்று என்று கதற
பதறிப்போய் விலகிச் சென்றவன் உன்ரை டிறாமா எல்லாத்தையும் மூட்டைகட்டி வைச்சிட்டு எழும்பு என்று அதட்டலாக கூறிய த்வனியும் அவனின் உதாசீனமான அணுகுமுறையும் இவன் இதுவரை பார்த்திராதது. அழகனின் இந்த புதிய அவதாரம் வேதனையைத் தந்தது மூர்த்திக்கு.
காதல் மயக்கத்தின் முன் நட்பு என்பது ஓட்டைச் சொம்புதான் என்று பாவம் மூர்த்திக்குத்தான் தெரிந்திருக்கவில்லை.
“சின்னையா! நான் உங்களுக்கு மச்சானாக வரவிரும்பயில்லை கெஞ்சிக் கேட்கிறேன் எங்களின்ரை வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தாதீங்க என்று சொன்னவனின் கண்களிருந்த கண்ணீர் அவன் பயந்து போயிருக்கிறான் என்ற உணர்வைத் தர “மூர்த்தி யாருக்கும் பயப்பிட தேவையில்லை நீ எனக்கு மச்சான் தான் என்றதிலிருந்து நான் மாறப்போறதில்லை என்று உறுதிபடக்கூறியவனை பார்த்து விரக்தியுடன் சிரித்தான் மூர்த்தி
சின்னையா நாங்க ஏழைங்க----நான் உங்களது குடும்பத்தின்ரை தயவிலை படிக்கிறவன்----எங்களை தின்ற உப்புக்குத் துரோகம் செய்ய வெச்சிடாதீங்க எங்களை விட்டிடுங்க---இது எங்களுக்கு மட்டுமில்ல உங்களுக்கும்கூட நல்லதில்ல ----- சின்னையா உங்களுக்குப் புண்ணியமாகப் போகும் விட்டிருங்க என்று அரற்றியவனைப் பார்க்க பரிதாபத்திற்குப் பதிலாக மீண்டும் எரிச்சல்தான் வந்தது அழகனுக்கு.
"சாரி மூர்த்தி உன்ரை பயத்துக்கெல்லாம் பயந்து எந்த வாக்கும் என்னால தரமுடியாது. உனக்கு எல்லாம் தெரிஞ்சிட்டுது என்கிறது எனக்கு நிம்மதியாக இருக்கு ஆனால் ஒன்றை மட்டும் புரிஞ்சுகொள் எந்த காரணத்தைக் கொண்டும் என்ரை எண்ணத்தை நான் மாற்ற மாட்டேன் அப்படித்தான் உன்ரை தங்கையும் என்பது எனக்குத் தெரியும்" என்றவனை பரிதாமாகப் பார்த்து வைத்த மூர்த்தி ---
நீங்கள் சொல்லித்தான் நான் அவளைப்பற்றி தெரிஞ்சு கொள்ள வேணும் என்று நினைக்கிற உங்களின்ரை அப்பாவித்தனத்தை என்ன சொல்ல என்று மனதுள் நினைத்தவன்---
ஊர்சனம் சூடு போட்டதிலிருந்து இவர்கள் குடும்பத்தின் மீது வன்மம் வளர்த்துக் கொண்டிருக்கும் அவனது தகப்பன் மற்றும் தம்பி வசதியான வாழ்க்கைக்காகவும் இவனது தோற்றப் பொலிவிலும் மயங்கிக் கிடக்கும் தங்கை----
குடும்ப பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காத வடிவேல் அழகர்----இதையெல்லாம் கடந்து கடந்து திருமணம் முடித்து எப்படி சந்தோசமான வாழ்வை இந்த சின்னையா வாழமுடியுமா????
பவதியின்மீது பித்தாகிப் போயிருக்கும் அழகனை பேசி தன்வசப்படுத்த முடியாது எனக்கண்டவன் மனம் வெறுத்துப்போய்விட "நீங்கள் பூக்குழியில் விழ முடிவு செஞ்சிட்டீங்க இனி விதிவிட்டவழி" என்றபடி கதவைத்திறந்து வெளியேற விதி உதிர்த்த சொற்கள்தான் அவை எனப் புரியாது அவனைத் திருபம்ப அழைக்கும் நோக்கம் இன்றி பார்த்திருந்தான் அழகன்.
-----------------------------------------------------------------------------------------
லக்ஷ்மியின் குறைமாதபிரசவம் ஒரு பக்கம் சுணக்கத்தைத் தந்தாலும் தன்பிள்ளை எப்படியும் பிழைத்துக் கொள்வான் என்ற மாணிக்கராசனின் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் மீண்டு வந்தான் மகன்.
எந்நேரமும் தமக்கையின் மடியிலேயே துயில் கொள்பவன் தாயிடம் செல்வது பால் குடிக்கமட்டுமே. தம்பியைத் தன் மகனாக வரித்தவள் அவனுக்கு வாணி ரீச்சரிடம் கேட்டு சுயன் என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கினாள். அதுவும் மாணிக்கராசன் வைத்த பெயரில் இருந்து எழுத்துக்களைப் பொறுக்கி எடுத்து வாணிரீச்சர் இந்த பெயரைத் தெரிவுசெய்திருக்க காரணப் பெயராக அது பொருந்தியிருந்தது.
ஆம் உண்மைதான்---குறைப்பிரசவத்தில் இறந்துவிடுவான் என்று கணிக்கப்பட்டவன் பீனிக்ஸ் பறவைபோல் மரணத்திலிருந்து அசுரனைப்போல பிழைத்து வந்திருந்தான்.
மகன் பிறந்தது எவ்வளவுக்கு எவ்வளவு பூரிப்பைத் மாணிக்கராசனுக்குத் தந்ததோ அவ்வளவுக்கு அவ்வளவு பூரணிக்கும் மகிழ்ச்சியை தந்தது.
அவளது பாசம் முழுவதையும் வென்றவன் பால் உண்ணட மயக்கத்தில் தூங்க "அவளது அக்காவையும்" மகனையும் எந்தவித மனசுணக்கமும் இல்லாது பராமரித்துக் கொண்டவளுக்கு ஓயாத வேலைகள் காத்திருக்க விரைவாக அவற்றையெல்லாம் முடிப்பவள் ஓடிவந்து குழந்தைக்கு அருகில் அமர்ந்து கொள்வாள்.
குழந்தை பிறந்தபின் தனக்கும் தாயாகிப் போன தன்மகளை அப்போதுதான் ஆறஅமர கவனித்த லக்ஷமிக்கு அவளின் அப்பழுக்கற்ற அன்பும் அப்பாவித்தனமும் முன்எப்போதும் இல்லாத பாசத்தைத் தோற்றுவிக்க தன்மகளை முதன்முதலாக காணும் தாயைப்போல பாத்திருந்தவளுக்கு அவளை மீறி பூரணிமேல் அன்பு சுரந்தது என்னமோ உண்மைதான்.
வீட்டில் வேலைகள் அதிகரித்த போதும் நாளில் ஒரு தடவையாவது பெரிய வீட்டிற்குப் போக தவறாதவள் சின்னையாவிற்கு வரும் வைகாசி விசாக பொங்கல் தினத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதை எண்ணி எண்ணி பூரித்துப் போனாள்.
மாப்பிள்ளைக்கே தெரிவிக்கப்படாத நிச்சயதார்த்த ஏற்பாடல்லவா இது! வடிவேல் அழகர் தனது சாமர்த்தியம் எல்லாவற்றையும் காட்டி அழகன் ஆசைப்பட்ட பெண் என்றே மகனுக்கும் மருமகளுக்கும் புனிதாவை மணம்முடிக்க ஏற்பாடு செய்ததுடன் அழகனுக்கு பிறந்தநாள் பரிசாக இதைதானே தெரிவிப்பதாகத் தெரிவித்து மகனதும் மருமகளதும் வாய்க்கு பெரிய திண்டுக்கல் பூட்டாகப் போட்டுப்பூட்டிவிட்டார்.
வைகாசி விசாகப் பொங்கல் அன்றைய தினம் கந்தவேள் அழகருக்கும் வள்ளியம்மைக்கும் மணநாள் அத்துடன் அழகன் பிறந்தநாள் அடுத்துவரும் கிழமை வழமைபோல கந்தசுவாமி கோயில் மணவாளப் பெருவிழா வடிவேல் அழகர் வீட்டில் கொண்டாட்டத்திற்குப் பஞ்சமா இருக்கப்போகின்றது?
அறிவியல் நகரில் நடைபெறும் என்றிருந்த நிச்சயதார்த்தம் அழகர்புரத்தில் நடைபெற இருக்க பத்து நாட்களுக்கு முன்னமே வள்ளியம்மா வந்துவிடுவார் என்பதை அறிந்த நேரம் தொடக்கம் பூரணிக்கு கால் நிலத்தில் பரவமாட்டேன் என்றுதான் அடம்பிடிக்கின்றது.
தாயைவிட பரிவுகாட்டும் வள்ளியம்மாவிடம் அப்படியொரு பற்றுதல். வீட்டில் கூட லக்ஷ்மியிடம் வள்ளியம்மா வரப்போகிறார் பத்துநாள் நிற்பார் என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தவளை வேதனையுடன் பார்த்த லக்ஷ்மிக்கு தான் அவளுக்கு ஏற்படுத்தியிருக்கும் வெறுமைகூட காலங்கடந்து தெரிய ஏன் இவ்வாறு நடந்துகொண்டோம் என்ற கழிவிரக்கம் தவிர்க்கமுடியாமல் ஏற்பட்டிருந்தது.
இந்த கழிவிரக்கம் வள்ளியம்மா ஏன் வருகிறார் என்பதை கேட்க தூண்டவில்லை என்பதுடன் கேட்டிருந்தாலும் அதை பூரணி யாரிடமும் பகிர்ந்து கொண்டிருக்க மாட்டாள் என்பது வேறான விசயம்தான்.
அழகனது நிச்சயதார்த்தம் பெரியவீட்டிற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த போதும் மற்றவர்களுக்குத் தெரியாமல் பாதுகாக்கப்பட்டிருந்தது. பூரணிக்குச் சொன்ன காத்தாயிகூட வெளியில் மூச்சுவிடக்கூடாதென்றே சொல்லியிருக்க அதை தாண்டுவாளா பூரணி?
பெரியவீட்டினருடன் நெருங்கிப் பழகாத பவதி குடும்பத்திற்கு அழகனது நிச்சயதார்த்தம் பற்றி எதுவும் தெரியவரவில்லை. காவேரியும் அவளது இளைய மருமகளும் தமது போராட்டக் களத்தில் ஆழ்ந்துபோயிருக்க பவதிக்கு தகவல் தெரிவிப்பார்தான் யாருமில்லை.
அதுவும் கணேசனின் மனைவி வந்த பின்னர் மூர்த்தி என்னதான் சொல்லிச் சென்றானோ தெரியவில்லை இவள் எதையெல்லாம் சாட்டு வைத்து வெளியில் செல்வாளோ அதையெல்லாம் கச்சிதமாக வந்த மருமகள் செய்ய எதைச் சொல்லி வெளியில் போவது என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு கணேசன் எந்த நேரமும் மனைவியைச் சுற்றிக்கொண்டு வீட்டில் இருப்பது புதிய தலைவலியை ஏற்படுத்தியிருந்தது.
இவை எல்லாம் போதாதற்கு காவேரியின் பெரிய அண்ணன் இரத்தினம் பவதியைப் பெண்கேட்டு வந்தது உச்சக்கட்ட எரிச்சலை இவளுக்கு தர அந்த கருவாயனைக் கட்டமாட்டேன் என்று இவள்பிடித்த அடம் நாகராசனுக்கும் கணேசனுக்கும் ஆச்சரியத்தைத் தந்த தென்றால் வடிவேல் அழகரது தூண்டுதலின் பேரில்தான் பெரியமாமன் வந்திருக்கிறார் என்பது பதட்டத்தைத் தோற்றுவிக்க பத்து விரல்களில் இருந்த அத்தனை நகங்களையும் இரத்தம் வரும் வரையும் கடித்துத் துப்பிக் கொண்டவளுக்கு வந்த பதட்டம் அவள் இதுவரை அனுபவித்திராதது.
எதற்கு வடிவேல் அழகர் தனது திருமணத்தில் ஆர்வம் காட்டுகிறார் என்பதை புரியாத அழவிற்கு அவள் மக்கல்ல ஆனாலும் பொதுவாகவே பரோபகாரியான பெரியவர் ஊர்மக்கள் மீது கொண்ட அக்கறையில் செய்யும் நல்ல காரியம் தானோ இது என்ற சந்தேகமும் அவள் மனதில் ஓடிக்கொண்டுதான் இருந்தது.
அழகனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வென்று இவள் பலதையும் யோசித்துக் கொண்ருக்க வந்திறங்கிய மூர்த்தியைப் பார்த்தவள் அதிர்ந்துபோய் நின்றிருந்தாள்.
இன்று
இன்றுடன் விஷ்ணு வீட்டிற்கு வந்து மூன்று நாட்கள் கடந்திருந்தது. அவன் மீது சுமத்தப்பட்டிருந்த பொய்க்குற்றச் சாட்டுகள் மறுக்கப்பட்டிருந்தாலும் அவன் உடலிலும் உள்ளத்திலும் பட்ட காயங்களும் அவற்றின் வலிகளும் அவனை கண்மூடி துயில் கொள்ள விடாது தடுக்க ஒரு பைத்தியக்காரனைப் போலவே அந்த கராஜ்ஜின் ஒரு பக்கத்தில் படுத்திருந்தான்.
குருவப்பாவும் கணக்கர் சோமுவும் அவனைத் தேடிவந்து பேச முயன்றாலும் யாரிடமும் அவன் முகம் கொடுத்துப் பேசினான் இல்லை.
உண்மையில் அவனுக்கு அவன் போகும் பாதைபற்றிய தெளிவு தேவைப்பட தன்வாழ்வில் கடந்த சில மாதங்களாக தன்னைமீறி நடக்கும் எல்லா விசயங்களையும் சீர்துக்கிப் பார்க்கத் தொடங்கியவன் தான் நேரடியாகப் பார்க்கும் விசயங்களுக்குப் பின்னால் வேறு ஏதோ ஒளிந்து இருக்கின்றதோ என்று சந்தேகம் கொண்டான்.
குறிப்பாக இவனது மாமா எவ்வாறு தன்னுடன் நடந்து கொண்டார் என்பதைப் பார்த்தவனுக்கு இறப்பதற்கு முன்னர் அவர்காட்டிய பாசம் அதற்கான காரணங்கள் எவையும் புரியவில்லை.
அம்மா இறந்தபின் இவன் ஆச்சிரமத்தில் சேரும் வரையிலான அந்த இடைப்பட்ட சிலநாட்கள் இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருந்தது. அதிலும் பசியால் அவன் மயங்கி கிடந்த அன்றுதான் அங்கு வந்த ஜெயானந்தம் ஐயா அவனை ஆச்சிரமத்திற்குத் தூக்கிச் சென்றார்.
ஆச்சிரமவிதிகளின்படி அங்கிருந்து வெளியேறி சிலவருடங்கள் கராஜ்ஜில் மெக்கானிக்காக வேலை செய்தகாலம் தொடக்கம் டுபாய் போகும் வரையிலான காலப்பகுதியிலும் இதே வீட்டிலும் கராஜ்ஜிலும் தான் அவன் காலம் கழிந்தது. அப்போதும் இதே மாமா பார்த்துக் கொண்டு தானேயிருந்தார். பிறகு என்னதான் நடந்திருக்கும்??
அந்த குருவப்பா சொல்வது போல உண்மையிலேயே தன் தவறுகளை உணர்ந்து என்னை நாடிவந்திருப்பாரோ? சொந்தம் விட்டுப்போகக்கூடாது என்று இந்த காளியை எனக்கு கட்டி வைத்ததாகத்தானே எல்லோரும் பேசிக்கொண்டனர்.
இது தொடர்பான உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும்போது இந்த கதை முழுவதும் தெரிந்த ஒருசிலர் இவன் மனக்கண்முன்னே வந்து போயினர் அதில் குருவப்பா, கணக்கர் சோமு, அவனது அத்தை பாமதி மற்றும் அவரது அக்கா பார்வதி அடக்கம்.
நிச்சயமாக பாமதி மற்றும் பார்வதியிடமிருந்து எதையும் அவன் அறிய முடியாது. ஆனால் குருவப்பா கணக்கர் சோமு இவர்களிடமிருந்து தனக்கு வேண்டியதைப் பெறமுடியும் .
அதற்கு தனது தற்போதைய அணுகுமுறையை மாற்ற வேண்டும்--- மாற்றுறேன்---- கண்டுபிடிக்கிறேன் என்று முடிவெடுத்தவன் மூன்றாம் நாள் தனது வீட்டிற்குத் திரும்பிவந்திருந்தான் யாரது வேண்டுதல் வற்புறுத்தல்கள் எதுவுமின்றி.
அதற்காக அவளை மன்னித்துவிட்டான் என்றோ அவள் செய்த அனைத்தையும் மறந்துவிட்டான் என்றோ கூறமுடியாது. தனது அனுபவங்களை வலிக்க வலிக்க நினைத்து தனது பாதையை வடிவமைத்துக் கொண்டான் அவ்வளவேதான்
இந்த மூன்று நாட்களில் லயாவின் நிலைமைதான் மிகவும் துன்பமாகிப் போயிருந்தது. போலீஸ் ஸ்டேசனிலிருந்து தாயுடன் வீட்டிற்கு வந்தவளுக்கு அப்போது தான் அவளது அக்காக்கள் மற்றும் அத்தான்கள் செய்துவிட்ட வேலைகளின் முழுபரிமாணமும் தெரிய வந்திருந்தது.
விஷ்ணுவை போலீஸ் லாக்கப்பில் வைத்து விசாரணை நடத்தியதையும் அவனை மோசமாகத் தாக்கியதைப் பற்றியும் அறிந்து கொண்டவளுக்குக் குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல் போய்விட்டது. ஐயோ என்ன இப்படியாகிப் போச்சே ---- என்று மீண்டும் மீண்டும் தவித்தாள்.
என்ன மேடம் புதுசா இருக்கு! அவனுக்கு அடிபட்டதுக்கு துடிக்கிறீங்க லவ்வா? இல்லை இந்த சினிமாவில் வருமே மஞ்சள் கயிறு மேஜிக் என்று ஒரு வார்த்தை அதுவா? என்று கேட்ட மனச்சாட்சிக்கு சீச்சீ ---லவ்வும் இல்லை--- ஒரு மண்ணும் இல்லை--- ஒரு மேஜிக்கும் இல்லை.
என்னுடைய பொய்யான குற்றச்சாட்டால் இப்படியாகிவிட்டதே என்ற உறுத்தல்தான் காரணம்என்று துடித்த மனதிற்கு இவளின் இன்னொரு மனம் நியாயம் சொல்ல
அன்று அக்காக்களை அவன் வா என்று கூப்பிடாதபோது மறந்து போன நன்றியுணர்ச்சியெல்லாம் பொங்கிப் பிரவகிக்க தான் மனநிம்மதியுடன் தேர்விற்குப் போக இவன் அன்று என்னுடன் அழகர்புரம் வந்ததுதானே காரணம்--
சீ----நீயெல்லாம் என்ன பொம்பளயடி? படிச்சு என்ன பிரயோசனம்? ஒரு பத்திரத்தில் என்ன எழுதியிருக்கு என்று பார்த்து கையெழுத்துப் போட மாட்டியா? அதுவும் உன்னைக் கட்டாயக் கல்யாணம் செய்ததாக ----இப்ப என்ன பண்ணுறது என்று கையைப் பிசைந்தவளுக்கு வழியொன்றும் புலப்படவில்லை.
எப்போதுமே அப்படித்தான் ஏமாற்று சுத்துமாத்து இவை அவளுக்குச் சுட்டுப்போட்டாலும் வராது. நியாயமில்லாமல் யார் நடந்தாலும் அவளுக்குப் பொறுக்காது. தன்னிடம் தவறென்று அவளின் மனச்சாட்சிக்குத் தோன்றினால் உடனடியாக மன்னிப்பை கேட்கவும் அவள் தயங்குவதில்லை.
கல்லூரியில்கூட சீனியஸின் புறஜெக்டை மற்றவர்கள் காப்பியடித்து சப்மிட் பண்ணினாலும் தனது புறஜெக்டைச் தானே கஷ்டப்பட்டுத்தான் அவள் செய்வாள். அப்படிப்பட்டவளுக்கு இந்த உறுத்தல் இயல்புதானே..
தனது அப்பாவிடமிருந்து ஏதோ ஒன்றைச் செய்து தங்களது குடும்பத்துக்குரிய சொத்தை விஷ்ணு அபகரித்துவிட்டான் என்ற கோபம் இன்றுவரை அவளுள் இதனால் தான் கனன்றுகொண்டிருக்கிறது.
அக்காக்கள் வழக்கு வைக்கப் போகிறோம் சொத்துக்களைத் திரும்ப வாங்கப்போகின்றோம் நீ கெயெழுத்தைப் போடு என்று மட்டுமே சொல்லியிருந்தனர்.
இவளுக்கு வழக்குகள் பற்றியோ அவற்றின் நடைமுறை பற்றியோ எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் தங்களது சொத்துகள் யாவும் அவன் வசம்போனதைத் தாங்க முடியாமல்தானிருந்தது.
அவனைத் திருமணம் செய்ததன்மூலம் அவை தனக்கும் உரியானவையாக மாறிவிட்டன என்பதை அவள் உணர்வதற்கு அவள் தன்னை ஆராய்ந்து பார்க்காதது ஒருபுறம் என்றால் அக்காக்களின் வாழ்க்கை மறுபுறம்.
மனம் ஒப்பா திருமணமும் சகோதரபாசமும் அவன் சொத்துக்களைத் திருப்பி தராது எல்லாம் சேர்ந்து அவனிடமிருந்து சட்டப்படி அவற்றைப் பறிக்க வேண்டும் என்ற வாதத்திற்கு அவளைச் சாதகமாக நடத்திவிட்டிருந்தது.
உண்மையிலேயே விஷ்ணு அவளது மனதில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கிறானா??? அந்த கேள்வியை அவள் கேட்டுப் பார்க்க நினைத்ததில்லை என்பது தான் உண்மை---
அதுவும் வைத்திய பரிசோதனையில் அவளது இரண்டு அக்காக்களில் எந்த குறைபாடும் இல்லை என்று சொல்லப்பட்ட போதிலும் அத்தான்களை வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்த அவர்களது அம்மா அப்பா விடவில்லை என்று கூறி இருவரும் எந்தவிதமான பரிசோதனைகளும் செய்யவில்லை என்பது தெரிய வந்தபோது அவர்களின் தந்திரம் புரிந்து விக்கித்துப் போய்விட்டாள்.
மூன்றாம் நாள் மாலையில் வீட்டிற்கு வந்தவனைக் கண்டதும் இனி மகளுக்கு அவன் துணையிருப்பான் என்ற முடிவுடன் பாமதி கிளம்பிப்போனார் அவரின் ஊழ்வினை வந்து உறுத்த காத்திருக்கின்றது என்பதை அறியாமல்.
வந்தவனை பார்தவள் பயந்துதான் போனாள். ஒரு பக்க முகம் கன்றிப் போயிருந்தது. கடவுளே இப்படியா அடிப்பான்கள் என்று தன்னை நொந்து கொண்டவள் அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு இருந்தாள் எப்போதவது ஒரு இளக்கம் அவனிடம் காணப்பட்டால் தனது தவறிற்கு ஒரு சாரி சொல்வதற்காக
ஆனால் விஷ்ணு இவளது முகத்தையே ஏறெடுத்தும் பார்த்தானில்லை. வந்தவன் அந்த நிமிஷமே தனது கயிற்றுக் கட்டிலை எடுத்துக்கொண்டு அங்கு தற்காலிகமாக கட்டப்பட்டிருந்த தகர கொட்டிலுக்குள் போய் படுத்துக் கொண்டான்.
இவன் வெளியே எங்கோ படுத்திருக்க எப்படி வீட்டிற்குள் படுப்பது???? இது தான் அவளுக்கு தற்போதைய பிரதான பிரச்சினை. அவளுக்குத் தனிமையும் இருட்டும் எதிரிகள் பயத்தில் உயிரே போனமாதிரி ஆகிவிட்டது.
அந்த வீட்டின் பின்புறம் இருந்த கழிப்பறைக்குச் செல்ல இவளுக்கு ரொம்பவே பயம். அதுவும் ஆளண்டா தோட்ட வெளியில் இருந்த அந்த வீட்டில் எப்படிப்போவாள்?
ஒருதடவை இங்கு வந்தபின் வெளியில் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தவனை இவள் பயத்துடன் எழுப்பியிருந்தாள் அன்று தொடக்கம் இரவு வேளைகளில் இவள் றெஸ்ட் றூம் போக லைட்டைப் போட்டதும் எழும்பி வருபவன் கிணற்றடியில் போய் நின்று கொள்வான். இவள் மீண்டும் வந்து உள்ளே படுத்தபின்தான் உள்ளே வந்து கதவை மூடுவான்.
இன்று அவனுக்குப் பக்கத்தில் போகவே பயமாக இருந்தது. அதுவும் அவனது முகத்தில் இருக்கும் கண்டல் காயமும் வீக்கமும் மட்டுப்பட்டது போல இருந்தாலும் நிச்சயம் வலி இருக்கும்----
தான் ஏதாவது பேசப்போக அவன் அடித்துவிடுவான் என்ற பயம் மனதில் இருந்ததால் அவன் அருகில் போகவே அஞ்சியவள் இரவில் றெஸ்ட் றூம் போகமல் இருப்பதற்காக தண்ணீர் தாகமிருந்தும் குடிக்காமலிருந்தாள்.
மனச்சாட்சி அவளின் தப்பைச் சுட்டிக்காட்க்கொண்டிருக்க பயம் அவளை நடுங்க வைத்துக்கொண்டிருக்க மூளை வேலைநிறுத்தம் செய்திருக்க சார்ஜ்போன ஃபோனைப்போல வாளாதிருந்தாள்.
அவனோ இவள் இருக்கும் திசைப்பக்கமே பார்க்க மறுக்க இவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க ------ ஒரு வித்தியாசமான கோணத்தில் அவர்களின் கதை நகர தொடங்கியிருந்தது.
அதுவும் இன்று காலை அவள் கழுத்திலிருந்த தாலி அவளயைறியாமல் காணாமல் போயிருந்தது. காலேஜ்க்குப் போவதால் தாலியை மட்டும் ஒரு செயினில் கோர்த்துப் போட்ருந்தாள்.
அவனுக்கு கணவன் என்ற இடத்தைக் கொடுக்க தயங்கினாலும் அவன் கட்டிய தாலிக்கு உரிய இடம் அங்கே கிடைத்திருந்தது . குளிக்க என்று வந்தவளுக்கு தாலியைக் காணாததது பயத்தை தோற்றுவிக்க இரவு உடையை மீண்டும் அணிந்து கொண்டு குளியல் அறையிலிருந்து வீட்டுக்குள் ஓடிவந்து தேட அது எங்கேயும் கிடைக்கவில்லை.
இதயம் வேகமாக அடிக்க கண்கள் நீரில் நிரம்பியிருக்க அழுதுகொண்டு அந்த வீட்டில் அவள் உலாவித்திரிந்த இடமெல்லாம் தேடியும் அது கண்ணில் பட மறுத்தது.
தாலி தொலைந்து போவது நல்லதிற்கல்ல என்பது மட்டும் தெரிந்திருந்தவள் துடித்துத்துடித்து அழுதாள். அதை ஒரு தங்க ஆபரணமாக மட்டும் அவளால் எண்ணமுடியவில்லை என்பது ஒருபுறம் என்றால் இந்த தாலியும் அதனால் வரும் தீயதும் அவனுக்குரியதுதானே நான் ஏன் வருந்துகின்றேன் என்ற ஒரு கேள்வியை அவள் தன்னைத்தானே கேட்டிருந்தால் அவளது வாழ்க்கைப் பாதை அவளது மனம் இரண்டும் எதைநோக்கிச் செல்கின்றது என்பதை அவள் புரிந்திருப்பாளோ என்னவோ----ஆனால் விதி விடவில்லை------அவள் அறுவடை செய்யவேண்டியவை ஏராளமாக இருந்தன.
அழுது ஆகப்போவது ஒன்றும் இல்லை என்று நினைத்தவள் எதற்கும் கட்டிலை ஒழுங்கு படுத்திப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் அதிலிருந்த பெட்சீட் உட்பட அத்தனையையும் ஒவ்வொன்றாக உதறிப் பார்க்க தாலி மட்டும் அவளது கைக்கு வந்திருந்தது அதனை எடுத்த வேகத்தில் நெஞ்கோடு அணைத்துக் கொண்டவள்
அவன் கட்டியதால அவன்ரை புத்திதான் உனக்கும் இருக்கு----அவனும் என்னை சுத்தவிட்டுப் பார்க்கிறான் மன்னிப்புக்கூட கேட்க முடிமாமல் கெடக்கு. நீ ஒளிஞ்சிருந்து என்னை அலறவிடுறாய் என்ற படி அதைஎடுத்து சுவாமி படத்தின் முன் வைத்தவள் தனது தாலியைக் காப்பாற்றும்படி அவளது குலதெய்வமான வரமுத்துமாரியம்மனிடம் வேண்டியதுதான் இவை எல்லாவற்றிலுமே ஹைலைட்ஆக இருந்தது
அது சரி இவள் தாலியைக் காப்பாற்று என்று கேட்டது தங்கம் விற்கிற விலையினால் அல்ல என்பது அந்த வரமுத்துமாரியம்மனுக்கும் புரிய அவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லைபோலும் எங்கே தான் சத்தமாகச் சிரித்தால் இவள் சமாதியாகிவிடுவாளோ என்று பயந்தவர் புன்சிரிப்புடன் நிறுத்திக்கொள்ள இவள் அம்மனையும் தாலியையும் மாறிமாறிப் பார்த்திருக்க இவள் தாலியைக் கோர்த்து அணிந்திருந்த செயின் கதவின் பின்னாலிருந்து இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
மறுபடியும் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டவள் குளித்து முடித்து றூமுக்குள் நுழையவும் இவள் போன் அடிக்கவும் சரியாக இருந்தது. அதே நேரம் சார்ஜ் தீர்ந்து போனதால் தனது போனைச் சார்ஜில் போடுவதற்கு வந்தவனை இவளது உற்சாகமான போன் உரையாடல் தேக்க சற்று நிதானித்து அவளது பேச்சை உற்றுக்கேட்க----இவளது வாழ்க்கைப் பாதையில் மறக்க முடியாத சம்பவத்தைச் செய்யும் தீர்மானத்தை எடுத்திருந்தான். சாண் ஏற முழம் சறுக்கும் இவர்களின் வாழ்வு என்று தான் சீரான பாதையில் பயணிக்கும்???
Last edited: