கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்பே என் உயிர் நீயடி அன்பு_ 1

சூர்யாவிற்கு அனுவிற்கும் நடந்த திருமணத்தை சூர்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... கோவத்தை யார்மேலும் காட்ட முடியாமல், அனைத்தையும் சேர்த்து வைத்து முதலிரவு அறைக்கு வந்த அனுவின் மீதே காட்டினான்

அமைதியாக பல கனவுகளுடன்அறைக்கு வந்த அனுவிற்கு சூர்யாவின் இந்த வெறுப்பு அதிர்ச்சியாக இருந்தது , அவளால் அதை தாங்கி கொள்ள முடியாமல் துவண்டுபோய் தரையில் உக்கார்ந்தாள்....

ஏய் அங்கையே உக்காராம வந்து படுத்து தொலை என்றான் எரிச்சலாக..

அவன் சொன்னால் போதும் அதுவே எனது வேதவாக்கு என்பது போல துவண்டு இருந்தவள் உடனடியாக கண்களை துடைத்து கொண்டு அவன் பக்கதில் போய் நின்றாள்..

இங்க உனக்கு இடம் இல்லை என்று பெட்டை தட்டி காட்டியவன்.. கீழே போய் படு என்றான்

சரி என்று தலையை ஆட்டிய அனு போர்வையையும் தலைகாணியும் எடுத்துக்கொண்டு போய் கீழே போட்டு படுத்தாள்.. கண்களில் கண்ணீர் வந்தாலும் தான் செய்த தவறுக்கு இது தேவைதான் என்ற எண்ணம் வரவும் கண்டிப்பாக சூர்யாவை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை இருந்ததால் கண்களை துடைத்துக்கொண்டு கண்களை மூடினாள்...

எப்பவும் போல அன்றும் அவள் கனவில் சூர்யாவே வந்தான்.. சிரித்த முகமாக இருந்தவனை ரசித்துக்கொண்டே ஆழ்ந்த உறக்கத்திற்கு போனாள்...

இவர்களுடன் ஒரே மேடையில் கல்யாணம் செய்துகொண்ட சூர்யாவின் அண்ணன் (நம்ப கதையின் நாயகன்) விஜய்பிரகாஷை தான் சொல்றேன்

காதல் ஜோடி ஆன விஜய்யும். நந்தினியும்(கதையின் நாயகி ) தாம்பத்தியதில் மூழ்கி முத்து எடுத்துகொண்டுருந்தனர்..

விஜய் போதும் விடுங்க... விடியவே போகுது.... கொஞ்ச நேரமாவது கண் மூட விட்டீங்களா விஜய்.. கீழே போனால் கண் சிவந்திருக்கறதை வைத்து எல்லோரும் கிண்டல் செய்வாங்க என்று சிணுங்கியவளை தூக்கி மீண்டும் தனது மார்பில் போட்டுக்கொண்டான்.

மறுபடியுமா விஜய்.... மணி 5ஆயிடுச்சி விடறீங்களா இல்லையா என்று அவனிடம் துள்ளினாள்..

அவனின் கிடுக்கு பிடியில் அவளால் அசையக்கூட முடியவில்லை...

ஹனி உன்னை கல்யாணம் பண்ணிட்டேன்னு என்னால நம்பவே முடியலடி...

ஏன் சார்க்கு இவ்வளவு நடந்தும் நியாபகம் இல்லையா உங்களை என்று அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளினாள்

விஜய்வே கிள்ளற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சா என்றான் மிடுக்காக

எதுக்கு தைரியம் வரணும் விஜய்... நீங்க எனக்கு மட்டும் சொந்தமானவர்... எதுவும் பண்ண எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு என்றாள்

அப்படியா..... என்று அவள் கழுத்தில் முகம் வைத்து கொஞ்சியவனை பார்க்க நந்தினிக்கு விஜய் குழந்தையாக தெரிந்தான்..

விஜய் நலுங்கு வெச்சப்ப நீங்க ஒன்னு கவனிச்சீங்களா

என்ன

சூர்யா அனுவை முறைச்சு முறைச்சி பார்த்த மாதிரி இருந்தது

உனக்கு பிரம்மையா இருக்கும் ஹனி

இல்லை விஜய் உண்மையா நான் பார்த்தேன் என்று சொல்லிக்கொண்டே அவனிடம் இருந்து விலகியவள் அன்று அவர்களுக்கு நலுங்கு வைத்த நாளுக்கு போனாள்..

இரண்டு கல்யாணம் நடக்க போகும் அந்த மண்டபம் விழா கோலம் போல கூட்டம் அலைமோதியது... பின்ன இருக்காதா.... விஜய் அந்த ஊரின் பெரிய புள்ளி, அவர்களின் பரம்பரையே பேர் சொல்லும் அளவுக்கு பெரிய பரம்பரை ... அதும் இல்லாமல் நிறைய பிஸ்னஸ் செய்யும் விஜய் வீட்டில் 2கல்யாணம் என்பதால் ஊரே திரண்டு வந்திருந்தது...
நைட் ரிசெப்சன், காலையில் கல்யாணம் என்று வைத்திருந்தனர்..

ரிசெப்சன் நடக்கும் போது விஜய் நந்தினியை பார்த்த காதல் பார்வையும், அவளை விழுங்குவது போல் பார்த்த பார்வையும் நந்தினியை முகம் சிவக்க வைத்துகொண்டிருந்தது... இடை இடையில் அவள் காதில் அவன் சொல்லும் ரகசிய கதைகளை கேட்டவள் வெளியே சீ என்றாலும் உள்ளே அவள் மனம் அதை ரசிக்கதான் செய்தது... இவர்கள் இருவரும் இப்படி இருக்கும் போது எதிர்ச்சியாக சூர்யா, அனுவை பார்த்த நந்தினிக்கு மனதுக்குள் எதுவோ சரி என்பது போல் தோன்றியது... அதுவும் அனுவிடம் எந்த பிரச்சனையும் தெரியவில்லை அவள் ஒரு கல்யாணப் பெண்ணிற்க்கே உரிய வெக்கத்துடன் தலைகவிழ்ந்த வண்ணம் இருக்க... சூர்யாவிடம் தான் ஏதோ தப்பாக தெரிந்தது...

ஒரு வேலை கல்யாண படபடப்பாக இருக்கும் என்று சாதாரணமாக எடுத்துகொண்டாள்

வரவேற்பு முடிந்ததும் இரு ஜோடிக்கும் போட்டோ ஷாப் வைத்தனர்

கேமரா மேன் சொல்வது போல் பொண்ணும் மாப்பிள்ளையும் விதவிதமாக போஸ் குடுக்க வேண்டும்...

விஜய் நந்தினி ஜோடி அதற்கு ஆர்வமாக வர சூர்யா அனு ஜோடி கொஞ்சம் ஏனோ தானோ என்று வந்தது போல இருந்தது நந்தினிக்கு

என்ன இந்த பிரகாஷ் (சூர்யா தாங்க அவனோட முழு பெயர் சூர்யா பிரகாஷ்.. நந்தினி எப்போதும் பிரகாஷ் என்றுதான் கூப்பிடுவா ) இப்படி எதிலும் பிடிப்பு இல்லாமல் இருக்கான் ஒரு வேல கல்யாணம் பிடிக்கலையோ என்று தோன்றவும்...
இருக்காது அனுவை போல அழகான பொண்ணு உயிரா நேசிக்கும் போது இவனுக்கு பிடிக்காமல் போகுமா என்ற எண்ணும் வந்தது

கேமராமேன் கூப்பிட்டதால் சூர்யாவின் மீது இருந்த சந்தேகத்தை அப்படியே விட்டுவிட்டு விஜயிடம் சென்றவள் அதன்பிறகு அதில் லயித்தும் போனாள்...

சார் மேடமை கொஞ்சம் தூக்கி சுத்துறிங்களா என்று கேட்டதால் விஜய் இதுதான் சாக்கு என்று வித விதமாக அவளை தூக்கினான்... தூக்கறதுல என்ன விதவிதமான்னு யோசிக்கறீங்களா??உப்பு மூட்டை போல், கைதாங்களாக, அப்படியே அள்ளி அணைப்பது என்று அவன் பாஷையில் இதற்கு எல்லாம் தூக்குவது என்று பொருள் போல...

முதல் ஜோடியில் போட்டோ ஷாப் சிறப்பாக முடிய.... அடுத்த ஜோடியை அழைத்தனர்

விஜய் பக்கதில் இருந்ததால் சூர்யா வெறுப்பு எதுவும் அனுவின் மேல் காட்டாமல் பல்லை கடித்துக்கொண்டு கேமராமேன் சொல்வதை எல்லாம் செய்துகொண்டிருந்தான் சூர்யா..

அவன் சொன்னதை எல்லாம் முகம் சுளிக்காமல் செய்யவும் நந்தினிக்கு தான் நினைத்ததுதான் தவறு என்று அவர்களை கவனிப்பதை அத்தோடு விட்டு விட்டாள்

இருஜோடியும் எல்லாம் முடித்துக்கொண்டு சாப்பிட சென்றனர்....

அவ்வவ போது நந்தா (நந்தினியின் தம்பி )வேற வந்து நந்தினியை கிண்டல் செய்துக்கொண்டிருந்தான்.

விஜய் யார் இருக்கிறார்கள் என்று எல்லாம் பார்க்கவில்லை இலையில் இருந்த அனைத்தையும் நந்தினிக்கு ஊட்டிவிட்டுடு தான் விட்டான் அதே போல அவளையும் ஊட்ட வைத்தும் விட்டான்

நந்தினி சிணுங்கிக்கொண்டே அவன் சொன்னதை செய்து முடித்துவிட்டாள்..

அதே போல தான் சூர்யாவும் அனுவும் இருப்பார்கள் தாங்கள் பார்த்தால் அவர்களுக்கு சங்கடமாககூட இருக்கலாம் என்று நினைத்து விஜய் நந்தினியிடம் அவர்களை பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டதால்... அவர்கள் இருந்த பக்கமே நந்தினி திரும்பவில்லை...

அதன்பிறகு சடங்குகள் ஆரம்பித்துவிட்டால் இருவரும் பார்த்துக்கொள்ள கூடாது என்பதால் கண்களாலையே இருவர் ஒருவரை ஒருவர் முழுங்கிவிடுவதுபோல பார்த்துகொண்டனர்... இதை அனைத்தையும் கேமரா அழகாக பதிவு செய்துகொண்டது...

நலங்கு வைக்கும் சம்பவம் நடக்க ஆரம்பித்தது அப்போது சூர்யாவை பார்த்த நந்தினிக்கு எதுவோ போல இருக்கவும், இவளுக்கு முடிந்து அனுவிற்கு ஆரம்பிக்கும் போது, இவள் சூர்யாவை நோக்கி போனாள்...

ஆனால் அதற்குள், நலுங்கு வைத்துவிட்டு ரொம்ப நேரம் வெளியே இருக்க கூடாது உன்னோட ரூம்க்கு போ என்று (நந்தினியின் அம்மா தாமரை )சொன்னதால்..
வேறு வழி இல்லாமல் விஜய்யின் ஒரே தங்கை யமுனா நந்தினியை அழைத்துக்கொண்டு ரூமிற்கு போனாள்...

யமுனாவிற்கு பக்கமாக தான் கல்யாணம் நடந்ததால் பெரிய மனுஷி போல சில அறிவுரைகளை அள்ளி வழங்க ஆரம்பித்தாள்..

யமு ரொம்ப ஓவரா பண்ணாதடி 2வாரத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிட்டா நீ பெரிய ஆகிடுவியா என்றாள் விளையாட்டாக

அப்கோர்ஸ் அண்ணி இதில உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாள் ...

அவர்கள் பேசிக்கொண்டிருக்க அனு வரவும் யமுனா அப்படியே அமைதியாகி விட்டாள்....

நந்தினி தான் சகஜமாக பேசினாள்..

இரவு பல போராட்டங்கள் மண்டபத்தில் நடந்திருக்க அது எதுவும் தெரியாமல் இவர்கள் இங்கு காலையில் நடக்க போகும் கல்யாணத்தை பற்றி நினைத்துகொண்டு தூங்கிவிட்டனர்...

காலையில் எல்லோரும் எழுவதற்குள் நடந்த போராட்டங்களை விஜய் யாருக்கும் தெரியாமலே மறைத்துவிட்டான்....

விடிந்ததும் பிரம்ம முகூர்த்ததில் விஜய்க்கும் நந்தினிக்கும் கல்யாணம்... அதன்பிறகு அடுத்த முகூர்த்த நேரத்தில் சூர்யா, அனு இருவருக்கும் கல்யாணம் என்று முடிவு செய்திருந்தனர்

அதேபோல் எல்லாம் நல்லபடியாக நடக்க.... துர்கா (விஜய்யின் அத்தை பொண்ணு )அவள் விஜய், அல்லது சூர்யா இவர்களில் யாரோ ஒருவரை கல்யாணம் செய்து அவர்களின் சொத்தை அனுபவிக்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தவளின் கனவில் ஒரு லோட் மண்ணை அள்ளி கொட்டினான் விஜய்... இருந்தும் மனம் தளராத விக்கிரமாத்தியன் போல துர்காவும் அவளது குடும்பமும் சேர்ந்து பல இன்னல்களை விஜய்க்கும் நந்தினிக்கும் கொடுத்து பார்த்துவிட்டார்கள்..... தப்பு செய்பவர்களே இவ்வளவு செய்யும் போது அதை தடுக்க செய்பவன் எவ்வளவு செய்வான் திட்டம் போட்டு அவர்களை போலீசில் பிடித்து கொடுத்துவிட்டான் விஜய் அந்த நிகழ்வை தவிர கல்யாணத்தில் வேற எந்த வித பிரச்சனையும் இல்லை..

மணமேடையில் வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் விஜய்யை தனது ரூமில் இருந்து பார்க்க, பார்க்க நந்தினிக்கு உள்ளுக்குள் காதலும், பெருமிதமும் பொங்க ஆரம்பித்தது... இவன் என்னவன் என்று நினைக்கும் போது அவள் உடலில் மின்சாரம் தாக்குவது போல இருந்தது...

பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ என்று ஐயர் கூப்பிட்டதும் நந்தினியை அனுவும், யமுனாவும் அழைத்து வந்தனர்...

விஜய்யின் பக்கதில் உக்காரும் போது நந்தினிக்கு மனம் ஆகாயத்தில் பறப்பது போல இருந்தது....

தாலி கட்டுபோது விஜய் தாலியை கையில் எடுத்தவன் நந்தினியை பார்த்து ஹனி என்னோட வாழ்க்கையில் இனி எல்லாமே நீதான்டி.... என்னோட உயிரே நீதாண்டி என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா என்று கேட்டான்....

அவள் கண்களில் ஆனந்த கண்ணீருடன் சரி என்று தலையை ஆட்டினாள்...அவள் கழுத்தில் தாலியை கட்டியவன் மூன்று முடிச்சையும் அவனே போட்டான் நாத்தனார் முடிச்சி போட வந்த யமுனாவை கூட வேண்டாம் என்று சொல்லி விட்டு,

விஜய் இப்படி அதிரடியாக சில விசியம் செய்வான் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை......

அவர்கள் மேடையை விட்டு எழுந்ததும் செய்ய வேண்டிய சடங்குகளை செய்துமுடித்தனர்....

காலை 8மணிக்கு சூர்யாவின் கல்யாணம் நடக்க இருப்பதால், அதற்கான ஏற்பாட்டில் உடனே இறங்கிவிட்டான் விஜய்....

அவனுடன் சேர்ந்து யமுனாவின் கணவன் பிரசாந்தும் இருந்ததால் விஜய்க்கு கொஞ்சம் உதவியாக இருந்தது... கல்யாணத்திற்கு வந்தவர்கள் மனநிறைவுடன் வாழ்த்தி சென்றனர்.... உணவில் 32 வகை அறுசுவையை செய்திருந்தனர்....கல்யாணத்திற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளி குங்கும சிமிழை தாம்பூல பையில் போட்டும் கொடுத்துவிட்டனர்...

சூர்யா அனுவின் கல்யாணமும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சிறப்பாக நடக்க சூர்யாவிற்குதான் அதில் பிடித்தம் இல்லாமல் இருந்தது .

தாலி கட்டும்போது கூட முதல் முடிச்சியை ஏனோ தானோ என்று போட்டவன் அடுத்த 2முடிச்சியை யமுனாவை போட சொல்லிவிட்டு அமைதியாக இருந்துகொண்டான்....

விஜய் அண்ணா தான் இப்படி இருப்பார்னு நினைச்சேன் ஆன இவன் இப்படி இருக்கான் என்று தலையில் அடித்துகொண்டு சூர்யா செய்யாமல் விட்டதை யமுனா செய்துமுடித்தாள்...

கல்யாண நினைவுகளில் இருந்து வெளியே வந்த நந்தினி பக்கதில் இருந்த விஜய்யை பார்த்தாள் அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்... அவனை தொந்தரவு செய்யாமல் மெதுவாக இறங்கி குளிக்க போனாள்.
 
Top