இரட்டை ரோஜாக்கள் கதைகள் போட்டி முடிவுகள்.
அதென்ன இரட்டை ரோஜாக்கள் என்று நீங்கள் கேட்கலாம். இரு எழுத்தாளர்கள் இணைந்து எழுதுவது.. அதுதான் இங்கே போட்டி. உண்மையில் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து எழுத்தாளர்களையும் பாராட்ட வேண்டும்.
ஒரே அலைவரிசையில் இருவர் சிந்தித்து, இணைந்து கோர்வையாய் எழுதுவது என்பது அத்தனை எளிதல்ல. இங்கே ஒன்றல்ல இரண்டல்ல, 11 ஜோடிகள் இரட்டை ரோஜாக்கள் போட்டி கதையை இணைந்து எழுதி குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடித்து இருக்கிறார்கள்.. அனைவருக்கும் சங்கமம் குழுமத்தின் பாராட்டுக்கள்.
ஒவ்வொருவரின் கதையும் ஒவ்வொரு விதம்.. குடும்பம், ஆன்மிகம், அமானுஷ்யம், அறிவியல், நகைச்சுவை இப்படி பல கோணங்கள். அனைத்துமே நன்றாக இருந்தன... குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நிச்சயம் இருவர் இணைந்து எழுதினார்கள் என்று சொல்ல முடியாத வகையில் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது.
ஆனாலும் பரிசு என்று வரும் போது என்ன செய்வது? சொன்னபடி இரு ஜோடிகளுக்கு , இரண்டு இரட்டை ரோஜாக்களுக்கு பரிசளிக்க வேண்டும் . மற்றபடி அறிவித்தபடி புத்தகங்கள் போட்டு தரப்படும்.
அதன் அடிப்படையில், இங்கே பரிசு பெற்றவர்கள் விவரங்கள்..
1. தேடி வந்த திரவியமே... திருமதி. ஜெயலட்சுமி கார்த்திக் - திருமதி. பிரவீணா தங்கராஜ்... Rs. 5000
அணு அணுவாய் அழி ( டை) ந்திடவா... திரு. அர்ஜுன் - செல்வி/ திருமதி. இனியா.... Rs.5000
இந்த இரண்டு இரட்டை ரோஜாக்களும் வாழ்த்துக்கள்.
பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..
மற்ற விவரங்கள் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்படும்.
நன்றி.