கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எக்ஸ்பிரஸ் நாவல் போட்டி 2021 - அறிவிப்பு 1

siteadmin

Administrator
Staff member
எக்ஸ்பிரஸ் நாவல் போட்டி – 2021

சங்கமம் குழுமத்தின் நல்வணக்கம் தோழமைகளே!!

சர்க்கரைப் பொங்கல் போன்றதொரு இனிப்பான செய்தியோடு, மீண்டும் உங்கள் முன் பேச வந்திருக்கிறோம்!

இப்பொழுது நம் சங்கமம் தளத்தில் ‘கதை சங்கமம் 2021’ போட்டி வெற்றிகரமாய் நடந்து கொண்டிருப்பதைத் தொடர்ந்து, அடுத்து ஒரு 'எக்ஸ்பிரஸ் நாவல்' போட்டி ஒன்றை இங்கே அதிரடியாய் அறிவிக்கிறோம்.

‘தனிமை’ சிறுகதைப் போட்டி போல் இந்தப் போட்டிக்கும் கதைக்கரு ஒன்று உள்ளது.

'யாதுமாகி நின்றாய்' இதுவே இந்தமுறை கதைக்கரு.

இந்த கருவைச் சுற்றி கதை பின்னப்பட்டிருக்க வேண்டும்.

அதென்ன 'யாதுமாகி நின்றாய்' என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
இந்தக் கதைக்களத்துக்கும் உங்கள் பங்களிப்பு என்ன என்பதுதான் இப்போட்டியே.

தலைப்பு எதுவாயினும் கதைக்கரு அனைவருக்கும் ஒன்று தான். நீங்களே யோசியுங்கள். எப்படி இந்தக் கதைக்கருவை நாம் சரியான முறையில் கையாளலாம் என்று.

கதைக்கான வார்த்தைகளின் எண்ணிக்கை 23,000 முதல் 25,000 வரை இருத்தல் வேண்டும்.

கதையில் வன்புணர்வு, துன்புறுத்தல், சித்திரவதை, ஆபாசப்பேச்சு, படங்கள், காமக்கதைகள், பொருந்தாக் காதல்(இன்செஸ்ட்), கடத்தல்(இருப்பின் சரியான விளக்கம் கொடுக்க வேண்டும்) இப்படி எதுவும் கட்டாயம் இருத்தல் கூடாது.

இப்போட்டிக்கதை இதுவரை எந்த தளத்திலோ, அல்லது புத்தகமாகவோ அச்சிட்டோ வந்திருக்கக்கூடாது. அதாவது, புத்தம்புதியதாய், உங்கள் சொந்த கற்பனையாய் இக்கதை இருத்தல் அவசியம். முடிந்தவரை கதையை பிழையின்றி, கொடுத்த கதைக்கருவை நியாயம் செய்யும் வகையில் எழுத வேண்டும், அவ்வளவே!!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல் போட்டி ஜனவரி 15 தொடங்கி மார்ச் 1 வரை நடைபெறும். அதி விரைவு வண்டி போல கதையையும் 45 நாட்களுக்குள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் எழுத வேண்டும்.

எக்ஸ்பிரஸ் நாவல் போட்டிக்கான ரிஜிட்ரேஷன் தேதி டிசம்பர் 6 முதல் டிசம்பர் 15 வரை பத்து நாட்கள் மட்டுமே.

யார் வேண்டுமானாலும் எக்ஸ்பிரஸ் கதை போட்டியில் கலந்து கொள்ளலாம். புதுமுக எழுத்தாளர்களோ, இல்லை ஏற்கனவே எழுதி பிரபலமானவர்களோ, மற்ற தளத்தில் எழுதுபவர்களோ, யாராய் இருந்தாலும் சம்மதமே.. என்ன ஒன்று, உங்களுக்கு வாசகர்களைக் கவரும் வகையில் எழுத வர வேண்டும். அவ்வளவே!! அவைவரையும் வரவேற்கிறோம்.

Sripathippakam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் மறக்காமல் போட்டியில் சேருவதற்கு, பதிவு செய்து கொள்ளவும்.

அடுத்து, இப்போட்டியில் எழுத்தாளர்களே தங்கள் கதைக்கான அத்தியாயங்களைப் பதிவிட ஏதுவாக எழுத்தாளர்கள் அனைவருக்கும் கதைக்கான திரி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அதனால் தான் முன்கூட்டியே பதிவு செய்தல் அவசியம்.

கதைகளை ஒவ்வொரு அத்தியாயமாகப் பதிவிடுதல் அவசியம். நாள் ஒன்றுக்கு ஒரு அத்தியாயம் மட்டுமே பதிவிடுதல் முக்கியம்.

ஒருவர் ஒரு கதை மட்டும்தான் எழுத வேண்டும்.

எல்லாம் சரி, போட்டி என்றால் பரிசும் இருக்க வேண்டுமல்லவா!

இதோ பரிசு பற்றிய அறிவிப்பு:

முதல் பரிசு - 10,000
இரண்டாம் பரிசு - 5,000
மூன்றாம் பரிசு - 3000


மேலும் ஐந்து நபர்களுக்கு சிறப்புப் பரிசாக தலா 1000 ரூபாய் வழங்கப்படும்.

போட்டியின் முடிவு May 1 மே 1 தொழிலாளர்கள் தினமன்று அறிவிக்கப்படும். மே 15 அன்று தளத்திலிருந்து அனைத்து எக்ஸ்பிரஸ் போட்டி கதைகளும் நீக்கப்படும்.


அதன்பின், எழுத்தாளர்கள் அவரவர் கதைகளை எடுத்து எங்கு வேண்டுமானாலும் பதிவிட்டுக் கொள்ளலாம்.

ஆனால் முடிவு வரும் வரை வேறு எந்த தளத்திலும் கதையை வெளியிடக்கூடாது.


கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இம்முறை நடுவர்கள் மற்றும் வாசகர்கள் என இரு தரப்பினருக்கும் சரிசமமாக கொடுக்கப்படவுள்ளது.

வாசகர்களின் கருத்து மற்றும் நடுவர்களின் கருத்து என 50% + 50% முறையில் பரிசு பெறத் தகுதியான கதைகள் தேர்ந்தெடுக்கப்படும்.

எனினும் எழுத்தாளர்கள், நடுவர்களின் தீர்ப்பை ஏற்கத் தயாராகவும் இருக்க வேண்டும்.

எழுத்தாளர்களே வாருங்கள் வந்து இப்புது முயற்சியில் பங்கெடுத்து பரிசினை வெல்லுங்கள்.

இனியும் என்ன?.. எல்லாம் உங்கள் கைவண்ணத்தில்தான் இருக்கிறது.

நன்றி வணக்கம்.

அன்புடன், சங்கமம் குழுமம்.







********
 
Top