கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னைத் தேடும் நான்: அத்தியாயம்-14

sankariappan

Moderator
Staff member
என்னை தேடும் நான்
அத்தியாயம் ==14

என்னைத் தேடும் நான்

அத்தியாயம்--14

ஒரு பெண் தான் கர்பம் என்று தெரிந்தவுடன், முதலில் அதை சொல்ல நினைப்பது தன் கணவனிடம் தான். அது ஒரு அழகான தருணம். மகிழ்ச்சியின் உச்சக் கட்டம்.

வாஷ் பேசனில் வாந்தி எடுத்தவுடன் சசிக்குத் தெரிந்துவிட்டது. அவள் கர்பமாக இருக்கிறாள் என்று. ஸ்ரீயின் வரவுக்காக காத்திருக்கும் நேரம் நீண்டு கொண்டே இருப்பதாகப் பட்டது அவளுக்கு. சீக்கிரம் வாங்களேன் என்று அவள் மனம் புலம்பிக் கொண்டிருந்தது.

அந்தி நேரத்தில் அவன் களைப்புடன் வீடு வந்து சேர்ந்தான்.

“ஸ்ரீ.....மேலே வாங்க உங்க கூட பேசணும்.” என்று விட்டு அவள் விரைந்து மாடிக்குச் சென்று விட்டாள். ஸ்ரீ விழித்தான். அம்மா நின்று கொண்டிருக்கும் போதே சசி இப்படி சொல்லிவிட்டுப் போனதும் அவன் குழப்பத்துடன் நின்றான். அப்படி என்ன ரகசியம்? அம்மாவுக்குத் தெரியாமல்? ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு.

“என்னடா முழிக்கிறே? போ. சசி ரொம்ப நல்ல மூடில் இருக்கா. ஏதோ அதி முக்கிய செய்தி போலிருக்கு. மரம் மாதிரி நிக்காதே. காப்பி கொண்டு வரேன். நீ முதலில் மேலே போ.” என்றாள். பார்கவி யூகித்திருந்தாள். அவள் வாந்தி எடுக்கும் சத்தம் அவளுக்கு கேட்டது தான். “என்னாச்சு சசி?” என்று அவள் கேட்டபோது.

“ஒன்னுமில்லே அத்த. ஏதோ வயத்தை பிரட்டி பிரட்டி எடுக்குது.” என்று சொல்லிவிட்டாள் சசி. அவள் முகம் அன்றலர்ந்த செந்தாமரை போல் இருப்பது கண்டு முதியவளுக்கு தெரியாதா இது எந்த மாதிரி வாந்தி என்று! தனக்குள் சிரித்துக் கொண்டாள். எல்லா பெண்களுக்கும் உள்ள ஆசை தானே.....முதலில் கணவனிடம் தான் சொல்ல வேண்டும் என்று. மகனை மாடிக்கு தூரத்திவிட்டு அவள் அடுக்களைக்குள் புகுந்தாள். சட்டென்று ஒரு ஸ்வீட் செய்ய முனைந்தாள். தான் பாட்டி ஆவது உறுதி என்ற நம்பிக்கை அவளை சின்னப் பெண் போல் உற்சாகம் அடைய வைத்தது. வீட்டில் சின்னக் கண்ணன் தவழப் போகிறான்.

ஸ்ரீ மாடிக்கு வந்தான். அவன் பிரீஃப் கேசை கூட மேஜை மேல வைக்கவில்லை அதற்குள் சசி அவன் அருகே சென்று

“நான் சந்தோஷமா இருக்கேன் ஏன் சொல்லுங்க?” என்றாள்.

“ராபர்ட் உனக்கு பிரமோஷன் கொடுத்திட்டானா? அது பற்றி சொல்லிக் கொண்டிருந்தான் என்று சொன்னியே.”

“பரமோஷன் தான். ஆனா அதை அவன் கொடுக்கவில்லை.”

“பின்னே?” அவன் கட்டிலில் அமர்ந்து ஷூவை கழட்டிக் கொண்டிருக்க சசி அவனை ஆர்வத்துடன் பார்த்து சொன்னாள். “

“கடவுள் கொடுத்த பிரமோஷன். அதுவும் உங்களுக்கு.”

“புதிர் போடாதே சசி. எனன் விஷயம் சொல்லு.”

“கேன் யு நாட் கெஸ்.?”

லுங்கிக்கு மாறியபடி “நீயே சொல்லிடு; எனக்கு சஸ்பென்ஸ் எல்லாம் பிடிக்காது.” என்றான்.

“கணவன் என்ற சொல் மாறி, அப்பா என்ற பொஷிஷனுக்கு உங்களுக்கு பிரமோஷன் கொடுத்திட்டார் கடவுள்.”

தாய்மை என்ற கலங்கரை விளக்காக அவள் நிற்க, ஸ்ரீ ஒரு கணம் தடுமாறி நின்றான். அவன் மனம் என்னவோ கணக்கு போட்டது. தப்பு கணக்கு. சசி பொய் சொல்கிறாள். அவன் அப்பா ஆகவில்லை. ராபர்ட் தான் இவள் மூலம் அப்பா ஆகிறான். அதை மறைக்க இந்த நாடகம்.

“என்ன இப்படி முழிக்கிறீங்க.? உங்க லீலை அம்பலத்துக்கு வந்திடுச்சேன்னா?” சந்தோஷதில் அவள் அவன் மூக்கைப் பிடித்து உலுக்கினாள். பாவம் வேதாளம் மீண்டு முருங்கை மரம் ஏறிவிட்டதை உணராமல். உன் லீலை அம்பலம் ஆகிவிட்டது டீ என்று பொருமிக்க கொண்டான். சுதாரித்துக் கொண்டு சொன்னான்.....

“திடீருன்னு சொன்னியா பஃங் ஆயிட்டேன். கங்கராட்ஸ்.” என்று போலி உற்சாகம் காட்டினான். சசி தான் இருந்த மனநிலயில் அவனின் சந்தேக நோக்கத்தை புரிந்து கொள்ளவில்லை.

“எனக்கு வெறும் காங்கிராட்ஸ் தானா? வேற டிரீட் கிடயாதா?”அவன் தோளில் சாய்ந்தாள்.

“உங்களுக்கு பையன் வேணுமா பொண்ணு வேணுமா?”

அதை அவனிடம் கேளுடீ என்று நினைத்துக் கொண்டவன்

“ரெண்டும்.” என்றான் அவசரமாக.

“அட......உங்களுக்கு இப்படி ஒரு ஆசையா? எனக்கு ஒண்ணு போதும். மகன் உங்களை மாதிரி.”

ராபர்ட் மாதிரி என்று சொல்லிவிடேன். எதுக்கு இந்த போலி வேஷம்?

அழகை காட்டும் கண்ணாடி மனதை காட்டக் கூடாதோ? என்று மனம் வெதும்பி கதாநாயகி பாடும் பாடல் ஒன்று உண்டு. இவன் உள் மனம் எங்கே தெரிகிறது? சசி அவன் வார்த்தைகள் நிஜம் என்று நம்பினாள்.

இந்த சமயத்தில் பார்கவி கீழிருந்து குரல் கொடுத்தாள்.

“சசி.....காப்பி அண்ட் ஸ்வீட் ரெடி. வாங்க.”

அத்தைக்கு எப்படித் தெரிந்தது? அவர்கள் கீழே சென்றதும் பார்கவி சொன்னாள். “என்ன குட்டிப் பாப்பா பிறக்கப் போவுது தானே?”

சசி முகம் சிவக்க “உங்களுக்கு எபபடித் தெரியும் அத்தே?” என்று ஓடிச் சென்று பார்க்கவியை கட்டிக் கொண்டாள்.

“உன் முகத்தை பார்த்தே தெரிஞ்சுகிக்கிட்டேன். சரி உக்காருங்க. கேசரி

சூடா இருக்கு. நிறைய முந்திரப் பருப்பு போட்டிருக்கேன்.” என்று உபசரித்தாள். கணவனை அழைத்து, அவர் வந்ததும் அவள்

“என்னங்க.... நீங்க தாத்தா ஆகப் போறீங்க.” என்றாள். பார்க்கவேண்டுமே அனந்துவின் முகத்தை. பிரகாசம் நூறு சதவீதம் அப்பட்டமாகத் தெரிந்தது.

‘”என்னடா.....ஒரு வழியா நீ ஒரு உருப்படியான காரியம் செஞ்சிருக்கே போலிருக்கு. ரொம்ப சந்தோஷம்.”

அவர் தட்டில் கேசரி தாராளமாக விழுந்தது.

“பேரப் பிள்ளை பிறக்கும் செய்தி கேட்டதும் உங்க அம்மா சலுகை கொடுத்திட்டா. இல்லே ஒரு குண்டுமணி அளவு தான் வழக்கமா கேசரி வைப்பா. பேஷ் பேஷ்.”

நான்கு நாட்களுக்கு அங்கு கொண்டாட்டமாக இருந்தது. ஸ்ரீ மட்டும் தன் இருண்ட மனதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் உதட்டில் சிரிப்புடன் வளைய வந்தான்.

“எதுக்கும் டாக்டரிடம் போய் உறுதி செய்திட்டு வாம்மா சசி.”

மாமியார் சொன்னபடி சசி டாக்டரை பார்க்க அப்பாயின்மெண்ட் வாங்கினாள். ஸ்ரீ தானும் கூட வருவதாகச் சொன்னான். பிள்ளைக்கு அக்கரை வந்துவிட்டது என்று பார்கவி மகிழந்தாள். அது அக்கரை இல்லை என்று அவளுக்கு எப்படித் தெரியும்?

டாக்டர் ஷாலினி பரிசோதித்துவிட்டு சசியின் கர்பத்தை உறுதி செய்தாள். வழக்கமான அறிவுரைகள் கூறினாள். அடிக்கடி செக் அப்புக்கு வரணும் என்று சொன்னாரள். வெளியே வந்தார்கள்.

வீட்டில் உற்சாகம் பொங்க சசி தன் கர்பம் உறுதியானதை பார்க்கவியிடம் சொன்னாள். நாட்கள் வேகமாக இனிமையாக கழிந்தது.

ஒரு நாள் வெளியே வந்தார்கள். சசி கேட்டாள்.

“ஸ்ரீ எனக்கு இப்ப இளனி குடிக்கணும் போல இருக்கு.” என்றாள்

“வாங்கிட்டாப் போச்சு. கர்பமா இருக்கும் மனைவிக்கு கேட்டதை வாங்கிக் கொடுகனுமாமே. வேறு என்ன வேணும் சொல்லு.?”

“இப்போதைக்கு இது தான். இங்க நிப்பாட்டுங்க.” ரோட்டோர இளனி கடை முன் கார் நின்றது. மகிழச்சியுடன் குதித்து இறங்கினாள் சசி.

“பார்த்து சசி. இந்த மாதிரி சமயத்தில் நீ வேகமாக நடக்கக் கூடாது.” சசி

அப்படியே பூரித்துப் போனாள். நிழல் நிஜம் போல் தெரிகிறது. கணவனை நம்பாமல் வேறு யாரை நம்புவாள் ஒரு பெண்?

“இளனி ரெண்டு கொடுப்பா.”

கடைக்காரன் ரெண்டு வெட்டிக் கொடுத்தான்.

“இந்த ரெண்டும் உனக்குத் தான். பாப்பா நல்லபடியா பொறக்கணும்னா நீ விரும்பியதை தாராளமா எடுத்துக்கணும்.” என்றான்.

கருப்பு திராட்சை வாங்கிக் கொடுத்தான். அவன் கருப்பு மனம் தெரியாமல் அவள் வெள்ளை மனதுடன் அவன் அன்பை சிலாகித்து பாராட்டி சொன்னாள்.

“அடேயப்பா. புள்ளை உண்டானதுமே இப்படி ஜெம்மாக ஆகிட்டீங்க. இன்னும் பிறந்திட்டா. அவ்ளோ தான். என்னையே மறந்திடுவீங்க போலிருக்கு.”

நாட்கள் சசிக்கு இனிமையாகக் கழிந்தது. அவள் வேலைக்கு போக வேண்டாம் என்று பார்கவியே சொல்ல, சசியும் அது தான் சரி என்று சந்தோஷமாக வீட்டில் இருந்தே வேலை பார்த்தாள்.

ஸ்ரீ மனம் ஒரு நிலயில் இல்லை. சசி ராபர்டின் குழந்தையை தான் சுமக்கிறாள் என்று திட்டவட்டமாக நம்பினான். தான் அவளை ராபர்ட் வீட்டில் கொண்டு போய் விட்டது தப்பாக்கிவிட்டது. இவளின் நேர்மையை அவன் நம்பினான். ஆனால் அவள் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமானவள் அல்ல என்று புரிகிறது. இந்தக் குழந்தை பிறக்கக் கூடாது என்று அவன் முடிவு காட்டினான்.

தனக்கு சாதகமான தீர்மானம் பண்ணிக் கொண்ட பிறகு ஸ்ரீ சிறிது நிம்மதி அடைந்தான். இனி என்ன செய்யலாம் என்று பிளான் போட்டுக் கொண்டிருந்தான். ஒரு நண்பன் மூலம் அபார்ஷன் பண்ண தயங்காத ஒரு டாக்டரை கண்டுபிடித்தான். கேள்வி ஏதும் கேட்காமல் அவள் அபார்ஷன் செய்யக் கூடியவள் என்று ஒரு மூணாந்தர நண்பன் பாபு சொல்ல அங்கு சென்று ஒரு டேட் குறித்து விட்டு வந்தான்.

“என் மனைவிக்கு தெரியக் கூடாது. உங்களுக்கு எவ்வளவு அதிக பீஸ் தரனுமோ தரேன்” என்றான்.

“என் பேர் வெளியே வரக் கூடாது. அஞ்சு லட்சம்.” என்று பேரம் பேசினாள் அந்த டாக்டர் உருவில் இருந்த மனித நேயமற்ற பெண். இவள் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பிறவிகள் இருக்கத் தான் செய்கிறார்கள். பணம் தான் அவர்கள் குறிக்கோள்.

“ரைட். குழந்தையின் நன்மைக்காக என்று சொல்லி அவளை கன்வின்ஸ் பண்ண வேண்டியது உங்க பொறுப்பு.” என்றான். அப்பவே அட்வான்ஸ் ஐம்பதாயிரம் கொடுத்தான்.

“கச்சிதமா முடிச்சிடலாம் மிஸ்டர் ஸ்ரீ. டோன்ட் வோர்ரி.”

அந்தப் பொன்னான நாள் வந்தது.

“இந்த டாக்டர் ரொம்ப திறமைசாலி சசி. நாம் வழக்கமா பார்க்கும் டாக்டரிடமே போலாம். ஆனால் ஒரு செகண்ட் ஒபினியன் கேட்டுக்கலாம். என்ன சொல்றே?” என்று நைய்ச்சியமாக பேசினான். இது நாள்வரை அவன் நடித்த நல்ல வேஷக் கணவன் ரோலை நம்பிவிட்ட சசி “அதுவம் சரிதான்.” என்று ஒத்துக் கொண்டாள். இவ்வளவு சுலபமாக அவள் ஒத்துக் கொண்டதுக்கு காரணம் அவன் காதல் நடிப்பு தான். பெண்கள் எவ்வளவு சீக்கிரம் இந்த போலி அன்புக்கு மயங்கி விடுகிறார்கள்!

பார்க்கவியிடம் சொல்லிக் கொண்டு சசி கணவனுடன் அந்த கேடு கெட்ட ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாள். சேரில் அவளை அமர்த்திவிட்டு ஸ்ரீ உள்ளே சென்றான். டாக்டர் மல்லிகா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். நர்ஸ் ஒருத்தி அங்கு நின்று கொண்டிருந்ததால் அவன் கண்ணால் டாக்டரிடம் அனுமதி கேட்க அவளும் ஓ. கே என்று தலை அசைத்தாள் ரகசியமாக. அஞ்சு லட்சம் அவளுக்கு பெரிய தொகை. அவள் வீட்டில் சில மராமத்து வேலைகள் பாக்கி இருந்தது. அதை பூர்த்தி செய்ய ஒரு பெண்ணின் கர்பத்தை கலைக்க தயாராகிவிட்டாள். தன் வீட்டை கட்ட அவள் ஒரு வீட்டின் உறவை கட் செய்கிறாள்.

சசி அவளின் கன்ஸல்டிங் அறைக்கு வருகிறாள்.

“உக்காரும்மா. உன்னோட லேட்டஸ்ட் ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்தேன். குழந்தைக்கு ஒரு சின்ன பிராப்ளம் இருக்கு. பயப்படாதே சரி செய்திடலாம். இப்ப எல்லாம் வயத்திலே குழந்தை இருக்கும் போதே அதை சரி செய்யும் வசதி வந்துவிட்டது. ஹார்டில் ஓட்டை இருக்கு. பிறக்கும் முன்னேயே சரி செய்யலாம். அதுக்கு உன் அனுமதி தேவை. விருப்பம் இல்லை என்றால் நீ செய்து கொள்ள வேண்டாம். இந்த பாரத்தில் கை எழுத்துப் போடணும்.” என்றாள்.

“அப்படியா டாக்டர்.? எனக்கு இந்தக் குழந்தையே வேண்டாம் டாக்டர். ஊனமுள்ள குழந்தை எனக்கு எதுக்கு? அபார்ட் பண்ணிடுங்க.” என்றாள் சசி. ஸ்ரீ இன்ப அதிர்ச்சி அடைந்தான். பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது.

“டாக்டர்......என் குழந்தை ஊனமாக பிறந்தாலும் பரவாயில்லை எனக்கு வேணும்.” என்று கண்ணீர் சிந்தி டிராமா போட்டான் ஸ்ரீ.

தேடல் தொடரும்.










.





.

. . .
 
Top