கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை தீண்டும் நிழலே! - 13

என்னை தீண்டும் நிழலே !! -13

கயல்விழியின் வீட்டிலிருந்து மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிய முகிலன், வீட்டிற்கு வந்ததும் எதுவும் பேசாமல் உள்ளே சென்றான்.

"ஆபீஸ்க்கு நேரம் ஆச்சுன்னு சொன்ன போகலையா? " என செல்வி கேட்க பதில் ஏதும் கூறாமல் தன் அறைக்கு சென்றான் முகிலன்.

"இவனுக்கு என்ன ஆச்சு! நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் எதையும் காதில் வாங்காமல் இவன் பாட்டுக்கு போறான் " என புலம்பினாள் செல்வி.

முகிலன் சென்ற பிறகு தன் அறைக்குள் சென்ற கயல்விழி, " ஏண்டி இப்படி இருக்க அவன் தான் வேற பெண்ணை காதலிக்கறேன் என சொல்லிட்டானே இன்னமும் அவனையே நினைக்கறது தப்பு " என தனக்கு தானே பேசிக்கொண்டாள்.

தன் புத்தகத்திற்குள் வைத்திருந்த அவனது புகைப்படத்தை பார்த்து " உன்னை நேருக்கு நேர் என்னால பார்க்க முடிலடா முகிலா ! ஏன்டா என்னை இப்படி கொள்ளாம கொள்ளுற " என ஏதேதோ பிதற்றி கொண்டிருந்தாள்.

அப்பொழுது அங்கே நுழைந்த காயத்ரி, " என்னாச்சு கயல்விழி ஏன் ஒரு மாதிரி இருக்க கண்ணெல்லாம் சிவந்திருக்கு " என கேட்டாள்.

"ஒன்னும் இல்லை அக்கா நீ போய் உன் வேலைய பாரு"என தன் கையில் இருந்த முகிலனின் புகைப்படத்தை மறைத்தவாறே கூறினாள் கயல்விழி.

அதை கவனித்த காயத்ரி கயல்விழியிடம், " என்னடி கைல என்ன மறைக்கற காமி" என அவள் கையில் இருந்த புகைப்படத்தை பிடிங்கினாள் காயத்ரி.

முகிலனின் புகைப்படத்தை பார்த்த காயத்ரி, " முகிலன் புகைப்படத்தை நீ ஏன் வெச்சிருக்க" என வினவினாள்.

" அது ஒன்னும் இல்லை அக்கா குடு" என பிடிங்கினாள் கயல்விழி.

" நான் உன்கூட அக்காவா இல்லாம நல்ல தோழியாதான பழகுனேன், என்கிட்டயே மறைக்கிறயே டி !" என கேட்டாள் காயத்ரி.

" ஹையோ அக்கா நான் எதையும் மறைக்கல " என காயத்ரியை கட்டிக்கொண்டாள் கயல்விழி.

" அக்கா நான் முகிலனை காதலிக்கிறேன், அவர்கிட்ட என் காதலை சொன்னப்ப அவர் நான் வேற ஒரு பெண்ணை காதலிக்கறேன்னு கூறி என்னை மறுத்துட்டார். ஆனா நான் விசாரிச்சவரைக்கும் அப்படி யாரும் இல்லை அக்கா. அப்போ அவரு என்னை பிடிக்காமதான அப்படி சொல்லிருக்கார் " என அழுத்தவாறே கூறினாள் கயல்விழி.

"கயல்விழி அழாத டி, அப்படி ஒன்னும் இருக்காது நான் அருண் மாமா கிட்ட என்னனு விசாரிக்கறேன்" எனக் கூறி சமாதானம் செய்தாள் காயத்ரி.

காயத்ரி அருணிற்கு கால் செய்து கயல்விழி கூறியவற்றை கூறினாள்.

அருண் காயத்ரியிடம், "கவலை படாத நான் என்னனு விசாரிக்கறேன்" என்று கூறினான்.

அந்த நேரத்தில், அருண் அலுவலகத்திற்கு வராததால் அவனை தேடி அவன் நண்பன் கிஷோர் வீட்டிற்கு வந்தான்.

அருண் கிஷோரிடம், " வாடா கிஷோர் என்னடா இந்த நேரத்தில இந்த பக்கம் வந்திருக்க"என கேட்டான்.

"இல்ல அண்ணா முகிலனை பாக்கலாம்னு வந்தேன்"என பதில் கூறினான் கிஷோர்.

நானும் அவனைத்தான் பார்க்க போறேன் வா என கிஷோரை முகிலனின் அறைக்கு அழைத்து சென்றான் அருண்.

இருவரும் உள்ளே வர முகிலன் அவர்கள் வந்ததை கவனிக்காமல் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.

"என்னடா நாங்க வந்ததை கூட கவனிக்காம யார் கூட கனவுல டூயட் பாடிகிட்டு இருந்த " என முகிலனை பார்த்து அருண் கேட்டான்.

"எப்போடா உள்ள வந்த, டேய் வாடா கிஷோர் எப்போ வந்த " என இருவரையும் பார்த்து முகிலன் கேட்டான்.

"பகலயே கனவு காண ஆரம்பிச்சுட்டிய! யாருடா அந்த பொண்ணு" என முகிலனிடம் அருண் கேட்டான்.

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா" என முகிலன் கூற.

"நடிக்காதடா, இப்போதான் காயத்ரி கால் பண்ணினா நீ கயல்விழி கிட்ட சொன்னதெல்லாம் சொல்லிட்டா " என அருண் கூறினான்.

"அது வந்து அண்ணா சாரு ஒரு நிழலை காதலிக்கிறாராம் " என கிஷோர் கூறினான்.

"என்னடா உளற" என அருண் கேட்க, முகிலன் தன் கனவில் வந்த நிழலையும் அந்த நிழல் கயல்விழிதான் என்பதையும் ஆனால் அதற்கு முன் தான் வேறொரு பெண்ணை காதலிப்பதாக கூறியதை பற்றியும் அருணிடம் கூறினான்.

"அட பாவி அவ காதல நீ ஏத்துக்கலைனு ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருக்கா " என கயல்விழி பற்றி அருண் முகிலனிடம் கூறினான்.

"கவலைப்படாதடா நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன்"என முகிலன் கூற "என்னடா!" என கிஷோர் கேட்டான்.

"கயலை நான் முன்பை விட இன்னும் அதிகமா காதலிக்க போறேன், நான் சொல்லாமலே நான் அவளை தான் காதலிக்கிறேன் என அவளை உணர வைக்க போறேன்" என முகிலன் கூறினான்.

"டேய் பாத்துடா! வேற மாதிரி ஆகிட போகுது " என்று அருண் கூறினான்.

"உடன் பிறப்பே தாங்கள் நடுவில் குழப்பாமல் இருந்தாலே நல்லதா நடக்கும் ! நான் கயலை லவ் பண்ற விஷயத்தை யார்கிட்டயும் முக்கியமா அண்ணி கிட்டயும் சொல்லாம இருடா ப்ளஸ் " என முகிலன் அருணிடம் கேட்டு கொண்டான்.

மறுநாள் காலை கயல்விழி ட்ரைனிங் சென்றிருக்கும் மருத்துவமனைக்கு முகிலனும் கிஷோரும் வந்தனர்.

ரிசப்ஷனில், "நாங்கள் பிளட் டோனேட் செய்ய வந்திருக்கிறோம்" என முகிலன் கூற கடைசி அறையில் ட்ரைனிங் ஸ்டுடென்ட்ஸ் இருக்காங்க அங்கே போங்க என பதில் கூறினார்கள்.

"டேய் உன் லவ்க்கு நீ ரத்தம் குடுக்கற அது உன் தலை எழுத்து, ஆனா நான் ஏன்டா குடுக்கணும் "என கிஷோர் முகிலனிடம் அப்பாவியாக கேட்டான்.

கிட்ட வாடா என கூறி கிஷோரின் மேல் கை போட்டு "ஏனா நீ என் நண்பன்டா " என முகிலன் கூறினான்.

கிஷோர் தன் தலையில் அடித்து கொண்டு நல்ல நண்பன்டா என முணுமுணுத்தான்.

முகிலன் அறையுள் நுழையவும் கயல்விழி வெளியே வரவும் இருவரும் மோதி கொண்டனர்.

ஒருநிமிடம் இருவரும் தங்களை மருந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

முகிலன் கண் இமைக்காமல் கயல்விழியையே பார்த்து கொண்டிருந்தான்.

"உன் ஒற்றை பார்வை போதுமடி
ஆயிரம் வார்த்தைகள் பேசுமடி

உன் சிறிய கண் அசைவு தானடி
அதில் நூறு வருஷம் வாழ்வேன் நானடி

தினம் உன் முழுமதி தரிசனம் வேணுமடி
பொக்கிஷமாய் பார்த்துக்கொள்வேன் உன்னையடி !!! "


நிழல்கள் நிஜங்கள் ஆகுமா !!

பாப்போம் !!

-நந்தினி மோகனமுருகன்
 
Top