உன் விழி நோக்கி மொழி தோற்று கதைத்த நொடிகள்...
முதல்முறையாய் நாணம் உணர்த்திய உன் புன்னகை...
உன் அணைப்பின் சுகந்தத்தில் களித்த தருணங்கள்...
என் நுதலில் நின் அதரம் இட்டு நிரப்பிய காதலின் அடையாளம் அங்கே ஏகமாய் பதிவேற அனைத்தும் விழி முன் நிழலாடுகிறது...
ஏதுமற்ற வெறுமையில் கழிந்த பொழுதுகளில் என் தேடலின் வெளிச்சமாய் நுழைந்த உன்னை என் வாழ்வின் திசைகளின் நடுவே(ஊடே) தேடி தேடி தவிக்கிறேன் நித்தமும்.........நினைவு மட்டுமே மேலும் பரிசாய் கிடைக்கிறது....
ராஜிபிரேமா ❤
கருத்துக்களை இங்கே பகிரவும்
sangamamnovels.com