கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதல் நொடிகளில் நானும் அவளும்

காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

கமர்கட்டு கடித்துதந்த
பள்ளி காலத்திலேயே
கள்ளிச்செடியில் பெயரெழுதி
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

அவள் பெரியமனுசி ஆனபோது
மாமன்மகன் குச்சிகட்ட
மணப்பேச்சுக்களை கேட்டு
பிரிவுகளை உணர்ந்த நொடியிலும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

கல்லூரி நாட்களிலயே
கனவுகளை சுமந்தபடி
யாருக்கும் தெரியாமல்
கடிதங்களை எழுதிகொடுத்து
கழிவறைக்குள்ளே நின்றுபடித்த போதும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

விக்கல் வந்திடும் வேளையிலே
அவள் நினைப்பில் நானென்று
உள்ளுக்குள் சிரிக்கும் போதும்
உணவருந்தும் நேரத்தில்
இருமல் வந்து பொறையேற
அவள் தான் திட்டுகிறாள்
பார்க்கவில்லையென நினைத்திடும் போதும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

கல்யாணம் வார்த்தைகள்
வீட்டினுள்ளே உதிர்ந்தபோது
உதிரத்தில் நடுக்கம் வந்து
ஊரைவிட்டு ஓடிய போதும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

உயிரோடு இருக்கும் போதே
உற்றாரும் பெற்றோரும்
திவசம் செய்திட்ட போதிலும்
எங்கள் காதலை வாழ வைத்திட
மகிழ்ச்சியாக வாழ்ந்திடும் போதும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்....

உடல் சேர்க்கை மட்டுமே
உயிர்காதல் என்று சொன்னவர்களுக்கு
உயிரோடு கலந்துவிட்ட உணர்வுகளின் அன்புதான்
காதலென்று
புரிய வைத்த நேரத்திலும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

அவள் வயிற்றில் என்னுயிரும்
உண்டான நொடிகளிலே
முத்தமழை பொழிந்துவிட்டு
தொன்னூறு நாட்கள் வரை
கடவுளை வேண்டியபோதும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்....

உப்பிய வயிற்றில்
உதடுகளை பதித்தவிட்டு
உதைக்கும் நொடிகளிலே
வயிற்றினை தடவி சிலிர்த்திட்ட போதிலும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

பிரசவவலியில் அவள் துடிக்க
என் இதயம் கலங்கிடவே
ஆணென்பதையும் மறந்துவிட்டு
அழத நிமிடங்களில்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

தாயமுது தந்திடும் நேரம் தவிர
குழந்தை வைத்திருக்கும் காலத்திற்கு
சண்டை போட்டு திட்டிய போதும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

இன்று எல்லாம் முடிந்து
முகத்தில் சுருக்கம் விழ
காலனை எதிர்பார்த்து
கவலைகள் கொண்ட போதிலும்
அன்பு காதல் குறையாமல்
உணவுகளை ஊட்டிவிட்டு
கண்ணீரை துடைத்து விட்டு
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

ஓயாத கடலலை போல
ஒவ்வொரு நொடியிலும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்....

- சேதுபதி விசுவநாதன்
 

Nagaveni A

New member
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

கமர்கட்டு கடித்துதந்த
பள்ளி காலத்திலேயே
கள்ளிச்செடியில் பெயரெழுதி
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

அவள் பெரியமனுசி ஆனபோது
மாமன்மகன் குச்சிகட்ட
மணப்பேச்சுக்களை கேட்டு
பிரிவுகளை உணர்ந்த நொடியிலும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

கல்லூரி நாட்களிலயே
கனவுகளை சுமந்தபடி
யாருக்கும் தெரியாமல்
கடிதங்களை எழுதிகொடுத்து
கழிவறைக்குள்ளே நின்றுபடித்த போதும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

விக்கல் வந்திடும் வேளையிலே
அவள் நினைப்பில் நானென்று
உள்ளுக்குள் சிரிக்கும் போதும்
உணவருந்தும் நேரத்தில்
இருமல் வந்து பொறையேற
அவள் தான் திட்டுகிறாள்
பார்க்கவில்லையென நினைத்திடும் போதும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

கல்யாணம் வார்த்தைகள்
வீட்டினுள்ளே உதிர்ந்தபோது
உதிரத்தில் நடுக்கம் வந்து
ஊரைவிட்டு ஓடிய போதும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

உயிரோடு இருக்கும் போதே
உற்றாரும் பெற்றோரும்
திவசம் செய்திட்ட போதிலும்
எங்கள் காதலை வாழ வைத்திட
மகிழ்ச்சியாக வாழ்ந்திடும் போதும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்....

உடல் சேர்க்கை மட்டுமே
உயிர்காதல் என்று சொன்னவர்களுக்கு
உயிரோடு கலந்துவிட்ட உணர்வுகளின் அன்புதான்
காதலென்று
புரிய வைத்த நேரத்திலும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

அவள் வயிற்றில் என்னுயிரும்
உண்டான நொடிகளிலே
முத்தமழை பொழிந்துவிட்டு
தொன்னூறு நாட்கள் வரை
கடவுளை வேண்டியபோதும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்....

உப்பிய வயிற்றில்
உதடுகளை பதித்தவிட்டு
உதைக்கும் நொடிகளிலே
வயிற்றினை தடவி சிலிர்த்திட்ட போதிலும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

பிரசவவலியில் அவள் துடிக்க
என் இதயம் கலங்கிடவே
ஆணென்பதையும் மறந்துவிட்டு
அழத நிமிடங்களில்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

தாயமுது தந்திடும் நேரம் தவிர
குழந்தை வைத்திருக்கும் காலத்திற்கு
சண்டை போட்டு திட்டிய போதும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

இன்று எல்லாம் முடிந்து
முகத்தில் சுருக்கம் விழ
காலனை எதிர்பார்த்து
கவலைகள் கொண்ட போதிலும்
அன்பு காதல் குறையாமல்
உணவுகளை ஊட்டிவிட்டு
கண்ணீரை துடைத்து விட்டு
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்...

ஓயாத கடலலை போல
ஒவ்வொரு நொடியிலும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறோம்....

- சேதுபதி விசுவநாதன்

Wowwww 😍😍😍😍😍👏👏👏👏 rombave nalla irruku😍😍😍😍
 
Top