சிறுகதை.
வெளிச்சத்தை நோக்கி ~
பத்து நாள் பெய்த மழை நின்றுவிட்டது. வெராண்டாவில் விரித்து வைத்திருந்த குடையை மடக்கி உள்ளே வைத்தாள் சாரு.
“அம்மா...மழைத் தண்ணீர் வடிந்துவிட்டதான்னு பார்த்து வைமா. அப்புறம் குடை கிழிந்து விடப் போகிறது. பழைய குடை...” என்றாள் மகள் கீர்த்தனா. ஆறு வயது தான் ஆகிறது....இப்பவே பொறுப்பாக இருக்கிறாள்.
“வடிஞ்சுவிட்டதடி....டிபன் பாக்ஸ்யை எடுத்துக்கோ. இன்னிக்கு இட்லி தான். தொட்டுக்க எள்ளு முளகாப்படி...ஸ்கூல் பஸ் வந்ததும் பத்ரமா ஏறிப் போ. போய் போன் பண்ணு...என்னென்னவோ நடக்கு பயமா இருக்கு. சூதானமா இரு. அம்மா ஆபிஸ் கிளம்பறேன்...” மகளுக்கு எச்சரிக்கை பண்ணிவிட்டு தெருவில் இறங்கி நடந்தாள் சாரு. வானத்தைப் பார்க்க அழகாய் இருந்தது. சூல் கொன்ட கருப்பு மேகங்களை விரட்டி விட்டு வானம் சூரியனுக்கு இடம் கொடுத்திருந்தது. நச நச ஈரம் மண்டிய தெரு காயத் தொடங்கி இருந்தது. மரங்கள் மழை நீரால் கழுவப் பட்டு ஊட்டி மலர் கண்காட்சி போல் மரம் கண்காட்சி நடத்தலாம் போல் பளிச்சென்று இருந்தன மரங்கள். இயற்கையின் கொடை தானே மரங்கள். சூரியனின் இதமான வெப்பம் உடலுக்கு சுறு சுறுப்பைத் தந்தது.
அந்த தெருவாசிகள் இப்பொழுது அவரவர் வீட்டில் கணவனை பிள்ளைகளை கல்லுரி, பள்ளி அலுவலகம் அனுப்ப முனைப்பாக இருப்பார்கள். கொஞ்ச நேரம் ஆனதும் வெளியில் வந்து அரட்டைக் கச்சேரியை ஆரம்பிப்பார்கள். அவர்களின் சூடான டாபிக் அவள் குடும்பம் தான். ஐந்து வருடமாக இது தான் அலசப்படுகிறது. அவள் தான் கதாநாயகி போலும். அல்லது வில்லியா?
சாரு வேப்ப மரத்தைக் கடந்த போது அந்த நொண்டி மனிதன் அவளைப் பார்த்து சினேகமாக சிரித்தான். நொண்டி என்றால் நடக்கமுடியாத நொண்டி இல்லை. சற்றே விந்தி விந்தி நடப்பான்.
தெருவில், உடைந்து போன தேர் மாதிரி அந்த அவன் எப்பொழுதும் வேப்பமர நிழலில் உட்கார்ந்து கொண்டு தெரு வாசிகளுக்கு ஒரு பாதுகாவல் போல் கண்காணித்தபடி இருப்பான். தெருவில் புதிதாக யாராவது நுழைந்தால் “நீங்க யாரு? யார் வீட்டிக்கு போணும்? என்ன விஷயமா பார்க்கப் போறீங்க?” என்று போலீஸ் அதிகாரி போல் விசாரிப்பான். அவனைத் தாண்டி எந்த திருடனோ கொள்ளைக்காரனோ வரமாட்டான் என்று அந்த தெரு வாசிகள் நம்பினார்கள். அவனுக்கு மிலிட்டரி என்று பேர் வைத்திருந்தார்கள். யாருக்கும் அவன் நிஜப் பெயர் தெரியாது. ஓரளவு சுத்தமாக உடை அணிந்திருப்பான். தெருக் குழாயில் வெள்ளனே குளித்து விடுவான். விபுதி பூசிக் கொண்டு அழுக்கில்லாத ஆடை உடுத்திக் கொண்டு சிரித்த முகமாக இருப்பான். ஓடிப் போகவிருந்த கிருஷ்ணவேணி அம்மாளின் மகளை காப்பாற்றினான். காணாமல் போன மைதிலியின் முன்று வயது மகனை போலீஸ் வரை சென்று அதிகாரிகளிடம் பேசி துரித நடவடிக்கை எடுத்து கண்டு பிடிக்க உதவினான். காய்கறி வாங்கித் தருவான். பால் பழம் வாங்கித் தருவான். நாணயமாக இருப்பான். இப்படியாக அவன் தெரு வாசிகளின் பாதுகாவலனாக அல்லது அடிமையாக? இருந்தான். அந்தத் தெருவில் முப்பது வீடுகள் எதிர் எதிரே இருந்தன. எல்லாரும் நல்ல உத்தியோகஸ்தர்கள். வாசலில் பைக்...சிலர் கார் என்று நிப்பாட்டி இருப்பார்கள். முறை வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி வீடுகளில் போய் சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவான். சாரு மட்டும் அவனுக்கு எதுவும் கொடுக்க மாட்டாள். அவனிடம் பேசவும் மாட்டாள். எந்த உதவியும் கேட்கமாட்டாள்.
“ஏன் கீர்த்தனாம்மா நீங்க மட்டும் மிலிட்டரிக்கு சாப்பிட எதுவும் கொடுப்பதில்லை. உங்களை கஞ்சம்னு கிண்டல் பண்றாங்க...” என்றாள் துளசி. அவள் தான் அந்தத் தெருவில் உண்மையானவள். வம்பு பேச மாட்டாள். சாருவுக்கு அவளை மிகவும் பிடிக்கும்.
“சொல்லிட்டுப் போகட்டும் துளசி. இந்த மாதிரி கேலி பேச்சு எனக்கு புதுசா என்ன? பழகிப் போச்சு. அவனுக்கு சோறு போட்டோ பணம் கொடுத்தோ அவனை நான் சோம்பேறியாக்க விரும்பவில்லை. ஏதாவது உருப்படியா உழைத்து பிழைக்கட்டுமே.” என்றாள். அவளை கேலி செய்வதே பிழைப்பாக கொண்டிருக்கிறார்கள் சிலர். என்ன செய்வது அவள் வீட்டில் தான் வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவள் கணவன் ராமலிங்கம் அடித்த கூத்து எல்லோருக்கும் விருந்தாக இருந்தது. ராமலிங்கம் ஒரு வேலையிலும் நிலைத்து இருப்பதில்லை. பழ வியாபாரம் செய்தான்....தண்ணீர் கேன் கொண்டு சென்றான்....காஸ் கம்பெனியில் சேர்ந்தான்.....கடைசியில் யாரோ ஒரு பணக்கார பெண்ணுடன் காணாமல் போனான். தெரு பூராவாக அவள் மண்டை தான் உருண்டது. புருஷனை காப்பாத்திக்க துப்பில்லை...வேலை செய்யாத புருஷனை கண்டபடி வைதிருக்கிறாள்...அவன் ரோஷம் வந்து ஓடிவிட்டான்...சாரு தான் காரணம்...என்று வேப்பமர நிழலில் நின்று அளந்தார்கள்.. மிலிட்டரி எல்லாவற்றையும் பார்த்தபடி இருப்பான். சாரு கடந்து சென்றால் “வரா வரா..மெதுவா பேசுங்க. அவ காதிலே விழப் போறது.” என்று அவள் காது கேட்கும் படி சொல்வார்கள். அவளும் காது கேட்காதது போல் சென்று விடுவாள். “அசஞ்சி கொடுக்கிறாளா பார்....ஒரு சொட்டு கண்ணீர்...ஒரு வருத்தம் ஒண்ணுமில்லை...இவ ஒருவேளை எவன் கூடவோ சிநேகம் வச்சிருக்கா போலிருக்கு...அதான் ஓடிட்டான்....” என்று அவள் மௌனத்திற்கு காரணம் கற்பிப்பார்கள். “கீர்தனாம்மா...நாக்கை பிடுங்கற மாதிரி நாலு வார்த்தை கேளுங்கள்...அப்ப தான் சும்மா இருப்பார்கள்.” என்று துளசி சொல்வதுண்டு. “விடு துளசி...அவர்களுக்கு பொழுது போனால் சரி...” என்று பதிலளிப்பாள் சாரு. இரவு அவள் சிந்தும் கண்ணீர் ஒருவருக்கும் தெரியாது. அனுதாபம் பெறுவதற்கு அவள் விரும்பவில்லை. அதை விட தூற்றிவிட்டுப் போகட்டும்...அது இன்னும் ஒரு வைராக்கியத்தைக் கொடுக்கும். காலம் பதில் சொல்லும் என்று இருந்தாள். அதற்கும் வந்தது வினை. ஒரு நாள் ராமலிங்கம்....
“சாரு...நான் உன் புருஷன் பேசறேன்...”
“அப்படியா...என் பெயர் கூட நியாபகம் இருக்கா.?”
“தப்பு செய்திட்டேன் சாரு...மன்னிச்சுக்கோ. இனி அப்படி நடக்காது. குழந்தை நல்லா இருக்காளா? அவளை பார்க்கணும் போல இருக்கு. நான் வரட்டுமா?” என்றான். சாரு உடனே “சரி வாங்களேன்...கீர்த்தனாவிற்கு அப்பாவா இருந்தாலே போறும்.” என்றாள் .
“உனக்கு கோபமில்லையே சாரு?”
“இல்லை நீங்க கட்டின தாலி இன்னும் என் கழுத்தில் தான் தொங்குகிறது. அதற்கு அர்த்தம் வரா மாதிரி நடந்தா சரி.....வாங்க...” சாருவின் பதில் அவனைக் கூசிக் குறுக வைத்தது. நன்றாக திட்டி இருந்தால் தேவலை என்று பட்டது. வீட்டிற்கு வந்தான். அம்மா சொல்படி கீர்த்தனா அவனை “வாங்கப்பா...” என்று வரவேற்றாள். கீர்தனாவை பள்ளியில் விடுவது....காய்கறி வாங்கி வருவது....வீட்டில் தண்ணிர் பிடித்து வைப்பது...மாவாட்டி வைப்பது என்று ஏகத்துக்கு உதவினான். “பரவாயில்லையே...நீங்க நிஜமாத்தான் மாறிட்- டீங்க...” என்று சாருவே பாராட்டும் படி நடந்து கொண்டான்.
“நான் நினைக்கவே இல்லை சாரு நீ என்னை ஏற்றுக் கொள்வாய் என்று...”
“கடவுளுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தேன்...என் புருஷனை பொறுப்பாக்குவது உன் கடமை என்றேன்...என் வேண்டுகோள் கேட்டுவிட்டது போல...”
எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது...அது அந்த தெரு வாசிகளுக்குப் பிடிக்குமா? “என்ன....சாரு புருஷன் செட்டில் ஆகிட்டான். நல்ல வேஷம் போடறானா...இல்லை தப்பு தண்டா பண்ணிட்டு ஒளிந்து கொண்டிருக்கானா? என்னவோ இருக்கு...” என்று ஆரம்பித்தார்கள். ஜோடியாக அவர்கள் கோ—விலுக்குப் போவது, சினிமாவிற்கு போவது....என்று சாரு குடும்பம் குதூகலம் கண்டது அவர்களுக்குப் பொய்யாகப் பட்டது. அவன் வடக்கே போய் யாரையோ கொலை பண்ணிவிட்டோ இல்லை ரேப் பண்ணிவிட்டோ வந்திருக்கான்...சாரு மூடி மறைக்கிறாள் என்று யாரோ கிளப்பி விட..”.அப்படியா...” என்று பெண்கள் பலர் அவன் வரும்போது தங்கள் மகள்களை ‘ஏய்...உள்ள போங்கடி...எவன் கண்ணிலும் பட்டு வைக்காதேங்க. ரேப் பண்றவங்கல்லாம் சுத்திட்டு இருக்காங்க.....பிறகு உயிரைத்தான் விட வேண்டும்...” என்று ராமலிங்கம் காது பட பேசினார்கள். உள்ளம் உடைந்த ராமலிங்கம் தன்னைத் தான் சொல்கிறார்கள் என்று புரிந்து அவமானத்தில் கூசிப் போனான். இந்த ராகிங் தொடர்ந்தது....அதன் விளைவு அவன் தூக்கில் தொங்கி விட்டான். ஆயிற்று அது நடந்து ஒரு வருடம் போய்விட்டது. சாரு வழக்கம் போல் கண்ணையும் மனசையும் துடைத்துக் கொண்டு மகளுக்காக மனம் உடையாமல் நிமிர்ந்து நின்றாள். “ இவள் தான் ஏதோ சொல்லி அவன் தூக்கு மாட்டிக் கொண்டான் என்று அதற்கும் அவள் மேல் பழி சொன்னார்கள். வம்பளந்தார்கள். மகள் அழும்போது...”அழாதே கீர்த்தனா...நீ நல்ல படித்து பெரியாளா வந்து காட்டணும். காலம் இப்படியே போகாது. மரியாதை தானா வரும். காத்திருக்கணும்...” என்று சொல்வாள்.
இப்படி சூழ்நிலையில் ஒரு நாள் சாருவிடம் துளசி வந்து பேசினாள்.
“கீர்த்தனாம்மா...அந்த மிலிட்டரியின் கதை தெரியுமா? அவன் நேர்மையானவன். ஆனால் அவன் மகன் ஒரு ப்ராடு. கள்ள நோட்டு அடித்து மாட்டிக்கிட்டான். ஜெயில் வாசம். மகனின் மனைவி, குழந்தைகளுடன் பிறந்த வீட்டுக்குப் சென்றுவிட்டாள். அவமானம் தாங்காமல் ஊரை விட்டு இவன் இங்கு ஓடி வந்து வாழ்றான்...” சாரு மனம் நெகிழ்ந்தது.
“கீர்த்தனா..அம்மா கடைக்கு போயிட்டு வரேன்...நீ படித்துக் கொண்டிரு.” என்று விட்டு தெருவில் இறங்கினாள் சாரு...”நம்ம கதாநாயகி வருது...பொட்டைப் பார்...டிரெஸ்ஸைப் பார்...கொஞ்சமாவது புருஷன் இறந்த துக்கம் தெரியுதா? பூ வாங்கறா பார்...தலையிலே வைக்கறா பார்.. தூ...பொம்பளையா அவ...”
வழக்கம் போல் ஒரு கூர் பார்வை பார்த்துவிட்டு நடந்து விட்டாள் சாரு. மிலிட்டரிக்கு தாங்கவில்லை. “ஏம்மா நீங்கள்ளாம் மனுஷா தானா? அது பாட்டிலே போகுது. வாய்க்கு வந்தபடி பேசினா என்ன அர்த்தம்? மூலையிலே விழுந்து கிடந்தா அவங்க புள்ளையை யார் படிக்க வைக்கிறது? பாட வைக்கிறது....கவனிச்சுக்கறது?...வெளிலே வீதியில போக வேண்டி இருக்கு. அழுது வடிஞ்சிட்டா போக முடியும்? வாயை மூடுங்க....ஓவரா போறீங்க...” என்று ஓங்கி சொன்னான். “‘ஒ...உனக்கு ஒரு வாய் கஞ்சி ஊத்தாதவளுக்கு நீ என்னடா சப்போர்ட் பண்ணுறே? .யார் யாரை வச்சிட்டிருக்காங்கன்னே தெரியலை. உன் கதை தெரியாதா? கள்ள நோட்டு அடித்து மாட்டிக்கிட்ட கும்பல் தானே. இங்க வந்து நல்ல வேஷம் போடறே? இனம் இனத்தோட சேரும். அதான் அந்த மேனா மினுக்கிக்கு ஆதரவா பேசறே...நீ தான் அவளுக்கு கள்ளப் புருஷனா? இப்ப தானே தெரியுது உன் யோக்யதை. ..கர்மம்..” துணிந்து ஒரு வம்பி இப்படி சொல்ல...மற்ற பெண்கள் சிரித்தார்கள்...அவன் அவமானம் தாங்காமல் தலை குனிந்தான். எல்லோருக்கும் விஷயம் தெரிந்து விட்டது. மானம் போய்விட்டது. கண் காணாத இடத்துக் வந்து வாழ்ந்தாலும் நிம்மதியாக இருக்க விட மாட்டார்களா? எங்கு போனாலும் மகனால் மரியாதை இழந்த வாழ்க்கை தானா! தாங்கிக் கொள்ள மனைவியும் இல்லை. புண்ணியவதி போய்ச் சேர்ந்து விட்டாள், மகன் ஜெயிலுக்குப் போன அதிர்ச்சி தாங்காமல். அவன் நொந்தான். இனி வேறு எங்கு போவது?
மறு நாள் அதிகாலை நாலு மணிக்கு சாரு ஒரு கல்யாணத்துக்கு கிளம்பினாள். இப்போ பஸ் பிடித்தால் தான் முகூர்த்த நேரத்துக்கு போய்ச் சேர முடியும்...விரைவாக நடந்தாள். மிலிட்டரி வேப்ப மரத்தில் கயற்றை கட்டிக் கொண்டிருந்தான். சாரு பதறிப் போய். “முட்டாள் என்ன காரியம் செய்றே?” என்று தடுத்திருக்காவிட்டால் இந்நேரம் அவன் கதை முடிந்திருக்கும். அவள் அனுதாபத்துடன் அவனைப் பார்த்தாள்.
“நாளையிலிருந்து நீ என் வீட்டில் தோட்ட வேலை செய். மானமா பிழைத்து வாழ்ந்து காட்டு. உன் நேர்மை அவர்களுக்குப் புரியும். ஈனர்களின் சொல்லுக்கு பயந்து நீ ஏன் உயிரை விடத் துணிந்தே? அவர்களின் இருள் மனதுக்கு எதிரி நம் தன்னம்பிக்கை தான். நான் இல்லை? எவ்வளவு என்னைப் பற்றி பேசியிருப்பார்கள்? உழைத்து வாழ். தன்னம்பிக்கையோடு வாழ். யாரிடமும் கை ஏந்தி வாழாதே. உன் கால் தான் நொண்டி உன் மனசில்லையே?.....வாழ்ந்து காட்டு. வெளிச்சத்தை நோக்கி நம் பயணம் இருக்க வேண்டும். இருளுக்கு டாட்டா சொல்லிவிடு. இந்தா வீட்டுச் சாவி. நான் வரும்வரை வீட்டைப் பார்த்துக் கொள்.” சொல்லிவிட்டு சாரு கம்பீரமாக நின்றாள்.
அவள் சொன்ன வரிகள் திருக்குறள் போல் அவனை வழிகாட்டியது. “சரிங்கம்மா.” கை கூப்பினான். சாருவின் தைரியம் அவனுக்கும் வந்தது.
எச்சில் துப்பியவர்கள் மேலேயே அவர்கள் எச்சில் விழப் போகிறது. புறம் பேசியவர்கள் நாக்குகள் உலர்ந்து போகும். ஏனென்றால் உழைப்புக்கு என்றும் மதிப்பு உண்டு.
சங்கரி அப்பன்.
வெளிச்சத்தை நோக்கி ~
பத்து நாள் பெய்த மழை நின்றுவிட்டது. வெராண்டாவில் விரித்து வைத்திருந்த குடையை மடக்கி உள்ளே வைத்தாள் சாரு.
“அம்மா...மழைத் தண்ணீர் வடிந்துவிட்டதான்னு பார்த்து வைமா. அப்புறம் குடை கிழிந்து விடப் போகிறது. பழைய குடை...” என்றாள் மகள் கீர்த்தனா. ஆறு வயது தான் ஆகிறது....இப்பவே பொறுப்பாக இருக்கிறாள்.
“வடிஞ்சுவிட்டதடி....டிபன் பாக்ஸ்யை எடுத்துக்கோ. இன்னிக்கு இட்லி தான். தொட்டுக்க எள்ளு முளகாப்படி...ஸ்கூல் பஸ் வந்ததும் பத்ரமா ஏறிப் போ. போய் போன் பண்ணு...என்னென்னவோ நடக்கு பயமா இருக்கு. சூதானமா இரு. அம்மா ஆபிஸ் கிளம்பறேன்...” மகளுக்கு எச்சரிக்கை பண்ணிவிட்டு தெருவில் இறங்கி நடந்தாள் சாரு. வானத்தைப் பார்க்க அழகாய் இருந்தது. சூல் கொன்ட கருப்பு மேகங்களை விரட்டி விட்டு வானம் சூரியனுக்கு இடம் கொடுத்திருந்தது. நச நச ஈரம் மண்டிய தெரு காயத் தொடங்கி இருந்தது. மரங்கள் மழை நீரால் கழுவப் பட்டு ஊட்டி மலர் கண்காட்சி போல் மரம் கண்காட்சி நடத்தலாம் போல் பளிச்சென்று இருந்தன மரங்கள். இயற்கையின் கொடை தானே மரங்கள். சூரியனின் இதமான வெப்பம் உடலுக்கு சுறு சுறுப்பைத் தந்தது.
அந்த தெருவாசிகள் இப்பொழுது அவரவர் வீட்டில் கணவனை பிள்ளைகளை கல்லுரி, பள்ளி அலுவலகம் அனுப்ப முனைப்பாக இருப்பார்கள். கொஞ்ச நேரம் ஆனதும் வெளியில் வந்து அரட்டைக் கச்சேரியை ஆரம்பிப்பார்கள். அவர்களின் சூடான டாபிக் அவள் குடும்பம் தான். ஐந்து வருடமாக இது தான் அலசப்படுகிறது. அவள் தான் கதாநாயகி போலும். அல்லது வில்லியா?
சாரு வேப்ப மரத்தைக் கடந்த போது அந்த நொண்டி மனிதன் அவளைப் பார்த்து சினேகமாக சிரித்தான். நொண்டி என்றால் நடக்கமுடியாத நொண்டி இல்லை. சற்றே விந்தி விந்தி நடப்பான்.
தெருவில், உடைந்து போன தேர் மாதிரி அந்த அவன் எப்பொழுதும் வேப்பமர நிழலில் உட்கார்ந்து கொண்டு தெரு வாசிகளுக்கு ஒரு பாதுகாவல் போல் கண்காணித்தபடி இருப்பான். தெருவில் புதிதாக யாராவது நுழைந்தால் “நீங்க யாரு? யார் வீட்டிக்கு போணும்? என்ன விஷயமா பார்க்கப் போறீங்க?” என்று போலீஸ் அதிகாரி போல் விசாரிப்பான். அவனைத் தாண்டி எந்த திருடனோ கொள்ளைக்காரனோ வரமாட்டான் என்று அந்த தெரு வாசிகள் நம்பினார்கள். அவனுக்கு மிலிட்டரி என்று பேர் வைத்திருந்தார்கள். யாருக்கும் அவன் நிஜப் பெயர் தெரியாது. ஓரளவு சுத்தமாக உடை அணிந்திருப்பான். தெருக் குழாயில் வெள்ளனே குளித்து விடுவான். விபுதி பூசிக் கொண்டு அழுக்கில்லாத ஆடை உடுத்திக் கொண்டு சிரித்த முகமாக இருப்பான். ஓடிப் போகவிருந்த கிருஷ்ணவேணி அம்மாளின் மகளை காப்பாற்றினான். காணாமல் போன மைதிலியின் முன்று வயது மகனை போலீஸ் வரை சென்று அதிகாரிகளிடம் பேசி துரித நடவடிக்கை எடுத்து கண்டு பிடிக்க உதவினான். காய்கறி வாங்கித் தருவான். பால் பழம் வாங்கித் தருவான். நாணயமாக இருப்பான். இப்படியாக அவன் தெரு வாசிகளின் பாதுகாவலனாக அல்லது அடிமையாக? இருந்தான். அந்தத் தெருவில் முப்பது வீடுகள் எதிர் எதிரே இருந்தன. எல்லாரும் நல்ல உத்தியோகஸ்தர்கள். வாசலில் பைக்...சிலர் கார் என்று நிப்பாட்டி இருப்பார்கள். முறை வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி வீடுகளில் போய் சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவான். சாரு மட்டும் அவனுக்கு எதுவும் கொடுக்க மாட்டாள். அவனிடம் பேசவும் மாட்டாள். எந்த உதவியும் கேட்கமாட்டாள்.
“ஏன் கீர்த்தனாம்மா நீங்க மட்டும் மிலிட்டரிக்கு சாப்பிட எதுவும் கொடுப்பதில்லை. உங்களை கஞ்சம்னு கிண்டல் பண்றாங்க...” என்றாள் துளசி. அவள் தான் அந்தத் தெருவில் உண்மையானவள். வம்பு பேச மாட்டாள். சாருவுக்கு அவளை மிகவும் பிடிக்கும்.
“சொல்லிட்டுப் போகட்டும் துளசி. இந்த மாதிரி கேலி பேச்சு எனக்கு புதுசா என்ன? பழகிப் போச்சு. அவனுக்கு சோறு போட்டோ பணம் கொடுத்தோ அவனை நான் சோம்பேறியாக்க விரும்பவில்லை. ஏதாவது உருப்படியா உழைத்து பிழைக்கட்டுமே.” என்றாள். அவளை கேலி செய்வதே பிழைப்பாக கொண்டிருக்கிறார்கள் சிலர். என்ன செய்வது அவள் வீட்டில் தான் வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவள் கணவன் ராமலிங்கம் அடித்த கூத்து எல்லோருக்கும் விருந்தாக இருந்தது. ராமலிங்கம் ஒரு வேலையிலும் நிலைத்து இருப்பதில்லை. பழ வியாபாரம் செய்தான்....தண்ணீர் கேன் கொண்டு சென்றான்....காஸ் கம்பெனியில் சேர்ந்தான்.....கடைசியில் யாரோ ஒரு பணக்கார பெண்ணுடன் காணாமல் போனான். தெரு பூராவாக அவள் மண்டை தான் உருண்டது. புருஷனை காப்பாத்திக்க துப்பில்லை...வேலை செய்யாத புருஷனை கண்டபடி வைதிருக்கிறாள்...அவன் ரோஷம் வந்து ஓடிவிட்டான்...சாரு தான் காரணம்...என்று வேப்பமர நிழலில் நின்று அளந்தார்கள்.. மிலிட்டரி எல்லாவற்றையும் பார்த்தபடி இருப்பான். சாரு கடந்து சென்றால் “வரா வரா..மெதுவா பேசுங்க. அவ காதிலே விழப் போறது.” என்று அவள் காது கேட்கும் படி சொல்வார்கள். அவளும் காது கேட்காதது போல் சென்று விடுவாள். “அசஞ்சி கொடுக்கிறாளா பார்....ஒரு சொட்டு கண்ணீர்...ஒரு வருத்தம் ஒண்ணுமில்லை...இவ ஒருவேளை எவன் கூடவோ சிநேகம் வச்சிருக்கா போலிருக்கு...அதான் ஓடிட்டான்....” என்று அவள் மௌனத்திற்கு காரணம் கற்பிப்பார்கள். “கீர்தனாம்மா...நாக்கை பிடுங்கற மாதிரி நாலு வார்த்தை கேளுங்கள்...அப்ப தான் சும்மா இருப்பார்கள்.” என்று துளசி சொல்வதுண்டு. “விடு துளசி...அவர்களுக்கு பொழுது போனால் சரி...” என்று பதிலளிப்பாள் சாரு. இரவு அவள் சிந்தும் கண்ணீர் ஒருவருக்கும் தெரியாது. அனுதாபம் பெறுவதற்கு அவள் விரும்பவில்லை. அதை விட தூற்றிவிட்டுப் போகட்டும்...அது இன்னும் ஒரு வைராக்கியத்தைக் கொடுக்கும். காலம் பதில் சொல்லும் என்று இருந்தாள். அதற்கும் வந்தது வினை. ஒரு நாள் ராமலிங்கம்....
“சாரு...நான் உன் புருஷன் பேசறேன்...”
“அப்படியா...என் பெயர் கூட நியாபகம் இருக்கா.?”
“தப்பு செய்திட்டேன் சாரு...மன்னிச்சுக்கோ. இனி அப்படி நடக்காது. குழந்தை நல்லா இருக்காளா? அவளை பார்க்கணும் போல இருக்கு. நான் வரட்டுமா?” என்றான். சாரு உடனே “சரி வாங்களேன்...கீர்த்தனாவிற்கு அப்பாவா இருந்தாலே போறும்.” என்றாள் .
“உனக்கு கோபமில்லையே சாரு?”
“இல்லை நீங்க கட்டின தாலி இன்னும் என் கழுத்தில் தான் தொங்குகிறது. அதற்கு அர்த்தம் வரா மாதிரி நடந்தா சரி.....வாங்க...” சாருவின் பதில் அவனைக் கூசிக் குறுக வைத்தது. நன்றாக திட்டி இருந்தால் தேவலை என்று பட்டது. வீட்டிற்கு வந்தான். அம்மா சொல்படி கீர்த்தனா அவனை “வாங்கப்பா...” என்று வரவேற்றாள். கீர்தனாவை பள்ளியில் விடுவது....காய்கறி வாங்கி வருவது....வீட்டில் தண்ணிர் பிடித்து வைப்பது...மாவாட்டி வைப்பது என்று ஏகத்துக்கு உதவினான். “பரவாயில்லையே...நீங்க நிஜமாத்தான் மாறிட்- டீங்க...” என்று சாருவே பாராட்டும் படி நடந்து கொண்டான்.
“நான் நினைக்கவே இல்லை சாரு நீ என்னை ஏற்றுக் கொள்வாய் என்று...”
“கடவுளுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தேன்...என் புருஷனை பொறுப்பாக்குவது உன் கடமை என்றேன்...என் வேண்டுகோள் கேட்டுவிட்டது போல...”
எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது...அது அந்த தெரு வாசிகளுக்குப் பிடிக்குமா? “என்ன....சாரு புருஷன் செட்டில் ஆகிட்டான். நல்ல வேஷம் போடறானா...இல்லை தப்பு தண்டா பண்ணிட்டு ஒளிந்து கொண்டிருக்கானா? என்னவோ இருக்கு...” என்று ஆரம்பித்தார்கள். ஜோடியாக அவர்கள் கோ—விலுக்குப் போவது, சினிமாவிற்கு போவது....என்று சாரு குடும்பம் குதூகலம் கண்டது அவர்களுக்குப் பொய்யாகப் பட்டது. அவன் வடக்கே போய் யாரையோ கொலை பண்ணிவிட்டோ இல்லை ரேப் பண்ணிவிட்டோ வந்திருக்கான்...சாரு மூடி மறைக்கிறாள் என்று யாரோ கிளப்பி விட..”.அப்படியா...” என்று பெண்கள் பலர் அவன் வரும்போது தங்கள் மகள்களை ‘ஏய்...உள்ள போங்கடி...எவன் கண்ணிலும் பட்டு வைக்காதேங்க. ரேப் பண்றவங்கல்லாம் சுத்திட்டு இருக்காங்க.....பிறகு உயிரைத்தான் விட வேண்டும்...” என்று ராமலிங்கம் காது பட பேசினார்கள். உள்ளம் உடைந்த ராமலிங்கம் தன்னைத் தான் சொல்கிறார்கள் என்று புரிந்து அவமானத்தில் கூசிப் போனான். இந்த ராகிங் தொடர்ந்தது....அதன் விளைவு அவன் தூக்கில் தொங்கி விட்டான். ஆயிற்று அது நடந்து ஒரு வருடம் போய்விட்டது. சாரு வழக்கம் போல் கண்ணையும் மனசையும் துடைத்துக் கொண்டு மகளுக்காக மனம் உடையாமல் நிமிர்ந்து நின்றாள். “ இவள் தான் ஏதோ சொல்லி அவன் தூக்கு மாட்டிக் கொண்டான் என்று அதற்கும் அவள் மேல் பழி சொன்னார்கள். வம்பளந்தார்கள். மகள் அழும்போது...”அழாதே கீர்த்தனா...நீ நல்ல படித்து பெரியாளா வந்து காட்டணும். காலம் இப்படியே போகாது. மரியாதை தானா வரும். காத்திருக்கணும்...” என்று சொல்வாள்.
இப்படி சூழ்நிலையில் ஒரு நாள் சாருவிடம் துளசி வந்து பேசினாள்.
“கீர்த்தனாம்மா...அந்த மிலிட்டரியின் கதை தெரியுமா? அவன் நேர்மையானவன். ஆனால் அவன் மகன் ஒரு ப்ராடு. கள்ள நோட்டு அடித்து மாட்டிக்கிட்டான். ஜெயில் வாசம். மகனின் மனைவி, குழந்தைகளுடன் பிறந்த வீட்டுக்குப் சென்றுவிட்டாள். அவமானம் தாங்காமல் ஊரை விட்டு இவன் இங்கு ஓடி வந்து வாழ்றான்...” சாரு மனம் நெகிழ்ந்தது.
“கீர்த்தனா..அம்மா கடைக்கு போயிட்டு வரேன்...நீ படித்துக் கொண்டிரு.” என்று விட்டு தெருவில் இறங்கினாள் சாரு...”நம்ம கதாநாயகி வருது...பொட்டைப் பார்...டிரெஸ்ஸைப் பார்...கொஞ்சமாவது புருஷன் இறந்த துக்கம் தெரியுதா? பூ வாங்கறா பார்...தலையிலே வைக்கறா பார்.. தூ...பொம்பளையா அவ...”
வழக்கம் போல் ஒரு கூர் பார்வை பார்த்துவிட்டு நடந்து விட்டாள் சாரு. மிலிட்டரிக்கு தாங்கவில்லை. “ஏம்மா நீங்கள்ளாம் மனுஷா தானா? அது பாட்டிலே போகுது. வாய்க்கு வந்தபடி பேசினா என்ன அர்த்தம்? மூலையிலே விழுந்து கிடந்தா அவங்க புள்ளையை யார் படிக்க வைக்கிறது? பாட வைக்கிறது....கவனிச்சுக்கறது?...வெளிலே வீதியில போக வேண்டி இருக்கு. அழுது வடிஞ்சிட்டா போக முடியும்? வாயை மூடுங்க....ஓவரா போறீங்க...” என்று ஓங்கி சொன்னான். “‘ஒ...உனக்கு ஒரு வாய் கஞ்சி ஊத்தாதவளுக்கு நீ என்னடா சப்போர்ட் பண்ணுறே? .யார் யாரை வச்சிட்டிருக்காங்கன்னே தெரியலை. உன் கதை தெரியாதா? கள்ள நோட்டு அடித்து மாட்டிக்கிட்ட கும்பல் தானே. இங்க வந்து நல்ல வேஷம் போடறே? இனம் இனத்தோட சேரும். அதான் அந்த மேனா மினுக்கிக்கு ஆதரவா பேசறே...நீ தான் அவளுக்கு கள்ளப் புருஷனா? இப்ப தானே தெரியுது உன் யோக்யதை. ..கர்மம்..” துணிந்து ஒரு வம்பி இப்படி சொல்ல...மற்ற பெண்கள் சிரித்தார்கள்...அவன் அவமானம் தாங்காமல் தலை குனிந்தான். எல்லோருக்கும் விஷயம் தெரிந்து விட்டது. மானம் போய்விட்டது. கண் காணாத இடத்துக் வந்து வாழ்ந்தாலும் நிம்மதியாக இருக்க விட மாட்டார்களா? எங்கு போனாலும் மகனால் மரியாதை இழந்த வாழ்க்கை தானா! தாங்கிக் கொள்ள மனைவியும் இல்லை. புண்ணியவதி போய்ச் சேர்ந்து விட்டாள், மகன் ஜெயிலுக்குப் போன அதிர்ச்சி தாங்காமல். அவன் நொந்தான். இனி வேறு எங்கு போவது?
மறு நாள் அதிகாலை நாலு மணிக்கு சாரு ஒரு கல்யாணத்துக்கு கிளம்பினாள். இப்போ பஸ் பிடித்தால் தான் முகூர்த்த நேரத்துக்கு போய்ச் சேர முடியும்...விரைவாக நடந்தாள். மிலிட்டரி வேப்ப மரத்தில் கயற்றை கட்டிக் கொண்டிருந்தான். சாரு பதறிப் போய். “முட்டாள் என்ன காரியம் செய்றே?” என்று தடுத்திருக்காவிட்டால் இந்நேரம் அவன் கதை முடிந்திருக்கும். அவள் அனுதாபத்துடன் அவனைப் பார்த்தாள்.
“நாளையிலிருந்து நீ என் வீட்டில் தோட்ட வேலை செய். மானமா பிழைத்து வாழ்ந்து காட்டு. உன் நேர்மை அவர்களுக்குப் புரியும். ஈனர்களின் சொல்லுக்கு பயந்து நீ ஏன் உயிரை விடத் துணிந்தே? அவர்களின் இருள் மனதுக்கு எதிரி நம் தன்னம்பிக்கை தான். நான் இல்லை? எவ்வளவு என்னைப் பற்றி பேசியிருப்பார்கள்? உழைத்து வாழ். தன்னம்பிக்கையோடு வாழ். யாரிடமும் கை ஏந்தி வாழாதே. உன் கால் தான் நொண்டி உன் மனசில்லையே?.....வாழ்ந்து காட்டு. வெளிச்சத்தை நோக்கி நம் பயணம் இருக்க வேண்டும். இருளுக்கு டாட்டா சொல்லிவிடு. இந்தா வீட்டுச் சாவி. நான் வரும்வரை வீட்டைப் பார்த்துக் கொள்.” சொல்லிவிட்டு சாரு கம்பீரமாக நின்றாள்.
அவள் சொன்ன வரிகள் திருக்குறள் போல் அவனை வழிகாட்டியது. “சரிங்கம்மா.” கை கூப்பினான். சாருவின் தைரியம் அவனுக்கும் வந்தது.
எச்சில் துப்பியவர்கள் மேலேயே அவர்கள் எச்சில் விழப் போகிறது. புறம் பேசியவர்கள் நாக்குகள் உலர்ந்து போகும். ஏனென்றால் உழைப்புக்கு என்றும் மதிப்பு உண்டு.
சங்கரி அப்பன்.
Last edited: