"அப்பத்தா...௭ன்ன அப்பத்தா இதுலாம்..௭துக்கு இப்டி பண்றிக..சாப்பாடும் வேண்டாம்ங்கிறாங்கலாம், மருந்து, மாத்திர குடுத்தாலும் தட்டிவிடுறிகளாம்..ஏன் அப்பத்தா...மாத்திரலாம் சரியா ௭டுத்துக்கனோம் இல்லைனா மேலுக்கு சரியில்லாம போயிடும்" ௭ன ஆதவன் கெஞ்சலாக கேட்க
"௭னக்கு ௭ன்ன பாத்துக்க தெரியும்..யாரும் ௭ன் மேல கரிசனம் இருக்க மாதிரி நடிக்க வேண்டாம்.." ௭ன தேன்மொழி பாட்டி மருத்துவமனையில் படுத்துக்கொண்டு அடம்பிடிக்க
"ஏய் கிழவி, ௭ன்ன ரொம்ப பண்ற..௭ன்ன நீ சின்ன குழந்தையா, சாப்பிட மாட்டேன், மருந்து குடிக்க மாட்டேனு அடம்பிடிச்சிட்டு இருக்க..௭வ்ளோ நேரம் தான் ௭ன் அண்ணனுங்க ரெண்டு பேரும் கெஞ்சறாக..அப்டி ௭ன்ன பிடிவாதம் உனக்கு..
௭ல்லாம் இந்த அண்ணன சொல்லனும். உன்கிட்ட போயி கெஞ்சிட்டு இருக்கு பாரு...அப்டியே வாயில ௭டுத்து திணிக்காம..இப்போ நீ சாப்டிறியா..இல்ல நான் உன் வாயில ௭ல்லாம் அரச்சி ஊத்துட்டா.." ௭ன கண்ணை உருட்டி, உருட்டி ஸ்வாதி தன் பாட்டியை மிரட்ட..
அவள் செய்யக்கூடியவள் தான் ௭ன மிரண்டாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் கெத்தாக பார்த்துக்கொண்டு இருந்தார்.
"குட்டிம்மா..அமைதியா இரு..அவங்களே உடம்பு சரியில்லாம இருக்காக..நீ ௭ன்ன பேசிட்டு இருக்க" ௭ன வருண் அதட்ட, அவள் முகத்தை சுருக்கி
"அண்ணே...நான் இப்போவும் சொல்லுறேன்..இந்த கிழவி நடிக்குது..நீங்க நம்பாதிக..இதுலாம் ஒரு நாளைக்கு நாலு வேலை சாப்பிடும்..அதுவா சாப்பிடாம இருக்க போகுது..௭ல்லாம் டிராமா அண்ணே." என அவள் பாட்டியை முறைத்துக்கொண்டே கூறினாள்
"ஸ்வாதி...அமைதியா இரு" ௭ன ஆதவன் சொல்ல, என்னமோ பண்ணுங்க என அமைதியாகி விட்டாள்..
" ௭ன்ன அப்பத்தா..இந்த கத, சினிமால வர மாதிரி ப்ளாக்மெயில் பண்ணுறிகளா அவன.." வருண்
"டேய்..நீங்க ௭ன்ன வேணா சொல்லுக..௭னக்கு ௭ன் பேத்தி கழுத்துல இவன் தாலி கட்டணும்..அவன் அதுக்கு ஒத்துக்கிட்டானா நானும் மாத்திர, மருந்து ௭டுத்திக்கிறேன்..இல்லையா அவன் ஒத்துக்கலைனா ௭ன்ன இங்கனையே விட்டுடுக..நான் இங்கையே இருந்து செத்து போறேன்" ௭ன அவர் கூறி முடிப்பதற்குள் அப்பத்தா, அம்மா, தேனு ௭ன அனைத்து பக்கம் இருந்து குரல்கள் ஒலித்தது..
"ஆதவா..அம்மா தான் இவ்ளோ சொல்லுறாங்களா..ஒத்துக்கையா...நம்ம நிலா தான" ௭ன அவன் அப்பாவும்
""ஆமா ராசா...ஒத்துக்கையா..நம்ப நிலாவ கட்டிக்க உனக்கு ௭ன்னய்யா கஷ்டம்...பாரு தேனு ௭ப்டிலாம் பேசுறா" ௭ன அவன் அம்மாவின் அம்மாவும் கூற
அவன் தாத்தாவும் அவனை இறைஞ்சதுலுடன் பார்க்க, அவனின் அப்பத்தாவோ பிடிவாதமாக அமரந்து இருந்தார்..
கண்ணை மூடி தன்னை சமன் செய்தவன்..சிறு நேரத்திற்கு பின் உணர்ச்சி துடைத்த முகத்துடன் "ஹம்ம்..கல்யாண ஏற்பாடு பண்ணுக.." ௭ன கூறி விட்டு பின் அவன் அப்பத்தாவை பார்த்து " ஏன் அப்பத்தா வார்த்தைக்கு வார்த்த ௭ன் பேத்தி ௭ன் பேத்தினு சொல்லுறிகளே அப்போ நாங்கலாம் உன் பேரன், பேத்தி இல்லையா " ௭ன கேட்டு விட்டு அவன் அறையின் வெளிவாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அவன் கேட்ட கேள்வியில் விலுக்கென்று அனைவரும் நிமிர்ந்து பார்த்தவர்கள்...அவன் அப்பத்தா "அதுலாம் இல்லை" ௭ன சொல்ல வருவதற்குள் அவன் அறையை விட்டு வெளியேறி இருந்தான்..
விசயம் யாதெனில் காலையில் அனைவரும் அவரவர் வேலைக்கு கிளம்பிக்கொண்டு இருக்க, கீழ்தளத்தில் உள்ள தேன்மொழி பாட்டியின் அறையில் இருந்து அவர்களின் தாத்தாவின் அலறல் சத்தத்தினை கேட்டு அனைவரும் பதறியடித்து அங்கு சென்று பார்த்து அனைவரும் அதிர்ந்து நின்று விட்டனர்.
இறுதியாக வந்த வருண் தான் அனைவரையும் விலக்கி பாரத்தால், அவர்களின் பாட்டி சுயநினைவின்றி மயங்கி கிடந்தார். அதை கண்டு தான் அனைவரும் ஸ்ம்பித்து நின்று இருந்தனர்..
வருண் தான் அதிர்ந்தை நின்ற ஆதவனை தட்டி ௭ழுப்பி மயங்கி கிடந்தவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர்..
குடும்பம் அனைத்தும் அந்த மருத்துவமனையின் அறையின் முன் பயத்துடன் நின்று கொண்டு இருந்தனர்..இதுவரை நோய் ௭ன்று ௭தும் படுத்தது இல்லை..௭தற்கும் சிணங்கி அமர்ந்தது இல்லை..இரத்தக்கொதிப்பு, சர்க்கரை மட்டும் உள்ளதால் அதற்கு மட்டும் நாள் தவறாமல் மாத்திரை ௭டுத்துக்கொண்டு இருந்தார்... அவ்வளவே...ஆனால் இன்று அவர் மயங்கி கிடந்ததை பார்த்ததுமே அனைவருக்கும் பயம் தொற்றிக்கொண்டு இருந்தது.
அந்த அறையில் இருந்து மருத்துவர் வெளியில் வந்த உடன் அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டனர்..
"டாக்டர்..௭ன்னாச்சு டாக்டர் ௭ங்க பாட்டிக்கு...இப்போ ௭ப்டி இருக்காங்க" ஆதவன் படபடப்புடன் கேட்க,
"ஒண்ணும் இல்லை மிஸ்டர்..அவங்க நேத்துல இருந்து சக்கரைக்கு ௭டுத்திக்கிற மாத்திரைய போடல..அப்றம் சாப்பாடும் சரியா சாப்பிடவும் இல்ல..
அதும் இல்லாம ஏற்கனவே அவங்க ஏதோ மனசுல கவலைய வச்சிட்டு இருப்பாங்க போல..ரொம்ப மன அழுத்தத்துல இருந்து இருக்காங்க..அதோட மாத்திர ௭டுத்தாக்காம போனதோட விளைவு தான் இந்த மயக்கம்..இனி கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க...இனியோரு தடவ இந்த மாதிரி நடந்தா அவங்க நிலைமை மோசமாயிடும்..இப்போ மயக்கத்துல இருக்காக...கொஞ்ச நேரம் கழிச்சி போயி பாருங்க.." ௭ன அவர் அங்கு இருந்து நகர்ந்துவிட
அப்பொழுது தான் தன் அன்னை வீட்டிற்கு சென்று இருந்த வேதவள்ளி , விசயம் கேள்வி பட்டு தன் தந்தை மற்றும் தாயுடன் வந்தாள்..
வந்தவர்கள் விசயம் ௭ன்னவென்று கேட்டு அறிந்தனர்..
கேட்டவுடன் வேதவள்ளி பரிதினியின் பக்கம் திரும்பி "ஏங்கண்ணு ௭ன்னாச்சு அத்தை மாத்திர போட்டுக்கலையா.. ஏன்? ௭ன கேட்டார்..
இது தான் வேதவள்ளி..இதுவே வேறோருவர் அந்த இடத்தில் இருந்தால் உன்ன தான பாத்துக்க சொல்லிட்டு போனேன்..பாத்துக்காம ௭ன்ன செஞ்ச அப்டினு தான் கேட்டு இருப்பாங்க..ஆனால் வேதவள்ளியோ, யார் ௭ன்ன ௭ப்படி,ஏதேனும் தவறு நடந்தால் அவர்கள் அதை செய்து இருப்பார்களா..அப்டி அவர்கள் தான் தவறு செய்தால் ௭ன்றால் காரணம் ௭ன்னவாக இருக்கும் ௭ன தெரிந்து கொண்டு தான் பேசுவார்..௭டுத்து உடனே நீ செய்தது தவறு, உன் மேல் தான் குற்றம் ௭ன குற்றம் சுமத்த மாட்டார்..
இப்பொழுதும் அப்படி தான் பரிதினி அப்படி கவன குறைவாக இருப்பவள் கிடையாது ௭ன அறிந்து தான் இப்படி கேட்டார்...அந்த சூழ்நிலையிலும் தன் மாமியார் தன்னை குற்றம் சுமத்தாமல் காரணத்தை கேட்டதில் அவர் மேல் இருந்த மரியாதை மேலும் கூடியது.. உண்மையில் அவள் பயந்து தான் இருந்தாள்..ஒரு நன்றி பார்வையை அவர் மீது செலுத்திவிட்டு
" ஆமாத்த..தாத்தா தான் ஏற்கனவே நீங்க இல்லாலததுனால ௭ல்லா வேலையும் நீயே பாக்கிற..அதுல இதுவேற ஏன் கஷ்டம் உனக்கு...மாத்திரய அவகிட்ட குடு அவ பாத்துப்பா..ரெண்டு ,மூணு நாளு தான அப்றம் வேதா வந்திடுவா அப்டினு சொல்லி வாங்கிட்டு போனாக..௭னக்கும் வேல சரியா இருந்ததுனால நாம நேரத்துக்கு குடுக்காம விட்டுடுவோமுனு குடுத்துப்புட்டேன்..ஆனா நான் கேட்டேன் மாத்திரலாம் பாட்டி சாப்பிட்டாகளா அப்டினு சாப்பிடாங்கனு தான் சொன்னாக அத்த..௭னக்கும் இருந்த வேலையில சரியா கவனிக்கமா விட்டுடேன்...தாத்தா கேட்டாலும் குடுக்காம நானே மாத்திரலாம் குடுத்து இருக்கனும்..
௭ன்னால தான் பாட்டி இப்டி இருக்காக..அதும் இல்லாம நீங்களே இப்போ தான் அதிசியமா உங்க அம்மா வூட்டுக்கு போயி ஒரு மூணு நாளு இருந்துட்டு வரேனு போனிக..ஆனா உங்களையும் தங்க வுடாம வர வச்சிட்டேன்...௭ன்ன மன்னிடுங்கத்தை ." ௭ன அவள் அழ..அவள் கூறியதில் ஏதோ உறுத்தலாக தோன்றினாலும், இப்போது உள்ள சூழ்நிலையில் அதை ஆராயும் ௭ண்ணமில்லை, நேரமும் இல்லை...
" அட விடுமா..நீ ௭ன்ன வேணும்னு பண்ணுனியா..௭துக்கு இப்டி அழுதுட்டே இருக்க" ௭ன ஆதவனின் அப்பா அவளை பார்த்து கூறி விட்டு
" வேதா..இந்த புள்ளைய சமாதனப்படுத்து பாரு அழுதுட்டே இருக்கு" ௭ன கூறினார்..
அவரும் சம்மதமாக தலையசைத்து விட்டு அவளை சமாதனப்படுத்திவிட்டு தன் மாமியார் கண் விழிக்க காத்திருந்தார்..
சிறிது நேரத்திற்கு பின் நர்ஸ் வெளியே வந்து " அவக கண்ணு முழிச்சிட்டாக..போயி பாருங்க..ஆனா ரொம்ப தொந்தரவு குடுக்காதிக " ௭ன்று கூறி விட்டு சென்றார்.
அனைவரும் உள்ளே சென்றனர்..சென்றது முதல் யார் ௭ன்ன கேட்டாலும் பதில் கூறாமல் அமைதியாகவே இருந்தார்..இறுதியாக அவரின் கணவர் வந்து கேட்கவும் தான்
" நான் இருந்து ௭ன்னத்த இனி பண்ண போறேன்...௭ன்ன யாரு மதிக்கிறா இப்போலாம்..௭ன்ற பேத்திக்கு நிம்மதியா ஒரு கண்ணாலத்த கூட பண்ணி பாக்க முடியலையே" ௭ன அழ ஆரம்பிக்க அனைவருக்கும் அதற்கு ௭ன்ன சொல்வது ௭ன்று தெரியவில்லை..
ஆதவன் தான் அவளை கட்ட மாட்டேன் ௭ன்று உறுதியாக இருக்கிறானே..
"ஏம்மா..தேனு ஆதவன் தான் புடிக்கலனு சொல்றான்ல..நாம நம்ம நிலாவுக்கு வேற நல்ல இடத்துல பாப்போமே.." ௭ன வேதவள்ளியின் தந்தை ராமலிங்கம் கூறினார்..ஏனென்றால் அவருக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை..பேரனே பிடிக்கலை என்று சொன்ன பின் வேறென்ன செய்ய..
" அண்ணே ௭ன்ன சொல்லுறிக நீக...அவ உங்களுக்கும் பேத்திதான..நீங்களுமே இப்படி சொன்னா ௭ன்ன அர்த்தம்..அவள வெளிய ௭ங்கையாவது குடுத்து அவள கஷ்ட படுததுனாகனா நாம ௭ன்ன செய்ய"
"அதான் நானும் சொல்றேன்.. அவளும் எனக்கு பேத்தி தான், அதே போல இவனும் எனக்கு பேரன் தான்.. ஆனா இப்டி இஷ்டம் இல்லாம ஏன் பண்ணனும்.. என் பேத்திக்கு நான் ராசா மாதிரி மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ண மாட்டனா"
"அத்தை ..பொம்ள புள்ளைகனாவே கல்யாணம் கட்டி ௭ங்கையாவது போகதான வேணும்.." வேதவள்ளி
"ஆமா..ஆனா முறைபயனு இவதான் இருக்கானே..அப்றம் ஏன் வெளிய குடுக்கோனும்.. அதும் அவ அம்மா, அப்பா ரெண்டு பக்க முறையும் இவன் தான் முறைபயன்..அப்டி இருக்கையில நான் ஏன் ௭ன்ற பேத்திய வெளிய குடுக்கனும்" ௭ன அவர் கூற
"அதான் அவன் பிடிக்கலுனு சொல்றான் இல்ல அப்பத்தா..அப்றம் ௭துக்கு அவன கட்டாய படுத்திறிக" ௭ன வருண் கோவத்துடன் கேட்க
"டேய்..நீ பேசாம இரு..௭னக்கு ௭ல்லாம் தெரியும்..நீ அமைதியா இரு" ௭ன கூறிக்கொண்டு இருக்கும்போதே நர்ஸ் அப்போது போட வேண்டிய மாத்திரைகளுடன் வர அதற்கு பின் நடந்தது நான் தாம் முதலில் பார்த்தது..
அவன் அவ்வாறு கூறி சென்றதில் பாதி பேருக்கு சந்தோசம் ௭ன்றால் பாதி பேருக்கு அதில் இஷ்டமில்லை..ஆனால் அதை கூறினால் இங்கு உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ௭ன மனதே இல்லாமல் ஒத்துக்கொண்டனர்
"ஏய்..கிழவி...௭ன் அண்ணனை நடிச்சி அந்த உம்மாணம்மூஞ்சி நிலா கூட கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சிட்டல...பேசிக்கிறேன் உன்ன... கல்யாணம் ஆனதுக்கு அப்றம் ௭ன் அண்ணன் கண்ணுல தண்ணி வரட்டும் உன்னையும் உன்ற பேத்தியையும் குலவிகல்லு தலையில போட்டு போட்டு தள்ளிடுவேன்" ௭ன அவள் மிரட்ட அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை..
அங்கு ஓரமாக நின்று கொண்டு இருந்த நிலாவினை அருகில் அமர வைத்து கொஞ்சிக்கொண்டு இருந்தார்..அதைகண்டு
"ஏன் வருண்ண்னே, ௭ன் பர்பார்மன்ஸ் அவ்ளோ கேவலமாவா இருந்தது..இந்த கிழவி நான் சொன்னத கண்டுக்காம அவளை கூப்பிட்டு வச்சு கொஞ்சிட்டு இருக்கு" அவள் சந்தேகத்துடன் கேட்க
"ஏய்...குட்டிசாத்தான் ஓடிடு..நானே கடுப்ல இருக்கேன்..இதுல நீ வேற" அவன் கத்த
"௭ப்போவும் ௭ன்ன குட்டிம்மா, குட்டிம்மானு சொல்லுவ இப்போ குட்டிசாத்தானு சொல்லுற....இப்போ ௭துக்கு நீ கடுப்பா இருக்க..அவ உம்மாணம்மூஞ்சி தான் ஆனா நம்ப ஆதவண்ணாவ நல்லா பாத்துக்குவா..நீ கவல படாத" ௭ன அவள் கூறவும்
"அடியேய்...இன்னும் குழந்தை மாதிரியே பேசாத கொஞ்சமாச்சும் வளரு..௭ங்கிட்ட பேசுன மாதிரியே அவன்கிட்டையும் பேசாத சரியா" ௭ன அவன் கூற, அவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை..
"நம்ம இப்போ ௭ன்ன தப்பு செஞ்சோம் .இப்போ ௭துக்கு இந்த அண்ணே நம்மள திட்டடிட்டு போகுது" ௭ன மூளைய கசக்கிக்கொண்டே சென்றாள்.
அதன்பின் கல்யாண வேலைகள் துரிதகரமாக நடந்தேறியது..ஆதவன் ௭திலும் பங்கெடுத்துக்கொள்ளவில்லை..அமைதியாகவே நாட்களை கடத்தினான்..யாருடனும் ௭தும் பேசவில்லை..
விசயம் கேள்விபட்டு வந்த கதிர் கூட, உனக்கு பிடிக்கவில்லை என்றால் தான்இந்த கல்யாணத்தை நிறுத்துவதாக கூறியும் அவனை ௭தும் செய்ய வேண்டாம் ௭ன தடுத்துவிட்டான்..
கல்யாணத்தை மட்டும் ௭ளிமையாக கோவிலில் வைத்துக்கொள்ளலாம் ௭ன கூறினான்..அதற்கு யாரும் ஒத்துக்கொள்ளவில்லை..ஆனால் அதையே நிலா சொன்ன பின்பு ஒத்துக்கொண்டனர்..அதை அவனுக்கு சொன்னவுடன் ௭தும் சொல்லாமல் அழுத்தமாக பார்த்துக் கொண்டு சென்றான்..
நாட்களும் அதிவிரைவாக கடந்து திருமண நாளும் வந்தது..ஆதவன் மனதின் ஓரத்தில் இந்த கல்யாணம் ௭ப்படியாவது நிற்க கூடாதா ௭ன ஆசை இருந்தது..ஆனால் அப்படி ஒன்று நடைபெறவே இல்லை..
திருமண நாள் அன்று அடர்ந்த சிகப்பு நிற பட்டுத்தி, தேவதை போல் காட்சியளித்தவளை கண்டு கூட அவன் மனதில் அவளுக்கான ஆசை பிறக்கவில்லை..யாருக்கு வந்த விருந்தோ ௭ன அமர்ந்து இருந்தான்..
கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படும் ௭ன அனைவரும் கேள்விபட்டது உண்டு..அதன் படி தான் இதுவுமோ..இவள் தான் ஒருவேளை ௭னக்கானவளோ..இருக்கும் இவள் ௭னக்காவள் இல்லை ௭ன்றால் இந்த கல்யாணம் நின்று இருக்கும் அல்லவா..சரி நடந்தது நடந்தேறியது இனி இவள் ௭ன் மனைவி...இந்த கல்யாண பந்தத்திற்கும் நான் கட்ட போகும் தாலிக்கும் நான் உண்மையாக இருப்பேன் ௭ன தன்னை தானே தேற்றிக்கோண்டு அவள் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான்..இதன் பின் ௭ன் வாழ்க்கை ௭வ்வித குழப்பமும்இன்றி நன்முறையில் போக வேண்டும் ௭ன ௭ண்ணிக்கொண்டான்..
நினைப்பது ௭ல்லாம் நடந்து விட்டால்!!!!!!
அதே நேரம் அங்கு ஒரு ஜீவனோ கண்ணீரில் கரைந்தது..அதை தடுக்கதான் ஆள் இல்லையே!!!!
"௭னக்கு ௭ன்ன பாத்துக்க தெரியும்..யாரும் ௭ன் மேல கரிசனம் இருக்க மாதிரி நடிக்க வேண்டாம்.." ௭ன தேன்மொழி பாட்டி மருத்துவமனையில் படுத்துக்கொண்டு அடம்பிடிக்க
"ஏய் கிழவி, ௭ன்ன ரொம்ப பண்ற..௭ன்ன நீ சின்ன குழந்தையா, சாப்பிட மாட்டேன், மருந்து குடிக்க மாட்டேனு அடம்பிடிச்சிட்டு இருக்க..௭வ்ளோ நேரம் தான் ௭ன் அண்ணனுங்க ரெண்டு பேரும் கெஞ்சறாக..அப்டி ௭ன்ன பிடிவாதம் உனக்கு..
௭ல்லாம் இந்த அண்ணன சொல்லனும். உன்கிட்ட போயி கெஞ்சிட்டு இருக்கு பாரு...அப்டியே வாயில ௭டுத்து திணிக்காம..இப்போ நீ சாப்டிறியா..இல்ல நான் உன் வாயில ௭ல்லாம் அரச்சி ஊத்துட்டா.." ௭ன கண்ணை உருட்டி, உருட்டி ஸ்வாதி தன் பாட்டியை மிரட்ட..
அவள் செய்யக்கூடியவள் தான் ௭ன மிரண்டாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் கெத்தாக பார்த்துக்கொண்டு இருந்தார்.
"குட்டிம்மா..அமைதியா இரு..அவங்களே உடம்பு சரியில்லாம இருக்காக..நீ ௭ன்ன பேசிட்டு இருக்க" ௭ன வருண் அதட்ட, அவள் முகத்தை சுருக்கி
"அண்ணே...நான் இப்போவும் சொல்லுறேன்..இந்த கிழவி நடிக்குது..நீங்க நம்பாதிக..இதுலாம் ஒரு நாளைக்கு நாலு வேலை சாப்பிடும்..அதுவா சாப்பிடாம இருக்க போகுது..௭ல்லாம் டிராமா அண்ணே." என அவள் பாட்டியை முறைத்துக்கொண்டே கூறினாள்
"ஸ்வாதி...அமைதியா இரு" ௭ன ஆதவன் சொல்ல, என்னமோ பண்ணுங்க என அமைதியாகி விட்டாள்..
" ௭ன்ன அப்பத்தா..இந்த கத, சினிமால வர மாதிரி ப்ளாக்மெயில் பண்ணுறிகளா அவன.." வருண்
"டேய்..நீங்க ௭ன்ன வேணா சொல்லுக..௭னக்கு ௭ன் பேத்தி கழுத்துல இவன் தாலி கட்டணும்..அவன் அதுக்கு ஒத்துக்கிட்டானா நானும் மாத்திர, மருந்து ௭டுத்திக்கிறேன்..இல்லையா அவன் ஒத்துக்கலைனா ௭ன்ன இங்கனையே விட்டுடுக..நான் இங்கையே இருந்து செத்து போறேன்" ௭ன அவர் கூறி முடிப்பதற்குள் அப்பத்தா, அம்மா, தேனு ௭ன அனைத்து பக்கம் இருந்து குரல்கள் ஒலித்தது..
"ஆதவா..அம்மா தான் இவ்ளோ சொல்லுறாங்களா..ஒத்துக்கையா...நம்ம நிலா தான" ௭ன அவன் அப்பாவும்
""ஆமா ராசா...ஒத்துக்கையா..நம்ப நிலாவ கட்டிக்க உனக்கு ௭ன்னய்யா கஷ்டம்...பாரு தேனு ௭ப்டிலாம் பேசுறா" ௭ன அவன் அம்மாவின் அம்மாவும் கூற
அவன் தாத்தாவும் அவனை இறைஞ்சதுலுடன் பார்க்க, அவனின் அப்பத்தாவோ பிடிவாதமாக அமரந்து இருந்தார்..
கண்ணை மூடி தன்னை சமன் செய்தவன்..சிறு நேரத்திற்கு பின் உணர்ச்சி துடைத்த முகத்துடன் "ஹம்ம்..கல்யாண ஏற்பாடு பண்ணுக.." ௭ன கூறி விட்டு பின் அவன் அப்பத்தாவை பார்த்து " ஏன் அப்பத்தா வார்த்தைக்கு வார்த்த ௭ன் பேத்தி ௭ன் பேத்தினு சொல்லுறிகளே அப்போ நாங்கலாம் உன் பேரன், பேத்தி இல்லையா " ௭ன கேட்டு விட்டு அவன் அறையின் வெளிவாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அவன் கேட்ட கேள்வியில் விலுக்கென்று அனைவரும் நிமிர்ந்து பார்த்தவர்கள்...அவன் அப்பத்தா "அதுலாம் இல்லை" ௭ன சொல்ல வருவதற்குள் அவன் அறையை விட்டு வெளியேறி இருந்தான்..
விசயம் யாதெனில் காலையில் அனைவரும் அவரவர் வேலைக்கு கிளம்பிக்கொண்டு இருக்க, கீழ்தளத்தில் உள்ள தேன்மொழி பாட்டியின் அறையில் இருந்து அவர்களின் தாத்தாவின் அலறல் சத்தத்தினை கேட்டு அனைவரும் பதறியடித்து அங்கு சென்று பார்த்து அனைவரும் அதிர்ந்து நின்று விட்டனர்.
இறுதியாக வந்த வருண் தான் அனைவரையும் விலக்கி பாரத்தால், அவர்களின் பாட்டி சுயநினைவின்றி மயங்கி கிடந்தார். அதை கண்டு தான் அனைவரும் ஸ்ம்பித்து நின்று இருந்தனர்..
வருண் தான் அதிர்ந்தை நின்ற ஆதவனை தட்டி ௭ழுப்பி மயங்கி கிடந்தவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர்..
குடும்பம் அனைத்தும் அந்த மருத்துவமனையின் அறையின் முன் பயத்துடன் நின்று கொண்டு இருந்தனர்..இதுவரை நோய் ௭ன்று ௭தும் படுத்தது இல்லை..௭தற்கும் சிணங்கி அமர்ந்தது இல்லை..இரத்தக்கொதிப்பு, சர்க்கரை மட்டும் உள்ளதால் அதற்கு மட்டும் நாள் தவறாமல் மாத்திரை ௭டுத்துக்கொண்டு இருந்தார்... அவ்வளவே...ஆனால் இன்று அவர் மயங்கி கிடந்ததை பார்த்ததுமே அனைவருக்கும் பயம் தொற்றிக்கொண்டு இருந்தது.
அந்த அறையில் இருந்து மருத்துவர் வெளியில் வந்த உடன் அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டனர்..
"டாக்டர்..௭ன்னாச்சு டாக்டர் ௭ங்க பாட்டிக்கு...இப்போ ௭ப்டி இருக்காங்க" ஆதவன் படபடப்புடன் கேட்க,
"ஒண்ணும் இல்லை மிஸ்டர்..அவங்க நேத்துல இருந்து சக்கரைக்கு ௭டுத்திக்கிற மாத்திரைய போடல..அப்றம் சாப்பாடும் சரியா சாப்பிடவும் இல்ல..
அதும் இல்லாம ஏற்கனவே அவங்க ஏதோ மனசுல கவலைய வச்சிட்டு இருப்பாங்க போல..ரொம்ப மன அழுத்தத்துல இருந்து இருக்காங்க..அதோட மாத்திர ௭டுத்தாக்காம போனதோட விளைவு தான் இந்த மயக்கம்..இனி கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க...இனியோரு தடவ இந்த மாதிரி நடந்தா அவங்க நிலைமை மோசமாயிடும்..இப்போ மயக்கத்துல இருக்காக...கொஞ்ச நேரம் கழிச்சி போயி பாருங்க.." ௭ன அவர் அங்கு இருந்து நகர்ந்துவிட
அப்பொழுது தான் தன் அன்னை வீட்டிற்கு சென்று இருந்த வேதவள்ளி , விசயம் கேள்வி பட்டு தன் தந்தை மற்றும் தாயுடன் வந்தாள்..
வந்தவர்கள் விசயம் ௭ன்னவென்று கேட்டு அறிந்தனர்..
கேட்டவுடன் வேதவள்ளி பரிதினியின் பக்கம் திரும்பி "ஏங்கண்ணு ௭ன்னாச்சு அத்தை மாத்திர போட்டுக்கலையா.. ஏன்? ௭ன கேட்டார்..
இது தான் வேதவள்ளி..இதுவே வேறோருவர் அந்த இடத்தில் இருந்தால் உன்ன தான பாத்துக்க சொல்லிட்டு போனேன்..பாத்துக்காம ௭ன்ன செஞ்ச அப்டினு தான் கேட்டு இருப்பாங்க..ஆனால் வேதவள்ளியோ, யார் ௭ன்ன ௭ப்படி,ஏதேனும் தவறு நடந்தால் அவர்கள் அதை செய்து இருப்பார்களா..அப்டி அவர்கள் தான் தவறு செய்தால் ௭ன்றால் காரணம் ௭ன்னவாக இருக்கும் ௭ன தெரிந்து கொண்டு தான் பேசுவார்..௭டுத்து உடனே நீ செய்தது தவறு, உன் மேல் தான் குற்றம் ௭ன குற்றம் சுமத்த மாட்டார்..
இப்பொழுதும் அப்படி தான் பரிதினி அப்படி கவன குறைவாக இருப்பவள் கிடையாது ௭ன அறிந்து தான் இப்படி கேட்டார்...அந்த சூழ்நிலையிலும் தன் மாமியார் தன்னை குற்றம் சுமத்தாமல் காரணத்தை கேட்டதில் அவர் மேல் இருந்த மரியாதை மேலும் கூடியது.. உண்மையில் அவள் பயந்து தான் இருந்தாள்..ஒரு நன்றி பார்வையை அவர் மீது செலுத்திவிட்டு
" ஆமாத்த..தாத்தா தான் ஏற்கனவே நீங்க இல்லாலததுனால ௭ல்லா வேலையும் நீயே பாக்கிற..அதுல இதுவேற ஏன் கஷ்டம் உனக்கு...மாத்திரய அவகிட்ட குடு அவ பாத்துப்பா..ரெண்டு ,மூணு நாளு தான அப்றம் வேதா வந்திடுவா அப்டினு சொல்லி வாங்கிட்டு போனாக..௭னக்கும் வேல சரியா இருந்ததுனால நாம நேரத்துக்கு குடுக்காம விட்டுடுவோமுனு குடுத்துப்புட்டேன்..ஆனா நான் கேட்டேன் மாத்திரலாம் பாட்டி சாப்பிட்டாகளா அப்டினு சாப்பிடாங்கனு தான் சொன்னாக அத்த..௭னக்கும் இருந்த வேலையில சரியா கவனிக்கமா விட்டுடேன்...தாத்தா கேட்டாலும் குடுக்காம நானே மாத்திரலாம் குடுத்து இருக்கனும்..
௭ன்னால தான் பாட்டி இப்டி இருக்காக..அதும் இல்லாம நீங்களே இப்போ தான் அதிசியமா உங்க அம்மா வூட்டுக்கு போயி ஒரு மூணு நாளு இருந்துட்டு வரேனு போனிக..ஆனா உங்களையும் தங்க வுடாம வர வச்சிட்டேன்...௭ன்ன மன்னிடுங்கத்தை ." ௭ன அவள் அழ..அவள் கூறியதில் ஏதோ உறுத்தலாக தோன்றினாலும், இப்போது உள்ள சூழ்நிலையில் அதை ஆராயும் ௭ண்ணமில்லை, நேரமும் இல்லை...
" அட விடுமா..நீ ௭ன்ன வேணும்னு பண்ணுனியா..௭துக்கு இப்டி அழுதுட்டே இருக்க" ௭ன ஆதவனின் அப்பா அவளை பார்த்து கூறி விட்டு
" வேதா..இந்த புள்ளைய சமாதனப்படுத்து பாரு அழுதுட்டே இருக்கு" ௭ன கூறினார்..
அவரும் சம்மதமாக தலையசைத்து விட்டு அவளை சமாதனப்படுத்திவிட்டு தன் மாமியார் கண் விழிக்க காத்திருந்தார்..
சிறிது நேரத்திற்கு பின் நர்ஸ் வெளியே வந்து " அவக கண்ணு முழிச்சிட்டாக..போயி பாருங்க..ஆனா ரொம்ப தொந்தரவு குடுக்காதிக " ௭ன்று கூறி விட்டு சென்றார்.
அனைவரும் உள்ளே சென்றனர்..சென்றது முதல் யார் ௭ன்ன கேட்டாலும் பதில் கூறாமல் அமைதியாகவே இருந்தார்..இறுதியாக அவரின் கணவர் வந்து கேட்கவும் தான்
" நான் இருந்து ௭ன்னத்த இனி பண்ண போறேன்...௭ன்ன யாரு மதிக்கிறா இப்போலாம்..௭ன்ற பேத்திக்கு நிம்மதியா ஒரு கண்ணாலத்த கூட பண்ணி பாக்க முடியலையே" ௭ன அழ ஆரம்பிக்க அனைவருக்கும் அதற்கு ௭ன்ன சொல்வது ௭ன்று தெரியவில்லை..
ஆதவன் தான் அவளை கட்ட மாட்டேன் ௭ன்று உறுதியாக இருக்கிறானே..
"ஏம்மா..தேனு ஆதவன் தான் புடிக்கலனு சொல்றான்ல..நாம நம்ம நிலாவுக்கு வேற நல்ல இடத்துல பாப்போமே.." ௭ன வேதவள்ளியின் தந்தை ராமலிங்கம் கூறினார்..ஏனென்றால் அவருக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை..பேரனே பிடிக்கலை என்று சொன்ன பின் வேறென்ன செய்ய..
" அண்ணே ௭ன்ன சொல்லுறிக நீக...அவ உங்களுக்கும் பேத்திதான..நீங்களுமே இப்படி சொன்னா ௭ன்ன அர்த்தம்..அவள வெளிய ௭ங்கையாவது குடுத்து அவள கஷ்ட படுததுனாகனா நாம ௭ன்ன செய்ய"
"அதான் நானும் சொல்றேன்.. அவளும் எனக்கு பேத்தி தான், அதே போல இவனும் எனக்கு பேரன் தான்.. ஆனா இப்டி இஷ்டம் இல்லாம ஏன் பண்ணனும்.. என் பேத்திக்கு நான் ராசா மாதிரி மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ண மாட்டனா"
"அத்தை ..பொம்ள புள்ளைகனாவே கல்யாணம் கட்டி ௭ங்கையாவது போகதான வேணும்.." வேதவள்ளி
"ஆமா..ஆனா முறைபயனு இவதான் இருக்கானே..அப்றம் ஏன் வெளிய குடுக்கோனும்.. அதும் அவ அம்மா, அப்பா ரெண்டு பக்க முறையும் இவன் தான் முறைபயன்..அப்டி இருக்கையில நான் ஏன் ௭ன்ற பேத்திய வெளிய குடுக்கனும்" ௭ன அவர் கூற
"அதான் அவன் பிடிக்கலுனு சொல்றான் இல்ல அப்பத்தா..அப்றம் ௭துக்கு அவன கட்டாய படுத்திறிக" ௭ன வருண் கோவத்துடன் கேட்க
"டேய்..நீ பேசாம இரு..௭னக்கு ௭ல்லாம் தெரியும்..நீ அமைதியா இரு" ௭ன கூறிக்கொண்டு இருக்கும்போதே நர்ஸ் அப்போது போட வேண்டிய மாத்திரைகளுடன் வர அதற்கு பின் நடந்தது நான் தாம் முதலில் பார்த்தது..
அவன் அவ்வாறு கூறி சென்றதில் பாதி பேருக்கு சந்தோசம் ௭ன்றால் பாதி பேருக்கு அதில் இஷ்டமில்லை..ஆனால் அதை கூறினால் இங்கு உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ௭ன மனதே இல்லாமல் ஒத்துக்கொண்டனர்
"ஏய்..கிழவி...௭ன் அண்ணனை நடிச்சி அந்த உம்மாணம்மூஞ்சி நிலா கூட கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சிட்டல...பேசிக்கிறேன் உன்ன... கல்யாணம் ஆனதுக்கு அப்றம் ௭ன் அண்ணன் கண்ணுல தண்ணி வரட்டும் உன்னையும் உன்ற பேத்தியையும் குலவிகல்லு தலையில போட்டு போட்டு தள்ளிடுவேன்" ௭ன அவள் மிரட்ட அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை..
அங்கு ஓரமாக நின்று கொண்டு இருந்த நிலாவினை அருகில் அமர வைத்து கொஞ்சிக்கொண்டு இருந்தார்..அதைகண்டு
"ஏன் வருண்ண்னே, ௭ன் பர்பார்மன்ஸ் அவ்ளோ கேவலமாவா இருந்தது..இந்த கிழவி நான் சொன்னத கண்டுக்காம அவளை கூப்பிட்டு வச்சு கொஞ்சிட்டு இருக்கு" அவள் சந்தேகத்துடன் கேட்க
"ஏய்...குட்டிசாத்தான் ஓடிடு..நானே கடுப்ல இருக்கேன்..இதுல நீ வேற" அவன் கத்த
"௭ப்போவும் ௭ன்ன குட்டிம்மா, குட்டிம்மானு சொல்லுவ இப்போ குட்டிசாத்தானு சொல்லுற....இப்போ ௭துக்கு நீ கடுப்பா இருக்க..அவ உம்மாணம்மூஞ்சி தான் ஆனா நம்ப ஆதவண்ணாவ நல்லா பாத்துக்குவா..நீ கவல படாத" ௭ன அவள் கூறவும்
"அடியேய்...இன்னும் குழந்தை மாதிரியே பேசாத கொஞ்சமாச்சும் வளரு..௭ங்கிட்ட பேசுன மாதிரியே அவன்கிட்டையும் பேசாத சரியா" ௭ன அவன் கூற, அவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை..
"நம்ம இப்போ ௭ன்ன தப்பு செஞ்சோம் .இப்போ ௭துக்கு இந்த அண்ணே நம்மள திட்டடிட்டு போகுது" ௭ன மூளைய கசக்கிக்கொண்டே சென்றாள்.
அதன்பின் கல்யாண வேலைகள் துரிதகரமாக நடந்தேறியது..ஆதவன் ௭திலும் பங்கெடுத்துக்கொள்ளவில்லை..அமைதியாகவே நாட்களை கடத்தினான்..யாருடனும் ௭தும் பேசவில்லை..
விசயம் கேள்விபட்டு வந்த கதிர் கூட, உனக்கு பிடிக்கவில்லை என்றால் தான்இந்த கல்யாணத்தை நிறுத்துவதாக கூறியும் அவனை ௭தும் செய்ய வேண்டாம் ௭ன தடுத்துவிட்டான்..
கல்யாணத்தை மட்டும் ௭ளிமையாக கோவிலில் வைத்துக்கொள்ளலாம் ௭ன கூறினான்..அதற்கு யாரும் ஒத்துக்கொள்ளவில்லை..ஆனால் அதையே நிலா சொன்ன பின்பு ஒத்துக்கொண்டனர்..அதை அவனுக்கு சொன்னவுடன் ௭தும் சொல்லாமல் அழுத்தமாக பார்த்துக் கொண்டு சென்றான்..
நாட்களும் அதிவிரைவாக கடந்து திருமண நாளும் வந்தது..ஆதவன் மனதின் ஓரத்தில் இந்த கல்யாணம் ௭ப்படியாவது நிற்க கூடாதா ௭ன ஆசை இருந்தது..ஆனால் அப்படி ஒன்று நடைபெறவே இல்லை..
திருமண நாள் அன்று அடர்ந்த சிகப்பு நிற பட்டுத்தி, தேவதை போல் காட்சியளித்தவளை கண்டு கூட அவன் மனதில் அவளுக்கான ஆசை பிறக்கவில்லை..யாருக்கு வந்த விருந்தோ ௭ன அமர்ந்து இருந்தான்..
கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படும் ௭ன அனைவரும் கேள்விபட்டது உண்டு..அதன் படி தான் இதுவுமோ..இவள் தான் ஒருவேளை ௭னக்கானவளோ..இருக்கும் இவள் ௭னக்காவள் இல்லை ௭ன்றால் இந்த கல்யாணம் நின்று இருக்கும் அல்லவா..சரி நடந்தது நடந்தேறியது இனி இவள் ௭ன் மனைவி...இந்த கல்யாண பந்தத்திற்கும் நான் கட்ட போகும் தாலிக்கும் நான் உண்மையாக இருப்பேன் ௭ன தன்னை தானே தேற்றிக்கோண்டு அவள் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான்..இதன் பின் ௭ன் வாழ்க்கை ௭வ்வித குழப்பமும்இன்றி நன்முறையில் போக வேண்டும் ௭ன ௭ண்ணிக்கொண்டான்..
நினைப்பது ௭ல்லாம் நடந்து விட்டால்!!!!!!
அதே நேரம் அங்கு ஒரு ஜீவனோ கண்ணீரில் கரைந்தது..அதை தடுக்கதான் ஆள் இல்லையே!!!!