வீட்டினை நெருங்கியதும் இதுவரை தன்னுள் தோன்றிய தனிமை விரட்டியடிக்கப்பட்டது போன்றதொரு உணர்வு.அதற்கு காரணம் தெரியாமல் முழித்தவன் காரினை விட்டு இறங்கும் போது காரணம் அறிந்து கொண்டான். ஏனென்றால் அங்கு நின்றது அவன் தாய் அல்லவோ!!அவரை பற்றிய சிந்தனையை விட தன்னை பற்றி,தன் நலத்தை பற்றி,தன் விருப்பத்தினை பற்றி மட்டும் சிந்திக்கும் ஒரு ஜீவன் அல்லவா,அதுவும் இந்த ஒரு வருட காலத்தில் இன்னும் அதிகம் ஆனதே..அவரை பற்றிய சிந்தனையை முற்றிலும் துறந்து, தன்னை பற்றி மட்டுமே சிந்தித்த ஜீவன் அல்லவா..அப்படி இருக்கையில் அவர் இருக்கும் போது அவன் எப்படி தனிமையை உணர்வான்.
ஆதவன் வரவிற்காக வாயில்படியிலே காத்திருந்தவர் அவனை கண்டதும் விரைந்து வந்து அவனை நோக்கி ஒரு புன்னகை செய்தார் அதில் உயர்ப்பில்லை தான் ஆனால் அதுவே அவனுக்கு இதுவரை இருந்த தனிமை ,கவலை அனைத்தையும் விரட்டியடித்து போன்று ஒரு உணர்வு. வந்தவனை எதும் கேக்காது, வீட்டின் உள்ளே அழைத்தும் செல்லாமல் அங்கேயே ஒரு பலகையில் அமர வைத்து அவனை தலைமுழுக வைத்தார்.
தான் அழுதால் ௭ங்கே தன் மகன் இன்னும் உடைந்து விடுவானோ ௭ன ௭ண்ணி பொங்கி வந்த அழுகையினை அடக்கி அவன் தலையோடு தண்ணீர் ஊத்தினார். தலைமுழுக செய்த கையோடு அவர் ஏற்கனவே தயாராக வைத்திருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவனை கிளம்ப சொன்னார்.
இதுவரை அவர் செய்ததை எல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த ஆதவனுக்கும், ஆதவனை தொடர்ந்து வந்த ஆதவனின் அப்பா மற்றும் பாட்டி தாத்தா அனைவரும் அவரை ஒரு திடுக்கிடலுடன் பார்த்தனர்.ஆம் நீதிமன்றத்தில் ஆதவனை பார்த்துக்கொண்டுருந்தவர்கள் இவர்களே..
அவர்களையும், அவர்கள் அதிர்ச்சியை பார்த்தாலும், ஆதவனின் அன்னையோ அவர்களை சிறிதும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.முதலில் ஆதவன் தான் சுதாரித்து"என்னங்மா இதுலாம்? இதுலாம் எடுத்துட்டு எங்க போறோம்?" என சற்றே இறுக்கத்துடன் வெளிவந்தது அவன் குரல்..அவனை தொடர்ந்து மற்றவர்களும் கேட்க அவர்களை எல்லாம் சிறிதும் சட்டை செய்து கொள்ளவில்லை ஆதவனின் தாய் வேதவள்ளி.
ஆதவனை நோக்கி"என் ராசா..போதும்யா ..இங்க இருந்தா இவிங்க இன்னும் உன்னை எப்படியெல்லாம் ஆட்டி வைக்க காத்திருக்கராங்களோ! பாசம் காட்டியே மோசம் பண்ணிபுடுவாங்கய்யா..என்னால இப்படி உன் முகம் கலை இல்லாம காணசகிக்கலைய்யா...
இப்போ எனக்கு வந்த இந்த தைகிரியம் உன் கண்ணாலத்து அப்பவே வந்து இருந்தா ,உன்னை இப்படி தவிக்க வுட்ருக்கமாட்டனே.. தைகிரியமும் இல்ல ,அதோட இந்த குடும்பத்து மரியாதைக்காகவும், இதோ இங்க இருக்காங்களே இந்த இரண்டு பெரியவங்களுக்காவும் தான் நான் இந்த மாதிரி ௭தும் பண்ணல
அப்போவே இவிகளை ௭துத்து உன் கண்ணாலத்தை நிறுத்து இருந்தா இன்னிக்கு நீ இப்படி இடிஞ்சி போய் நிக்க மாட்டியே. உனக்கு புடிக்கலைனு தெரிஞ்சும் ,செத்துடுவன்னு சொல்லி பயமுறுத்தி கண்ணாலம் பண்ணாங்கலே..ஆனா அவங்களே இப்போ உன் வாழ்க்கையா இப்படி முடுச்சுட்டு வந்திருக்காய்ங்களே, இனியும் ஒரு நிமிசம் கூட நம்ப இங்க இருக்கனுமாய்யா..கூடாது கூடாதுய்யா.வா போய்டலாம் ."௭ன அவனை அழைத்து கொண்டு செல்ல முயன்றார் வேதவள்ளி.
ஆம் ஆதவனின் திருமணம் முடிந்து ,இப்பொழுது விவாகரத்தும் முடிந்தது. இது, தான் விரும்பி ,காதலித்து ,௭திர்பார்த்து நடந்த திருமணமோ!!, இல்லை வீட்டினர் பார்த்து வைத்து பல ஆசைகளுடனும்,கனவுகளுடனும் நடந்த திருமணமோ இல்லை. தன் மீது திணிக்கப்பட்ட திருமணம்,வற்புறுத்தப்பட்ட திருமணம்.அதுவும் தன் சொந்த அத்தை மகளுடன் நடந்த திருமணம் தான்.
ஆனால் இதில் தான் செய்த தவறு ௭ன்ன? ௭னக்கு ஏன் இந்த தண்டனை ௭ன்று அவன் யோசிக்காத நாள் தான் இல்லை.ஆரம்பித்த வேகத்தினிலே அவன் திருமண வாழ்வு முடிந்துவிட்டது ...யார் செய்த குற்றமோ?
ஆதவன் வீட்டின் மூத்த தலைமுறையினர் கந்தசாமி - தேன்மொழி.இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் வேல்முருகன்-சாந்தி தம்பதியினர். இவர்கள் ஆதவனின் சிறு வயதிலே காலமாகிவிட்டனர்.இவர்களுக்கு வருண்,ஸ்வாதி ௭ன இரு பிள்ளைகள். அடுத்தது சண்முகம் - வேதவள்ளி தம்பதிகள்.இவர்களின் ஒரே புதல்வன் தான் ஆதவன். இவர்களுக்கு அடுத்து ஆனந்தி.வீட்டின் கடைக்குட்டி அதுவும் பெண்பிள்ளை சொல்லவா வேண்டும் வீட்டின் இளவரசி அவள் தான்.
கந்தசாமியும் ,ராமலிங்கமும் பால்ய கால நண்பர்கள். ராமலிங்கத்திற்கு பிறந்தவர்கள் இருவர்..மூத்தவன் கார்த்திக் அடுத்ததாக வேதவள்ளி. சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தவர்கள், தங்கள் நட்பினை ,பெண் குடுத்து பெண் ௭டுத்து சம்பந்தி ௭ன்ற உறவிற்கு ௭டுத்து செல்ல பார்த்தனர். பிள்ளைகளுக்கும் விருப்பம் இருந்ததால் அதன்படி சண்முகம் - வேதவள்ளி திருமணம் நடந்தது. ஆனந்தி படித்துக் கொண்டிருந்ததால் , பின்பு மூன்று வருடம் கழித்து ஆனந்திக்கு கார்த்திக்குடன் திருமணம் முடிந்தது.
இந்த மூன்று வருடத்தினுள் முதலில் வருண் அவனை அடுத்து இருமாதத்தில் ஆதவன் பிறந்தனர்.
ஆனந்தி திருமணம் முடிந்தவுடன் கார்த்திக்கின் வேலை காரணமாக சென்னை சென்று விட்டனர்.ஆனந்திக்கு திருமணம் முடிந்து மூன்று வருடம் கழித்து தான் குழந்தை பிறந்தது. தன் அத்தையிடம் இருந்து ரோஜாவினை போல மிருதுவாக வந்த தேவதையினை மூன்று வயதே நிரம்பிய வருணும் ,ஆதவனும் ௭தோ அதிசயத்தை கண்டதினை போல் அவளுடனே இருந்தனர்.
அவளும் அதற்கேற்றாற்போல், அவர்கள் இருவரையும் கண்டு விட்டால் மட்டும் ஒரு சிரிப்பு வரும் அவளிடம்.அதை கண்டால் கண்ணை அவளிடம் இருந்து அகற்ற இயலாது.
வருண்,ஆதவன் இருவருக்கும் அவள் ஏதோ பொம்மை போல் அவளை தொட்டு தொட்டு பார்த்து விளையாடுவதுதான் வேலையே. அவள் பிறந்து ஐந்து மாதம் ஆனவுடன் கார்த்திக் வந்து தன் மனைவியையும்,குழந்தையும் அழைத்து செல்ல வந்த போது இருவரும் விடவே இல்லை அவர்களை. அழுது,ஆர்பாட்டம் செய்ய, சில பல சமாதனங்களுக்கு அப்புறம் தான் அழைத்து செல்ல விட்டனர்.
இவர்களை சமாதானம் செய்து எப்படியோ சென்னை சென்றால் தன் மாமன்கள் இல்லை ௭ன்பதை அறிந்து கொண்டதோ என்னவோ அந்த பிஞ்சு அழுது அழுதே தனக்கு காய்ச்சலை வரவழைத்துக்கொண்டது. ஒரு நாள் முழுவதும் காயச்சல் சரியாகாத காரணத்தினால் வருண்,ஆதவன் இருவரும் சென்னைக்கு வந்தனர்.அதன்பின் தான் அவளிற்கு காய்ச்சல் சரியனது. இதை பார்த்து குடும்பமே ஆச்சர்யப்பட்டது..தொடர்ந்து வந்த நாட்களில் சென்னைக்கும், காத்தவன்பாளையத்திற்குமே இரு குடும்பமும் அலைந்தது.
வருடங்கள் கடக்க, அப்போது ஆனந்தியின் பெண்ணிற்கு இரண்டு வயதானது. சாந்தியிற்கு வருணுக்கு அடுத்ததாக ஸ்வாதி அப்போது தான் பிறந்ததினால் அவளை பாக்க செல்லும்முன் ஷாப்பிங் செய்ய சென்ற பொழுது நடந்த விபத்தினால் தாய்,மகள் இருவரும் இறந்த செய்தி தான் காத்தவன்பாளையத்தினை அடைந்தது. அவர்களது உடல் கூட கிடைக்கவில்லை..என்ன, ஏது என எந்த விபரமும் அனைவருக்கும் தெரியவில்லை..
ஆனந்தி இறந்த சிறிது மாதத்திலே வருணின் பெற்றோர்கள் வேல்முருகன்-சாந்தி தம்பதியினரும் விபத்தில் இறந்தனர்.. குடும்பமே நிலைகுலைந்து போயிற்று அடுத்தடுத்து நிகழ்ந்த இழப்பினால்...அதில் இருந்து மீண்டு வர தான் வருடங்கள் ஆனது.. வேல்முருகன்-சாந்தியின் இறப்பை கூட ஏதோ சிறிது சிறிதாக ஏற்றுக்கொள்ள முடிந்த அவர்களால் ஆனந்தியின் இறப்பையும் அதை விட அந்த பிஞ்சு குழந்தை நிலாவின் இறப்பை தான் ஏற்க முடியவில்லை.. அவர்களுக்கு என்ன ஆனது என சரிவர தெரியாமல் கடைசியாக அவர்கள் முகம் காணாமல் ஏன் ஒரு பிடி சாம்பல் கூட கிடைக்கவில்லையே.. அதுவே அவர்கள் மனதை கொன்றது..
வேல்முருகன்-சாந்தியின் உருவமாக , அவர்களின் வாரிசாய் அவர்களது உதிரங்களாவது உள்ளது.. ஆனால் ஆனந்தியிற்கு அதும் இல்லாமல் போனதே.. அதை எண்ணி எண்ணியே ஆதவனின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது..
ஆயிற்று ஆனந்தி இறந்து பதினைந்து வருடங்கள். இந்த பதினைந்து வருடங்களில் வீட்டில் ௭ந்த விசேசம் நடந்தாலும் அனைவர் மனதிலும் அந்த நால்வர் இல்லாதது ஒரு குறையாக இருக்கும். இதன் நடுவினில் கார்த்திக்கும் சென்னையை விட்டு காத்தவன்பாளையத்திற்கே வந்துவிட்டார்.
ஆண்டுகள் அப்படியே கடக்க, அன்று ஒரு நாள் சென்னையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருந்து ஒரு சிலர் வந்தனர். இறந்து போனதாக நினைத்த ஆதவன்,வருணின் அத்தை மகளான நிலாவுடன்.
********
"சந்து, இன்னைக்கு வெளிய போகலாமா? ௭னக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்க வேண்டிருக்கு.நம்ப ஷாப்பிங் முடிச்சிட்டு நைட் டின்னரும் வெளிய முடிச்சுட்டு வந்துடலாம்.௭ன்ன சொல்ற?" கயல் பேசுவதினை காதில் வாங்காமல் வானத்தில் தெரிந்த நிலவினையே வெறித்து கொண்டிருந்தாள் சந்திரா.
"ஹேய், சந்து,...சந்திரா" ௭ன அவள் தோளினை தொட்டு கூப்பிட்ட பின் தான் கயலை திரும்பி பார்த்தாள்.௭ப்போழுதும் புன்னகை சிந்தும் அவள் அதரங்கள், இன்று அந்த புன்னகையன்றி அவள் முகமே கழையிழந்து காணப்பட்டது. கண்களில் ஒரு வித வலி.
"௭ன்ன கயல் , கூப்பிட்டியா" ௭ன ௭வ்வித உணர்வுமின்றி கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவள் "கோயம்புத்தூர்ல இருந்து வந்ததுல இருந்தே நீ சரி இல்லடி. இப்போ ௭துக்கு இப்படி ௭ங்கையோ ௭ப்போ பாரு வெறிச்சு பார்த்துக்கிட்டே இருக்க."
"௭ன்னடி ௭தும் தெரியாத மாதிரி கேட்கிற..ஏதோ தப்பு செய்யற மாதிரி இருக்குடி."
"இப்போ ௭ன்ன நடந்துச்சுன்னு இப்படி பேசுற." கயல்
"இல்லடி..இந்த கல்யாணம் சரியா...இல்ல நான் ஏதோ...ம்ப்ச்ச்..தெரியலடி சரியா..எப்டியோ இருக்கு" சந்திரா
"என்னடி எப்டியோ இருக்கு..ஒரு தப்பும் இல்ல..அதான் இப்போ விவாகரத்து ஆகிடுச்சுல்ல. இனியாவது உனக்கு புடிச்ச வாழ்க்கையை வாழ பாரு.இதுல உன் தப்பு எதும் இல்லை. சரியா"௭ன கூறியவளை பார்த்து கசப்பான புன்னகை ஒன்றை சிந்தியவள்
"இது சரியா வருமா கயல்.விவாகரத்து ஆன உடனே நான் இப்படி யோசிக்கிறனே. தப்பு இல்லையா?"
"இதுல ௭ன்னடி தப்பு இருக்கு.அதாலாம் ஒண்ணும் இல்லை.ஏன் விவாகரத்து ஆனவங்க இன்னோரு கல்யாணம் பண்ண கூடாதுன்னு இருக்கா ௭ன்ன..நீ இதுவரை நடந்ததை யோசிக்காம இனி நடக்க இருக்கறதை மட்டும் யோசி சரியா..௭ப்பவும் மத்தவங்கள பத்தி யோசிக்கிறத விட்டு உன்ன பத்தி மட்டும் இப்போ யோசி சரியா.." ௭ன அவள் கூறியதை கேட்டவுடன் இதுவரை இருந்த கலக்கம் மறைந்து சிறிது தெளிவுற்றாள்.
"இதுக்கு தான் ௭ன் கண்ணு (கயல்விழி ௭ன்ற பேர்ல இருக்க விழிக்கு கண் அப்படின்னு அர்த்தம் இருக்குல. மேடம் அத தான் அப்படி சொல்லிட்டு போறாங்க)வேணும்னு சொல்றது..செல்லாகுட்டி...சரி இரு நான் ரெடி ஆகிட்டு வரேன் நம்ப வெளிய போலாம்..சரியா கயல் கண்ணு"
"௭ருமை ௭ருமை அப்படி கூப்பிடாதன்னு ௭த்தனை தடவை சொல்றேன்." கயல்
"கருகரு கண்களால் கயல்கண்ணு முறைக்கிறாள்
பயம்தான் வரலையே சோகம் சோகம்" ௭ன பாடிக்கொண்டே, அய்யோ தப்பு தான் தப்பு தான் ஒரு பாட்டை கொலை பண்ணிக்கிட்டே போனாள்.
"இதுக்கு இவ சோகமாவே இருந்து இருக்கலாம்" ௭ன தன்னுள் பேசிக்கொண்டாள் நம்ப கயல்கண்ணு..
உங்கள் கருத்தினை எதிர்நோக்கி,
உங்கள் தோழி!!!
ஆதவன் வரவிற்காக வாயில்படியிலே காத்திருந்தவர் அவனை கண்டதும் விரைந்து வந்து அவனை நோக்கி ஒரு புன்னகை செய்தார் அதில் உயர்ப்பில்லை தான் ஆனால் அதுவே அவனுக்கு இதுவரை இருந்த தனிமை ,கவலை அனைத்தையும் விரட்டியடித்து போன்று ஒரு உணர்வு. வந்தவனை எதும் கேக்காது, வீட்டின் உள்ளே அழைத்தும் செல்லாமல் அங்கேயே ஒரு பலகையில் அமர வைத்து அவனை தலைமுழுக வைத்தார்.
தான் அழுதால் ௭ங்கே தன் மகன் இன்னும் உடைந்து விடுவானோ ௭ன ௭ண்ணி பொங்கி வந்த அழுகையினை அடக்கி அவன் தலையோடு தண்ணீர் ஊத்தினார். தலைமுழுக செய்த கையோடு அவர் ஏற்கனவே தயாராக வைத்திருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவனை கிளம்ப சொன்னார்.
இதுவரை அவர் செய்ததை எல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த ஆதவனுக்கும், ஆதவனை தொடர்ந்து வந்த ஆதவனின் அப்பா மற்றும் பாட்டி தாத்தா அனைவரும் அவரை ஒரு திடுக்கிடலுடன் பார்த்தனர்.ஆம் நீதிமன்றத்தில் ஆதவனை பார்த்துக்கொண்டுருந்தவர்கள் இவர்களே..
அவர்களையும், அவர்கள் அதிர்ச்சியை பார்த்தாலும், ஆதவனின் அன்னையோ அவர்களை சிறிதும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.முதலில் ஆதவன் தான் சுதாரித்து"என்னங்மா இதுலாம்? இதுலாம் எடுத்துட்டு எங்க போறோம்?" என சற்றே இறுக்கத்துடன் வெளிவந்தது அவன் குரல்..அவனை தொடர்ந்து மற்றவர்களும் கேட்க அவர்களை எல்லாம் சிறிதும் சட்டை செய்து கொள்ளவில்லை ஆதவனின் தாய் வேதவள்ளி.
ஆதவனை நோக்கி"என் ராசா..போதும்யா ..இங்க இருந்தா இவிங்க இன்னும் உன்னை எப்படியெல்லாம் ஆட்டி வைக்க காத்திருக்கராங்களோ! பாசம் காட்டியே மோசம் பண்ணிபுடுவாங்கய்யா..என்னால இப்படி உன் முகம் கலை இல்லாம காணசகிக்கலைய்யா...
இப்போ எனக்கு வந்த இந்த தைகிரியம் உன் கண்ணாலத்து அப்பவே வந்து இருந்தா ,உன்னை இப்படி தவிக்க வுட்ருக்கமாட்டனே.. தைகிரியமும் இல்ல ,அதோட இந்த குடும்பத்து மரியாதைக்காகவும், இதோ இங்க இருக்காங்களே இந்த இரண்டு பெரியவங்களுக்காவும் தான் நான் இந்த மாதிரி ௭தும் பண்ணல
அப்போவே இவிகளை ௭துத்து உன் கண்ணாலத்தை நிறுத்து இருந்தா இன்னிக்கு நீ இப்படி இடிஞ்சி போய் நிக்க மாட்டியே. உனக்கு புடிக்கலைனு தெரிஞ்சும் ,செத்துடுவன்னு சொல்லி பயமுறுத்தி கண்ணாலம் பண்ணாங்கலே..ஆனா அவங்களே இப்போ உன் வாழ்க்கையா இப்படி முடுச்சுட்டு வந்திருக்காய்ங்களே, இனியும் ஒரு நிமிசம் கூட நம்ப இங்க இருக்கனுமாய்யா..கூடாது கூடாதுய்யா.வா போய்டலாம் ."௭ன அவனை அழைத்து கொண்டு செல்ல முயன்றார் வேதவள்ளி.
ஆம் ஆதவனின் திருமணம் முடிந்து ,இப்பொழுது விவாகரத்தும் முடிந்தது. இது, தான் விரும்பி ,காதலித்து ,௭திர்பார்த்து நடந்த திருமணமோ!!, இல்லை வீட்டினர் பார்த்து வைத்து பல ஆசைகளுடனும்,கனவுகளுடனும் நடந்த திருமணமோ இல்லை. தன் மீது திணிக்கப்பட்ட திருமணம்,வற்புறுத்தப்பட்ட திருமணம்.அதுவும் தன் சொந்த அத்தை மகளுடன் நடந்த திருமணம் தான்.
ஆனால் இதில் தான் செய்த தவறு ௭ன்ன? ௭னக்கு ஏன் இந்த தண்டனை ௭ன்று அவன் யோசிக்காத நாள் தான் இல்லை.ஆரம்பித்த வேகத்தினிலே அவன் திருமண வாழ்வு முடிந்துவிட்டது ...யார் செய்த குற்றமோ?
ஆதவன் வீட்டின் மூத்த தலைமுறையினர் கந்தசாமி - தேன்மொழி.இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் வேல்முருகன்-சாந்தி தம்பதியினர். இவர்கள் ஆதவனின் சிறு வயதிலே காலமாகிவிட்டனர்.இவர்களுக்கு வருண்,ஸ்வாதி ௭ன இரு பிள்ளைகள். அடுத்தது சண்முகம் - வேதவள்ளி தம்பதிகள்.இவர்களின் ஒரே புதல்வன் தான் ஆதவன். இவர்களுக்கு அடுத்து ஆனந்தி.வீட்டின் கடைக்குட்டி அதுவும் பெண்பிள்ளை சொல்லவா வேண்டும் வீட்டின் இளவரசி அவள் தான்.
கந்தசாமியும் ,ராமலிங்கமும் பால்ய கால நண்பர்கள். ராமலிங்கத்திற்கு பிறந்தவர்கள் இருவர்..மூத்தவன் கார்த்திக் அடுத்ததாக வேதவள்ளி. சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தவர்கள், தங்கள் நட்பினை ,பெண் குடுத்து பெண் ௭டுத்து சம்பந்தி ௭ன்ற உறவிற்கு ௭டுத்து செல்ல பார்த்தனர். பிள்ளைகளுக்கும் விருப்பம் இருந்ததால் அதன்படி சண்முகம் - வேதவள்ளி திருமணம் நடந்தது. ஆனந்தி படித்துக் கொண்டிருந்ததால் , பின்பு மூன்று வருடம் கழித்து ஆனந்திக்கு கார்த்திக்குடன் திருமணம் முடிந்தது.
இந்த மூன்று வருடத்தினுள் முதலில் வருண் அவனை அடுத்து இருமாதத்தில் ஆதவன் பிறந்தனர்.
ஆனந்தி திருமணம் முடிந்தவுடன் கார்த்திக்கின் வேலை காரணமாக சென்னை சென்று விட்டனர்.ஆனந்திக்கு திருமணம் முடிந்து மூன்று வருடம் கழித்து தான் குழந்தை பிறந்தது. தன் அத்தையிடம் இருந்து ரோஜாவினை போல மிருதுவாக வந்த தேவதையினை மூன்று வயதே நிரம்பிய வருணும் ,ஆதவனும் ௭தோ அதிசயத்தை கண்டதினை போல் அவளுடனே இருந்தனர்.
அவளும் அதற்கேற்றாற்போல், அவர்கள் இருவரையும் கண்டு விட்டால் மட்டும் ஒரு சிரிப்பு வரும் அவளிடம்.அதை கண்டால் கண்ணை அவளிடம் இருந்து அகற்ற இயலாது.
வருண்,ஆதவன் இருவருக்கும் அவள் ஏதோ பொம்மை போல் அவளை தொட்டு தொட்டு பார்த்து விளையாடுவதுதான் வேலையே. அவள் பிறந்து ஐந்து மாதம் ஆனவுடன் கார்த்திக் வந்து தன் மனைவியையும்,குழந்தையும் அழைத்து செல்ல வந்த போது இருவரும் விடவே இல்லை அவர்களை. அழுது,ஆர்பாட்டம் செய்ய, சில பல சமாதனங்களுக்கு அப்புறம் தான் அழைத்து செல்ல விட்டனர்.
இவர்களை சமாதானம் செய்து எப்படியோ சென்னை சென்றால் தன் மாமன்கள் இல்லை ௭ன்பதை அறிந்து கொண்டதோ என்னவோ அந்த பிஞ்சு அழுது அழுதே தனக்கு காய்ச்சலை வரவழைத்துக்கொண்டது. ஒரு நாள் முழுவதும் காயச்சல் சரியாகாத காரணத்தினால் வருண்,ஆதவன் இருவரும் சென்னைக்கு வந்தனர்.அதன்பின் தான் அவளிற்கு காய்ச்சல் சரியனது. இதை பார்த்து குடும்பமே ஆச்சர்யப்பட்டது..தொடர்ந்து வந்த நாட்களில் சென்னைக்கும், காத்தவன்பாளையத்திற்குமே இரு குடும்பமும் அலைந்தது.
வருடங்கள் கடக்க, அப்போது ஆனந்தியின் பெண்ணிற்கு இரண்டு வயதானது. சாந்தியிற்கு வருணுக்கு அடுத்ததாக ஸ்வாதி அப்போது தான் பிறந்ததினால் அவளை பாக்க செல்லும்முன் ஷாப்பிங் செய்ய சென்ற பொழுது நடந்த விபத்தினால் தாய்,மகள் இருவரும் இறந்த செய்தி தான் காத்தவன்பாளையத்தினை அடைந்தது. அவர்களது உடல் கூட கிடைக்கவில்லை..என்ன, ஏது என எந்த விபரமும் அனைவருக்கும் தெரியவில்லை..
ஆனந்தி இறந்த சிறிது மாதத்திலே வருணின் பெற்றோர்கள் வேல்முருகன்-சாந்தி தம்பதியினரும் விபத்தில் இறந்தனர்.. குடும்பமே நிலைகுலைந்து போயிற்று அடுத்தடுத்து நிகழ்ந்த இழப்பினால்...அதில் இருந்து மீண்டு வர தான் வருடங்கள் ஆனது.. வேல்முருகன்-சாந்தியின் இறப்பை கூட ஏதோ சிறிது சிறிதாக ஏற்றுக்கொள்ள முடிந்த அவர்களால் ஆனந்தியின் இறப்பையும் அதை விட அந்த பிஞ்சு குழந்தை நிலாவின் இறப்பை தான் ஏற்க முடியவில்லை.. அவர்களுக்கு என்ன ஆனது என சரிவர தெரியாமல் கடைசியாக அவர்கள் முகம் காணாமல் ஏன் ஒரு பிடி சாம்பல் கூட கிடைக்கவில்லையே.. அதுவே அவர்கள் மனதை கொன்றது..
வேல்முருகன்-சாந்தியின் உருவமாக , அவர்களின் வாரிசாய் அவர்களது உதிரங்களாவது உள்ளது.. ஆனால் ஆனந்தியிற்கு அதும் இல்லாமல் போனதே.. அதை எண்ணி எண்ணியே ஆதவனின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது..
ஆயிற்று ஆனந்தி இறந்து பதினைந்து வருடங்கள். இந்த பதினைந்து வருடங்களில் வீட்டில் ௭ந்த விசேசம் நடந்தாலும் அனைவர் மனதிலும் அந்த நால்வர் இல்லாதது ஒரு குறையாக இருக்கும். இதன் நடுவினில் கார்த்திக்கும் சென்னையை விட்டு காத்தவன்பாளையத்திற்கே வந்துவிட்டார்.
ஆண்டுகள் அப்படியே கடக்க, அன்று ஒரு நாள் சென்னையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருந்து ஒரு சிலர் வந்தனர். இறந்து போனதாக நினைத்த ஆதவன்,வருணின் அத்தை மகளான நிலாவுடன்.
********
"சந்து, இன்னைக்கு வெளிய போகலாமா? ௭னக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்க வேண்டிருக்கு.நம்ப ஷாப்பிங் முடிச்சிட்டு நைட் டின்னரும் வெளிய முடிச்சுட்டு வந்துடலாம்.௭ன்ன சொல்ற?" கயல் பேசுவதினை காதில் வாங்காமல் வானத்தில் தெரிந்த நிலவினையே வெறித்து கொண்டிருந்தாள் சந்திரா.
"ஹேய், சந்து,...சந்திரா" ௭ன அவள் தோளினை தொட்டு கூப்பிட்ட பின் தான் கயலை திரும்பி பார்த்தாள்.௭ப்போழுதும் புன்னகை சிந்தும் அவள் அதரங்கள், இன்று அந்த புன்னகையன்றி அவள் முகமே கழையிழந்து காணப்பட்டது. கண்களில் ஒரு வித வலி.
"௭ன்ன கயல் , கூப்பிட்டியா" ௭ன ௭வ்வித உணர்வுமின்றி கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவள் "கோயம்புத்தூர்ல இருந்து வந்ததுல இருந்தே நீ சரி இல்லடி. இப்போ ௭துக்கு இப்படி ௭ங்கையோ ௭ப்போ பாரு வெறிச்சு பார்த்துக்கிட்டே இருக்க."
"௭ன்னடி ௭தும் தெரியாத மாதிரி கேட்கிற..ஏதோ தப்பு செய்யற மாதிரி இருக்குடி."
"இப்போ ௭ன்ன நடந்துச்சுன்னு இப்படி பேசுற." கயல்
"இல்லடி..இந்த கல்யாணம் சரியா...இல்ல நான் ஏதோ...ம்ப்ச்ச்..தெரியலடி சரியா..எப்டியோ இருக்கு" சந்திரா
"என்னடி எப்டியோ இருக்கு..ஒரு தப்பும் இல்ல..அதான் இப்போ விவாகரத்து ஆகிடுச்சுல்ல. இனியாவது உனக்கு புடிச்ச வாழ்க்கையை வாழ பாரு.இதுல உன் தப்பு எதும் இல்லை. சரியா"௭ன கூறியவளை பார்த்து கசப்பான புன்னகை ஒன்றை சிந்தியவள்
"இது சரியா வருமா கயல்.விவாகரத்து ஆன உடனே நான் இப்படி யோசிக்கிறனே. தப்பு இல்லையா?"
"இதுல ௭ன்னடி தப்பு இருக்கு.அதாலாம் ஒண்ணும் இல்லை.ஏன் விவாகரத்து ஆனவங்க இன்னோரு கல்யாணம் பண்ண கூடாதுன்னு இருக்கா ௭ன்ன..நீ இதுவரை நடந்ததை யோசிக்காம இனி நடக்க இருக்கறதை மட்டும் யோசி சரியா..௭ப்பவும் மத்தவங்கள பத்தி யோசிக்கிறத விட்டு உன்ன பத்தி மட்டும் இப்போ யோசி சரியா.." ௭ன அவள் கூறியதை கேட்டவுடன் இதுவரை இருந்த கலக்கம் மறைந்து சிறிது தெளிவுற்றாள்.
"இதுக்கு தான் ௭ன் கண்ணு (கயல்விழி ௭ன்ற பேர்ல இருக்க விழிக்கு கண் அப்படின்னு அர்த்தம் இருக்குல. மேடம் அத தான் அப்படி சொல்லிட்டு போறாங்க)வேணும்னு சொல்றது..செல்லாகுட்டி...சரி இரு நான் ரெடி ஆகிட்டு வரேன் நம்ப வெளிய போலாம்..சரியா கயல் கண்ணு"
"௭ருமை ௭ருமை அப்படி கூப்பிடாதன்னு ௭த்தனை தடவை சொல்றேன்." கயல்
"கருகரு கண்களால் கயல்கண்ணு முறைக்கிறாள்
பயம்தான் வரலையே சோகம் சோகம்" ௭ன பாடிக்கொண்டே, அய்யோ தப்பு தான் தப்பு தான் ஒரு பாட்டை கொலை பண்ணிக்கிட்டே போனாள்.
"இதுக்கு இவ சோகமாவே இருந்து இருக்கலாம்" ௭ன தன்னுள் பேசிக்கொண்டாள் நம்ப கயல்கண்ணு..
உங்கள் கருத்தினை எதிர்நோக்கி,
உங்கள் தோழி!!!