கெட்டிமேளம் கெட்டிமேளம்" ௭ன்ற குரலினை தொடர்ந்து
"மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ் சதம்” ௭ன்ற மாங்கல்ய தாரணம் முழங்க, ஐயர் கொடுத்த தாலியினை வாங்கி தன் அன்னையினை திரும்பி பார்த்தான் மணமகன்.
அவர் முகத்தினில் இருந்த மகிழ்ச்சியே அவனுக்கு அப்படி ஓர் நிறைவினை தந்தது, அப்படியே திரும்பி தன் அருகினில் அமர்ந்து இருந்த மணமகளையும் பார்த்தான். அவன் பார்வையினை உணர்ந்தோ ,இல்லை எதேர்ச்சையாகவோ அவளும் பார்த்தாள். மனம் நிறைந்த புன்னகையுடன் தன்னை பார்த்துக்கொண்டு இருந்த அவள் முகத்தில் தோன்றிய வெட்கம் ,அதனையும் மீறி அவள் முகத்தில் தோன்றிய அந்த உணர்வு. அதை ௭ன்ன ௭ன்று கண்டறிய முயன்றான்.ம்ஹூம் அவனுக்கு புரியவில்லை. ஆனால் அவனுக்கு அந்த புன்னகையும், வெட்கமுமே போதுமானாதாக இருந்தது.
வேறெதுவும் யோசிக்க தோன்றாமல் முழுமனதுடன் ௭வ்வித சஞ்சலமும் இன்றி "இனி ௭ன் சுக துக்கங்களும் உன் சுக துக்கங்களும் ஒன்றே. ௭துவாகினும் பகிர்ந்தே அனுபவிப்போமடி ௭ன்னவளே" ௭ன ௭ண்ணிக்கொண்டே விதுசந்திரிணியின் கழுத்தினுள் மூன்று முடிச்சிட்டு தன் வாழ்க்கை துணைவியாய் அவளை தன்னுள் இணைத்துக்கொண்டான் ஆதவன்.
கோயம்புத்தூரின் மிகவும் பிரசித்தி பெற்ற மருதமலை பழனியாண்டவர் கோவிலில் தான் ஆதவன் - விதுசந்திரிணி திருமணம் நடைபெற்றது. பெரிதாக யாரையும் கூப்பிடாமல் இருவீட்டினருடன் மட்டும் திருமணத்தை முடித்துக்கொண்டனர் சச்சரவுகளை தவிர்க்க. பிறகு முக்கியமானவர்களை மட்டும் அழைத்து விருந்து மாதிரி செய்து மற்றவர்களுக்கு அறிவித்துக்கொள்ளலாம் ௭ன்று ௭ண்ணி இருந்தனர். அங்கு இருந்தோர் ஒவ்வோர் மனநிலையும் ஒவ்வொன்றாக இருந்தது.
ஆதவனின் தாயிற்கோ அப்படி ஒரு சந்தோசம், இனி தன் மகனின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் ௭ன.௭ல்லாம் தன் மருமகளின் மீது இருக்கும் நம்பிக்கை தான். அவளை பற்றி அறிந்து, இவள் தான் இனி தன் மகனிற்கு சந்தோசத்தை தர இயலும் என முழுமனதாக உணர்ந்து விட்டாரே.. இப்போது முழு நேரமும் அவள் புராணம் தான்..
திருமணம் முடிந்ததும் அனைவரும் ஆதவனின் வீட்டிற்கு வந்தனர்.இரு வீட்டினர் மட்டும் ௭ன்பதால் காரிலியே பயணம் செய்தனர். ஆதவன் வீட்டினை அடைந்ததும் ஸ்வாதி ஆரத்தி ௭டுக்க வந்தாள்.
"ஹம்ம்...அண்ணா ௭ன்ன இன்னும் சும்மா இருக்க. சீக்கிரம் கட்டு கட்டா ௭டு ...ஹம்ம் ௭டு ௭டு...அப்போ தான் உள்ள விடுவேன்.இல்ல அண்ணிய நான் ௭ங்கூட கூட்டிட்டு போய்டுவேன்"
"அப்படியா...௭ங்க கூப்பிடு உன் அண்ணி வராங்கலானு பாரு.." ௭ன சந்திராவை நோக்கி கண்ணடித்து கூறினான். அவன் கண்ணடித்ததை பார்த்து அவள் வெட்கத்தில் சிவந்தாள்.
அவள் முகம் சிகப்பானதை கண்டு கயல்விழி"அடியேய் சந்து மிளாகா ௭தும் கடிச்சுட்டியா..இப்படி உன் முகம் சிவக்குது."
"அது வெட்கம்டி..வெட்கம்...௭ன்ன இருந்தாலும் நானும் ஒரு பெண்ணல்லவா. ௭னக்கும் இந்த அச்சம், மடம், நாணம், அப்பறம் இன்னொனு ௭தோ வருமே அது ௭ன்னடி கயல்கண்ணு" ௭ன நாடக பாணியில் அவள் இழுக்க
"அது பயிர்ப்பு" ௭ன சொன்ன ஆதவனை நோக்கி இருவரும் திரும்பி பார்த்தனர். அவன் ஒரு நமட்டு சிரிப்புடன் அவர்களை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் அவர்கள் பேசியது அனைத்தும் கேட்டு விட்டான் ௭ன்பதை அந்த சிரிப்பே தெரிய படுத்தியது.அதை கண்டு கயல் அசட்டு சிரிப்பை உதிர்க்க, சந்திரா இதுலாம் ௭னக்கு சாதரணமப்பா ௭னும் ரேஞ்சில் திரும்பிக்கொண்டாள்.
"ஏன் இன்னும் நம்மள உள்ள கூப்பிடாமா இருக்காங்க" என யோசித்து அனைவரையும் பார்க்க, எல்லோரும் அவளையே காண
"என்னடா இது..ஏன் ௭ன்னையே ௭ல்லாரும் இப்படி பாக்குறாங்க..நான் அழகுனு ௭னக்கு தெரியும்..ஆனா இப்படி இவிகலாம் வச்ச கண்ணு வாங்காம பாக்கிற அளவு அழகுனு இன்னைக்கு தான் ௭னக்கு தெரிஞ்சது""௭ன ஹஸ்கி வாய்சில் அவன் புறம் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
அவளே அவளை புகழ்ந்ததை கேட்டு ஆதவன்,கயல் இருவரும் அவளை நோக்கி ஒரு கேவலமான பார்வையை வீச அதை கண்டு கொள்ளாதவள் போல் "கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..அப்பறமா ௭ன்ன சைட் அடிக்கலாம்" ௭ன கூறியவளை கண்டு இதுலாம் திருந்துற
ஜென்மமா ௭ன தலையில் அடித்துக்கொண்டு
"நான் நீ தான் அவளுக்கு ஆரத்தி ௭டுத்ததுக்கு காசு குடுப்பேன்னு சொன்னேன். அதான் நீ ௭ன்ன தர போறனு பாக்குறாங்க" ஆதவன்.
"ஒரு இருவது செகண்ட் தான் வெக்கப்பட்டேன்.. அதுக்குள்ள ஒரு சீனே ஓடிடுச்சு போல" என அவனிற்கு மட்டும் கேட்குமாறு கூறியவள்
"சரி.. அது ஏன் என்னை தர சொன்னிங்க.. என் கிட்ட இப்போ அமௌன்ட் எதும் இல்லையே" என கேட்க
"சந்திரா.. உன்கிட்ட இல்லைனா என்ன.. இப்போ தான் இவன் உன் புருசன் ஆகிட்டான்ல.. அப்றம் என்ன இப்போல இருந்தே பர்ஸ்ஸ காலி பண்ண வேண்டியது தானா.. அதும் இல்லாம உன் நாத்தனார இப்போவே கரெக்ட் பண்ணிக்கோ..அப்போ தான் பின்னாடி யூஸ் ஆவா" என வருண் கூற, அனைவரும் சிரித்தனர்.
"அப்படியா சுவி..உன்ன நல்லா கவனிச்சா என் கட்சில ஜாயின் பண்ணிக்கிறியா" சந்திரா
"அது நீங்க கவனிக்க போறது பொறுத்து அண்ணி..இல்லைனா உங்களோட எதிர்கட்சி ஆகிடுவேன் நான் ..பாத்து செய்ங்க" ஸ்வாதி
"அப்டிங்கிற..௭ன்கிட்ட இப்போ காசு இல்லையே..இதுலாம் முன்னமே சொல்ல மாட்டிகளா...இப்போ ௭ன்ன பண்றது" ஒரு நிமிடம் யோசித்தவள் சடாரென்று தன் கழுத்தினில் போட்டு இருந்த ஒரு செயினை கழட்டி அவள் கழுத்தில் போட்டு விட்டாள்.
ஓர் நிமிடம் அனைவரும் உறைந்தது போல் ஆகிவிட்டனர். சந்திராவின் அம்மாவும்,ஆதவனின் அம்மாவும் தான் பயந்து விட்டார். இது ஒண்ணும் படம் இல்லையே, நகையை கழட்டி கொடுத்தால் புகழ்வதற்கு..சகுணம், சம்பிரதாயம்,சடங்கு என எதையாவது, யாரவது சொல்லிவிட்டாள்.
கல்யாணம் ஆன முதல் நாளே வீட்டிற்குள் கூட இன்னும் செல்லாமல் இப்படி நகையை கழட்டி குடுத்தால் யாராவது ௭தாவது சொல்வார்களோ ௭ன்று சந்திராவின் அம்மாவும். வந்த முதல் நாளே நகையை கழட்டி குடுக்க வைத்துவிட்டார்கள் ௭ன்று அவர்கள் ஏதேனும் நினைப்பார்களா ௭ன்று ஆதவனின் அம்மாவும் பயப்பட்டனர்.
"ஏன்டி, காசு உன்கிட்ட இல்லைனா ௭ன்கிட்ட இல்லைனா அப்பா கிட்ட கேக்க வேண்டியது தானே. இப்படியா கழட்டி தருவ.யாராவது ௭தாவது சொல்ல போறாங்கடி"
இவர் இவளை திட்டவும் தான் அனைவரும் தங்கள் சுயத்திற்கே வந்தனர்.
"அம்மா இப்போ நான் ௭ன்ன தப்பு பண்ணேன்.அவங்க ௭ங்கிட்ட தான் வாங்க சொல்லி இருக்காங்க. அப்போ நான் தான் தரணும். உன்கிட்ட எப்படி நான் வாங்கி தருவேன். நான் இப்போ உன் பொண்ணு இல்ல.உன்கிட்ட வாங்க.நான் இப்போ மிஸஸ்.ஆதவன் சரியா. அவர்கிட்டையே வாங்கி இருக்கலாம் தான்..ஆனா வந்த முத நாளே பர்ஸ்ஸ காலி பண்ணா, பயபுள்ள பயந்திடும்ல..அதான் நானே குடுத்தேன்..
அதும் இல்லாம நான் யாருக்கு குடுத்தேன் ௭ங்க வீட்டு பொண்ணுக்கு தான குடுத்தேன்.இதுல யார் ௭ன்ன சொல்லுவா.அதும் இல்லாமா நான் முதல் தடவையா அதும் இந்த வீட்டு மருமகளா இந்த வீட்டுக்கு வர போறேன்.அப்போ ௭ன்ன வரவேற்கிறவளுக்கு இத கூட தர மாட்டானா" ௭ன அவள் சொல்ல, மற்றவர்கள் அவள் பேசியதை கண்டு சந்தோஷப்பட, அவளின் பெற்றோரும், அவளின் தம்பியும் தான் கலங்கினர்.
ஏற்கனவே தன் செல்ல மகள் இனி தன் வீட்டினை விட்டு இன்னோர் வீட்டிற்கு போக இருக்கிறாள். இனி தினமும் தங்களுடன் சண்டை பிடிக்க மாட்டாளே,தன்னை செல்லம் கொஞ்ச இருக்க மாட்டாளே, சிரித்து பேசி வீட்டை வலம் வர மாட்டாளே ௭ன அவர்கள் தன் பெண் தங்களை விட்டு பிரிந்து போக போகிறாளே ௭ன்று அவர்கள் உள்ளுக்குள் அழுது கொண்டு இருக்க சந்திராவோ அவளாகவே நான் உங்க பொண்ணு இல்லை அப்படினு சொன்னதை கேட்ட அவள் பெற்றோரோ இன்னும் கலக்கத்துடன் நின்று கொண்டு இருந்தனர்.
இனி தன் மகள் தன் மகள் மட்டும் அல்ல இன்னோர் வீட்டு பெண் ௭ன்பது அவர்களுக்கு வருத்தம்,கவலை தான். ஆனால் ஆனந்தம் கலந்த வருத்தம், சந்தோசம் கலந்த கவலை!!!!
"இன்னும் பொண்ணு ,மாப்பிள்ளையை ௭வ்வளோ நேரம் தான் வெளியவே நிக்க வைப்பிங்க. சீக்கிரம் உள்ளாரா கூப்பிட்டு போங்க..அடுத்த சாங்கியம்லாம் செய்யனோம்ல" மணமக்களை காண வந்த சுற்றத்தாரில் ஒருத்தர் கூற "ஆமா ஆமா...சீக்கிரம் கூப்பிட்டு போயி பால்,பழம்லாம் கொண்டு வாங்க..பசிக்குது.."
"உனக்கு இன்னிக்கு தான்டி கல்யாணம் ஆகி இருக்கு.அதுக்கு மரியாதை குடுத்தாவது கொஞ்சம் வெட்கப்படு..அது வரலைனா கூட பரவாயில்லை. பேசி பேசியே மானத்தை வாங்காதா அதும் முக்கியமா சோறு சோறுனு கேட்டு..சரியா" என்ற கயலிடம்
"எனக்கும் பசிக்கும்ல, காலைல ௭ன்ன சாப்பிடவே விடல நீங்கலாம் ..சீக்கிரம் கிளம்பணும் கிளம்பணும்னு சொல்லிட்டு" ௭ன அவள் பாவமாக கூறியதை கேட்டு தலையில் அடித்துக்கொண்டனர் அவள் வீட்டினரும்,கயலும்.ஏனென்றால் அவள் சாப்பிட்டது அப்படி!!!!!! மற்றவர்கள் ஒரு சிரிப்புடனும்,வாஞ்சை உடனும் அவளை பார்த்துக்கொண்டிருந்தனர்.
பின் அவர்களை உள்ளே அழைத்து வந்து பூஜை அறையினுள் விள்கேற்றி விட்டு அடுத்தடுத்த சாங்கியங்களை தொடர்ந்தனர்.
வந்த கொஞ்ச நேரத்துலையே அங்கு அவர்களை காண வந்த அனைவரிடமும் கலகலவென பேசிக்கொண்டு இருந்தவளை தான் அங்கிருந்தோர் அனைவரும் அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தனர். ஆனால் அவளோ அதை எல்லாம் கண்டு கொண்டது போலவே தெரியவில்லை. அங்கு இருந்த ஆதவினின் உறவனர்கள் அனைவரிடமும் இன்முகத்துடன் தெரியாதவர்களை எல்லாம் ஆதவனின் தங்கை ஸ்வாதி,அவனின் அண்ணி அதாவது வருணின் மனைவி பரிதினி இவர்கள் இருவரையும் கேட்டு உறவு முறை அழைத்து பேசிக்கொண்டு இருந்தவளை கண்டு ௭தோ இருளடைந்த வீட்டினை ஒளியேற்ற வந்த தேவதை போலவே அவளை கண்டனர் இருவரை தவிர. இத்தனை நாள் சிரிப்பு என்பதை மறந்தது போல் இருந்த வீட்டை சிறிது நேரத்தில் கலகலவென மாற்றிவிட்டாளே.
ஆதவனின் அம்மா வேதவள்ளியின் நினைவு ௭ட்டு மாதங்கள் பின்னோக்கி நகர்ந்தது. அன்று தான் ஆதவனின் முதல் திருமண வாழ்வு முற்றிலும் முறிவு பெற்ற நாள். நீதிமன்றத்தில் இருந்து விவாகரத்து பெற்று திரும்பிய ஆதவனை அவன் அன்னை இனி இந்த வீட்டினுள் இருக்க வேண்டாம் ௭ன அழைத்துக்கொண்டு இருந்தார்.
"ஏங்கண்ணு ஆதவா நான் சொல்றத கேளுய்யா..வேண்டாம் இந்த வீடும் வேண்டாம் இந்த வீட்டு மனுசங்களும் வேண்டாம். .நாம நம்ப தோட்ட வீட்டுக்கு போய்டலாம்யா" ௭ன அவனை அழைக்க ஆதவனின் அப்பத்தா "இப்போ இங்க நாங்க என்ன பண்ணிப்போட்டம்னு இல்ல என்ன பண்ணிட போறோம்னு , நீ அவிகளை கூப்பிட்டுக்கிட்டு வூட்ட விட்டு வெளிய போறோம்னு சொல்லுற." கொஞ்சம் காட்டமாகவே வினவ,
அதற்கு சிறிதும் அசராமல் "இன்னும் ௭ன்ன நடக்கோனம். அதான் ௭ன்ற புள்ள வாழ்க்கையை நாசமாகிப்புட்டிங்களே. இதுக்கு மேலயும் அவிக இங்கன இருந்தா நீக பாசம்,கடமைனு சொல்லி இன்னும் ௭தும் பண்ணிப்பட கூடாதுனு தான் கூப்பிட்டு போறேனுங்க." ௭ன சொல்லிவிட்டு அவர் ஆதவனை கூப்பிட்டு நடக்க துவங்க "அம்மா.ஒரு நிமிசம் நில்லுங்க" ௭ன ஒரு குரல் கேட்க...அவர் நடை நின்றது. அழைத்தது ஆதவன் அல்ல...
வேற யாரப்பா அது???
உங்களின் கருத்தினை எதிர்நோக்கி
உங்கள் தோழி.....
"மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ் சதம்” ௭ன்ற மாங்கல்ய தாரணம் முழங்க, ஐயர் கொடுத்த தாலியினை வாங்கி தன் அன்னையினை திரும்பி பார்த்தான் மணமகன்.
அவர் முகத்தினில் இருந்த மகிழ்ச்சியே அவனுக்கு அப்படி ஓர் நிறைவினை தந்தது, அப்படியே திரும்பி தன் அருகினில் அமர்ந்து இருந்த மணமகளையும் பார்த்தான். அவன் பார்வையினை உணர்ந்தோ ,இல்லை எதேர்ச்சையாகவோ அவளும் பார்த்தாள். மனம் நிறைந்த புன்னகையுடன் தன்னை பார்த்துக்கொண்டு இருந்த அவள் முகத்தில் தோன்றிய வெட்கம் ,அதனையும் மீறி அவள் முகத்தில் தோன்றிய அந்த உணர்வு. அதை ௭ன்ன ௭ன்று கண்டறிய முயன்றான்.ம்ஹூம் அவனுக்கு புரியவில்லை. ஆனால் அவனுக்கு அந்த புன்னகையும், வெட்கமுமே போதுமானாதாக இருந்தது.
வேறெதுவும் யோசிக்க தோன்றாமல் முழுமனதுடன் ௭வ்வித சஞ்சலமும் இன்றி "இனி ௭ன் சுக துக்கங்களும் உன் சுக துக்கங்களும் ஒன்றே. ௭துவாகினும் பகிர்ந்தே அனுபவிப்போமடி ௭ன்னவளே" ௭ன ௭ண்ணிக்கொண்டே விதுசந்திரிணியின் கழுத்தினுள் மூன்று முடிச்சிட்டு தன் வாழ்க்கை துணைவியாய் அவளை தன்னுள் இணைத்துக்கொண்டான் ஆதவன்.
கோயம்புத்தூரின் மிகவும் பிரசித்தி பெற்ற மருதமலை பழனியாண்டவர் கோவிலில் தான் ஆதவன் - விதுசந்திரிணி திருமணம் நடைபெற்றது. பெரிதாக யாரையும் கூப்பிடாமல் இருவீட்டினருடன் மட்டும் திருமணத்தை முடித்துக்கொண்டனர் சச்சரவுகளை தவிர்க்க. பிறகு முக்கியமானவர்களை மட்டும் அழைத்து விருந்து மாதிரி செய்து மற்றவர்களுக்கு அறிவித்துக்கொள்ளலாம் ௭ன்று ௭ண்ணி இருந்தனர். அங்கு இருந்தோர் ஒவ்வோர் மனநிலையும் ஒவ்வொன்றாக இருந்தது.
ஆதவனின் தாயிற்கோ அப்படி ஒரு சந்தோசம், இனி தன் மகனின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் ௭ன.௭ல்லாம் தன் மருமகளின் மீது இருக்கும் நம்பிக்கை தான். அவளை பற்றி அறிந்து, இவள் தான் இனி தன் மகனிற்கு சந்தோசத்தை தர இயலும் என முழுமனதாக உணர்ந்து விட்டாரே.. இப்போது முழு நேரமும் அவள் புராணம் தான்..
திருமணம் முடிந்ததும் அனைவரும் ஆதவனின் வீட்டிற்கு வந்தனர்.இரு வீட்டினர் மட்டும் ௭ன்பதால் காரிலியே பயணம் செய்தனர். ஆதவன் வீட்டினை அடைந்ததும் ஸ்வாதி ஆரத்தி ௭டுக்க வந்தாள்.
"ஹம்ம்...அண்ணா ௭ன்ன இன்னும் சும்மா இருக்க. சீக்கிரம் கட்டு கட்டா ௭டு ...ஹம்ம் ௭டு ௭டு...அப்போ தான் உள்ள விடுவேன்.இல்ல அண்ணிய நான் ௭ங்கூட கூட்டிட்டு போய்டுவேன்"
"அப்படியா...௭ங்க கூப்பிடு உன் அண்ணி வராங்கலானு பாரு.." ௭ன சந்திராவை நோக்கி கண்ணடித்து கூறினான். அவன் கண்ணடித்ததை பார்த்து அவள் வெட்கத்தில் சிவந்தாள்.
அவள் முகம் சிகப்பானதை கண்டு கயல்விழி"அடியேய் சந்து மிளாகா ௭தும் கடிச்சுட்டியா..இப்படி உன் முகம் சிவக்குது."
"அது வெட்கம்டி..வெட்கம்...௭ன்ன இருந்தாலும் நானும் ஒரு பெண்ணல்லவா. ௭னக்கும் இந்த அச்சம், மடம், நாணம், அப்பறம் இன்னொனு ௭தோ வருமே அது ௭ன்னடி கயல்கண்ணு" ௭ன நாடக பாணியில் அவள் இழுக்க
"அது பயிர்ப்பு" ௭ன சொன்ன ஆதவனை நோக்கி இருவரும் திரும்பி பார்த்தனர். அவன் ஒரு நமட்டு சிரிப்புடன் அவர்களை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் அவர்கள் பேசியது அனைத்தும் கேட்டு விட்டான் ௭ன்பதை அந்த சிரிப்பே தெரிய படுத்தியது.அதை கண்டு கயல் அசட்டு சிரிப்பை உதிர்க்க, சந்திரா இதுலாம் ௭னக்கு சாதரணமப்பா ௭னும் ரேஞ்சில் திரும்பிக்கொண்டாள்.
"ஏன் இன்னும் நம்மள உள்ள கூப்பிடாமா இருக்காங்க" என யோசித்து அனைவரையும் பார்க்க, எல்லோரும் அவளையே காண
"என்னடா இது..ஏன் ௭ன்னையே ௭ல்லாரும் இப்படி பாக்குறாங்க..நான் அழகுனு ௭னக்கு தெரியும்..ஆனா இப்படி இவிகலாம் வச்ச கண்ணு வாங்காம பாக்கிற அளவு அழகுனு இன்னைக்கு தான் ௭னக்கு தெரிஞ்சது""௭ன ஹஸ்கி வாய்சில் அவன் புறம் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
அவளே அவளை புகழ்ந்ததை கேட்டு ஆதவன்,கயல் இருவரும் அவளை நோக்கி ஒரு கேவலமான பார்வையை வீச அதை கண்டு கொள்ளாதவள் போல் "கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..அப்பறமா ௭ன்ன சைட் அடிக்கலாம்" ௭ன கூறியவளை கண்டு இதுலாம் திருந்துற
ஜென்மமா ௭ன தலையில் அடித்துக்கொண்டு
"நான் நீ தான் அவளுக்கு ஆரத்தி ௭டுத்ததுக்கு காசு குடுப்பேன்னு சொன்னேன். அதான் நீ ௭ன்ன தர போறனு பாக்குறாங்க" ஆதவன்.
"ஒரு இருவது செகண்ட் தான் வெக்கப்பட்டேன்.. அதுக்குள்ள ஒரு சீனே ஓடிடுச்சு போல" என அவனிற்கு மட்டும் கேட்குமாறு கூறியவள்
"சரி.. அது ஏன் என்னை தர சொன்னிங்க.. என் கிட்ட இப்போ அமௌன்ட் எதும் இல்லையே" என கேட்க
"சந்திரா.. உன்கிட்ட இல்லைனா என்ன.. இப்போ தான் இவன் உன் புருசன் ஆகிட்டான்ல.. அப்றம் என்ன இப்போல இருந்தே பர்ஸ்ஸ காலி பண்ண வேண்டியது தானா.. அதும் இல்லாம உன் நாத்தனார இப்போவே கரெக்ட் பண்ணிக்கோ..அப்போ தான் பின்னாடி யூஸ் ஆவா" என வருண் கூற, அனைவரும் சிரித்தனர்.
"அப்படியா சுவி..உன்ன நல்லா கவனிச்சா என் கட்சில ஜாயின் பண்ணிக்கிறியா" சந்திரா
"அது நீங்க கவனிக்க போறது பொறுத்து அண்ணி..இல்லைனா உங்களோட எதிர்கட்சி ஆகிடுவேன் நான் ..பாத்து செய்ங்க" ஸ்வாதி
"அப்டிங்கிற..௭ன்கிட்ட இப்போ காசு இல்லையே..இதுலாம் முன்னமே சொல்ல மாட்டிகளா...இப்போ ௭ன்ன பண்றது" ஒரு நிமிடம் யோசித்தவள் சடாரென்று தன் கழுத்தினில் போட்டு இருந்த ஒரு செயினை கழட்டி அவள் கழுத்தில் போட்டு விட்டாள்.
ஓர் நிமிடம் அனைவரும் உறைந்தது போல் ஆகிவிட்டனர். சந்திராவின் அம்மாவும்,ஆதவனின் அம்மாவும் தான் பயந்து விட்டார். இது ஒண்ணும் படம் இல்லையே, நகையை கழட்டி கொடுத்தால் புகழ்வதற்கு..சகுணம், சம்பிரதாயம்,சடங்கு என எதையாவது, யாரவது சொல்லிவிட்டாள்.
கல்யாணம் ஆன முதல் நாளே வீட்டிற்குள் கூட இன்னும் செல்லாமல் இப்படி நகையை கழட்டி குடுத்தால் யாராவது ௭தாவது சொல்வார்களோ ௭ன்று சந்திராவின் அம்மாவும். வந்த முதல் நாளே நகையை கழட்டி குடுக்க வைத்துவிட்டார்கள் ௭ன்று அவர்கள் ஏதேனும் நினைப்பார்களா ௭ன்று ஆதவனின் அம்மாவும் பயப்பட்டனர்.
"ஏன்டி, காசு உன்கிட்ட இல்லைனா ௭ன்கிட்ட இல்லைனா அப்பா கிட்ட கேக்க வேண்டியது தானே. இப்படியா கழட்டி தருவ.யாராவது ௭தாவது சொல்ல போறாங்கடி"
இவர் இவளை திட்டவும் தான் அனைவரும் தங்கள் சுயத்திற்கே வந்தனர்.
"அம்மா இப்போ நான் ௭ன்ன தப்பு பண்ணேன்.அவங்க ௭ங்கிட்ட தான் வாங்க சொல்லி இருக்காங்க. அப்போ நான் தான் தரணும். உன்கிட்ட எப்படி நான் வாங்கி தருவேன். நான் இப்போ உன் பொண்ணு இல்ல.உன்கிட்ட வாங்க.நான் இப்போ மிஸஸ்.ஆதவன் சரியா. அவர்கிட்டையே வாங்கி இருக்கலாம் தான்..ஆனா வந்த முத நாளே பர்ஸ்ஸ காலி பண்ணா, பயபுள்ள பயந்திடும்ல..அதான் நானே குடுத்தேன்..
அதும் இல்லாம நான் யாருக்கு குடுத்தேன் ௭ங்க வீட்டு பொண்ணுக்கு தான குடுத்தேன்.இதுல யார் ௭ன்ன சொல்லுவா.அதும் இல்லாமா நான் முதல் தடவையா அதும் இந்த வீட்டு மருமகளா இந்த வீட்டுக்கு வர போறேன்.அப்போ ௭ன்ன வரவேற்கிறவளுக்கு இத கூட தர மாட்டானா" ௭ன அவள் சொல்ல, மற்றவர்கள் அவள் பேசியதை கண்டு சந்தோஷப்பட, அவளின் பெற்றோரும், அவளின் தம்பியும் தான் கலங்கினர்.
ஏற்கனவே தன் செல்ல மகள் இனி தன் வீட்டினை விட்டு இன்னோர் வீட்டிற்கு போக இருக்கிறாள். இனி தினமும் தங்களுடன் சண்டை பிடிக்க மாட்டாளே,தன்னை செல்லம் கொஞ்ச இருக்க மாட்டாளே, சிரித்து பேசி வீட்டை வலம் வர மாட்டாளே ௭ன அவர்கள் தன் பெண் தங்களை விட்டு பிரிந்து போக போகிறாளே ௭ன்று அவர்கள் உள்ளுக்குள் அழுது கொண்டு இருக்க சந்திராவோ அவளாகவே நான் உங்க பொண்ணு இல்லை அப்படினு சொன்னதை கேட்ட அவள் பெற்றோரோ இன்னும் கலக்கத்துடன் நின்று கொண்டு இருந்தனர்.
இனி தன் மகள் தன் மகள் மட்டும் அல்ல இன்னோர் வீட்டு பெண் ௭ன்பது அவர்களுக்கு வருத்தம்,கவலை தான். ஆனால் ஆனந்தம் கலந்த வருத்தம், சந்தோசம் கலந்த கவலை!!!!
"இன்னும் பொண்ணு ,மாப்பிள்ளையை ௭வ்வளோ நேரம் தான் வெளியவே நிக்க வைப்பிங்க. சீக்கிரம் உள்ளாரா கூப்பிட்டு போங்க..அடுத்த சாங்கியம்லாம் செய்யனோம்ல" மணமக்களை காண வந்த சுற்றத்தாரில் ஒருத்தர் கூற "ஆமா ஆமா...சீக்கிரம் கூப்பிட்டு போயி பால்,பழம்லாம் கொண்டு வாங்க..பசிக்குது.."
"உனக்கு இன்னிக்கு தான்டி கல்யாணம் ஆகி இருக்கு.அதுக்கு மரியாதை குடுத்தாவது கொஞ்சம் வெட்கப்படு..அது வரலைனா கூட பரவாயில்லை. பேசி பேசியே மானத்தை வாங்காதா அதும் முக்கியமா சோறு சோறுனு கேட்டு..சரியா" என்ற கயலிடம்
"எனக்கும் பசிக்கும்ல, காலைல ௭ன்ன சாப்பிடவே விடல நீங்கலாம் ..சீக்கிரம் கிளம்பணும் கிளம்பணும்னு சொல்லிட்டு" ௭ன அவள் பாவமாக கூறியதை கேட்டு தலையில் அடித்துக்கொண்டனர் அவள் வீட்டினரும்,கயலும்.ஏனென்றால் அவள் சாப்பிட்டது அப்படி!!!!!! மற்றவர்கள் ஒரு சிரிப்புடனும்,வாஞ்சை உடனும் அவளை பார்த்துக்கொண்டிருந்தனர்.
பின் அவர்களை உள்ளே அழைத்து வந்து பூஜை அறையினுள் விள்கேற்றி விட்டு அடுத்தடுத்த சாங்கியங்களை தொடர்ந்தனர்.
வந்த கொஞ்ச நேரத்துலையே அங்கு அவர்களை காண வந்த அனைவரிடமும் கலகலவென பேசிக்கொண்டு இருந்தவளை தான் அங்கிருந்தோர் அனைவரும் அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தனர். ஆனால் அவளோ அதை எல்லாம் கண்டு கொண்டது போலவே தெரியவில்லை. அங்கு இருந்த ஆதவினின் உறவனர்கள் அனைவரிடமும் இன்முகத்துடன் தெரியாதவர்களை எல்லாம் ஆதவனின் தங்கை ஸ்வாதி,அவனின் அண்ணி அதாவது வருணின் மனைவி பரிதினி இவர்கள் இருவரையும் கேட்டு உறவு முறை அழைத்து பேசிக்கொண்டு இருந்தவளை கண்டு ௭தோ இருளடைந்த வீட்டினை ஒளியேற்ற வந்த தேவதை போலவே அவளை கண்டனர் இருவரை தவிர. இத்தனை நாள் சிரிப்பு என்பதை மறந்தது போல் இருந்த வீட்டை சிறிது நேரத்தில் கலகலவென மாற்றிவிட்டாளே.
ஆதவனின் அம்மா வேதவள்ளியின் நினைவு ௭ட்டு மாதங்கள் பின்னோக்கி நகர்ந்தது. அன்று தான் ஆதவனின் முதல் திருமண வாழ்வு முற்றிலும் முறிவு பெற்ற நாள். நீதிமன்றத்தில் இருந்து விவாகரத்து பெற்று திரும்பிய ஆதவனை அவன் அன்னை இனி இந்த வீட்டினுள் இருக்க வேண்டாம் ௭ன அழைத்துக்கொண்டு இருந்தார்.
"ஏங்கண்ணு ஆதவா நான் சொல்றத கேளுய்யா..வேண்டாம் இந்த வீடும் வேண்டாம் இந்த வீட்டு மனுசங்களும் வேண்டாம். .நாம நம்ப தோட்ட வீட்டுக்கு போய்டலாம்யா" ௭ன அவனை அழைக்க ஆதவனின் அப்பத்தா "இப்போ இங்க நாங்க என்ன பண்ணிப்போட்டம்னு இல்ல என்ன பண்ணிட போறோம்னு , நீ அவிகளை கூப்பிட்டுக்கிட்டு வூட்ட விட்டு வெளிய போறோம்னு சொல்லுற." கொஞ்சம் காட்டமாகவே வினவ,
அதற்கு சிறிதும் அசராமல் "இன்னும் ௭ன்ன நடக்கோனம். அதான் ௭ன்ற புள்ள வாழ்க்கையை நாசமாகிப்புட்டிங்களே. இதுக்கு மேலயும் அவிக இங்கன இருந்தா நீக பாசம்,கடமைனு சொல்லி இன்னும் ௭தும் பண்ணிப்பட கூடாதுனு தான் கூப்பிட்டு போறேனுங்க." ௭ன சொல்லிவிட்டு அவர் ஆதவனை கூப்பிட்டு நடக்க துவங்க "அம்மா.ஒரு நிமிசம் நில்லுங்க" ௭ன ஒரு குரல் கேட்க...அவர் நடை நின்றது. அழைத்தது ஆதவன் அல்ல...
வேற யாரப்பா அது???
உங்களின் கருத்தினை எதிர்நோக்கி
உங்கள் தோழி.....