அத்தியாயம்-20
மாலையில், கீர்த்தியின் சென்டர் முன் நின்ற பார்த்தி,
'இன்னும் என்ன பண்ணுறா, உள்ள??..வெளிய வராம..பஸ் ஸ்டாப் போய்ட்டாளா, இருக்காதே..'
கொஞ்ச நேரத்தில், அந்த சென்டரில் வேலை பார்க்கும், அவனுக்கு தெரிந்தவன் வந்தான்.
அவனிடம் கேட்டதற்கு,அவள், இன்று வகுப்புக்கே வரவில்லை என்று கூறிச்சென்றான்.
'நேத்து ஏதும் சொல்லலியே,மொபைல் வேற ரிப்பேர்,நேத்தே அப்செட்ல இருந்தா.அதுனால, உடம்பு ஏதும் சரி இல்லியா,மொபைல் இல்லாததால, தகவல் சொல்ல முடியலையா??'
யோசனையுடன், இவன் வீடு நோக்கி பைக்கை செலுத்தினான்.வீடிருக்கும் தெருவை நெருங்கையில், எதிரே வந்த மாமி,இவனை அழைத்தார்.
"ஏன்டா,அம்பி,பார்த்தி. நில்லுடா அம்பி…"
வேறு சிந்தனையில் இருந்தவன்,அவரை கவனிக்காமல்,சிறிது தொலைவு கடந்து சென்றான்.,பின், ஏதோ ஒரு உந்துதலில் திரும்பியவன், அவரை நோக்கி பைக்கை திருப்பினான்.
"என்னடா அம்பி,பலத்த சிந்தனை??கூப்பிட்டது கூட கேட்காம போற??"
"ஒண்ணுமில்ல மாமி,கவனிக்கல..சொல்லுங்க"
"உன்னாண்டை ஒரு விஷயம் சொல்லணும்,நம்ம கீர்த்தி இருக்காளோலியோ,அவ தோப்பானர் வந்தார்,முகத்துல முள்ளு கட்டுன மாதிரி வச்சுண்டு, அவளை சாப்பிட கூட விடல,அரக்க பறக்க,கூட்டிண்டு போய்ட்டார்..
அவளுக்கு பிடிக்குமேன்னு,மோர் குழம்பு,பருப்பு உசிலி எல்லாம் செய்துருந்தேன்.மனுஷன், ஒரு வாய் சாப்பிட விடல..கோபக்கார மனுசனா இருப்பார் போல.."
பார்த்தி மனதில் 'திக்' என்றது.
"எப்போ வந்தார்,மாமி..??"
"மதியம்,கீர்த்தி கிளாஸ்க்கு கிளம்பரச்சே வந்தார்.காபி குடிங்கன்னு சொன்னேன்..அதெல்லாம் வேண்டாம்னுட்டு,அந்த புள்ளையை மல்லுக்கட்டி இழுதுண்டு போய்ட்டார்.புள்ள முகமே வாடி போச்சு..நல்ல புள்ள.."
"என்ன காரணமுன்னு தெரியுமா மாமி??"
"ஏதோ,அவ அம்மாக்கு உடம்பு முடியலைன்னு சொன்னார்..ஆனா, ஆர்தியை பத்தியே விசாரிக்கல.."
மாமி பெருமூச்சு விட்டார்.
"ஓ.."
"அந்த பிள்ளையை விட்டுடாத டா, அம்பி.."
அவர் பேச்சில் அதிர்ந்து,அவர் முகம் பார்த்தான்.
"நீங்க ரெண்டு பேரும் விரும்புறேள்னு ,நேக்கு எப்படி தெரியும்னு நினைக்குறியா??யாரை பத்தியும், நானா சொல்லாம கேட்டுக்காத நீ, அந்த பிள்ளையை பத்தி விசாரிச்சபோவே,தோணித்து.
அப்புறம் கீர்த்தியும்,உங்க அம்மா,அப்பா பத்தி ஆர்வமா விசாரிச்சா, என் அனுபவத்துல,உங்க பிடித்தம் புரிஞ்சுது..ரெண்டு பேரும் நல்ல பிள்ளைங்க,சந்தோசமா இருக்கணும்னு நெனச்சேன்..யார் கண்ணு பட்டுத்தோ..
இப்போ, அவ தோப்பனார் இழுத்துண்டு போய்ட்டார்.அவராண்டை பொண்ணு கேட்டு,சீக்கிரம் கல்யாணம் செய்துக்கோ டா அம்பி..நான் உங்களுக்காக, பெருமாளை சேவிச்சுக்குறேன்.."
கூறிவிட்டு,
"நான் வரேன் டா அம்பி..சீக்கிரம் நல்ல முடிவு எடு.."
என்று சொல்லி விட்டு சென்றார்.
அவருக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை பார்த்தி,தலை அசைத்து விட்டு, அங்கிருந்து இலக்கில்லாமல் சென்றான்.
கொஞ்ச நேரம், ஒரு பார்க்கில் அமர்ந்திருந்தான்.
'இப்பொழுது முடிவெடுக்க வேண்டிய நேரம்,தன் வாழ்கை பற்றி,தங்கள் வாழ்கை பற்றி.இந்த நிலைமையில்,சரியான ஒரு வேலை இல்லாமல் பெண் கேட்டால்,அவள் தந்தை, நிச்சயம் கொடுக்க மாட்டார்.
முதலில், நல்ல வேலை வேண்டும்,அதன் பிறகு, யாருடைய குறுக்கீடும் இல்லாமல் இருக்க வேண்டும்.
முதல் விஷயம், சீக்கிரம் செய்து விடலாம்,இரண்டாம் விஷயம்…'
சிந்தனையின் முடிவில்,சில போன் கால்கள் செய்தான்.
பேசி முடித்து விட்டு,சற்று தெளிந்த மனநிலையில்,வீட்டிற்கு சென்றான்.
இரவாகி இருந்தது.
மொட்டை மாடிக்கு சென்றவனுக்கு, அவ்விடம் வெறுமையாய் காட்சி அளித்தது.
அவளோடு அமரும் இடத்தில், சிறிது நேரம் சாய்ந்து அமர்ந்தவன்,பின்னர் இறங்கி வீட்டிற்குள் சென்றான்.
வீட்டில் அரவம் அடங்கி இருந்தது.மாடியேறி அவள் அறைக்கு சென்றான்.
அறை முழுவதும், அவள் வாசனை,ஆழ்ந்து மூச்சிழுத்து, நுரையீரலில் நிரப்பிக் கொண்டான்.
அவள் கப் போர்டை திறந்து,அவள் சுடிதார் ஒன்றை எடுத்தான்.
அதை இறுக்கி, நெஞ்சோடு அணைத்துக் கொண்டு,அவள் கட்டிலில் படுத்தான்.
அவள் தலையணையில், முகம் புதைத்துக் கொண்டான்.
அவளோடு, இங்கு கொண்டாடிய, அவள் பிறந்த நாள்,அவளோடு, இந்த அறையில் கழித்த மணித்துளிகள்,மோதிரம் அணிவித்தது, முத்தமிட்டது, அவளை சந்தித்தது முதல், நடந்த ஒவ்வொரு விஷயமும்,அவள் பேச்சு,அவள் முக பாவம்,அவளின் சிரிப்பு,அவள் கோபம்,அழுகை,குறும்பு எல்லாம், ஒன்றன் பின் ஒன்றாக..கலவை உணர்வாய் அவன் சிந்தனையில் முட்டி மோதியது..
சர்வமும், சக்தி மயம் என்பது போல,சர்வமும் கீர்த்தி மயமாய் ஆனது.
எவ்வளவு நேரம் அங்கு இருந்தான் என்று தெரியவில்லை.பின், ஒரு முடிவிற்கு வந்தவனாய் எழுந்து,அவள் சுடிதாரை எடுத்துக்கொண்டு,கீழே இறங்கி, அவன் அறைக்கு சென்றான்.
உறங்காமல், விடியலுக்காய் காத்திருந்தான்.
ஆர்திக்கு ,அவள் அன்னை, அலைபேசியில் விஷயம் தெரிவித்திருந்தார்.
அதனால்,அன்று மாலை பயத்துடனேயே வீடு வந்தாள், மாமியார் என்ன சொல்வார்களோ, என்று.
அதிசயிக்க தக்க வகையில், அகிலாண்டம் ஒன்றும் சொல்லவில்லை,உன் தந்தை வந்து, கீர்த்தியை கூட்டிக்கொண்டு சென்றார்,என்று மட்டும் தகவல் தெரிவித்தார்.
'ஹப்பா',என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் ஆர்த்தி.
அவளுக்கு,திட்டு எல்லாம், தன் அம்மாவிடம் தான் கிடைத்தது.
அவ ஒருத்தனை காதலிக்குறது கூட தெரியாம, இவ்ளோ நாள் இருந்துருக்க,ஒரே வீட்டுக்குள்ள.இது தான் நீ, அவளை பார்த்துக்கொள்ளும் லட்சணமா?? என்று வெளுத்து வாங்கிவிட்டார்.
அவள் துணிகள் எல்லாம் அங்கு தான் இருக்கிறது,நீ எப்போது வருக்கிறாயோ, அப்பொழுது கொண்டு வா என்று சொல்லி விட்டார் மீனாட்சி.
இந்த விஷயம் ஏதும் ஆரவ்க்கு தெரியாது.இவளும் சொல்லவில்லை,அகிலாண்டமும், கீர்த்தி,அவள் அப்பாவுடன் சென்றிருக்கிறாள் என்று மட்டும் தகவல் சொன்னார்.அவரிடம் கேள்வி கேட்டு பழக்கம் இல்லாததால்,ஏதோ வேலை போல,என்று நினைத்துக்கொண்டான்.அதற்கு மேல் யோசிக்கவில்லை.
மறுநாள் வழக்கம் போல, ஆரவும் ஆர்த்தியும், கடைக்கு கிளம்பி சென்றார்கள்.
அகிலாண்டம் ஹாலில் அமர்ந்திருந்தார்.மாமி, சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருந்தார்.
அவன் அறையில் இருந்து, வெளியே வந்த பார்த்தி,
அவர் முன் வந்து நின்று,
"உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்.."
அவன் குரலில், நிமிர்ந்து பார்த்தவர்.
சுற்றும், முற்றும், பார்த்து விட்டு,
"என் கிட்டேயா பேசுன??"
கண்களில், போலி ஆச்சர்யம் காட்டினார்.
அவன், பதில் ஏதும் கூறவில்லை.
"உனக்கு, என்னை எல்லாம் கண்ணுக்கு தெரியாதே.எப்போவும், மதிக்காம,கெத்தா,மகாராஜா மாதிரி சுத்துவ..இன்னிக்கு மட்டும், அதிசயமா பேசனுமுன்னு சொல்லுற..திருச்சிக்கு வெள்ளம் ஏதும் வந்துட போகுது.."
குரல்,பாவனை, அனைத்திலும், நக்கல்,கிண்டல், ஏளனம், எல்லாம் நிரம்பி வழிந்தது.
பல்லை கடித்து, தன் கோபத்தை அடக்கினான்.
"சரி சொல்லு,என்ன பேசணும்..??சீக்கிரம் சொல்லு??..எனக்கு வேலை இருக்கு, கடைக்கு கிளம்பணும். "
ஒரு நீண்ட மூச்சு விட்டு,தன்னை சமாதானபடுத்திக்கொண்டவன்.
"நானும், கீர்த்தியும், விரும்புறோம்.கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறோம்.அவங்க அப்பா கிட்ட பேசி..எங்க கல்யாணத்தை நடத்தி வைங்க.."
எந்த வித முன்னறிவுப்பும் இன்றி, போட்டு உடைத்தான்.
அவன் பேசிமுடித்ததும்,வாய்விட்டு சிரித்தார் அகிலாண்டம்.
அவர் சிரிப்பு சத்தத்தில், மாமி வெளியே வந்து பார்த்தார்.
"எந்த கீர்த்தி??என் மருமகளுக்கு தங்கச்சியா??என் சம்பந்தி வீட்டு பொண்ணா??"
'அவளை, என் வழியே தான் உனக்கு தெரியும்,முதலில் எனக்கு உறவு என்று சொன்னார்..'
"எப்போவும் திமிரா சுத்துவ.இன்னிக்கு, என் கிட்ட கையேந்தி நிக்குற பார்த்தியா,இதை தான் நான் எதிர்பார்த்தேன். "
அவர் முகத்தில், ஆணவத்தின் பிரதிபலிப்பு.
"என்ன சொன்ன,நான் கீர்த்தி அப்பா கிட்ட பேசி,உங்க கல்யாணத்தை நடத்தனுமா??அவரே, உனக்கு பொண்ணு கொடுக்குறேன்னு சொன்னா கூட..கொடுக்க விட மாட்டேன்..தெரிஞ்சுக்கோ.."
கண்களை இறுக்கி மூடி.. பின் திறந்தவன் கண்கள், சிவந்திருந்தது.
"உங்களுக்கு இப்போ என்ன வேணும்??நான் இங்க,இந்த வீட்டுல இருக்க கூடாது..அவ்ளோ தானே,நான் போய்யுடுறேன்..நீங்க ,எங்க கல்யாணத்தை மட்டும் முடிச்சு வைங்க.அப்புறம், உங்க வழிக்கே வர மாட்டேன்."
அவன் சொன்னது கேட்டு,உதடு பிதுக்கி,
"ஹ்ம்ம்..அவ்ளோ பிடிக்குமா,உனக்கு அவளை. இவ்ளோ நாள், உன்னை நான் விரட்ட போட்ட திட்டத்தை எல்லாம் முறியடிச்சு,இங்க, என் டென்சனை ஏத்திக்கிட்டு,உக்காந்துருந்த…
இப்போ, அவ வேணுமுன்னதும்,இங்க இருந்து, போறேங்குற,என்ன வேணாலும் செய்வ போலையே அவளுக்காக..
இது தான்,இது தான் வேணும் எனக்கு....உனக்கு அவளை, அவ்ளோ பிடிக்கும்னா,நிச்சயம் அவளை, உன் கூட சேர விட மாட்டேன்.இல்லைனாலும் உன்னை சேர விட மாட்டேன் தான், ஆனா, இப்ப புரிஞ்சுரிச்சு..அவ இல்லைன்னா உனக்கு எவ்வளவு வலிக்கும்னு.."
பொங்கிய கோபத்தை அடக்கி,இது கோபப்படும் நேரமில்லை என்று, மனதை சமாதானபடுத்தி,
"நான் உங்களை என்ன பண்ணேன்??,ஏன் இவ்ளோ கோவம் என் மேல.. ??நான் எந்த தப்பும் செய்யலியே..??"
"நீ பிறந்ததே தப்பு.."
"அது என் தப்பு இல்ல.."
"ஹ்ம்ம்..உன் தப்பு இல்ல..உன் அப்பன் ஆத்தா தப்பு.ஆனா,அவங்களுக்கு தண்டனை கொடுக்க முடியலையே.உன் ஆத்தா, உடனே போய்ட்டா,உன் அப்பனை, முடிஞ்ச வரை தண்டிச்சும்,என் மனசு ஆறலியே..அவரையே உரிச்சு வைச்ச மாதிரி,மூக்கும்,முழியுமா பிறந்துருக்கியே..
உன்னை பாக்குற சொந்தக்காரங்க,தெரிஞ்சவங்க எல்லோரும்,யாரும் சொல்லாமலே,ஏகாம்பரம் பிள்ளையா நீ, அப்படியே இருக்கியென்னு சொல்லும் போது,எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா??காதுல ஈயத்தை காச்சி உத்துன மாதிரி.."
ஒரு கோப மூச்சு விட்டவர்.
"நீ,அவங்க காதலின் சின்னம் இல்லியா??அதான், அவரை மாதிரியே இருக்க..உங்க ஆத்தா, அவரை நினைச்சு, உருகி,உருகியே உன்னை பெத்துருப்பா..அவ்ளோ உருகுறவ,புருஷனை விட்டு தந்துருக்க கூடாது.விட்டு கொடுத்துட்டா, அதுக்கப்புறம், திரும்பியும் பார்த்துருக்க கூடாது..ரெண்டையும் செய்யலியே..
இரண்டாம் தாரங்குற, பெரிய காயத்தோட இங்க வந்தா, என் மாமியார்காரி, அவளும் இங்க தான் இருப்பா, அப்படிங்குறா.என் புருஷன் கண்ணு எல்லாம், எப்போவும், எந்நேரமும், அவ போற பக்கம் எல்லாம் போகுது,அவ அறை பக்கம் தான், அவர் பார்வை சுத்தும், எவ்வளவு வேலி போட்டு தடுத்துருப்பேன்..அப்போ, எவ்வளவு வலி தெரியுமா எனக்கு..
அந்த மனுஷன் காதல் முழுசும், உன் அம்மாக்கு மட்டும் தான்,என் கூட கடமையா தான் வாழ்ந்தார்.கடைசி மூச்சு வரை.
எப்போ சந்தர்ப்பம் கிடைக்கும்?? அவ கூட பேசலாம்னு சுத்துவர்.அவர் எண்ணம் முழுசும் அவ தான்.
சொந்த வீட்டுக்குள்ளேயே, காவல் காக்குற நிலைமை,யாருக்கும் வர கூடாது.
எவ்வளவு காவல் காத்து, என்ன ப்ரியோஜனம்??,எனக்கு அந்த, பழப்போன மஞ்சள் காமாலை வந்து,என் அம்மா அழுது சாதிச்சு, கூட்டிட்டு போனப்போ,உன் அப்பனும் ஆத்தாலும், அவங்க காதல் சின்னத்தை உருவாக்கிட்டாங்களே..என் காவல் எல்லாம் வீணாய் போச்சே..
அப்போ, எவ்வளவு வலி அனுபவிச்சுருப்பேன்..அதுவும், அவ அஞ்சு மாசம் கழிச்சு,நீ உறுதியா தங்குனதுக்கு அப்புறம், தெரியுது..
அப்போ நான் வேதனையில துடிச்சா, என் மாமியார்காரிக்கும்,உன் அப்பனுக்கும், அவ்வளவு சந்தோசம்…
குழந்தைக்காக தானே, இவளை கட்டுனோம்,தப்பு பண்ணிட்டோம்னு கூட யோசிச்சு இருப்பாரு,உன் அப்பா..
அதுக்கப்புறம், உங்க ஆத்தாவை,அவ அம்மா வீட்டுக்கு அனுப்பியும்,உன் அப்பா போறதை தடுக்க முடியலை.
அந்த நாட்களை நினைச்சா, இப்போ கூட மனசு ஆறலை..
நீ பிறந்ததும்,உன் அப்பா,உன் அம்மா கூடவே போய்டுவாருன்னு நெனச்சேன்..ஆனா, அவளுக்கு முடியாமை போய், அவ போய் சேர்ந்ததும்.உன் அப்பா திரும்பி வந்துட்டார்.வெறும் கையோட..
அப்போ தான்,அந்த மனுஷன், உன்னை எவ்வளவு வெறுக்குறார்னு தெரிஞ்சுது..காதல் மனைவி மேல, அம்புட்டு பாசம்.
அப்புறம் என் மாமியார்காரி, உன்னை இங்க தூக்கிட்டு வந்துட்டா..
அவளுக்கு தான், நான் சந்தோசமா இருந்தா பொறுக்காதே..இத்தனைக்கும், நான் அவ சொந்த அண்ணன் பொண்ணு..
மகனுக்கும், மாமா மகள்னு பாசம் இல்லை.அத்தைகாரிக்கும்,அண்ணன் பொண்ணுன்னு பிரியம் இல்ல..அப்படி இருந்துருந்தா, மகனுக்கு முதமுதலா பொண்ணு பார்க்கையில, நான் கண்ணுக்கு தெரிஞ்சுருப்பேன்..
எங்க அந்தஸ்து அப்போ இறங்கி இருந்துச்சு,அதுனால,அப்போ அவர் காதலுக்கு ஒத்துகிட்டு.பின்னாடி ,வாரிசு வேணுமுன்னு,ரெண்டாம் தாரத்துக்கு, எங்க வீட்டுல பொண்ணு எடுக்க வந்துட்டாங்க..
அப்போ அந்தஸ்து இடிக்கல போல..என் வீட்டுலயும்,என் விருப்பத்தை மதிக்காம,இங்க பிடிச்சு தள்ளிட்டாங்க..எல்லாம் பணம் தான் காரணம்,எல்லோருக்கும் பணம், அந்தஸ்து தான் முக்கியமா போச்சு..
அதுக்கு பிறகு தான் முடிவெடுத்தேன்..எந்த பணத்தை வெச்சு,என் விருப்பத்தை மதிக்காம, எங்க வீட்டுல இங்க தள்ளுனாங்களோ,எந்த பணத்தை மதிச்சு, என்னை முதல் தாரமா எடுக்காம, என் அத்தை, ரெண்டாம் தாரமா எடுத்தாங்களோ, அந்த பணம், என் கட்டுப்பாட்டுக்கு கீழ இருக்கணும்னு தான்..,
இந்த வீடு,சொத்து ,வீட்டு நிர்வாகம் எல்லாம்,எல்லாத்தையும்,எனக்கு கீழ கொண்டு வந்தேன்..உன்னையும், உன் அப்பனையுன், ஒட்ட விடாம செஞ்சேன்..
உன் சேர்க்கை சரி இல்லை..நடவடிக்கை சரி இல்லைன்னு.. அது,இதுன்னு சொல்லி,அவர்கிட்ட இருந்து, உனக்கு,திட்டு,அடி எல்லாம் கிடைக்கும் படி செய்தேன்..அதுக்கு நான், ரொம்ப சிரம படலை, ஏன்னா ,உன்னால, அவர் காதல் மனைவி இல்லாம போய்ட்ங்கன்னு, அவர் மனசுல ஆழமா விழுந்த விதையை,நான் தண்ணி ஊத்தி மரமாக்குனேன்.. அவ்ளோ தான்..
ஆனா ,உன் படிப்பை மட்டும், என்னால தடுக்க முடியலை, என் பசங்க எல்லாம் சுமாரா படிச்சா.நீ, முதல் மார்க் வாங்கிட்டு வர..அதை வச்சு, அந்த மனுஷனுக்கு உன்னை பிடிச்சுடுமோன்னு,அதை தடுக்க பார்த்தா, எல்லாத்துக்கும் ஒத்துக்குற மனுஷன், அதுல நிலையா நின்னுட்டார்..
எந்த கிளாஸ் போனாலும் தடுத்தேன்,அந்த வாத்தியார்களே வந்து,நல்லா கத்துக்குற பிள்ளையை, ஏன் நிறுத்துறீங்கன்னு கேட்டு, கூட்டிட்டு போனாங்க..அதுல மட்டும் எனக்கு படு தோல்வி..
இது பத்தாதுன்னு,உன் அப்பா..நீ படிச்சு முடிச்ச கையோட, கடையை தூக்கி, உன் கையில கொடுக்க திட்டம் போடுறார்.
அதுக்காக தான்,நான் எவ்வளவு தடுத்தும்,உன்னை தடை விதிக்காம, படிக்க வச்சுருக்கார்..
எவ்ளோ அழகா திட்டம் போட்டுருக்கார்.. யாரு கிட்ட,இந்த அகிலாண்டேஸ்வரி கிட்டேயா, அவர் திட்டம்..??
உன் கிட்ட, எழுதி வாங்க வச்சுட்டேன்ல..அவர் வேலையை, என் கிட்டேயே கட்டுறாரா..??
அதுக்கப்புறம் ,திடீருன்னு மகன் மேல பாசம் பொங்கிடுச்சு..கடைசி காலத்துல புத்தி வந்துருச்சு போல,
குற்ற உணர்வுலயே தவிக்கிறார்..
உன்னை பார்க்கையில, கண்ணுல பாசம் பொங்குது..தூங்கையில கூட, மன்னிச்சுடுடா பார்த்தி,தப்பு பண்ணிட்டேன்னு புலம்புறார்..
நான் எழுதி வாங்குன விதத்துல,சின்ன வயசுல இருந்து உன்னை நடத்துனது தப்புன்னு புரிஞ்சுடுச்சு போல, மனுஷனுக்கு..ஆனா ரொம்ப லேட்.. என்ன பண்ண..??
அந்த துக்கத்துலேயே, உடம்பு சரி இல்லாம போச்சு..கடைசி நேரத்துல, போற மனுஷன் சும்மா போகாம,உன்னை, இந்த வீட்டை விட்டு அனுப்ப கூடாதுனு, சத்தியம் வேற, அதுவும், உன் முன்னால..என் பிள்ளைங்க எல்லோர் முன்னாலும் கேக்குறார்..மறுக்க முடியாத நிலைமையில..
கத்தி முனையில் நிக்க வச்ச மாதிரி..
வேற வழி இல்லாம, சத்தியம் பண்ண வேண்டியதா போச்சு..
நான் தானே அனுப்ப கூடாது??..அவனா போகலாம் இல்ல..??போக வைக்குறேன்னு..
உன்னை ஒதுக்கி வச்சு.. எல்லோர் முன்னயும் அவமானபடுத்தி..எவ்வளவு செஞ்சேன்..ஏன்,?? ஆரவ் கல்யாணத்துக்கு கூட சொல்லாம..யாரையும் சொல்ல விடாம..என் பிள்ளைங்களை ஒட்ட விடாம, அவ்ளோ செஞ்சும்..நீ அசைவனானு, மலை மாதிரி நின்னுட்டு…
இப்போ ,நேத்து வந்த ஒருத்திக்காக, இங்க இருந்து போறேன்னு சொல்லுற பாரு.. இதான் வேணும் எனக்கு..
இந்த விஷயம் முன்னவே தெரிஞ்சா,அப்போவே, உன்னை வெளிய அனுப்பி இருப்பேன்..
இப்போ ஒன்னும் கெட்டு போகலை..உன்னை வெளிய அனுப்புறதை விட ,பெரிய தண்டனை ஒன்னு கொடுக்கப் போறேன்..
கீர்த்தியை உனக்கு கிடைக்க விடாம செஞ்சா, அதை விட பெரிய அடி, உன் வாழ்க்கையிலேயே இருக்காது இல்ல..அதை தான் செய்ய போறேன் .
…தொடரும்..
மாலையில், கீர்த்தியின் சென்டர் முன் நின்ற பார்த்தி,
'இன்னும் என்ன பண்ணுறா, உள்ள??..வெளிய வராம..பஸ் ஸ்டாப் போய்ட்டாளா, இருக்காதே..'
கொஞ்ச நேரத்தில், அந்த சென்டரில் வேலை பார்க்கும், அவனுக்கு தெரிந்தவன் வந்தான்.
அவனிடம் கேட்டதற்கு,அவள், இன்று வகுப்புக்கே வரவில்லை என்று கூறிச்சென்றான்.
'நேத்து ஏதும் சொல்லலியே,மொபைல் வேற ரிப்பேர்,நேத்தே அப்செட்ல இருந்தா.அதுனால, உடம்பு ஏதும் சரி இல்லியா,மொபைல் இல்லாததால, தகவல் சொல்ல முடியலையா??'
யோசனையுடன், இவன் வீடு நோக்கி பைக்கை செலுத்தினான்.வீடிருக்கும் தெருவை நெருங்கையில், எதிரே வந்த மாமி,இவனை அழைத்தார்.
"ஏன்டா,அம்பி,பார்த்தி. நில்லுடா அம்பி…"
வேறு சிந்தனையில் இருந்தவன்,அவரை கவனிக்காமல்,சிறிது தொலைவு கடந்து சென்றான்.,பின், ஏதோ ஒரு உந்துதலில் திரும்பியவன், அவரை நோக்கி பைக்கை திருப்பினான்.
"என்னடா அம்பி,பலத்த சிந்தனை??கூப்பிட்டது கூட கேட்காம போற??"
"ஒண்ணுமில்ல மாமி,கவனிக்கல..சொல்லுங்க"
"உன்னாண்டை ஒரு விஷயம் சொல்லணும்,நம்ம கீர்த்தி இருக்காளோலியோ,அவ தோப்பானர் வந்தார்,முகத்துல முள்ளு கட்டுன மாதிரி வச்சுண்டு, அவளை சாப்பிட கூட விடல,அரக்க பறக்க,கூட்டிண்டு போய்ட்டார்..
அவளுக்கு பிடிக்குமேன்னு,மோர் குழம்பு,பருப்பு உசிலி எல்லாம் செய்துருந்தேன்.மனுஷன், ஒரு வாய் சாப்பிட விடல..கோபக்கார மனுசனா இருப்பார் போல.."
பார்த்தி மனதில் 'திக்' என்றது.
"எப்போ வந்தார்,மாமி..??"
"மதியம்,கீர்த்தி கிளாஸ்க்கு கிளம்பரச்சே வந்தார்.காபி குடிங்கன்னு சொன்னேன்..அதெல்லாம் வேண்டாம்னுட்டு,அந்த புள்ளையை மல்லுக்கட்டி இழுதுண்டு போய்ட்டார்.புள்ள முகமே வாடி போச்சு..நல்ல புள்ள.."
"என்ன காரணமுன்னு தெரியுமா மாமி??"
"ஏதோ,அவ அம்மாக்கு உடம்பு முடியலைன்னு சொன்னார்..ஆனா, ஆர்தியை பத்தியே விசாரிக்கல.."
மாமி பெருமூச்சு விட்டார்.
"ஓ.."
"அந்த பிள்ளையை விட்டுடாத டா, அம்பி.."
அவர் பேச்சில் அதிர்ந்து,அவர் முகம் பார்த்தான்.
"நீங்க ரெண்டு பேரும் விரும்புறேள்னு ,நேக்கு எப்படி தெரியும்னு நினைக்குறியா??யாரை பத்தியும், நானா சொல்லாம கேட்டுக்காத நீ, அந்த பிள்ளையை பத்தி விசாரிச்சபோவே,தோணித்து.
அப்புறம் கீர்த்தியும்,உங்க அம்மா,அப்பா பத்தி ஆர்வமா விசாரிச்சா, என் அனுபவத்துல,உங்க பிடித்தம் புரிஞ்சுது..ரெண்டு பேரும் நல்ல பிள்ளைங்க,சந்தோசமா இருக்கணும்னு நெனச்சேன்..யார் கண்ணு பட்டுத்தோ..
இப்போ, அவ தோப்பனார் இழுத்துண்டு போய்ட்டார்.அவராண்டை பொண்ணு கேட்டு,சீக்கிரம் கல்யாணம் செய்துக்கோ டா அம்பி..நான் உங்களுக்காக, பெருமாளை சேவிச்சுக்குறேன்.."
கூறிவிட்டு,
"நான் வரேன் டா அம்பி..சீக்கிரம் நல்ல முடிவு எடு.."
என்று சொல்லி விட்டு சென்றார்.
அவருக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை பார்த்தி,தலை அசைத்து விட்டு, அங்கிருந்து இலக்கில்லாமல் சென்றான்.
கொஞ்ச நேரம், ஒரு பார்க்கில் அமர்ந்திருந்தான்.
'இப்பொழுது முடிவெடுக்க வேண்டிய நேரம்,தன் வாழ்கை பற்றி,தங்கள் வாழ்கை பற்றி.இந்த நிலைமையில்,சரியான ஒரு வேலை இல்லாமல் பெண் கேட்டால்,அவள் தந்தை, நிச்சயம் கொடுக்க மாட்டார்.
முதலில், நல்ல வேலை வேண்டும்,அதன் பிறகு, யாருடைய குறுக்கீடும் இல்லாமல் இருக்க வேண்டும்.
முதல் விஷயம், சீக்கிரம் செய்து விடலாம்,இரண்டாம் விஷயம்…'
சிந்தனையின் முடிவில்,சில போன் கால்கள் செய்தான்.
பேசி முடித்து விட்டு,சற்று தெளிந்த மனநிலையில்,வீட்டிற்கு சென்றான்.
இரவாகி இருந்தது.
மொட்டை மாடிக்கு சென்றவனுக்கு, அவ்விடம் வெறுமையாய் காட்சி அளித்தது.
அவளோடு அமரும் இடத்தில், சிறிது நேரம் சாய்ந்து அமர்ந்தவன்,பின்னர் இறங்கி வீட்டிற்குள் சென்றான்.
வீட்டில் அரவம் அடங்கி இருந்தது.மாடியேறி அவள் அறைக்கு சென்றான்.
அறை முழுவதும், அவள் வாசனை,ஆழ்ந்து மூச்சிழுத்து, நுரையீரலில் நிரப்பிக் கொண்டான்.
அவள் கப் போர்டை திறந்து,அவள் சுடிதார் ஒன்றை எடுத்தான்.
அதை இறுக்கி, நெஞ்சோடு அணைத்துக் கொண்டு,அவள் கட்டிலில் படுத்தான்.
அவள் தலையணையில், முகம் புதைத்துக் கொண்டான்.
அவளோடு, இங்கு கொண்டாடிய, அவள் பிறந்த நாள்,அவளோடு, இந்த அறையில் கழித்த மணித்துளிகள்,மோதிரம் அணிவித்தது, முத்தமிட்டது, அவளை சந்தித்தது முதல், நடந்த ஒவ்வொரு விஷயமும்,அவள் பேச்சு,அவள் முக பாவம்,அவளின் சிரிப்பு,அவள் கோபம்,அழுகை,குறும்பு எல்லாம், ஒன்றன் பின் ஒன்றாக..கலவை உணர்வாய் அவன் சிந்தனையில் முட்டி மோதியது..
சர்வமும், சக்தி மயம் என்பது போல,சர்வமும் கீர்த்தி மயமாய் ஆனது.
எவ்வளவு நேரம் அங்கு இருந்தான் என்று தெரியவில்லை.பின், ஒரு முடிவிற்கு வந்தவனாய் எழுந்து,அவள் சுடிதாரை எடுத்துக்கொண்டு,கீழே இறங்கி, அவன் அறைக்கு சென்றான்.
உறங்காமல், விடியலுக்காய் காத்திருந்தான்.
ஆர்திக்கு ,அவள் அன்னை, அலைபேசியில் விஷயம் தெரிவித்திருந்தார்.
அதனால்,அன்று மாலை பயத்துடனேயே வீடு வந்தாள், மாமியார் என்ன சொல்வார்களோ, என்று.
அதிசயிக்க தக்க வகையில், அகிலாண்டம் ஒன்றும் சொல்லவில்லை,உன் தந்தை வந்து, கீர்த்தியை கூட்டிக்கொண்டு சென்றார்,என்று மட்டும் தகவல் தெரிவித்தார்.
'ஹப்பா',என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் ஆர்த்தி.
அவளுக்கு,திட்டு எல்லாம், தன் அம்மாவிடம் தான் கிடைத்தது.
அவ ஒருத்தனை காதலிக்குறது கூட தெரியாம, இவ்ளோ நாள் இருந்துருக்க,ஒரே வீட்டுக்குள்ள.இது தான் நீ, அவளை பார்த்துக்கொள்ளும் லட்சணமா?? என்று வெளுத்து வாங்கிவிட்டார்.
அவள் துணிகள் எல்லாம் அங்கு தான் இருக்கிறது,நீ எப்போது வருக்கிறாயோ, அப்பொழுது கொண்டு வா என்று சொல்லி விட்டார் மீனாட்சி.
இந்த விஷயம் ஏதும் ஆரவ்க்கு தெரியாது.இவளும் சொல்லவில்லை,அகிலாண்டமும், கீர்த்தி,அவள் அப்பாவுடன் சென்றிருக்கிறாள் என்று மட்டும் தகவல் சொன்னார்.அவரிடம் கேள்வி கேட்டு பழக்கம் இல்லாததால்,ஏதோ வேலை போல,என்று நினைத்துக்கொண்டான்.அதற்கு மேல் யோசிக்கவில்லை.
மறுநாள் வழக்கம் போல, ஆரவும் ஆர்த்தியும், கடைக்கு கிளம்பி சென்றார்கள்.
அகிலாண்டம் ஹாலில் அமர்ந்திருந்தார்.மாமி, சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருந்தார்.
அவன் அறையில் இருந்து, வெளியே வந்த பார்த்தி,
அவர் முன் வந்து நின்று,
"உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்.."
அவன் குரலில், நிமிர்ந்து பார்த்தவர்.
சுற்றும், முற்றும், பார்த்து விட்டு,
"என் கிட்டேயா பேசுன??"
கண்களில், போலி ஆச்சர்யம் காட்டினார்.
அவன், பதில் ஏதும் கூறவில்லை.
"உனக்கு, என்னை எல்லாம் கண்ணுக்கு தெரியாதே.எப்போவும், மதிக்காம,கெத்தா,மகாராஜா மாதிரி சுத்துவ..இன்னிக்கு மட்டும், அதிசயமா பேசனுமுன்னு சொல்லுற..திருச்சிக்கு வெள்ளம் ஏதும் வந்துட போகுது.."
குரல்,பாவனை, அனைத்திலும், நக்கல்,கிண்டல், ஏளனம், எல்லாம் நிரம்பி வழிந்தது.
பல்லை கடித்து, தன் கோபத்தை அடக்கினான்.
"சரி சொல்லு,என்ன பேசணும்..??சீக்கிரம் சொல்லு??..எனக்கு வேலை இருக்கு, கடைக்கு கிளம்பணும். "
ஒரு நீண்ட மூச்சு விட்டு,தன்னை சமாதானபடுத்திக்கொண்டவன்.
"நானும், கீர்த்தியும், விரும்புறோம்.கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறோம்.அவங்க அப்பா கிட்ட பேசி..எங்க கல்யாணத்தை நடத்தி வைங்க.."
எந்த வித முன்னறிவுப்பும் இன்றி, போட்டு உடைத்தான்.
அவன் பேசிமுடித்ததும்,வாய்விட்டு சிரித்தார் அகிலாண்டம்.
அவர் சிரிப்பு சத்தத்தில், மாமி வெளியே வந்து பார்த்தார்.
"எந்த கீர்த்தி??என் மருமகளுக்கு தங்கச்சியா??என் சம்பந்தி வீட்டு பொண்ணா??"
'அவளை, என் வழியே தான் உனக்கு தெரியும்,முதலில் எனக்கு உறவு என்று சொன்னார்..'
"எப்போவும் திமிரா சுத்துவ.இன்னிக்கு, என் கிட்ட கையேந்தி நிக்குற பார்த்தியா,இதை தான் நான் எதிர்பார்த்தேன். "
அவர் முகத்தில், ஆணவத்தின் பிரதிபலிப்பு.
"என்ன சொன்ன,நான் கீர்த்தி அப்பா கிட்ட பேசி,உங்க கல்யாணத்தை நடத்தனுமா??அவரே, உனக்கு பொண்ணு கொடுக்குறேன்னு சொன்னா கூட..கொடுக்க விட மாட்டேன்..தெரிஞ்சுக்கோ.."
கண்களை இறுக்கி மூடி.. பின் திறந்தவன் கண்கள், சிவந்திருந்தது.
"உங்களுக்கு இப்போ என்ன வேணும்??நான் இங்க,இந்த வீட்டுல இருக்க கூடாது..அவ்ளோ தானே,நான் போய்யுடுறேன்..நீங்க ,எங்க கல்யாணத்தை மட்டும் முடிச்சு வைங்க.அப்புறம், உங்க வழிக்கே வர மாட்டேன்."
அவன் சொன்னது கேட்டு,உதடு பிதுக்கி,
"ஹ்ம்ம்..அவ்ளோ பிடிக்குமா,உனக்கு அவளை. இவ்ளோ நாள், உன்னை நான் விரட்ட போட்ட திட்டத்தை எல்லாம் முறியடிச்சு,இங்க, என் டென்சனை ஏத்திக்கிட்டு,உக்காந்துருந்த…
இப்போ, அவ வேணுமுன்னதும்,இங்க இருந்து, போறேங்குற,என்ன வேணாலும் செய்வ போலையே அவளுக்காக..
இது தான்,இது தான் வேணும் எனக்கு....உனக்கு அவளை, அவ்ளோ பிடிக்கும்னா,நிச்சயம் அவளை, உன் கூட சேர விட மாட்டேன்.இல்லைனாலும் உன்னை சேர விட மாட்டேன் தான், ஆனா, இப்ப புரிஞ்சுரிச்சு..அவ இல்லைன்னா உனக்கு எவ்வளவு வலிக்கும்னு.."
பொங்கிய கோபத்தை அடக்கி,இது கோபப்படும் நேரமில்லை என்று, மனதை சமாதானபடுத்தி,
"நான் உங்களை என்ன பண்ணேன்??,ஏன் இவ்ளோ கோவம் என் மேல.. ??நான் எந்த தப்பும் செய்யலியே..??"
"நீ பிறந்ததே தப்பு.."
"அது என் தப்பு இல்ல.."
"ஹ்ம்ம்..உன் தப்பு இல்ல..உன் அப்பன் ஆத்தா தப்பு.ஆனா,அவங்களுக்கு தண்டனை கொடுக்க முடியலையே.உன் ஆத்தா, உடனே போய்ட்டா,உன் அப்பனை, முடிஞ்ச வரை தண்டிச்சும்,என் மனசு ஆறலியே..அவரையே உரிச்சு வைச்ச மாதிரி,மூக்கும்,முழியுமா பிறந்துருக்கியே..
உன்னை பாக்குற சொந்தக்காரங்க,தெரிஞ்சவங்க எல்லோரும்,யாரும் சொல்லாமலே,ஏகாம்பரம் பிள்ளையா நீ, அப்படியே இருக்கியென்னு சொல்லும் போது,எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா??காதுல ஈயத்தை காச்சி உத்துன மாதிரி.."
ஒரு கோப மூச்சு விட்டவர்.
"நீ,அவங்க காதலின் சின்னம் இல்லியா??அதான், அவரை மாதிரியே இருக்க..உங்க ஆத்தா, அவரை நினைச்சு, உருகி,உருகியே உன்னை பெத்துருப்பா..அவ்ளோ உருகுறவ,புருஷனை விட்டு தந்துருக்க கூடாது.விட்டு கொடுத்துட்டா, அதுக்கப்புறம், திரும்பியும் பார்த்துருக்க கூடாது..ரெண்டையும் செய்யலியே..
இரண்டாம் தாரங்குற, பெரிய காயத்தோட இங்க வந்தா, என் மாமியார்காரி, அவளும் இங்க தான் இருப்பா, அப்படிங்குறா.என் புருஷன் கண்ணு எல்லாம், எப்போவும், எந்நேரமும், அவ போற பக்கம் எல்லாம் போகுது,அவ அறை பக்கம் தான், அவர் பார்வை சுத்தும், எவ்வளவு வேலி போட்டு தடுத்துருப்பேன்..அப்போ, எவ்வளவு வலி தெரியுமா எனக்கு..
அந்த மனுஷன் காதல் முழுசும், உன் அம்மாக்கு மட்டும் தான்,என் கூட கடமையா தான் வாழ்ந்தார்.கடைசி மூச்சு வரை.
எப்போ சந்தர்ப்பம் கிடைக்கும்?? அவ கூட பேசலாம்னு சுத்துவர்.அவர் எண்ணம் முழுசும் அவ தான்.
சொந்த வீட்டுக்குள்ளேயே, காவல் காக்குற நிலைமை,யாருக்கும் வர கூடாது.
எவ்வளவு காவல் காத்து, என்ன ப்ரியோஜனம்??,எனக்கு அந்த, பழப்போன மஞ்சள் காமாலை வந்து,என் அம்மா அழுது சாதிச்சு, கூட்டிட்டு போனப்போ,உன் அப்பனும் ஆத்தாலும், அவங்க காதல் சின்னத்தை உருவாக்கிட்டாங்களே..என் காவல் எல்லாம் வீணாய் போச்சே..
அப்போ, எவ்வளவு வலி அனுபவிச்சுருப்பேன்..அதுவும், அவ அஞ்சு மாசம் கழிச்சு,நீ உறுதியா தங்குனதுக்கு அப்புறம், தெரியுது..
அப்போ நான் வேதனையில துடிச்சா, என் மாமியார்காரிக்கும்,உன் அப்பனுக்கும், அவ்வளவு சந்தோசம்…
குழந்தைக்காக தானே, இவளை கட்டுனோம்,தப்பு பண்ணிட்டோம்னு கூட யோசிச்சு இருப்பாரு,உன் அப்பா..
அதுக்கப்புறம், உங்க ஆத்தாவை,அவ அம்மா வீட்டுக்கு அனுப்பியும்,உன் அப்பா போறதை தடுக்க முடியலை.
அந்த நாட்களை நினைச்சா, இப்போ கூட மனசு ஆறலை..
நீ பிறந்ததும்,உன் அப்பா,உன் அம்மா கூடவே போய்டுவாருன்னு நெனச்சேன்..ஆனா, அவளுக்கு முடியாமை போய், அவ போய் சேர்ந்ததும்.உன் அப்பா திரும்பி வந்துட்டார்.வெறும் கையோட..
அப்போ தான்,அந்த மனுஷன், உன்னை எவ்வளவு வெறுக்குறார்னு தெரிஞ்சுது..காதல் மனைவி மேல, அம்புட்டு பாசம்.
அப்புறம் என் மாமியார்காரி, உன்னை இங்க தூக்கிட்டு வந்துட்டா..
அவளுக்கு தான், நான் சந்தோசமா இருந்தா பொறுக்காதே..இத்தனைக்கும், நான் அவ சொந்த அண்ணன் பொண்ணு..
மகனுக்கும், மாமா மகள்னு பாசம் இல்லை.அத்தைகாரிக்கும்,அண்ணன் பொண்ணுன்னு பிரியம் இல்ல..அப்படி இருந்துருந்தா, மகனுக்கு முதமுதலா பொண்ணு பார்க்கையில, நான் கண்ணுக்கு தெரிஞ்சுருப்பேன்..
எங்க அந்தஸ்து அப்போ இறங்கி இருந்துச்சு,அதுனால,அப்போ அவர் காதலுக்கு ஒத்துகிட்டு.பின்னாடி ,வாரிசு வேணுமுன்னு,ரெண்டாம் தாரத்துக்கு, எங்க வீட்டுல பொண்ணு எடுக்க வந்துட்டாங்க..
அப்போ அந்தஸ்து இடிக்கல போல..என் வீட்டுலயும்,என் விருப்பத்தை மதிக்காம,இங்க பிடிச்சு தள்ளிட்டாங்க..எல்லாம் பணம் தான் காரணம்,எல்லோருக்கும் பணம், அந்தஸ்து தான் முக்கியமா போச்சு..
அதுக்கு பிறகு தான் முடிவெடுத்தேன்..எந்த பணத்தை வெச்சு,என் விருப்பத்தை மதிக்காம, எங்க வீட்டுல இங்க தள்ளுனாங்களோ,எந்த பணத்தை மதிச்சு, என்னை முதல் தாரமா எடுக்காம, என் அத்தை, ரெண்டாம் தாரமா எடுத்தாங்களோ, அந்த பணம், என் கட்டுப்பாட்டுக்கு கீழ இருக்கணும்னு தான்..,
இந்த வீடு,சொத்து ,வீட்டு நிர்வாகம் எல்லாம்,எல்லாத்தையும்,எனக்கு கீழ கொண்டு வந்தேன்..உன்னையும், உன் அப்பனையுன், ஒட்ட விடாம செஞ்சேன்..
உன் சேர்க்கை சரி இல்லை..நடவடிக்கை சரி இல்லைன்னு.. அது,இதுன்னு சொல்லி,அவர்கிட்ட இருந்து, உனக்கு,திட்டு,அடி எல்லாம் கிடைக்கும் படி செய்தேன்..அதுக்கு நான், ரொம்ப சிரம படலை, ஏன்னா ,உன்னால, அவர் காதல் மனைவி இல்லாம போய்ட்ங்கன்னு, அவர் மனசுல ஆழமா விழுந்த விதையை,நான் தண்ணி ஊத்தி மரமாக்குனேன்.. அவ்ளோ தான்..
ஆனா ,உன் படிப்பை மட்டும், என்னால தடுக்க முடியலை, என் பசங்க எல்லாம் சுமாரா படிச்சா.நீ, முதல் மார்க் வாங்கிட்டு வர..அதை வச்சு, அந்த மனுஷனுக்கு உன்னை பிடிச்சுடுமோன்னு,அதை தடுக்க பார்த்தா, எல்லாத்துக்கும் ஒத்துக்குற மனுஷன், அதுல நிலையா நின்னுட்டார்..
எந்த கிளாஸ் போனாலும் தடுத்தேன்,அந்த வாத்தியார்களே வந்து,நல்லா கத்துக்குற பிள்ளையை, ஏன் நிறுத்துறீங்கன்னு கேட்டு, கூட்டிட்டு போனாங்க..அதுல மட்டும் எனக்கு படு தோல்வி..
இது பத்தாதுன்னு,உன் அப்பா..நீ படிச்சு முடிச்ச கையோட, கடையை தூக்கி, உன் கையில கொடுக்க திட்டம் போடுறார்.
அதுக்காக தான்,நான் எவ்வளவு தடுத்தும்,உன்னை தடை விதிக்காம, படிக்க வச்சுருக்கார்..
எவ்ளோ அழகா திட்டம் போட்டுருக்கார்.. யாரு கிட்ட,இந்த அகிலாண்டேஸ்வரி கிட்டேயா, அவர் திட்டம்..??
உன் கிட்ட, எழுதி வாங்க வச்சுட்டேன்ல..அவர் வேலையை, என் கிட்டேயே கட்டுறாரா..??
அதுக்கப்புறம் ,திடீருன்னு மகன் மேல பாசம் பொங்கிடுச்சு..கடைசி காலத்துல புத்தி வந்துருச்சு போல,
குற்ற உணர்வுலயே தவிக்கிறார்..
உன்னை பார்க்கையில, கண்ணுல பாசம் பொங்குது..தூங்கையில கூட, மன்னிச்சுடுடா பார்த்தி,தப்பு பண்ணிட்டேன்னு புலம்புறார்..
நான் எழுதி வாங்குன விதத்துல,சின்ன வயசுல இருந்து உன்னை நடத்துனது தப்புன்னு புரிஞ்சுடுச்சு போல, மனுஷனுக்கு..ஆனா ரொம்ப லேட்.. என்ன பண்ண..??
அந்த துக்கத்துலேயே, உடம்பு சரி இல்லாம போச்சு..கடைசி நேரத்துல, போற மனுஷன் சும்மா போகாம,உன்னை, இந்த வீட்டை விட்டு அனுப்ப கூடாதுனு, சத்தியம் வேற, அதுவும், உன் முன்னால..என் பிள்ளைங்க எல்லோர் முன்னாலும் கேக்குறார்..மறுக்க முடியாத நிலைமையில..
கத்தி முனையில் நிக்க வச்ச மாதிரி..
வேற வழி இல்லாம, சத்தியம் பண்ண வேண்டியதா போச்சு..
நான் தானே அனுப்ப கூடாது??..அவனா போகலாம் இல்ல..??போக வைக்குறேன்னு..
உன்னை ஒதுக்கி வச்சு.. எல்லோர் முன்னயும் அவமானபடுத்தி..எவ்வளவு செஞ்சேன்..ஏன்,?? ஆரவ் கல்யாணத்துக்கு கூட சொல்லாம..யாரையும் சொல்ல விடாம..என் பிள்ளைங்களை ஒட்ட விடாம, அவ்ளோ செஞ்சும்..நீ அசைவனானு, மலை மாதிரி நின்னுட்டு…
இப்போ ,நேத்து வந்த ஒருத்திக்காக, இங்க இருந்து போறேன்னு சொல்லுற பாரு.. இதான் வேணும் எனக்கு..
இந்த விஷயம் முன்னவே தெரிஞ்சா,அப்போவே, உன்னை வெளிய அனுப்பி இருப்பேன்..
இப்போ ஒன்னும் கெட்டு போகலை..உன்னை வெளிய அனுப்புறதை விட ,பெரிய தண்டனை ஒன்னு கொடுக்கப் போறேன்..
கீர்த்தியை உனக்கு கிடைக்க விடாம செஞ்சா, அதை விட பெரிய அடி, உன் வாழ்க்கையிலேயே இருக்காது இல்ல..அதை தான் செய்ய போறேன் .
…தொடரும்..