கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிக்பாஸ் – 5 - நாள் – 16 (19.10.21)

siteadmin

Administrator
Staff member
பிக்பாஸ் – 5

நாள் – 16 (19.10.21)

கிராமத்துல கொல்லைக்கு போற குரூப்பு ஒன்னு இருக்கும். விடிகாலையில எந்திரிச்சு ஆத்தோரமா போயி உக்காந்து ஊர் பொரணி பூராம் பேசி முடிச்சுட்டு வருவானுங்க. அதே மாதிரி இங்க ப்ரியாங்கா குரூப்பு அதிகாலை 5 மணிக்கு ஒரு மீட்டிங் போட்டுட்டு இருந்தானுங்க. அதாவது ப்ரியாங்கா சிபிய இந்த வீட்டு சி.எம் ஆக்குனதுக்கு காரணம் அவனோட நல்ல குணமோ இல்ல நல்லது செய்வான்ற எண்ணமோ இல்லையாம். ராஜுவ நாமினேஷனுக்கு கொண்டுவந்தா அவனுக்கு வீட்ல எத்தனை நாமினேஷன் ஓட்டு விழும்னு பாத்து அவன் பலத்த எடை போடவாம்.

இசை அதோட ஏழ்மைய யூஸ் பண்ணி பரிதாபம் தேடிக்கிதாம். இப்படித்தான் இன்னசென்ட் இசபெல்லாவாக நடித்துக்கொண்டிருந்த தாமரையை ப்ரியாங்கா மேடம்தான் ரட்சித்து அவங்கள நல்வழிப்படுத்தி இப்ப மக்கள் மத்தியில உலவ விட்டுருக்காங்களாம். ஆனாலும் தாமரை இப்ப ப்ரியாங்கா மேடத்தோட பொட்டு, பவுடர், ஜடை குஞ்சத்தையெல்லாம் கேட்டு வாங்குறாங்கலாம்...அதுக்கு ஒருநாள் திருவிளையாடுவாங்களாம். இப்ப அவங்க ரட்சிக்க வேண்டியது இசையத்தானாம்.

அபிஷேக் சாருக்குக் கூட இசை பேசுறது அபஸ்வரமா கேக்குதாம். மத்தவங்க பேசுறது புரியலன்னா அப்ப நீ பேசுறதும் மத்தவங்களுக்கு புரியனுன்றதுதான் புலிப்பாணி சித்தர் பாடல்கள்ல சொல்லப்பட்டிருக்கும் பேரண்ட உண்மைன்னு பொங்கிட்டிருந்தார். ஆனா டேய் எந்த சீசன்லையும் இப்பிடி ஒரு 2 பேர பாக்கலடா. முழம் போட்டு பேசுவானுங்க ஆனா இவ்வளவு சீப்பா பேசிக்கிறது இந்த சீசன்ல மட்டுந்தான்டா. ப்ரியாங்கா & அபியோட பாடி பேச்சும் சரி வாய்ப்பேச்சும் சரி மத்தவங்கள வாழத்தகுதியானவங்களா இல்லையான்னு செக் பண்ற குவாலிட்டி இன்ஸ்பெக்டர் மாதிரியே நடந்துக்குறானுங்க. இதுல கஷ்டம் என்னன்னா மாநிலத்துல நாம இவனுங்களுக்கு ஓட்டு போடலேன்னாலும் மத்தியில இருக்குற விஜய் டீவி ஓட்டு மிஷின்ல விளையாடி இவனுங்கள தங்க வச்சிருவான். இது இன்னைக்கு நேத்தா நடக்குது ?

“சின்ன மச்சான்” பாட்டு போட்டானுங்க.
இவனுங்களுக்கு அலாரப்பாட்டு ஒண்ணுதான் கேடு ! அசஞ்சுகிட்டே திரிஞ்சான் மூடு !

ராஜூ : ஏண்டா கோமுட்டித் தலையா அபி...அன்னைக்கு என்னமோ ஆட்டம் ஆடப்போறேன்...ஒலிம்பிக்குல ஓடப்போறேன்னு பொலம்பிட்டு இருந்த...ஆனா காலையில பாட்டுக்கு கூட காலசைக்க மாட்டேங்குறியே ?

அண்ணாச்சி : அதான் எல்லாத்துக்கும் சேத்து வாயசைக்கிறானே...!

அபி : ஆட்டம் ஆடுறதப் பத்தி இல்ல...ஆனா எல்லாரையும் வெளிய அனுப்பிருவேன் அதான் பாக்குறேன்

ராஜூ : ஏன் வாச்மேனா நீ ? எல்லாரையும் அனுப்பிட்டு கதவ சாத்த. சும்மா எதையாச்சும் ஓளராதடா...//

அண்ணாச்சி, ராஜூ, அபிநய், அக்ஷரான்னு ஒரு கூட்டம் டைனிங்க் டேபிள்ல உக்காந்திருந்துச்சு. ராஜூ ஆடிஷன் வந்த அண்ணாச்சிக்கு டாஸ்க் குடுத்து நடிக்க சொன்னான்.

நல்லாத்தான் இருந்துச்சு. இப்பிடி ஏதாச்சும் என்டெர்டெயினிங்கா பண்ணோமா வச்சோமான்னு இல்லாம...புத்திசாலித்தனமா விளையாடுறேன்னு சொல்லி பொழுதுக்கும் கசகசன்னு திரியுதுங்க அபியும், ப்ரியங்காவும். நாரோட சேந்த பூவும் நாறும்ன்ற கதையா இந்த கோமுட்டித் தலையன் அபி கூட சேந்து ப்ரியாங்காவும் அவன மாதிரி மாறி நிக்குது.

இப்ப பிக்பாஸன் ஒரு லக்ஸூரி டாஸ்க்க தூக்கிட்டு வந்தாப்ல. அதாவது இந்த வீடு ஒரு அருங்காட்சியகமாம் (மிருக காட்சி சாலைன்னு சொல்லியிருக்கலாம்) இங்க 5 காயின் வப்பாங்களாம். அத திருடுற ஆளு நாமினேஷன்ல இருந்தா தப்பிச்சுக்கலாமாம். இல்லேன்னா நாமிநேஷன்ல இருக்குற ஆளுங்கள காப்பாத்திக்கலாமாம். காயின திருடலாமாம். திருடும்போது மாட்டிக்கிட்டா பாதாள சிறையாம். எப்பவும் வைக்குற திருட்டு டாஸ்க்குதான். இந்த தடவ மானே தேனே சேத்துருக்கானுங்க.

இங்க ஆரம்பிச்ச குழப்பந்தான். யாரு திருடுனா, யாரு வச்சிருக்கா, யாரு கேமராகிட்ட காமிச்சா, இப்பிடி எதுவுமே சரியா தெரியல. எடிட்டிங் டீம் எதுவும் பாய் வீட்டுக் கல்யாணத்துக்கு போயிட்டானுங்களான்னு தெரியல. ஒண்ணும் புரியல.

இதுல தனித்தனியா எடுக்க நெனச்சா தம்படி கிடைக்காதுன்னு குழுவா பிரிஞ்சு திருட ஆரம்பிச்சானுங்க.

அய்க்கி மொத காயின எடுத்தா....ஆனா அந்த காயின இப்ப அக்ஷரா வச்சிருக்கா. அக்ஷரா வச்சிருந்த காயின பத்தி அய்க்கிக்கு தெரியாது. பாவனி எடுத்த காயின சுருதி பாத்தா ஆனா ப்ரியாங்கா எடுத்த காயின் மது குடுத்தது. மது குடுத்த காயின ப்ரியாங்கா வச்சிருந்தாலும் அது கேமராகிட்ட சொல்லாததால செல்லாது. அபி காயின் எடுத்த விஷயம் பல பேருக்கு தெரியாது. ஏன் அவனுக்கே கூட தெரியாது. இப்ப பாவனி மறச்சு வச்ச காயின் சுருதிக்கு தெரியும் அவளுக்கு தெரியுன்றது அபினய்க்கும் தெரியும். இசைய காப்பாத்ததான் அய்க்கி காயின் எடுத்தான்னு ராஜூவுக்கு தெரியும். இடையில வருண் வேற ஒரு காயின வச்சிருந்தான். ஆனா பாவனி எடுத்த காயின மூடுமுனி எடுத்தத அபினய் கண்டுபிசிச்சுட்டான். அதநால அவன பாதாள சிறைக்கு அனுப்பிட்டாங்க. மது குடுத்த காயின ப்ரியாங்கா வச்சிருக்கான்னு அபிக்கு தெரியும். மூடு முனிகிட்ட இருந்து வாங்குன காயின மறுபடியும் உள்ள வைக்க. அத பாவனி எடுத்து சுருதிக்கு குடுத்தத ராஜூ பாத்துட்டு புகார் சொன்னத பாக்கும்போது இந்த 5 காயினும் இந்த வீட்ல உள்ள 16 பேர்கிட்டையும் இருக்குன்னு தெரிய வருது.

ஆனா காயின எடுத்த எல்லாரும் சொல்லிவச்ச மாதிரி தான் நாமினேசன்ல இருந்தாலும் பரவாயில்ல தமிழ்நாட்டுல தாமரைய காப்பாத்தியே ஆகனும்னு அர்ஜுன் சம்பத் மாதிரி குதிச்சிட்டு இருந்தானுங்க. இது தாமரைக்கே அதிர்ச்சி.

“எல்லாருமே நம்மள காப்பாத்த போராடுறேன்னு சொல்றானுங்க. அப்ப எவண்டா நாமினேட் பண்ணது?”ன்னு அதுக்கு அக்மார்க் குழப்பம். கோமுட்டித் தலையன் அபியெல்லாம் ஒரு கட்டத்துல தாமரைய காலுலயே விழ வச்சுட்டான். சரி அவன் காயின குடுப்பான்னு பாத்தா ஊர்ல உள்ள ஆளுககிட்டையெல்லாம் போயி “உங்க காயின குடுத்தா தாமரைய காப்பாத்துவேன்”னு பிச்சையெடுத்துட்டு இருந்தான்.

வருண், அக்ஷரா, சிபி உக்காந்திருக்க அங்க வந்தான் அபிஷேக்

அபிஷேக் : வருண் உன் காயின அக்ஷராவுக்குதான் குடுப்பன்னு எனக்கு தெரியும்

வருண் : நான் அவளுக்கு குடுப்பேன்னு உனக்கு எப்பிடித் தெரியும்?

அபிஷேக் : உங்கள பத்தி எனக்கு எல்லாம் தெரியும்
சிபி : சரி நீ வரதுக்கு முன்னாடி உன்னய இங்க கேவலமா திட்டுனது யாருன்னு சொல்லு பாப்போம்

அபிஷேக் : யோசிக்காம சொல்லுவேன்....அக்ஷரா

வருண் : தப்பு....! 3 பேருமே கேவலமா பேசுனோம். இப்ப நீ இங்க வந்துட்டதால அங்க உன்ன எல்லாம் கேவலமா பேசிட்டு இருப்பானுங்க

அக்ஷரா : அவன் எனக்கு குடுப்பான்னு உங்கிட்ட யாரச்சும் சொன்னாங்களா ? இப்ப அவன் குடுக்க மாட்டானே

அபிஷேக் : அதுக்குதான் சொன்னது. இப்ப அது சும்மாதான இருக்கும் எனக்கு குடுத்தா தாமரைய காப்பாத்துவேன்.

வருண் : நீ ஏன் தாமரைய காப்பாத்தனும் ?

அபிஷேக் : (மை.வா : அப்பத்தான் நான் என்னய காப்பாத்திக்க முடியும்) அது வந்து அது நடகத்துறைக்கே பெருமை சேர்த்து...தமிழ்நாட்டு மானத்த.....என் காயின குடுத்து...அய்யோ ரொம்ப ரோல் ஆகுதே...சரி அங்க ஒரு குரூப்பு இருக்கு நான் அவனுங்க கிட்ட கேக்குறேன்....//

இங்க ராஜூ, தாமரை, அண்ணாச்சி, இசை இருக்க...! ராஜூ தாமரைய பாத்து “உன்ன காப்பாத்துனா சிம்பதில அவனுங்களுக்கு ஓட்டு கிடச்சிடும்னு ப்ளான் பண்றானுங்க”ன்னு உண்மைய உடைக்க, “உண்மையாவா?” ன்னு தாமரை கேக்கவும், “பின்ன, சாப்ட்ட தட்ட கழுவுனாலே கவர்னர் கையால பதக்கம் வேணும்னு சொல்லுவானுங்க. இவனுங்க காரியமில்லாம காயப்போடுவானுங்கன்னு நெனைக்கிறியா? பூராம் பிராடு பயலுக”ன்னு சொன்னாப்ல அண்ணாச்சி.

இதுல திடீர்னு அபிஷேக் வந்து ராஜூகிட்ட

அபி : சிபிய கேப்ட்டனாக்க ஒரு ஆட்டம் ஆடுனேன்ல....

ராஜூ : டேய்....நீ எப்ப ஆடுறன்னு இனிமே ஆடுறதுக்கு முன்னாடியே சொல்லிரு....

அபி : இல்ல உன் மாலைய எடுத்து அவனுக்கு போட வச்சேன்ல...

ராஜூ : ஓ....அதான் ஆட்டமா ? ஏண்டா முட்டா பாண்டா...அதுக்கு நேரடியா அவன் கழுத்துலையே போட சொல்லியிருக்கலாம்ல? என் கழுத்து என்ன ஹேங்கரா ? ஆடுறது பூராம் மயிராட்டம்...இது மைக்கேல் ஜாக்சன் ரேஞ்சுக்கு ஆட்டம் பாத்தியா ஆட்டம் பாத்தியான்னு...போட அங்குட்டு //


இதுவரை எல்லா சீசன்லையும் வீட்ல ஏதாச்சும் ஒரு பொதுவான சம்பவம் நடக்கும் அத சுத்தி அன்னைக்கு பூராம் கலகலப்பா கைகலப்பு எல்லாம் நடக்கும். ஆனா இந்த சீசன்ல அப்பிடி ஒரு சம்பவமும் இல்லாம போனதுக்கு காரணம் ப்ரியாங்காவும், அபிஷேக்கும். வந்த நாளுல இருந்தே ஸ்டார்டஜி பேச்ச ஆரம்பிச்சு இப்ப எல்லாருமே அதே மோடுல இருக்கானுங்க.
இப்பிடி இருக்குற வரை இந்த சீசன் கண்டந்தான்.
 
Top