நித்தமொரு பொழுதாய்
உந்தன் மார்பின் மீது
சாய்ந்த தருணங்கள்
மடிமீது தலைவைத்து
நீ கோதிவிட
உறங்கிய நிமிடங்கள்
தோள்மீது முகம் வைத்து
இறுக்கி அணைத்து வேளையிலே
தேற்றிய நொடிகள்
இவையெல்லாம் இப்பொழுது
மனதின் ஓரத்தில்
ஊஞ்சல் கட்டி ஆடுகிறதே
மீண்டும் கிடைக்காத
அவரோடு நானிருந்த
நினைவில் நீங்கா மணித்துளிகள்
இறைவனிடம் கேட்கின்றேன்
இரக்கம் கொள்ள வேண்டி
இமைகளின் நீருடன்
மகிழ்ந்திருந்த காலத்தை
மறுபடியும் வாழ்ந்திட
எனக்காக வாழ்ந்தவருடன்.....
- சேதுபதி விசுவநாதன்
(தந்தையின் மடிமீது தலைவைத்து உறங்கிட நினைக்கும் அனைத்து மகன்களுக்கும் சமர்ப்பணம்)
உந்தன் மார்பின் மீது
சாய்ந்த தருணங்கள்
மடிமீது தலைவைத்து
நீ கோதிவிட
உறங்கிய நிமிடங்கள்
தோள்மீது முகம் வைத்து
இறுக்கி அணைத்து வேளையிலே
தேற்றிய நொடிகள்
இவையெல்லாம் இப்பொழுது
மனதின் ஓரத்தில்
ஊஞ்சல் கட்டி ஆடுகிறதே
மீண்டும் கிடைக்காத
அவரோடு நானிருந்த
நினைவில் நீங்கா மணித்துளிகள்
இறைவனிடம் கேட்கின்றேன்
இரக்கம் கொள்ள வேண்டி
இமைகளின் நீருடன்
மகிழ்ந்திருந்த காலத்தை
மறுபடியும் வாழ்ந்திட
எனக்காக வாழ்ந்தவருடன்.....
- சேதுபதி விசுவநாதன்
(தந்தையின் மடிமீது தலைவைத்து உறங்கிட நினைக்கும் அனைத்து மகன்களுக்கும் சமர்ப்பணம்)