கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மாற்றிக்கொள்ள முடியவில்லை

வழிமாறி சென்றுவிட்ட
வாழ்க்கையின் பாதைகளில்
வசந்தத்தை பெற்றேனடி
உந்தன் அன்பினால்.....

கானல்நீராய் வழிந்த
கண்ணீர் துளிகளில்
சிரிப்பும் வருகிறது
உன்னை கண்டபின்பு

அழுத வேளையிலே
ஆறுதலாய் உன் மொழிகள்
அப்படியே உயிர் பெற்றது
என் மீது காதலும் உனக்கு

ஆயினும்........

கிழிந்த ஓவியங்கள்
உடைந்துபோன சிறகுகள்
கலைந்து போன கோலங்கள்
காயம்பட்ட சுவடுகள்

மேல்பூச்சில் மறைக்கப்பட்டு
ஆசையோடு அனைத்தாலும்
அவளின் உருவத்தையே
கண்ணில் காண்கிறேனடி

முள்ளாய் அவள் நினைவும்
விலக்கமுடியா உன் அன்பும்
சத்தமில்லாமல் கொல்கிறதே
தீயின் மீது புழுவாக நானடி

போதுமடி கண்மனியே

உன் மொத்த காதலும்
என் மீது சாய்ந்தாலும்
என்னுள்ளம் மறவாத
என்னவளின் காதலதை.!!!

கார்மேகம் கலைந்தாலும்
கண்ணீர் குறையவில்லை
கனவுகளில் வாழ்கின்றேன்
விட்டுச்சென்ற அவளோடு

மன்னித்து விடு தோழியே
மரணத்தை கூட ஏற்றுவிடுவேன்
மனதில் இன்னொருத்தியை
மாற்றிக்கொள்ள முடியவில்லை......

- சேதுபதி விசுவநாதன்
 
Top