கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

முற்றதில் விழுந்த மழைத் துளிக்ள்....என் புதிய தொடர் ஆரம்பம்.

sankariappan

Moderator
Staff member
புதிய தொடர் பற்றி சில வார்த்தைகள்

எல்லோருக்கும் முற்றத்தில் விழும் மழை பிடிக்கும். சம்பத், மஞ்சு ஆஷா, செய்வி, கனிகா சரவனன்.....இவர்களை சந்திக்கப் போகிறீர்கள்.

சம்பத்...மறைந்து போன மனைவியின் நினைவாக வாழ்கிறவர். "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?" என்பது அவர் மனநிலை.

சரவணன்...அவர் ஒரே மகன். செல்வி என்ற மனைவியோடும்...ஆஷா என்ற மகளோடும் போராட்டம் நிறைந்த வாழ்க்கை அவனுக்கு "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி..." அவனுக்குரிய பாட்டு.

செல்வி....நல்ல மனதை சேர்க்கையால் தவறவிடும் கோழை. "எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்கை சரிதான் போ... போ..." என்பது அவள் வரிகள்.

சீதா.....ஈரமானா ரோஜா அவள். ""இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்." அவளின் ராகம். அவளும் செல்வியும் நட்பூ பூக்கள்.

ஆஷா அஞ்சலி.....இரு குட்டி மலர்கள்

கனிகா...வெள்ளை கிராமத்து மலர். "உலகம் பிறந்தது எனக்காக..." என்று பாடும் அன்புச் சுரங்கம்.

இவர்களின் போராட்டத்தையும் மழை தூவலான பாதையும் ஜூலை முதல் தெரிந்து கொள்ளுங்கள்.
அன்புடன் உங்கள் விமர்சனம் வேண்டும் சங்கரி அப்பன்
 
Top