கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஸ்ரீலக்ஷ்மி

siteadmin

Administrator
Staff member
ஸ்ரீலஷ்மி என்கிற புனைப்பெயரில் இணைந்து எழுதும் லதா, உஷா சகோதரிகள் நாங்கள் என்று எங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதில் முதலில் பெருமையடைகிறோம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த எங்களின் எழுத்துப்பணி, இன்றுவரை தடங்கலில்லாமல் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது எல்லாம் வல்ல இறைவன் அருளால்..

சென்னையைச் சேர்ந்த நாங்கள் தற்போது வசிப்பது பெங்களூரூவிலும், பூனேயிலும்.

இதுவரை 24 நெடுங்கதைகளும், 13 குறுநாவல்களும் அச்சேறி, புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கின்றது.

எங்களின் ஒவ்வொரு கதைக்களமும் புது விதம்! ஒவ்வொன்றும் ஒரு புதிய பார்வையில் வித்தியாசமான கோணத்தில் கதை பேசும். புதிய சிந்தனைகள், நல்ல கருத்துக்கள் படிப்பவர்களின் மனதை பண்படுத்தும் விதமாய்க் கதைகள், மனதை வருடும் மயிலிறகாய் இருக்கும் படைப்புக்கள். அவ்வகையில், எங்களின் புத்தகங்களைப் படித்திருப்பவர்கள் நிச்சயம் அதை உணர்ந்திருப்பார்கள்.

எழுத்துப்பணி ஆரம்பிப்பதற்கு முன், நாங்களும் நல்லதொரு வாசகிகள்தான்.

எழுத்தாளர்கள் என்ற அடையாளத்துடன் மட்டும் நில்லாமல், அடுத்ததாய் பதிப்பகத்துறையிலும், தரமான புத்தங்கங்களை ஸ்ரீபதிப்பகம் மூலம் பதிப்பித்து வழங்குகிறோம். பல தரமான எழுத்தாளர்களை இந்த தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் புதினங்களை தொடர்ந்து அச்சிட்டு வருகிறோம்.

ஏற்கனவே இங்கே பலருடன் எங்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும், இங்கே உங்களுடன் மீண்டும் இணையதளம் மூலம் இணைய வந்துள்ளோம்.

எங்களுக்காகவும், எங்களைப் போன்ற பல எழுத்தாளர்களுக்காவும், பிரத்யேகமாக ஒரு தனித்தளத்தை இப்பொழுது தொடங்குகிறோம்.
 
Top