கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

2.செல்லாத்தியே நீதானடி

Gayathrirajkumar

Moderator
Staff member
அதெல்லாம் எனக்கு தெரியும் நீ அமைதியா வா"என்றவன் முழுமூச்சில் வீட்டை அடைந்தான்.
"அப்பாடா...தப்பிச்சோம்"என நினைத்தது யாழினியின் மனம்.
வேகமாக உள்ளே நுழைந்தவன் கூலர்ஸை கழற்றி சோபாவில் எறிந்துவிட்டு வேகவேகமாய் ரூமிற்குள் நுழைந்தான்.இவளும் அவனுடன் வேகமாக ரூமிற்குள் நுழைந்தாள்.
"ஏய் எதுக்கிப்ப ரூமுக்கு வர்ற...மனுஷனை தனியா நிம்மதியா கொஞ்சநேரம் இருக்கவிடமாட்ட"என்றான் தேவ்.
வேகமாக அங்கிருந்த வந்தவள் பளார் பளாரென தேவின் இரு கன்னங்களிலும் அரைந்தாள்.
தேவ் மிரட்சியுடன் அவளை கண்சிமிட்டாமல் பார்த்தான் இரு கன்னங்களிலும் கைவைத்தவாறு.
அவள் தான் ஃப்ரீஹேர் விட்டிருந்த தலைமுடியை அள்ளி கொண்டையாக முடிந்தவள் ஆக்ரோஷமாய் பேச ஆரம்பித்தாள்.
"என்ன ஓவரா பண்ணிட்டு இருக்க,நானும் ஒரு வருடமா எல்லாத்தையும் பொறுத்துப்போய்ட்டு இருக்கேன்...அப்புறம் எதுக்கு என்னைய கல்யாணம் பண்ணுன"
"நீ அப்ப திருந்திடுவ இப்போ திருந்திடுவனு ஒருவருடமா வெயிட் பண்ணிட்டு இருக்கிற, என்னைய பார்த்தால் கிறுக்கச்சி மாதிரி இருக்கா"
"இல்...லை "என்றவனை.
"ஸ்ஸ்ஸ் வாயமூடு இப்போ இது என்னோட டர்ன் நான் பேசறதை மட்டும் நீ கேளு"என்றாள்.
அவன் அப்படியே ஆணி அறைந்தார்போல அவளையே உற்றுநோக்க ஆரம்பித்தான்.
"உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையானு எனக்குத்தெரியலை...ஆனால் நான்கு வருடங்களுக்கு முன்னாடி கொல்கத்தாவில் இன்டஸ்ட்ரியல் மீட் நடந்தது ,அங்கே நீயும் வந்திருந்தீல" என்றாள் யாழினி.
"ம்ம்ம்"என தலையசைத்தான் தேவ்.
"அங்கே நானும் வந்தேன். உன்னுடைய கம்பீரம்,ஆளுமைத்திறமை,பொறுப்புணர்ச்சி எல்லாம் என்னை கவர்ந்தது.இப்படியொரு நேர்மையானவனைத்தான் திருமணம் செய்துக்கனும் என்ற எண்ணமும் வந்தது
என் அப்பாவும் நீ முதலில் வேலை பார்த்த இன்டஸ்ட்ரியின் முதலாளியும் நெருங்கிய நண்பர்கள்.உனக்கு அவர்தான் சர்டிபிகேட் வேறு கொடுத்தார் நல்லவன்,வல்லவன் என்று.
இதுவே என்னை உன் பின்னால் சுற்ற வைத்தது.உன்னைதான் திருமணம் செய்துகொள்ளவேண்டுமென என் தந்தையிடம் நான் கேட்க.நான் ஆசைப்பட்டதையெல்லாம் நிறைவேற்றும் என் தந்தை சம்மதம் சொன்னார்.
அதற்குள் உனக்கு திருமணம் என்பதை கேள்விபட்டு என் காதலை சுக்குநூறாய் உடைத்துவிட்டேன்.உன் திருமணம் முறிந்துவிட்டது என்ற செய்தி என் காதில் விழுந்திட,மனதில் உடைந்த பிம்பங்களை ஒன்றாய் சேர்த்தேன்.நீயாகவே என் தந்தையின் இன்டஸ்ட்ரிக்கு வேலைக்கு வேறு சேர்ந்தாய் எல்லாம் கடவுளின் செயலென நம்பினேன்.என்றும் உனக்கான காதல் என்னிடம் மட்டும்தான் உள்ளது என நம்பினேன்.
திருமணத்திற்கு முன் உனக்கு ஏற்பட்ட எல்லாவற்றையும் விக்ரம் அண்ணா மூலம் தெரிந்துகொண்டேன்"என்றாள் யாழினி.
கொட்ட கொட்ட விழித்தவள் "அப்போ எல்லாமே தெரியுமா"என்றான் தேவ்.
"தெரியும் தெரியும்....ஆமா நீ செய்தது பெயர் காதலா? ,உன்னிடம் ஒருமுறைகூட காதலை வெளிபடுத்தாதவள் மனதில் என்ன இருக்கிறது என்பதுகூட தெரியாதா? ...சொல்லு நீ அவ்வளவு பெரிய ட்யூப்லைட்டா"எனக்கேட்டாள் யாழினி.
"என்னது...ட்யூப்லைட்டாஆஆஆஆ"என வாயைப்பிளந்தான் தேவ்.
இப்பொழுது அவள் பேச்சில் அவன் சற்று தெளிவுற்றான்.
"உன்னோட காதல்கவிதையை படித்தவள் உன்னிடம் அது எத்தனை தூரம் அழகாயிருக்கிறது என்பதைக்கூட சொல்லலையே...அப்பவே அவளுக்கு உன்மேல காதல் இல்லைனு உனக்கு புரியலையா?
அதெல்லாம் சரி உன் கண்முன்னாடியே இன்னொருத்தனிடம் தாலி வாங்கி சென்ற அவள் பெரிய உத்தமி.ஆனா உனக்காக சுத்தி சுத்தி வந்து உன் கையால தாலி கட்டிகிட்ட நான் கெட்டவள் நல்லாயிருக்குடா உன் நாடகம்.
உன்கிட்ட பேசாமல் உன்னைத்தவிர்தவளுக்காக நீ காதலை கொட்டித்தீர்ப்ப...ஒருவருடமா உன் பின்னாடியே திரியுற என்னைய தள்ளி வச்சுருக்குற...போதும் போதும் இனி எனக்கு நீ தேவையில்லை போ...என்றவள்
சடாரென அவள் மொபைலை எடுத்து "எனக்கு உடனடியா டைவர்ஸ் அப்ளை பண்ணுங்கப்பா"என்றாள்.
மறுமுனையில் யாழினி தோழி கீர்த்தி"ஏய் லூசு என்னடி உளறிட்டு இருக்க....மூளை எதுவும் கலண்டுடுச்சா?"எனக்கேட்டாள்.
இவளோ"எனக்கு இந்த லைஃப் செட் ஆகலை டைவர்ஸ் அப்ளை பண்ணுங்க.வேணாம்பா வேணாம்"என ஃபோனை துண்டித்தாள்.
என்னவோ ஏதோவென பதறிய கீர்த்தி மறுபடி கால் செய்தாள்.இவள் கட் செய்தாள்.
"ஜஸ்ட் ஃபார் எண்டர்டெயின்மென்ட்"என்ற அவள் குறுஞ்செய்தியை பார்த்ததும் அமைதியாகிப்போனாள் கீர்த்தி.
யாழினி காலேஜ் படிக்கும்போது அப்பாவிடம ஏதாவது தவறு செய்து மாட்டிக்கொண்டால் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை"ஜஸ்ட் ஃபார் என்டர்டெயிண்மென்ட்"எனவே அவள் ஏதோ விளையாட்டாக செய்கிறாள் என்பதை உணர்ந்துகொண்டாள் கீர்த்தி.
அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் ஒரு ட்ராலியில் அவள் உடைமைகளை பேக் செய்ய ஆரம்பித்தாள்.
"யாழினி யாழினி ப்ளீஸ்மா நீ போயிடாத உன்னை புரிஞ்சுக்காம இருந்துட்டேன் என்னைய மன்னிச்சுக்கோ"என்று மன்றாடினான் தேவ்.
"நகரு நகரு...எனக்கு வேலையிருக்கு "என எல்லாவற்றையும் இன்னும் வேகமாய் எடுத்துவைத்த யாழினி டொம்மென சூட்கேஸை ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு ஜன்னலோரம் சாய்த்து வாசலை வெறித்தபடி அமர்ந்தவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
மெல்ல அவளருகிலமர்ந்தவன் அவள் கைகளை மெல்ல வருடினான்.யாழினி அவனை ஒரு முறை முறைத்தாள்.இருந்தாலும் ஏற்கனவே அடிவாங்கி சிவந்திருந்த அவன் கன்னங்களில் அவள் மறுபடி அடிக்கவில்லை.
அப்படியே மெல்ல நெருங்கியவன் அவளை இறுக அணைத்துக்கொண்டான்.அவள் பொலபொலவென்று கண்ணீர்துளியை உதிர்த்து அழுது தீர்த்தாள் யாழினி.
அவள் முகத்தை தன் கைகளால் ஏந்தியவன்"ஐ ஆம் ஸாரிடி.. இனி என் மனசுல இந்த அராத்து பிடிச்சவளை இந்த சவுண்டு சரோஜாவைத்தவிர வேறு யாருமில்லை"என்றான் சிரித்தவாறு.
"அப்போ இனிமேல் பூர்ணிமா...பூசணிக்காய்னு சொல்லிட்டு இருக்கமாட்டேனு சத்தியம் பண்ணு"என்று அவனிடம் கையைநீட்டினாள் .
அவனும் "ப்ராமிஸ் இனி எவளையும் இந்த ராட்சசியை விட்டுட்டு நினைச்சுபார்த்து அடிவாங்க நான் தயாராயில்லை"என்றவாறு அவனுடைய அடிவாங்கிய கன்னங்களை.இறுகமூடிக்கொண்டான் தேவ்(இனிமேல் அடிவாங்க அவன் உடலில் திராணியில்லை😁😁😁😂😂) .
அவளை மெல்ல கட்டிலில் அமரவைத்தவன் அவளின் கன்னத்தில் அழுந்த முதன்முதலாய் முத்தம் பதித்தான்.காதல் மெல்ல குடிகொண்டது தேவிற்கு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.காதல் ஒருபடிமேல் சென்று இருஉயிர்களின் அன்பு அடுத்தநிலைக்கு முன்னேறியது.முதலாம் ஆண்டு திருமணநாள் அழகானதொரு காதல்காவியமாய் மாறிப்போனது.
இன்று அவன் மார்பில் முகம் புதைத்து வெட்கத்தோடு அவன் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த யாழினியிடம்"நமக்குள்ள பிரச்சனைனா நம்ம இரண்டு பேரும் பேசித்தீர்த்துக்கனும் அதை விட்டுட்டு மாமாவுக்கு வேற டைவர்ஸ் அது இதுனு ஃபோன் போட்டு பேசிட்ட.அப்போ என்னைய விட்டுட்டு போயிடுவியா"என இறுகக்கட்டினான் தேவ்.
வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு"ஆமா போயிடுவேன்" என்றவள் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டாள்.
"எங்கே வெளியில எப்படி போகுறனு பார்க்குறேன்"என்றவன் அவளை மேலும் இறுக அணைத்து கன்னத்தினருகே அவன் கன்னங்களை பதிக்க அவள் பெண்மை அங்கே தோற்றுப்போனது.அவனுடைய அருகாமையின் சுகந்தத்தில் தன்னை மறந்தாள் அந்த பேதை.
தன்னவனின் சிறு தீண்டுதலும் இத்தனை இன்பம் பயக்கக்கூடியது என்பதை அவள் முதன்முறை உணர்ந்தாள்.
"நான் இப்போ சொல்ற மேட்டர்ல நீங்க அப்படியே சாக் ஆயிடுவீங்க "என்றாள்.
"என்ன என்ன சொல்லுடியர்" என்றான் தேவ்.
"ஹா ஹா ஹா நான் எங்க அப்பாவுக்கு ஃபோன் போட்டேனு நீங்க நினைச்சீங்களா...என் ஃபோனை எடுத்து டயல்டு லிஸ்ட் பாருங்க"என்றாள்.
தேவ் வேகமாக அவள் மொபைலில் டயல்டு லிஸ்ட் செக் செய்தான் அதில் கீர்த்தனாவின் நம்பர் இருந்தது.
"அடிப்பாவி அப்போ கீர்த்தனாவுக்கு ஃபோன் போட்டுதான் இந்த சீன் போட்டியா....உன்னைய என்ன பண்றேன் பாரு"என்ற தேவ் அவளைத்துரத்த ஆரம்பித்தான்.
அவளும் அரைமணிநேரமாய் அவனுக்கு ஏய்ப்பு காட்டிவிட்டு அங்குமிங்கும் ஓடி அயர்ந்து ஓரிடத்தில் அமர்ந்தாள் மூச்சிரைத்தபடி, அவனும் அவளுக்கு சிறிது இடைவெளி விட்டு மூச்சிரைக்க அமர்ந்தான்.
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கலகலவென சிரித்தனர்.காதலில் புரிதலும் மகிழ்ச்சியும் அங்கு குடியேறியது.
அவளை மெல்ல நெருங்கி அவள் இருகைகளையும் பின்புறம் மடக்கி கட்டியவன் அவள் இதழருகே செல்ல அவள் கண்களை மூடினாள்.
தேவ் படக்கென்று அவள் காதுகளைத்திருகி"மவளே இனிமே இப்படி சேட்டை பண்ணுவியா....புருஷனை அடிப்பியா"எனக்கேட்டான்.
"ஐயோ அம்மா வலிக்குது விடுடா லூசு"எனக்கதறினாள் யாழினி.
இருவரும் முதலாம் ஆண்டு திருமணநாளை இனிதே கொண்டாடினர் மாலையில் பிரபல ஹோட்டலில் அவளுக்காக சர்ப்ரைஸ் டின்னர் கேண்டில்லைட்டுடன் ஏற்பாடு செய்தான்.
அவளுக்கு ஆச்சர்யம் தாளவில்லை"என்ன இவாளோ சர்ப்ரைஸ் என்னால நம்பவே முடியலை"என்றாள் யாழினி.
"என்னோட மகாராணியை எப்படி வச்சுக்கனும்னு நினைச்சேனோ அப்படித்தான் இப்போ உனக்கு செய்யறேன்"
நான் லவ் பண்ணுனது தப்பில்லை தப்பான ஒருத்தரை லவ் பண்ணுனதுதான் தப்பு.
எனக்கே எனக்கான தேவதை நீமட்டும்தான் இதை நான் உணருவதற்கு இத்தனை நாள் ஆயிடுச்சு.என்னைய கஷ்டப்படுத்திட்டு போனவளை நினைச்சுட்டு என்னைய நினைச்சு உருகுற உன்னைய உதாசீனப்படுத்திட்டேன்..ப்ளீஸ் என்னைய மன்னிச்சுடுமா"என்றவன் கண்களின் ஓரம் இருதுளி நீர் கசிந்தது.
அழுவது ஆண்மகனுக்கு அழகில்லை என்றாலும் தவறை உணர்ந்து கண்ணீர் சிந்துவது தவறில்லை என பதை உணர்ந்த யாழினி சிறிது நேரம் அவன் மனபாரங்களை கொட்ட விட்டாள்.
அவனருகில் மெல்ல சென்றவள் அவனை இறுக அணைத்து அவன் கண்களில் முத்தம் பதித்து"ஐ லவ் யூ தேவ்"என்றாள்.
அவன் மனம் வானுக்கும் பூமிக்கும் குதித்தது.முதன்முறை ஒரு பெண் தன் காதலை அவனிடம் வெளிப்படுத்துகிறாளென்ற மகிழ்ச்சிதானது.
"சரி சரி...இன்னைக்கு நைட் இங்கே ரூம் புக் பண்ணிருக்கேன்...ஃபர்ஸ்ட் இயர் அனைவர்ஸரியை இங்க கொண்டாடலாம்"என்றான் தேவ்.
"அடப்பாவி மறுபடி செலப்ரேஷனா ...இந்த பாடி இதுக்கு மேல தாங்காதுடா ஆளை விடு"என்றாள் யாழினி.
"அடச்சீ பயப்படாத ...இந்த ஒரு வருடம் பேசாததையெல்லாம் இன்னைக்கு நீ பேசலாம் நான் கேட்பேன்"என்றான் தேவ்.
"செம டீல் "என்றவள் பற்கள் பளிச்சென தெரிய சிரித்தாள்.
"மூஞ்சியை பாரு தௌஸன்ட் வாட்ஸ் பல்பு மாதிரி"என்றான் தேவ்.
"இதை ஒரு ட்யூப்லைட் சொல்லுது பாரு"என்றாள் யாழினி.
யாழினியை உர்ரென்று பார்த்தான் தேவ்.
இருவரும் அறைக்கு சென்று உடைமாற்றி கட்டிலில் அமர்ந்தனர்.யாழினி பேச ஆரம்பித்தவள் பேசிக்கொண்டேயிருக்க,ம்ம்ம்"மட்டும் கொட்ட ஆரம்பித்தான்.
'அய்யோ கடவுளே தெரியாமல் இவளை பேசச்சொல்லிட்டேனே இப்படி நைட் இரண்டு மணியாயிடுச்சு இன்னும் வச்சு செய்றாளே... ஐடியா பேசாமல் தூங்கிட்டோம்னா எஸ்கேப் ஆயிடலாம்'என நினைத்தவன் உறங்கியும் போனான்.
காலையில் மணி ஆறு தொட்டதும் எழுந்தவன் அவளை எழுப்ப" இன்னும் பெண்டிங் ஸ்டோரி இருக்கு அதுக்குள்ள நைட் தூங்கிட்டீங்க" என மறுபடி ஆரம்பித்தாள்.
'இவளை எழுப்புனது தப்பாபோயிடுச்சே மறுபடி எப்.எம் பாட ஆரம்பிச்சுடுச்சே'என நினைத்தவன்
"சீக்கிரம் கிளம்பு வீட்டுக்கு போகனும்"என்றான்.
ஒரு வழியாய் அருவியென இறைந்த அவள் பேச்சு அடங்கியது.அவனுக்குள்ளோ புயலுக்கு பின்னால் வரும் அமைதி கிடைத்தது.
வேகமாய் வீட்டிற்கு நடையை கட்டியவன் நேராக கிளம்பி ஆபிஸ் சென்றுவிட்டான்.
இதற்குமேல் அவள் போடும் பிளேடை தாங்கும் நிலையில் அந்த பிஞ்சு நெஞ்சமில்லை.இனியொருமுறை அவளை பேசச்சொல்லும் தப்பை செய்யமாட்டேன் என உறுதிபூண்டான் தேவ்.
இருவரும் மகழ்ச்சியோடிருப்பதைப்பார்த்த யாழினியின் பெற்றோர் ,தேவின் பெற்றோரும உள்ளம் மகிழ்ந்தனர்.
"அனபிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்"
அவர்களின் இல்லற வாழ்வில் அன்பு கரைபுரண்டோடியது.இக்கால தம்பதிகளாய் சேட்டையும் சில்மிஷமுமாக நாட்கள் நகர்ந்தன.
தேவ்_ யாழினிக்குஅழகான பெண் குழந்தை பிறந்தது .அவளுக்கு தீப்தி என பெயர்சூட்டினர்.அவளே அவர்கள் இருவரின் உலகமாகிப்போனாள்.அவளே இருகுடும்பத்திற்குள் செல்லமான பேத்தி.
ஒருநாள் தீப்தி அவள் தந்தையிடம்"அப்பா அம்மாவை உனக்கு எவ்ளோ பிடிக்கும்"என கேட்டாள்.
"உங்க அம்மானா எனக்கு உயிர்"என்றான் தேவ்.
"அப்போ உங்க லவ் ஸ்டோரி எப்படி ஸ்டார்ட் ஆனதுனு எனக்கு சொல்லுப்பா"என்றாள் தீப்தி.
"அதுவந்து....என் கன்னம் வலிக்குது"என இரு கன்னங்கையும் மூடினான் தேவ்.
இதை கவனித்துக்கொண்டிருந்த யாழினி காய்கறி வெட்டிக்கொண்டிருந்த கத்தியை தூக்கிக்காட்டி"சொன்னீனா கொன்னுடுவேன்"என வாய்க்குள் சொல்லலானாள் .
எல்லாம் புரிந்தவனாய் தேவ் கலகலவென சிரிக்க.
"ஏய் ஓடு முதல்ல இங்கிருந்து ஏழு வயசா குழந்தை மாதிரியா பேசறா...லவ் ஸ்டோரி கேக்குற வயசை பாரு,போ...போய் ஹோம்ஒர்க் நோட்டை எடுத்துட்டு வா"என தீப்தியை பற்றிவிட்டாள் யாழினி.
தீப்தி முறைத்துக்கொண்டே தன் அறையில் இருக்கும் ஹோம் ஒர்க் நோட்டை எடுக்கச்சென்றாள்.
தேவ் கிடைத்த நொடிப்பொழுதில் வேகமாய் நச்சென யாழினியின் கன்னங்களில்முத்தம் பதித்தான்.
தீப்தி அங்கே வரும் சத்தம் கேட்டு வேகமாய் விலகியவன் விக்ரம் அங்கே வந்திட அவனுடன் வெளியே சென்றான்.
நண்பனின் வாழ்க்கை அழகாகவும் திருப்திகரமாகவும் அமைந்ததை எண்ணி மகிழ்ந்தான் விக்ரம்.
தன்னுடைய குறும்புக்கார மனைவி அள்ள அள்ள குறையாத காதல் ஊற்றை தந்திட ஐயாவுக்கு இப்பொழுது புதிதாக முளைத்தது பெரிய தொப்பையும் ஐந்து கிலோ எடையும் கூடிவிட்டது.
தினமும் ஜாகிங் சென்றாலும் தொப்பை குறையவில்லை யாழினியின் கைப்பக்குவம் அப்படி.அவள் சமைக்கும் உணவுக்கு கிடைத்த பரிசுதான் இவைகள்.
அன்றிரவு தீப்தி" நான் பாட்டிதாத்தாவுடன் உறங்குகிறேன் அவங்க சூப்பர் கதையெல்லாம் சொல்வாங்க"என அடம்பிடிக்க அவர்கள் ரூமிலேயே படுத்துக்கொண்டாள்.
யாழினி இரவு வேலைகளை முடித்துவிட்டு லேப்டாப்பை அலசிக்கொண்டிருந்த தேவின் அருகிலமர்ந்து மெல்ல அதனை சட்டவுன் செய்தாள்.
"ஏண்டி இப்படி பண்ணுற கொஞ்சம் ஆபிஸ் வொர்க் பெண்டிங் இருக்கு"என்றான்.
"ஏய் பாப்பா எங்கே "எனக்கேட்க யாழினி அவனிடம்"அத்தை மாமாகூட தூங்குறா "என்றாள்.
"அப்போ ஜாலிதான் இன்னைக்கு "என ஓடிவந்து அவள் இடையை இறுகப்ற்றினாள்.
முகம்சற்று வாட்டமாய் இருந்தவளைப்பார்த்த தேவ்"ஏய் குள்ளச்சி என்னடியாச்சு,ஏன் உம்ம்னு இருக்கிற"எனக்கேட்டான்.
எல்லாத்துக்கும் காரணம் உங்க பொண்ணுதான்"உங்க பொண்ணு என்னைய இம்சை படுத்துறா,அவங்க கிளாஸ்ல எல்லோருக்கும் தம்பி தங்கச்சி இருக்காம்...எனக்கு தம்பி இல்லைனா தங்கச்சி வேணும்னு" அவள் அடம்பிடிக்க அரம்பிச்சுட்டா.
அத்தைதான் நீ இன்னைக்கு பாட்டிதாத்தாகூட படுத்துக்கோ உனக்கு கதை சொல்றோம் என நாசுக்காய் சமாளித்து தூங்க போட்ருக்காங்க வர்ற வர்ற இவளோட இம்சை தாங்கமேடியலை என நடந்ததை அப்படியே ஒப்புவித்தவள் நன் கணவன் பயங்கரமான விஷமக்காரன் என்பதை ஒருநிமிடப்பேச்சில் மறந்துபோனாள்.
அவனோ கலகலவென சிரிக்க யாழினி"என்னைய பார்த்தா நக்கலாயிருக்கா நானே பயங்கர டென்ஷன்ல இருக்கேன் உன் பொண்ணு இம்சை தாங்காமல்"எனக்கத்தினாள்.
அவளை நெருங்கியவன் "கூல் கூல் அவள் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது...அதுக்கும் ரெடி பண்ணிடலாம் "என சிரித்தவாறு அவளை மேலும் நெருங்கினான்.
"ஏய் கொன்னுடுவேன் ஒழுங்கா ஓடிப்போயிடு"என அவனை தள்ள முயற்சித்தவளை இறுகபற்றியது அவன் கரம்.
அவன் ஸ்பரிசத்தில் கரைந்தவளுக்கு பத்துமாதத்தில் அழகிய ஆண்குழந்தை பிறக்க"ஐயா தம்பி வந்துட்டான்"எனக்கொண்டாடியபடி குதித்து ஹாஸ்பிட்டலிலேயே ஆட்டம் போட்டாள் தீப்தி.
"கெட்டிமேளம் கெட்டிமேளம்"என்ன மக்களே எல்லோரும் ஆஆஆனு வாயைத்திறக்குறீங்க இப்போ நடக்குறது தேவ்_யாழினியின் அறுபதாம் கல்யாணம்.
திருமணம் முடிந்து யாழினியிடம் தேவ் பேச ஆரம்பித்தான்.அந்த ஐம்பத்திஐந்து வயதிலும் யாழினி முகம் திருநாண் பூட்டியதில் வெட்கத்தில் சிவந்தது.
"நமக்கு வயசாயிடுச்சுல"என்றான் தேவ்.
"உங்களுக்கு வயசாயிடுச்சு பட் நான் எப்போவுமே யங்தான்"என்ற யாழினி தேவின் நரைமுடியை சுட்டிக்காட்டினாள்.
கலகலவென சிரித்தான் தேவ்.
 
Top