சத்யா புகுந்த வீட்டிற்கு வந்து மேலும் இரண்டு வாரங்கள் கடந்திருந்த நிலையில்..
கதிருக்கும், சத்யாவுக்கும் இல்லற வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
சத்யா இந்தச் சூழ்நிலைக்குப் பழக வேண்டும் என்று கதிர் அவளை எந்தவித தொந்தரவும் செய்யவில்லை.. அன்று முதலிரவில் அவள் அவனுடன் வாழப் பிடிக்கவில்லையென்று சொல்லிய பிறகு அவளை எந்தவிதத்திலும் வற்புறுத்தப் பிடிக்காமல் வாழ்க்கையை அதன் போக்கில் போக்கிக் கொண்டிருந்தான்.
சத்யாவோ மிகுந்த வெறுப்பில் தான் இருந்தாள்.. திருமணத்திற்கு மறு நாளே, பெற்றவர்கள் அவளிடம் விடை பெற்று சென்றதற்குப் பின், தன் கூட்டுக்குள் முடங்கிக் கொண்டாள்.
என்ன செய்வது.. இனி தன் வாழ்க்கை எந்தத் திசையில் போகப் போகிறது எதுவும் புரியவில்லை.
போதாத குறைக்கு அவள் அம்மா ரேவதி வேறு மகளுக்கு அறிவுரை என்ற பெயரில் காதில் ரத்தம் வரவழைத்து விட்டுச் சென்றது வேறு அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
முதல் இரவுக்கு மறு நாள் காலையில் மகள் கீழே இறங்கி வந்த போதே மகளின் முகத்தை வைத்தே அவள் வாழ்க்கையைத் தொடங்கவில்லை என்று அறிந்து கொண்டார்.. தாய் அறியாத சூலா.. ஆனாலும் அவளிடம் அதைப் பற்றிப் பேசி வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள விரும்பாமல் பொதுவாகப் பேசிவிட்டு..
விடை பெற்றுச் செல்லும் முன்னர் மகளிடம்.. 'தனிமையில் எதுவாக இருந்தாலும் அதை மாற்றுவது அவள் கையில் தான் இருக்கிறது என்றும்..'
'யாருக்கு யார் என்று நாம் நினைத்தாலும் அந்தக் கடவுள் நினைக்கிறதுதான் கடைசியில் நடப்பதாகவும்.. நாம் அனைவருமே அவன் ஆட்டி வைக்கும் பொம்மைகள் தான்.. அதை ஆட்டி வைக்கும் கயிறு அவனிடம்தான் இருக்கிறது என்று சொன்னவர்.. அதைப் புரிந்து கொண்டால் அவள் வாழ்க்கையும் சிறக்கும் என்றவர்..'
'மேலும் ஒரு பெண் நினைத்தால் சாதிக்க முடியாதது இல்லை என்றும்.. இனி அவள் வாழ்க்கை அவள் கையில்.. அதை எப்படிக் கையாள்வது என்பது அவளைப் பொறுத்தே..' என்று சொல்லி விட்டுச் சென்றார்.
இது என்ன மாதிரியான அட்வைஸ் என்று மட்டுமே எண்ணிய சத்யாவோ.. விடாமல்..,
'அவள் பெற்றோர் நினைத்திருந்தால் அந்தக் கயிற்றை மாற்றி ஆட்டி வைத்திருக்கலாம்..' என வாதாடி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..
அன்னை சொன்ன வார்த்தைகளில் இருந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளச் சரியாகத் தவறினாள்.
விதி அவளைப் பார்த்துச் சிரித்திருக்க.. பெற்றவர்கள் அறிவுரையா அவளைப் பாதிக்கப் போகிறது.
இரண்டு வாரம் முடிந்திருந்த நிலையில் ஒரு நாள் காலை மெல்ல எட்டு மணி வாக்கில் தன் அறையிலிருந்து கீழே இறங்கி வந்தாள் சத்யா.
கீழே பெரியதாகப் பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருக்க, இவ்வளவு காலையில் வந்த விருந்தாளி யாரோ என்று யோசித்த வண்ணம் இறங்கி வந்தவள் திகைத்தாள்.
"டேய் வெற்றி நீ எங்கடா இங்கே?.." ஆர்ப்பரித்தாள் சத்யா. அவனருகே வேகமாகச் சென்றவள்.. அவனுக்கு ஹை பைவ் கொடுக்க.. அவனும் சிரித்தான்.
"நான் ஒண்ணும் அரிசிமூட்டை இல்லை.. பாரு இப்போ எவ்வளவு எடை கொறைஞ்சி சரியாத்தான் இருக்கேன்.. நீதான் சீக்கு வந்த கோழி மாதிரி இருக்கே.." எனக் கலாய்க்க..
அமைதியாக அவர்கள் வாயாடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்வேல்.. கடந்த பத்து நாட்களுக்களுக்கு மேலாக அவனிடம் சரியாகப் பேசாமல், கடமைக்கு இரண்டு வார்த்தைகளைப் பேசிவிட்டு தன் மடிக்கணினியில் மூழ்கியிருந்தவள் இன்று குதுகலமாகத் தன் தம்பியுடன் வார்த்தையாடுவதைக் கண்டு அவனுக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சியே.
அதிலும் தான் முதல் நாள் அவளைப் பற்றி நினைத்ததையே தன் தம்பி சொல்லியவுடன் அவனுக்கு உள்ளுக்குள் இன்னும் உவகைப் பொங்கியது.
"சரியா சொன்னேடா வெற்றி.. நான் கூடச் சத்யாவை அப்படித்தான் நினைச்சேன்.." என அப்படியே சத்திய சந்தனாக உண்மையை விளம்ப..
"ஹலோ.. என்ன கொழுப்பா.. நினைப்பிங்க நினைப்பீங்க.. அவன் சொன்னா ஓ.கே.. நாங்க ரெண்டு பேரும் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்.. எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்.. இதெல்லாம் நீங்க பேசக் கூடாது.."
என்ற சத்யா அவனை முறைக்க.. வெற்றிவேல் அவளை ஆமோதித்து மேலும் அவளை வம்பிக்கிழுத்து சீண்ட.. எங்கிருந்தோ வந்தார் கண்ணாத்தா பாட்டி.
"அடியே பேத்தி.. உடமைப்பட்டவன் சொல்லுறான்.. அவன் சொல்லாம வேறு யாரு சொல்லுவாங்களாம்.. இதோ நிக்கிறானே இந்த மடப்பயலா?.." என வெற்றியை பார்க்க..
"அப்பத்தா.. எதுக்கு இப்போ என்னை வம்புக்கிழுக்கறே?.. எனக்குக் கோவம் வந்திச்சு அப்புறம் தெரியும் என் சங்கதி.." வெற்றிவேலோ காலை உதைத்தான்.
"அண்ணியா?.. சத்தி....யா.. போட்டுடுங்காளே ஆர்டரு.. இந்தக் கண்ணாத்தா அப்பத்தா ஆர்டர் போட்டா நாங்க கேட்டே ஆகணுமே.. இல்லாட்டா சோறு தண்ணி கண்ணுல காட்டாதே.. அதுவும் இன்னிக்கு நாட்டுக் கோழி குழம்பு வேறு ஸ்பெஷலா வைக்கப் போறத எனக்குப் பட்சி தகவல் சொல்லிச்சு.."
"டேய்.. வெற்றி.. என்னடா இது புதுக் குழப்பம்.. அண்ணி.. கிண்ணின்னு.. அப்போ நீ?.."
"ஹலோ.. உங்களுக்கு இன்னும் விவரம் தெரியாதோ?.. நான் தான் தெ கிரேட் வெற்றிவேல்.. உங்க புருஷனுக்கு.. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுக்கு இருக்கிற செல்ல தம்பி.. மிஸ்டர் சக்திவேலோடு இரண்டாவது மகன்.. இதோ நிக்கிறாங்களே கண்ணாத்தா கிழவி.. அதோடு செல்ல பேரன்.."
"டேய் நான் கிழவியாடா.. உன்னை....." கண்ணத்தா பக்கத்தில் எங்காவது கம்பு இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் தேட..
வெற்றியோ சட்டெனத் தன் அண்ணன் பின்னால் ஒளிந்து கொண்டான்..
கதிர்வேல் பெரிதாகச் சிரிக்க சத்யோவோ திகைத்துப் போய் இருந்தாள்.
வெற்றிவேல் அவளுடன் சென்னையில் இஞ்சினியரிங்க் படித்திருந்தான்.. அவன் வேறு துறை என்றாலும்.. சத்யாவின் நண்பர்களுடன் அவனும் கல்லூரி ஹாஸ்டலில் உடன் தங்கியிருக்க அதில் பழக்கமானவன் வெற்றி.
ஆரம்பத்தில் சற்று குண்டாக இருந்தவன்.. மற்றவர்களால் அரிசி மூட்டை எனக் கிண்டலடிக்கப்பட்டு, பின்னர் ரோஷமாக உடம்பைக் குறைத்தவன்.
ஆனாலும் அவன் ஒவ்வொரு முறை ஊருக்குத் திரும்பி கல்லூரிக்கு வரும் பொழுது மீண்டும் கஷ்குமொஷ்கென்று வருபவனைக் கிண்டல் அடிக்கும் அவர்கள் குழு.
"அப்போ வெற்றி.. நீ கதிரோட ப்ரதரா?.. அப்போ நீ குண்டா இருக்கிறதுல ஆச்சிரியமேயில்லை.. இப்படி கோழி அடிச்சி குழம்பு வைச்சி தின்னா.. இப்போ????.. இது உங்க குடும்பச் சொத்துன்னு.." கதிர்வேல் மேல் பொருள் பொதிந்த பார்வையை வீசினாள்.
கதிர்வேல் முகம் சுருங்க.. வெற்றியோ இயல்பாகச் சிரித்தான்.
தன் மூத்த பேரனின் முக வாட்டத்தைக் காணப் பொறுக்காத கண்ணாத்தாவோ..
"என்ன மருமவளே.. இதான் பட்டணத்து குசும்போ.. எங்க பேரன்களை நக்கலடிக்கிறீயோ.. பாவம் புள்ளைக.. வயத்துக்கு வஞ்சனை செய்ய மாட்டாங்க.. உங்கள மாதிரி பட்டிணத்துக்காரங்க மாதிரி வாயை கட்டணும்னு எங்களுக்கு அவசியமில்லமா.. நாங்களெல்லாம் உழைப்பாளிங்கமா.. உங்களை மாதிரி நாசூக்கா திண்ணுட்டு சொங்கி போய் விளுக மாட்டோம்.."
"அப்பத்தா.. அவ சின்னப் பொண்ணு.. யதார்த்தமா ஏதோ கிண்டல் பண்ணுறா.. " கதிர் பரிந்து கொண்டு வர..
"யதார்த்தமாவது.. பதார்த்தமாவது.. அதுக்குள்ள ஒம் பொஞ்சாதிக்கு பரிஞ்சிட்டு வாரீயோ?.. உ ம் பரவாயில்லை.. பேத்தி கொஞ்சம் வாய் துடுக்குன்னாலும் புருஷனை முடிஞ்சி வைச்சுக்கிற வித்தையைச் சரியா படிச்சி வைச்சிருக்கு.. போகட்டும் அந்த மட்டும் எம் பேரன் அதிர்ஷடசாலிதான்.." என்றவர் சத்யாவின் கன்னத்தை வழித்து நெட்டி எடுத்தார்.
'அப்படியா.. நீ முடிஞ்சி வச்சிருக்கியா?.. எங்கே காமி..' என அவளை ஒரு மாதிரி பார்த்து வைத்தான் கதிர்.
சத்யாவுக்கோ முகம் சிவந்தது.. இந்தக் கிழவி லேசு பட்டதில்லை.. இதற்கெதிரில் கொஞ்சம் வாயை அடக்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டாள்.
"சத்யா.. வெற்றிவேல் என்னுடைய சொந்த தம்பி.. உனக்கு ஏற்கனவே சொல்லியிருந்தேனே எனக்கு ஒரு தம்பி இருக்கான்னு.. இத்தனை நாளா கொஞ்சம் வேலை விஷயமா வடநாட்டுப் பக்கமா போயிருந்தான்.. அவனுக்கு ஏற்கனவே நம்ம திடீர் கல்யாணம் விஷயம் பற்றிச் சொல்லி இருந்தேன்.." கதிர் எடுத்துச் சொல்ல..
"ம்..' எனத் தலையட்டினாள் சத்யா.
"ஹாய் அண்ணி.. எனக்கு அண்ணன் போட்டோ வாட்ஸப்பல உங்க திடீர்க் கல்யாணம் முடிஞ்ச உடனேயே அனுப்பிச்சு.. அப்பவே எனக்குத் தெரியும் நம்ம ஒல்லிகுச்சி சத்யாதான் எங்க அண்ணன் வொய்ஃப்ன்னு.. நான் அண்ணன் கிட்ட உங்களைத் தெரிஞ்சா மாதிரி காமிச்சிக்கலை.. சர்ப்பரைஸ் கொடுப்போன்னுதான் வந்தேன்.."
"நான் எதிர்பார்க்கலை வெற்றி.. உங்க ஊரு ஏதோ கிராமம்ன்னு தெரியும்.. ஆனா நீ இவரோட தம்பின்னு.." என்றவள்..
"அப்பாடி.. ரொம்பப் போரடிச்சி போய்க் கிடைந்தேன்.. ஐயாம் சோ ஹாப்பி.. இனிமேல் எனக்கு ஈடா பேச நம்ம செட் ஒருத்தன் கிடைச்சான்..இனி தூள் கிளப்பிட மாட்டேன்.." என்றவள்..
"ஹேய்.. அது என்ன அண்ணின்னு.. எப்பவும் போலச் சத்தி இல்லை சத்யானே கூப்பிடு வெற்றி.."
மீண்டும் முகம் கருத்தான் கதிர்.
"அம்மாடி மருமவளே.. வெற்றி உன்னோட படிச்சவனா இருக்கலாம்.. ஏன் ஒரே வயசா கூட இருக்கலாம்.. ஆனா இது உங்க பட்டிணம் இல்லை.. பேரை சொல்லி கூப்பிட.. எதுக்கும் மொறை இருக்கும்மா.. அவனோட அண்ணன் பெண்டாட்டி நீ.. அதுக்கு உரிய மரியாதைய அவன் கொடுத்துதான் ஆகணும்.. உன்னை அண்ணின்னு கூப்பிடட்டும்..
"அதே போல நீயும் அவனுக்கு உரிய மரியாதை கொடு.. கொழுந்தனாரேன்னு கூப்பிடு.."
"பின்னே.. கதிர் என் புருஷந்தானே.. கதிர்ன்னு சொல்லாமல் வேறு என்ன சொல்லுறது?.. இதுல என்ன இருக்கு கி... அப்பத்தா.." கிழவியென்று சொல்ல வந்தவள் கப்பென அப்பத்தா எனச் சொல்லி சமாளித்தாள்.
இல்லையென்றால் கண்ணாத்தா அவளைக் கிழித்துத் தோரணம் கட்டி விட மாட்டாளா?..
"ம்.." அவள் சொல்ல வந்தது அறியாதவரா அவர்.. ஆனாலும் அதைப் பெரிது பண்ணாமல்..
"மாமான்னு சொல்லலாம்.. இல்லை ஆசையா அத்தான்னு சொல்லலாம்.. நானெல்லாம் உங்க பாட்டனை மாமான்னு கூடச் சொன்னதில்லை.. அவ்வளவு வெட்கம்.. ஆனா இந்தக் காலத்து புள்ளைக இப்படிப் புருஷனை பேரைச் சொல்லி விரட்டுது.. பேர் சொன்னா புருஷன் ஆயுசு குறையும்ன்னு இந்தக் காலத்துப் புள்ளைகளுக்கு எங்கே தெரியப் போகுது.. என்ன பட்டிணத்து நாகரீகமோ?.."
"பாரு.. நான் உன்னைய ஒரு வார்த்தை சொல்லக் கூடாதாம்.. எம் பேரன் எப்படி மொறைச்சி பார்க்குறான்.. ஏற்கனவே அவனுக்குக் கொட்டை கண்ணு.. இதுல வயசான காலத்துல இப்படிப் பார்த்தா நான் என்னத்துக்கு ஆவுறது?.." நொடித்துக் கொண்டார் கண்ணாத்தா..
"அப்பத்தா.. இப்படிச் சந்தடி சாக்குல என்னை வம்பகிழுக்கணுமா?.. எம் பெண்டாட்டி என்னை எப்படிக் கூப்பிடணும்னு நான் பார்த்துக்கறேன்.. மனசுல புருஷங்கற மதிப்பும், மரியாதையும் இருந்தா போதும்.. அவ என் பேரை சொல்லறதுல எனக்கே எந்தவித ஆட்சேபனையும் இல்லேன்ன போது.. இப்போ விடுவிங்கிளா?.." என்ற கதிர்,
"இப்போவாச்சு காலை பலகாரத்தைக் கண்ணுல காட்டுவியா.. பசி உசுரு போகுது?.." என்றான்.
"சரி சரி சாப்பிட வாங்க.. என் பேரன் பசி தாங்க மாட்டான்.. ஏலேய் வெற்றி உங்கப்பனை எங்கடா காணாம்.. ஊர்லேருந்து சின்ன மகன் வந்திருக்கான்னு கொஞ்சமாவது நினைப்பிருக்கா.." கதிரின் முறைப்பில் அப்படியே பேச்சை மாற்றினார் கண்ணாத்தா.
"ஆத்தா.. எதுக்கு எட்டு ஊருக்கு கேக்கற மாதிரி என்னை ஏலம் விடறே?.. தோ வந்திட்டே இருக்கேன்.." என்றபடி உள்ளே நுழைந்தார் சக்திவேல்.
"அப்படியே உன்னை ஏலம் விட்டாலும்.... அவ்வளவு தைரியமா எவன் டா அவன் எப்புள்ளைய விலை பேசறவன்.."
"அய்யோ ஆத்தா.. ஒரு பேச்சுக்கு சொன்னா.. பசி வவுத்த கிள்ளுது.. கொஞ்சம் இட்லிய அந்த நாட்டு கோழி குழம்போட கண்ணுல காட்டேன்.."
"அதானப் பார்த்தேன்.. வந்துடுவானா எவனாவது.. கிழிச்சி மாலையாக்கி தொங்கி தோரணம் கட்டி விட்டுட மாட்டேன்.. எம் மவன் யாரு.. எட்டுபட்டியும் கட்டி ஆளுறவன் டா.. அவனை.. சரி சரி.. மொறைக்காதீங்கடா பேராண்டிகளா.. வாங்க..சாப்பிடலாம்.. அடியே எழிலு.. எல்லாத்தையும் டேபிள்ள எடுத்து அடுக்கி வைச்சியாடி...." கத்தியபடி உள்ளே சென்ற கண்ணாத்தாவை பின் தொடர்ந்தனர் மற்றவர்கள்.
அண்ணனுடன் தம்பியும் இட்லியுடன் கோழி குழம்பை போட்டுக் கொண்டு புரட்டிக் கொண்டிருப்பதைக் காண சகிக்கவில்லை சத்யாவுக்கு..
பேத்தியையும், பேரன் பக்கத்திலேயே உட்கார வைத்த கண்ணாத்தா.. பார்த்து பார்த்துப் பரிமாறினார்.. சத்யா இரண்டு இட்லிகள் போதும் என.. அப்பத்தாவின் முறைப்பில் மேலும் இரண்டு இட்லிகளுடன் நிறுத்திக் கொண்டாள்.
அங்கே கதிரோ.. நான்கு நான்கு இட்லிகளாக மூன்று முறை வைத்துக் கொண்டு போதும் அப்பத்தா என எழுந்து கொள்ளப் போக.. அப்பத்தா.. நாளெல்லாம் வெளியே அலைகிறவனுக்கு அது எப்படிப் போதும் என மேலும் நான்கு இட்லிகளை வைத்து விட.. அவனும் ஒன்றும் பேசாமல் முழுங்கிக் கொண்டிருந்தான்.
வெற்றியோ போதும் என்று வாயே திறக்கவில்லை.. எழிலரசி எடுத்துக் கொண்டு வந்து இட்லிகளைப் பாத்திரத்தில் அடுக்க அடுக்க.. கோழி குழம்பும், சட்னியும் ஊற்றி ஊற்றி உள்ளே தள்ளி கொண்டு இருந்தான்..
இவர்கள் போதாதென்று அவர்கள் தந்தை சக்திவேலும் அவர்களுக்கு இணையாகக் கட்டு கட்டிக் கொண்டிருந்தார்.. தின்று கொழிக்கும் குடும்பம் போலும்.. வயிற்றுக்கு வஞ்சனை இல்லாதவர்கள்..
வேறு வழியில்லாமல் அவ்வளவுதான் சத்யாவால் நினைக்க முடிந்தது..
பின்னே அவர்கள் உண்ணும் அழகில் சத்யாவுக்கு உமட்டிக் கொண்டு வராமல் இருந்ததே பெரிய விஷயமல்லவா..
இவர்கள் தட்டுக்களில் இட்லியை அணிவகுத்த அப்பத்தாவோ இரண்டு இட்லிகளுடன் அளவாய் நிறுத்திக் கொண்டது சத்யாவுக்கு ஆச்சர்யமே..
அவள் பார்வையைப் புரிந்தவரும்.. வயசான காலத்தில் ஆசைப்பட்டுத் தின்று அவதிப்படுவதை விட அளவாய் உண்பது உடலுக்கு நல்லது என்ற வியாக்கியானம் வேறு.
இப்படியாக அவர்கள் காலை உணவு வேலை முடிந்திருக்க.. கதிர்வேல் ரைஸ் மில்லுக்குச் சென்று விட்டு.. அப்படியே சர்க்கரை ஆலைக்குச் செல்லப் போவதால்.. மதிய உணவை உதவியாள் மூலம் அப்பத்தாவிடம் அனுப்பி வைக்கச் சொன்னவன்.. இனி மாலையில் பார்க்கலாம் என்று அனைவரிடம் சொல்லிவிட்டு.. சத்யாவுக்கு சென்று வருவதாகத் தலையாட்டி விட்டுச் சென்றான்.
அவள் அவனைக் கண்டு கொண்டால் தானே..
சக்திவேலும்.. செங்கல் சூளை பக்கம் போவதாகச் சொல்லி விட்டு அகன்று விட்டார்.
அங்கே வெற்றிவேலும், சத்யாவும், அப்பத்தாவும் தான் மிகுந்தனர்.
"என்ன கொழுந்த....கொழுந்த.......நாரே.. நீ எங்கேயும் போகலையோ?.." சத்யா வெற்றியை வம்புக்கிழுத்தாள்.
"அம்மா.. சத்யா அண்ணி.. தயவுசெய்து என்னை இப்படிக் கூப்பிடாதேம்மா.. என்னவோ நாத்தம் பிடிச்சவனேன்னு சொல்லாறா போல இருக்கு.. எப்பவும் போல வெற்றின்னே கூப்பிடு தாயே.. நான் அப்பத்தாகிட்ட அட்ஜஸ்ட் பண்ணுறேன்.." வெற்றி கையெடுத்து கும்பிட்டே விட்டான்.
"உ ம்.. கொழுந்தனாரே.. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லே.. ஆனா என்னை இந்தக் கிழவிகிட்டே இருந்து காப்பாத்தறது உன்னோட பொறுப்பு.." அவனிடம் மெல்ல முணுமுணுத்தவள்..
"ஒரே போரடிக்குது வெற்றி.. இந்த ஊருல எந்தவித பொழுது போக்கும் இல்லையே?.. எப்படித்தான் இவங்ககெல்லாம் இருக்காங்களோ?.. நான் என்ன பண்ணுறதுன்னே தெரியலை.."
"அம்மாடி சத்யா.. ஆனாலும் நீ நினைக்கிற மாதிரி சின்னக் கிராமமும் இல்லை.. இந்தச் சங்ககிரி கொஞ்சம் பெரிய டவுனுதாம்மா.. கொஞ்சம் நீ வெளியே வந்து சுத்தி பார்த்தா எல்லா விவரமும் புரியும்.. நீ ரூமுக்குள்ளேயே அடைஞ்சி கிடக்காமல் கொஞ்சம் வெளியில் என்ன நடக்குதுன்னு வந்து பார்த்தா விவரம் புரியும்.." என்ற கண்ணாத்தா
"வயசுக்கும், உறவுக்கும் கொஞ்சம் மரியாதை கொடுக்கக் கத்துக்கோணம்.. இப்படி யோசிக்காம பேசறது பொம்பளை பிள்ளைகளுக்கு நல்லதில்லை.. நாவடக்கம் ஒரு பொண்ணுக்கு கூடவே பிறந்ததா இருக்கணும்.. சொல்லிக் கொடுத்த வார்த்தையும்.. கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்கு வரும்.. நீயே பார்த்து பழகணும்மா...."
"அப்பத்தா.. அண்ணி சின்னப் பொண்ணு.. பட்டிணத்துல படிச்சவங்க.. அதிலேயும் இப்படி எதிர்பார்க்காமல் அண்ணனைக் கட்டிக்க நேர்ந்து போச்சு.. கொஞ்சம் அவகாசம் கொடுக்கணும் அப்பத்தா.. நம்ம வீட்டுப் பழக்கத்தையும், இந்த ஊர் வழக்கத்தையும் அவங்களா போகப்போகப் புரிஞ்சிப்பாங்க.. விடுங்க..
"அத்தோட இப்படி நீங்க எதுக்கெடுத்தாலும் குறை கண்டுபிடிச்சா அவங்களுக்கு நம்ம பேருல எப்படி மதிப்பு வரும்.. வெறுப்புதான் வரும்.. உங்களுக்கு அவங்களைப் பத்தி முழுசா விவரமும் இன்னும் தெரியாது.. எல்லாவற்றிர்க்கும் காலம் வரும்.. அதெல்லாம் அண்ணன் பார்த்துக்கும்.. நீங்க விடுவீங்களா.."
என சத்யாவுக்காகப் பரிந்து கொண்டு வந்தான்..
அப்பத்தாவோ 'அது எனக்குத் தெரியாதா என்ன.. அவளைக் கூட்டிலிருந்து வெளியே கொண்டு வரத்தானே நான் பேச்சுக் கொடுக்கிறேன்.. இல்லையென்றால் வெள்ளந்தியான கதிரை அவள் புரிந்து கொள்ள எந்தவித பிரயத்தனமும் செய்ய மாட்டேளே.. சரி கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்.. எல்லாத்துக்கும் நேரம் வரணும்..' என அப்போதைக்குத் தலையாட்டி விட்டு அங்கிருந்து அகன்றார்.
காலமும், நேரமும் வருமா?.. அவளின் ஆட்டம் அங்கே நிலைக்குமா?.. இல்லை ஆட்டம் காணுமா?..
அந்தக் கயிற்றை மேலிருந்து ஆட்டி வைக்கும் அவனுக்குத்தான் தெரியும்.
சத்யா புகுந்த வீட்டிற்கு வந்து மேலும் இரண்டு வாரங்கள் கடந்திருந்த நிலையில்..
கதிருக்கும், சத்யாவுக்கும் இல்லற வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
சத்யா இந்தச் சூழ்நிலைக்குப் பழக வேண்டும் என்று கதிர் அவளை எந்தவித தொந்தரவும் செய்யவில்லை.. அன்று முதலிரவில் அவள் அவனுடன் வாழப் பிடிக்கவில்லையென்று சொல்லிய பிறகு அவளை எந்தவிதத்திலும் வற்புறுத்தப் பிடிக்காமல் வாழ்க்கையை அதன் போக்கில் போக்கிக் கொண்டிருந்தான்.
சத்யாவோ மிகுந்த வெறுப்பில் தான் இருந்தாள்.. திருமணத்திற்கு மறு நாளே, பெற்றவர்கள் அவளிடம் விடை பெற்று சென்றதற்குப் பின், தன் கூட்டுக்குள் முடங்கிக் கொண்டாள்.
என்ன செய்வது.. இனி தன் வாழ்க்கை எந்தத் திசையில் போகப் போகிறது எதுவும் புரியவில்லை.
போதாத குறைக்கு அவள் அம்மா ரேவதி வேறு மகளுக்கு அறிவுரை என்ற பெயரில் காதில் ரத்தம் வரவழைத்து விட்டுச் சென்றது வேறு அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
முதல் இரவுக்கு மறு நாள் காலையில் மகள் கீழே இறங்கி வந்த போதே மகளின் முகத்தை வைத்தே அவள் வாழ்க்கையைத் தொடங்கவில்லை என்று அறிந்து கொண்டார்.. தாய் அறியாத சூலா.. ஆனாலும் அவளிடம் அதைப் பற்றிப் பேசி வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள விரும்பாமல் பொதுவாகப் பேசிவிட்டு..
விடை பெற்றுச் செல்லும் முன்னர் மகளிடம்.. 'தனிமையில் எதுவாக இருந்தாலும் அதை மாற்றுவது அவள் கையில் தான் இருக்கிறது என்றும்..'
'யாருக்கு யார் என்று நாம் நினைத்தாலும் அந்தக் கடவுள் நினைக்கிறதுதான் கடைசியில் நடப்பதாகவும்.. நாம் அனைவருமே அவன் ஆட்டி வைக்கும் பொம்மைகள் தான்.. அதை ஆட்டி வைக்கும் கயிறு அவனிடம்தான் இருக்கிறது என்று சொன்னவர்.. அதைப் புரிந்து கொண்டால் அவள் வாழ்க்கையும் சிறக்கும் என்றவர்..'
'மேலும் ஒரு பெண் நினைத்தால் சாதிக்க முடியாதது இல்லை என்றும்.. இனி அவள் வாழ்க்கை அவள் கையில்.. அதை எப்படிக் கையாள்வது என்பது அவளைப் பொறுத்தே..' என்று சொல்லி விட்டுச் சென்றார்.
இது என்ன மாதிரியான அட்வைஸ் என்று மட்டுமே எண்ணிய சத்யாவோ.. விடாமல்..,
'அவள் பெற்றோர் நினைத்திருந்தால் அந்தக் கயிற்றை மாற்றி ஆட்டி வைத்திருக்கலாம்..' என வாதாடி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..
அன்னை சொன்ன வார்த்தைகளில் இருந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளச் சரியாகத் தவறினாள்.
விதி அவளைப் பார்த்துச் சிரித்திருக்க.. பெற்றவர்கள் அறிவுரையா அவளைப் பாதிக்கப் போகிறது.
இரண்டு வாரம் முடிந்திருந்த நிலையில் ஒரு நாள் காலை மெல்ல எட்டு மணி வாக்கில் தன் அறையிலிருந்து கீழே இறங்கி வந்தாள் சத்யா.
கீழே பெரியதாகப் பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருக்க, இவ்வளவு காலையில் வந்த விருந்தாளி யாரோ என்று யோசித்த வண்ணம் இறங்கி வந்தவள் திகைத்தாள்.
"டேய் வெற்றி நீ எங்கடா இங்கே?.." ஆர்ப்பரித்தாள் சத்யா. அவனருகே வேகமாகச் சென்றவள்.. அவனுக்கு ஹை பைவ் கொடுக்க.. அவனும் சிரித்தான்.
"நான் ஒண்ணும் அரிசிமூட்டை இல்லை.. பாரு இப்போ எவ்வளவு எடை கொறைஞ்சி சரியாத்தான் இருக்கேன்.. நீதான் சீக்கு வந்த கோழி மாதிரி இருக்கே.." எனக் கலாய்க்க..
அமைதியாக அவர்கள் வாயாடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்வேல்.. கடந்த பத்து நாட்களுக்களுக்கு மேலாக அவனிடம் சரியாகப் பேசாமல், கடமைக்கு இரண்டு வார்த்தைகளைப் பேசிவிட்டு தன் மடிக்கணினியில் மூழ்கியிருந்தவள் இன்று குதுகலமாகத் தன் தம்பியுடன் வார்த்தையாடுவதைக் கண்டு அவனுக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சியே.
அதிலும் தான் முதல் நாள் அவளைப் பற்றி நினைத்ததையே தன் தம்பி சொல்லியவுடன் அவனுக்கு உள்ளுக்குள் இன்னும் உவகைப் பொங்கியது.
"சரியா சொன்னேடா வெற்றி.. நான் கூடச் சத்யாவை அப்படித்தான் நினைச்சேன்.." என அப்படியே சத்திய சந்தனாக உண்மையை விளம்ப..
"ஹலோ.. என்ன கொழுப்பா.. நினைப்பிங்க நினைப்பீங்க.. அவன் சொன்னா ஓ.கே.. நாங்க ரெண்டு பேரும் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்.. எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்.. இதெல்லாம் நீங்க பேசக் கூடாது.."
என்ற சத்யா அவனை முறைக்க.. வெற்றிவேல் அவளை ஆமோதித்து மேலும் அவளை வம்பிக்கிழுத்து சீண்ட.. எங்கிருந்தோ வந்தார் கண்ணாத்தா பாட்டி.
"அடியே பேத்தி.. உடமைப்பட்டவன் சொல்லுறான்.. அவன் சொல்லாம வேறு யாரு சொல்லுவாங்களாம்.. இதோ நிக்கிறானே இந்த மடப்பயலா?.." என வெற்றியை பார்க்க..
"அப்பத்தா.. எதுக்கு இப்போ என்னை வம்புக்கிழுக்கறே?.. எனக்குக் கோவம் வந்திச்சு அப்புறம் தெரியும் என் சங்கதி.." வெற்றிவேலோ காலை உதைத்தான்.
"அண்ணியா?.. சத்தி....யா.. போட்டுடுங்காளே ஆர்டரு.. இந்தக் கண்ணாத்தா அப்பத்தா ஆர்டர் போட்டா நாங்க கேட்டே ஆகணுமே.. இல்லாட்டா சோறு தண்ணி கண்ணுல காட்டாதே.. அதுவும் இன்னிக்கு நாட்டுக் கோழி குழம்பு வேறு ஸ்பெஷலா வைக்கப் போறத எனக்குப் பட்சி தகவல் சொல்லிச்சு.."
"டேய்.. வெற்றி.. என்னடா இது புதுக் குழப்பம்.. அண்ணி.. கிண்ணின்னு.. அப்போ நீ?.."
"ஹலோ.. உங்களுக்கு இன்னும் விவரம் தெரியாதோ?.. நான் தான் தெ கிரேட் வெற்றிவேல்.. உங்க புருஷனுக்கு.. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுக்கு இருக்கிற செல்ல தம்பி.. மிஸ்டர் சக்திவேலோடு இரண்டாவது மகன்.. இதோ நிக்கிறாங்களே கண்ணாத்தா கிழவி.. அதோடு செல்ல பேரன்.."
"டேய் நான் கிழவியாடா.. உன்னை....." கண்ணத்தா பக்கத்தில் எங்காவது கம்பு இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் தேட..
வெற்றியோ சட்டெனத் தன் அண்ணன் பின்னால் ஒளிந்து கொண்டான்..
கதிர்வேல் பெரிதாகச் சிரிக்க சத்யோவோ திகைத்துப் போய் இருந்தாள்.
வெற்றிவேல் அவளுடன் சென்னையில் இஞ்சினியரிங்க் படித்திருந்தான்.. அவன் வேறு துறை என்றாலும்.. சத்யாவின் நண்பர்களுடன் அவனும் கல்லூரி ஹாஸ்டலில் உடன் தங்கியிருக்க அதில் பழக்கமானவன் வெற்றி.
ஆரம்பத்தில் சற்று குண்டாக இருந்தவன்.. மற்றவர்களால் அரிசி மூட்டை எனக் கிண்டலடிக்கப்பட்டு, பின்னர் ரோஷமாக உடம்பைக் குறைத்தவன்.
ஆனாலும் அவன் ஒவ்வொரு முறை ஊருக்குத் திரும்பி கல்லூரிக்கு வரும் பொழுது மீண்டும் கஷ்குமொஷ்கென்று வருபவனைக் கிண்டல் அடிக்கும் அவர்கள் குழு.
"அப்போ வெற்றி.. நீ கதிரோட ப்ரதரா?.. அப்போ நீ குண்டா இருக்கிறதுல ஆச்சிரியமேயில்லை.. இப்படி கோழி அடிச்சி குழம்பு வைச்சி தின்னா.. இப்போ????.. இது உங்க குடும்பச் சொத்துன்னு.." கதிர்வேல் மேல் பொருள் பொதிந்த பார்வையை வீசினாள்.
கதிர்வேல் முகம் சுருங்க.. வெற்றியோ இயல்பாகச் சிரித்தான்.
தன் மூத்த பேரனின் முக வாட்டத்தைக் காணப் பொறுக்காத கண்ணாத்தாவோ..
"என்ன மருமவளே.. இதான் பட்டணத்து குசும்போ.. எங்க பேரன்களை நக்கலடிக்கிறீயோ.. பாவம் புள்ளைக.. வயத்துக்கு வஞ்சனை செய்ய மாட்டாங்க.. உங்கள மாதிரி பட்டிணத்துக்காரங்க மாதிரி வாயை கட்டணும்னு எங்களுக்கு அவசியமில்லமா.. நாங்களெல்லாம் உழைப்பாளிங்கமா.. உங்களை மாதிரி நாசூக்கா திண்ணுட்டு சொங்கி போய் விளுக மாட்டோம்.."
"அப்பத்தா.. அவ சின்னப் பொண்ணு.. யதார்த்தமா ஏதோ கிண்டல் பண்ணுறா.. " கதிர் பரிந்து கொண்டு வர..
"யதார்த்தமாவது.. பதார்த்தமாவது.. அதுக்குள்ள ஒம் பொஞ்சாதிக்கு பரிஞ்சிட்டு வாரீயோ?.. உ ம் பரவாயில்லை.. பேத்தி கொஞ்சம் வாய் துடுக்குன்னாலும் புருஷனை முடிஞ்சி வைச்சுக்கிற வித்தையைச் சரியா படிச்சி வைச்சிருக்கு.. போகட்டும் அந்த மட்டும் எம் பேரன் அதிர்ஷடசாலிதான்.." என்றவர் சத்யாவின் கன்னத்தை வழித்து நெட்டி எடுத்தார்.
'அப்படியா.. நீ முடிஞ்சி வச்சிருக்கியா?.. எங்கே காமி..' என அவளை ஒரு மாதிரி பார்த்து வைத்தான் கதிர்.
சத்யாவுக்கோ முகம் சிவந்தது.. இந்தக் கிழவி லேசு பட்டதில்லை.. இதற்கெதிரில் கொஞ்சம் வாயை அடக்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டாள்.
"சத்யா.. வெற்றிவேல் என்னுடைய சொந்த தம்பி.. உனக்கு ஏற்கனவே சொல்லியிருந்தேனே எனக்கு ஒரு தம்பி இருக்கான்னு.. இத்தனை நாளா கொஞ்சம் வேலை விஷயமா வடநாட்டுப் பக்கமா போயிருந்தான்.. அவனுக்கு ஏற்கனவே நம்ம திடீர் கல்யாணம் விஷயம் பற்றிச் சொல்லி இருந்தேன்.." கதிர் எடுத்துச் சொல்ல..
"ம்..' எனத் தலையட்டினாள் சத்யா.
"ஹாய் அண்ணி.. எனக்கு அண்ணன் போட்டோ வாட்ஸப்பல உங்க திடீர்க் கல்யாணம் முடிஞ்ச உடனேயே அனுப்பிச்சு.. அப்பவே எனக்குத் தெரியும் நம்ம ஒல்லிகுச்சி சத்யாதான் எங்க அண்ணன் வொய்ஃப்ன்னு.. நான் அண்ணன் கிட்ட உங்களைத் தெரிஞ்சா மாதிரி காமிச்சிக்கலை.. சர்ப்பரைஸ் கொடுப்போன்னுதான் வந்தேன்.."
"நான் எதிர்பார்க்கலை வெற்றி.. உங்க ஊரு ஏதோ கிராமம்ன்னு தெரியும்.. ஆனா நீ இவரோட தம்பின்னு.." என்றவள்..
"அப்பாடி.. ரொம்பப் போரடிச்சி போய்க் கிடைந்தேன்.. ஐயாம் சோ ஹாப்பி.. இனிமேல் எனக்கு ஈடா பேச நம்ம செட் ஒருத்தன் கிடைச்சான்..இனி தூள் கிளப்பிட மாட்டேன்.." என்றவள்..
"ஹேய்.. அது என்ன அண்ணின்னு.. எப்பவும் போலச் சத்தி இல்லை சத்யானே கூப்பிடு வெற்றி.."
மீண்டும் முகம் கருத்தான் கதிர்.
"அம்மாடி மருமவளே.. வெற்றி உன்னோட படிச்சவனா இருக்கலாம்.. ஏன் ஒரே வயசா கூட இருக்கலாம்.. ஆனா இது உங்க பட்டிணம் இல்லை.. பேரை சொல்லி கூப்பிட.. எதுக்கும் மொறை இருக்கும்மா.. அவனோட அண்ணன் பெண்டாட்டி நீ.. அதுக்கு உரிய மரியாதைய அவன் கொடுத்துதான் ஆகணும்.. உன்னை அண்ணின்னு கூப்பிடட்டும்..
"அதே போல நீயும் அவனுக்கு உரிய மரியாதை கொடு.. கொழுந்தனாரேன்னு கூப்பிடு.."
"பின்னே.. கதிர் என் புருஷந்தானே.. கதிர்ன்னு சொல்லாமல் வேறு என்ன சொல்லுறது?.. இதுல என்ன இருக்கு கி... அப்பத்தா.." கிழவியென்று சொல்ல வந்தவள் கப்பென அப்பத்தா எனச் சொல்லி சமாளித்தாள்.
இல்லையென்றால் கண்ணாத்தா அவளைக் கிழித்துத் தோரணம் கட்டி விட மாட்டாளா?..
"ம்.." அவள் சொல்ல வந்தது அறியாதவரா அவர்.. ஆனாலும் அதைப் பெரிது பண்ணாமல்..
"மாமான்னு சொல்லலாம்.. இல்லை ஆசையா அத்தான்னு சொல்லலாம்.. நானெல்லாம் உங்க பாட்டனை மாமான்னு கூடச் சொன்னதில்லை.. அவ்வளவு வெட்கம்.. ஆனா இந்தக் காலத்து புள்ளைக இப்படிப் புருஷனை பேரைச் சொல்லி விரட்டுது.. பேர் சொன்னா புருஷன் ஆயுசு குறையும்ன்னு இந்தக் காலத்துப் புள்ளைகளுக்கு எங்கே தெரியப் போகுது.. என்ன பட்டிணத்து நாகரீகமோ?.."
"பாரு.. நான் உன்னைய ஒரு வார்த்தை சொல்லக் கூடாதாம்.. எம் பேரன் எப்படி மொறைச்சி பார்க்குறான்.. ஏற்கனவே அவனுக்குக் கொட்டை கண்ணு.. இதுல வயசான காலத்துல இப்படிப் பார்த்தா நான் என்னத்துக்கு ஆவுறது?.." நொடித்துக் கொண்டார் கண்ணாத்தா..
"அப்பத்தா.. இப்படிச் சந்தடி சாக்குல என்னை வம்பகிழுக்கணுமா?.. எம் பெண்டாட்டி என்னை எப்படிக் கூப்பிடணும்னு நான் பார்த்துக்கறேன்.. மனசுல புருஷங்கற மதிப்பும், மரியாதையும் இருந்தா போதும்.. அவ என் பேரை சொல்லறதுல எனக்கே எந்தவித ஆட்சேபனையும் இல்லேன்ன போது.. இப்போ விடுவிங்கிளா?.." என்ற கதிர்,
"இப்போவாச்சு காலை பலகாரத்தைக் கண்ணுல காட்டுவியா.. பசி உசுரு போகுது?.." என்றான்.
"சரி சரி சாப்பிட வாங்க.. என் பேரன் பசி தாங்க மாட்டான்.. ஏலேய் வெற்றி உங்கப்பனை எங்கடா காணாம்.. ஊர்லேருந்து சின்ன மகன் வந்திருக்கான்னு கொஞ்சமாவது நினைப்பிருக்கா.." கதிரின் முறைப்பில் அப்படியே பேச்சை மாற்றினார் கண்ணாத்தா.
"ஆத்தா.. எதுக்கு எட்டு ஊருக்கு கேக்கற மாதிரி என்னை ஏலம் விடறே?.. தோ வந்திட்டே இருக்கேன்.." என்றபடி உள்ளே நுழைந்தார் சக்திவேல்.
"அப்படியே உன்னை ஏலம் விட்டாலும்.... அவ்வளவு தைரியமா எவன் டா அவன் எப்புள்ளைய விலை பேசறவன்.."
"அய்யோ ஆத்தா.. ஒரு பேச்சுக்கு சொன்னா.. பசி வவுத்த கிள்ளுது.. கொஞ்சம் இட்லிய அந்த நாட்டு கோழி குழம்போட கண்ணுல காட்டேன்.."
"அதானப் பார்த்தேன்.. வந்துடுவானா எவனாவது.. கிழிச்சி மாலையாக்கி தொங்கி தோரணம் கட்டி விட்டுட மாட்டேன்.. எம் மவன் யாரு.. எட்டுபட்டியும் கட்டி ஆளுறவன் டா.. அவனை.. சரி சரி.. மொறைக்காதீங்கடா பேராண்டிகளா.. வாங்க..சாப்பிடலாம்.. அடியே எழிலு.. எல்லாத்தையும் டேபிள்ள எடுத்து அடுக்கி வைச்சியாடி...." கத்தியபடி உள்ளே சென்ற கண்ணாத்தாவை பின் தொடர்ந்தனர் மற்றவர்கள்.
அண்ணனுடன் தம்பியும் இட்லியுடன் கோழி குழம்பை போட்டுக் கொண்டு புரட்டிக் கொண்டிருப்பதைக் காண சகிக்கவில்லை சத்யாவுக்கு..
பேத்தியையும், பேரன் பக்கத்திலேயே உட்கார வைத்த கண்ணாத்தா.. பார்த்து பார்த்துப் பரிமாறினார்.. சத்யா இரண்டு இட்லிகள் போதும் என.. அப்பத்தாவின் முறைப்பில் மேலும் இரண்டு இட்லிகளுடன் நிறுத்திக் கொண்டாள்.
அங்கே கதிரோ.. நான்கு நான்கு இட்லிகளாக மூன்று முறை வைத்துக் கொண்டு போதும் அப்பத்தா என எழுந்து கொள்ளப் போக.. அப்பத்தா.. நாளெல்லாம் வெளியே அலைகிறவனுக்கு அது எப்படிப் போதும் என மேலும் நான்கு இட்லிகளை வைத்து விட.. அவனும் ஒன்றும் பேசாமல் முழுங்கிக் கொண்டிருந்தான்.
வெற்றியோ போதும் என்று வாயே திறக்கவில்லை.. எழிலரசி எடுத்துக் கொண்டு வந்து இட்லிகளைப் பாத்திரத்தில் அடுக்க அடுக்க.. கோழி குழம்பும், சட்னியும் ஊற்றி ஊற்றி உள்ளே தள்ளி கொண்டு இருந்தான்..
இவர்கள் போதாதென்று அவர்கள் தந்தை சக்திவேலும் அவர்களுக்கு இணையாகக் கட்டு கட்டிக் கொண்டிருந்தார்.. தின்று கொழிக்கும் குடும்பம் போலும்.. வயிற்றுக்கு வஞ்சனை இல்லாதவர்கள்..
வேறு வழியில்லாமல் அவ்வளவுதான் சத்யாவால் நினைக்க முடிந்தது..
பின்னே அவர்கள் உண்ணும் அழகில் சத்யாவுக்கு உமட்டிக் கொண்டு வராமல் இருந்ததே பெரிய விஷயமல்லவா..
இவர்கள் தட்டுக்களில் இட்லியை அணிவகுத்த அப்பத்தாவோ இரண்டு இட்லிகளுடன் அளவாய் நிறுத்திக் கொண்டது சத்யாவுக்கு ஆச்சர்யமே..
அவள் பார்வையைப் புரிந்தவரும்.. வயசான காலத்தில் ஆசைப்பட்டுத் தின்று அவதிப்படுவதை விட அளவாய் உண்பது உடலுக்கு நல்லது என்ற வியாக்கியானம் வேறு.
இப்படியாக அவர்கள் காலை உணவு வேலை முடிந்திருக்க.. கதிர்வேல் ரைஸ் மில்லுக்குச் சென்று விட்டு.. அப்படியே சர்க்கரை ஆலைக்குச் செல்லப் போவதால்.. மதிய உணவை உதவியாள் மூலம் அப்பத்தாவிடம் அனுப்பி வைக்கச் சொன்னவன்.. இனி மாலையில் பார்க்கலாம் என்று அனைவரிடம் சொல்லிவிட்டு.. சத்யாவுக்கு சென்று வருவதாகத் தலையாட்டி விட்டுச் சென்றான்.
அவள் அவனைக் கண்டு கொண்டால் தானே..
சக்திவேலும்.. செங்கல் சூளை பக்கம் போவதாகச் சொல்லி விட்டு அகன்று விட்டார்.
அங்கே வெற்றிவேலும், சத்யாவும், அப்பத்தாவும் தான் மிகுந்தனர்.
"என்ன கொழுந்த....கொழுந்த.......நாரே.. நீ எங்கேயும் போகலையோ?.." சத்யா வெற்றியை வம்புக்கிழுத்தாள்.
"அம்மா.. சத்யா அண்ணி.. தயவுசெய்து என்னை இப்படிக் கூப்பிடாதேம்மா.. என்னவோ நாத்தம் பிடிச்சவனேன்னு சொல்லாறா போல இருக்கு.. எப்பவும் போல வெற்றின்னே கூப்பிடு தாயே.. நான் அப்பத்தாகிட்ட அட்ஜஸ்ட் பண்ணுறேன்.." வெற்றி கையெடுத்து கும்பிட்டே விட்டான்.
"உ ம்.. கொழுந்தனாரே.. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லே.. ஆனா என்னை இந்தக் கிழவிகிட்டே இருந்து காப்பாத்தறது உன்னோட பொறுப்பு.." அவனிடம் மெல்ல முணுமுணுத்தவள்..
"ஒரே போரடிக்குது வெற்றி.. இந்த ஊருல எந்தவித பொழுது போக்கும் இல்லையே?.. எப்படித்தான் இவங்ககெல்லாம் இருக்காங்களோ?.. நான் என்ன பண்ணுறதுன்னே தெரியலை.."
"அம்மாடி சத்யா.. ஆனாலும் நீ நினைக்கிற மாதிரி சின்னக் கிராமமும் இல்லை.. இந்தச் சங்ககிரி கொஞ்சம் பெரிய டவுனுதாம்மா.. கொஞ்சம் நீ வெளியே வந்து சுத்தி பார்த்தா எல்லா விவரமும் புரியும்.. நீ ரூமுக்குள்ளேயே அடைஞ்சி கிடக்காமல் கொஞ்சம் வெளியில் என்ன நடக்குதுன்னு வந்து பார்த்தா விவரம் புரியும்.." என்ற கண்ணாத்தா
"வயசுக்கும், உறவுக்கும் கொஞ்சம் மரியாதை கொடுக்கக் கத்துக்கோணம்.. இப்படி யோசிக்காம பேசறது பொம்பளை பிள்ளைகளுக்கு நல்லதில்லை.. நாவடக்கம் ஒரு பொண்ணுக்கு கூடவே பிறந்ததா இருக்கணும்.. சொல்லிக் கொடுத்த வார்த்தையும்.. கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்கு வரும்.. நீயே பார்த்து பழகணும்மா...."
"அப்பத்தா.. அண்ணி சின்னப் பொண்ணு.. பட்டிணத்துல படிச்சவங்க.. அதிலேயும் இப்படி எதிர்பார்க்காமல் அண்ணனைக் கட்டிக்க நேர்ந்து போச்சு.. கொஞ்சம் அவகாசம் கொடுக்கணும் அப்பத்தா.. நம்ம வீட்டுப் பழக்கத்தையும், இந்த ஊர் வழக்கத்தையும் அவங்களா போகப்போகப் புரிஞ்சிப்பாங்க.. விடுங்க..
"அத்தோட இப்படி நீங்க எதுக்கெடுத்தாலும் குறை கண்டுபிடிச்சா அவங்களுக்கு நம்ம பேருல எப்படி மதிப்பு வரும்.. வெறுப்புதான் வரும்.. உங்களுக்கு அவங்களைப் பத்தி முழுசா விவரமும் இன்னும் தெரியாது.. எல்லாவற்றிர்க்கும் காலம் வரும்.. அதெல்லாம் அண்ணன் பார்த்துக்கும்.. நீங்க விடுவீங்களா.."
என சத்யாவுக்காகப் பரிந்து கொண்டு வந்தான்..
அப்பத்தாவோ 'அது எனக்குத் தெரியாதா என்ன.. அவளைக் கூட்டிலிருந்து வெளியே கொண்டு வரத்தானே நான் பேச்சுக் கொடுக்கிறேன்.. இல்லையென்றால் வெள்ளந்தியான கதிரை அவள் புரிந்து கொள்ள எந்தவித பிரயத்தனமும் செய்ய மாட்டேளே.. சரி கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்.. எல்லாத்துக்கும் நேரம் வரணும்..' என அப்போதைக்குத் தலையாட்டி விட்டு அங்கிருந்து அகன்றார்.
காலமும், நேரமும் வருமா?.. அவளின் ஆட்டம் அங்கே நிலைக்குமா?.. இல்லை ஆட்டம் காணுமா?..
அந்தக் கயிற்றை மேலிருந்து ஆட்டி வைக்கும் அவனுக்குத்தான் தெரியும்.
சத்யா புகுந்த வீட்டிற்கு வந்து மேலும் இரண்டு வாரங்கள் கடந்திருந்த நிலையில்..
கதிருக்கும், சத்யாவுக்கும் இல்லற வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
சத்யா இந்தச் சூழ்நிலைக்குப் பழக வேண்டும் என்று கதிர் அவளை எந்தவித தொந்தரவும் செய்யவில்லை.. அன்று முதலிரவில் அவள் அவனுடன் வாழப் பிடிக்கவில்லையென்று சொல்லிய பிறகு அவளை எந்தவிதத்திலும் வற்புறுத்தப் பிடிக்காமல் வாழ்க்கையை அதன் போக்கில் போக்கிக் கொண்டிருந்தான்.
சத்யாவோ மிகுந்த வெறுப்பில் தான் இருந்தாள்.. திருமணத்திற்கு மறு நாளே, பெற்றவர்கள் அவளிடம் விடை பெற்று சென்றதற்குப் பின், தன் கூட்டுக்குள் முடங்கிக் கொண்டாள்.
என்ன செய்வது.. இனி தன் வாழ்க்கை எந்தத் திசையில் போகப் போகிறது எதுவும் புரியவில்லை.
போதாத குறைக்கு அவள் அம்மா ரேவதி வேறு மகளுக்கு அறிவுரை என்ற பெயரில் காதில் ரத்தம் வரவழைத்து விட்டுச் சென்றது வேறு அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
முதல் இரவுக்கு மறு நாள் காலையில் மகள் கீழே இறங்கி வந்த போதே மகளின் முகத்தை வைத்தே அவள் வாழ்க்கையைத் தொடங்கவில்லை என்று அறிந்து கொண்டார்.. தாய் அறியாத சூலா.. ஆனாலும் அவளிடம் அதைப் பற்றிப் பேசி வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள விரும்பாமல் பொதுவாகப் பேசிவிட்டு..
விடை பெற்றுச் செல்லும் முன்னர் மகளிடம்.. 'தனிமையில் எதுவாக இருந்தாலும் அதை மாற்றுவது அவள் கையில் தான் இருக்கிறது என்றும்..'
'யாருக்கு யார் என்று நாம் நினைத்தாலும் அந்தக் கடவுள் நினைக்கிறதுதான் கடைசியில் நடப்பதாகவும்.. நாம் அனைவருமே அவன் ஆட்டி வைக்கும் பொம்மைகள் தான்.. அதை ஆட்டி வைக்கும் கயிறு அவனிடம்தான் இருக்கிறது என்று சொன்னவர்.. அதைப் புரிந்து கொண்டால் அவள் வாழ்க்கையும் சிறக்கும் என்றவர்..'
'மேலும் ஒரு பெண் நினைத்தால் சாதிக்க முடியாதது இல்லை என்றும்.. இனி அவள் வாழ்க்கை அவள் கையில்.. அதை எப்படிக் கையாள்வது என்பது அவளைப் பொறுத்தே..' என்று சொல்லி விட்டுச் சென்றார்.
இது என்ன மாதிரியான அட்வைஸ் என்று மட்டுமே எண்ணிய சத்யாவோ.. விடாமல்..,
'அவள் பெற்றோர் நினைத்திருந்தால் அந்தக் கயிற்றை மாற்றி ஆட்டி வைத்திருக்கலாம்..' என வாதாடி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..
அன்னை சொன்ன வார்த்தைகளில் இருந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளச் சரியாகத் தவறினாள்.
விதி அவளைப் பார்த்துச் சிரித்திருக்க.. பெற்றவர்கள் அறிவுரையா அவளைப் பாதிக்கப் போகிறது.
இரண்டு வாரம் முடிந்திருந்த நிலையில் ஒரு நாள் காலை மெல்ல எட்டு மணி வாக்கில் தன் அறையிலிருந்து கீழே இறங்கி வந்தாள் சத்யா.
கீழே பெரியதாகப் பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருக்க, இவ்வளவு காலையில் வந்த விருந்தாளி யாரோ என்று யோசித்த வண்ணம் இறங்கி வந்தவள் திகைத்தாள்.
"டேய் வெற்றி நீ எங்கடா இங்கே?.." ஆர்ப்பரித்தாள் சத்யா. அவனருகே வேகமாகச் சென்றவள்.. அவனுக்கு ஹை பைவ் கொடுக்க.. அவனும் சிரித்தான்.
"நான் ஒண்ணும் அரிசிமூட்டை இல்லை.. பாரு இப்போ எவ்வளவு எடை கொறைஞ்சி சரியாத்தான் இருக்கேன்.. நீதான் சீக்கு வந்த கோழி மாதிரி இருக்கே.." எனக் கலாய்க்க..
அமைதியாக அவர்கள் வாயாடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்வேல்.. கடந்த பத்து நாட்களுக்களுக்கு மேலாக அவனிடம் சரியாகப் பேசாமல், கடமைக்கு இரண்டு வார்த்தைகளைப் பேசிவிட்டு தன் மடிக்கணினியில் மூழ்கியிருந்தவள் இன்று குதுகலமாகத் தன் தம்பியுடன் வார்த்தையாடுவதைக் கண்டு அவனுக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சியே.
அதிலும் தான் முதல் நாள் அவளைப் பற்றி நினைத்ததையே தன் தம்பி சொல்லியவுடன் அவனுக்கு உள்ளுக்குள் இன்னும் உவகைப் பொங்கியது.
"சரியா சொன்னேடா வெற்றி.. நான் கூடச் சத்யாவை அப்படித்தான் நினைச்சேன்.." என அப்படியே சத்திய சந்தனாக உண்மையை விளம்ப..
"ஹலோ.. என்ன கொழுப்பா.. நினைப்பிங்க நினைப்பீங்க.. அவன் சொன்னா ஓ.கே.. நாங்க ரெண்டு பேரும் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்.. எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்.. இதெல்லாம் நீங்க பேசக் கூடாது.."
என்ற சத்யா அவனை முறைக்க.. வெற்றிவேல் அவளை ஆமோதித்து மேலும் அவளை வம்பிக்கிழுத்து சீண்ட.. எங்கிருந்தோ வந்தார் கண்ணாத்தா பாட்டி.
"அடியே பேத்தி.. உடமைப்பட்டவன் சொல்லுறான்.. அவன் சொல்லாம வேறு யாரு சொல்லுவாங்களாம்.. இதோ நிக்கிறானே இந்த மடப்பயலா?.." என வெற்றியை பார்க்க..
"அப்பத்தா.. எதுக்கு இப்போ என்னை வம்புக்கிழுக்கறே?.. எனக்குக் கோவம் வந்திச்சு அப்புறம் தெரியும் என் சங்கதி.." வெற்றிவேலோ காலை உதைத்தான்.
"அண்ணியா?.. சத்தி....யா.. போட்டுடுங்காளே ஆர்டரு.. இந்தக் கண்ணாத்தா அப்பத்தா ஆர்டர் போட்டா நாங்க கேட்டே ஆகணுமே.. இல்லாட்டா சோறு தண்ணி கண்ணுல காட்டாதே.. அதுவும் இன்னிக்கு நாட்டுக் கோழி குழம்பு வேறு ஸ்பெஷலா வைக்கப் போறத எனக்குப் பட்சி தகவல் சொல்லிச்சு.."
"டேய்.. வெற்றி.. என்னடா இது புதுக் குழப்பம்.. அண்ணி.. கிண்ணின்னு.. அப்போ நீ?.."
"ஹலோ.. உங்களுக்கு இன்னும் விவரம் தெரியாதோ?.. நான் தான் தெ கிரேட் வெற்றிவேல்.. உங்க புருஷனுக்கு.. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுக்கு இருக்கிற செல்ல தம்பி.. மிஸ்டர் சக்திவேலோடு இரண்டாவது மகன்.. இதோ நிக்கிறாங்களே கண்ணாத்தா கிழவி.. அதோடு செல்ல பேரன்.."
"டேய் நான் கிழவியாடா.. உன்னை....." கண்ணத்தா பக்கத்தில் எங்காவது கம்பு இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் தேட..
வெற்றியோ சட்டெனத் தன் அண்ணன் பின்னால் ஒளிந்து கொண்டான்..
கதிர்வேல் பெரிதாகச் சிரிக்க சத்யோவோ திகைத்துப் போய் இருந்தாள்.
வெற்றிவேல் அவளுடன் சென்னையில் இஞ்சினியரிங்க் படித்திருந்தான்.. அவன் வேறு துறை என்றாலும்.. சத்யாவின் நண்பர்களுடன் அவனும் கல்லூரி ஹாஸ்டலில் உடன் தங்கியிருக்க அதில் பழக்கமானவன் வெற்றி.
ஆரம்பத்தில் சற்று குண்டாக இருந்தவன்.. மற்றவர்களால் அரிசி மூட்டை எனக் கிண்டலடிக்கப்பட்டு, பின்னர் ரோஷமாக உடம்பைக் குறைத்தவன்.
ஆனாலும் அவன் ஒவ்வொரு முறை ஊருக்குத் திரும்பி கல்லூரிக்கு வரும் பொழுது மீண்டும் கஷ்குமொஷ்கென்று வருபவனைக் கிண்டல் அடிக்கும் அவர்கள் குழு.
"அப்போ வெற்றி.. நீ கதிரோட ப்ரதரா?.. அப்போ நீ குண்டா இருக்கிறதுல ஆச்சிரியமேயில்லை.. இப்படி கோழி அடிச்சி குழம்பு வைச்சி தின்னா.. இப்போ????.. இது உங்க குடும்பச் சொத்துன்னு.." கதிர்வேல் மேல் பொருள் பொதிந்த பார்வையை வீசினாள்.
கதிர்வேல் முகம் சுருங்க.. வெற்றியோ இயல்பாகச் சிரித்தான்.
தன் மூத்த பேரனின் முக வாட்டத்தைக் காணப் பொறுக்காத கண்ணாத்தாவோ..
"என்ன மருமவளே.. இதான் பட்டணத்து குசும்போ.. எங்க பேரன்களை நக்கலடிக்கிறீயோ.. பாவம் புள்ளைக.. வயத்துக்கு வஞ்சனை செய்ய மாட்டாங்க.. உங்கள மாதிரி பட்டிணத்துக்காரங்க மாதிரி வாயை கட்டணும்னு எங்களுக்கு அவசியமில்லமா.. நாங்களெல்லாம் உழைப்பாளிங்கமா.. உங்களை மாதிரி நாசூக்கா திண்ணுட்டு சொங்கி போய் விளுக மாட்டோம்.."
"அப்பத்தா.. அவ சின்னப் பொண்ணு.. யதார்த்தமா ஏதோ கிண்டல் பண்ணுறா.. " கதிர் பரிந்து கொண்டு வர..
"யதார்த்தமாவது.. பதார்த்தமாவது.. அதுக்குள்ள ஒம் பொஞ்சாதிக்கு பரிஞ்சிட்டு வாரீயோ?.. உ ம் பரவாயில்லை.. பேத்தி கொஞ்சம் வாய் துடுக்குன்னாலும் புருஷனை முடிஞ்சி வைச்சுக்கிற வித்தையைச் சரியா படிச்சி வைச்சிருக்கு.. போகட்டும் அந்த மட்டும் எம் பேரன் அதிர்ஷடசாலிதான்.." என்றவர் சத்யாவின் கன்னத்தை வழித்து நெட்டி எடுத்தார்.
'அப்படியா.. நீ முடிஞ்சி வச்சிருக்கியா?.. எங்கே காமி..' என அவளை ஒரு மாதிரி பார்த்து வைத்தான் கதிர்.
சத்யாவுக்கோ முகம் சிவந்தது.. இந்தக் கிழவி லேசு பட்டதில்லை.. இதற்கெதிரில் கொஞ்சம் வாயை அடக்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டாள்.
"சத்யா.. வெற்றிவேல் என்னுடைய சொந்த தம்பி.. உனக்கு ஏற்கனவே சொல்லியிருந்தேனே எனக்கு ஒரு தம்பி இருக்கான்னு.. இத்தனை நாளா கொஞ்சம் வேலை விஷயமா வடநாட்டுப் பக்கமா போயிருந்தான்.. அவனுக்கு ஏற்கனவே நம்ம திடீர் கல்யாணம் விஷயம் பற்றிச் சொல்லி இருந்தேன்.." கதிர் எடுத்துச் சொல்ல..
"ம்..' எனத் தலையட்டினாள் சத்யா.
"ஹாய் அண்ணி.. எனக்கு அண்ணன் போட்டோ வாட்ஸப்பல உங்க திடீர்க் கல்யாணம் முடிஞ்ச உடனேயே அனுப்பிச்சு.. அப்பவே எனக்குத் தெரியும் நம்ம ஒல்லிகுச்சி சத்யாதான் எங்க அண்ணன் வொய்ஃப்ன்னு.. நான் அண்ணன் கிட்ட உங்களைத் தெரிஞ்சா மாதிரி காமிச்சிக்கலை.. சர்ப்பரைஸ் கொடுப்போன்னுதான் வந்தேன்.."
"நான் எதிர்பார்க்கலை வெற்றி.. உங்க ஊரு ஏதோ கிராமம்ன்னு தெரியும்.. ஆனா நீ இவரோட தம்பின்னு.." என்றவள்..
"அப்பாடி.. ரொம்பப் போரடிச்சி போய்க் கிடைந்தேன்.. ஐயாம் சோ ஹாப்பி.. இனிமேல் எனக்கு ஈடா பேச நம்ம செட் ஒருத்தன் கிடைச்சான்..இனி தூள் கிளப்பிட மாட்டேன்.." என்றவள்..
"ஹேய்.. அது என்ன அண்ணின்னு.. எப்பவும் போலச் சத்தி இல்லை சத்யானே கூப்பிடு வெற்றி.."
மீண்டும் முகம் கருத்தான் கதிர்.
"அம்மாடி மருமவளே.. வெற்றி உன்னோட படிச்சவனா இருக்கலாம்.. ஏன் ஒரே வயசா கூட இருக்கலாம்.. ஆனா இது உங்க பட்டிணம் இல்லை.. பேரை சொல்லி கூப்பிட.. எதுக்கும் மொறை இருக்கும்மா.. அவனோட அண்ணன் பெண்டாட்டி நீ.. அதுக்கு உரிய மரியாதைய அவன் கொடுத்துதான் ஆகணும்.. உன்னை அண்ணின்னு கூப்பிடட்டும்..
"அதே போல நீயும் அவனுக்கு உரிய மரியாதை கொடு.. கொழுந்தனாரேன்னு கூப்பிடு.."
"பின்னே.. கதிர் என் புருஷந்தானே.. கதிர்ன்னு சொல்லாமல் வேறு என்ன சொல்லுறது?.. இதுல என்ன இருக்கு கி... அப்பத்தா.." கிழவியென்று சொல்ல வந்தவள் கப்பென அப்பத்தா எனச் சொல்லி சமாளித்தாள்.
இல்லையென்றால் கண்ணாத்தா அவளைக் கிழித்துத் தோரணம் கட்டி விட மாட்டாளா?..
"ம்.." அவள் சொல்ல வந்தது அறியாதவரா அவர்.. ஆனாலும் அதைப் பெரிது பண்ணாமல்..
"மாமான்னு சொல்லலாம்.. இல்லை ஆசையா அத்தான்னு சொல்லலாம்.. நானெல்லாம் உங்க பாட்டனை மாமான்னு கூடச் சொன்னதில்லை.. அவ்வளவு வெட்கம்.. ஆனா இந்தக் காலத்து புள்ளைக இப்படிப் புருஷனை பேரைச் சொல்லி விரட்டுது.. பேர் சொன்னா புருஷன் ஆயுசு குறையும்ன்னு இந்தக் காலத்துப் புள்ளைகளுக்கு எங்கே தெரியப் போகுது.. என்ன பட்டிணத்து நாகரீகமோ?.."
"பாரு.. நான் உன்னைய ஒரு வார்த்தை சொல்லக் கூடாதாம்.. எம் பேரன் எப்படி மொறைச்சி பார்க்குறான்.. ஏற்கனவே அவனுக்குக் கொட்டை கண்ணு.. இதுல வயசான காலத்துல இப்படிப் பார்த்தா நான் என்னத்துக்கு ஆவுறது?.." நொடித்துக் கொண்டார் கண்ணாத்தா..
"அப்பத்தா.. இப்படிச் சந்தடி சாக்குல என்னை வம்பகிழுக்கணுமா?.. எம் பெண்டாட்டி என்னை எப்படிக் கூப்பிடணும்னு நான் பார்த்துக்கறேன்.. மனசுல புருஷங்கற மதிப்பும், மரியாதையும் இருந்தா போதும்.. அவ என் பேரை சொல்லறதுல எனக்கே எந்தவித ஆட்சேபனையும் இல்லேன்ன போது.. இப்போ விடுவிங்கிளா?.." என்ற கதிர்,
"இப்போவாச்சு காலை பலகாரத்தைக் கண்ணுல காட்டுவியா.. பசி உசுரு போகுது?.." என்றான்.
"சரி சரி சாப்பிட வாங்க.. என் பேரன் பசி தாங்க மாட்டான்.. ஏலேய் வெற்றி உங்கப்பனை எங்கடா காணாம்.. ஊர்லேருந்து சின்ன மகன் வந்திருக்கான்னு கொஞ்சமாவது நினைப்பிருக்கா.." கதிரின் முறைப்பில் அப்படியே பேச்சை மாற்றினார் கண்ணாத்தா.
"ஆத்தா.. எதுக்கு எட்டு ஊருக்கு கேக்கற மாதிரி என்னை ஏலம் விடறே?.. தோ வந்திட்டே இருக்கேன்.." என்றபடி உள்ளே நுழைந்தார் சக்திவேல்.
"அப்படியே உன்னை ஏலம் விட்டாலும்.... அவ்வளவு தைரியமா எவன் டா அவன் எப்புள்ளைய விலை பேசறவன்.."
"அய்யோ ஆத்தா.. ஒரு பேச்சுக்கு சொன்னா.. பசி வவுத்த கிள்ளுது.. கொஞ்சம் இட்லிய அந்த நாட்டு கோழி குழம்போட கண்ணுல காட்டேன்.."
"அதானப் பார்த்தேன்.. வந்துடுவானா எவனாவது.. கிழிச்சி மாலையாக்கி தொங்கி தோரணம் கட்டி விட்டுட மாட்டேன்.. எம் மவன் யாரு.. எட்டுபட்டியும் கட்டி ஆளுறவன் டா.. அவனை.. சரி சரி.. மொறைக்காதீங்கடா பேராண்டிகளா.. வாங்க..சாப்பிடலாம்.. அடியே எழிலு.. எல்லாத்தையும் டேபிள்ள எடுத்து அடுக்கி வைச்சியாடி...." கத்தியபடி உள்ளே சென்ற கண்ணாத்தாவை பின் தொடர்ந்தனர் மற்றவர்கள்.
அண்ணனுடன் தம்பியும் இட்லியுடன் கோழி குழம்பை போட்டுக் கொண்டு புரட்டிக் கொண்டிருப்பதைக் காண சகிக்கவில்லை சத்யாவுக்கு..
பேத்தியையும், பேரன் பக்கத்திலேயே உட்கார வைத்த கண்ணாத்தா.. பார்த்து பார்த்துப் பரிமாறினார்.. சத்யா இரண்டு இட்லிகள் போதும் என.. அப்பத்தாவின் முறைப்பில் மேலும் இரண்டு இட்லிகளுடன் நிறுத்திக் கொண்டாள்.
அங்கே கதிரோ.. நான்கு நான்கு இட்லிகளாக மூன்று முறை வைத்துக் கொண்டு போதும் அப்பத்தா என எழுந்து கொள்ளப் போக.. அப்பத்தா.. நாளெல்லாம் வெளியே அலைகிறவனுக்கு அது எப்படிப் போதும் என மேலும் நான்கு இட்லிகளை வைத்து விட.. அவனும் ஒன்றும் பேசாமல் முழுங்கிக் கொண்டிருந்தான்.
வெற்றியோ போதும் என்று வாயே திறக்கவில்லை.. எழிலரசி எடுத்துக் கொண்டு வந்து இட்லிகளைப் பாத்திரத்தில் அடுக்க அடுக்க.. கோழி குழம்பும், சட்னியும் ஊற்றி ஊற்றி உள்ளே தள்ளி கொண்டு இருந்தான்..
இவர்கள் போதாதென்று அவர்கள் தந்தை சக்திவேலும் அவர்களுக்கு இணையாகக் கட்டு கட்டிக் கொண்டிருந்தார்.. தின்று கொழிக்கும் குடும்பம் போலும்.. வயிற்றுக்கு வஞ்சனை இல்லாதவர்கள்..
வேறு வழியில்லாமல் அவ்வளவுதான் சத்யாவால் நினைக்க முடிந்தது..
பின்னே அவர்கள் உண்ணும் அழகில் சத்யாவுக்கு உமட்டிக் கொண்டு வராமல் இருந்ததே பெரிய விஷயமல்லவா..
இவர்கள் தட்டுக்களில் இட்லியை அணிவகுத்த அப்பத்தாவோ இரண்டு இட்லிகளுடன் அளவாய் நிறுத்திக் கொண்டது சத்யாவுக்கு ஆச்சர்யமே..
அவள் பார்வையைப் புரிந்தவரும்.. வயசான காலத்தில் ஆசைப்பட்டுத் தின்று அவதிப்படுவதை விட அளவாய் உண்பது உடலுக்கு நல்லது என்ற வியாக்கியானம் வேறு.
இப்படியாக அவர்கள் காலை உணவு வேலை முடிந்திருக்க.. கதிர்வேல் ரைஸ் மில்லுக்குச் சென்று விட்டு.. அப்படியே சர்க்கரை ஆலைக்குச் செல்லப் போவதால்.. மதிய உணவை உதவியாள் மூலம் அப்பத்தாவிடம் அனுப்பி வைக்கச் சொன்னவன்.. இனி மாலையில் பார்க்கலாம் என்று அனைவரிடம் சொல்லிவிட்டு.. சத்யாவுக்கு சென்று வருவதாகத் தலையாட்டி விட்டுச் சென்றான்.
அவள் அவனைக் கண்டு கொண்டால் தானே..
சக்திவேலும்.. செங்கல் சூளை பக்கம் போவதாகச் சொல்லி விட்டு அகன்று விட்டார்.
அங்கே வெற்றிவேலும், சத்யாவும், அப்பத்தாவும் தான் மிகுந்தனர்.
"என்ன கொழுந்த....கொழுந்த.......நாரே.. நீ எங்கேயும் போகலையோ?.." சத்யா வெற்றியை வம்புக்கிழுத்தாள்.
"அம்மா.. சத்யா அண்ணி.. தயவுசெய்து என்னை இப்படிக் கூப்பிடாதேம்மா.. என்னவோ நாத்தம் பிடிச்சவனேன்னு சொல்லாறா போல இருக்கு.. எப்பவும் போல வெற்றின்னே கூப்பிடு தாயே.. நான் அப்பத்தாகிட்ட அட்ஜஸ்ட் பண்ணுறேன்.." வெற்றி கையெடுத்து கும்பிட்டே விட்டான்.
"உ ம்.. கொழுந்தனாரே.. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லே.. ஆனா என்னை இந்தக் கிழவிகிட்டே இருந்து காப்பாத்தறது உன்னோட பொறுப்பு.." அவனிடம் மெல்ல முணுமுணுத்தவள்..
"ஒரே போரடிக்குது வெற்றி.. இந்த ஊருல எந்தவித பொழுது போக்கும் இல்லையே?.. எப்படித்தான் இவங்ககெல்லாம் இருக்காங்களோ?.. நான் என்ன பண்ணுறதுன்னே தெரியலை.."
"அம்மாடி சத்யா.. ஆனாலும் நீ நினைக்கிற மாதிரி சின்னக் கிராமமும் இல்லை.. இந்தச் சங்ககிரி கொஞ்சம் பெரிய டவுனுதாம்மா.. கொஞ்சம் நீ வெளியே வந்து சுத்தி பார்த்தா எல்லா விவரமும் புரியும்.. நீ ரூமுக்குள்ளேயே அடைஞ்சி கிடக்காமல் கொஞ்சம் வெளியில் என்ன நடக்குதுன்னு வந்து பார்த்தா விவரம் புரியும்.." என்ற கண்ணாத்தா
"வயசுக்கும், உறவுக்கும் கொஞ்சம் மரியாதை கொடுக்கக் கத்துக்கோணம்.. இப்படி யோசிக்காம பேசறது பொம்பளை பிள்ளைகளுக்கு நல்லதில்லை.. நாவடக்கம் ஒரு பொண்ணுக்கு கூடவே பிறந்ததா இருக்கணும்.. சொல்லிக் கொடுத்த வார்த்தையும்.. கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்கு வரும்.. நீயே பார்த்து பழகணும்மா...."
"அப்பத்தா.. அண்ணி சின்னப் பொண்ணு.. பட்டிணத்துல படிச்சவங்க.. அதிலேயும் இப்படி எதிர்பார்க்காமல் அண்ணனைக் கட்டிக்க நேர்ந்து போச்சு.. கொஞ்சம் அவகாசம் கொடுக்கணும் அப்பத்தா.. நம்ம வீட்டுப் பழக்கத்தையும், இந்த ஊர் வழக்கத்தையும் அவங்களா போகப்போகப் புரிஞ்சிப்பாங்க.. விடுங்க..
"அத்தோட இப்படி நீங்க எதுக்கெடுத்தாலும் குறை கண்டுபிடிச்சா அவங்களுக்கு நம்ம பேருல எப்படி மதிப்பு வரும்.. வெறுப்புதான் வரும்.. உங்களுக்கு அவங்களைப் பத்தி முழுசா விவரமும் இன்னும் தெரியாது.. எல்லாவற்றிர்க்கும் காலம் வரும்.. அதெல்லாம் அண்ணன் பார்த்துக்கும்.. நீங்க விடுவீங்களா.."
என சத்யாவுக்காகப் பரிந்து கொண்டு வந்தான்..
அப்பத்தாவோ 'அது எனக்குத் தெரியாதா என்ன.. அவளைக் கூட்டிலிருந்து வெளியே கொண்டு வரத்தானே நான் பேச்சுக் கொடுக்கிறேன்.. இல்லையென்றால் வெள்ளந்தியான கதிரை அவள் புரிந்து கொள்ள எந்தவித பிரயத்தனமும் செய்ய மாட்டேளே.. சரி கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்.. எல்லாத்துக்கும் நேரம் வரணும்..' என அப்போதைக்குத் தலையாட்டி விட்டு அங்கிருந்து அகன்றார்.
காலமும், நேரமும் வருமா?.. அவளின் ஆட்டம் அங்கே நிலைக்குமா?.. இல்லை ஆட்டம் காணுமா?..
அந்தக் கயிற்றை மேலிருந்து ஆட்டி வைக்கும் அவனுக்குத்தான் தெரியும்.