உன்னுள் உறைந்தேனே பிரியசகி 4
வெளியில் செல்லும் சத்யனையே பார்த்து கொண்டு இருந்தாள் உமா... அவன் சென்றதும் கதவு மூடி கொள்ள
உமாவிற்கு குழப்பங்கள் தான் அதிகமானது... அதிலும் அவள் கண்ட காட்சி.. அது கனவா, கற்பனையா, இல்லை, அவள் வாழ்வில் நடந்த நிகழ்வா என்பது மட்டும் அவளுக்கு புரியவே இல்லை..யாரை கேட்பது என்பதும் கூட புரியவில்லை அவளுக்கு.
"ஆனால் அதில் அனைவரும் சங்க காலத்தை சேர்ந்தவர்கள் போல இருந்தார்களே.. அதிலும் அந்த டாக்டர் எப்படி அதுல வந்தாரு.. அவர் யார் எனக்கு" பெட்டில் பின் நோக்கி சாய்ந்த படி, கண்ணை மூடி அவள் யோசிக்க.
"டமால்" என்று கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ஆதிரா.. அவள் எழுப்பிய சத்ததில் நெற்றி சுழித்த படி.
"எத்தனை தடவை சொல்லுறது உனக்கு... பொறுமையா நடக்க சொல்லி... பொண்ணு மாதிரி நடந்துக்கோ ஆதிரா" என்றாள் உமா அவளையும் அறியாமல்.
அதில் விக்கித்து போய் நின்ற ஆதிரா.. "அக்கா உனக்கு நியாபகம் வருதா... நான் இப்டி தான் நடப்பேன்னு உனக்கு நியாபகம் இருக்கா" என்றாள் எதிர்பார்ப்போடு.
அதில் கலங்கிய உமா.. "இல்லை, எதோ தோணியது சொல்லிட்டேன்... வேற எதுவும் நியாபகம் பண்ண முடியல... எவ்வளவு யோசிச்சாலும் எதுவும் நியாபகம் வர மாட்டேங்குது" என்றாள் சோகமாக.
இது ஆதிராவிற்கு ஏமாற்றத்தை தந்தாலும்..அதை முகத்தில் காட்டாமல் மறைத்தவள்...
"பரவாயில்லைக்கா..நான் எதுக்கு இருக்கேன்.. உனக்கு எல்லாத்தையும் நியாபகம் பண்ணிடுறேன்... நான் எப்பவும் இப்டி தான்.. கண்ணு மண்ணு தெரியாதா மாதிரி அங்கேயும் இங்கயும் ஓடுவேன்... நீயும் அம்மாவும் இதோ இப்போ நீ சொன்னா மாதிரியே தான் சொல்லி திட்டுவீங்க" என்றாள் கையில் இருக்கும் பொருட்களை கீழே வைத்த படி.
"இவ இப்போயும் திருந்தல போல" தனக்கு தெரிந்த பார்வையை நினைத்த படி அவள் புன்னகைக்க.. அதை பார்த்த ஆதிராவிற்கு ஏனோ மன நிறைவு தான்.
அவள் அம்மா என்று கூற.. "நம்ப அம்மா அப்பா எங்க ஆதிரா... எனக்கு விபத்து ஆகி யாரும் என்னை வந்து பார்க்கவே இல்லை... வீட்டுக்கு போயிருக்காங்களா?" என்றாள் கேள்வியாய்.
பொருட்களை அடுக்குவதை நிறுத்தி விட்டு... உமாவை பார்த்த ஆதிரா.. அவளிடம் சென்று.. அவளின் அருகில் அமர்ந்தவள்.
"அக்கா.. நம்ப அப்பா அம்மா இப்போ தான் ஒரு வாரத்துக்கு முன்னாடி இறந்து போனாங்க.. ஒரு விபத்துல தான் இறந்தாங்க.. அதனால தான் உனக்கு விபத்துனு கேட்ட அப்போ...எனக்கு ரொம்பவே பயமா போச்சு" திக்கி திணறி வலியுடன் அவள் பேசுவதை பார்க்க முடுயாமல் அவளை தன்னுடன் அணைத்து கொண்டாள் உமா.. ஆதிராவை தன் தங்கை என்பதை முழுவதுமாக நம்பவும், ஏற்கவும் செய்தது அவளின் மனது.
பின் அவளிடம் இருந்து விலகிய உமா.. எப்படி இறந்தார்கள்... என்ன ஆனது என்று கேட்க தான் எண்ணினாள்... ஆனால் கலங்கிய ஆதிராவை பார்த்ததும்... இப்போது வேண்டாம்.. பிறகு கேட்கலாம் என்று அமைதியாகி விட்டாள்.
உமாவிடம் பேச துவங்கிய ஆதிரா... "உனக்கு சாப்பிட நான் சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன்க்கா...இந்த உனக்கு பிடிச்ச சிக்கன் சீஸ் சாண்விச்"என்ற படி அவள் கையில் அதை குடுக்க..
அவளும் அதை ஆசையாய் வாங்கி உண்டவள்.. "ரொம்பவே நல்லா இருக்கு...எங்க போய் வாங்குன..இவ்ளோ நல்லா செஞ்சி இருக்காங்க? "
"வாங்கினது இல்லக்கா..உனக்காக நானே செஞ்சது.. கீழ கேன்டீன் இருந்துது.. ஆனா அதுல சாப்பாடு எதுவும் பிரெஷ்ஷா இல்ல...அதனால நானே உள்ள நுழஞ்சி பண்ணிட்டேன்" என்றாள் பெருமையாக.
உமா அடுத்து எதோ கேட்க நினைத்து வாய் எடுத்தாலும்.. "மொதல்ல சாப்பிடு அக்கா.. அப்றம் எல்லாத்தையும் பேசிக்கலாம்"என்று அவள் கூற...சரி என்ற படி அவளும் சாப்பிட்டாள்.
பின் வீட்டில் இருந்து போட்டோ ஆல்பம் ஒன்றை கொண்டு வந்த ஆதிரா...உமாவிற்கு அதில் இருந்த அனைவரையும் அறிமுகம் செய்தாள்...
அதில் தன் தாய் தந்தையுடன் ஊட்டி சுற்றுலா போன போது எடுத்த புகை படம்.. அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்த உமாவிற்கு.. திடீரென எதோ தோன்ற.
"ஆதிரா.. சாயங்காலம் நாம வீட்டுக்கு போறதா சொன்னியே..அப்போ இந்த ஹாஸ்பிடல் பில் எப்படி கட்டுறது.. நான் என்ன வேலை செஞ்சேன்னு எதுவும் எனக்கு நியாபகம் இல்லை... இந்த ஹாஸ்பிடல் பாக்கும் போது, ரொம்ப செலவாகி இருக்கும் போலயே... அதை எப்படி கட்ட போறோம்" என்றாள் அறையை சுற்றி தன் பார்வையை சுழற்றி, கவலையாய்.
அவள் பேசுவதை கேட்டவள்...சத்தமாய் சிரிக்க..பின் தொடர்ந்தவள்.. "நீ எப்பவுமே அப்பாவி தன் அக்கா... நாம இங்க எதுவும் கட்ட வேண்டாம்... அதுக்கான அவசியமும் இல்லை" என்றவளை குழப்பமாய் பார்த்த உமாவை மேலும் குழப்பாமல் தொடர்ந்தாள் ஆதிரா.
"இது நம்மளோட ஹாஸ்பிடல் அக்கா... அப்பாவும் அம்மாவும் கட்டின நம்ப ஹாஸ்பிடல்... பேர் என்ன தெரியுமா.. "உமைரா ஹாஸ்பிடல்" உமா பிளஸ் ஆதிரா அதன் உமைரா"என்றாள் பெருமிதமாக.
"அப்படியா... நம்ப ஹாஸ்பிடல்லா..அதனால தன் நீ கேன்டீன் உள்ள போய் சமைக்க எல்லாம் செஞ்சியா" என்று உமா யோசிக்க.
"அப்போ நான் என்ன வேலை பார்த்துகிட்டு இருந்தேன்... நீ என்ன பண்றே...நாம எங்க தங்கி இருக்கோம்? " என்றாள் கேள்வியாய்.
"பொறுமை..பொறுமை.. ஒரே நேரத்துல எல்லாத்தையும் தெரிஞ்சிக்க வேண்டாம்.. அது உனக்கு ஆபத்துனு சத்யன் சொன்னாரு..அதனால வீட்டை பத்தி அங்க போகும் போது சொல்லுறேன்" என்று தொடர்ந்தவள்.
"நீ இதோ இந்த ஹாஸ்பிடல்ல தன் வேலை செய்யுற...மகப்பேறு மருத்துவரா வேலை செய்யுறீங்க.. நான் இந்த ஹாஸ்பிடலோட காலேஜ்ல தன் இறுதி ஆண்டு மருத்துவம் படிக்குறேன்.. அது இல்லாமல் நீங்க பாடமும் எடுக்குறீங்க...இப்போதைக்கு இது போதும்... மீதி எல்லாம் அப்றம் சொல்லுறேன்" என்றவள் அங்கு இருக்கும் துணிகளை மடித்து வைத்து கொண்டு இருக்க.
அப்போது மேஜை மேல் இருந்த புத்தகம் ஒன்று தவிரி கீழே விழுந்தது... அது உமாவின் கவனத்தை ஈர்க்க..
"என்ன அது...என்ன புத்தகம் அது" என்றாள் ஆர்வமாய்.
"இது நீ வரையுறதுக்கு பயன் படுத்துற புத்தகம் அக்கா...இதுல நீ நெறைய படம் வரஞ்சி வெச்சி இருக்க... ஆனால் நான் தான் பார்த்ததே இல்லை... இல்லை உன்னை தவிர யாரும் தொட நீ விடுவது இல்லை" என்ற படி அதை உமாவிடம் நீட்ட.
அதை வாங்கியவள்.. அதன் பக்கங்களை திருப்ப ஆரம்பித்தாள்.
முதல் பக்கத்தில்.. சிரித்த படி.. பரத நாட்டிய உடையில் இருந்தாள் ஆதிரா.. "உனக்கு பரதம் எல்லாம் தெரியுமா.. இதுல அழகா இருக்கே" வியந்த படி கூறினாள் உமா.
"ஆமாம் அக்கா.. இது என்னோட முதல் அரங்கேற்றதப்ப நான் ஆடுனது... நீ அழகா வரஞ்சி வெச்சி இருக்கியே... ரொம்பவே நல்லா இருக்கு" என்ற படி அடுத்தடுத்த பக்கங்களை உமா திருப்ப.
அப்போது ஆதிராவின் கை பேசி ஒலித்தது.. எடுத்தவள்.
"இனியா அக்கா... எங்க இருக்கீங்க? கேம்ப் எல்லாம் முடிஞ்சுதா? "
........
"அதுவா.. எதுவும் பிரெச்சனை இல்லை அக்கா.. நான் நல்லா தான் இருக்கேன்"
.......
"ஒரு நிமிஷம் அக்கா.. நீங்க பேசுறது ஒழுங்கா கேக்கல.. நான் வெளியே வரேன்... நீங்க கேன்டீன் வந்துடுங்க" என்ற படி அங்கிருந்து நழுவி விட்டாள்.
ஆதிரா சென்ற உடன் புத்தகத்தின் மற்ற பக்கத்தை புரட்டினாள் உமா.. அதில் ஒரு புகை படத்தில் தன் தாய் தந்தையின் முகத்தை தெரிந்து கொள்ள முடிந்தது அவளால்..
அடுத்த பக்கத்தில் யாரோ ஒரு இளவயது ஆண் அவளின் ஒரு புறமும்.. மறு புறத்தில் அவளின் தந்தையும் நின்று கொண்டு இருந்தனர்...
"யார் இவன்.. எனக்கு அருகில் ஏன் நிற்கிறான்" என்ற கேள்விகள் எழுந்தாலும், ஆதிராவிடம் கேட்போம் என்று அடுத்த பக்கத்தை திருப்ப, மிரண்டே போனாள் உமா.
ராட்சசன் போல் தலையில், பாதி உடைந்த கிரீடம்..உடல் எங்கும் ரத்தம் கசிய.. கை கால்களில் கொப்புளங்கள் போல் வீங்கி இருக்க..
முகம் முழுதும் சிறு கீறல்களோடு...ஒரு பக்கம் காது இல்லாமல், இல்லை இல்லை பாதி அறுக்க பட்டு... முகத்தில் வன்மமும்,கோவமும் நிறைந்து...கருப்பு துணியால் தன் தலையை மறைத்து... உக்கிரமாக நின்று கொண்டு இருந்தான் அவன்.
அவனை பார்த்த மாத்திரத்தில் இனம் புரியா பயம் உமாவின் மனதை ஆட்கொள்ள...கைகள் நடுக்கம் காண துவங்க..."ஆஆஆ" என்று கத்திய படி அந்த புத்தகத்தை கீழே தவற விட்டாள்...
அந்த உருவத்தின் பதட்டம் அவளை ஆட்கொள்ள.. கண் மூடி பின்னால் தலையின் மேல் சாய்ந்த படி அமர்ந்து இருந்தாள் உமா.
அவளின் அந்த அமைதியை கலைக்கும் வண்ணம் காற்று வீச.. அதில் ஜன்னலின் திரைகள் எல்லாம் பறக்க.. அதில் கண் திறந்து பார்த்தாள் உமா...
அதே விம்பங்கள் கண் முன் காட்சியாய் உருவெடுக்க ஆரம்பிக்க...மீண்டும் தோன்றியது எதோ நிகழ்வுகள்...
மண்டபம் போல் அலங்கரிக்க பட்டு இருக்கும் மேடை... ஒரு புறம் அக்கினி குண்டத்துடன் தயாராக காத்திருக்கும் மேடை... மலர்களால் தங்களை அலங்கரித்து கொண்டு...வாழை மரங்கள் இரு பக்கமும் கட்ட பட்டு...காத்திருக்கும் அந்த மண்டபம்.
மறு புறம் தங்கத்தால் ஆனா பூக்களால் அலங்கரிக்கப்பட்டு..பட்டு மெத்தை விரிக்கப்பட்டு...ராஜா மரியாதயுடன் காத்திருக்கும் அந்த சிம்மாசனம். அதில் கவலையே வடிவாய்.. மனதில் குழப்பங்ககே உருவாய் அமர்ந்து இருந்தாள் அவள்... உமையாள்.
திருமண மேடையையும், அரியசான மேடையுயையும் மாறி மாறி பார்த்து கொண்டு குழம்பி போய் இருக்கும் அவளை ராட்சஸ சத்தத்துடன் நெருங்கினான் அவன்.
உடல் எங்கும் காயங்களுடன்...முதுமை சிறிது எட்டி பார்க்க.. கையில் நீளமான வாளுடன்.. கண்ணில் கோவத்துடன் நெருங்கினான் அவன், உமையாளை.
அவனை கண்டவுடன் பயம் குடி கொள்ள.. அரியணையில் சற்று உள் நோக்கி அமர்கிறாள் உமையாள்.
"அவளை நெருங்கியவன்... என்ன செய்கிறாய் உமையாள்...இது அனைத்தும் உனது பிழையே... உன்னால் தான் இந்த நிலை இப்போது... அவனை மறந்து விடு... உன்னுடைய ஊழ் எதுவோ அதன் படி நடந்து கொள்..இல்லையேல் முடிவுகள் விபரீதமாக இருக்கும்... சம்யுக்தன் தான் உன்னுடைய ஊழ்" அவளை மிரட்டிய படி அந்த அரசபையின் நடுவில் சென்று நின்ற அவன்... அந்த அவையே அதிரும் வண்ணம் சிரித்தான்... அவன்
அந்த பார்வையின் மிரட்சியில் அவள் இருக்க..அப்போது கதவை திறந்து கொண்டு வந்தான் சத்யன்
அவனை கண்ட உடன் தாய் பசுவை கண்ட கன்று போல் கண்ணில் நீருடன் அவள் இருக்க.. அதை காண பொறுக்காத சத்யன்.. ஓடி போல் அவளை அள்ளி அணைத்து கொண்டான்
அவனின் கரத்திலேயே சில வினாடிகள் கழித்தவள்.. பின் pesa தொடர்ந்தாள்
"டாக்டர் எனக்கு அப்போ அப்போ ஏதேதோ கண் முன்னாடி வந்து போகுது.. எனக்கு ஒன்னும் புரியல மாட்டேங்குது" என்றாள் குழப்பாக
அதற்கு ஒரு புன்னைகையை மட்டும் உதிர்த்த சத்யனை என்ன பார்த்த உமா என்றான் நிதானமாக
அவள் கண்ட கட்சி அனைத்தையும் அவள் கூறி முடிக்க..."ரொம்ப குழப்பிக்காத உமா.. எல்லாம் சரி ஆகிடும்"என்றான் ஆறுதலாக
இல்லை என்னோட கேள்விகளுக்கு பதில் வேணும் என்றாள் உமா திடமாக
அவளின் பிடிவாதம் புரிந்தவன்...
"சரி உமா.. கேளு ஆனால் என்னால் முடிந்த கேள்விக்கு தான் பதில் சொல்லுவேன், சரியா?"என்றான் சத்யன்
சற்றும் தாமதிக்காமல் "அவரு யாரு?" என்றாள் உமா பதட்டமாக
நான் அதை சொல்ல கூடாது உமா... நீயே தான் தெரிஞ்சிக்கணும்" என்றான் நிதானமாய்
என்னை எதுக்கு உமையாள்ன்னு கூப்பிட்டாரு... என்னோட பெயர் உமா தானே "வினவியவளை பார்த்து புன்முறுவலிட்டவன்
"அடுத்த கேள்வி" என்றான், பதில் அளிக்க விருப்பம் இல்லாதவனாய்
அந்த சம்யுக்தன் யாரு? " என்றாள் உமா, பதட்டமாக
இப்போ நீ பார்வையில் ஒருவரை பார்த்தா சொன்னியே அவரோட மகன் தான் சம்யுக்தன்" என்றான் சத்யன்
கடைசியா எனக்கு தெரியும் கட்சிகள் எல்லாம் என்ன? விபத்துக்கு முன்னாடி நடந்த விஷயங்களா?
இல்லை... அது எல்லாமே நம்மளோட முன் ஜென்மத்தோட தொடர்பு உடையது" என்றான் முகத்தில் புன்னகையுடன்
நம்ம முன் ஜென்மமா...அப்போ உங்களுக்கும் எல்லாம் தெரியுமா? என்றான் அதிர்ச்சியாய்
இதை எல்லாம் காலம் வரும் போது நீ தெரிஞ்சிக்குவ...இப்போ அமைதியா இரு " என்றான் பொறுமையாய் அவளின் தலையை வருடிய படி
அதோடு ஆதிராவும் உள்ளே வந்து விட..உமாவிடம் இருந்து தள்ளி அமர்ந்தவன் மனதில் தப்பித்தோம் என்று தான் தோன்றியது
உமாவும் அதற்கு மேல் எதுவும் கேட்க வில்லை... நேரம் அவளுக்கு கிடைக்கவும் இல்லை
அவள் கூறியதை நம்ப முடியாமல் அவளையே இரண்டு நிமிடம் உற்று நோக்கியாவின் " என்ன பார்த்த உமா... அதுல உனக்கு என்ன புரிஞ்சுது" என்றான் நிதானமாக
அவள் கண்ட கட்சி அனைத்தையும் கூறி முடிக்க.. அதை கேட்டவனுக்கு உதட்டின் ஓரத்தில் சிறு புன்னைகை எட்டி பார்த்தது
"உனக்கு நான் எப்படி சொல்லுறதுனு தெரியல உமா.. ஆனால் இது எல்லாமே உன்னுடன் சமந்த பட்ட விஷயங்கள் தான்..நீ அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் தான்" என்றான் அதே நிதானம் மாறாமல்
"என்ன தெரிஞ்சிக்கணும்...நான் பார்க்குற ஆளுங்க எல்லாம் யார்... இதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?" என்றாள் உமா, குழப்பம் மாறாமல்
ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தவன், இது எல்லாமே நீதான் தெரிஞ்சிக்கணும் உமா.. நான் இதுல உனக்கு உதவ கூடாது" என்றான் விரக்தியாய்
அவனின் முகத்தையே வியப்பாய் பார்த்த உமா.. "அப்போ உங்களு இதோட அர்த்தங்கள் தெரியுமா?"
விரக்தியை ஆம் என்று தலையாட்டினான் சத்யன்...
வெளியில் செல்லும் சத்யனையே பார்த்து கொண்டு இருந்தாள் உமா... அவன் சென்றதும் கதவு மூடி கொள்ள
உமாவிற்கு குழப்பங்கள் தான் அதிகமானது... அதிலும் அவள் கண்ட காட்சி.. அது கனவா, கற்பனையா, இல்லை, அவள் வாழ்வில் நடந்த நிகழ்வா என்பது மட்டும் அவளுக்கு புரியவே இல்லை..யாரை கேட்பது என்பதும் கூட புரியவில்லை அவளுக்கு.
"ஆனால் அதில் அனைவரும் சங்க காலத்தை சேர்ந்தவர்கள் போல இருந்தார்களே.. அதிலும் அந்த டாக்டர் எப்படி அதுல வந்தாரு.. அவர் யார் எனக்கு" பெட்டில் பின் நோக்கி சாய்ந்த படி, கண்ணை மூடி அவள் யோசிக்க.
"டமால்" என்று கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ஆதிரா.. அவள் எழுப்பிய சத்ததில் நெற்றி சுழித்த படி.
"எத்தனை தடவை சொல்லுறது உனக்கு... பொறுமையா நடக்க சொல்லி... பொண்ணு மாதிரி நடந்துக்கோ ஆதிரா" என்றாள் உமா அவளையும் அறியாமல்.
அதில் விக்கித்து போய் நின்ற ஆதிரா.. "அக்கா உனக்கு நியாபகம் வருதா... நான் இப்டி தான் நடப்பேன்னு உனக்கு நியாபகம் இருக்கா" என்றாள் எதிர்பார்ப்போடு.
அதில் கலங்கிய உமா.. "இல்லை, எதோ தோணியது சொல்லிட்டேன்... வேற எதுவும் நியாபகம் பண்ண முடியல... எவ்வளவு யோசிச்சாலும் எதுவும் நியாபகம் வர மாட்டேங்குது" என்றாள் சோகமாக.
இது ஆதிராவிற்கு ஏமாற்றத்தை தந்தாலும்..அதை முகத்தில் காட்டாமல் மறைத்தவள்...
"பரவாயில்லைக்கா..நான் எதுக்கு இருக்கேன்.. உனக்கு எல்லாத்தையும் நியாபகம் பண்ணிடுறேன்... நான் எப்பவும் இப்டி தான்.. கண்ணு மண்ணு தெரியாதா மாதிரி அங்கேயும் இங்கயும் ஓடுவேன்... நீயும் அம்மாவும் இதோ இப்போ நீ சொன்னா மாதிரியே தான் சொல்லி திட்டுவீங்க" என்றாள் கையில் இருக்கும் பொருட்களை கீழே வைத்த படி.
"இவ இப்போயும் திருந்தல போல" தனக்கு தெரிந்த பார்வையை நினைத்த படி அவள் புன்னகைக்க.. அதை பார்த்த ஆதிராவிற்கு ஏனோ மன நிறைவு தான்.
அவள் அம்மா என்று கூற.. "நம்ப அம்மா அப்பா எங்க ஆதிரா... எனக்கு விபத்து ஆகி யாரும் என்னை வந்து பார்க்கவே இல்லை... வீட்டுக்கு போயிருக்காங்களா?" என்றாள் கேள்வியாய்.
பொருட்களை அடுக்குவதை நிறுத்தி விட்டு... உமாவை பார்த்த ஆதிரா.. அவளிடம் சென்று.. அவளின் அருகில் அமர்ந்தவள்.
"அக்கா.. நம்ப அப்பா அம்மா இப்போ தான் ஒரு வாரத்துக்கு முன்னாடி இறந்து போனாங்க.. ஒரு விபத்துல தான் இறந்தாங்க.. அதனால தான் உனக்கு விபத்துனு கேட்ட அப்போ...எனக்கு ரொம்பவே பயமா போச்சு" திக்கி திணறி வலியுடன் அவள் பேசுவதை பார்க்க முடுயாமல் அவளை தன்னுடன் அணைத்து கொண்டாள் உமா.. ஆதிராவை தன் தங்கை என்பதை முழுவதுமாக நம்பவும், ஏற்கவும் செய்தது அவளின் மனது.
பின் அவளிடம் இருந்து விலகிய உமா.. எப்படி இறந்தார்கள்... என்ன ஆனது என்று கேட்க தான் எண்ணினாள்... ஆனால் கலங்கிய ஆதிராவை பார்த்ததும்... இப்போது வேண்டாம்.. பிறகு கேட்கலாம் என்று அமைதியாகி விட்டாள்.
உமாவிடம் பேச துவங்கிய ஆதிரா... "உனக்கு சாப்பிட நான் சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன்க்கா...இந்த உனக்கு பிடிச்ச சிக்கன் சீஸ் சாண்விச்"என்ற படி அவள் கையில் அதை குடுக்க..
அவளும் அதை ஆசையாய் வாங்கி உண்டவள்.. "ரொம்பவே நல்லா இருக்கு...எங்க போய் வாங்குன..இவ்ளோ நல்லா செஞ்சி இருக்காங்க? "
"வாங்கினது இல்லக்கா..உனக்காக நானே செஞ்சது.. கீழ கேன்டீன் இருந்துது.. ஆனா அதுல சாப்பாடு எதுவும் பிரெஷ்ஷா இல்ல...அதனால நானே உள்ள நுழஞ்சி பண்ணிட்டேன்" என்றாள் பெருமையாக.
உமா அடுத்து எதோ கேட்க நினைத்து வாய் எடுத்தாலும்.. "மொதல்ல சாப்பிடு அக்கா.. அப்றம் எல்லாத்தையும் பேசிக்கலாம்"என்று அவள் கூற...சரி என்ற படி அவளும் சாப்பிட்டாள்.
பின் வீட்டில் இருந்து போட்டோ ஆல்பம் ஒன்றை கொண்டு வந்த ஆதிரா...உமாவிற்கு அதில் இருந்த அனைவரையும் அறிமுகம் செய்தாள்...
அதில் தன் தாய் தந்தையுடன் ஊட்டி சுற்றுலா போன போது எடுத்த புகை படம்.. அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்த உமாவிற்கு.. திடீரென எதோ தோன்ற.
"ஆதிரா.. சாயங்காலம் நாம வீட்டுக்கு போறதா சொன்னியே..அப்போ இந்த ஹாஸ்பிடல் பில் எப்படி கட்டுறது.. நான் என்ன வேலை செஞ்சேன்னு எதுவும் எனக்கு நியாபகம் இல்லை... இந்த ஹாஸ்பிடல் பாக்கும் போது, ரொம்ப செலவாகி இருக்கும் போலயே... அதை எப்படி கட்ட போறோம்" என்றாள் அறையை சுற்றி தன் பார்வையை சுழற்றி, கவலையாய்.
அவள் பேசுவதை கேட்டவள்...சத்தமாய் சிரிக்க..பின் தொடர்ந்தவள்.. "நீ எப்பவுமே அப்பாவி தன் அக்கா... நாம இங்க எதுவும் கட்ட வேண்டாம்... அதுக்கான அவசியமும் இல்லை" என்றவளை குழப்பமாய் பார்த்த உமாவை மேலும் குழப்பாமல் தொடர்ந்தாள் ஆதிரா.
"இது நம்மளோட ஹாஸ்பிடல் அக்கா... அப்பாவும் அம்மாவும் கட்டின நம்ப ஹாஸ்பிடல்... பேர் என்ன தெரியுமா.. "உமைரா ஹாஸ்பிடல்" உமா பிளஸ் ஆதிரா அதன் உமைரா"என்றாள் பெருமிதமாக.
"அப்படியா... நம்ப ஹாஸ்பிடல்லா..அதனால தன் நீ கேன்டீன் உள்ள போய் சமைக்க எல்லாம் செஞ்சியா" என்று உமா யோசிக்க.
"அப்போ நான் என்ன வேலை பார்த்துகிட்டு இருந்தேன்... நீ என்ன பண்றே...நாம எங்க தங்கி இருக்கோம்? " என்றாள் கேள்வியாய்.
"பொறுமை..பொறுமை.. ஒரே நேரத்துல எல்லாத்தையும் தெரிஞ்சிக்க வேண்டாம்.. அது உனக்கு ஆபத்துனு சத்யன் சொன்னாரு..அதனால வீட்டை பத்தி அங்க போகும் போது சொல்லுறேன்" என்று தொடர்ந்தவள்.
"நீ இதோ இந்த ஹாஸ்பிடல்ல தன் வேலை செய்யுற...மகப்பேறு மருத்துவரா வேலை செய்யுறீங்க.. நான் இந்த ஹாஸ்பிடலோட காலேஜ்ல தன் இறுதி ஆண்டு மருத்துவம் படிக்குறேன்.. அது இல்லாமல் நீங்க பாடமும் எடுக்குறீங்க...இப்போதைக்கு இது போதும்... மீதி எல்லாம் அப்றம் சொல்லுறேன்" என்றவள் அங்கு இருக்கும் துணிகளை மடித்து வைத்து கொண்டு இருக்க.
அப்போது மேஜை மேல் இருந்த புத்தகம் ஒன்று தவிரி கீழே விழுந்தது... அது உமாவின் கவனத்தை ஈர்க்க..
"என்ன அது...என்ன புத்தகம் அது" என்றாள் ஆர்வமாய்.
"இது நீ வரையுறதுக்கு பயன் படுத்துற புத்தகம் அக்கா...இதுல நீ நெறைய படம் வரஞ்சி வெச்சி இருக்க... ஆனால் நான் தான் பார்த்ததே இல்லை... இல்லை உன்னை தவிர யாரும் தொட நீ விடுவது இல்லை" என்ற படி அதை உமாவிடம் நீட்ட.
அதை வாங்கியவள்.. அதன் பக்கங்களை திருப்ப ஆரம்பித்தாள்.
முதல் பக்கத்தில்.. சிரித்த படி.. பரத நாட்டிய உடையில் இருந்தாள் ஆதிரா.. "உனக்கு பரதம் எல்லாம் தெரியுமா.. இதுல அழகா இருக்கே" வியந்த படி கூறினாள் உமா.
"ஆமாம் அக்கா.. இது என்னோட முதல் அரங்கேற்றதப்ப நான் ஆடுனது... நீ அழகா வரஞ்சி வெச்சி இருக்கியே... ரொம்பவே நல்லா இருக்கு" என்ற படி அடுத்தடுத்த பக்கங்களை உமா திருப்ப.
அப்போது ஆதிராவின் கை பேசி ஒலித்தது.. எடுத்தவள்.
"இனியா அக்கா... எங்க இருக்கீங்க? கேம்ப் எல்லாம் முடிஞ்சுதா? "
........
"அதுவா.. எதுவும் பிரெச்சனை இல்லை அக்கா.. நான் நல்லா தான் இருக்கேன்"
.......
"ஒரு நிமிஷம் அக்கா.. நீங்க பேசுறது ஒழுங்கா கேக்கல.. நான் வெளியே வரேன்... நீங்க கேன்டீன் வந்துடுங்க" என்ற படி அங்கிருந்து நழுவி விட்டாள்.
ஆதிரா சென்ற உடன் புத்தகத்தின் மற்ற பக்கத்தை புரட்டினாள் உமா.. அதில் ஒரு புகை படத்தில் தன் தாய் தந்தையின் முகத்தை தெரிந்து கொள்ள முடிந்தது அவளால்..
அடுத்த பக்கத்தில் யாரோ ஒரு இளவயது ஆண் அவளின் ஒரு புறமும்.. மறு புறத்தில் அவளின் தந்தையும் நின்று கொண்டு இருந்தனர்...
"யார் இவன்.. எனக்கு அருகில் ஏன் நிற்கிறான்" என்ற கேள்விகள் எழுந்தாலும், ஆதிராவிடம் கேட்போம் என்று அடுத்த பக்கத்தை திருப்ப, மிரண்டே போனாள் உமா.
ராட்சசன் போல் தலையில், பாதி உடைந்த கிரீடம்..உடல் எங்கும் ரத்தம் கசிய.. கை கால்களில் கொப்புளங்கள் போல் வீங்கி இருக்க..
முகம் முழுதும் சிறு கீறல்களோடு...ஒரு பக்கம் காது இல்லாமல், இல்லை இல்லை பாதி அறுக்க பட்டு... முகத்தில் வன்மமும்,கோவமும் நிறைந்து...கருப்பு துணியால் தன் தலையை மறைத்து... உக்கிரமாக நின்று கொண்டு இருந்தான் அவன்.
அவனை பார்த்த மாத்திரத்தில் இனம் புரியா பயம் உமாவின் மனதை ஆட்கொள்ள...கைகள் நடுக்கம் காண துவங்க..."ஆஆஆ" என்று கத்திய படி அந்த புத்தகத்தை கீழே தவற விட்டாள்...
அந்த உருவத்தின் பதட்டம் அவளை ஆட்கொள்ள.. கண் மூடி பின்னால் தலையின் மேல் சாய்ந்த படி அமர்ந்து இருந்தாள் உமா.
அவளின் அந்த அமைதியை கலைக்கும் வண்ணம் காற்று வீச.. அதில் ஜன்னலின் திரைகள் எல்லாம் பறக்க.. அதில் கண் திறந்து பார்த்தாள் உமா...
அதே விம்பங்கள் கண் முன் காட்சியாய் உருவெடுக்க ஆரம்பிக்க...மீண்டும் தோன்றியது எதோ நிகழ்வுகள்...
மண்டபம் போல் அலங்கரிக்க பட்டு இருக்கும் மேடை... ஒரு புறம் அக்கினி குண்டத்துடன் தயாராக காத்திருக்கும் மேடை... மலர்களால் தங்களை அலங்கரித்து கொண்டு...வாழை மரங்கள் இரு பக்கமும் கட்ட பட்டு...காத்திருக்கும் அந்த மண்டபம்.
மறு புறம் தங்கத்தால் ஆனா பூக்களால் அலங்கரிக்கப்பட்டு..பட்டு மெத்தை விரிக்கப்பட்டு...ராஜா மரியாதயுடன் காத்திருக்கும் அந்த சிம்மாசனம். அதில் கவலையே வடிவாய்.. மனதில் குழப்பங்ககே உருவாய் அமர்ந்து இருந்தாள் அவள்... உமையாள்.
திருமண மேடையையும், அரியசான மேடையுயையும் மாறி மாறி பார்த்து கொண்டு குழம்பி போய் இருக்கும் அவளை ராட்சஸ சத்தத்துடன் நெருங்கினான் அவன்.
உடல் எங்கும் காயங்களுடன்...முதுமை சிறிது எட்டி பார்க்க.. கையில் நீளமான வாளுடன்.. கண்ணில் கோவத்துடன் நெருங்கினான் அவன், உமையாளை.
அவனை கண்டவுடன் பயம் குடி கொள்ள.. அரியணையில் சற்று உள் நோக்கி அமர்கிறாள் உமையாள்.
"அவளை நெருங்கியவன்... என்ன செய்கிறாய் உமையாள்...இது அனைத்தும் உனது பிழையே... உன்னால் தான் இந்த நிலை இப்போது... அவனை மறந்து விடு... உன்னுடைய ஊழ் எதுவோ அதன் படி நடந்து கொள்..இல்லையேல் முடிவுகள் விபரீதமாக இருக்கும்... சம்யுக்தன் தான் உன்னுடைய ஊழ்" அவளை மிரட்டிய படி அந்த அரசபையின் நடுவில் சென்று நின்ற அவன்... அந்த அவையே அதிரும் வண்ணம் சிரித்தான்... அவன்
அந்த பார்வையின் மிரட்சியில் அவள் இருக்க..அப்போது கதவை திறந்து கொண்டு வந்தான் சத்யன்
அவனை கண்ட உடன் தாய் பசுவை கண்ட கன்று போல் கண்ணில் நீருடன் அவள் இருக்க.. அதை காண பொறுக்காத சத்யன்.. ஓடி போல் அவளை அள்ளி அணைத்து கொண்டான்
அவனின் கரத்திலேயே சில வினாடிகள் கழித்தவள்.. பின் pesa தொடர்ந்தாள்
"டாக்டர் எனக்கு அப்போ அப்போ ஏதேதோ கண் முன்னாடி வந்து போகுது.. எனக்கு ஒன்னும் புரியல மாட்டேங்குது" என்றாள் குழப்பாக
அதற்கு ஒரு புன்னைகையை மட்டும் உதிர்த்த சத்யனை என்ன பார்த்த உமா என்றான் நிதானமாக
அவள் கண்ட கட்சி அனைத்தையும் அவள் கூறி முடிக்க..."ரொம்ப குழப்பிக்காத உமா.. எல்லாம் சரி ஆகிடும்"என்றான் ஆறுதலாக
இல்லை என்னோட கேள்விகளுக்கு பதில் வேணும் என்றாள் உமா திடமாக
அவளின் பிடிவாதம் புரிந்தவன்...
"சரி உமா.. கேளு ஆனால் என்னால் முடிந்த கேள்விக்கு தான் பதில் சொல்லுவேன், சரியா?"என்றான் சத்யன்
சற்றும் தாமதிக்காமல் "அவரு யாரு?" என்றாள் உமா பதட்டமாக
நான் அதை சொல்ல கூடாது உமா... நீயே தான் தெரிஞ்சிக்கணும்" என்றான் நிதானமாய்
என்னை எதுக்கு உமையாள்ன்னு கூப்பிட்டாரு... என்னோட பெயர் உமா தானே "வினவியவளை பார்த்து புன்முறுவலிட்டவன்
"அடுத்த கேள்வி" என்றான், பதில் அளிக்க விருப்பம் இல்லாதவனாய்
அந்த சம்யுக்தன் யாரு? " என்றாள் உமா, பதட்டமாக
இப்போ நீ பார்வையில் ஒருவரை பார்த்தா சொன்னியே அவரோட மகன் தான் சம்யுக்தன்" என்றான் சத்யன்
கடைசியா எனக்கு தெரியும் கட்சிகள் எல்லாம் என்ன? விபத்துக்கு முன்னாடி நடந்த விஷயங்களா?
இல்லை... அது எல்லாமே நம்மளோட முன் ஜென்மத்தோட தொடர்பு உடையது" என்றான் முகத்தில் புன்னகையுடன்
நம்ம முன் ஜென்மமா...அப்போ உங்களுக்கும் எல்லாம் தெரியுமா? என்றான் அதிர்ச்சியாய்
இதை எல்லாம் காலம் வரும் போது நீ தெரிஞ்சிக்குவ...இப்போ அமைதியா இரு " என்றான் பொறுமையாய் அவளின் தலையை வருடிய படி
அதோடு ஆதிராவும் உள்ளே வந்து விட..உமாவிடம் இருந்து தள்ளி அமர்ந்தவன் மனதில் தப்பித்தோம் என்று தான் தோன்றியது
உமாவும் அதற்கு மேல் எதுவும் கேட்க வில்லை... நேரம் அவளுக்கு கிடைக்கவும் இல்லை
அவள் கூறியதை நம்ப முடியாமல் அவளையே இரண்டு நிமிடம் உற்று நோக்கியாவின் " என்ன பார்த்த உமா... அதுல உனக்கு என்ன புரிஞ்சுது" என்றான் நிதானமாக
அவள் கண்ட கட்சி அனைத்தையும் கூறி முடிக்க.. அதை கேட்டவனுக்கு உதட்டின் ஓரத்தில் சிறு புன்னைகை எட்டி பார்த்தது
"உனக்கு நான் எப்படி சொல்லுறதுனு தெரியல உமா.. ஆனால் இது எல்லாமே உன்னுடன் சமந்த பட்ட விஷயங்கள் தான்..நீ அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் தான்" என்றான் அதே நிதானம் மாறாமல்
"என்ன தெரிஞ்சிக்கணும்...நான் பார்க்குற ஆளுங்க எல்லாம் யார்... இதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?" என்றாள் உமா, குழப்பம் மாறாமல்
ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தவன், இது எல்லாமே நீதான் தெரிஞ்சிக்கணும் உமா.. நான் இதுல உனக்கு உதவ கூடாது" என்றான் விரக்தியாய்
அவனின் முகத்தையே வியப்பாய் பார்த்த உமா.. "அப்போ உங்களு இதோட அர்த்தங்கள் தெரியுமா?"
விரக்தியை ஆம் என்று தலையாட்டினான் சத்யன்...