என் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதை. நல்ல வேளை மகன் இல்லை. மகள்களைக் கல்யாணம் கட்டிக்கொடுத்துவிட்டு இப்படித்தான் உனக்காக நீ எனக்காக நான் வாழ முடிவு செய்தோம். ஆனால் பேரக்குழந்தைகள் வந்த பிறகு மனசு மாறிவிடுகிறது. அவர்கள் வளருகிறவரை உடனிருந்துதான் ஆக வேண்டும். எத்தனை காலத்துக்காகத்தான் இவர்களுக்காக வாழ்வது? நமக்காக வாழ்வது எப்போது? முதுமையின் வேதனையை உணர்த்தும் அருமையான கதை. ஜெயா சிங்காரம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.