கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் காக்கும் மூலிகை சமையல் , அத்தியாயம் - 05

அருகம்புல்



கால் நடைகள், ஆடு, மாடு உண்ணும் புல்லை மனிதன் சாப்பிடுவதா? என்று முகம் சுழித்த காலமெல்லாம் மலையேறி இப்போது அருகம்புல்லே ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் என்கின்ற உணர்வினை பெற்றுள்ளோம். அதற்கு காரணம் அருகம்புல் சாறு நமது உடம்பை பேணி காப்பது தான். இதனை "சித்தர்கள் பாடல்களில் அகத்தியர் குணபாடம்" என்னும் நூலில் எழுதியுள்ளார். தேரையர் தனது நூலில் பெரும்பான்மையாக கூறினார். கணபதி பத்திரம் என்ற நூலில் அருகம்புல்



வாதபித்த ஐயமோ மனை

சிறுக அறுக்குமின்னுஞ் செப்ப - அறிவுதரும்

கண்ணோ யொடுதலை நோய் கண்புகையி ரத்த

பித்தம் உண்ணோ யொழிக்கு மரை..



என்று மிக அழகாக விவரிக்கிறார்.



அறுகம்புல்லை ஏதேனும் ஒரு வகையில் சாப்பிட்டு வர மனிதனின் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்றத்தையும் நீக்கி சுகமளிப்பதோடு, கோழை(சளி)யை நெஞ்சிலிருந்து அறுத்துக்கொண்டு வெளியேற்றும். மேலும் அறிவு பெருகும் கண் நோய், தலைநோய்,கண்படலம், ரத்த பித்தம் ஆகிய நோய்களைத் தீர்க்கும்.





அருகம்புல்லில் நார்ச்சத்து,புரதச்சத்து, சாம்பல்சத்து, நைட்ரஜன், சுண்ணாம்பு சத்து, பொட்டாசியம், காந்தச்சத்து ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.



அருகம்புல் சாறு, அருகம்புல் குடிநீர்(கஷாயம்) வைத்து குடிப்பதால் வயிற்றில் உள்ள அதிகப்படியான அமிலச்சத்து கட்டுப்படுத்தப்படுகிறது.



வயிற்றுப் பொருமல் வாய்வு அஜீரணக் கோளாறை நீக்கி பசியை உண்டாக்கும் மலச்சிக்கலை நீக்கும் போதை வஸ்து அதை வார்த்தைகளில் சொன்னால் குடல் பூச்சிகளை வெளியேற்றும். ஞாபகத்தை அறவே மாற்றிவிடும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகப்படுத்தும் அதிகப் அதிகப்படுத்தி ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் அதிகமாகும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும். ரத்தப் போக்கை குணமாக்கும் மருந்து சாப்பிடுபவர்களும் இந்த மருந்தையும் சேர்த்து சாப்பிடலாம். அதிகம் அருகம்புல் சாறு குணமாக்கும். இதை தினந்தோறும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர்.



அருகம் பாயாசம் :



செய்யத் தேவையான பொருள்கள் :



அருகம்புல்லை சுத்தம் செய்து கணுக்களை நீக்கி அலசி எடுத்துக் கொள்ளவும்.



அருகம்புல்லின் அளவு - 2 கப்

பசும்பால் - ஒரு லிட்டர்

கசகசா - 50 கிராம்

நாட்டுச்சக்கரை - 100 கிராம்

ஏலக்காய் - 10

பச்சைக் கற்பூரம் - இரண்டு சிட்டிகை

முந்திரிப் பருப்பு - 200 கிராம்

திராட்சை உலர் திராட்சை - 200 கிராம்

குங்குமப்பூ - 20 கிராம்

பசு நெய் - 40 மில்லி

உப்பு - ஒரு சிட்டிகை



செய்முறை:



முதலில் அருகம்புல்லை அம்மியில் வைத்து மையாக அரைத்துக் கொள்ளவும். இதை வடிகட்டி அதனுடன் ஒரு லிட்டர் பாலை கலந்து கொதிக்க வைத்து அதில் கசகசா அரைத்து ஊற்றி கொதிக்க விட வேண்டும். கரண்டியால் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அடுத்து சர்க்கரையைப் போட்டு கிண்ட வேண்டும். நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இதையும் தூள்செய்து பாயசத்தில் போடவும். ஏலக்காய் தூள் செய்து போடவும். குங்குமப்பூவை போட்டு கிளறி கொண்டு உப்பு சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். மீதி நெய்யை ஊற்றவும். இப்பொழுது பாயாசம் நல்ல சுவையாக இருக்கும். நல்ல மணமுடன் இருக்கும்.



இதன் மருத்துவ பயன்:



இந்த பாயாசத்தை காலையில் வெறும் வயிற்றில் இளஞ் சூட்டில் அருந்தவேண்டும். மருத்துவ விதிப்படி அருந்தினால் குடல் சுத்தம், உடல் சூடு, கண் சூடு அனைத்தும் குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும் காலை-மாலை குடிக்கவேண்டும். கோடைகாலத்தில் அருந்திவர கோடையில் கட்டி அஜீரண நோய், அக்கி, இருமல், கண் எரிச்சல், குணமாகும்.




 
Top