என்னில் தன்னை இணைத்தவன்
அத்தியாயம்-12
தாத்தா காந்திமதியைப் பற்றி முழுவிவரங்களைச் சொன்னார்."காந்திமதியின் மகன் திருமணம் முடிந்தவுடன் மனைவியின் பேச்சைக் கேட்டு தன்னோடு வைத்துக் கொள்ள விரும்பாமல் அவரை இந்த இல்லத்தில் வந்து சேர்த்து விட்டான்.
மற்றவர்களைப் போய் நடந்த நிகழ்வுகளைப் பற்றி கவலைப் படாமல் அவர் இருக்கும் இடத்தில் நிம்மதியாய் இருக்கிறார்"என்றார்.
அவரது மனஉறுதியை நினைத்து அத்வதா வியந்தாள்.
கிருஷ்ண உடையாரின் முக்கியமான வேலைகளை எல்லாம் அவரது உதவியாளர் வந்து முடித்தாலும் அதை எல்லாம் மேற்பார்வை சரி பார்த்து தாத்தாவிடம் சொல்லும் வேலையில் அவள் இருந்தாள்.
ஒருவாரம் கடந்து தாத்தாவுடன் அவள் இல்லத்திற்குச் சென்று அங்கே அத்வதா முதலில் மானவியைப் பார்க்கச் சென்றாள்.அவள் கேட்ட அனைத்தையும் வாங்கிக் கொண்டு அவள் இருக்கும் அறைக்குச் சென்றாள்.
அங்கே அவளோ இவள் வருவதற்கு மறுபக்கம் குனிந்து உட்கார்ந்துக் கொண்டிருந்தாள்.அவள் முதுகுப் பின்னார் அருகே சென்று தோளில் கைவைத்து "மானவி உன் அக்கா வந்திருக்கிறேன்" என்று தோள்களைப் பிடித்தவாறுச் சொல்ல…
மானவியோ நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் முழுக்க கண்ணீரோடு "என் அக்கா செத்துப் போயிட்டா நீ என் அக்கா கிடையாது" என்று தன் மேல் வைத்திருந்த அத்வதாவின் கையை விலக்கி விட்டாள்.
அவளது செய்கை இவளுக்கு வினோதமாய் இருந்தது.இருந்தாலும் சமாளித்துக் கொண்டு "மானவி எதாவது கோபமா இருக்கியா?"
"உங்க மேல கோபப்பட நான் யாரு? முதல்ல இங்கிருந்து போங்க நான் ஏற்கனவே ரொம்ப வேதனைல இருக்கேன்" என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு இவளுக்கு வருத்தமாய் இருந்தது.இருந்தாலும் அத்வதா மானவிக்காக வாங்கி வந்த பொருட்களை எல்லாம் அங்கே வைத்து விட்டு அவள் தலையை மெதுவாக தடவி விட்டு "மானவி அக்கா உனக்காக நீ சொன்ன எல்லாமே வாங்கி வந்திருக்கேன்.உன் கோபம் தீர்ந்ததும் நான் உனக்காக வாங்கிட்டு வந்த பொருளை எடுத்து பாரு" என்று சொல்லி விட்டுச் சென்றாள்.
பின்னர் நேராக மானவிக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டரைச் சந்தித்து மானவியைப் பற்றி விசாரித்தாள்.அவளுக்கு ஒருவாரமாக கொடுத்த ட்ரீட்மெண்ட்டில் முன்னேற்றமாக அவளுக்கு எல்லாமே ஞாபகம் வந்திருந்தது.அதோடு மானவிக்கு அவளுடைய குடும்பத்தை முழுவதுமாக இழந்ததினால் ஏற்பட்ட விரக்தியினால் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருப்பதை விரும்பினாள்.
அதனால் தான் அத்வதா அவளிடம் பேசும் போது சரியாகப் பேசாமல் அவளிடம் கோபமாக பேசியிருக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டாள்.
இதை சரிச்செய்ய என்னச் செய்யலாம்? என்று டாக்டரிடம் விசாரிக்க அவரோ "தனிமையில் இல்லாமல் சுற்றி யாராவது சந்தோஷமாய் பேசுபவர்களோடு இருப்பதும் அவளுக்கு பிடித்தமான விஷயங்களைச் செய்யும் போது அவளது மனநிலை மாறலாம்" என்றார்.
அதைக்கேட்ட அத்வதா நிச்சயம் தன்னால் முடிந்த உதவியைச் செய்து மானவியை பழைய நிலைக்கு கொண்டு வருவதாகச் சொன்னாள்.
அதற்கு முதலில் காந்திமதியைப் பார்த்து அவரிடம் பேசி சிரித்து விட்டு வந்தவள் காந்திமதியிடம் மானவியின் நிலைமைப் பற்றிச் சொல்லி அவளை அவருக்கு அருகிலேயே வைத்துப் பார்த்துக் கொள்ளுமாறு காந்திமதியிடம் சொன்னாள்.
அவரும் நிச்சயமாக அவளைப் பார்த்துக் கொள்வதாகச் சொன்னார்.காந்திமதி அங்கேயே இருப்பதால் மானவி காந்திமதியோடு மனம்விட்டு பேசும் பொழுது அவளது வெறுமை மாறலாம் என்றெண்ணி அவரிடம் பேசினாள்.
மானவி அத்வதாவிடம் பேசாமல் இருந்தாலும் அத்வதா ஒவ்வொரு வாரமும் தாத்தாவுடன் வந்து அங்கு காந்திமதியையும் மானவியையும் சந்தித்து பேசிச் சென்றாள்.
முதலில் முகம் கொடுத்து பேசாமல் இருந்தவள் வாரம் தவறாமல் வரும் அத்வதாவைப் பார்த்து பிடித்து அவளை அவளுக்குப் பிடிக்க ஆரம்பிக்க நல்லப் பேசி பழகத் தொடங்கினர்.
அத்வதாவை மானவி அக்கா என்றே அன்பாய்அழைத்தாள்.ஆரலி அவளை அழைக்காமல் இருப்பதை நினைத்து வருந்தியவள் மானவியின் உரிமையான அழைப்பில் மகிழ்ந்தாள்.
அத்வதா இல்லத்திற்கு வந்து ஆறுமாதங்கள் ஆன நிலையில் அங்குள்ள அனைவருக்கும் அவளை நன்றாக அறிமுகம் ஆனது.அவளைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் எல்லோர் மனதிலும் இருந்தது.கிருஷ்ண உடையாரின் குணத்தை உடையவளாய் இருப்பதாக அவர்கள் எண்ணினர்.
அத்வதா அம்மாவோடு அடுத்தடுத்த வாரங்கள் விருந்திற்கு செல்ல வேண்டி இருந்ததால் அவளால் இரண்டு வாரங்களாய் இல்லத்திற்குச் செல்ல முடியவில்லை.
அப்போது அங்கு வந்து சாந்தனா அந்த இல்லத்தில் புதிய நபராகச் சேர்ந்தார்.அவரோடு யாரும் வரவில்லை.தனிநபராக வந்துச் சேர்ந்தார்.ஆனால் அவரை போலீஸார் வந்து இல்லத்தில் விட்டுச் சென்றனர்.
சாந்தனா யாரிடமும் பேசாமல் அமைதியாக தனிமையில் இருந்தார்.அங்குள்ளவர்களும் அவரிடம் பேச மிகுந்த தயக்கம் கொண்டனர்.ஏனென்றால் அவரைப் பற்றி வந்த விஷயங்கள் யாருக்கும் அவ்வளவாய் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. அதனால் யாரும் அவரிடம் என்னவெனறுக் கூட கேட்கவில்லை.
அங்கு எல்லோரிடமும் பேசும் காந்திமதியை அங்குள்ளவர்கள் அவரிடம் பேச வேண்டாம் என்று தடுத்து விட்டனர்.
இரண்டு வாரம் கழித்து திரும்பவும் அத்வதா இல்லத்திற்கு வந்தாள்.அங்கு புதிதாக வந்த சாந்தானாவிடம் பேசலாம் என்று எண்ணியவள் அவரைப் பற்றி முதலில் அங்கு வேலைச் செய்பவர்களிடம் விசாரிக்கலாம் என்று அவர்களிடம் சாந்தனாவைப் பற்றி விசாரித்தாள்.
அதில் ஒருவர் "மேடம் அவங்க யார்க்கிட்டேயும் எதுவும் பேசாமல் அமைதியா இருக்காங்க.சாப்பாடு எல்லோரோடும் சேர்ந்து சாப்பிடாமல் தனியாக இருக்காங்க,ஒருவேளை தான் சாப்பிடுறாங்க ஒரு சில நேரம் நாங்க கட்டாயப்படுத்துவதால் இரண்டு வேளை சாப்பிடுறாங்க"
"ஏன் அக்கா இங்கே உள்ளவங்க அவங்களை ஏத்துக்கலையா? ஏன் தனிமையில் இருக்கிறாங்க?"
"மேடம் அவங்கப் பற்றி நல்லபடியா இல்லாததுனாலத் தான் எல்லோரும் அவங்ககிட்ட பேச யோசிக்கிறாங்க"
"என்ன பேசுறீங்க? இங்கே எல்லோரும் ஒவ்வொரு கஷ்டமான சூழ்நிலைல இருந்து வந்தவங்க ஒருத்தொருக்கொருத்தர் எப்படி ஆதரவா இருக்கோமோ அதே மாதிரி புதுசா வந்தவங்களையும் அரவணைக்க வேண்டாமா? " என்று அவள் கேள்வியோடு நிறுத்த….
"மேடம் பிரச்சினை அது இல்லை அவங்க கொலைச் செய்ததுனால எல்லோரும் அவங்க மேல ரொம்ப பயப்படுறாங்க"
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவள் "என்ன? அப்போ எப்படி அவங்களுக்கு இங்கே வர அனுமதி கிடைச்சது" என்று கேள்வியோடு நிறுத்தியவள்…
"உங்ககிட்ட சார் அவங்களைப் பற்றி என்னச் சொன்னாங்க?" என்று அவரிடமே விசாரித்தார்.
"மேடம் நடந்த விஷயத்தை முழுதும் சொல்லட்டுமா?"
"ம்ம்ம்… சொல்லுங்க அப்போத் தானே இங்கு உள்ளவர்களுக்கு அவங்க நிலைமையைப் பற்றி சொல்ல முடியும்"
"ம்ம்… சரிங்க மேடம்"
என்று அங்கு வேலை செய்பவர் சாந்தனாவைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்….
சாந்தனா அவங்க குடும்பத்தோடு சந்தோஷமாகத் தான் வாழ்ந்துட்டு இருந்திருக்கிறாங்க.அவங்களுக்கு பன்னிரெண்டு வயதில் ஒரு பெண் பிள்ளையும் இருந்திருக்காங்க, இவங்களோட கணவருக்கு லேசான குடிப்பழக்கம் இருந்திருக்கு நாளடைவில் இது அதிகமாக அவரது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் இருக்கவும் இவங்களுக்கு ஏழ்மை நிலை ஆரம்பிச்சது.அதனால சாந்தனா பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு வீட்டு வேலைக்கு போக ஆரம்பிச்சு அதன் மூலமா குடும்பத்தை நடத்திட்டு இருந்திருக்காங்க ஒருநாள் இவங்க வேலைக்குப் போய் இருக்கும் போது அவங்க பொண்ணு பள்ளி விடுமுறைங்கிறதுனால வீட்டு இருக்கவும் போதையில வந்த அந்தப் பெண்ணோட அப்பாவே தன் மகள் என்றே அடையாளம் தெரியாமல் அந்தப் பெண்ணிடமே தப்பா நடந்துக் கொண்டிருக்கும் போது சாந்தனா அவங்க பொண்ணுக்கு வேலை செஞ்ச இடத்திலிருந்து சாப்பாடு கொண்டு வந்து தன் வீட்டுக்கு வரவும் அங்கே தான் பெற்ற பிள்ளையை எந்த தாயும் காணக் கூடாத நிலைமையில் அதுவும் அந்தப் பெண்ணின் தகப்பனே இந்தக் கொடூரச் செயலில் ஈடுபடவும் அதைப் பார்த்து தாங்க முடியாத கோபத்தோடும் வேதனையோடும் அந்த அரக்கனை பக்கத்தில் இருந்த அரிவாள்மனையால் கழுத்தை வெட்டி தான் பெற்ற பெண்ணை காப்பாத்திப் பார்க்கும் போது நடந்தது என்னவென்று தெரியாமலும் அதிர்ச்சியிலும் வலியிலும் அவங்கப் பொண்ணுக்கு வலிப்பு வர அதைக் கண்ட சாந்தனா தன் கைகளில் இரத்தக் கறையோடும், இரத்தக் கறையோடும் கிடந்த மகளை தூக்கி ஹாஸ்பிட்டல் போகும் போது தெருவில் உள்ளவங்க நிலைமையை புரிந்தும் புரியாமலும் அவங்களுக்கு உதவி செய்து அவங்கப் பொண்ணை காப்பாற்றலாம் என்று நினைத்தால் சின்னப் பெண் வழியில இறந்துப் போயிடுச்சு. இவங்க கொன்ன அவனும் அந்த இடத்துல இறந்துப் போயிட்டான்.
அவங்கப் பொண்ணு இறந்தது தெரிஞ்சது இருந்து அமைதியாக இருந்தவங்கத் தான் அதற்குப் பிறகு சாந்தனா எதற்குமே யாரிடமும் பேசவில்லை. எதாவது கேட்டால் தலையை ஆட்டி பதில் சொல்வதோடு சரி இங்கே நடந்த விஷயங்கள் பக்கத்தில் உள்ளவர்களால்
போலீஸிற்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் விசாரிக்கப்பட்டு கடைசியில் தன்னோட பெண்ணை தற்காத்துக் கொள்ளத் தான் அவங்க கொலை செய்ததால் ஒருவருட சிறை தண்டனைக் கொடுத்து சாந்தனாவை விடுதலைச் செய்து இங்கே நம்ம இல்லத்திற்கு அனுப்பி வைத்திருக்காங்க" என்று அங்கு வேலைச் செய்பவர் சாந்தனாவைப் பற்றிய முழுவிவரங்களையும் சொன்னார்.
அவரின் கதையை முழுமையாகக் கேட்ட அத்வதாவிற்கு என்னச் சொல்வதென்றே தெரியவில்லை.உலகத்தில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கஷ்டங்களை தினந்தோறும் தங்கள் வாழ்வில் அனுபவிக்கிறான் என்று நினைத்தவள் அதில் சாந்தனாவின் மகளைப் போன்ற பெண்கள் தங்கள் குடும்பத்திலுள்ளவர்களாலேயே வன்கொடுமை செய்யப்படுவதை எவ்வளவு பெரிய கொடுமை அந்தக் கொடுமையை நேரில் பார்த்த சாந்தனாவின் நிலைமையை நினைத்து வருந்தியவள் அவரை முழுமையாக மாற்ற எண்ணினாள்.
கிருஷ்ண உடையாரின் இல்லத்திற்கு அனுப்பப்படும் நபர்கள் முக்கியமாக அன்பான குடும்பத்திற்கு ஏங்குபவர்களைத் தான் இங்கே அனுப்புகிறார்கள்.ஏனென்றால் இங்கே எல்லா வயதில் உள்ள பெண்களும் இருப்பதால் அவர்களுக்கான ஒரு புதிய குடும்பத்தைப் போன்ற சூழல் உருவாக்க முடியும் என்பதே உண்மை.
இதை எல்லாம் அத்வதாவின் தாத்தா சொல்லி இருப்பதால் அவளுக்குத் தெரியும்.அந்த விஷயத்தையே சாந்தனாற்கும் அந்த சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவள் நேரில் அவரைப் பார்த்துப் பேச வேண்டும் என்று தனக்குள் பேசி முடிவெடுத்துக் கொண்டவள் இதற்கு உதவியாக முதலில் காந்திமதி பாட்டியையும் மானவியிடமும் அவரின் நிலைமையை ஓரளவு சொல்லி ஒரு நல்ல நிலைமையை உருவாக்கலாம் என்றெண்ணி காந்திமதியை நேரில் சந்தித்து அவரிடம் சாந்தனாவின் நிலைமையைப் பற்றி சொன்னாள்.
அதைக் கேட்டு மிகுந்த வருத்தத்திற்குள்ளானவர் அத்வதாவிடம் "எனக்கு உண்மை என்னவென்றே தெரியாது அத்வதா இங்குள்ளவங்க எல்லோரும் அவளை கொலைக்காரி அவகிட்ட போய் பேசாதேன்னு தான் சொன்னாங்களே தவிர சாந்தனாவுடைய நிலைமையை யாருமே சொல்லலையே.நாம கண்டிப்பா அவளுக்கு உதவி செய்யலாம்" என்றார்.
மானவியிடம் சாந்தனாவைப் பற்றி முழுவதுமாகச் சொல்லாமல் அவர் தன் மகளை பறி கொடுத்ததால் தான் இப்படி ஆகிவிட்டார் என்று பாதியை மட்டும் சொன்னாள்.
இருவரிடமும் பேசி விட்டு சாந்தனாவைக் காணச் சென்றாள் அத்வதா.இல்லத்தின் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் ஓரத்தில் தனியாக திரும்பி தலையை மேலே உயர்த்தி எங்கேயோ பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.அவரின்
பின்புறமாக வந்தவள் சாந்தனாவின் தோளில் கைவைத்து "அம்மா" என்று மெதுவாக அழைத்தாள்.
அவளது அம்மா என்ற ஒற்றை அழைப்பில் திரும்பி பார்த்த சாந்தனா தன் தோளில் மேல் கைவைத்தவளின் கையைப் பிடித்தபடி அவளைப் பார்த்துக் கொண்டே எழுந்தவர் அத்வதாவை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு "வந்துட்டியாம்மா இத்தனை நாளா என்னை விட்டுட்டு எங்கே போயிட்டே?" என்று அத்வதாவைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினார்.
அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.சில நிமிடங்களில் கண்ணைத் திறந்துப் பார்க்க அவர்களின் பின்னால் காந்திமதி நிற்பதைக் கண்ட சாந்தனா சட்டென்று அத்வதாவிடம் இருந்து விலகி "யாரு நீ? " என்று பயத்தோடும் படபடப்போடும் கேட்டார்.
காந்திமதி அருகில் வந்து சாந்தனாவின் கையைப் பிடித்து "மனசுல அழுகையை அடக்கி வைக்காதேம்மா முழுசா அழுது தீர்த்துடு"
"இல்லை நீங்க சொல்றதை ஏன் நான் கேட்கனும்? என் பொண்ணு …"
என்று அவர் பேச்சை நிறுத்த...
அத்வதா சாந்தனாவின் அருகில் வந்து "அம்மா நானும் உங்களுக்கு பொண்ணு மாதிரி தான்" என்று சொல்ல…
"இல்ல நீ என் பொண்ணே கிடையாது" என்று அடம் பிடித்தார்.
சாந்தனா இவ்வளவு பேசினதே பெரிய விஷயம் என்று அதோடு அவரை கொஞ்ச நேரம் தனிமையில் விட்டனர். பிறகு சாந்தனாவிற்கு மனநல மருத்துவரை வைத்து ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட இப்படியே நாட்களும் மாதங்களாய் செல்ல...
அவருடைய நிலைமையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டு அவருக்கு ஏற்பட்ட வலியிலிருந்து விடுபட்டு முழுவதுமாக குணம் அடைந்து எல்லோரையும் போல் அவரும் எல்லோரிடமும் பேசி சிரித்துப் பழக ஆரம்பித்தார்.
சாந்தனா மானவியை தன் மகளைப் போல் பார்க்கத் தொடங்கினார்.உறவுகளை இழந்த மானவிக்கு புதிதாக பாட்டி என்ற உறவும் அம்மா உறவும் அக்காவாய் அத்வதா இருந்தாள்.
அந்த இல்லத்தில் இவர்களோடு அத்வதாவும் நெருங்கிய உறவாய் இருந்தனர்.
மேல்நிலைப் படிப்பு முடிந்து அவள் கல்லூரிக்குச் செல்லும் நேரத்தில் ரேகா மேற்படிப்பு படிப்பதற்காக அவள் வெளிநாட்டிற்குச் சென்றாள்.
அத்வதா அங்குள்ள காலேஜ்ஜில் இளநிலை படிப்பில் சேர்ந்தாள்.காலேஜ்க்கு சென்று விட்டு வரும் பொழுது அரண்மனையில் யாரும் இல்லை.தாத்தா செக்அப்பிற்காக ஹாஸ்பிட்டலுக்குச் செல்ல கூடவே பாட்டியும் சென்றிருந்தார்.
மற்றவர்கள் குடும்பத்தில் உள்ள விஷேசத்திற்குச் சென்றிருந்தனர்.அத்வதாவையும் கூப்பிட அவளோ வர விருப்பம் இல்லாமல் காலேஜ்க்கு சென்றிருந்தாள்.
காலேஜ்க்கு முடிந்து அரண்மனை உள்ளே நுழையும் பொழுது ரேகா போன் செய்ய அவளிடம் பேசிக் கொண்டே தன் அறையை நோக்கி நடந்தாள்.
அரண்மனையில் முக்கியமான சில வேலைப் பெண்களே இருப்பர்.அதில் ஒருவர் அவரிடம் ஏதோ சொல்ல வர... ரேகாவுடன் மும்மூரமாய் போனில் பேசிக் கொண்டிருப்பதால் "போன் பேசிட்டு வரேன்" என்று அந்தப் பெண்ணிடம் சொல்லி விட்டு எங்கும் பார்க்காமல் தன் அறைக்கு உள்ளே சென்றவள் கதவை தாழிட்டுக் கொண்டு மேலே போட்டிருந்த தன் துப்பட்டாவை கழற்றி ஷோபாவின் மேல் போட்டாள்.
கட்டியிருந்த தலைமுடியை அவிழ்த்து விட்டப்படியே கண்ணாடி முன்னால் நின்றுக் கொண்டும் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டே ரேகாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டே "உண்மையாவா சொல்றே பார்க்க செமயா இருந்தானா?பாருடா" என்று தன் உதட்டின் ஓரமாய் இருக்கும் சிங்கப்பல் தெரிய வெட்கப்பட்டு தன் கைகளால் வாய்மூடி சிரித்தவள் "அப்புறம்" என்று ஷோபாவில் அமர்ந்தவள் ஒரு கையால் தலையணையைத் தேட… அதுவரை அவளை தலை முதல் கால் வரை கவனித்துக் கொண்டிருந்தவனின் அருகில் அவன் கைக்கு மேல் தன் கை வைத்து ஏதோ வித்தியாசமாக இருக்குதே! என்ற யோசனையில் திரும்பிப் பார்க்க… அங்கே அவளையே கண் இமைக்காமல் ஆடவன் ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
எவனோ ஒருவனை தன் அருகில் கண்டவளோ முதலில் பயந்து அலறி… "ஆஆஆ…" என்று கத்தியபடி கையில் இருந்த போனை கீழே போட்டு விட்டு எழுந்து நிற்க… அவனோ அவளைப் பார்த்து சிரித்தான்.
அதைக் கண்டு எரிச்சலுற்றவள் "டேய் யாருடா நீ? எப்படி இங்கே வந்தே?"என்று அவள் அடையாளம் தெரியாமல் கத்த… அவனோ அவளை மேலிருந்து கீழே பார்க்க இவளோ ஏதோ உணர்ந்தவளாய் மேலே துப்பட்டா இல்லாமல் இருப்பதைக் கண்டு துப்பட்டாவும் அவன் தோள் மேலே இருக்க அதை அவனிடம் இருந்து பிடித்து இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவள் "டேய் திருடனா நீ? இரு இப்போவே எல்லோரையும் சத்தம் போட்டுக் கூப்பிடுறேன்" என்று அவள் கத்த ஆரம்பிக்கும் போது அவள் வாயை பொத்தியவன்….
"ஏய் இரு இரு நான் யாருன்னு உனக்கு தெரியலை?"என்று கேட்க…
இவளோ எதுவும் சொல்லாமல் அவனையேப் பார்க்க… அவனோ "உன் வாயை நான் பொத்தி வைச்சு இருக்கேன்ல அதான் உன்னால பதில் சொல்ல முடியலை" என்று அவள் வாயிலிருந்து தன் கையை எடுக்க….
அவளோ மூச்சு இழுத்து விட்டப்படி… "என்ன தைரியம் உனக்கு? என் மேல கையை வைப்பே அதோட என்கிட்டயே நான் யாருன்னு கேட்பே? லூசாடா நீ?" என்று அவள் கத்த….
திரும்பவும் அவள் இடையில் கைவைத்து தன்னோடு இழுத்துக் கொண்டு "யாரு லூசு நீ தான்டி லூசு திருட வந்தவன் இப்படி டீசன்டாவா வருவான் அதைக் கூட யோசிக்க முடியலை உன்னால எப்பவும் நான் பேசுறதை நீ பொறுமையா கேட்க மாட்டல்ல" என்று அவன் சொல்ல…
அவளோ அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடியபடி "விடு விடு" என்று கத்திக் கொண்டிருந்தாள்.
ஒரு கையால் அவளைப் பிடித்தபடி அவள் தலையைப் பிடித்து "முதல்ல நான் சொல்றதைக் கேளு.நான் யாருக்கும் தெரியாமல் உள்ளே வந்த திருடன் இல்ல ஏற்கனவே இங்கே வந்துட்டு போன தவரூபன்" என்று அவன் தன்னை அறிமுகப்படுத்தவும் அவன் கையில் இருந்து அவள் விடுபடவும் அவன் பெயரைக் கேட்டு அதிர்ந்து அவனையேப் பார்த்துக் கொண்டு கீழே விழும் நேரம் அவன் அவளை தாங்கிப் பிடித்து அவன் அவளைப் பார்க்க அவளும் அவனையே பார்த்தாள்.
(தொடரும்)
அத்தியாயம்-12
தாத்தா காந்திமதியைப் பற்றி முழுவிவரங்களைச் சொன்னார்."காந்திமதியின் மகன் திருமணம் முடிந்தவுடன் மனைவியின் பேச்சைக் கேட்டு தன்னோடு வைத்துக் கொள்ள விரும்பாமல் அவரை இந்த இல்லத்தில் வந்து சேர்த்து விட்டான்.
மற்றவர்களைப் போய் நடந்த நிகழ்வுகளைப் பற்றி கவலைப் படாமல் அவர் இருக்கும் இடத்தில் நிம்மதியாய் இருக்கிறார்"என்றார்.
அவரது மனஉறுதியை நினைத்து அத்வதா வியந்தாள்.
கிருஷ்ண உடையாரின் முக்கியமான வேலைகளை எல்லாம் அவரது உதவியாளர் வந்து முடித்தாலும் அதை எல்லாம் மேற்பார்வை சரி பார்த்து தாத்தாவிடம் சொல்லும் வேலையில் அவள் இருந்தாள்.
ஒருவாரம் கடந்து தாத்தாவுடன் அவள் இல்லத்திற்குச் சென்று அங்கே அத்வதா முதலில் மானவியைப் பார்க்கச் சென்றாள்.அவள் கேட்ட அனைத்தையும் வாங்கிக் கொண்டு அவள் இருக்கும் அறைக்குச் சென்றாள்.
அங்கே அவளோ இவள் வருவதற்கு மறுபக்கம் குனிந்து உட்கார்ந்துக் கொண்டிருந்தாள்.அவள் முதுகுப் பின்னார் அருகே சென்று தோளில் கைவைத்து "மானவி உன் அக்கா வந்திருக்கிறேன்" என்று தோள்களைப் பிடித்தவாறுச் சொல்ல…
மானவியோ நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் முழுக்க கண்ணீரோடு "என் அக்கா செத்துப் போயிட்டா நீ என் அக்கா கிடையாது" என்று தன் மேல் வைத்திருந்த அத்வதாவின் கையை விலக்கி விட்டாள்.
அவளது செய்கை இவளுக்கு வினோதமாய் இருந்தது.இருந்தாலும் சமாளித்துக் கொண்டு "மானவி எதாவது கோபமா இருக்கியா?"
"உங்க மேல கோபப்பட நான் யாரு? முதல்ல இங்கிருந்து போங்க நான் ஏற்கனவே ரொம்ப வேதனைல இருக்கேன்" என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு இவளுக்கு வருத்தமாய் இருந்தது.இருந்தாலும் அத்வதா மானவிக்காக வாங்கி வந்த பொருட்களை எல்லாம் அங்கே வைத்து விட்டு அவள் தலையை மெதுவாக தடவி விட்டு "மானவி அக்கா உனக்காக நீ சொன்ன எல்லாமே வாங்கி வந்திருக்கேன்.உன் கோபம் தீர்ந்ததும் நான் உனக்காக வாங்கிட்டு வந்த பொருளை எடுத்து பாரு" என்று சொல்லி விட்டுச் சென்றாள்.
பின்னர் நேராக மானவிக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டரைச் சந்தித்து மானவியைப் பற்றி விசாரித்தாள்.அவளுக்கு ஒருவாரமாக கொடுத்த ட்ரீட்மெண்ட்டில் முன்னேற்றமாக அவளுக்கு எல்லாமே ஞாபகம் வந்திருந்தது.அதோடு மானவிக்கு அவளுடைய குடும்பத்தை முழுவதுமாக இழந்ததினால் ஏற்பட்ட விரக்தியினால் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருப்பதை விரும்பினாள்.
அதனால் தான் அத்வதா அவளிடம் பேசும் போது சரியாகப் பேசாமல் அவளிடம் கோபமாக பேசியிருக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டாள்.
இதை சரிச்செய்ய என்னச் செய்யலாம்? என்று டாக்டரிடம் விசாரிக்க அவரோ "தனிமையில் இல்லாமல் சுற்றி யாராவது சந்தோஷமாய் பேசுபவர்களோடு இருப்பதும் அவளுக்கு பிடித்தமான விஷயங்களைச் செய்யும் போது அவளது மனநிலை மாறலாம்" என்றார்.
அதைக்கேட்ட அத்வதா நிச்சயம் தன்னால் முடிந்த உதவியைச் செய்து மானவியை பழைய நிலைக்கு கொண்டு வருவதாகச் சொன்னாள்.
அதற்கு முதலில் காந்திமதியைப் பார்த்து அவரிடம் பேசி சிரித்து விட்டு வந்தவள் காந்திமதியிடம் மானவியின் நிலைமைப் பற்றிச் சொல்லி அவளை அவருக்கு அருகிலேயே வைத்துப் பார்த்துக் கொள்ளுமாறு காந்திமதியிடம் சொன்னாள்.
அவரும் நிச்சயமாக அவளைப் பார்த்துக் கொள்வதாகச் சொன்னார்.காந்திமதி அங்கேயே இருப்பதால் மானவி காந்திமதியோடு மனம்விட்டு பேசும் பொழுது அவளது வெறுமை மாறலாம் என்றெண்ணி அவரிடம் பேசினாள்.
மானவி அத்வதாவிடம் பேசாமல் இருந்தாலும் அத்வதா ஒவ்வொரு வாரமும் தாத்தாவுடன் வந்து அங்கு காந்திமதியையும் மானவியையும் சந்தித்து பேசிச் சென்றாள்.
முதலில் முகம் கொடுத்து பேசாமல் இருந்தவள் வாரம் தவறாமல் வரும் அத்வதாவைப் பார்த்து பிடித்து அவளை அவளுக்குப் பிடிக்க ஆரம்பிக்க நல்லப் பேசி பழகத் தொடங்கினர்.
அத்வதாவை மானவி அக்கா என்றே அன்பாய்அழைத்தாள்.ஆரலி அவளை அழைக்காமல் இருப்பதை நினைத்து வருந்தியவள் மானவியின் உரிமையான அழைப்பில் மகிழ்ந்தாள்.
அத்வதா இல்லத்திற்கு வந்து ஆறுமாதங்கள் ஆன நிலையில் அங்குள்ள அனைவருக்கும் அவளை நன்றாக அறிமுகம் ஆனது.அவளைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் எல்லோர் மனதிலும் இருந்தது.கிருஷ்ண உடையாரின் குணத்தை உடையவளாய் இருப்பதாக அவர்கள் எண்ணினர்.
அத்வதா அம்மாவோடு அடுத்தடுத்த வாரங்கள் விருந்திற்கு செல்ல வேண்டி இருந்ததால் அவளால் இரண்டு வாரங்களாய் இல்லத்திற்குச் செல்ல முடியவில்லை.
அப்போது அங்கு வந்து சாந்தனா அந்த இல்லத்தில் புதிய நபராகச் சேர்ந்தார்.அவரோடு யாரும் வரவில்லை.தனிநபராக வந்துச் சேர்ந்தார்.ஆனால் அவரை போலீஸார் வந்து இல்லத்தில் விட்டுச் சென்றனர்.
சாந்தனா யாரிடமும் பேசாமல் அமைதியாக தனிமையில் இருந்தார்.அங்குள்ளவர்களும் அவரிடம் பேச மிகுந்த தயக்கம் கொண்டனர்.ஏனென்றால் அவரைப் பற்றி வந்த விஷயங்கள் யாருக்கும் அவ்வளவாய் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. அதனால் யாரும் அவரிடம் என்னவெனறுக் கூட கேட்கவில்லை.
அங்கு எல்லோரிடமும் பேசும் காந்திமதியை அங்குள்ளவர்கள் அவரிடம் பேச வேண்டாம் என்று தடுத்து விட்டனர்.
இரண்டு வாரம் கழித்து திரும்பவும் அத்வதா இல்லத்திற்கு வந்தாள்.அங்கு புதிதாக வந்த சாந்தானாவிடம் பேசலாம் என்று எண்ணியவள் அவரைப் பற்றி முதலில் அங்கு வேலைச் செய்பவர்களிடம் விசாரிக்கலாம் என்று அவர்களிடம் சாந்தனாவைப் பற்றி விசாரித்தாள்.
அதில் ஒருவர் "மேடம் அவங்க யார்க்கிட்டேயும் எதுவும் பேசாமல் அமைதியா இருக்காங்க.சாப்பாடு எல்லோரோடும் சேர்ந்து சாப்பிடாமல் தனியாக இருக்காங்க,ஒருவேளை தான் சாப்பிடுறாங்க ஒரு சில நேரம் நாங்க கட்டாயப்படுத்துவதால் இரண்டு வேளை சாப்பிடுறாங்க"
"ஏன் அக்கா இங்கே உள்ளவங்க அவங்களை ஏத்துக்கலையா? ஏன் தனிமையில் இருக்கிறாங்க?"
"மேடம் அவங்கப் பற்றி நல்லபடியா இல்லாததுனாலத் தான் எல்லோரும் அவங்ககிட்ட பேச யோசிக்கிறாங்க"
"என்ன பேசுறீங்க? இங்கே எல்லோரும் ஒவ்வொரு கஷ்டமான சூழ்நிலைல இருந்து வந்தவங்க ஒருத்தொருக்கொருத்தர் எப்படி ஆதரவா இருக்கோமோ அதே மாதிரி புதுசா வந்தவங்களையும் அரவணைக்க வேண்டாமா? " என்று அவள் கேள்வியோடு நிறுத்த….
"மேடம் பிரச்சினை அது இல்லை அவங்க கொலைச் செய்ததுனால எல்லோரும் அவங்க மேல ரொம்ப பயப்படுறாங்க"
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவள் "என்ன? அப்போ எப்படி அவங்களுக்கு இங்கே வர அனுமதி கிடைச்சது" என்று கேள்வியோடு நிறுத்தியவள்…
"உங்ககிட்ட சார் அவங்களைப் பற்றி என்னச் சொன்னாங்க?" என்று அவரிடமே விசாரித்தார்.
"மேடம் நடந்த விஷயத்தை முழுதும் சொல்லட்டுமா?"
"ம்ம்ம்… சொல்லுங்க அப்போத் தானே இங்கு உள்ளவர்களுக்கு அவங்க நிலைமையைப் பற்றி சொல்ல முடியும்"
"ம்ம்… சரிங்க மேடம்"
என்று அங்கு வேலை செய்பவர் சாந்தனாவைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்….
சாந்தனா அவங்க குடும்பத்தோடு சந்தோஷமாகத் தான் வாழ்ந்துட்டு இருந்திருக்கிறாங்க.அவங்களுக்கு பன்னிரெண்டு வயதில் ஒரு பெண் பிள்ளையும் இருந்திருக்காங்க, இவங்களோட கணவருக்கு லேசான குடிப்பழக்கம் இருந்திருக்கு நாளடைவில் இது அதிகமாக அவரது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் இருக்கவும் இவங்களுக்கு ஏழ்மை நிலை ஆரம்பிச்சது.அதனால சாந்தனா பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு வீட்டு வேலைக்கு போக ஆரம்பிச்சு அதன் மூலமா குடும்பத்தை நடத்திட்டு இருந்திருக்காங்க ஒருநாள் இவங்க வேலைக்குப் போய் இருக்கும் போது அவங்க பொண்ணு பள்ளி விடுமுறைங்கிறதுனால வீட்டு இருக்கவும் போதையில வந்த அந்தப் பெண்ணோட அப்பாவே தன் மகள் என்றே அடையாளம் தெரியாமல் அந்தப் பெண்ணிடமே தப்பா நடந்துக் கொண்டிருக்கும் போது சாந்தனா அவங்க பொண்ணுக்கு வேலை செஞ்ச இடத்திலிருந்து சாப்பாடு கொண்டு வந்து தன் வீட்டுக்கு வரவும் அங்கே தான் பெற்ற பிள்ளையை எந்த தாயும் காணக் கூடாத நிலைமையில் அதுவும் அந்தப் பெண்ணின் தகப்பனே இந்தக் கொடூரச் செயலில் ஈடுபடவும் அதைப் பார்த்து தாங்க முடியாத கோபத்தோடும் வேதனையோடும் அந்த அரக்கனை பக்கத்தில் இருந்த அரிவாள்மனையால் கழுத்தை வெட்டி தான் பெற்ற பெண்ணை காப்பாத்திப் பார்க்கும் போது நடந்தது என்னவென்று தெரியாமலும் அதிர்ச்சியிலும் வலியிலும் அவங்கப் பொண்ணுக்கு வலிப்பு வர அதைக் கண்ட சாந்தனா தன் கைகளில் இரத்தக் கறையோடும், இரத்தக் கறையோடும் கிடந்த மகளை தூக்கி ஹாஸ்பிட்டல் போகும் போது தெருவில் உள்ளவங்க நிலைமையை புரிந்தும் புரியாமலும் அவங்களுக்கு உதவி செய்து அவங்கப் பொண்ணை காப்பாற்றலாம் என்று நினைத்தால் சின்னப் பெண் வழியில இறந்துப் போயிடுச்சு. இவங்க கொன்ன அவனும் அந்த இடத்துல இறந்துப் போயிட்டான்.
அவங்கப் பொண்ணு இறந்தது தெரிஞ்சது இருந்து அமைதியாக இருந்தவங்கத் தான் அதற்குப் பிறகு சாந்தனா எதற்குமே யாரிடமும் பேசவில்லை. எதாவது கேட்டால் தலையை ஆட்டி பதில் சொல்வதோடு சரி இங்கே நடந்த விஷயங்கள் பக்கத்தில் உள்ளவர்களால்
போலீஸிற்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் விசாரிக்கப்பட்டு கடைசியில் தன்னோட பெண்ணை தற்காத்துக் கொள்ளத் தான் அவங்க கொலை செய்ததால் ஒருவருட சிறை தண்டனைக் கொடுத்து சாந்தனாவை விடுதலைச் செய்து இங்கே நம்ம இல்லத்திற்கு அனுப்பி வைத்திருக்காங்க" என்று அங்கு வேலைச் செய்பவர் சாந்தனாவைப் பற்றிய முழுவிவரங்களையும் சொன்னார்.
அவரின் கதையை முழுமையாகக் கேட்ட அத்வதாவிற்கு என்னச் சொல்வதென்றே தெரியவில்லை.உலகத்தில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கஷ்டங்களை தினந்தோறும் தங்கள் வாழ்வில் அனுபவிக்கிறான் என்று நினைத்தவள் அதில் சாந்தனாவின் மகளைப் போன்ற பெண்கள் தங்கள் குடும்பத்திலுள்ளவர்களாலேயே வன்கொடுமை செய்யப்படுவதை எவ்வளவு பெரிய கொடுமை அந்தக் கொடுமையை நேரில் பார்த்த சாந்தனாவின் நிலைமையை நினைத்து வருந்தியவள் அவரை முழுமையாக மாற்ற எண்ணினாள்.
கிருஷ்ண உடையாரின் இல்லத்திற்கு அனுப்பப்படும் நபர்கள் முக்கியமாக அன்பான குடும்பத்திற்கு ஏங்குபவர்களைத் தான் இங்கே அனுப்புகிறார்கள்.ஏனென்றால் இங்கே எல்லா வயதில் உள்ள பெண்களும் இருப்பதால் அவர்களுக்கான ஒரு புதிய குடும்பத்தைப் போன்ற சூழல் உருவாக்க முடியும் என்பதே உண்மை.
இதை எல்லாம் அத்வதாவின் தாத்தா சொல்லி இருப்பதால் அவளுக்குத் தெரியும்.அந்த விஷயத்தையே சாந்தனாற்கும் அந்த சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவள் நேரில் அவரைப் பார்த்துப் பேச வேண்டும் என்று தனக்குள் பேசி முடிவெடுத்துக் கொண்டவள் இதற்கு உதவியாக முதலில் காந்திமதி பாட்டியையும் மானவியிடமும் அவரின் நிலைமையை ஓரளவு சொல்லி ஒரு நல்ல நிலைமையை உருவாக்கலாம் என்றெண்ணி காந்திமதியை நேரில் சந்தித்து அவரிடம் சாந்தனாவின் நிலைமையைப் பற்றி சொன்னாள்.
அதைக் கேட்டு மிகுந்த வருத்தத்திற்குள்ளானவர் அத்வதாவிடம் "எனக்கு உண்மை என்னவென்றே தெரியாது அத்வதா இங்குள்ளவங்க எல்லோரும் அவளை கொலைக்காரி அவகிட்ட போய் பேசாதேன்னு தான் சொன்னாங்களே தவிர சாந்தனாவுடைய நிலைமையை யாருமே சொல்லலையே.நாம கண்டிப்பா அவளுக்கு உதவி செய்யலாம்" என்றார்.
மானவியிடம் சாந்தனாவைப் பற்றி முழுவதுமாகச் சொல்லாமல் அவர் தன் மகளை பறி கொடுத்ததால் தான் இப்படி ஆகிவிட்டார் என்று பாதியை மட்டும் சொன்னாள்.
இருவரிடமும் பேசி விட்டு சாந்தனாவைக் காணச் சென்றாள் அத்வதா.இல்லத்தின் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் ஓரத்தில் தனியாக திரும்பி தலையை மேலே உயர்த்தி எங்கேயோ பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.அவரின்
பின்புறமாக வந்தவள் சாந்தனாவின் தோளில் கைவைத்து "அம்மா" என்று மெதுவாக அழைத்தாள்.
அவளது அம்மா என்ற ஒற்றை அழைப்பில் திரும்பி பார்த்த சாந்தனா தன் தோளில் மேல் கைவைத்தவளின் கையைப் பிடித்தபடி அவளைப் பார்த்துக் கொண்டே எழுந்தவர் அத்வதாவை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு "வந்துட்டியாம்மா இத்தனை நாளா என்னை விட்டுட்டு எங்கே போயிட்டே?" என்று அத்வதாவைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினார்.
அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.சில நிமிடங்களில் கண்ணைத் திறந்துப் பார்க்க அவர்களின் பின்னால் காந்திமதி நிற்பதைக் கண்ட சாந்தனா சட்டென்று அத்வதாவிடம் இருந்து விலகி "யாரு நீ? " என்று பயத்தோடும் படபடப்போடும் கேட்டார்.
காந்திமதி அருகில் வந்து சாந்தனாவின் கையைப் பிடித்து "மனசுல அழுகையை அடக்கி வைக்காதேம்மா முழுசா அழுது தீர்த்துடு"
"இல்லை நீங்க சொல்றதை ஏன் நான் கேட்கனும்? என் பொண்ணு …"
என்று அவர் பேச்சை நிறுத்த...
அத்வதா சாந்தனாவின் அருகில் வந்து "அம்மா நானும் உங்களுக்கு பொண்ணு மாதிரி தான்" என்று சொல்ல…
"இல்ல நீ என் பொண்ணே கிடையாது" என்று அடம் பிடித்தார்.
சாந்தனா இவ்வளவு பேசினதே பெரிய விஷயம் என்று அதோடு அவரை கொஞ்ச நேரம் தனிமையில் விட்டனர். பிறகு சாந்தனாவிற்கு மனநல மருத்துவரை வைத்து ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட இப்படியே நாட்களும் மாதங்களாய் செல்ல...
அவருடைய நிலைமையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டு அவருக்கு ஏற்பட்ட வலியிலிருந்து விடுபட்டு முழுவதுமாக குணம் அடைந்து எல்லோரையும் போல் அவரும் எல்லோரிடமும் பேசி சிரித்துப் பழக ஆரம்பித்தார்.
சாந்தனா மானவியை தன் மகளைப் போல் பார்க்கத் தொடங்கினார்.உறவுகளை இழந்த மானவிக்கு புதிதாக பாட்டி என்ற உறவும் அம்மா உறவும் அக்காவாய் அத்வதா இருந்தாள்.
அந்த இல்லத்தில் இவர்களோடு அத்வதாவும் நெருங்கிய உறவாய் இருந்தனர்.
மேல்நிலைப் படிப்பு முடிந்து அவள் கல்லூரிக்குச் செல்லும் நேரத்தில் ரேகா மேற்படிப்பு படிப்பதற்காக அவள் வெளிநாட்டிற்குச் சென்றாள்.
அத்வதா அங்குள்ள காலேஜ்ஜில் இளநிலை படிப்பில் சேர்ந்தாள்.காலேஜ்க்கு சென்று விட்டு வரும் பொழுது அரண்மனையில் யாரும் இல்லை.தாத்தா செக்அப்பிற்காக ஹாஸ்பிட்டலுக்குச் செல்ல கூடவே பாட்டியும் சென்றிருந்தார்.
மற்றவர்கள் குடும்பத்தில் உள்ள விஷேசத்திற்குச் சென்றிருந்தனர்.அத்வதாவையும் கூப்பிட அவளோ வர விருப்பம் இல்லாமல் காலேஜ்க்கு சென்றிருந்தாள்.
காலேஜ்க்கு முடிந்து அரண்மனை உள்ளே நுழையும் பொழுது ரேகா போன் செய்ய அவளிடம் பேசிக் கொண்டே தன் அறையை நோக்கி நடந்தாள்.
அரண்மனையில் முக்கியமான சில வேலைப் பெண்களே இருப்பர்.அதில் ஒருவர் அவரிடம் ஏதோ சொல்ல வர... ரேகாவுடன் மும்மூரமாய் போனில் பேசிக் கொண்டிருப்பதால் "போன் பேசிட்டு வரேன்" என்று அந்தப் பெண்ணிடம் சொல்லி விட்டு எங்கும் பார்க்காமல் தன் அறைக்கு உள்ளே சென்றவள் கதவை தாழிட்டுக் கொண்டு மேலே போட்டிருந்த தன் துப்பட்டாவை கழற்றி ஷோபாவின் மேல் போட்டாள்.
கட்டியிருந்த தலைமுடியை அவிழ்த்து விட்டப்படியே கண்ணாடி முன்னால் நின்றுக் கொண்டும் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டே ரேகாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டே "உண்மையாவா சொல்றே பார்க்க செமயா இருந்தானா?பாருடா" என்று தன் உதட்டின் ஓரமாய் இருக்கும் சிங்கப்பல் தெரிய வெட்கப்பட்டு தன் கைகளால் வாய்மூடி சிரித்தவள் "அப்புறம்" என்று ஷோபாவில் அமர்ந்தவள் ஒரு கையால் தலையணையைத் தேட… அதுவரை அவளை தலை முதல் கால் வரை கவனித்துக் கொண்டிருந்தவனின் அருகில் அவன் கைக்கு மேல் தன் கை வைத்து ஏதோ வித்தியாசமாக இருக்குதே! என்ற யோசனையில் திரும்பிப் பார்க்க… அங்கே அவளையே கண் இமைக்காமல் ஆடவன் ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
எவனோ ஒருவனை தன் அருகில் கண்டவளோ முதலில் பயந்து அலறி… "ஆஆஆ…" என்று கத்தியபடி கையில் இருந்த போனை கீழே போட்டு விட்டு எழுந்து நிற்க… அவனோ அவளைப் பார்த்து சிரித்தான்.
அதைக் கண்டு எரிச்சலுற்றவள் "டேய் யாருடா நீ? எப்படி இங்கே வந்தே?"என்று அவள் அடையாளம் தெரியாமல் கத்த… அவனோ அவளை மேலிருந்து கீழே பார்க்க இவளோ ஏதோ உணர்ந்தவளாய் மேலே துப்பட்டா இல்லாமல் இருப்பதைக் கண்டு துப்பட்டாவும் அவன் தோள் மேலே இருக்க அதை அவனிடம் இருந்து பிடித்து இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவள் "டேய் திருடனா நீ? இரு இப்போவே எல்லோரையும் சத்தம் போட்டுக் கூப்பிடுறேன்" என்று அவள் கத்த ஆரம்பிக்கும் போது அவள் வாயை பொத்தியவன்….
"ஏய் இரு இரு நான் யாருன்னு உனக்கு தெரியலை?"என்று கேட்க…
இவளோ எதுவும் சொல்லாமல் அவனையேப் பார்க்க… அவனோ "உன் வாயை நான் பொத்தி வைச்சு இருக்கேன்ல அதான் உன்னால பதில் சொல்ல முடியலை" என்று அவள் வாயிலிருந்து தன் கையை எடுக்க….
அவளோ மூச்சு இழுத்து விட்டப்படி… "என்ன தைரியம் உனக்கு? என் மேல கையை வைப்பே அதோட என்கிட்டயே நான் யாருன்னு கேட்பே? லூசாடா நீ?" என்று அவள் கத்த….
திரும்பவும் அவள் இடையில் கைவைத்து தன்னோடு இழுத்துக் கொண்டு "யாரு லூசு நீ தான்டி லூசு திருட வந்தவன் இப்படி டீசன்டாவா வருவான் அதைக் கூட யோசிக்க முடியலை உன்னால எப்பவும் நான் பேசுறதை நீ பொறுமையா கேட்க மாட்டல்ல" என்று அவன் சொல்ல…
அவளோ அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடியபடி "விடு விடு" என்று கத்திக் கொண்டிருந்தாள்.
ஒரு கையால் அவளைப் பிடித்தபடி அவள் தலையைப் பிடித்து "முதல்ல நான் சொல்றதைக் கேளு.நான் யாருக்கும் தெரியாமல் உள்ளே வந்த திருடன் இல்ல ஏற்கனவே இங்கே வந்துட்டு போன தவரூபன்" என்று அவன் தன்னை அறிமுகப்படுத்தவும் அவன் கையில் இருந்து அவள் விடுபடவும் அவன் பெயரைக் கேட்டு அதிர்ந்து அவனையேப் பார்த்துக் கொண்டு கீழே விழும் நேரம் அவன் அவளை தாங்கிப் பிடித்து அவன் அவளைப் பார்க்க அவளும் அவனையே பார்த்தாள்.
(தொடரும்)