கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்... கைவைத்தியம் 15

lathasridharss

Moderator
Staff member
கைவைத்தியம் 15



பெண்களுக்காக இன்று..




பொதுவாக பெண்கள் மாதவிடாயின் போது அடிவயிறு வயிற்றுவலி, கோபம், எரிச்சல், தலைவலி இப்படி அவதிக்கு உள்ளாவார்கள். இதற்கான எளிய கைவைத்தியம் இதோ..


** முருங்கைப்பூவை கஷாயம் வைத்து அருந்தினால் இந்த உபாதைகள் நீங்கும்.


** திப்பிலி, இந்துப்பூ, பெருங்காயம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை காலையில் வெறும் வயிற்றில், மாதவிடாய் நாட்களில் உட்கொண்டால், பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலிப் பிரச்சனை குணமாகும்** அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தாலும், வயிற்று வலி குறையும். இதை தினமுமே உண்ணலாம்.


** இஞ்சி துண்டை எடுத்து தண்ணீரில் ஐந்து நிமிடம் சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து தினமும் மூன்று முறை, உணவுக்குப்பின் எடுத்துக்கொண்டால், மாதவிடாய் சம்மந்தமான அனைத்துப் பிரச்சனைகளும் சீராகும்.


** எதுவுமே முடியவில்லையென்றால், வெறும் சீரகத்தை வறுத்து பொடி செய்து வெதுவெதுப்பான நீரில் மாதவிடாய் சமயங்களில் அருந்துங்கள்.. சீரகத்தைக் கொத்திக்கவிட்டு அந்த நீரையை குடித்தாலும், நல்ல பலனைத் தரும்.
 
Top