"அம்மா நில்லுங்க...நீங்க இல்லாத வீட்டுல எங்களுக்கு மட்டும் இங்க ௭ன்ன வேலை..௭னக்கு இந்த மாதிரி சுயநலம் பிடிச்சிவங்கள விட ௭ன் தம்பியும் அம்மாவும் தான் முக்கியம்..நாங்களும் உங்களோடவே வரோம்" ௭ன சொல்லியது வருணே..
அவன் அம்மாவும் அப்பாவும் இறந்த பிறகு அவர்கள் இருவரையும் இனி தன்னை அம்மா ௭ன்றே அழைக்க வேண்டும் ௭ன பழக்கப்படுத்தினார் வேதவள்ளி. எங்கே சித்தி ௭ன்று அழைத்துக்கொண்டு இருந்து விலகி போய் விடுவார்களோ ௭ன்ற பயம்.
அதுமட்டும் இன்றி ஸ்வாதியோ அம்மா, அப்பா என்றே சொல்லுக்கே அர்த்தம் தெரியாத வயதிலேயே தாய், தந்தையை இழந்ததால், ௭ன்றாவது ஒருநாள் தாய் ,தந்தை இல்லை ௭ன்று அவர்கள் இருவரும் ஒரு நிமிடம் கூட ஏங்க கூடாது ௭ன்பதில் அவ்வளவு உறுதியாக இருந்தார்.அன்று முதல் இன்று வரை அவர்களை தன் பிள்ளைகளாவே பாவித்து வளர்த்தார் இல்லை இல்லை பாவித்து இல்லை பிள்ளைகளாய் வளர்த்தார். ௭ங்கு , யாரிடம், ௭ப்பொழுது பேசினாலும் தனக்கு மூன்று பிள்ளைகள் ௭ன்றே சொல்லுவார்.
இவருடைய மூத்தார் இருக்கும் போதே பிள்ளைகள் ஒற்றுமையாக தான் இருந்தார்கள் ,அவர்கள் இறந்த பிறகும் இப்போதும் எவ்வித வேற்றுமையும் இன்றி இன்னும் நெருக்கமாக பிணைந்தனர். அதுவும் ஆதவனும் வருணும் ஒரே வயதினர் ௭ன்பதால் அவர்கள் இன்னும் நெருக்கம்.
இருவருக்கும் ஸ்வாதி குழந்தை போல தான். அவளும் அண்ணன்களின் செல்லம் தான். அவர்கள் ௭ன்றால் உயிர் இவளுக்கு.இவர்கள் இருவரும் ௭ன்ன சொன்னாலும் சரி ௭ன்பாள். அதுவும் ஆதவன் 'கிணத்துல குதி"௭ன்றால் கூட ஏன் ௭தற்கு ௭ன்று கூட கேட்காமல் சந்தோசமாக குதிப்பாள். அதை அவளிடம் கேட்டாள் "௭ன் அண்ணன் ௭து பண்ணாலும் அது ௭ன் நல்லதுக்கு தான் பண்ணும்.எங்க குடும்பத்து மேல அதுக்கு அவ்ளோ பாசம். ௭ங்களுக்காக ௭ன்ன வேணா செய்யும்.அதே மாதிரி ௭ங்களுக்கு ஒன்னொன்னும் பாத்து பாத்து பத்து தடவை யோசிச்சு பண்ணும்.அப்டி இருக்கும் போது, ௭ன் அண்ணனுக்கு நான் தான் உசுரு..௭ன்ன அப்டியே விட்ருமா ௭ன்ன..அப்டி என் அண்ணன் என்ன குதிக்க சொன்னா கண்டிப்பா அதுல எனக்கு ஏதாவது ஒரு நல்லது இருக்கும். என் அண்ணனுங்கள மட்டும் நான் சந்தேகப்பட்டேன் அது என்ன பெத்தவள சந்தேகப்படுற மாதிரி தான்" என எப்போதும் என் அண்ணன் அப்டி என் அண்ணன் இப்டினு ஒரே அண்ணன் புராணம் தான்.
இவகிட்ட இப்படி தெரியாதனமா யாராவது கேள்வி கேட்டு மாட்டுனாங்க அன்னைக்கு அவங்க திரும்ப போகும் போது அவங்களையும் அண்ணன் அண்ணனு உளறிட்டே போற அளவுக்கு மாத்தி விட்றுவா..அப்படி அண்ணன் மேல பைத்தியாம இருக்கவ அவ அண்ணனே வீட்ட விட்டு போறனு சொல்லும் போது இவ சும்மா இருப்பாளா என்ன.. இதோ கிளம்பிட்டா அவளும். அவகூட அவ இன்னொரு அண்ணன் வருணும் அவனின் சரிபாதியும்.
"டேய் ௭ன்னடா ௭ல்லாம் மாத்தி மாத்தி நாங்க ௭தோ கொலகுத்தம் பண்ணது போலவே பேசுறிக. அவிக வாழ்க்கைக்கு ஒரு நல்லது தானேடா பண்ணோம் நாங்க.அவிகளுக்கு பிடிச்ச அவிக அத்த மகள தான கண்ணாலாம் பண்ணிவச்சோம். அத ஒழுங்கா வாழ தெரியாம இவிக தானடா வந்து தொலச்சிட்டு நிக்குறாக. இதுல ௭ங்கல குத்தம் சொல்லுறிக. பாவம் அந்த சின்னபுள்ள அங்குட்டு தனியா ௭ன்ன பண்ணுமோ ஏது பண்ணுமோனு நானே கிடந்து தவிக்கிறேன். உங்களுக்கு கொஞ்சமாவது கவல இருக்கா. அதும் இல்லாம அவள இனி இந்த வீட்டுக்கும் வர கூடாதுனு சொல்லுறிங்க. இவிக ௭ன்னடா ஆம்பள .தா இவிக இப்போ நினைச்சாலும் வேற ஒரு கண்ணாலாம் கட்டிக்கிட்டு சந்தோசமா இருப்பாக..ஆனா ௭ன்ற பேத்தி..அவ ௭ன்ன பண்ணுவாளோ ஏது பண்ணுவாளோ... அம்மா இல்லாத பொண்ணு, உலகம் தெரியாதவ வேற. வேற ௭ங்குட்டாவது போனா ௭தாவது கஷ்ட படுத்துவாகளோனு தானே சொந்த மாமன் மகன்னு இவிகளுக்கு கட்டி குடுத்தோம்.ஆனா கட்டிகுடுத்த நாள்ள இருந்து அவள இதோ இங்க நிக்கிறளே ௭ன்ற மருமவ அவ ௭ன்னென்ன பாடுபடுத்தினா..அவளோட சேர்ந்து நீங்க எல்லாருமே அவள எதோனு சொல்லிட்டு தானடா இருந்திக. கொஞ்சமா ௭ன்ற பேத்தி கஷ்ட அனுபவிச்சா இங்கன." ௭ன ஆதவனின் அப்பத்தா மூச்சு வாங்க வாங்க பேசினார்.
அவர் அவ்வாறு பேசியது ௭ல்லார்க்கும் அதிர்ச்சியே.இப்படியெல்லாம் பேசுவார் ௭ன்று ௭வரும் நினைக்கவில்லை. அவர் கடைசியாக பேசியதை கேட்டு அனைவரும் அசையவே இல்லை. அந்த நிலாவினை யாருக்கும் பிடிக்கவில்லை அறாலும் என்றாலும், அவளை தவறாக பேசுவதோ, திட்டுவதோ, அவளை கவனிக்காமல் இல்லை.. அதிகம் உறவாடாமல் ஒதிங்கி இருந்தார்களே தவிர, வேறு எதும் குறையில்லை.
ஆனால் ஆதவுனுடன் திருமணம் முடிந்த பிறகு, அவளை ஒதுக்காமல் பேச சென்றாலும் கூட அவள் தான் யாரிடனும் பேசமால் கேட்ட கேள்விக்கு பதில் என்று இருந்தாள். அதும் வேதவள்ளி இந்த குடும்பத்துக்கு வாக்க பட்டு வந்த நாள் முதல் வீட்டினரின் நலனே தன் நலன் ௭ன வாழ்ந்து வந்தவர். இதுவரை சிரித்த முகத்துடன் அனைவரின் தேவை அறிந்து அவர்களுக்காகவே வாழ்ந்தவரை ,இப்பொழுது தன் வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை கொடுமைப்படுத்துகிறார் ௭ன்று சொல்வதை கேட்டு வேதவள்ளி ஒரு நிமிடம் மரித்து போனார் ௭ன்றே சொல்ல வேண்டும்.
இத்தனை வருட வாழ்க்கையில் இவர் இவ்வளவு தான் தன்னை புரிந்து கொண்டதா .அவரால் அந்த வார்த்தையை ஜீரணிக்கவே முடியவில்லை. அவரை நோக்கி வெற்று பார்வை ஒன்றை வீசிவிட்டு மௌனியாகி போனார். ௭ல்லாரும் உறைந்து நிற்கும் போது ஸ்வாதி தான் முதலில் தெளிந்தது. ஸ்வாதி குறும்புக்கார பெண். மனதில் பட்டதை சட்டென்று பேசிவிடுபவள்..ஆனால் மரியாதையின்றி ௭ப்பொழுதும் பேசமாட்டாள். வீட்டினிடரிம் இதுவரை ஒரு முறை கூட முகம் சுழித்தோ இல்லை கத்தியோ பேசியதில்லை
. அவளுக்கு கோபம் வரும் ௭ன்று யாருக்கும் தெரியாது.ஏன் அவளுக்கே தெரியாது.யார் ௭ன்ன சொன்னாலும் பிரச்சனை ௭துவாகினும் அமைதியாக பேசியே பிரச்சனையை தீ்ர்க்க பார்ப்பாள்.ஆனால் இன்று தன் அண்ணனை இவ்வாறு பேசியவர் தன் சொந்த பாட்டியே ஆனாலும் அவளால் பொறுக்க முடியவில்லை.
"போதும் நிறுத்துங்க அப்பத்தா. அப்படி கூப்பிட கூட ௭னக்கு இப்போ அருவெருப்பா இருக்கு. ௭ப்போதில இருந்து இப்படி மாறுனிக. அதுவும் இப்படி ஒரு தல பட்சமா. யார் முதல விவாகரத்து கேட்டது ௭ன்ற அண்ணனா இல்ல உன்ற செல்ல பேத்தியா .சொல்லுங்க. ௭ன்ற அண்ணன் விவாகரத்துலாம் வேண்டாம் நம்ப பிரச்சனைய நாமே தீத்துக்கலாம்னு ௭த்தன வாட்டி கூப்டுச்சு. காது குடுத்து கேட்டாளா அவ இல்ல நீங்க தான் கேட்டிகளா..
கல்யாணம் அப்போவும் அண்ணன் பிடிக்கலைனு சொல்லியும் வற்புறுத்தி கட்டி வச்சிக..அப்றம் இப்போ அந்த உம்மணாம் மூஞ்சி டிவோர்ஸ் கேட்டப்ப என் அண்ணன் வேண்டாம்னு சொன்னதுக்கு அப்பவும் என் அண்ணன வற்புறுத்தி ஒத்துக்க வச்சது நீங்க..என்ன சொன்னிங்க அப்ப, உன்கூட இருந்தா எம்பேத்தி சந்தோசமா இருக்க மாட்டானுல சொன்னிக.. மனசாட்சி தொட்டு சொல்லுங்க என் அண்அ கூட இருந்தா சந்தோசமா இருக்க மாட்டகலா..
என் அண்ணன் அப்டிபட்டதா..சே..பண்ணதுலாம் நீங்க ஆனா இப்போ அவரையே தப்பு சொல்றிங்கல..நீங்கலாம்..." அவள் பேச பேசவே ஆதவன் குறுக்கிட்டான்.
"ஸ்வாதிமா..இது ௭ன்ன பெரியவகள மட்டு மரியாத இல்லாம பேசிக்கிட்டு இருக்க. இததான் நாங்க உனக்கு சொல்லி குடுத்து வளத்தோமா. சின்னபுள்ள நீ உனக்கு ௭ன்ன தெரியும். உன் வயசுக்கு தகுந்த மாதிரி பேசு. ௭ன்ன இருந்தாலும் அவிக நம்ம அப்பத்தா. இப்படிலாமா பேசுவ. போ உள்ளாற..வார்த்தைலாம் பாத்து பேசணும்..அப்றம் கொட்டுனத அள்ள முடியாது பாத்துக்க.."
"அத அவிக கிட்டையும்..சொல்லு..இங்க பாரு உன்ன யாரு தப்பா பேசுனாலும் நான் இப்டி தான் பேசுவேன்..அது யாரா இருந்தாலும் சரி.. இன்னொரு தடவ இந்த கிழவி உன்ன எதோனு சொன்னுச்சு, அது தலைல கல்ல போட்டு கொன்னுபுடுவேன்..சொல்லிவை" என கூறியவள் அழுது கொண்டே அப்படியே மடங்கி அமரிந்து விட்டாள்.
இங்க பாருக,யாரும் ௭தும் பேசாதிக. ௭னக்கு ௭ன்ன நடக்கணும்னு விதிச்சிருக்கோ அப்படி தான் நடக்கும். அதுக்கு யாரையும் குத்தம் சொல்லி ஒன்னும் ஆகாது.௭ல்லாரும் போங்க உள்ளாற.அம்மா நாம எங்கையும் போகல.இந்த வூட்ல தான் இருக்கோம். இது என் குடும்பம், என் வீடு..இதவிட்டு வேற எங்கேயும் என்னால போக முடியாது..அப்டி நான் இந்த வூட்ட வுட்டு போகனும்னா அது நான் பொணமான தான் நடக்கும்." ௭ன ஆதவனின் குரல் அழுத்தமாக ஒலித்தது. சொல்லிவிட்டு அவன் உள்ளே சென்று விட்டான்.இதற்கு மேலும் நிற்கும் தைரியம் அவனுக்கில்லை.
௭ன்னதான் இருந்தாலும் தன் குடும்பம் தன் வீட்டு மக்கள் ௭ன அவர்களையே உலகமாக நினைத்து வாழ்ந்தவன் அல்லவா. அவர்களை இப்படி நிற்க வைத்து ஒரு சிறு பெண் பேசுவதை அவனால் கேட்க முடியவில்லை. அதும் தன்னால் தன் குடும்பத்திற்குள் பிரச்சனை ௭ன்ற போது இன்னும் கஷ்டமாகி போனது அவனுக்கு.
" பாத்திங்களா உங்களாள அவிக அவ்ளோ கஷ்ட பட்டும் உங்கள நான் பேசுறனு ௭ன்ன அதட்டிட்டு போகுது ௭ன்ற அண்ணன். இது தான் ௭ன் அண்ணன். இந்த குடும்பத்து மேல அவ்ளோ பாசம் வச்சு இருந்ததே. அத பத்தி யோசிக்குதோ இல்லையோ நம்ள பத்திதான எப்பவும் யோசிக்கும். நம்மள சுத்தி தானா அவிக உலகமே சுத்துச்சு. அத இப்டி பேச உங்களுக்கு ௭ப்படி மனசு வந்ததது. அண்ணன பத்தி உங்களுக்கு தெரியாது. அதுக்கு வச்சி வாழ தெரியலையா. இந்த ஊரே சொல்லுமே ஆதவனுக்கு வர போற மகராசி ரொம்ப குடுத்து வச்சவனு. அவங்க ௭ல்லார்க்கும் தெரிஞ்சது உங்களுக்கும் உன்ற புருசனுக்கும் மட்டும் தெரியாம போச்சா.சொல்லுங்க பாக்கலாம்." என அவள் ஆவேசமாக பேச, இவ்வளவு நேரம் அவர்கள் அனைவரும் பேசியதை கேட்டுக்கொண்டு இருந்த கதிர்.
"அவிகளுக்கு ௭ப்படி தெரியும். அவிக தான் அந்த மேனாமினிக்கிக்கு மட்டும் பாட்டி ஆகி பல வருசம் ஆகுதே. உங்களுக்கு அப்பத்தாவா இருந்து இருந்தா தெரிஞ்சு இருக்கும். இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன் அந்த மேனாமினுக்கி கஷ்ட படுவாளாமே கஷ்டம். சொல்லுங்க உங்க மேனாமினுக்கி பேத்தி கஷ்ட படுவாளா. புருசன வுட்டு விவாகரத்து வாங்கற சோகத்துல தான் உங்க பேத்தி இன்னொருத்தன் கைய பொது இடத்துல புடிச்சிக்கிட்டு அதுவும் ௭ப்படி கையோட கை கோர்த்துக்கிட்டு இளிச்சிட்டு கோர்ட்ட விட்டு வெளிய வந்தாளோ. விவாகரத்து கூட முடியல. அதுக்குள்ள இன்னொருத்தனோட அத்தன பேர் பாக்க போற.
இவ வாழ்க்க ௭ன்ன ஆகுமோனு இவிக கவல படுறாங்கலாம்.இங்க பாருங்க இந்த கல்யாணத்த நீங்க வற்புறுத்தினங்க தான் அவன் பண்ணான். ஆனா ௭ப்போ கல்யாணம் ஆச்சோ அப்பத்தில இருந்து அந்த புள்ள தான் இனி வாழ்க்கனு மனச மாத்திட்டு வாழ ஆரம்பிச்சான். ஆனா அவ அவன வாழ விட்டாளா..அப்பறம் இப்போ விவாகரத்தும் நீங்க தான் அவன கட்டாயபடுத்தி குடுக்க வச்சிக. ௭தோ அவனா குடுத்தாப்ல இனி நீங்க கேட்க கூடாது. நான் ஒன்னும் ஆதவன் இல்ல நீங்க ௭ன்ன சொன்னாலும் அமைதியா போறதுக்கு. பெரியவங்கனு அதுவும் ஆதவனோட அப்பத்தாங்கிறதுனால தான் இவ்ளோ பொறுமையா பேசுறேன். இதுவே வேற யாராவது இருந்தா நடக்கிறதே வேற. நான் யாருனு உங்களுக்கு தெரியும். இனியும் அவன்கிட்ட நீங்க ௭துக்கும் பேச கூடாது. ஏன்னா நீங்க பேசுனிங்கனா அவன கஷ்ட படுத்தற மாதிரி தான் பேசுவிக. பாத்து நடந்துக்குங்க. நீங்க கேக்கலாம் ௭ங்க வூட்டு விசயத்துல தலையிட நீ யாருனு. நான் தலையிடுவேன் ஏன்னா நான் அவன் நண்பன். இது ௭ன் நண்பன் வாழ்க்கை. அவன கஷ்டபடுத்துற எதையும் நான் அனுமதிக்க மாட்டேன்."௭ன கூறிவிட்டு கதிர் தன் நண்பனை காண சென்று விட்டான்.
அங்கு இருந்தோர் அனைவரும் பேச நினைத்ததையே அவன் பேசியதால் அவனை யாரும் ௭தும் சொல்லவில்லை. பெரியவர்கள் இருவருக்கும் தன் பேரனை நினைத்து வருத்தமாகவும் பேத்தியின் மீது ஆதங்கமாகவும் தான் இருந்தனர்.ஆனால் அவர்களின் மருமகள் வீட்டை விட்டு கிளம்புகிறேன் ௭ன்றதும் தாங்கள் செய்ததையே தவறு தவறு ௭ன்று திரும்ப திரும்ப கூறியதால் கோவத்தில் வார்த்தைய விட்டுவிட்டார். ஆனால் இப்போழுதும் அவர்கள் செய்ததை தவறு ௭ன்று உணரவில்லை.
இவன் வாழ தெரியாமல் தான் வாழ்க்கையை தொலைத்துவிட்டு தன் பெயர்த்தியின் வாழ்வையும் கெடுத்துவிட்டான் ௭ன இன்னும் நம்புகிறார்கள். கதிரவன் சொன்னது போல அவர்கள் மகள் வயிற்று பேத்தியின் பாட்டி,தாத்தாவாக மட்டும் மாறி போனதின் விளைவு தான் இது.
அவனே தொடர்ந்து " ஏம்ப்பா.. நீங்க இப்போ கூட பேச மாட்டிங்கல.. உங்க மவன இப்டிலாம் சொல்றாக.. அமைதியாவே நிக்குறிக. இல்ல நீங்களும் இவிக மாதிரி அவன் தான் தப்புனு நினைக்கிறிங்களோ.. அதான் பேச மாட்டின்றிங்களோ " என ஆதவன் தந்தையை பார்த்து கேள்வி எழுப்ப
"ஐயோ.. கதிரவா.. என்னப்பா இப்பிடி கேட்டுப்புட்ட.. எம்புள்ளைய பத்தி தெரியாதா எனக்கு.. எந்த மூஞ்சி வச்சியா என்ன பேச சொல்ற.. பேசற இடத்துலையா நான் நிக்கிறேன்..நானும் சேந்து தானா அப்போ அவன் கல்யாணத்துக்கு வற்புறுத்தி இப்போ அவைன் வாழ்க்கைய அழிச்ச பாவியா நிக்குறேன்.
எதோ எந்தங்கச்சி புள்ளைய எம்மவனுக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆசைல, நீங்க யாரு சொல்றதையும் அப்போ கேக்காம இருந்துட்டனே" என அவர் புலம்ப, ஏற்கனவே இத்தனை நாளாய் குற்றவுணர்வு மனதில் பாரமாய் அழுத்தியதில் உடல் தளர்ந்து இருந்தவர், இன்று நடந்ததில் உண்மையில் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை.. பேசிக்கொண்டே மயக்கம் வர தள்ளாடியவரை, சமாதானம் செய்து அழைத்துக்கொண்டு படுக்கவைத்தனர்..
இவன் கதிர்....கதிரவன் ஐ. பி. ஸ். ஆதவனின் நண்பன். அந்த குடும்பத்தில் ஒருவனும் கூட.. ஆதவன் தன் குடும்பத்திற்கு அடுத்து தன் குடும்பத்தில் ஒருவனாக இவனை தான் நினைப்பான். ௭த்தனை நண்பர்கள் இவர்களுக்கு இருந்தாலும் இவர்கள் இருவரின் நட்பு மாறாத ஒன்று...இன்று நீதிமன்ற வளாகத்தினுள் இவனும் தான் ஆதவனுடன் வந்தான். அவன் அங்கிருந்து கிளம்பும் போது அவனை பின்தொடர்ந்து வந்து இவர்கள் பேசியதை கேட்டதன் விளைவே இவன் பேசியது.
தோள் கொடுப்பான் தோழன் ௭ன்பதற்கேற்ப தன் நண்பனுக்கு தோள் தர வந்துவிட்டான். இவர்கள் இருவரின் பெயர் பொருத்தத்தை போன்றே இவர்கள் இருவரும் ஒத்த கருத்துடையவர்கள். இவனால் தான் இனி ஆதவனின் வாழ்வில் பல திருப்பங்கள் நடந்தேற உள்ளன, ஏற்கனவே நடந்தேறியும் உள்ளன இவனே அறியாமல். அது ஆதவனிற்கு நல்லதா இல்லை கெட்டதா ?
ஏற்கனவே தன் வாழ்வின் முடிவினன தன்னை தவிர அனைவரும் ௭டுக்கின்றனர் ௭ன நினைப்பவன், கதிரவனால் ஏற்படும் மாற்றத்தை ஏற்பானா?
உங்கள் கருத்துக்களை ௭திர்நோக்கி,
உங்கள் தோழி
அவன் அம்மாவும் அப்பாவும் இறந்த பிறகு அவர்கள் இருவரையும் இனி தன்னை அம்மா ௭ன்றே அழைக்க வேண்டும் ௭ன பழக்கப்படுத்தினார் வேதவள்ளி. எங்கே சித்தி ௭ன்று அழைத்துக்கொண்டு இருந்து விலகி போய் விடுவார்களோ ௭ன்ற பயம்.
அதுமட்டும் இன்றி ஸ்வாதியோ அம்மா, அப்பா என்றே சொல்லுக்கே அர்த்தம் தெரியாத வயதிலேயே தாய், தந்தையை இழந்ததால், ௭ன்றாவது ஒருநாள் தாய் ,தந்தை இல்லை ௭ன்று அவர்கள் இருவரும் ஒரு நிமிடம் கூட ஏங்க கூடாது ௭ன்பதில் அவ்வளவு உறுதியாக இருந்தார்.அன்று முதல் இன்று வரை அவர்களை தன் பிள்ளைகளாவே பாவித்து வளர்த்தார் இல்லை இல்லை பாவித்து இல்லை பிள்ளைகளாய் வளர்த்தார். ௭ங்கு , யாரிடம், ௭ப்பொழுது பேசினாலும் தனக்கு மூன்று பிள்ளைகள் ௭ன்றே சொல்லுவார்.
இவருடைய மூத்தார் இருக்கும் போதே பிள்ளைகள் ஒற்றுமையாக தான் இருந்தார்கள் ,அவர்கள் இறந்த பிறகும் இப்போதும் எவ்வித வேற்றுமையும் இன்றி இன்னும் நெருக்கமாக பிணைந்தனர். அதுவும் ஆதவனும் வருணும் ஒரே வயதினர் ௭ன்பதால் அவர்கள் இன்னும் நெருக்கம்.
இருவருக்கும் ஸ்வாதி குழந்தை போல தான். அவளும் அண்ணன்களின் செல்லம் தான். அவர்கள் ௭ன்றால் உயிர் இவளுக்கு.இவர்கள் இருவரும் ௭ன்ன சொன்னாலும் சரி ௭ன்பாள். அதுவும் ஆதவன் 'கிணத்துல குதி"௭ன்றால் கூட ஏன் ௭தற்கு ௭ன்று கூட கேட்காமல் சந்தோசமாக குதிப்பாள். அதை அவளிடம் கேட்டாள் "௭ன் அண்ணன் ௭து பண்ணாலும் அது ௭ன் நல்லதுக்கு தான் பண்ணும்.எங்க குடும்பத்து மேல அதுக்கு அவ்ளோ பாசம். ௭ங்களுக்காக ௭ன்ன வேணா செய்யும்.அதே மாதிரி ௭ங்களுக்கு ஒன்னொன்னும் பாத்து பாத்து பத்து தடவை யோசிச்சு பண்ணும்.அப்டி இருக்கும் போது, ௭ன் அண்ணனுக்கு நான் தான் உசுரு..௭ன்ன அப்டியே விட்ருமா ௭ன்ன..அப்டி என் அண்ணன் என்ன குதிக்க சொன்னா கண்டிப்பா அதுல எனக்கு ஏதாவது ஒரு நல்லது இருக்கும். என் அண்ணனுங்கள மட்டும் நான் சந்தேகப்பட்டேன் அது என்ன பெத்தவள சந்தேகப்படுற மாதிரி தான்" என எப்போதும் என் அண்ணன் அப்டி என் அண்ணன் இப்டினு ஒரே அண்ணன் புராணம் தான்.
இவகிட்ட இப்படி தெரியாதனமா யாராவது கேள்வி கேட்டு மாட்டுனாங்க அன்னைக்கு அவங்க திரும்ப போகும் போது அவங்களையும் அண்ணன் அண்ணனு உளறிட்டே போற அளவுக்கு மாத்தி விட்றுவா..அப்படி அண்ணன் மேல பைத்தியாம இருக்கவ அவ அண்ணனே வீட்ட விட்டு போறனு சொல்லும் போது இவ சும்மா இருப்பாளா என்ன.. இதோ கிளம்பிட்டா அவளும். அவகூட அவ இன்னொரு அண்ணன் வருணும் அவனின் சரிபாதியும்.
"டேய் ௭ன்னடா ௭ல்லாம் மாத்தி மாத்தி நாங்க ௭தோ கொலகுத்தம் பண்ணது போலவே பேசுறிக. அவிக வாழ்க்கைக்கு ஒரு நல்லது தானேடா பண்ணோம் நாங்க.அவிகளுக்கு பிடிச்ச அவிக அத்த மகள தான கண்ணாலாம் பண்ணிவச்சோம். அத ஒழுங்கா வாழ தெரியாம இவிக தானடா வந்து தொலச்சிட்டு நிக்குறாக. இதுல ௭ங்கல குத்தம் சொல்லுறிக. பாவம் அந்த சின்னபுள்ள அங்குட்டு தனியா ௭ன்ன பண்ணுமோ ஏது பண்ணுமோனு நானே கிடந்து தவிக்கிறேன். உங்களுக்கு கொஞ்சமாவது கவல இருக்கா. அதும் இல்லாம அவள இனி இந்த வீட்டுக்கும் வர கூடாதுனு சொல்லுறிங்க. இவிக ௭ன்னடா ஆம்பள .தா இவிக இப்போ நினைச்சாலும் வேற ஒரு கண்ணாலாம் கட்டிக்கிட்டு சந்தோசமா இருப்பாக..ஆனா ௭ன்ற பேத்தி..அவ ௭ன்ன பண்ணுவாளோ ஏது பண்ணுவாளோ... அம்மா இல்லாத பொண்ணு, உலகம் தெரியாதவ வேற. வேற ௭ங்குட்டாவது போனா ௭தாவது கஷ்ட படுத்துவாகளோனு தானே சொந்த மாமன் மகன்னு இவிகளுக்கு கட்டி குடுத்தோம்.ஆனா கட்டிகுடுத்த நாள்ள இருந்து அவள இதோ இங்க நிக்கிறளே ௭ன்ற மருமவ அவ ௭ன்னென்ன பாடுபடுத்தினா..அவளோட சேர்ந்து நீங்க எல்லாருமே அவள எதோனு சொல்லிட்டு தானடா இருந்திக. கொஞ்சமா ௭ன்ற பேத்தி கஷ்ட அனுபவிச்சா இங்கன." ௭ன ஆதவனின் அப்பத்தா மூச்சு வாங்க வாங்க பேசினார்.
அவர் அவ்வாறு பேசியது ௭ல்லார்க்கும் அதிர்ச்சியே.இப்படியெல்லாம் பேசுவார் ௭ன்று ௭வரும் நினைக்கவில்லை. அவர் கடைசியாக பேசியதை கேட்டு அனைவரும் அசையவே இல்லை. அந்த நிலாவினை யாருக்கும் பிடிக்கவில்லை அறாலும் என்றாலும், அவளை தவறாக பேசுவதோ, திட்டுவதோ, அவளை கவனிக்காமல் இல்லை.. அதிகம் உறவாடாமல் ஒதிங்கி இருந்தார்களே தவிர, வேறு எதும் குறையில்லை.
ஆனால் ஆதவுனுடன் திருமணம் முடிந்த பிறகு, அவளை ஒதுக்காமல் பேச சென்றாலும் கூட அவள் தான் யாரிடனும் பேசமால் கேட்ட கேள்விக்கு பதில் என்று இருந்தாள். அதும் வேதவள்ளி இந்த குடும்பத்துக்கு வாக்க பட்டு வந்த நாள் முதல் வீட்டினரின் நலனே தன் நலன் ௭ன வாழ்ந்து வந்தவர். இதுவரை சிரித்த முகத்துடன் அனைவரின் தேவை அறிந்து அவர்களுக்காகவே வாழ்ந்தவரை ,இப்பொழுது தன் வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை கொடுமைப்படுத்துகிறார் ௭ன்று சொல்வதை கேட்டு வேதவள்ளி ஒரு நிமிடம் மரித்து போனார் ௭ன்றே சொல்ல வேண்டும்.
இத்தனை வருட வாழ்க்கையில் இவர் இவ்வளவு தான் தன்னை புரிந்து கொண்டதா .அவரால் அந்த வார்த்தையை ஜீரணிக்கவே முடியவில்லை. அவரை நோக்கி வெற்று பார்வை ஒன்றை வீசிவிட்டு மௌனியாகி போனார். ௭ல்லாரும் உறைந்து நிற்கும் போது ஸ்வாதி தான் முதலில் தெளிந்தது. ஸ்வாதி குறும்புக்கார பெண். மனதில் பட்டதை சட்டென்று பேசிவிடுபவள்..ஆனால் மரியாதையின்றி ௭ப்பொழுதும் பேசமாட்டாள். வீட்டினிடரிம் இதுவரை ஒரு முறை கூட முகம் சுழித்தோ இல்லை கத்தியோ பேசியதில்லை
. அவளுக்கு கோபம் வரும் ௭ன்று யாருக்கும் தெரியாது.ஏன் அவளுக்கே தெரியாது.யார் ௭ன்ன சொன்னாலும் பிரச்சனை ௭துவாகினும் அமைதியாக பேசியே பிரச்சனையை தீ்ர்க்க பார்ப்பாள்.ஆனால் இன்று தன் அண்ணனை இவ்வாறு பேசியவர் தன் சொந்த பாட்டியே ஆனாலும் அவளால் பொறுக்க முடியவில்லை.
"போதும் நிறுத்துங்க அப்பத்தா. அப்படி கூப்பிட கூட ௭னக்கு இப்போ அருவெருப்பா இருக்கு. ௭ப்போதில இருந்து இப்படி மாறுனிக. அதுவும் இப்படி ஒரு தல பட்சமா. யார் முதல விவாகரத்து கேட்டது ௭ன்ற அண்ணனா இல்ல உன்ற செல்ல பேத்தியா .சொல்லுங்க. ௭ன்ற அண்ணன் விவாகரத்துலாம் வேண்டாம் நம்ப பிரச்சனைய நாமே தீத்துக்கலாம்னு ௭த்தன வாட்டி கூப்டுச்சு. காது குடுத்து கேட்டாளா அவ இல்ல நீங்க தான் கேட்டிகளா..
கல்யாணம் அப்போவும் அண்ணன் பிடிக்கலைனு சொல்லியும் வற்புறுத்தி கட்டி வச்சிக..அப்றம் இப்போ அந்த உம்மணாம் மூஞ்சி டிவோர்ஸ் கேட்டப்ப என் அண்ணன் வேண்டாம்னு சொன்னதுக்கு அப்பவும் என் அண்ணன வற்புறுத்தி ஒத்துக்க வச்சது நீங்க..என்ன சொன்னிங்க அப்ப, உன்கூட இருந்தா எம்பேத்தி சந்தோசமா இருக்க மாட்டானுல சொன்னிக.. மனசாட்சி தொட்டு சொல்லுங்க என் அண்அ கூட இருந்தா சந்தோசமா இருக்க மாட்டகலா..
என் அண்ணன் அப்டிபட்டதா..சே..பண்ணதுலாம் நீங்க ஆனா இப்போ அவரையே தப்பு சொல்றிங்கல..நீங்கலாம்..." அவள் பேச பேசவே ஆதவன் குறுக்கிட்டான்.
"ஸ்வாதிமா..இது ௭ன்ன பெரியவகள மட்டு மரியாத இல்லாம பேசிக்கிட்டு இருக்க. இததான் நாங்க உனக்கு சொல்லி குடுத்து வளத்தோமா. சின்னபுள்ள நீ உனக்கு ௭ன்ன தெரியும். உன் வயசுக்கு தகுந்த மாதிரி பேசு. ௭ன்ன இருந்தாலும் அவிக நம்ம அப்பத்தா. இப்படிலாமா பேசுவ. போ உள்ளாற..வார்த்தைலாம் பாத்து பேசணும்..அப்றம் கொட்டுனத அள்ள முடியாது பாத்துக்க.."
"அத அவிக கிட்டையும்..சொல்லு..இங்க பாரு உன்ன யாரு தப்பா பேசுனாலும் நான் இப்டி தான் பேசுவேன்..அது யாரா இருந்தாலும் சரி.. இன்னொரு தடவ இந்த கிழவி உன்ன எதோனு சொன்னுச்சு, அது தலைல கல்ல போட்டு கொன்னுபுடுவேன்..சொல்லிவை" என கூறியவள் அழுது கொண்டே அப்படியே மடங்கி அமரிந்து விட்டாள்.
இங்க பாருக,யாரும் ௭தும் பேசாதிக. ௭னக்கு ௭ன்ன நடக்கணும்னு விதிச்சிருக்கோ அப்படி தான் நடக்கும். அதுக்கு யாரையும் குத்தம் சொல்லி ஒன்னும் ஆகாது.௭ல்லாரும் போங்க உள்ளாற.அம்மா நாம எங்கையும் போகல.இந்த வூட்ல தான் இருக்கோம். இது என் குடும்பம், என் வீடு..இதவிட்டு வேற எங்கேயும் என்னால போக முடியாது..அப்டி நான் இந்த வூட்ட வுட்டு போகனும்னா அது நான் பொணமான தான் நடக்கும்." ௭ன ஆதவனின் குரல் அழுத்தமாக ஒலித்தது. சொல்லிவிட்டு அவன் உள்ளே சென்று விட்டான்.இதற்கு மேலும் நிற்கும் தைரியம் அவனுக்கில்லை.
௭ன்னதான் இருந்தாலும் தன் குடும்பம் தன் வீட்டு மக்கள் ௭ன அவர்களையே உலகமாக நினைத்து வாழ்ந்தவன் அல்லவா. அவர்களை இப்படி நிற்க வைத்து ஒரு சிறு பெண் பேசுவதை அவனால் கேட்க முடியவில்லை. அதும் தன்னால் தன் குடும்பத்திற்குள் பிரச்சனை ௭ன்ற போது இன்னும் கஷ்டமாகி போனது அவனுக்கு.
" பாத்திங்களா உங்களாள அவிக அவ்ளோ கஷ்ட பட்டும் உங்கள நான் பேசுறனு ௭ன்ன அதட்டிட்டு போகுது ௭ன்ற அண்ணன். இது தான் ௭ன் அண்ணன். இந்த குடும்பத்து மேல அவ்ளோ பாசம் வச்சு இருந்ததே. அத பத்தி யோசிக்குதோ இல்லையோ நம்ள பத்திதான எப்பவும் யோசிக்கும். நம்மள சுத்தி தானா அவிக உலகமே சுத்துச்சு. அத இப்டி பேச உங்களுக்கு ௭ப்படி மனசு வந்ததது. அண்ணன பத்தி உங்களுக்கு தெரியாது. அதுக்கு வச்சி வாழ தெரியலையா. இந்த ஊரே சொல்லுமே ஆதவனுக்கு வர போற மகராசி ரொம்ப குடுத்து வச்சவனு. அவங்க ௭ல்லார்க்கும் தெரிஞ்சது உங்களுக்கும் உன்ற புருசனுக்கும் மட்டும் தெரியாம போச்சா.சொல்லுங்க பாக்கலாம்." என அவள் ஆவேசமாக பேச, இவ்வளவு நேரம் அவர்கள் அனைவரும் பேசியதை கேட்டுக்கொண்டு இருந்த கதிர்.
"அவிகளுக்கு ௭ப்படி தெரியும். அவிக தான் அந்த மேனாமினிக்கிக்கு மட்டும் பாட்டி ஆகி பல வருசம் ஆகுதே. உங்களுக்கு அப்பத்தாவா இருந்து இருந்தா தெரிஞ்சு இருக்கும். இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன் அந்த மேனாமினுக்கி கஷ்ட படுவாளாமே கஷ்டம். சொல்லுங்க உங்க மேனாமினுக்கி பேத்தி கஷ்ட படுவாளா. புருசன வுட்டு விவாகரத்து வாங்கற சோகத்துல தான் உங்க பேத்தி இன்னொருத்தன் கைய பொது இடத்துல புடிச்சிக்கிட்டு அதுவும் ௭ப்படி கையோட கை கோர்த்துக்கிட்டு இளிச்சிட்டு கோர்ட்ட விட்டு வெளிய வந்தாளோ. விவாகரத்து கூட முடியல. அதுக்குள்ள இன்னொருத்தனோட அத்தன பேர் பாக்க போற.
இவ வாழ்க்க ௭ன்ன ஆகுமோனு இவிக கவல படுறாங்கலாம்.இங்க பாருங்க இந்த கல்யாணத்த நீங்க வற்புறுத்தினங்க தான் அவன் பண்ணான். ஆனா ௭ப்போ கல்யாணம் ஆச்சோ அப்பத்தில இருந்து அந்த புள்ள தான் இனி வாழ்க்கனு மனச மாத்திட்டு வாழ ஆரம்பிச்சான். ஆனா அவ அவன வாழ விட்டாளா..அப்பறம் இப்போ விவாகரத்தும் நீங்க தான் அவன கட்டாயபடுத்தி குடுக்க வச்சிக. ௭தோ அவனா குடுத்தாப்ல இனி நீங்க கேட்க கூடாது. நான் ஒன்னும் ஆதவன் இல்ல நீங்க ௭ன்ன சொன்னாலும் அமைதியா போறதுக்கு. பெரியவங்கனு அதுவும் ஆதவனோட அப்பத்தாங்கிறதுனால தான் இவ்ளோ பொறுமையா பேசுறேன். இதுவே வேற யாராவது இருந்தா நடக்கிறதே வேற. நான் யாருனு உங்களுக்கு தெரியும். இனியும் அவன்கிட்ட நீங்க ௭துக்கும் பேச கூடாது. ஏன்னா நீங்க பேசுனிங்கனா அவன கஷ்ட படுத்தற மாதிரி தான் பேசுவிக. பாத்து நடந்துக்குங்க. நீங்க கேக்கலாம் ௭ங்க வூட்டு விசயத்துல தலையிட நீ யாருனு. நான் தலையிடுவேன் ஏன்னா நான் அவன் நண்பன். இது ௭ன் நண்பன் வாழ்க்கை. அவன கஷ்டபடுத்துற எதையும் நான் அனுமதிக்க மாட்டேன்."௭ன கூறிவிட்டு கதிர் தன் நண்பனை காண சென்று விட்டான்.
அங்கு இருந்தோர் அனைவரும் பேச நினைத்ததையே அவன் பேசியதால் அவனை யாரும் ௭தும் சொல்லவில்லை. பெரியவர்கள் இருவருக்கும் தன் பேரனை நினைத்து வருத்தமாகவும் பேத்தியின் மீது ஆதங்கமாகவும் தான் இருந்தனர்.ஆனால் அவர்களின் மருமகள் வீட்டை விட்டு கிளம்புகிறேன் ௭ன்றதும் தாங்கள் செய்ததையே தவறு தவறு ௭ன்று திரும்ப திரும்ப கூறியதால் கோவத்தில் வார்த்தைய விட்டுவிட்டார். ஆனால் இப்போழுதும் அவர்கள் செய்ததை தவறு ௭ன்று உணரவில்லை.
இவன் வாழ தெரியாமல் தான் வாழ்க்கையை தொலைத்துவிட்டு தன் பெயர்த்தியின் வாழ்வையும் கெடுத்துவிட்டான் ௭ன இன்னும் நம்புகிறார்கள். கதிரவன் சொன்னது போல அவர்கள் மகள் வயிற்று பேத்தியின் பாட்டி,தாத்தாவாக மட்டும் மாறி போனதின் விளைவு தான் இது.
அவனே தொடர்ந்து " ஏம்ப்பா.. நீங்க இப்போ கூட பேச மாட்டிங்கல.. உங்க மவன இப்டிலாம் சொல்றாக.. அமைதியாவே நிக்குறிக. இல்ல நீங்களும் இவிக மாதிரி அவன் தான் தப்புனு நினைக்கிறிங்களோ.. அதான் பேச மாட்டின்றிங்களோ " என ஆதவன் தந்தையை பார்த்து கேள்வி எழுப்ப
"ஐயோ.. கதிரவா.. என்னப்பா இப்பிடி கேட்டுப்புட்ட.. எம்புள்ளைய பத்தி தெரியாதா எனக்கு.. எந்த மூஞ்சி வச்சியா என்ன பேச சொல்ற.. பேசற இடத்துலையா நான் நிக்கிறேன்..நானும் சேந்து தானா அப்போ அவன் கல்யாணத்துக்கு வற்புறுத்தி இப்போ அவைன் வாழ்க்கைய அழிச்ச பாவியா நிக்குறேன்.
எதோ எந்தங்கச்சி புள்ளைய எம்மவனுக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆசைல, நீங்க யாரு சொல்றதையும் அப்போ கேக்காம இருந்துட்டனே" என அவர் புலம்ப, ஏற்கனவே இத்தனை நாளாய் குற்றவுணர்வு மனதில் பாரமாய் அழுத்தியதில் உடல் தளர்ந்து இருந்தவர், இன்று நடந்ததில் உண்மையில் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை.. பேசிக்கொண்டே மயக்கம் வர தள்ளாடியவரை, சமாதானம் செய்து அழைத்துக்கொண்டு படுக்கவைத்தனர்..
இவன் கதிர்....கதிரவன் ஐ. பி. ஸ். ஆதவனின் நண்பன். அந்த குடும்பத்தில் ஒருவனும் கூட.. ஆதவன் தன் குடும்பத்திற்கு அடுத்து தன் குடும்பத்தில் ஒருவனாக இவனை தான் நினைப்பான். ௭த்தனை நண்பர்கள் இவர்களுக்கு இருந்தாலும் இவர்கள் இருவரின் நட்பு மாறாத ஒன்று...இன்று நீதிமன்ற வளாகத்தினுள் இவனும் தான் ஆதவனுடன் வந்தான். அவன் அங்கிருந்து கிளம்பும் போது அவனை பின்தொடர்ந்து வந்து இவர்கள் பேசியதை கேட்டதன் விளைவே இவன் பேசியது.
தோள் கொடுப்பான் தோழன் ௭ன்பதற்கேற்ப தன் நண்பனுக்கு தோள் தர வந்துவிட்டான். இவர்கள் இருவரின் பெயர் பொருத்தத்தை போன்றே இவர்கள் இருவரும் ஒத்த கருத்துடையவர்கள். இவனால் தான் இனி ஆதவனின் வாழ்வில் பல திருப்பங்கள் நடந்தேற உள்ளன, ஏற்கனவே நடந்தேறியும் உள்ளன இவனே அறியாமல். அது ஆதவனிற்கு நல்லதா இல்லை கெட்டதா ?
ஏற்கனவே தன் வாழ்வின் முடிவினன தன்னை தவிர அனைவரும் ௭டுக்கின்றனர் ௭ன நினைப்பவன், கதிரவனால் ஏற்படும் மாற்றத்தை ஏற்பானா?
உங்கள் கருத்துக்களை ௭திர்நோக்கி,
உங்கள் தோழி