கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

புவனா சந்திரசேகரன்

siteadmin

Administrator
Staff member
எனது பெயர் புவனா. மதுரையில் வளர்ந்து, திருமணத்திற்குப் பின்னர் தில்லி வந்து விட்டேன். 38 வருடங்கள் தில்லி வாசம். இப்போது தில்லி அருகில் உத்தரப்பிரதேசத்தில் வசிக்கிறேன். வயது அறுபதைத் தாண்டி விட்டேன். அறுபது வயதுக்கு அப்புறம் தான் எழுதவே வந்திருக்கிறேன். பாரதீய ஸ்டேட் பாங்கில் 22 வருடங்கள் வேலை பார்த்து விட்டு வி.ஆர். எஸ்ஸில் வெளியே வந்தேன். அதற்குப் பிறகு பதினைந்து வருடங்கள் கணித ஆசிரியை அவதாரம். படித்தது முதுகலை கணிதம். கணிதத்தில் மதுரை பல்கலைக்கழக த்தின் கோல்ட் மெடல் வாங்கினேன்.


இப்போது எழுத்து ஒன்று தான் எனது வெறுமையைப் போக்குகிறது. இனிமையான குடும்பம். இரண்டு மகன்கள். ஒருவனுக்குத் திருமணமாகி ஒரு பேரனும் இருக்கிறான். சிறுவர் கதைகள், நகைச்சுவை, த்ரில்லர், ஆன்மிகம் கலந்த த்ரில்லர், மென்மையான காதல் கலந்த குடும்பக் கதை என்று எல்லாவற்றையும் எழுத முயற்சி செய்கிறேன். பிரதிலிபி என்ற தளத்தில் கடந்த இரண்டு வருடங்களாக த் தொடர்ந்து எழுதி வந்தேன். இப்போது சங்கமம் தளத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

புவனா
 
Last edited:
வணக்கம் அம்மா....
தங்கள் எழுத்துகளின் தீவிர ரசிகன் நான் என்பதில் பெருமிதம் உண்டு எனக்கு .... பிரதிலிபி தளத்தில் தங்களின் அநேகப் படைப்புகளையும் படித்து இன்புற்றிருக்கிறேன்... நிரம்ப எழுதுங்கள்💐💐💐
நன்றி
 
Top