அடுத்த அரை மணி நேரம் அமளி துமளிப் பட்டது சத்யாவின் வீட்டில்..வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்து ஆரத்தி சுற்றுகிறேன் திருஷ்டி சுற்றுகிறேன் என்று ஆளாளுக்கு விதவிதமாய்த் தன்னைப் படுத்துவதாகவே தோன்றியது சத்யாவுக்கு..
அதிலும் ஒரு பெரிய திருஷ்டிப் பூசணிக்காயை வேறு வீட்டைச் சுற்றி உடைத்தார்கள்.. 'அப்படி என்ன அப்பேற்பட்ட திருஷ்டி கழிக்கிறது.. அதுவும் நான் இந்த திருஷ்டி பூசணிக்காயையே மணந்து கொண்டிருக்கும் போது..’
தன் எண்ண ஒட்டத்தை உணர்ந்தவளுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.. அவளது எண்ண ஓட்டத்தை அறிந்த கதிருக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கக் கண்டவளுக்கு இப்போது இன்னமும் வெளிப்படையாகவே சிரிப்பு வந்தது..
தன் மகளின் முகத்தை வைத்தே அவள் ஏதோ விபரீதமாகச் சிந்திக்கிறாள் என்று நினைத்த ரேவதிக்குப் பயம் பிடித்துக் கொண்டது.
'கடவுளே என்ன இந்தப் பொண்ணு ஏதோ வில்லங்கமா யோசிக்குது போல இருக்கு.. மாப்பிள்ளை நிச்சயம் தங்கமான குணமுடையவர்..நேற்று அக்கா கூடச் சொன்னாளே..நான் குடுத்து வச்சிருக்கணும்னு..மேலும் காஞ்சனா அண்ணியின் வளர்ப்பாச்சே.. இல்லாட்டி இந்த சத்யாவை அனுசரித்து போக முடியுமா..?..
"என்ன தான் என் பொண்ணுன்னாலும் கூட அதிகச் செல்லமும், பணமும் பகட்டும் அவளை நிச்சயம் பாழ் தான் செஞ்சிருக்கு..இந்த முறை அவளுக்கு நல்லபடியா எல்லாத்தையும் புரிய வைக்கணும்', என்று எண்ணியபடி இருவரையும் உள்ளே அழைத்தாள்.
பெட்டிகளைக் கதிர் எடுத்து வர, வீட்டின் உள்ளே நுழைந்த சத்யா, அங்கே தன் தந்தையைக் கண்டவுடன் ஓடிச் சென்று கட்டி பிடித்து அவர் கன்னத்தில் முத்தமிட்டு "ஹாய் டாடி.. எப்படி இருக்கீங்க.. ஐ ரியல்லி மிஸ்ட் யூ அண்ட் மம்மி.. போங்கப்பா எத்தனை நாளாச்சு உங்களைப் பார்த்து", என்று கண்ணீர் தளும்பப் பேசிய மகளை வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்தார் ராஜ் குமார்..
என்னதான் தன் தந்தை மேல் கோபம் இருந்தாலும் கூட நேரிலே அவரைப் பார்த்தவுடன் பாசப் பயிர் வளர்க்கத்தான் தோன்றியது சத்யாவுக்கு..
"இரும்மா.. நான் நல்லா இருக்கேன்.. என்ன கண்ணா இது.. மாப்பிள்ளையை இப்படிப் பெட்டியை எடுத்துவர சொல்லி..வெரி பேட்.. ரேவூ என்ன நடக்குது இங்கே.. எங்கே போனாங்க நம்ம செக்கியூரிடி கார்ட்ஸ்.. பாரு மாப்பிள்ளை எல்லாத்தையும் தூக்கி வரார்.. நீங்க வையுங்க மாப்பிள்ளை..நான் கொண்டு வரேன்" என்று சொல்லிவிட்டு கதிரின் கையிலிருந்து கொஞ்சம் சாமான்களை வாங்கினார்..
"காலை மெல்லத் தரையில் உதைத்தவள், "போங்கப்பா எப்பவும் ஏதாவது சொல்லிட்டே இருக்கீங்க.. நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக என் வாழ்க்கையையே நான் தியாகம் செஞ்சிருக்கேன்.. இப்பவும் ஏதாவது சொல்லறீங்க..இந்த மாதிரி மூட்டை தூக்குறது, கடினமான வேலையெல்லாம் அவருக்குப் பழக்கமா தான் இருக்கும்.. அதை விடுங்க..ஏம்ப்பா நான் கல்யாணத்துக்கு முன் ஒரு டேல்மேஷியன் பப் வாங்க சொன்னேனே.. அதை வாங்கிட்டீங்களா..நான் ரெஜிஸ்டர் செஞ்சி வச்சேன் அந்த ஏஜென்சியிலே.. அவங்க கூப்பிட்டாங்களா?",, என்று படபடவென்று மூச்சு விடாமல் பேசிய மகளைச் சிறு கண்டிப்போடு பார்த்தவர்,
தியாகம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் கதிரின் முகம் அவமானத்தில் கன்றி கருத்தது.. 'இவ பெரிய இவ.. தியாகம் பண்ணுறாளாம் தியாகம்..இவளையெல்லாம் அன்னிக்கே முடிச்சிருக்கணும்.. பாவம் சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம பேசுது.. கொஞ்சம் டைம் கொடுக்கலாமென்று நினைச்சா என்ன பேச்சு பேசுறா", என்று நினைத்தபடி உதடுகளை அழுந்த மூடிக் கொண்டு ஒன்றும் பேசாமல் நின்றான்.
"சத்யா.. கொஞ்சம் நிதானமா பேசும்மா..இதென்ன என்னமோ பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசறே..என்ன சொன்னே.. தியாகமா.. அதை மாப்பிள்ளைன்னா செஞ்சிருக்காரூ..உன்னையெல்லாம் இத்தனை நாள் சகிச்சுகிட்டு..ஒண்ணும் சொல்லாமல் இருக்கார் பாரு.. அவரோட பொறுமைக்கு நிச்சயம் ஏதாவது தக்க பரிசு தான் கொடுக்கனும்..உன்னைப் போல அவசரக்குடுக்கை, அரைவேக்காட்டோட குடித்தனம் நடத்தறது தான் கஷ்டம்..கடவுள் நிச்சயம் எனக்கு நல்லது நினைச்சதாலே தான் ஜாக்பாட்டா இந்த மாதிரி மாப்பிள்ளையை எனக்குக் கொடுத்தார்..", என்று சொல்லிவிட்டு,
"டாட்..", என்று மெல்லக் குரல் உயர்த்திய மகளை லட்சியம் செய்யாமல்
"நீங்க வாங்க மாப்பிள்ளை உங்க ரூமை காட்டுறேன்.. கொஞ்சம் இளைப்பாறிவிட்டு ராத்திரி சாப்பாட்டுக்கு மீட் செய்யலாம்', என்று கதிரை கூப்பிட்டுக் கொண்டு மாடியேறிப் போனார்.
சிலையாய் நின்றிருந்த மகளைத் தோளில் ஒரு தட்டு தட்டி, "வாடி..ஏன் இப்படி நிக்கிறே", என்று ரேவதி கேட்டவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்தது சத்யாவுக்கு..
'சே.. இந்தக் குண்டனை நான் படுத்துகிற பாட்டில் சொல்லாமல் கொள்ளாமல் அவன் என்னை விட்டுவிட்டு ஓட வேண்டும்..இவன் என்னிடம் ஆத்திரமாய் முகம் திருப்புவதைப் பார்த்து அப்பா தான் தப்பு செய்துவிட்டேனே.. என் மகள் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டேனே என்று நினைத்து வருத்தபடணும்னு நினைச்சா இப்படி நமக்கே ஆப்பு அடிச்சிட்டு போகிறார்..வெரி பேட்.. எனிவே இன்னமும் இரண்டு நாள் இங்கே தானே இருப்பேன்.. அப்ப பார்க்கலாம்', என்று நினைத்துக் கொண்டு,
"என்னம்மா பார்த்தாயில்லை.. சந்தோஷமா உனக்கு.. பார்.. என் அப்பா என்னையே குத்தம் சொல்லிட்டு போகிறாரு..இதுக்குத்தான் என்னை நீ பெத்தியா..இல்லை அருமை பெருமையா வளர்த்தியா.. எந்த விதத்தில் இவர் எனக்குப் பொருத்தம்.. சொல்லும்மா நீயும் ஒரு பெண்தானே..இவனைக் கல்யாணம் செய்யுறதுக்கு நான் எதுக்கு எம்.டெக் படிக்கணும்.. இங்கேயே ஏதோ டென்தோ பிளஸ்டூ வோ பெயிலாகி இருந்திருந்தால் கூடப் போதுமே.. நாள் முழுக்க எரிச்சல் தான் மிச்சம் எனக்கு", என்று கத்தினாள்..
யார் காதிலாவது விழுந்தால் அசிங்கம் என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி, "அடங்குடி..இப்போ என்ன குறைஞ்சு போச்சுன்னு இப்படி ஆர்ப்பாட்டம் செய்யுறே,,நீ வாயை அடக்கியிருந்தா அப்பா இப்படித் திட்டுவாறா.. பொண்ணா பொறந்தவளுக்குப் பொறுமையும் அடக்கமும் வேணும்டி.. உனக்குத் துளியும் அதில்லை..தப்பு என் பேர்ல தான் நான் தான் அப்படி உன்னை வளர்த்து தொலைச்சிட்டேன்..இன்னமும் எவ்வளவு நான் எல்லார்கிட்டயும் கேக்கணுமோ தெரியலை..சரி சரி.. போ.. போயி முகம் கழுவி தயாராகி வா.", என்று கண்டிப்பாய் பேசி அனுப்பினாள் தாய்.
முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டபடி போன மகளைக் கவலையுடன் பார்த்தபடி நின்றிருந்தாள் அந்தத் தாய்..
தன்னறைக்குச் சென்றவள், நேராய் பால்கனிக்கு சென்றாள்.. அங்கே போட்டு இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தவளுக்குக் கண்களைக் கரித்துக் கொண்டு கண்ணீர் வந்தது.. சே..ஊஞ்சல் கூட நான் புகுந்த வீட்டில் நான் ஆசைப்படும் இடத்தில் இருக்கணும்னு பிரகாஷின் ரூம் பால்கனியில் மேட்சிங்காய் போட்டேன்.. இப்போ.. மாடியில் பால்கனியில் பிரகாஷ் நின்றிருப்பதைப் பார்த்து நான் கையை ஆட்டியதைக் கூட அவன் கவனிக்கவில்லை.. நல்ல வேளையாய் நான் கையாட்டியதை குண்டர் கவனிக்கவில்லை.. இல்லாவிட்டால்.. ஒரு வேளை நான் கையாட்டியதை கவனித்து விட்டுத் தான் அப்பா கண்டித்தாரோ', என்று மனம் குழம்பினாள்.
'எது எப்படியோ.. பிரகாஷும் நானும் சொந்தம் தானே.. சின்ன வயசிலிருந்து ஒன்றாய் தான் வளார்ந்தோம்.. இப்போ திடீரென்று வேறு ஒருவருடன் கல்யாணம் என்றால்..எனக்கும் எப்படி இருக்கும்..சே.. யாரும் என் மனதைக் குறித்து யோசித்துப் பார்க்காமல் என் வாழ்க்கையைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு என்னை ஆட்டி வைக்க நினைக்கிறார்கள்..
"பார்க்கலாம்", என்று நினைத்ததை வாய்விட்டும் சொல்லிவிட்டாள்..
"எதைப் பார்க்கலாம்?", என்று பின்னேயிருந்து கேட்ட குரலில் தூக்கிப் போட, மெல்லத் திரும்பினாள் சத்யா..
அங்கே அவள் கணவன், கதிர், சின்னத்தம்பி பிரபு போல் கன்னம் குழிந்த புன் முறுவலுடன் நின்றிருக்கக் கண்டவள் ஒரு கணம் அந்தச் சிரிப்பழகில் மனம் தடுமாறினாள்..
அவளின் மைண்ட் வாய்ஸ், 'அடங்குடி.. அவனே ரொம்பத்தான் பிகு செஞ்சிகிட்டுப் பந்தா காட்ட ஆரம்பிச்சுருக்கான்.. இதிலே நீ வேறு அவனை ரசிப்பது தெரிஞ்சா அவ்வளவுதான்.. இந்த ஜென்மத்துலே..அரிசி மூட்டை மாதிரிதான் புஷ்டியா இருப்பான்..ஏதாவது செஞ்சு உடம்பைக் குறைப்போம்னு இருக்கா பாரு அவனுக்கு..', என்று அவளைத் தூண்டிவிட்டது.
"ஏய் சத்யா.. என்னாச்சு விழிக்கிறே?.. நான் அத்தையைக் கூப்பிடவா.. மேலுக்குச் சுகமில்லையா?..சொல்லும்மா?", என்ற கதிரின் குரலில் உலகிற்கு வந்தவள்,
சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டவள்,
"என்ன..எனக்கொண்ணும் இல்லையே.. ஏதோ யோசித்தேன் அவ்வளவுதான்.. எதுக்கு இங்கே வந்தீங்க.. கதவை தட்டிட்டு வரணும்கிற மேனர்ஸ் இல்லையா உங்களுக்கு?", என்று எரிந்து விழுந்தவளை, விசித்திரமாய்ப் பார்த்தவன்,
"ஏம்மா இந்த டயலாகை இன்னும் இன்னமும் எத்தனை முறைடி எங்களிடம் சொல்லுவீங்க.. என்னவோ பெரிய எலிசபெத்து மகாராணி..மந்திராலோசணையில் நீங்க ஈடு பட்டிருக்கீங்க பாரு.. நான் உன்னோட புருஷன்டி..கதவை திறந்து வச்சிருந்தே ..கூப்பிட்டுப் பார்த்தேன் நீ குரல் கொடுக்கலை அதான் வந்தேன்..என்ன காது கொஞ்சம் அவுட்டா..", என்றான் கூலாய்..
"என்னது டீயா.. அதிருக்கட்டும் ..சொல்லுங்க என்ன வேணும்..", என்று சற்று இன்னமும் தன் யோசனையிலிருந்து வெளிவராமல் தொலைவில் தெரிந்த தன் மாமா வீட்டு பால்கனியைப் பார்த்தவாறு கேட்டாள்..
அவள் பார்வை சென்ற திசையைப் பார்த்தவனுக்குத் தெரிந்து போனது அவள் பிரகாஷின் பால்கனியைப் பார்த்தபடி இருக்கிறாள் என்று...அவனும் தானே பார்த்தான் இருக்கும் போதே இவள் லேசாய் கையசைத்ததையும் அங்கே நின்றிருந்த பிரகாஷ் அவசரமாய் உள்ளே போனதையும்..அவனும் தானே பார்த்தான்..
"ம்ம்..என்ன 'ஏதோ நினைவுகள் மனதிலே மலருதே', அப்படின்னு பாடணும்னு தோணுதா.. நானும் தானே பார்த்தானே .. நீ இறங்கியவுடன் அவனைத் தேடினதும்.. அலைபாஞ்சதையும்..அதெல்லாம் பழசும்மா.. ‘நினைவோ ஒரு பறவை...விரிக்கும் தன் சிறகைன்னு" பாடிட்டு மறந்து பறந்து போகணும்டா செல்லம்..ஃப்ளாஷ் பேக்கெல்லாம் போயி அனாவசியமா..மைண்ட் வாய்சிலே பேசறதெல்லாம் எனக்குப் பிடிக்காதுடா குட்டி", என்று அருகில் வந்து அவள் கன்னத்தைத் தட்டியவன் ஒருகணம் அதன் வழுவழுப்பில் தடுமாறி தடவியபடியே உறைந்தான்..
மெல்ல கைகள் கீழிறங்கி கழுத்தை தடவி அவளைத் தோள் சேர அணைத்தான்..ஒரு கணம் எதையும் பற்றி யோசிக்காமல் அவன் அணைப்பில் தன்னைத் தொலைத்தாள் சத்யா..மெல்ல அவள் மெல்லிய இதழ்களைச் சிறைபிடித்தான் கதிர்..
ஏதேதோ மனகிலேசங்களில் ஆழ்ந்து போயிருந்தவளுக்கு முதலில் ஒன்றும் உறைக்கவில்லை.. பின் சட்டென்று நினைவுக்குத் திரும்பியவள், அவன் கையை வெடுக்கென்று தள்ளிவிட்டாள், பின், ஆத்திரத்துடன் அவனை முறைத்தபடி தன் இரு கைகளாலும் அவன் நெஞ்சில் வைத்துப் பிடித்துத் தள்ளினாள் அவனை..
"ஏய் ஷிட்.. கையை எடு.. என்ன நினைச்சிட்டு இருக்கே உன் மனசிலே.. புருஷன்னு ஒரு செகண்ட் சும்மா இருந்தா.. சான்சுன்னு சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டப் பார்க்கிறே.. இதெல்லாம் நல்லா இல்லை.. எனக்குப் பிடிக்காது.. தெரிஞ்சிக்கோ.. எத்தனை நாள் ஆனா என்ன வருஷம் ஆனாலும் நான் நிச்சயம் உன்னை வெறுக்கிறேன்.. உன்னைக் கண்டாலே ஆத்திரம் வருது..கோத்ரெஜ் பீரோ தான் நினைப்புக்கு வருது உன்னைப் பார்த்தாலேயே..", என்று சிடுசிடுத்தாள்..
"ம்ம்.. ஏய் நீ தாண்டி என்னைப் பிடிச்சிட்டு இருக்கே.. அதான் தள்ளி விட்டுட்டியே..அதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி நல்லாத்தானே இருந்தது உனக்கும்.. என்ன இப்போ திடீர்னு நியாபம் வந்துடுச்சு நான் கோத்ரெஜ் பீரோன்னு...தப்பு என் மேலே தான்.. பாவம் சின்னப் பொண்ணுன்னு உனக்குக் கொஞ்சம் அதிகமா இடம் கொடுத்துட்டேன் அதான்,,இப்படித் திரியறே...நல்லா இருக்கு கதை..", என்று இப்போதும் உல்லாசமாய்ச் சிரித்தபடி அவளைப் பார்த்தான்..
"ஏன் இல்லாட்டி என்ன செய்யணுமாம்..சீ.. உன் வயசுதானே பிரகாஷ் மாமாவுக்கும்..அவரைப் பாரு எப்படி இருக்கிறார்.. கம்பீரமா..நீயும் இருக்கியே.. நல்லா வாயிலே வந்துடும் எனக்கு.. ஏய் தெரியாமத்தான் கேக்குறேன்.. நீ என்ன சின்ன வயசிலே ஃபேரெக்ஸும் அமுல் ஸ்ப்ரேயுமா மட்டும் தான் மொக்கினியா..நல்ல புஷ்டி பேபியா இது வரைக்கும் மெயின்டெயின் செய்யுற..இதிலே உன் கூடக் கட்டிபிடிச்சி நான் டான்ஸ் ஆடிப் பாடணுமோ.. பாடலாம் பாடலாம்..நல்லா உன் கனவிலே பாடிக்கோ..இப்போ எதுக்கு இங்கே வந்தே?.."
"அட அதை நீ எப்படி கண்டுபிடிச்சே…போதும் அடங்குடி.. ஏதோ உங்கம்மா சொன்னாங்க வேதாவுக்கு ஏதோ சாமான் உங்க பெரியம்மா கொடுத்து விட்டாங்களாமே அதைப் போய்க் கொடுத்து வரச் சொன்னாங்க..அதை சொல்லத் தான் வந்தேன்..", என்றவனை வெட்டி,
"சொல்லிட்டீங்க இல்ல இடத்தைக் காலி செய்யுங்க..நான் போயி கொடுத்துக்கறேன்.. எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு அங்கே..", என்றாள்
"ஓ.. அப்படியே மஹாராணி.. செஞ்சிட்டாப் போச்சு..", என்று சொல்லிவிட்டு கீழிறங்கி போய் ஹாலில் சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்த சத்யாவுக்கு நெஞ்ச படபடப்பு இன்னமும் கூடக் குறையவில்லை.. என்னதான் கெத்தாகப் புருஷனிடம் பேசினாலும் அவளும் ஒரு சராசரிப் பெண் என்பதை அவளா எப்படி மறந்து போனாள் என்று புதிராய் இருந்தது.
'இனி இவன் இந்த மாதிரி என்னைக் கையாளா விட்டுவிடக் கூடாது.. கோபி..அதான் கோத்ரெஜ் பீரோ அவள் புருஷன் சாமானியமானவனில்லை.. நல்ல சூத்திரதாரி.. சமயத்துக்காகக் காத்திருந்தான் போலும்..'என்று நினைத்தவள், தன் முகத்துக்கு நேரே விரலை நீட்டி,
"ஏய் சத்யா.. இனிமேல் உஷாரா இருக்கணும்.. இல்லாட்டி போனா இவன் உன்னை நிச்சயம் மாற்றிவிடுவான்.. சே அந்தக் கண்ணாத்தா கிழவியின் பேரன் வேறு எப்படி இருப்பான்.. அந்த ஆச்சியே மிகப் பொல்லாத விஷமக்காரி.. பேரன்.. அதிலே பாதியாவது இருக்க மாட்டனா.. சுதாரிடி.. பஞ்சு மிட்டாய்க்காரனைப் பார்த்தார்போல் இனி அவனைப் பார்க்காதே.. அவன் உனக்குச் செட்டாக மாட்டான் மாட்டான் மாட்டான்..", தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தவள் கீழிருந்து குரல் கேட்கவும் படியிறங்கினாள்..
கீழே அவள் அன்னை வேதாவுக்குக் கொடுக்க வேண்டிய ஐட்டங்களைப் பணிப்பெண்ணிடம் கொடுத்து தன் அண்ணன் வீட்டில் கொண்டுத் தருமாறு சொல்லிவிட்டு..
"சத்யா.. போம்மா போய் மாமா வீட்டில் வேதாகிட்ட எல்லாத்தையும் கொடுத்துடு.. நாளைக்கு நான் போகிறேன்.. இப்போ நீ போய் மாமா அத்தையைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வா.. மாப்பிள்ளையையும் கூட்டிட்டு போ..உங்க அத்தை ஏற்கனவே காலையில் வந்து சொல்லிட்டு போச்சு..நீ வந்தா வரச்சொல்லி..போய்ட்டு வாம்மா..", என்றாள் .
"அம்மா இவர் எதுக்கு இப்போ என் கூட... நான் முதலில் போயிட்டு வரேன்.. எனக்குப் பிரகாஷிடம் பேச நிறைய விஷயம் இருக்கு..நீ நாளைக்குக் கூட்டிட்டு போயேன் உன் மாப்பிள்ளையை..", என்று நைச்சியமாய்க் கழட்டி விடப் பார்த்தாள்.
பெண்ணின் இந்த நடத்தையில் தர்மசங்கடமாய் உணர்ந்த ரேவதி மாப்பிள்ளை கதிரை ஒரு மன்னிப்பு கோரும் பார்வைப் பார்த்தவள்,
"அதில்லைம்மா.. ஒரு பத்து நிமிஷம் ரெண்டு பேரும் சேர்ந்து தலை காட்டிட்டு வந்தா மாமா சந்தோஷப்படுவார்.. கல்யாணம் முடிஞ்ச பின்னே முதல் முறை இப்படியெல்லாம் தனியா போவது நல்ல இருக்காது குட்டி.. போம்மா", என்று மகளைத் தாஜா செய்தாள்..
மகளைச் சமாளிக்க அத்தை படும்பாட்டைப் பார்க்க சகிக்கவில்லை கதிருக்கு.. லேசாய் மனைவி மேல் கோபமும் வந்தது..'முழுக்க நனைஞ்சாச்சி இனி முக்காடு எதுக்கு.. நான் தான் புருஷன் அதை எவனாலும் மாத்த முடியாது..இனி எதுக்கு நான் பயப்படணும் இல்லை அசிங்கப்படணும்.. வருவது வரட்டும் பார்த்துடலாம்', என்று நினைத்தவாறு..
மெல்ல சோஃபாவை விட்டு எழுந்து மனைவி கையைப் பிடித்தவன், "கிளம்பு போய்த் தலையைக் காட்டிவிட்டு வரலாம்.. எனக்கும் வேதாவைப் பார்த்து நாளாச்சு.. பாட்டியும் உன் பெரியம்மாவும் ஏதோ சொல்லச் சொல்லி விட்டிருக்கிறார்கள் வா போகலாம்", என்றவன் அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியேறினான்..
அந்தக் கணம் ஒன்றும் பேச வழியில்லாமல் அவன் கை பொம்மையாகிப் போனாள் சத்யா.
அடுத்த அரை மணி நேரம் அமளி துமளிப் பட்டது சத்யாவின் வீட்டில்..வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்து ஆரத்தி சுற்றுகிறேன் திருஷ்டி சுற்றுகிறேன் என்று ஆளாளுக்கு விதவிதமாய்த் தன்னைப் படுத்துவதாகவே தோன்றியது சத்யாவுக்கு..
அதிலும் ஒரு பெரிய திருஷ்டிப் பூசணிக்காயை வேறு வீட்டைச் சுற்றி உடைத்தார்கள்.. 'அப்படி என்ன அப்பேற்பட்ட திருஷ்டி கழிக்கிறது.. அதுவும் நான் இந்த திருஷ்டி பூசணிக்காயையே மணந்து கொண்டிருக்கும் போது..’
தன் எண்ண ஒட்டத்தை உணர்ந்தவளுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.. அவளது எண்ண ஓட்டத்தை அறிந்த கதிருக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கக் கண்டவளுக்கு இப்போது இன்னமும் வெளிப்படையாகவே சிரிப்பு வந்தது..
தன் மகளின் முகத்தை வைத்தே அவள் ஏதோ விபரீதமாகச் சிந்திக்கிறாள் என்று நினைத்த ரேவதிக்குப் பயம் பிடித்துக் கொண்டது.
'கடவுளே என்ன இந்தப் பொண்ணு ஏதோ வில்லங்கமா யோசிக்குது போல இருக்கு.. மாப்பிள்ளை நிச்சயம் தங்கமான குணமுடையவர்..நேற்று அக்கா கூடச் சொன்னாளே..நான் குடுத்து வச்சிருக்கணும்னு..மேலும் காஞ்சனா அண்ணியின் வளர்ப்பாச்சே.. இல்லாட்டி இந்த சத்யாவை அனுசரித்து போக முடியுமா..?..
"என்ன தான் என் பொண்ணுன்னாலும் கூட அதிகச் செல்லமும், பணமும் பகட்டும் அவளை நிச்சயம் பாழ் தான் செஞ்சிருக்கு..இந்த முறை அவளுக்கு நல்லபடியா எல்லாத்தையும் புரிய வைக்கணும்', என்று எண்ணியபடி இருவரையும் உள்ளே அழைத்தாள்.
பெட்டிகளைக் கதிர் எடுத்து வர, வீட்டின் உள்ளே நுழைந்த சத்யா, அங்கே தன் தந்தையைக் கண்டவுடன் ஓடிச் சென்று கட்டி பிடித்து அவர் கன்னத்தில் முத்தமிட்டு "ஹாய் டாடி.. எப்படி இருக்கீங்க.. ஐ ரியல்லி மிஸ்ட் யூ அண்ட் மம்மி.. போங்கப்பா எத்தனை நாளாச்சு உங்களைப் பார்த்து", என்று கண்ணீர் தளும்பப் பேசிய மகளை வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்தார் ராஜ் குமார்..
என்னதான் தன் தந்தை மேல் கோபம் இருந்தாலும் கூட நேரிலே அவரைப் பார்த்தவுடன் பாசப் பயிர் வளர்க்கத்தான் தோன்றியது சத்யாவுக்கு..
"இரும்மா.. நான் நல்லா இருக்கேன்.. என்ன கண்ணா இது.. மாப்பிள்ளையை இப்படிப் பெட்டியை எடுத்துவர சொல்லி..வெரி பேட்.. ரேவூ என்ன நடக்குது இங்கே.. எங்கே போனாங்க நம்ம செக்கியூரிடி கார்ட்ஸ்.. பாரு மாப்பிள்ளை எல்லாத்தையும் தூக்கி வரார்.. நீங்க வையுங்க மாப்பிள்ளை..நான் கொண்டு வரேன்" என்று சொல்லிவிட்டு கதிரின் கையிலிருந்து கொஞ்சம் சாமான்களை வாங்கினார்..
"காலை மெல்லத் தரையில் உதைத்தவள், "போங்கப்பா எப்பவும் ஏதாவது சொல்லிட்டே இருக்கீங்க.. நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக என் வாழ்க்கையையே நான் தியாகம் செஞ்சிருக்கேன்.. இப்பவும் ஏதாவது சொல்லறீங்க..இந்த மாதிரி மூட்டை தூக்குறது, கடினமான வேலையெல்லாம் அவருக்குப் பழக்கமா தான் இருக்கும்.. அதை விடுங்க..ஏம்ப்பா நான் கல்யாணத்துக்கு முன் ஒரு டேல்மேஷியன் பப் வாங்க சொன்னேனே.. அதை வாங்கிட்டீங்களா..நான் ரெஜிஸ்டர் செஞ்சி வச்சேன் அந்த ஏஜென்சியிலே.. அவங்க கூப்பிட்டாங்களா?",, என்று படபடவென்று மூச்சு விடாமல் பேசிய மகளைச் சிறு கண்டிப்போடு பார்த்தவர்,
தியாகம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் கதிரின் முகம் அவமானத்தில் கன்றி கருத்தது.. 'இவ பெரிய இவ.. தியாகம் பண்ணுறாளாம் தியாகம்..இவளையெல்லாம் அன்னிக்கே முடிச்சிருக்கணும்.. பாவம் சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம பேசுது.. கொஞ்சம் டைம் கொடுக்கலாமென்று நினைச்சா என்ன பேச்சு பேசுறா", என்று நினைத்தபடி உதடுகளை அழுந்த மூடிக் கொண்டு ஒன்றும் பேசாமல் நின்றான்.
"சத்யா.. கொஞ்சம் நிதானமா பேசும்மா..இதென்ன என்னமோ பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசறே..என்ன சொன்னே.. தியாகமா.. அதை மாப்பிள்ளைன்னா செஞ்சிருக்காரூ..உன்னையெல்லாம் இத்தனை நாள் சகிச்சுகிட்டு..ஒண்ணும் சொல்லாமல் இருக்கார் பாரு.. அவரோட பொறுமைக்கு நிச்சயம் ஏதாவது தக்க பரிசு தான் கொடுக்கனும்..உன்னைப் போல அவசரக்குடுக்கை, அரைவேக்காட்டோட குடித்தனம் நடத்தறது தான் கஷ்டம்..கடவுள் நிச்சயம் எனக்கு நல்லது நினைச்சதாலே தான் ஜாக்பாட்டா இந்த மாதிரி மாப்பிள்ளையை எனக்குக் கொடுத்தார்..", என்று சொல்லிவிட்டு,
"டாட்..", என்று மெல்லக் குரல் உயர்த்திய மகளை லட்சியம் செய்யாமல்
"நீங்க வாங்க மாப்பிள்ளை உங்க ரூமை காட்டுறேன்.. கொஞ்சம் இளைப்பாறிவிட்டு ராத்திரி சாப்பாட்டுக்கு மீட் செய்யலாம்', என்று கதிரை கூப்பிட்டுக் கொண்டு மாடியேறிப் போனார்.
சிலையாய் நின்றிருந்த மகளைத் தோளில் ஒரு தட்டு தட்டி, "வாடி..ஏன் இப்படி நிக்கிறே", என்று ரேவதி கேட்டவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்தது சத்யாவுக்கு..
'சே.. இந்தக் குண்டனை நான் படுத்துகிற பாட்டில் சொல்லாமல் கொள்ளாமல் அவன் என்னை விட்டுவிட்டு ஓட வேண்டும்..இவன் என்னிடம் ஆத்திரமாய் முகம் திருப்புவதைப் பார்த்து அப்பா தான் தப்பு செய்துவிட்டேனே.. என் மகள் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டேனே என்று நினைத்து வருத்தபடணும்னு நினைச்சா இப்படி நமக்கே ஆப்பு அடிச்சிட்டு போகிறார்..வெரி பேட்.. எனிவே இன்னமும் இரண்டு நாள் இங்கே தானே இருப்பேன்.. அப்ப பார்க்கலாம்', என்று நினைத்துக் கொண்டு,
"என்னம்மா பார்த்தாயில்லை.. சந்தோஷமா உனக்கு.. பார்.. என் அப்பா என்னையே குத்தம் சொல்லிட்டு போகிறாரு..இதுக்குத்தான் என்னை நீ பெத்தியா..இல்லை அருமை பெருமையா வளர்த்தியா.. எந்த விதத்தில் இவர் எனக்குப் பொருத்தம்.. சொல்லும்மா நீயும் ஒரு பெண்தானே..இவனைக் கல்யாணம் செய்யுறதுக்கு நான் எதுக்கு எம்.டெக் படிக்கணும்.. இங்கேயே ஏதோ டென்தோ பிளஸ்டூ வோ பெயிலாகி இருந்திருந்தால் கூடப் போதுமே.. நாள் முழுக்க எரிச்சல் தான் மிச்சம் எனக்கு", என்று கத்தினாள்..
யார் காதிலாவது விழுந்தால் அசிங்கம் என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி, "அடங்குடி..இப்போ என்ன குறைஞ்சு போச்சுன்னு இப்படி ஆர்ப்பாட்டம் செய்யுறே,,நீ வாயை அடக்கியிருந்தா அப்பா இப்படித் திட்டுவாறா.. பொண்ணா பொறந்தவளுக்குப் பொறுமையும் அடக்கமும் வேணும்டி.. உனக்குத் துளியும் அதில்லை..தப்பு என் பேர்ல தான் நான் தான் அப்படி உன்னை வளர்த்து தொலைச்சிட்டேன்..இன்னமும் எவ்வளவு நான் எல்லார்கிட்டயும் கேக்கணுமோ தெரியலை..சரி சரி.. போ.. போயி முகம் கழுவி தயாராகி வா.", என்று கண்டிப்பாய் பேசி அனுப்பினாள் தாய்.
முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டபடி போன மகளைக் கவலையுடன் பார்த்தபடி நின்றிருந்தாள் அந்தத் தாய்..
தன்னறைக்குச் சென்றவள், நேராய் பால்கனிக்கு சென்றாள்.. அங்கே போட்டு இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தவளுக்குக் கண்களைக் கரித்துக் கொண்டு கண்ணீர் வந்தது.. சே..ஊஞ்சல் கூட நான் புகுந்த வீட்டில் நான் ஆசைப்படும் இடத்தில் இருக்கணும்னு பிரகாஷின் ரூம் பால்கனியில் மேட்சிங்காய் போட்டேன்.. இப்போ.. மாடியில் பால்கனியில் பிரகாஷ் நின்றிருப்பதைப் பார்த்து நான் கையை ஆட்டியதைக் கூட அவன் கவனிக்கவில்லை.. நல்ல வேளையாய் நான் கையாட்டியதை குண்டர் கவனிக்கவில்லை.. இல்லாவிட்டால்.. ஒரு வேளை நான் கையாட்டியதை கவனித்து விட்டுத் தான் அப்பா கண்டித்தாரோ', என்று மனம் குழம்பினாள்.
'எது எப்படியோ.. பிரகாஷும் நானும் சொந்தம் தானே.. சின்ன வயசிலிருந்து ஒன்றாய் தான் வளார்ந்தோம்.. இப்போ திடீரென்று வேறு ஒருவருடன் கல்யாணம் என்றால்..எனக்கும் எப்படி இருக்கும்..சே.. யாரும் என் மனதைக் குறித்து யோசித்துப் பார்க்காமல் என் வாழ்க்கையைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு என்னை ஆட்டி வைக்க நினைக்கிறார்கள்..
"பார்க்கலாம்", என்று நினைத்ததை வாய்விட்டும் சொல்லிவிட்டாள்..
"எதைப் பார்க்கலாம்?", என்று பின்னேயிருந்து கேட்ட குரலில் தூக்கிப் போட, மெல்லத் திரும்பினாள் சத்யா..
அங்கே அவள் கணவன், கதிர், சின்னத்தம்பி பிரபு போல் கன்னம் குழிந்த புன் முறுவலுடன் நின்றிருக்கக் கண்டவள் ஒரு கணம் அந்தச் சிரிப்பழகில் மனம் தடுமாறினாள்..
அவளின் மைண்ட் வாய்ஸ், 'அடங்குடி.. அவனே ரொம்பத்தான் பிகு செஞ்சிகிட்டுப் பந்தா காட்ட ஆரம்பிச்சுருக்கான்.. இதிலே நீ வேறு அவனை ரசிப்பது தெரிஞ்சா அவ்வளவுதான்.. இந்த ஜென்மத்துலே..அரிசி மூட்டை மாதிரிதான் புஷ்டியா இருப்பான்..ஏதாவது செஞ்சு உடம்பைக் குறைப்போம்னு இருக்கா பாரு அவனுக்கு..', என்று அவளைத் தூண்டிவிட்டது.
"ஏய் சத்யா.. என்னாச்சு விழிக்கிறே?.. நான் அத்தையைக் கூப்பிடவா.. மேலுக்குச் சுகமில்லையா?..சொல்லும்மா?", என்ற கதிரின் குரலில் உலகிற்கு வந்தவள்,
சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டவள்,
"என்ன..எனக்கொண்ணும் இல்லையே.. ஏதோ யோசித்தேன் அவ்வளவுதான்.. எதுக்கு இங்கே வந்தீங்க.. கதவை தட்டிட்டு வரணும்கிற மேனர்ஸ் இல்லையா உங்களுக்கு?", என்று எரிந்து விழுந்தவளை, விசித்திரமாய்ப் பார்த்தவன்,
"ஏம்மா இந்த டயலாகை இன்னும் இன்னமும் எத்தனை முறைடி எங்களிடம் சொல்லுவீங்க.. என்னவோ பெரிய எலிசபெத்து மகாராணி..மந்திராலோசணையில் நீங்க ஈடு பட்டிருக்கீங்க பாரு.. நான் உன்னோட புருஷன்டி..கதவை திறந்து வச்சிருந்தே ..கூப்பிட்டுப் பார்த்தேன் நீ குரல் கொடுக்கலை அதான் வந்தேன்..என்ன காது கொஞ்சம் அவுட்டா..", என்றான் கூலாய்..
"என்னது டீயா.. அதிருக்கட்டும் ..சொல்லுங்க என்ன வேணும்..", என்று சற்று இன்னமும் தன் யோசனையிலிருந்து வெளிவராமல் தொலைவில் தெரிந்த தன் மாமா வீட்டு பால்கனியைப் பார்த்தவாறு கேட்டாள்..
அவள் பார்வை சென்ற திசையைப் பார்த்தவனுக்குத் தெரிந்து போனது அவள் பிரகாஷின் பால்கனியைப் பார்த்தபடி இருக்கிறாள் என்று...அவனும் தானே பார்த்தான் இருக்கும் போதே இவள் லேசாய் கையசைத்ததையும் அங்கே நின்றிருந்த பிரகாஷ் அவசரமாய் உள்ளே போனதையும்..அவனும் தானே பார்த்தான்..
"ம்ம்..என்ன 'ஏதோ நினைவுகள் மனதிலே மலருதே', அப்படின்னு பாடணும்னு தோணுதா.. நானும் தானே பார்த்தானே .. நீ இறங்கியவுடன் அவனைத் தேடினதும்.. அலைபாஞ்சதையும்..அதெல்லாம் பழசும்மா.. ‘நினைவோ ஒரு பறவை...விரிக்கும் தன் சிறகைன்னு" பாடிட்டு மறந்து பறந்து போகணும்டா செல்லம்..ஃப்ளாஷ் பேக்கெல்லாம் போயி அனாவசியமா..மைண்ட் வாய்சிலே பேசறதெல்லாம் எனக்குப் பிடிக்காதுடா குட்டி", என்று அருகில் வந்து அவள் கன்னத்தைத் தட்டியவன் ஒருகணம் அதன் வழுவழுப்பில் தடுமாறி தடவியபடியே உறைந்தான்..
மெல்ல கைகள் கீழிறங்கி கழுத்தை தடவி அவளைத் தோள் சேர அணைத்தான்..ஒரு கணம் எதையும் பற்றி யோசிக்காமல் அவன் அணைப்பில் தன்னைத் தொலைத்தாள் சத்யா..மெல்ல அவள் மெல்லிய இதழ்களைச் சிறைபிடித்தான் கதிர்..
ஏதேதோ மனகிலேசங்களில் ஆழ்ந்து போயிருந்தவளுக்கு முதலில் ஒன்றும் உறைக்கவில்லை.. பின் சட்டென்று நினைவுக்குத் திரும்பியவள், அவன் கையை வெடுக்கென்று தள்ளிவிட்டாள், பின், ஆத்திரத்துடன் அவனை முறைத்தபடி தன் இரு கைகளாலும் அவன் நெஞ்சில் வைத்துப் பிடித்துத் தள்ளினாள் அவனை..
"ஏய் ஷிட்.. கையை எடு.. என்ன நினைச்சிட்டு இருக்கே உன் மனசிலே.. புருஷன்னு ஒரு செகண்ட் சும்மா இருந்தா.. சான்சுன்னு சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டப் பார்க்கிறே.. இதெல்லாம் நல்லா இல்லை.. எனக்குப் பிடிக்காது.. தெரிஞ்சிக்கோ.. எத்தனை நாள் ஆனா என்ன வருஷம் ஆனாலும் நான் நிச்சயம் உன்னை வெறுக்கிறேன்.. உன்னைக் கண்டாலே ஆத்திரம் வருது..கோத்ரெஜ் பீரோ தான் நினைப்புக்கு வருது உன்னைப் பார்த்தாலேயே..", என்று சிடுசிடுத்தாள்..
"ம்ம்.. ஏய் நீ தாண்டி என்னைப் பிடிச்சிட்டு இருக்கே.. அதான் தள்ளி விட்டுட்டியே..அதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி நல்லாத்தானே இருந்தது உனக்கும்.. என்ன இப்போ திடீர்னு நியாபம் வந்துடுச்சு நான் கோத்ரெஜ் பீரோன்னு...தப்பு என் மேலே தான்.. பாவம் சின்னப் பொண்ணுன்னு உனக்குக் கொஞ்சம் அதிகமா இடம் கொடுத்துட்டேன் அதான்,,இப்படித் திரியறே...நல்லா இருக்கு கதை..", என்று இப்போதும் உல்லாசமாய்ச் சிரித்தபடி அவளைப் பார்த்தான்..
"ஏன் இல்லாட்டி என்ன செய்யணுமாம்..சீ.. உன் வயசுதானே பிரகாஷ் மாமாவுக்கும்..அவரைப் பாரு எப்படி இருக்கிறார்.. கம்பீரமா..நீயும் இருக்கியே.. நல்லா வாயிலே வந்துடும் எனக்கு.. ஏய் தெரியாமத்தான் கேக்குறேன்.. நீ என்ன சின்ன வயசிலே ஃபேரெக்ஸும் அமுல் ஸ்ப்ரேயுமா மட்டும் தான் மொக்கினியா..நல்ல புஷ்டி பேபியா இது வரைக்கும் மெயின்டெயின் செய்யுற..இதிலே உன் கூடக் கட்டிபிடிச்சி நான் டான்ஸ் ஆடிப் பாடணுமோ.. பாடலாம் பாடலாம்..நல்லா உன் கனவிலே பாடிக்கோ..இப்போ எதுக்கு இங்கே வந்தே?.."
"அட அதை நீ எப்படி கண்டுபிடிச்சே…போதும் அடங்குடி.. ஏதோ உங்கம்மா சொன்னாங்க வேதாவுக்கு ஏதோ சாமான் உங்க பெரியம்மா கொடுத்து விட்டாங்களாமே அதைப் போய்க் கொடுத்து வரச் சொன்னாங்க..அதை சொல்லத் தான் வந்தேன்..", என்றவனை வெட்டி,
"சொல்லிட்டீங்க இல்ல இடத்தைக் காலி செய்யுங்க..நான் போயி கொடுத்துக்கறேன்.. எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு அங்கே..", என்றாள்
"ஓ.. அப்படியே மஹாராணி.. செஞ்சிட்டாப் போச்சு..", என்று சொல்லிவிட்டு கீழிறங்கி போய் ஹாலில் சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்த சத்யாவுக்கு நெஞ்ச படபடப்பு இன்னமும் கூடக் குறையவில்லை.. என்னதான் கெத்தாகப் புருஷனிடம் பேசினாலும் அவளும் ஒரு சராசரிப் பெண் என்பதை அவளா எப்படி மறந்து போனாள் என்று புதிராய் இருந்தது.
'இனி இவன் இந்த மாதிரி என்னைக் கையாளா விட்டுவிடக் கூடாது.. கோபி..அதான் கோத்ரெஜ் பீரோ அவள் புருஷன் சாமானியமானவனில்லை.. நல்ல சூத்திரதாரி.. சமயத்துக்காகக் காத்திருந்தான் போலும்..'என்று நினைத்தவள், தன் முகத்துக்கு நேரே விரலை நீட்டி,
"ஏய் சத்யா.. இனிமேல் உஷாரா இருக்கணும்.. இல்லாட்டி போனா இவன் உன்னை நிச்சயம் மாற்றிவிடுவான்.. சே அந்தக் கண்ணாத்தா கிழவியின் பேரன் வேறு எப்படி இருப்பான்.. அந்த ஆச்சியே மிகப் பொல்லாத விஷமக்காரி.. பேரன்.. அதிலே பாதியாவது இருக்க மாட்டனா.. சுதாரிடி.. பஞ்சு மிட்டாய்க்காரனைப் பார்த்தார்போல் இனி அவனைப் பார்க்காதே.. அவன் உனக்குச் செட்டாக மாட்டான் மாட்டான் மாட்டான்..", தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தவள் கீழிருந்து குரல் கேட்கவும் படியிறங்கினாள்..
கீழே அவள் அன்னை வேதாவுக்குக் கொடுக்க வேண்டிய ஐட்டங்களைப் பணிப்பெண்ணிடம் கொடுத்து தன் அண்ணன் வீட்டில் கொண்டுத் தருமாறு சொல்லிவிட்டு..
"சத்யா.. போம்மா போய் மாமா வீட்டில் வேதாகிட்ட எல்லாத்தையும் கொடுத்துடு.. நாளைக்கு நான் போகிறேன்.. இப்போ நீ போய் மாமா அத்தையைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வா.. மாப்பிள்ளையையும் கூட்டிட்டு போ..உங்க அத்தை ஏற்கனவே காலையில் வந்து சொல்லிட்டு போச்சு..நீ வந்தா வரச்சொல்லி..போய்ட்டு வாம்மா..", என்றாள் .
"அம்மா இவர் எதுக்கு இப்போ என் கூட... நான் முதலில் போயிட்டு வரேன்.. எனக்குப் பிரகாஷிடம் பேச நிறைய விஷயம் இருக்கு..நீ நாளைக்குக் கூட்டிட்டு போயேன் உன் மாப்பிள்ளையை..", என்று நைச்சியமாய்க் கழட்டி விடப் பார்த்தாள்.
பெண்ணின் இந்த நடத்தையில் தர்மசங்கடமாய் உணர்ந்த ரேவதி மாப்பிள்ளை கதிரை ஒரு மன்னிப்பு கோரும் பார்வைப் பார்த்தவள்,
"அதில்லைம்மா.. ஒரு பத்து நிமிஷம் ரெண்டு பேரும் சேர்ந்து தலை காட்டிட்டு வந்தா மாமா சந்தோஷப்படுவார்.. கல்யாணம் முடிஞ்ச பின்னே முதல் முறை இப்படியெல்லாம் தனியா போவது நல்ல இருக்காது குட்டி.. போம்மா", என்று மகளைத் தாஜா செய்தாள்..
மகளைச் சமாளிக்க அத்தை படும்பாட்டைப் பார்க்க சகிக்கவில்லை கதிருக்கு.. லேசாய் மனைவி மேல் கோபமும் வந்தது..'முழுக்க நனைஞ்சாச்சி இனி முக்காடு எதுக்கு.. நான் தான் புருஷன் அதை எவனாலும் மாத்த முடியாது..இனி எதுக்கு நான் பயப்படணும் இல்லை அசிங்கப்படணும்.. வருவது வரட்டும் பார்த்துடலாம்', என்று நினைத்தவாறு..
மெல்ல சோஃபாவை விட்டு எழுந்து மனைவி கையைப் பிடித்தவன், "கிளம்பு போய்த் தலையைக் காட்டிவிட்டு வரலாம்.. எனக்கும் வேதாவைப் பார்த்து நாளாச்சு.. பாட்டியும் உன் பெரியம்மாவும் ஏதோ சொல்லச் சொல்லி விட்டிருக்கிறார்கள் வா போகலாம்", என்றவன் அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியேறினான்..
அந்தக் கணம் ஒன்றும் பேச வழியில்லாமல் அவன் கை பொம்மையாகிப் போனாள் சத்யா.