நான் எழுத்தாளர் ப்ரீத்தி பவி. கடந்த இரண்டு வருடங்களாக ஆன்லைனில் கதை எழுதி வருகிறேன். பிரதிலிபி தளத்தில் எனது எழுத்துப் பணியை ஆரம்பித்தேன்.. "காத்திருந்தாய் அன்பே".."என் காதல் ரோஜாவே"என்று இரு நாவல்களும், 3 குறுநாவல்களும், 10 சிறுகதைகளும் எழுதியிருக்கிறேன். எனது இரண்டாவது நாவல் "என் காதல் ரோஜாவே" ஸ்ரீ பதிப்பகத்தின் மூலம் புத்தகமாக வெளிவந்துள்ளது.