கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மணாளனே மனோஹரா-7

hamsa

New member
இல்லறம்-7
எப்போதுமே மனோவை திட்டிக் கொண்டிருந்தாலும் ஏனோ அவன் இல்லாமல் இருப்பது அவளுக்கும் மனதிற்கு ஒரு வித சங்கடமாகவே இருந்தது. இது தான் பிறந்த வீடுதான். இருப்பினும் தான் தங்கி இருந்த அறை இப்போது வெகுவாக மாறி இருந்தது. தனக்கான பீரோ இல்லை. சூட்கேசில் இருந்துதான் துணி எடுக்க வேண்டும். தன்னுடைய உயரத்திற்கு ஏற்ப இருந்த கண்ணாடி ஹேர் பின் எதுவும் இல்லை. தான் ஆசையாக வைத்திருந்த வளையல் ஸ்டாண்ட் தூக்கி எரிய பட்டது. உடைந்து விட்டதாம். மன்னி சொல்லி இருந்தாள் . தான் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கும் செம்பருத்தி இல்லை. ஆசையாக பழம் பிய்த்து தின்னும் மணத்தக்காளி செடி இல்லை. முன்பு இருந்த ரேவதியும்தான் இல்லை. வீடே அமைதியாக இருந்தது. இதோ தன்னை பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தான் அவர்களின் மகள் இல்லை. யாரோ ஒருவனுடைய மனைவி. இன்னொரு வீட்டு பெண். பெற்றவர்கள் வாயால் சொல்லவில்லை என்றாலும் ஏதோ அந்த வீட்டின் சூழ்நிலை சொல்லியது. பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் கணவனின் ஸ்பரிசத்தில் அவனை அன்டியே படுத்து பழக்கப் பட்டிருந்தவளுக்கு இந்த புது இடத்தில உறக்கம் வரவில்லை. ஆம்! இது இப்போது அவளுக்கு புது இடம்தான்!

அவனுக்கு சொல்லவே வேண்டாம். பெற்றோர் வீட்டிற்கு சென்றவள் அங்கேயே தங்கி விடுவாளா? ஏனோ அப்போது விவாகரத்துக்கு ஒத்துக் கொண்டவனுக்கு இப்போது மனைவி பிரிந்து விடுவாள் என்ற எண்ணமே மனதை அழுத்தியது. சேர்ந்து வாழ வேண்டாம். பேசக் கூட வேண்டாம். ஆனால் அவள் உடன் இருக்க வேண்டும். இது என்னவிதமான வினோதமான ஆசை? அவனுக்கே புரியவில்லை.
"வந்துடு ரேவதி !ப்ளீஸ்!"
மனதின் வார்த்தைகள் வாயில் வரவில்லை. அவளிடம் இருந்த பயம்.
முதல் நாளை வெற்றிகரமாக தள்ளியவளுக்கு இரண்டாம் நாள் முடியவில்லை.
"எங்கையாவது ஒரு போன் பண்ணி எப்ப வரப்போறன்னு கேட்டாத்தான் என்னவாம். எல்லாம் படிச்ச திமிரு. மனதிற்குள் திட்ட ஆரம்பித்தவள், "ப்ளீஸ் மனோ! கால் பண்ணுங்களேன். நான் உங்கள திட்ட மாட்டேன். அங்க வந்துடுன்னு சொல்லுங்களேன்" இப்போது மனம் புலம்ப ஆரம்பித்திருந்தது. ஏதேதோ அறிவுரைகளை சொல்ல வேண்டும் என்று அழைத்து வந்த பெற்றோருக்கும் மகளின் முகத்தில் இருந்த பாவங்கள் அவளின் நிலையை நன்றாகவே எடுத்து சொன்னது.
"அப்பா அவர் போன் பண்ணாராப்பா ?" அலுவலகத்தில் இருந்து வந்ததும் கேட்டாள் . "இல்லை" என்று எப்படி சொல்ல முடியும்? சொன்னார். முளுக்கென வந்த கண்ணீரை மறைத்துக் கொண்டு சென்ற மகளை பார்த்தவருக்கு இதயம் கனத்தது.
மனோவுக்கு கால் செய்தார், மகள் அறியா வண்ணம்.
அன்றைய இரவே வந்து நின்றவனை ஓடிச் சென்று கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. அவளின் ஈகோ அவளைத் தடுத்தது.
"ஆமா! ரெண்டு நாளா இருக்கியா செத்தியான்னு கூட கேக்கல. இப்போ மட்டும் என்னவாம்?"
"காபி சாப்பிடறேளா?" அதிசயமாக ரேவதிதான் கேட்டிருந்தாள் .
"இல்ல! பரவால்ல. இந்த வழியா வந்தேன். அதான் நீங்க எல்லாரும் எப்படி இருக்கேள்ன்னு பார்த்துட்டு போலான்னு..".(எப்படி பேசவும் பயமா இருக்கே)
"ஓ !இங்க எல்லாரும் சௌக்கியம். உங்காத்துல எல்லாரும் சௌக்கியமா? வாங்கோ நானும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடறேன்"
"இரண்டு நாட்களாக வாய் திறக்காதவள் இப்போதுதான் வாய் திறக்கிறாள் . பெரியவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. வழக்கம் ஓலா மனோ அமைதியாக இருந்தான். என்ன ஒன்று தன் வீடாக இருந்தாலும் சரி அவள் வீடாக இருந்தாலும் இவன் தான் திட்டு வாங்க வேண்டும். அது மாறாத விதி.
பெற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள் . அண்ணா, மன்னி வருவதற்குள் கிளம்பி விட வேண்டும். ஏற்கனவே மன்னிக்கு தான் என்றால் எதோ ஒரு இளக்காரம். அதிலும் மனோவின் தோற்றம் வேறு மாதிரி இளக்காரம். எதை எதையோ யோசிப்பதை விட்டு விட்டு காரில் ஏறி ஜம்பமாக உட்கார்ந்து கொண்டாள் . பெரியவர்களிடம் கை அசைத்து விட்டு கிளம்பியவன் அடுத்த தெருவில் ஓரமாக நிறுத்தினான்.
" நீ பின்னாடி உக்கார்ந்துக்கோயேன்"
"ஏன் நீங்க போரவ வரவளை சைட் அடிக்கணுமா"
"அதெல்லாம் ஒண்ணுமில்ல. என்னோட வர்றது உனக்குத்தான் அசிங்கம். என்னோட கை பட்டுதுன்னாலே ஒனக்கு வாமிட் வந்துடும். அதுக்குத்தான் சொன்னேன்.
வெடுக்கென திரும்பி அவன் முகம் பார்த்தாள் . "சுருக்குனு பேச உங்கிட்டதான்டா கத்துக்கணும்" அவள் பார்வை சொல்லியது.
"பரவால்ல! நான் இங்கையே இருக்கேன்". அவள் பேசியது அவளுக்கே கேட்கவில்லை. ஆனால் அவனுக்கு கேட்டது.
வழக்கம் போலவே வீட்டிற்கு வந்ததும் யாரும் இவளிடம் பேசவில்லை. இவளும் பேசவில்லை. ஆனால் தன் வீடு வந்த நிம்மதி இருந்தது.
அந்த வாரம் ஞாயிறு அன்று இவன் சுசி வீட்டிற்கு சென்றான்.
"நானும் வரவா ?"
அவன் பதில் சொல்லவில்லை. இருப்பினும் தானாகவே தயாராகி நின்றாள். அன்னையின் முகத்தை பார்த்தான். பெரியவளின் சம்மதத்தில் இவளையும் அழைத்து சென்றான். முதலில் கார் சாவி எடுத்தவன் மனையாளின் சொல்லுக்கிணங்க இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டான். முதலில் எல்லாம் சைடில் கம்பியை பிடித்துக் கொண்டிருந்தவள் கை எப்போது அவன் தோளுக்கு மாறியதோ எனக்குத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தெரியும். அவனுக்கும் தெரிந்தது.

வாங்கி வந்திருந்த பழம், பூ, மஞ்சள் போன்ற பொருட்களை தம்பாளத்தில் வைத்து சம்பந்தி மாமா, மாமி கையில் கொடுத்து நமஸ்காரம் பண்ணி அபிவாதி சொல்லி முடித்தான். "தீர்காயுசா நன்னா இருக்கணும். நீயாவது சீக்கிரமா நல்ல சேதி சொல்லுடா. உன் தங்கைதான் கேக்க மாட்டேங்கறா "
"அண்ணா ஒன் தங்கை ஒன்னும் இல்ல. அவா புள்ள தான் கேக்க மாட்டேங்கறார்"
திரும்பி அவன் ஒரு பார்வை பார்த்ததில்,
"சாரி மா! " சுசியின் வாய் மாமியாரிடம் தானாக சாரி கேட்டது.
"ஒங்களுக்கு எல்லாம் மனோ மாதிரி ஆளுதான் சரி" சொல்லிக் கொண்டே அடுக்களைக்கு சென்றாள் .
" என்ன ஹெல்ப் பண்ணட்டும் மாமி பின்னோடேசென்றாள் ரேவதி" அவர்கள் அனைவருக்குமே மனோ என்றால் தனி பிரியம்தான். இப்போது அதில் ரேவதியும் சேர்ந்து கொண்டாள் .
"வாங்களேன் அசோக்! ஜாலியா ஷாப்பிங் போயிட்டு வரலாம்"
"இல்ல மனோ! அன் எக்ஸ்பெக்டேடா ஒரு கால் ஷெடியூல் பண்ணிட்டாங்க"
"அம்மாண்ணா அவரும் பாவம் ரொம்ப ஆசையா இருந்தார்"
"வேண்ணா வேற நாள் போகலாம். நோ ப்ராப்ளம்"
"இல்லடா மனோ! அப்புறம் நாள் நன்னா இல்ல"
"சரி மாமா! அப்ப நாங்க இப்பவே போயிட்டு வந்துடறோம்"
"மனோ ராகு காலத்துக்குள்ள அம்மன் முகம் பில் போட்டுடுங்கோ. ஞாயித்துக்கிழமை, ராகு காலம் 4.30-6.00"
"சரி மாமி!"
தங்கை கார் ஓட்ட அண்ணன் வாகாக பக்கத்து சீட்டில் அமர்ந்து வந்தான்.
ரேவதியோ பின் சீட்டில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள் . நடு நடுவே சுசி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னாள் . மனோவை பற்றி இவளுக்கு எதுவுமே தெரியவில்லை.
"என்ன மன்னி! ஆத்துல எப்ப பார்த்தாலும் பாவக்கா பிட்லைதானா ?"
"இல்லையே! ஏன்?"
"இல்ல அண்ணாக்கு அதுதான் ரொம்ப பிடிக்குன்னு பெரியம்மா அதையே தானே பண்ணுவா. அதான். இப்போ ஆத்துல யார் சொல்லற மெனு?"
அப்படியே பேச்சு நீண்டது.
கடைகளுக்குச் சென்றார்கள். அம்பாள் முகம் தவிரவும் ஏதேதோ வாங்கினார்கள். சுசியின் வீட்டில் கொண்டு வந்து அவளை விட்டுவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"என்ன சுசி அண்ணாவோட ஜாலியா ஷாப்பிங் முடிஞ்சுதா?"
"எங்க?"
"ஏண்டி அலுத்துக்கற? "இது அசோக்.
"அம்பாளுக்கு அர்ச்சனைக்கு வெள்ளி தாமரை பூ வாங்கி குடுக்க சொன்னா முடியாதுன்னுட்டான்.முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் .
"ஒரிஜினல் தான் விசேஷம், அதுதான் அழகு,வாசனைனு சொல்லிட்டான் .
அசோக் நீதான் என்ன கூட்டிண்டு போய் பட்டு புடவையும் தாமரை பூவும் வாங்கித் தரணும்"
அண்ணா ஒதுக்கலைனா என்ன? மன்னிட்ட சொன்ன காரியம் நடக்க போகிறது ?"
காபியை கொண்டு வந்து கொடுத்தார் மாமியார்.
"எங்கம்மா? அவா அதுக்கு மேல. அண்ணா என்ன சொன்னாலும் சரியாத்தான் இருக்கும். அவர் எப்படி சொல்லறாரோ அதுவே சரின்னுட்டா"
வீட்டில் கரகோஷம் காதை பிளந்தது. இவர்களுக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை.
"ஏண்டி பேரு தான் லவ் மேரேஜ். என்னிக்காவது ஒரு நாள் இந்த மாதிரி நீ சொல்லி இருக்கியா ?"
"உன் பொண்டாட்டி மட்டுமில்லடா, என் பொண்டாட்டியும்தான்" என்றார் மாமா.
மாமியாரும் மருமகளும் சேர்ந்து ஒருங்கே பத்ர காளி அவதாரம் எடுக்க, ரேவதியோ மனோவின் தோளில் முகம் புதைத்து வெட்கத்தை மறைக்கத் தெரியாமல் மறைத்தாள்.
மயக்குவான் மனோ........





 
Last edited:
Top