காகித கப்பல்கள்
அத்தியாயம்---6
அன்று தென்றல் ஒரு புதிய வாசத்துடன் அந்த வீட்டை சுற்றி வந்தது. சந்தனத்தின் இனிய வாசம். பன்னீர் கமழும் நெடி. ரோஜாக்களின் இனிய நறுமணம். பாபுவின் பிறந்தநாள் என்று தேவர்கள் வந்து வாழ்த்தும் ஒலியாக அய்யரின் மந்திரங்கள். குழந்தை பாபுவுக்கு ஒரு வயது. மழலை மொழியின் அடுத்த கட்ட ஒலிகளாக ம்மா...ப்பா என்ற தேனிசை சொற்கள் அனைவர் காதிலும் விழுந்தது.பாபுவின் அம்மாவாக சித்ரா பெருமையுடன் அங்கும் இங்கும் அலைந்து விருந்தினரை வரவேற்றுக் கொண்டிருந்தாள் .அன்று அவள் முகத்தைப் பார்த்தவர்கள் பிரமித்துப் போனார்கள் அவளிடம் அழகு கூடியிருந்தது . புதுப் புடவையும் கழுத்தில் சின்ன சிகப்புக் கல் நெக்லசும் அவளுக்கு பாந்தமாக பொருந்தி இருந்தது. அது பார்த்து கவிதாவின் முகம் சுண்டிவிட்டது
“சித்ரா...எதுக்கு இப்படி ஓவரா சந்தோஷப் படறே?...”
“என்ன சொல்றீங்க அக்கா?. இன்று பாபுவின் பிறந்த நாள்...சந்தோஷமா இருக்க என்ன தடை? இன்று தான் நான் பிறந்த பயனை அடைந்தேன்.”
“அதுக்கு சொல்லலை சித்ரா. யார் கண்ணாவது பட்ருமேன்னு தான்...”
“கண்படுமேன்னு மூலையில் ஒடுங்கவா முடியும்.?”
பவானி குழந்தையிடம் அம்மா சொல்லு அப்பா சொல்லுன்னு சொல்லி கொஞ்சிக் கொண்டிருந்தது கவிதாவுக்குப் பிடிக்கவில்லை.
‘இன்று ஒரு நாள் கூத்து. பொறுத்துக் கொள்வோம். நாளை போய்விடுவாள். என்னம்மா அலட்றா? மகன் பிறந்த திமிர்.’ என்று குமைந்து கொண்டிருந்தாள். மாமனாரின் முகத்திலும் சந்தோசம். பாபு கை பிடித்து கேக் வெட்டி முடித்து அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து பாடி முடித்தனர். எல்லோருக்கும் ஒரு பேப்பர் ப்ளேட்டில் கேக்கை வைத்துக் கொடுத்தாள் சித்ரா. மாமனார் குணசேகரிடம் அவள் கொடுக்க அவர் வாங்கி ஆவலோடு வாயில் போட...அடுத்த வினாடி அவர் விக்கல் வந்து..நெஞ்சடைத்தது....நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்தார். யமன் ஆசைப்பட்டு விழாவுக்கு குழந்தையை வாழ்த்த வந்தது எவ்வளவு பெரிய தவறு! குணசேகரின் மூச்சு அந்த யமனுக்காக காத்திருந்தது போல் ஆயிற்று. பேரனின் பிறந்த நாள் தாத்தாவின் இறந்த நாள் ஆயிற்று. கவிதாவுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
மீண்டும் சித்ரா மாமியாரின் வெறுப்புக்கு ஆளானாள். பவானியின் வெறுப்பு குழந்தையின் மேலும் விழுந்தது. இரண்டு வருடம் சென்றபோதும் அந்த வெறுப்பு போகவில்லை. ராகவனை மட்டும் பார்க்க அனுமதி அளித்தாள். சித்ராவோ குழந்தை பாபுவோ வரக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தாள். தாத்தாவை விழுங்கிய பேரன் என்று அவனுக்கு பட்டம் சூட்டப்பட்டது. வேண்டாத குழந்தையாக பாபு வளர்ந்தான். சித்ராவின் அம்மா வேதமும் அப்பா கோமதிநாதனும் பாபுவை எவ்வளவு தான் கொஞ்சினாலும் பவானியின் வெறுப்பு தந்த வலியை மறக்க முடியவில்லை. மகனிடம் அவள் கீதா என்ற பெண்ணைக் காட்டி அவளை கல்யாணம் செய்துகொள் என்று வற்புறுத்த ஆரம்பித்தாள். ராகவனுக்கு துளியும் இஷ்டமில்லை. அந்தப் பெண்ணைக் கண்டாலே அவன் காத தூரம் ஓடினான்.
“ராகவா...சொல்றேன்னு தப்பா நினைக்காதே, சித்ரா ஒரு துரதிர்ஷ்டம் பிடித்த பெண். அவளை விட்டு விடு. நம் குடுமபம் நல்லா இருக்கணும்னா நீ இத செய்.”
“அம்மா...உனக்கு பயித்தியமா? அப்புறம் பிள்ளையை என்ன செய்ய? தூக்கி தூர வீசவா? என்ன பேசறே நீ?”
வர வர அம்மாவின் மூட எண்ணங்கள் அவனுக்கு எரிச்சலைத் தந்தது. எதிர்க்க ஆரம்பித்தான் ராகவன்.
“பிள்ளையை யார் தூர எரிய சொன்னா? அவன் உன்னோடு இருக்கட்டும். சித்ரா நம் வீட்டுக்கு வேண்டாம்.”
“அப்படி எல்லாம் விரட்ட முடியாதும்மா. சட்டம்னு ஒண்ணு இருக்கு. மனசாட்சின்னு ஒண்ணு இருக்கு. அப்பா செத்துப் போனதுக்கு அவளோ குழந்தையோ எப்படி பொறுப்பாவாங்க?”
அதுக்கு மேல் பவானி பேசவில்லை. ஆனால் மறுபடியும் பாரா முகம் காட்டினாள். அவன் பார்க்க வந்தால் கோவிலுக்குப் போயிட்டு வரேன்னு கிளம்பி விடுவாள். “போயிடாதே வந்திடுவேன். இன்னிக்கு பிரதோஷம்.”
என்பாள். போனால் வேண்டுமென்றே தாமதப்படுத்துவாள். அவன் போன் பண்ணி.....
“என்னம்மா...இன்னும் உன்னைக் காணும்? எப்ப வருவே? எனக்கு நேரமாச்சு. பாபு காத்திட்டிருப்பான். “ என்பான்.
“இருடா...அஞ்சு நிமிஷம். வந்திடறேன். தீபார்த்தனை நடக்குது.”
மேலும் பத்து நிமிஷம். அப்பொழுதும் அவள் வரவில்லை.
“சரி அண்ணி...அம்மா வந்தா சொல்லிடுங்க. எனக்கு நேரமாச்சு.”
ஏமாற்றதுடன் கிளம்பிப் போவான். ஏதாவது ஒரு குணஷ்டை செய்து அவனுடன் பேசுவதை அவள் தவிர்த்தாள். இப்படி கூட ஒரு அம்மாவா? என்று வெறுத்துப் போனான் ராகவன். அவன் மன நிம்மதி போயிற்று.
மெளனமாக கஷ்டங்களை தாங்கிக் கொண்டிருப்பது சித்ராவின் குணம். அம்மாவிடமும் கூட அவள் புலம்பினதில்லை. அவர்கள் தான் புலம்பினார்கள். அவள் பொறுமையை அவர்கள் பயித்தியக்காரத்தனம் என்றார்கள். வேதம் மட்டும் மகளின் வலி புரிந்து கொண்டாள்.
“ஏன் அப்படி அவளை இம்சை படுத்தறீங்க?. சுஜி வாய மூடு. உனக்கு என்ன தெரியும்? நீ சின்னப் பிள்ளை. அக்காவை காயப்படுத்தாதே.”
சித்ரா அம்மாவுக்கு மனத்தால் நன்றி சொல்லிக் கொண்டாள். என்றாவது கணவன் முன் போல் அன்பாக இருக்க மாட்டானா என்ற நப்பாசையுடன் எதிர்காலத்தை நம்பி இருந்தாள்.
திடீரென ராகவனின் போக்கில் வித்தியாசம் தெரிந்தது. ஒரு நாள் அவளிடம் வந்து அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் சித்ரா. இவன் நல்ல விதமாக மாறுவான் என்று அவள் கனவு கண்டு கொண்டிருக்க அவன் அவளை வீட்டை விட்டே துரத்துகிறான்.
“என்ன பேசறேங்க? நான் எங்கே போவேன்? நான் என்ன சம்பாதிக்கிறேனா என்ன? இதுவும் உங்க அம்மாவின் ஐடியா தானா?”
“சித்ரா....உன்கிட்டே சொல்ல முடியாத சில விஷயங்கள் இருக்கு. உன்னை நான் கை விட மாட்டேன். கொஞ்ச நாள்...கொஞ்ச நாள்...எனக்காக தனியே இரு. ப்ளீஸ். என் கிட்டே எதுவும் கேக்காதே.”
“என்ன உளறிக்கிட்டு இருக்கீங்க? அப்படி என்ன என்னிடம் சொல்ல முடியாத விஷயம்? கல்யாணம் ஆகும் போதே நாம் ஒருவர் ஆனோம். நீங்க வேற நான் வேற இல்லன்னு பேசினோமே. சுகத்திலும் துக்கத்திலும் நமக்கு சம பங்கு இருக்கு. இப்படி உங்களை தனிமை படுத்தறீங்க. வேண்டாம் ராகவன். ப்ளீஸ். என்ன விஷயம் அதையாவது
சொல்லுங்க.” சித்ரா கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டாள்.
ராகவனின் முமெல்லாம் வேர்த்தது. பேச முடியாமல் நாக்கு மேலன்னதில் ஒட்டிக் கொண்டது. அவனுக்கு அழுகை வந்தது.
“சரி சொல்லவேண்டாம். எவ்வளவு நாள் எனக்கு இந்த தண்டனை?”
“ஒரு..ஒரு..ஒரு வருஷம் போதும். அதுக்குள்ளே எல்லாம் சரியாகிவிடும். நீ உன் அம்மா வீட்டில் அதுவரை இரு. சரியா சித்ரா.”
அவன் ஏதோ கெஞ்சுவது போல் கேட்க அவள் திக்பிரமித்து நின்றாள்.
“என்ன பேச மாட்டேங்கறே?”
“பேச என்ன இருக்கு? ராகவன் என்னால் என் அம்மா வீட்டில் எல்லாம் போய் இருக்க முடியாது? இத பாருங்க...அம்மா வீட்டில் இருந்தால் அவங்க கஷ்டப்படுவாங்க. தினமும் கண்ணீரும் வலியுமாக வாழ வேண்டியிருக்கும். நானும் பாபுவும் போயிடறோம். நீங்க சந்தோஷமா இருங்க.” சித்ரா பேசியதைக் கேட்டு ராகவன் சொன்னான்.
“சித்ரா...பாபு என் கூட தான் இருப்பான்.”
“உங்களுக்கு புத்தி தான் கெட்டுப் போச்சு. மூன்று வயசு பிள்ளையை உங்க கிட்ட விட்டிட்டுப் போக எனக்கு என்ன பயித்தியமா?’
“சரி..உன் இஷ்டம். நான் இந்த வீட்டை விட்டுப் போறேன். அது தான் நிலைமை. புரிஞ்சுக்கோ.”
சித்ராவுக்கு எந்த முடிவு எடுக்கும் சந்தர்ப்பமும் கொடுக்கப்படவில்லை.
சித்ரா ஒரு சிறிய வீட்டுக்கு குடி வந்தாள். ராகவன் அவளை தன் வீட்டுக்கு அருகில் பிள்ளையார் கோவில் அருகே இந்த வீட்டை பார்த்து வைத்தான். வீடு சிறியது தான். ஒரு ரேழி. ஒரு படுக்கை அறை. சமையலறை. ஒரு சின்ன குளியலறை. அவ்வளவு தான்.
“சித்ரா...நீ பாபுவை பார்க்க வரலாம். காலை எட்டு மணிக்கு வந்துவிடு. அவனை எல்.கே.ஜி யில் சேர்த்து விட்டிருக்கோம். நீ அவனை பள்ளியில் கொண்டு விட்டுவிட்டு வா. வீட்டில் சமையல் பண்ணி வை. மதியம் மூணு மணிக்கு அவனை பள்ளியிலிருந்து கூட்டி வந்துவிடு. சாயங்காலம் நான் வந்தவுடன் நீ போகலாம்....” அவன் பேசியதை கேட்டு அவள் திடுக்கிட்டாள். அவளை ஒரு வேலைக்காரி மாதிரி அல்லவா நடத்த திட்டமிட்டுள்ளான். அவனுக்கு அப்படி என்ன கஷ்டம்? எதுக்கு இப்படி விநோதமாக நடந்து கொள்கிறான்? மாமியாரிடம் போய் அவள் ஒன்றும் கேட்க முடியாது. சொல்லவும் முடியாது. இது அவர்கள் வேலையா அல்லது இவனின் குறுக்கு புத்தியின் வேலையா? அவளுக்குப் புரியவில்லை. இதுக்கு சம்மதிக்க வேண்டுமா? அப்பாவும் சுஜியும் அவளை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க. அம்மாவிடம் இந்த ஏற்பாட்டை சொல்லிவிடுவோம். சுஜி எதர்பார்த்தது போல் எகிறி குதித்தாள். “அக்கா...நீ அருந்ததியா? அனுசியாவா? அந்தக் காலத்து பத்தினி தெய்வமா? அவர் வேறே வீடு பார்த்து இருக்கச் சொல்வாராம். தினமும் வந்து சமைத்து கொடுக்கணுமாம். சாயங்காலம் வீட்டுக்கு ஓடிட வேண்டுமாம். என்ன அக்கா..உனக்கு வெக்கமா இல்லையா?”
சித்ராவின் அப்பா கோமதினாதன் ராகவனிடம் போய் எகிறி குதித்தார்.
“என்னப்பா இது? என் மகளை திராட்டிலே விட்டிட்டு நீ என்ன செய்யப் போறே? உன்னை மாப்பிள்ளைன்னு சொல்லக் கூட பிடிக்கலை கொதிச்சு போயிருக்கேன். என் மகளை நீ அப்படியெல்லாம் ட்ரீட் பண்ண விட மாட்டேன். மரியாதையா அவ கூட குடித்தனம் பண்ணு.”
“உங்க மகளும் நானும் சேர்ந்து ஒப்பந்தம் பண்ணிக் கிட்டோம். நீங்க எது பேசறதானாலும் உங்க மகக் கிட்டவே பேசிக்கோங்க.” என்று அவன் அலட்சியமாக பேசி அவரை விரட்டி விட்டான். அவர் பவானியிடம் போய் வாதாடினார். அங்கேயும் ஆவேசமாகவே பேசினார்.
“பவானி அம்மா உங்களுக்கு அறிவிருக்கா? பச்சை புள்ளைங்க வாழ்க்கையில் இப்படி விளையாடறீங்க? உங்க மகன் உங்க பேச்சைக் கேட்டுக் கொண்டு என் மகளை தனியா இருக்க வீடு பார்த்து வைச்சிருக்கார். தினம் வந்து சமையல் பண்ணி கொடுத்திட்டுப் போணுமாம். அதுக்கு சம்பளம் தருவாராம். என்னம்மா இது? கேக்க ஆளில்லைன்னு நினச்சீங்களா?”
“உங்க மகளுக்கு இருக்கும் திமிர் எங்கிருந்து வந்திருக்குன்னு இப்ப புரியுது. பொண்ணை பெத்த மாதிரியா பேசறீங்க? கொஞ்சம் அடக்கி பேசுங்க. உங்க பெண்ணுக்கு இந்த ஏற்பாடு பிடிக்கலன்னா டிவோர்ஸ்ஸுக்கு அப்பளை பண்ணச் சொல்லுங்க. யார் வேண்டாம்னு சொன்னது? அவ்வளவு தான். காப்பி சாப்பிடறேளா?”
“கொஞ்சம் விஷம் கொடுங்க சாப்பிடறேன்.” கொதித்துப் போய் அழுது கொண்டே போனார். கவிதாவுக்கு நிம்மதியாக இருந்தது. அப்பாடா...என்று பெருமூச்சு விட்டாள். சித்ராவின் கிழக்கே அஸ்தமித்துவிட்டது. இனி அவள் ராஜ்ஜியம் தான்.
சித்ராவுக்கு விவாகரத்து வரை போக விருப்பமில்லை. அதுக்குக் காரணம் ராகவனோடு அவள் வாழ்ந்த வாழ்க்கை. அளப்பரிய சந்தோஷ சாம்ராஜ்யத்தில் மிதந்துக் கொண்டிருந்த காலம் அவள் மனத் திரையிலிருந்து அகலவில்லை. சுஜியும் அப்பா கோமதிநாதணும் அவளை திட்டிக் கொண்டே இருகின்றனர்.
“அக்கா...உனக்கு எருமைத் தோல். ஆம்பளை என்ன வேனா செய்யலாம், பொம்பளை குட்டக் குட்டக் குனியனுமா? எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை. அக்கா..உனக்கு என்ன குறைச்சல்? இந்த கோட்டிக்காரனை விட்டு விலகி வா. காலம் ரொம்ப மாறிடுச்சு. உனக்கு வேறு நல்ல மாப்பிள்ளை கிடைக்கும். உனக்கு சின்ன வயது தானே?”
“ஆமா சித்ரா? அந்த அம்மா உன்னை வாழவே விடமாட்டா. நான் தான் போய் பேசிப் பார்த்தேனே. கொஞ்சம் கூட இதயமே இல்லாத ஆள்.”
“தெரியும் அப்பா. ஆனா உங்க மாப்பிள்ளை இதயமே இல்லாதவர் இல்லை. ஏதோ குழப்பத்தில் இருக்கார். எதிலோ சிக்கி கொன்ட மாதிரி. கொஞ்சம் பொறுமையா இருந்தா சிக்கலோட நுனி கிடைச்சிடும். சரி பண்ணிடலாம். எனக்கு நம்பிக்கை இருக்கு.”
“அவ சொல்றது சரிதான். அவளை விடுங்க அவ வாழ்க்கையை அவ தீர்மானிக்கட்டும். அவளுக்கே இனி போராடி பிரயோசனம் இல்லன்னு தெரிஞ்சா அவளே விலகிடுவா.” என்று சித்ராவுக்கு பச்சை கொடு காட்டினாள் தாய் வேதம்.
ஒரு வருஷம் ஓடிவிட்டது. இன்னும் ராகவனின் மனம் மாறவில்லை. அவன் விவாகரத்து என்கிற பேச்சும் எடுக்கவில்லை. அவன் அம்மா பார்த்த பெண் கீதா இவனுக்காக காத்துக் கொண்டிருப்பதாக இப்பவும் சொல்கிறாள் பவாணி. ஆனால் எந்த நடவடிக்கையும் அதற்கு மேல் எடுக்கப் படவில்லை. ஒரு மாலை பொழுதில் வேலையெல்லாம் முடித்துவிட்டு சித்ரா தன் வீட்டுக்கு வரும்போது ஒரு அதிசயம் நடந்தது. அவள் வீட்டு முன் ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தாள்.
“உங்களுக்காகத் தான் காத்திட்டிருக்கேன். என் பெயர் கீதா.”
சித்ராவுக்கு பக்கென்றது. இவள் எதுக்கு இங்கு வந்திருக்கிறாள்? அவளை அப்படியே துரத்திவிடலாமா? என்று ஒரு கனம் யோசித்தாள். பிறகு என்ன நினைத்தாளோ “உள்ளே வாங்க..” என்று வீட்டை திறந்தாள். கீதா அப்படி ஒன்றும் அல்ட்ரா மார்டர்ன் டைப் இல்லை. கண்ணியமாகவே உடை உடுத்தி வந்திருந்தாள். கண்களில் ஒரு கூர்ப்பு இருந்தது. நடையில் ஒரு பிடிவாதம் இருந்தது. தனம்பிக்கை என்றும் சொல்லிக் கொள்ளலாம். இவள மூலமாக ராகவன் ஏன் பப்டி நடந்து கொள்கிறான் என்று தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கு என்று தான் அவளை உள்ளே விட்டாள் சித்ரா. காபி போட்டுக் கொடுத்தாள். தானும் குடித்தாள்.
“சொல்லுங்க...என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க?”
“நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுதா?”
“தெரியும்.” சூர்பனகை என்று மனதுள் சொல்லிக் கொண்டாள். ராகவனை அபகரிக்க திட்டமிட்டிருக்கும் மாயப் பெண். வேறென்ன சொல்வது?
“உங்க கிட்டே ஒண்ணு சொல்லத் தான் வந்தேன். நீங்க உங்க கணவருக்கு விவாகரத்து கொடுத்திடுங்க. இல்லை அவரை நான் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன். இது விளையாட்டில்லை.”
சித்ரா இதை எதிர்பார்க்கவில்லை. ஜெயிலுக்கா? என்ன உளருகிறாள் இவள்.
“அவர் என்ன தப்பு செய்தார்? அவர் என் ஜெயிலுக்குப் போக வேண்டும்? சும்மா வந்து மிரட்டாதீங்க. இங்கிருந்து போயிடுங்க.”
“ஒ.கே. நான் கெஞ்ச வரவில்லை. உங்களை எச்சரிக்க வந்தேன்.”
அவள் உடனே எழுந்து போய்விட்டாள். சித்ரா அப்படியே உட்கார்ந்துவிட்டாள். ராகவனிடம் போன் பண்ணி சொல்லவேண்டும்.
கப்பல் மிதக்கும்
அத்தியாயம்---6
அன்று தென்றல் ஒரு புதிய வாசத்துடன் அந்த வீட்டை சுற்றி வந்தது. சந்தனத்தின் இனிய வாசம். பன்னீர் கமழும் நெடி. ரோஜாக்களின் இனிய நறுமணம். பாபுவின் பிறந்தநாள் என்று தேவர்கள் வந்து வாழ்த்தும் ஒலியாக அய்யரின் மந்திரங்கள். குழந்தை பாபுவுக்கு ஒரு வயது. மழலை மொழியின் அடுத்த கட்ட ஒலிகளாக ம்மா...ப்பா என்ற தேனிசை சொற்கள் அனைவர் காதிலும் விழுந்தது.பாபுவின் அம்மாவாக சித்ரா பெருமையுடன் அங்கும் இங்கும் அலைந்து விருந்தினரை வரவேற்றுக் கொண்டிருந்தாள் .அன்று அவள் முகத்தைப் பார்த்தவர்கள் பிரமித்துப் போனார்கள் அவளிடம் அழகு கூடியிருந்தது . புதுப் புடவையும் கழுத்தில் சின்ன சிகப்புக் கல் நெக்லசும் அவளுக்கு பாந்தமாக பொருந்தி இருந்தது. அது பார்த்து கவிதாவின் முகம் சுண்டிவிட்டது
“சித்ரா...எதுக்கு இப்படி ஓவரா சந்தோஷப் படறே?...”
“என்ன சொல்றீங்க அக்கா?. இன்று பாபுவின் பிறந்த நாள்...சந்தோஷமா இருக்க என்ன தடை? இன்று தான் நான் பிறந்த பயனை அடைந்தேன்.”
“அதுக்கு சொல்லலை சித்ரா. யார் கண்ணாவது பட்ருமேன்னு தான்...”
“கண்படுமேன்னு மூலையில் ஒடுங்கவா முடியும்.?”
பவானி குழந்தையிடம் அம்மா சொல்லு அப்பா சொல்லுன்னு சொல்லி கொஞ்சிக் கொண்டிருந்தது கவிதாவுக்குப் பிடிக்கவில்லை.
‘இன்று ஒரு நாள் கூத்து. பொறுத்துக் கொள்வோம். நாளை போய்விடுவாள். என்னம்மா அலட்றா? மகன் பிறந்த திமிர்.’ என்று குமைந்து கொண்டிருந்தாள். மாமனாரின் முகத்திலும் சந்தோசம். பாபு கை பிடித்து கேக் வெட்டி முடித்து அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து பாடி முடித்தனர். எல்லோருக்கும் ஒரு பேப்பர் ப்ளேட்டில் கேக்கை வைத்துக் கொடுத்தாள் சித்ரா. மாமனார் குணசேகரிடம் அவள் கொடுக்க அவர் வாங்கி ஆவலோடு வாயில் போட...அடுத்த வினாடி அவர் விக்கல் வந்து..நெஞ்சடைத்தது....நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்தார். யமன் ஆசைப்பட்டு விழாவுக்கு குழந்தையை வாழ்த்த வந்தது எவ்வளவு பெரிய தவறு! குணசேகரின் மூச்சு அந்த யமனுக்காக காத்திருந்தது போல் ஆயிற்று. பேரனின் பிறந்த நாள் தாத்தாவின் இறந்த நாள் ஆயிற்று. கவிதாவுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
மீண்டும் சித்ரா மாமியாரின் வெறுப்புக்கு ஆளானாள். பவானியின் வெறுப்பு குழந்தையின் மேலும் விழுந்தது. இரண்டு வருடம் சென்றபோதும் அந்த வெறுப்பு போகவில்லை. ராகவனை மட்டும் பார்க்க அனுமதி அளித்தாள். சித்ராவோ குழந்தை பாபுவோ வரக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தாள். தாத்தாவை விழுங்கிய பேரன் என்று அவனுக்கு பட்டம் சூட்டப்பட்டது. வேண்டாத குழந்தையாக பாபு வளர்ந்தான். சித்ராவின் அம்மா வேதமும் அப்பா கோமதிநாதனும் பாபுவை எவ்வளவு தான் கொஞ்சினாலும் பவானியின் வெறுப்பு தந்த வலியை மறக்க முடியவில்லை. மகனிடம் அவள் கீதா என்ற பெண்ணைக் காட்டி அவளை கல்யாணம் செய்துகொள் என்று வற்புறுத்த ஆரம்பித்தாள். ராகவனுக்கு துளியும் இஷ்டமில்லை. அந்தப் பெண்ணைக் கண்டாலே அவன் காத தூரம் ஓடினான்.
“ராகவா...சொல்றேன்னு தப்பா நினைக்காதே, சித்ரா ஒரு துரதிர்ஷ்டம் பிடித்த பெண். அவளை விட்டு விடு. நம் குடுமபம் நல்லா இருக்கணும்னா நீ இத செய்.”
“அம்மா...உனக்கு பயித்தியமா? அப்புறம் பிள்ளையை என்ன செய்ய? தூக்கி தூர வீசவா? என்ன பேசறே நீ?”
வர வர அம்மாவின் மூட எண்ணங்கள் அவனுக்கு எரிச்சலைத் தந்தது. எதிர்க்க ஆரம்பித்தான் ராகவன்.
“பிள்ளையை யார் தூர எரிய சொன்னா? அவன் உன்னோடு இருக்கட்டும். சித்ரா நம் வீட்டுக்கு வேண்டாம்.”
“அப்படி எல்லாம் விரட்ட முடியாதும்மா. சட்டம்னு ஒண்ணு இருக்கு. மனசாட்சின்னு ஒண்ணு இருக்கு. அப்பா செத்துப் போனதுக்கு அவளோ குழந்தையோ எப்படி பொறுப்பாவாங்க?”
அதுக்கு மேல் பவானி பேசவில்லை. ஆனால் மறுபடியும் பாரா முகம் காட்டினாள். அவன் பார்க்க வந்தால் கோவிலுக்குப் போயிட்டு வரேன்னு கிளம்பி விடுவாள். “போயிடாதே வந்திடுவேன். இன்னிக்கு பிரதோஷம்.”
என்பாள். போனால் வேண்டுமென்றே தாமதப்படுத்துவாள். அவன் போன் பண்ணி.....
“என்னம்மா...இன்னும் உன்னைக் காணும்? எப்ப வருவே? எனக்கு நேரமாச்சு. பாபு காத்திட்டிருப்பான். “ என்பான்.
“இருடா...அஞ்சு நிமிஷம். வந்திடறேன். தீபார்த்தனை நடக்குது.”
மேலும் பத்து நிமிஷம். அப்பொழுதும் அவள் வரவில்லை.
“சரி அண்ணி...அம்மா வந்தா சொல்லிடுங்க. எனக்கு நேரமாச்சு.”
ஏமாற்றதுடன் கிளம்பிப் போவான். ஏதாவது ஒரு குணஷ்டை செய்து அவனுடன் பேசுவதை அவள் தவிர்த்தாள். இப்படி கூட ஒரு அம்மாவா? என்று வெறுத்துப் போனான் ராகவன். அவன் மன நிம்மதி போயிற்று.
மெளனமாக கஷ்டங்களை தாங்கிக் கொண்டிருப்பது சித்ராவின் குணம். அம்மாவிடமும் கூட அவள் புலம்பினதில்லை. அவர்கள் தான் புலம்பினார்கள். அவள் பொறுமையை அவர்கள் பயித்தியக்காரத்தனம் என்றார்கள். வேதம் மட்டும் மகளின் வலி புரிந்து கொண்டாள்.
“ஏன் அப்படி அவளை இம்சை படுத்தறீங்க?. சுஜி வாய மூடு. உனக்கு என்ன தெரியும்? நீ சின்னப் பிள்ளை. அக்காவை காயப்படுத்தாதே.”
சித்ரா அம்மாவுக்கு மனத்தால் நன்றி சொல்லிக் கொண்டாள். என்றாவது கணவன் முன் போல் அன்பாக இருக்க மாட்டானா என்ற நப்பாசையுடன் எதிர்காலத்தை நம்பி இருந்தாள்.
திடீரென ராகவனின் போக்கில் வித்தியாசம் தெரிந்தது. ஒரு நாள் அவளிடம் வந்து அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் சித்ரா. இவன் நல்ல விதமாக மாறுவான் என்று அவள் கனவு கண்டு கொண்டிருக்க அவன் அவளை வீட்டை விட்டே துரத்துகிறான்.
“என்ன பேசறேங்க? நான் எங்கே போவேன்? நான் என்ன சம்பாதிக்கிறேனா என்ன? இதுவும் உங்க அம்மாவின் ஐடியா தானா?”
“சித்ரா....உன்கிட்டே சொல்ல முடியாத சில விஷயங்கள் இருக்கு. உன்னை நான் கை விட மாட்டேன். கொஞ்ச நாள்...கொஞ்ச நாள்...எனக்காக தனியே இரு. ப்ளீஸ். என் கிட்டே எதுவும் கேக்காதே.”
“என்ன உளறிக்கிட்டு இருக்கீங்க? அப்படி என்ன என்னிடம் சொல்ல முடியாத விஷயம்? கல்யாணம் ஆகும் போதே நாம் ஒருவர் ஆனோம். நீங்க வேற நான் வேற இல்லன்னு பேசினோமே. சுகத்திலும் துக்கத்திலும் நமக்கு சம பங்கு இருக்கு. இப்படி உங்களை தனிமை படுத்தறீங்க. வேண்டாம் ராகவன். ப்ளீஸ். என்ன விஷயம் அதையாவது
சொல்லுங்க.” சித்ரா கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டாள்.
ராகவனின் முமெல்லாம் வேர்த்தது. பேச முடியாமல் நாக்கு மேலன்னதில் ஒட்டிக் கொண்டது. அவனுக்கு அழுகை வந்தது.
“சரி சொல்லவேண்டாம். எவ்வளவு நாள் எனக்கு இந்த தண்டனை?”
“ஒரு..ஒரு..ஒரு வருஷம் போதும். அதுக்குள்ளே எல்லாம் சரியாகிவிடும். நீ உன் அம்மா வீட்டில் அதுவரை இரு. சரியா சித்ரா.”
அவன் ஏதோ கெஞ்சுவது போல் கேட்க அவள் திக்பிரமித்து நின்றாள்.
“என்ன பேச மாட்டேங்கறே?”
“பேச என்ன இருக்கு? ராகவன் என்னால் என் அம்மா வீட்டில் எல்லாம் போய் இருக்க முடியாது? இத பாருங்க...அம்மா வீட்டில் இருந்தால் அவங்க கஷ்டப்படுவாங்க. தினமும் கண்ணீரும் வலியுமாக வாழ வேண்டியிருக்கும். நானும் பாபுவும் போயிடறோம். நீங்க சந்தோஷமா இருங்க.” சித்ரா பேசியதைக் கேட்டு ராகவன் சொன்னான்.
“சித்ரா...பாபு என் கூட தான் இருப்பான்.”
“உங்களுக்கு புத்தி தான் கெட்டுப் போச்சு. மூன்று வயசு பிள்ளையை உங்க கிட்ட விட்டிட்டுப் போக எனக்கு என்ன பயித்தியமா?’
“சரி..உன் இஷ்டம். நான் இந்த வீட்டை விட்டுப் போறேன். அது தான் நிலைமை. புரிஞ்சுக்கோ.”
சித்ராவுக்கு எந்த முடிவு எடுக்கும் சந்தர்ப்பமும் கொடுக்கப்படவில்லை.
சித்ரா ஒரு சிறிய வீட்டுக்கு குடி வந்தாள். ராகவன் அவளை தன் வீட்டுக்கு அருகில் பிள்ளையார் கோவில் அருகே இந்த வீட்டை பார்த்து வைத்தான். வீடு சிறியது தான். ஒரு ரேழி. ஒரு படுக்கை அறை. சமையலறை. ஒரு சின்ன குளியலறை. அவ்வளவு தான்.
“சித்ரா...நீ பாபுவை பார்க்க வரலாம். காலை எட்டு மணிக்கு வந்துவிடு. அவனை எல்.கே.ஜி யில் சேர்த்து விட்டிருக்கோம். நீ அவனை பள்ளியில் கொண்டு விட்டுவிட்டு வா. வீட்டில் சமையல் பண்ணி வை. மதியம் மூணு மணிக்கு அவனை பள்ளியிலிருந்து கூட்டி வந்துவிடு. சாயங்காலம் நான் வந்தவுடன் நீ போகலாம்....” அவன் பேசியதை கேட்டு அவள் திடுக்கிட்டாள். அவளை ஒரு வேலைக்காரி மாதிரி அல்லவா நடத்த திட்டமிட்டுள்ளான். அவனுக்கு அப்படி என்ன கஷ்டம்? எதுக்கு இப்படி விநோதமாக நடந்து கொள்கிறான்? மாமியாரிடம் போய் அவள் ஒன்றும் கேட்க முடியாது. சொல்லவும் முடியாது. இது அவர்கள் வேலையா அல்லது இவனின் குறுக்கு புத்தியின் வேலையா? அவளுக்குப் புரியவில்லை. இதுக்கு சம்மதிக்க வேண்டுமா? அப்பாவும் சுஜியும் அவளை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க. அம்மாவிடம் இந்த ஏற்பாட்டை சொல்லிவிடுவோம். சுஜி எதர்பார்த்தது போல் எகிறி குதித்தாள். “அக்கா...நீ அருந்ததியா? அனுசியாவா? அந்தக் காலத்து பத்தினி தெய்வமா? அவர் வேறே வீடு பார்த்து இருக்கச் சொல்வாராம். தினமும் வந்து சமைத்து கொடுக்கணுமாம். சாயங்காலம் வீட்டுக்கு ஓடிட வேண்டுமாம். என்ன அக்கா..உனக்கு வெக்கமா இல்லையா?”
சித்ராவின் அப்பா கோமதினாதன் ராகவனிடம் போய் எகிறி குதித்தார்.
“என்னப்பா இது? என் மகளை திராட்டிலே விட்டிட்டு நீ என்ன செய்யப் போறே? உன்னை மாப்பிள்ளைன்னு சொல்லக் கூட பிடிக்கலை கொதிச்சு போயிருக்கேன். என் மகளை நீ அப்படியெல்லாம் ட்ரீட் பண்ண விட மாட்டேன். மரியாதையா அவ கூட குடித்தனம் பண்ணு.”
“உங்க மகளும் நானும் சேர்ந்து ஒப்பந்தம் பண்ணிக் கிட்டோம். நீங்க எது பேசறதானாலும் உங்க மகக் கிட்டவே பேசிக்கோங்க.” என்று அவன் அலட்சியமாக பேசி அவரை விரட்டி விட்டான். அவர் பவானியிடம் போய் வாதாடினார். அங்கேயும் ஆவேசமாகவே பேசினார்.
“பவானி அம்மா உங்களுக்கு அறிவிருக்கா? பச்சை புள்ளைங்க வாழ்க்கையில் இப்படி விளையாடறீங்க? உங்க மகன் உங்க பேச்சைக் கேட்டுக் கொண்டு என் மகளை தனியா இருக்க வீடு பார்த்து வைச்சிருக்கார். தினம் வந்து சமையல் பண்ணி கொடுத்திட்டுப் போணுமாம். அதுக்கு சம்பளம் தருவாராம். என்னம்மா இது? கேக்க ஆளில்லைன்னு நினச்சீங்களா?”
“உங்க மகளுக்கு இருக்கும் திமிர் எங்கிருந்து வந்திருக்குன்னு இப்ப புரியுது. பொண்ணை பெத்த மாதிரியா பேசறீங்க? கொஞ்சம் அடக்கி பேசுங்க. உங்க பெண்ணுக்கு இந்த ஏற்பாடு பிடிக்கலன்னா டிவோர்ஸ்ஸுக்கு அப்பளை பண்ணச் சொல்லுங்க. யார் வேண்டாம்னு சொன்னது? அவ்வளவு தான். காப்பி சாப்பிடறேளா?”
“கொஞ்சம் விஷம் கொடுங்க சாப்பிடறேன்.” கொதித்துப் போய் அழுது கொண்டே போனார். கவிதாவுக்கு நிம்மதியாக இருந்தது. அப்பாடா...என்று பெருமூச்சு விட்டாள். சித்ராவின் கிழக்கே அஸ்தமித்துவிட்டது. இனி அவள் ராஜ்ஜியம் தான்.
சித்ராவுக்கு விவாகரத்து வரை போக விருப்பமில்லை. அதுக்குக் காரணம் ராகவனோடு அவள் வாழ்ந்த வாழ்க்கை. அளப்பரிய சந்தோஷ சாம்ராஜ்யத்தில் மிதந்துக் கொண்டிருந்த காலம் அவள் மனத் திரையிலிருந்து அகலவில்லை. சுஜியும் அப்பா கோமதிநாதணும் அவளை திட்டிக் கொண்டே இருகின்றனர்.
“அக்கா...உனக்கு எருமைத் தோல். ஆம்பளை என்ன வேனா செய்யலாம், பொம்பளை குட்டக் குட்டக் குனியனுமா? எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை. அக்கா..உனக்கு என்ன குறைச்சல்? இந்த கோட்டிக்காரனை விட்டு விலகி வா. காலம் ரொம்ப மாறிடுச்சு. உனக்கு வேறு நல்ல மாப்பிள்ளை கிடைக்கும். உனக்கு சின்ன வயது தானே?”
“ஆமா சித்ரா? அந்த அம்மா உன்னை வாழவே விடமாட்டா. நான் தான் போய் பேசிப் பார்த்தேனே. கொஞ்சம் கூட இதயமே இல்லாத ஆள்.”
“தெரியும் அப்பா. ஆனா உங்க மாப்பிள்ளை இதயமே இல்லாதவர் இல்லை. ஏதோ குழப்பத்தில் இருக்கார். எதிலோ சிக்கி கொன்ட மாதிரி. கொஞ்சம் பொறுமையா இருந்தா சிக்கலோட நுனி கிடைச்சிடும். சரி பண்ணிடலாம். எனக்கு நம்பிக்கை இருக்கு.”
“அவ சொல்றது சரிதான். அவளை விடுங்க அவ வாழ்க்கையை அவ தீர்மானிக்கட்டும். அவளுக்கே இனி போராடி பிரயோசனம் இல்லன்னு தெரிஞ்சா அவளே விலகிடுவா.” என்று சித்ராவுக்கு பச்சை கொடு காட்டினாள் தாய் வேதம்.
ஒரு வருஷம் ஓடிவிட்டது. இன்னும் ராகவனின் மனம் மாறவில்லை. அவன் விவாகரத்து என்கிற பேச்சும் எடுக்கவில்லை. அவன் அம்மா பார்த்த பெண் கீதா இவனுக்காக காத்துக் கொண்டிருப்பதாக இப்பவும் சொல்கிறாள் பவாணி. ஆனால் எந்த நடவடிக்கையும் அதற்கு மேல் எடுக்கப் படவில்லை. ஒரு மாலை பொழுதில் வேலையெல்லாம் முடித்துவிட்டு சித்ரா தன் வீட்டுக்கு வரும்போது ஒரு அதிசயம் நடந்தது. அவள் வீட்டு முன் ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தாள்.
“உங்களுக்காகத் தான் காத்திட்டிருக்கேன். என் பெயர் கீதா.”
சித்ராவுக்கு பக்கென்றது. இவள் எதுக்கு இங்கு வந்திருக்கிறாள்? அவளை அப்படியே துரத்திவிடலாமா? என்று ஒரு கனம் யோசித்தாள். பிறகு என்ன நினைத்தாளோ “உள்ளே வாங்க..” என்று வீட்டை திறந்தாள். கீதா அப்படி ஒன்றும் அல்ட்ரா மார்டர்ன் டைப் இல்லை. கண்ணியமாகவே உடை உடுத்தி வந்திருந்தாள். கண்களில் ஒரு கூர்ப்பு இருந்தது. நடையில் ஒரு பிடிவாதம் இருந்தது. தனம்பிக்கை என்றும் சொல்லிக் கொள்ளலாம். இவள மூலமாக ராகவன் ஏன் பப்டி நடந்து கொள்கிறான் என்று தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கு என்று தான் அவளை உள்ளே விட்டாள் சித்ரா. காபி போட்டுக் கொடுத்தாள். தானும் குடித்தாள்.
“சொல்லுங்க...என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க?”
“நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுதா?”
“தெரியும்.” சூர்பனகை என்று மனதுள் சொல்லிக் கொண்டாள். ராகவனை அபகரிக்க திட்டமிட்டிருக்கும் மாயப் பெண். வேறென்ன சொல்வது?
“உங்க கிட்டே ஒண்ணு சொல்லத் தான் வந்தேன். நீங்க உங்க கணவருக்கு விவாகரத்து கொடுத்திடுங்க. இல்லை அவரை நான் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன். இது விளையாட்டில்லை.”
சித்ரா இதை எதிர்பார்க்கவில்லை. ஜெயிலுக்கா? என்ன உளருகிறாள் இவள்.
“அவர் என்ன தப்பு செய்தார்? அவர் என் ஜெயிலுக்குப் போக வேண்டும்? சும்மா வந்து மிரட்டாதீங்க. இங்கிருந்து போயிடுங்க.”
“ஒ.கே. நான் கெஞ்ச வரவில்லை. உங்களை எச்சரிக்க வந்தேன்.”
அவள் உடனே எழுந்து போய்விட்டாள். சித்ரா அப்படியே உட்கார்ந்துவிட்டாள். ராகவனிடம் போன் பண்ணி சொல்லவேண்டும்.
கப்பல் மிதக்கும்