அத்தியாயம்—10
மிக சிறந்த தருணங்கள் மிக சிறிய அறவிப்பில் வந்துவிடுகிறது. ராகவன் சொல்லிவிட்டு அவள் முகத்தை பார்க்கும் தகுதி தனக்கு இல்லை என்று புரிந்து கொண்டு, விட்டத்தை பார்த்தான். அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதில் அடங்கியிருக்கிறது அவன் நிம்மதி.
“சித்ரா...நீ என்ன மேல் அவ்வளவு மதிப்பும் அன்பும் வச்சிருக்கே. உன் கிட்டே நான் சொன்ன பொய்கள் என்னையே இப்ப தின்கிறது. உன்னை அவமானப் படுத்திட்டேன்னு நினைக்கும் போது செத்துவிடலாம் போல் இருக்கு. நீ கொடுத்த நிழலில், நீ காட்டிய பெருந்தன்மையில், நீ செலுத்திய அன்பில் நனைந்து கொண்டு எப்படி இவ்வளவு கோழையாக இருந்தேன்னு எனக்கேத் தெரியலை. ஐ டோன்ட் டிசர்வ் யூ...”
வெகு நேரம் சித்ரா அவன் சொன்ன விஷயங்களை ஜீரணிக்க கஷ்டப்பட்டாள். அவளுக்கு கண்ணீர் சிந்துவதில் கூட அர்த்தமில்லை என்று தோன்றியது. கண்களை துடைத்துக் கொண்டாள்.
“நீங்க எனக்கு செய்தது ஒரு வகையில் துரோகம் தான். என்னை நீங்க நம்பலை. என் அன்பை நீங்க பெரிதா மதிக்கலை. நீங்க என் மனசை மட்டும் உடைக்கலை. நம்ம எதிர்காலத்தையே உடைச்சிட்டீங்க.”
அங்கே நிற்கப் பிடிக்காமல் அவள் வெளியேற முயன்றாள். ராகவன் அவள் கையை பிடித்து நிறுந்தினான்.
“எதுவும் சொல்லாம போறியே?”
அவள் புன்னகைத்தாள். அந்த புன்னகை அவன் மனப் புண்ணுக்கு பேண்ட்-ஏட் போட்டு மூடியது போல் இருந்தது. ஆனாலும் அவனுக்கு வலி போகவில்லை. அவளைப் பற்றி அவன் அதிகம் கவலைப்பட்டான். அது தான் அவனுக்கு அதிக தண்டனையை கொடுத்தது. அதை அவள் புரிந்து கொள்வாளா? “சித்ரா...” மீண்டும் கூப்பிட்டான்.
“என் இதயம் பெரிசில்லை. அதுக்கு தைரியமும் இல்லை. அது கொடூரமானதும் இல்லை. இப்ப நீங்க சொன்னதை கேட்ட பின் அது பலமானது இல்லை என்று புரிந்து கொண்டேன். இந்த இரும்பு கூட்டுக்குள் அதை பதுக்கி வைத்திருந்தேன். நீங்க விட்ட தப்பான மூச்சு
அதை சாகடித்துவிட்டது. நீங்க என் முகத்தைப் பாருங்க அது போதும். என் இதயத்தை பார்க்காதீங்க...”
சித்ரா சொல்லிவிட்டு தன் கையை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டாள். அந்த சமயம் போன் அடித்தது. முரளியின் போன்.
“சொல்லுங்க டாக்டர்...என்ன விஷயம்?”
“ஒரு நல்ல நியூஸ் அம்மா...உங்க வாழ்க்கை கணக்கில் ஒரு புதிய வசந்தம். எங்கே இருக்கேங்க? உங்களோடு பேசணும்.”
“மாலை நான்கு மணிக்கு வாங்க.” சொல்லிவிட்டு அவள் போனை கட் பண்ணினாள். ராகவன் சொல்லிய விஷயம் டாக்டருக்கு தெரியாது போலும். எதை வசந்தம் என்கிறார்? தலை சுற்றியது.
சித்ராவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. வசந்தம் வருகிறது என்கிறார். கணவனோ இலை உதிர்காலத்தின் ஒரு பகுதியை காட்டிவிட்டான்.
“சித்ரா...உன்னிடம் முதலிலேயே சொல்லியிருந்தால் இந்த பிரச்சனை இவ்வளவு பெரிசாகி இருக்காது. உனக்கு அந்த வலியை கொடுக்க நான் விரும்பலை. அதான் வேறு ஒன்றும் இல்லை.”
“அதை விட பெரிய வலியை இப்ப கொடுதிருக்கீங்க. காதலை விட உங்களுக்கு விடுதலை முக்கியம் இல்லே? நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா காதலே ஒரு சுதந்திரம் தான். சொல்லுங்க நீங்க சொன்னதெல்லாம் உண்மையா?”
“ஆமாம்...இனி நான் பொய் சொல்ல விரும்பலை. என்னை கீதா ப்ளாக் மெயில் பண்ணப் பார்க்கிறாள்....நீ தான் அதுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். நான் நொந்து போயிருக்கேன்.”
“முடிவுகள் எடுக்க முதலில் பிரச்சனையின் உள்ளே இறங்கணும் மனதின் வேதனை குறையணும். அப்ப தான் என்னால் ஒரு முடிவு சொல்ல முடியும். அது உங்களுக்கு சாதகமாக இருக்கும்னு நீங்க நினைக்க வேண்டாம். நான் வரேன். மதியம் காண்டீனில் சாப்பிடுங்க. என்னால் சமைத்து எடுத்து கொண்டு வர முடியாது. எனக்கு படுத்து அழவேண்டும் போல் இருக்கு...” அத்தோடு சித்ரா அறையை விட்டு வெளியேறினாள். அவனுக்கு தன் ஒளியே போனது போல் இருந்தது. .
இதுவரை வீடு என்று நினைத்து அவள் இளைப்பாறிய இடம் வெறும் சுடுகாடு என்று தோன்றியது. பிணம் சுடுகாட்டை வந்தடைவது போல் தான் அவள் வீடு வந்து சேர்ந்தாள். பாபு வந்து அவள் காலைக் கட்டிக் கொண்டான். அவன் பள்ளி விட்டு வந்ததும் எதிர் வீட்டு பெண்மணி அவன் வீட்டு கதவை திருந்து அவனை உள்ளே விட்டாள்.
“ஏதாவது வேணுமா பாபு?” என்று கேட்டாள்.
“ஒன்றும் வேண்டாம் ஆன்ட்டி. தாங்யூ.” அவள் போனதும் இவன் ஹோம் வொர்க் செய்தான். டி.வி பார்த்தான். இதோ அம்மா வந்துவிட்டாள்.
“அம்மா...நான் என்ன கொண்டு வந்திருக்கேன் பார்.”
“என்ன கொண்டு வந்திருக்கே? சொர்கத்தை நோக்கி காரைக்கால் அம்மையார் தலை கீழாக போனாங்களாம். எனக்கு அது கூட சொர்க்கம் இல்லை. என் சொர்க்கம் மூடிவிட்டது...”
அவள் சொன்னது எதுவும் அவனுக்குப் புரியவில்லை. அவன் நினைத்தான் அம்மாவிடம் அந்த ரகசியத்தை சொல்லிவிட்டால் அவள் சந்தோஷமாகி விட மாட்டாளா? அம்மாவை இத்தனை வருத்தத்துடன் அவன் பார்த்ததே இல்லை. அவனுக்கு பயமாக இருந்தது.
“சரி சொல்லு. என்ன கொண்டு வந்திருக்கே? புயலா? கடும் குளிரா? பாலைவனமா?...” பாபு அழ ஆரம்பித்தான். அப்போது தான் அவள் தன் நிலை அடைந்தாள். அவள் மனம் இளகியது.
“ஸாரிடா கண்ணா. அம்மா ஏதோ சிந்தனையில் ஏதேதோ உளறிட்டேன். சொல்லு சொல்லு...என்ன கொண்டு வந்திருக்கே?”
“ப்ராக்ரஸ் ரிப்போர்ட். முதல் ரேங்க்.”
அது பரிசு. பிள்ளை தரும் நல் பரிசு. ஆனால் இவன் என் பிள்ளை இல்லை என்று சொல்லிவிட்டானே ராகவன்...அதனால் என்ன பாசம் போய்விடுமா என்ன? அவள் கனிவுடம் சிரித்தாள்.
“நான் பெருமையா கையெழுத்து போடுவேன் கண்ணா. உனக்கு என்ன ட்ரீட் வேணும் சொல்லு...நான் இப்ப செய்றேன். குலோப் ஜான் செய்யவா? அல்லது கேசரி?”
“எனக்கு உன் முத்தம் தான் வேணும். உன் சிரிப்பு தான் வேணும்.”
மகனை கட்டிக் கொண்டாள். பாபு உன் மகன் இல்லை சித்ரா என்று ராகவன் சொன்ன அதிர்ச்சி செய்தி அவளுள் இறங்கி இம்சித்த இவ்வளவு நேரம், அவன் முத்தம் வேண்டும் என்று சொன்னதில் காணாமல போயிற்று. ராகவன் சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்று எப்படி சொல்ல முடியும் என்ற கேள்வி எழுந்தது.
கேசரி சாப்பிட்டு. பால் குடித்து...அம்மாவுடன் கொஞ்சி குலாவி விட்டு பாபு சொன்னான்.
“அம்மா...வந்து அந்த கீதா ஆன்ட்டி முன்பு இங்கே வருவாங்க தெரியுமா? அப்பா கூட பேசிட்டே இருப்பாங்க.”
திக்கென்றது சித்ராவுக்கு. இவன் என்ன புதுக் கதை சொல்கிறான்? கீதா என்கிற பெண்ணை மாமியார் ராகவனுக்கு பார்த்த பெண் ஆயிற்றே. அவள் எதுக்கு இங்கு வந்து பேசி இருக்கிறாள்?. சித்ரா இந்த ஒரு வருடமாக மாலை ஆறு மணிக்கு மேல் அவளுக்கு பார்த்து வைத்திருந்த வீட்டுக்கு போய் விடுவாளே...அந்த நேரம் இந்த கீதா வந்திருப்பாளோ? இரவு முழுக்க தங்கி இருப்பாளோ? இவனிடம் எப்படி கேட்பது? அசிங்கமா ஆயிடுமே. ஒரே குழப்பமாக இருந்தது. ஒரு வேளை இந்த கீதாவின் மகனோ இந்த பாபு?
“அம்மா...அந்த ஆன்ட்டி பாட் ஆன்ட்டி அம்மா. அப்பா கிட்டே பணம் வாங்கிக்கிட்டு போகும். உன் கிட்டே சொல்லனும்னு நினைப்பேன். அப்பா சொல்லக் கூடாதுன்னு சொன்னார். அதான்...”
“வேறு என்ன என்ன விஷயங்கள் நடந்திருக்கு பாபு.? உனக்கு தெரிந்ததை சொல்லு. பதட்டப்படாம யோசிச்சு சொல்லு. அம்மா திட்ட மாட்டேன்.”
“நிஜமா திட்ட மாட்டியே? எனக்கு பயமா இருக்குமா? என்னை ஹேட் பண்ணுவியா?” பாபு அழ ஆரம்பித்தான். அவன் கண்கள் குளமாகியது.
“தைரியமா சொல்லு. நீ என்ன செய்திருந்தாலும் நான் உன்னை ஹேட் பண்ண மாட்டேன். நீ என் மகனாச்சே...எப்படி உன்னை ஹேட் பண்ணுவேன்? பாவம் இந்த சின்ன வயசில் அனுபவிக்க கூடாத கஷ்டத்தையெல்லாம் அனுபவிச்சிட்டே....சொல்லு கண்ணா..”
பாபு மென்று விழுங்கினான். அவன் கண்களில் பயம் தெரிந்தது.
“வந்து வந்து.....அம்மா அப்பாவை நான் தான் கத்தியாலே குத்திட்டேன்.”
“என்னது? என்ன சொல்றே பாபு? நீயா....நீயா?..பொய் சொல்றே.”
“இல்லேம்மா நிஜம். அப்பா அந்த கீதா கூட பேசினது எனக்கு பிடிக்கலை. என்னை கூட்டிட்டுப் போகப் போறேன்னு சொன்னா. அப்பாவும் சரின்னு சொன்னார். அதான் ஆங்கரி ஆய்டுச்சு..குத்திட்டேன். அப்புறம் பயந்து போய் கட்டிலில் வந்து படுத்துக்கிட்டேன். படுக்கையில் மூத்திரமும் ஆயும் போயிட்டேன்...அதாம்மா நடந்தது....”
இதை ஏன் ராகவன் அவளிடம் சொல்லவில்லை? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துக்கு மேல் குழப்பம்.
“அம்மா...நீ என்ன ஹேட் பண்ணிடுவியா?’
“இல்லேடா...நீ என் தங்கம். அம்மா எப்பவும் உனக்கு துணையா இருப்பேன். கோழி குஞ்சை காக்கிற மாதிரி காப்பேன்.”
“ப்ராமிஸ்...”
“ப்ராமிஸ்..”
“அப்பா ஏன்ம்மா நான் தான் குத்தினேன்னு சொல்லலை. தானே குத்திக்கிட்டதா சொன்னாரு?”
“உன் மேல் உள்ள ப்ரியத்தாலே தான். “
“போலிஸ் கண்டு பிடிச்சுடுமா அம்மா?. என்னை ஜெயிலில் போடுவாங்களா?”
“ச்சே..ச்சே...அப்படி விட்டு விடுவோமா? இனிமே நீ கோபம் வந்தால் என் கிட்டே சொல்லணும். நீயா எதுவும் செய்யக் கூடாது. சரியா? இனிமே இப்படி முரட்டுத் தனமா செய்ய மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு.”
“ப்ராமிஸ்...அப்படி செய்யவே மாட்டேன்.” பாபு தன் நெஞ்சில் வைத்திருந்த அக்னியை வெளியிட்டப் பின் நிம்மதி அடைந்தான். அம்மாவை கட்டிக் கொண்டு தூங்கினான். ரொம்ப நாளுக்குப் பின் நன்கு தூங்கினான். சித்ராவுக்கு தூக்கம் போயிற்று. மர்மங்கள். தொடர்ந்து மர்மங்கள். பனி படர்ந்த காலை நேரம் போல் சூரியனை பார்க்க முடியாத பரிதவிப்பு நேரம். மாலை வருவதாக சொன்ன முரளிதரன் வரவில்லை. போனும் பண்ணவில்லை. அவர் என்ன புதுக் கதை சொல்லப் போகிறாரோ? எது நிஜம் எது பொய் என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. இது என்ன கோலம் இறைவா?
சித்ராவுக்கு சமையல் வேலை ஓடவில்லை. குழம்பில் உப்பு போட மறந்தாள். தயிர் காலியாகிவிட்டது. கடையில் போய் வாங்கி வந்தாள். அரிசியை களைந்து குக்கரில் வைத்தபோது கொஞ்சம் அதிகமாக தண்ணீர் ஊற்றிவிட்டாள். சாதம் கூழாகிவிட்டது. இதை எப்படி ராகவனுக்கு குடுப்பது? மீண்டும் அரிசி வைத்து பொல பொலவென்று வடித்த பின் காளான் கறி பண்ணிக் கொண்டு டிபன் காரியரில் அடைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பினாள். அவள் கால்கள் பின்னின. இன்று என்ன செய்தி சொல்லப் போகிறான் ராகவன்?
ராகவன் சாப்பிட்டு முடிந்த பின் அவனிடம் ஒரு கேள்வி கேட்டாள்.
“பாபு தான் உங்களை குத்தினான்னு அவனே சொல்லிட்டான்.”
ராகவன் திடுக்கிட்டு பார்த்தான். இவ்வளவு சீக்கிரம் இந்த விஷயம் வெளியில் வரும் என்று அவன் நினைக்கவே இல்லை.
“என்ன சால்ஜாப் சொல்லலாம்னு பார்க்கிறீங்களா? கீதா கூட நீங்க பழகும் விஷயம் வெளியே தெரியக் கூடாதுன்னு தானே நீங்களே குத்திக்கிட்டதா சொன்னீங்க? கீதா தான் வேணும்னு சொல்லியிருந்தா நான் எப்பவோ உங்களை விட்டு விலகி இருப்பேன். வீட்டை விட்டு துரத்தியும்...என் மகனை உங்கள் வீட்டில் வந்து பார்க்கணும் உத்தரவு போட்டும் ...உங்களுக்கு சமைச்சு போடணும்னு கட்டளை இட்டும்...நான் ஒத்துக்கிட்டு வந்ததுக்கு என்ன காரணம் தெரியுமா? பாபு மேலே இருக்கும் என் பாசம் தான். அவன் என் பிள்ளை இல்லன்னு சொன்னீங்க. அப்ப அவன் கீதாவுக்கு பொறந்தவனா? அப்ப அவளை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான். ஏன் என்னை ஏமாத்தணும்?”
“சித்ரா...உன் மேல் உள்ள காதலால் தான் எல்லாமே செஞ்சேன்.”
அவள் ஏளனமாக சிரித்தாள்.
கப்பல் மிதக்கும்.
அத்தியாயம்---11
மிக சிறந்த தருணங்கள் மிக சிறிய அறவிப்பில் வந்துவிடுகிறது. ராகவன் சொல்லிவிட்டு அவள் முகத்தை பார்க்கும் தகுதி தனக்கு இல்லை என்று புரிந்து கொண்டு, விட்டத்தை பார்த்தான். அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதில் அடங்கியிருக்கிறது அவன் நிம்மதி.
“சித்ரா...நீ என்ன மேல் அவ்வளவு மதிப்பும் அன்பும் வச்சிருக்கே. உன் கிட்டே நான் சொன்ன பொய்கள் என்னையே இப்ப தின்கிறது. உன்னை அவமானப் படுத்திட்டேன்னு நினைக்கும் போது செத்துவிடலாம் போல் இருக்கு. நீ கொடுத்த நிழலில், நீ காட்டிய பெருந்தன்மையில், நீ செலுத்திய அன்பில் நனைந்து கொண்டு எப்படி இவ்வளவு கோழையாக இருந்தேன்னு எனக்கேத் தெரியலை. ஐ டோன்ட் டிசர்வ் யூ...”
வெகு நேரம் சித்ரா அவன் சொன்ன விஷயங்களை ஜீரணிக்க கஷ்டப்பட்டாள். அவளுக்கு கண்ணீர் சிந்துவதில் கூட அர்த்தமில்லை என்று தோன்றியது. கண்களை துடைத்துக் கொண்டாள்.
“நீங்க எனக்கு செய்தது ஒரு வகையில் துரோகம் தான். என்னை நீங்க நம்பலை. என் அன்பை நீங்க பெரிதா மதிக்கலை. நீங்க என் மனசை மட்டும் உடைக்கலை. நம்ம எதிர்காலத்தையே உடைச்சிட்டீங்க.”
அங்கே நிற்கப் பிடிக்காமல் அவள் வெளியேற முயன்றாள். ராகவன் அவள் கையை பிடித்து நிறுந்தினான்.
“எதுவும் சொல்லாம போறியே?”
அவள் புன்னகைத்தாள். அந்த புன்னகை அவன் மனப் புண்ணுக்கு பேண்ட்-ஏட் போட்டு மூடியது போல் இருந்தது. ஆனாலும் அவனுக்கு வலி போகவில்லை. அவளைப் பற்றி அவன் அதிகம் கவலைப்பட்டான். அது தான் அவனுக்கு அதிக தண்டனையை கொடுத்தது. அதை அவள் புரிந்து கொள்வாளா? “சித்ரா...” மீண்டும் கூப்பிட்டான்.
“என் இதயம் பெரிசில்லை. அதுக்கு தைரியமும் இல்லை. அது கொடூரமானதும் இல்லை. இப்ப நீங்க சொன்னதை கேட்ட பின் அது பலமானது இல்லை என்று புரிந்து கொண்டேன். இந்த இரும்பு கூட்டுக்குள் அதை பதுக்கி வைத்திருந்தேன். நீங்க விட்ட தப்பான மூச்சு
அதை சாகடித்துவிட்டது. நீங்க என் முகத்தைப் பாருங்க அது போதும். என் இதயத்தை பார்க்காதீங்க...”
சித்ரா சொல்லிவிட்டு தன் கையை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டாள். அந்த சமயம் போன் அடித்தது. முரளியின் போன்.
“சொல்லுங்க டாக்டர்...என்ன விஷயம்?”
“ஒரு நல்ல நியூஸ் அம்மா...உங்க வாழ்க்கை கணக்கில் ஒரு புதிய வசந்தம். எங்கே இருக்கேங்க? உங்களோடு பேசணும்.”
“மாலை நான்கு மணிக்கு வாங்க.” சொல்லிவிட்டு அவள் போனை கட் பண்ணினாள். ராகவன் சொல்லிய விஷயம் டாக்டருக்கு தெரியாது போலும். எதை வசந்தம் என்கிறார்? தலை சுற்றியது.
சித்ராவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. வசந்தம் வருகிறது என்கிறார். கணவனோ இலை உதிர்காலத்தின் ஒரு பகுதியை காட்டிவிட்டான்.
“சித்ரா...உன்னிடம் முதலிலேயே சொல்லியிருந்தால் இந்த பிரச்சனை இவ்வளவு பெரிசாகி இருக்காது. உனக்கு அந்த வலியை கொடுக்க நான் விரும்பலை. அதான் வேறு ஒன்றும் இல்லை.”
“அதை விட பெரிய வலியை இப்ப கொடுதிருக்கீங்க. காதலை விட உங்களுக்கு விடுதலை முக்கியம் இல்லே? நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா காதலே ஒரு சுதந்திரம் தான். சொல்லுங்க நீங்க சொன்னதெல்லாம் உண்மையா?”
“ஆமாம்...இனி நான் பொய் சொல்ல விரும்பலை. என்னை கீதா ப்ளாக் மெயில் பண்ணப் பார்க்கிறாள்....நீ தான் அதுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். நான் நொந்து போயிருக்கேன்.”
“முடிவுகள் எடுக்க முதலில் பிரச்சனையின் உள்ளே இறங்கணும் மனதின் வேதனை குறையணும். அப்ப தான் என்னால் ஒரு முடிவு சொல்ல முடியும். அது உங்களுக்கு சாதகமாக இருக்கும்னு நீங்க நினைக்க வேண்டாம். நான் வரேன். மதியம் காண்டீனில் சாப்பிடுங்க. என்னால் சமைத்து எடுத்து கொண்டு வர முடியாது. எனக்கு படுத்து அழவேண்டும் போல் இருக்கு...” அத்தோடு சித்ரா அறையை விட்டு வெளியேறினாள். அவனுக்கு தன் ஒளியே போனது போல் இருந்தது. .
இதுவரை வீடு என்று நினைத்து அவள் இளைப்பாறிய இடம் வெறும் சுடுகாடு என்று தோன்றியது. பிணம் சுடுகாட்டை வந்தடைவது போல் தான் அவள் வீடு வந்து சேர்ந்தாள். பாபு வந்து அவள் காலைக் கட்டிக் கொண்டான். அவன் பள்ளி விட்டு வந்ததும் எதிர் வீட்டு பெண்மணி அவன் வீட்டு கதவை திருந்து அவனை உள்ளே விட்டாள்.
“ஏதாவது வேணுமா பாபு?” என்று கேட்டாள்.
“ஒன்றும் வேண்டாம் ஆன்ட்டி. தாங்யூ.” அவள் போனதும் இவன் ஹோம் வொர்க் செய்தான். டி.வி பார்த்தான். இதோ அம்மா வந்துவிட்டாள்.
“அம்மா...நான் என்ன கொண்டு வந்திருக்கேன் பார்.”
“என்ன கொண்டு வந்திருக்கே? சொர்கத்தை நோக்கி காரைக்கால் அம்மையார் தலை கீழாக போனாங்களாம். எனக்கு அது கூட சொர்க்கம் இல்லை. என் சொர்க்கம் மூடிவிட்டது...”
அவள் சொன்னது எதுவும் அவனுக்குப் புரியவில்லை. அவன் நினைத்தான் அம்மாவிடம் அந்த ரகசியத்தை சொல்லிவிட்டால் அவள் சந்தோஷமாகி விட மாட்டாளா? அம்மாவை இத்தனை வருத்தத்துடன் அவன் பார்த்ததே இல்லை. அவனுக்கு பயமாக இருந்தது.
“சரி சொல்லு. என்ன கொண்டு வந்திருக்கே? புயலா? கடும் குளிரா? பாலைவனமா?...” பாபு அழ ஆரம்பித்தான். அப்போது தான் அவள் தன் நிலை அடைந்தாள். அவள் மனம் இளகியது.
“ஸாரிடா கண்ணா. அம்மா ஏதோ சிந்தனையில் ஏதேதோ உளறிட்டேன். சொல்லு சொல்லு...என்ன கொண்டு வந்திருக்கே?”
“ப்ராக்ரஸ் ரிப்போர்ட். முதல் ரேங்க்.”
அது பரிசு. பிள்ளை தரும் நல் பரிசு. ஆனால் இவன் என் பிள்ளை இல்லை என்று சொல்லிவிட்டானே ராகவன்...அதனால் என்ன பாசம் போய்விடுமா என்ன? அவள் கனிவுடம் சிரித்தாள்.
“நான் பெருமையா கையெழுத்து போடுவேன் கண்ணா. உனக்கு என்ன ட்ரீட் வேணும் சொல்லு...நான் இப்ப செய்றேன். குலோப் ஜான் செய்யவா? அல்லது கேசரி?”
“எனக்கு உன் முத்தம் தான் வேணும். உன் சிரிப்பு தான் வேணும்.”
மகனை கட்டிக் கொண்டாள். பாபு உன் மகன் இல்லை சித்ரா என்று ராகவன் சொன்ன அதிர்ச்சி செய்தி அவளுள் இறங்கி இம்சித்த இவ்வளவு நேரம், அவன் முத்தம் வேண்டும் என்று சொன்னதில் காணாமல போயிற்று. ராகவன் சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்று எப்படி சொல்ல முடியும் என்ற கேள்வி எழுந்தது.
கேசரி சாப்பிட்டு. பால் குடித்து...அம்மாவுடன் கொஞ்சி குலாவி விட்டு பாபு சொன்னான்.
“அம்மா...வந்து அந்த கீதா ஆன்ட்டி முன்பு இங்கே வருவாங்க தெரியுமா? அப்பா கூட பேசிட்டே இருப்பாங்க.”
திக்கென்றது சித்ராவுக்கு. இவன் என்ன புதுக் கதை சொல்கிறான்? கீதா என்கிற பெண்ணை மாமியார் ராகவனுக்கு பார்த்த பெண் ஆயிற்றே. அவள் எதுக்கு இங்கு வந்து பேசி இருக்கிறாள்?. சித்ரா இந்த ஒரு வருடமாக மாலை ஆறு மணிக்கு மேல் அவளுக்கு பார்த்து வைத்திருந்த வீட்டுக்கு போய் விடுவாளே...அந்த நேரம் இந்த கீதா வந்திருப்பாளோ? இரவு முழுக்க தங்கி இருப்பாளோ? இவனிடம் எப்படி கேட்பது? அசிங்கமா ஆயிடுமே. ஒரே குழப்பமாக இருந்தது. ஒரு வேளை இந்த கீதாவின் மகனோ இந்த பாபு?
“அம்மா...அந்த ஆன்ட்டி பாட் ஆன்ட்டி அம்மா. அப்பா கிட்டே பணம் வாங்கிக்கிட்டு போகும். உன் கிட்டே சொல்லனும்னு நினைப்பேன். அப்பா சொல்லக் கூடாதுன்னு சொன்னார். அதான்...”
“வேறு என்ன என்ன விஷயங்கள் நடந்திருக்கு பாபு.? உனக்கு தெரிந்ததை சொல்லு. பதட்டப்படாம யோசிச்சு சொல்லு. அம்மா திட்ட மாட்டேன்.”
“நிஜமா திட்ட மாட்டியே? எனக்கு பயமா இருக்குமா? என்னை ஹேட் பண்ணுவியா?” பாபு அழ ஆரம்பித்தான். அவன் கண்கள் குளமாகியது.
“தைரியமா சொல்லு. நீ என்ன செய்திருந்தாலும் நான் உன்னை ஹேட் பண்ண மாட்டேன். நீ என் மகனாச்சே...எப்படி உன்னை ஹேட் பண்ணுவேன்? பாவம் இந்த சின்ன வயசில் அனுபவிக்க கூடாத கஷ்டத்தையெல்லாம் அனுபவிச்சிட்டே....சொல்லு கண்ணா..”
பாபு மென்று விழுங்கினான். அவன் கண்களில் பயம் தெரிந்தது.
“வந்து வந்து.....அம்மா அப்பாவை நான் தான் கத்தியாலே குத்திட்டேன்.”
“என்னது? என்ன சொல்றே பாபு? நீயா....நீயா?..பொய் சொல்றே.”
“இல்லேம்மா நிஜம். அப்பா அந்த கீதா கூட பேசினது எனக்கு பிடிக்கலை. என்னை கூட்டிட்டுப் போகப் போறேன்னு சொன்னா. அப்பாவும் சரின்னு சொன்னார். அதான் ஆங்கரி ஆய்டுச்சு..குத்திட்டேன். அப்புறம் பயந்து போய் கட்டிலில் வந்து படுத்துக்கிட்டேன். படுக்கையில் மூத்திரமும் ஆயும் போயிட்டேன்...அதாம்மா நடந்தது....”
இதை ஏன் ராகவன் அவளிடம் சொல்லவில்லை? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துக்கு மேல் குழப்பம்.
“அம்மா...நீ என்ன ஹேட் பண்ணிடுவியா?’
“இல்லேடா...நீ என் தங்கம். அம்மா எப்பவும் உனக்கு துணையா இருப்பேன். கோழி குஞ்சை காக்கிற மாதிரி காப்பேன்.”
“ப்ராமிஸ்...”
“ப்ராமிஸ்..”
“அப்பா ஏன்ம்மா நான் தான் குத்தினேன்னு சொல்லலை. தானே குத்திக்கிட்டதா சொன்னாரு?”
“உன் மேல் உள்ள ப்ரியத்தாலே தான். “
“போலிஸ் கண்டு பிடிச்சுடுமா அம்மா?. என்னை ஜெயிலில் போடுவாங்களா?”
“ச்சே..ச்சே...அப்படி விட்டு விடுவோமா? இனிமே நீ கோபம் வந்தால் என் கிட்டே சொல்லணும். நீயா எதுவும் செய்யக் கூடாது. சரியா? இனிமே இப்படி முரட்டுத் தனமா செய்ய மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு.”
“ப்ராமிஸ்...அப்படி செய்யவே மாட்டேன்.” பாபு தன் நெஞ்சில் வைத்திருந்த அக்னியை வெளியிட்டப் பின் நிம்மதி அடைந்தான். அம்மாவை கட்டிக் கொண்டு தூங்கினான். ரொம்ப நாளுக்குப் பின் நன்கு தூங்கினான். சித்ராவுக்கு தூக்கம் போயிற்று. மர்மங்கள். தொடர்ந்து மர்மங்கள். பனி படர்ந்த காலை நேரம் போல் சூரியனை பார்க்க முடியாத பரிதவிப்பு நேரம். மாலை வருவதாக சொன்ன முரளிதரன் வரவில்லை. போனும் பண்ணவில்லை. அவர் என்ன புதுக் கதை சொல்லப் போகிறாரோ? எது நிஜம் எது பொய் என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. இது என்ன கோலம் இறைவா?
சித்ராவுக்கு சமையல் வேலை ஓடவில்லை. குழம்பில் உப்பு போட மறந்தாள். தயிர் காலியாகிவிட்டது. கடையில் போய் வாங்கி வந்தாள். அரிசியை களைந்து குக்கரில் வைத்தபோது கொஞ்சம் அதிகமாக தண்ணீர் ஊற்றிவிட்டாள். சாதம் கூழாகிவிட்டது. இதை எப்படி ராகவனுக்கு குடுப்பது? மீண்டும் அரிசி வைத்து பொல பொலவென்று வடித்த பின் காளான் கறி பண்ணிக் கொண்டு டிபன் காரியரில் அடைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பினாள். அவள் கால்கள் பின்னின. இன்று என்ன செய்தி சொல்லப் போகிறான் ராகவன்?
ராகவன் சாப்பிட்டு முடிந்த பின் அவனிடம் ஒரு கேள்வி கேட்டாள்.
“பாபு தான் உங்களை குத்தினான்னு அவனே சொல்லிட்டான்.”
ராகவன் திடுக்கிட்டு பார்த்தான். இவ்வளவு சீக்கிரம் இந்த விஷயம் வெளியில் வரும் என்று அவன் நினைக்கவே இல்லை.
“என்ன சால்ஜாப் சொல்லலாம்னு பார்க்கிறீங்களா? கீதா கூட நீங்க பழகும் விஷயம் வெளியே தெரியக் கூடாதுன்னு தானே நீங்களே குத்திக்கிட்டதா சொன்னீங்க? கீதா தான் வேணும்னு சொல்லியிருந்தா நான் எப்பவோ உங்களை விட்டு விலகி இருப்பேன். வீட்டை விட்டு துரத்தியும்...என் மகனை உங்கள் வீட்டில் வந்து பார்க்கணும் உத்தரவு போட்டும் ...உங்களுக்கு சமைச்சு போடணும்னு கட்டளை இட்டும்...நான் ஒத்துக்கிட்டு வந்ததுக்கு என்ன காரணம் தெரியுமா? பாபு மேலே இருக்கும் என் பாசம் தான். அவன் என் பிள்ளை இல்லன்னு சொன்னீங்க. அப்ப அவன் கீதாவுக்கு பொறந்தவனா? அப்ப அவளை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான். ஏன் என்னை ஏமாத்தணும்?”
“சித்ரா...உன் மேல் உள்ள காதலால் தான் எல்லாமே செஞ்சேன்.”
அவள் ஏளனமாக சிரித்தாள்.
கப்பல் மிதக்கும்.
அத்தியாயம்---11