கை வைத்தியம் 5
போன எபியில் வெந்தயத்தைப் பற்றி இன்னும் நிறைய சொல்லறேன்னு சொன்னேன் இல்லையா.. இதோ உங்களுக்கு, எனக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்ல வந்திருக்கேன்..
வெந்தயம் நம் அழகை மேம்படுத்துவதில் அதிக பங்கு வகிக்கிறது.
எப்படின்னு நீங்க கேட்பது புரியுது..
** தொடர்ந்து வெந்தயப்பொடியை எடுத்துக்கொள்வதால் அஜீரணக்கோளாறுகள் நீங்கி, நம் உடலையும் வனப்புடன் வைக்க உதவும். வெந்தயக்களியும் உடல் குளிர்ச்சிக்கு உதவுகிறது. கோடைக்காலத்தில் உடல் சூட்டிற்கு வாரம் ஒரு முறை வெந்தயக்களியை செய்து உண்ணலாம். வெந்தயம் உட்கொள்வதால் உடம்பில் இருக்கும் கசடுகள் நீங்கி, மலச்சிக்கலையும் தீர்க்கிறது.
** உள்ளுக்குள் எடுத்துக்கொள்ளும் வெந்தயம் உடலுக்கு நன்மை அளிப்பது போல வெளிப்புற தோற்றத்திற்கும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம்..
**முகப்பொலிவுக்கு நல்ல பேஸ் பேக் இது.., முகத்திற்கான களிம்பாகவும் தடவலாம்.. ‘வைட்டமின் சி மற்றும் கே’ அதிகளவில் இருக்கும் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து பாலில் கலந்து தடவி வந்தால், உங்கள் முகப்பொலிவு கூடுவதுடன், முகத்தில் வரும் பருக்கள், மற்றும் கருமையையும் நீக்குகிறது.
** அடுத்ததாக.. ஆணோ, பெண்ணோ ஒருவருக்கு அழகு தரக்கூடியது அவர்களின் தலைமுடிதானே..
இப்போது இருக்கும் அவசர காலகட்டத்தில், தலைமுடியைப் பராமரிப்பது என்பது ரொம்பவே கஷ்டமாக இருக்கு நம்மில் பலருக்கு..
தலைமுடி உதிருவது, பொடுகு, வழுக்கை.. இப்படி எத்தனையோ பிரச்சனைகள்..
இது எல்லாவற்றிர்க்கும் நல்ல தீர்வு வெந்தயம் னு சொல்லலாம் பிள்ளைங்களா..
ஏற்கனவே நிறைய பேர் வெந்தயத்தைப் போட்டு தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி அந்த எண்ணையைத் தலைக்கு உபயோகப்படுத்தி இருப்பீர்கள்..
இன்னும் சிலர் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, தலையில் பேக் மாதிரி போட்டுக் குளித்தும் பார்த்திருப்பீர்கள்.. வெந்தயமே நல்ல கண்டிஷனர்தான்.. ஷாம்புக்கு பதில் இதை எடுத்துக்கொள்ளலாம்.. தலைமுடியை மிருதுவாக்கி, நன்றாக பளபளக்க வைக்கும்..
இது எல்லாமே நல்ல சிகிச்சைதான்..
இப்போ நான் இன்னொரு விதமாய் வெந்தயத்தை எப்படி தலைக்குப் பயன்படுத்துவது என்பதை சொல்லறேன்.. நிச்சயம் இது ஒரு நல்ல தீர்வாய் இருக்கும் உங்கள் அனைத்துப் பிரச்சனைக்கு..
** அலோவேரா.. சோற்றுக்கற்றாழை உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும்.. அதன் பயன்களும் ஏராளம்.. அலோவேராவைப் பற்றி தனியாக இன்னொரு எபியில் சொல்கிறேன். இப்போ, அத்தோடு வெந்தயம் சேரும் பொழுது எப்படி நல்ல பலனைக் கொடுக்கிறது என்பதை இப்போ பார்ப்போம்.
சோற்றுக்கற்றாழை ஒரு பெரிய இலை எடுத்துக்கொள்ளுங்கள்.. அதன் முட்பகுதிகளை லேசாக கீறி விடுங்கள்.. மெல்ல மேலிருந்து கீழ் வரை இரண்டாகப் பிளந்து கொள்ளுங்கள்.. அதன் நடுவில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை உள்ளே வைத்து அப்படியே நூலால் லேசாக கட்டிவிடுங்கள்.. இரண்டு நாட்கள் அப்படியே காற்றோட்டமான இடத்தில் வைத்து விடுங்கள்..
இரண்டு நாட்கள் கழித்துப் பார்த்தால், உள்ளே வைக்கப்பட்டிருக்கும் வெந்தயம் நன்றாக ஊறி இருக்கும்.. அந்த வெந்தயத்த்தோடு சோற்றுக்கற்றாழையையும் சேர்த்து சிறிது சிறிதாக நறுக்கி நல்ல தேங்காய் எண்ணெய்யோடு போட்டுக் காய்ச்சி, வடிகட்டி தலையில் தடவி வர, முடி சம்மந்தமான எல்லா பிரச்சனைகளும் நிச்சயம் தீரும். 100 மில்லி தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம் இந்த அளவிற்கு..
சோற்றுக்கற்றாழை ஜெல்லையும் நீங்கள் போட்டுக் காய்ச்சலாம். எதுவும் ஆகாது. ஆனால் நன்றாக சலசலப்பு நீங்கும் வரை காய்ச்ச வேண்டும்.. ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அப்படியே அதை ஆறவிட்டு, நன்றாக வடிகட்டி ஒரு சுத்தமான பாட்டிலில் வைத்து உபயோகப்படுத்துங்கள்..
நாள்பட, இந்த எண்ணெய் நன்றாகவே இருக்கும். கெட்டுப் போகாது. தலைமுடி பிரச்சனைகளுக்கு நிச்சயம் இந்த சிகிச்சை நல்ல பயனைத் தருவதோடு, உங்கள் முடியும் கருப்பாக, வேகமாக வளரத் தொடங்கும்..
முயற்சி செய்து பாருங்கள் பிள்ளைங்களா..
சரோஜா பாட்டி கைவைத்தியம் பிடிச்சிருந்தா, ஒரு லைக்கோ இல்லை கமென்ட்சோ போட்டுடுட்டு போங்க மறக்காமல்..
நிச்சயம் இன்னொரு கைவைத்தியத்தோடு சீக்கிரமே உங்களைச் சந்திக்க வருவேன்..
www.sangamamnovels.com
போன எபியில் வெந்தயத்தைப் பற்றி இன்னும் நிறைய சொல்லறேன்னு சொன்னேன் இல்லையா.. இதோ உங்களுக்கு, எனக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்ல வந்திருக்கேன்..
வெந்தயம் நம் அழகை மேம்படுத்துவதில் அதிக பங்கு வகிக்கிறது.
எப்படின்னு நீங்க கேட்பது புரியுது..
** தொடர்ந்து வெந்தயப்பொடியை எடுத்துக்கொள்வதால் அஜீரணக்கோளாறுகள் நீங்கி, நம் உடலையும் வனப்புடன் வைக்க உதவும். வெந்தயக்களியும் உடல் குளிர்ச்சிக்கு உதவுகிறது. கோடைக்காலத்தில் உடல் சூட்டிற்கு வாரம் ஒரு முறை வெந்தயக்களியை செய்து உண்ணலாம். வெந்தயம் உட்கொள்வதால் உடம்பில் இருக்கும் கசடுகள் நீங்கி, மலச்சிக்கலையும் தீர்க்கிறது.
** உள்ளுக்குள் எடுத்துக்கொள்ளும் வெந்தயம் உடலுக்கு நன்மை அளிப்பது போல வெளிப்புற தோற்றத்திற்கும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம்..
**முகப்பொலிவுக்கு நல்ல பேஸ் பேக் இது.., முகத்திற்கான களிம்பாகவும் தடவலாம்.. ‘வைட்டமின் சி மற்றும் கே’ அதிகளவில் இருக்கும் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து பாலில் கலந்து தடவி வந்தால், உங்கள் முகப்பொலிவு கூடுவதுடன், முகத்தில் வரும் பருக்கள், மற்றும் கருமையையும் நீக்குகிறது.
** அடுத்ததாக.. ஆணோ, பெண்ணோ ஒருவருக்கு அழகு தரக்கூடியது அவர்களின் தலைமுடிதானே..
இப்போது இருக்கும் அவசர காலகட்டத்தில், தலைமுடியைப் பராமரிப்பது என்பது ரொம்பவே கஷ்டமாக இருக்கு நம்மில் பலருக்கு..
தலைமுடி உதிருவது, பொடுகு, வழுக்கை.. இப்படி எத்தனையோ பிரச்சனைகள்..
இது எல்லாவற்றிர்க்கும் நல்ல தீர்வு வெந்தயம் னு சொல்லலாம் பிள்ளைங்களா..
ஏற்கனவே நிறைய பேர் வெந்தயத்தைப் போட்டு தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி அந்த எண்ணையைத் தலைக்கு உபயோகப்படுத்தி இருப்பீர்கள்..
இன்னும் சிலர் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, தலையில் பேக் மாதிரி போட்டுக் குளித்தும் பார்த்திருப்பீர்கள்.. வெந்தயமே நல்ல கண்டிஷனர்தான்.. ஷாம்புக்கு பதில் இதை எடுத்துக்கொள்ளலாம்.. தலைமுடியை மிருதுவாக்கி, நன்றாக பளபளக்க வைக்கும்..
இது எல்லாமே நல்ல சிகிச்சைதான்..
இப்போ நான் இன்னொரு விதமாய் வெந்தயத்தை எப்படி தலைக்குப் பயன்படுத்துவது என்பதை சொல்லறேன்.. நிச்சயம் இது ஒரு நல்ல தீர்வாய் இருக்கும் உங்கள் அனைத்துப் பிரச்சனைக்கு..
** அலோவேரா.. சோற்றுக்கற்றாழை உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும்.. அதன் பயன்களும் ஏராளம்.. அலோவேராவைப் பற்றி தனியாக இன்னொரு எபியில் சொல்கிறேன். இப்போ, அத்தோடு வெந்தயம் சேரும் பொழுது எப்படி நல்ல பலனைக் கொடுக்கிறது என்பதை இப்போ பார்ப்போம்.
சோற்றுக்கற்றாழை ஒரு பெரிய இலை எடுத்துக்கொள்ளுங்கள்.. அதன் முட்பகுதிகளை லேசாக கீறி விடுங்கள்.. மெல்ல மேலிருந்து கீழ் வரை இரண்டாகப் பிளந்து கொள்ளுங்கள்.. அதன் நடுவில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை உள்ளே வைத்து அப்படியே நூலால் லேசாக கட்டிவிடுங்கள்.. இரண்டு நாட்கள் அப்படியே காற்றோட்டமான இடத்தில் வைத்து விடுங்கள்..
இரண்டு நாட்கள் கழித்துப் பார்த்தால், உள்ளே வைக்கப்பட்டிருக்கும் வெந்தயம் நன்றாக ஊறி இருக்கும்.. அந்த வெந்தயத்த்தோடு சோற்றுக்கற்றாழையையும் சேர்த்து சிறிது சிறிதாக நறுக்கி நல்ல தேங்காய் எண்ணெய்யோடு போட்டுக் காய்ச்சி, வடிகட்டி தலையில் தடவி வர, முடி சம்மந்தமான எல்லா பிரச்சனைகளும் நிச்சயம் தீரும். 100 மில்லி தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம் இந்த அளவிற்கு..
சோற்றுக்கற்றாழை ஜெல்லையும் நீங்கள் போட்டுக் காய்ச்சலாம். எதுவும் ஆகாது. ஆனால் நன்றாக சலசலப்பு நீங்கும் வரை காய்ச்ச வேண்டும்.. ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அப்படியே அதை ஆறவிட்டு, நன்றாக வடிகட்டி ஒரு சுத்தமான பாட்டிலில் வைத்து உபயோகப்படுத்துங்கள்..
நாள்பட, இந்த எண்ணெய் நன்றாகவே இருக்கும். கெட்டுப் போகாது. தலைமுடி பிரச்சனைகளுக்கு நிச்சயம் இந்த சிகிச்சை நல்ல பயனைத் தருவதோடு, உங்கள் முடியும் கருப்பாக, வேகமாக வளரத் தொடங்கும்..
முயற்சி செய்து பாருங்கள் பிள்ளைங்களா..
சரோஜா பாட்டி கைவைத்தியம் பிடிச்சிருந்தா, ஒரு லைக்கோ இல்லை கமென்ட்சோ போட்டுடுட்டு போங்க மறக்காமல்..
நிச்சயம் இன்னொரு கைவைத்தியத்தோடு சீக்கிரமே உங்களைச் சந்திக்க வருவேன்..
சரோஜா பாட்டி கைவைத்தியம்...கருத்துத் திரி
இந்த பகுதிக்கான விமர்சனங்களை இங்கே பதிவிடவும்
www.sangamamnovels.com