நீரோட்டம் ஒரு முன்னோட்டம்.
ஒரு அழகான முதியோர் இல்லத்தை நடத்தும் தலைவி. அவள் ஏன் அதை நடத்துகிறாள்? அவள் அம்மாவுக்கும் அவளுக்குமான மன பேதம் என்ன? தங்கையை பிரிந்து அப்பாவை பிரிந்து அவள் வாழ்கிற வாழ்கைக்கு என்ன அர்த்தம்? அவள் யாரை சந்திக்கிறாள்? அவள் வாழ்க்கையை புரட்டிப் போடும் அவனை அவள் நெருங்க விடுகிறாளா? அப்படி ஒரு புதிர் பெண் தான் நம் கதாநாயகி. அவளை உங்களுக்கு பிடிக்கும். வாங்க அவளை நீரோட்டத்தில் சந்தியுங்கள்... நீரோட்டம்
அத்தியாயம் --1
அந்த முதியோர் இல்லத்தில் ஒரு மரணம். அது அந்த இல்லத்திற்கு புதிது இல்லை. சாவின் விளிம்பில் வாழ்க்கையை தொற்றிக்கொண்டு இருக்கும் அங்கிருந்த பலரின் கனவு தான் மரணம். எப்போ எனக்கு சாவு வரும், கனவு நிஜமாகும் என்று தவிக்கும் மனசுகள். எழுபதை தாண்டியவரும் இருந்தனர். தொண்ணுத்தாறு தொடும் வயதினரும் இருந்தனர். பலரும் விடுதலை வேண்டி காத்திருக்கும் காலம் இது. அதுவரை இது சிலருக்கு ஒருவித சிறைச்சாலை. சிலருக்கு ஓய்வு நேரம்...சிலருக்கு அமைதி கிடைத்த நேரம்...இன்னும் சிலருக்கு வேதாந்தம் பற்றி உணரும் நேரம்.
“சாந்தாம்மா போய்விட்டாள். மகராசி...இனி எனக்கு எப்பவோ ?” என்று பிரலாபித்தாள் பார்வதியம்மா.
“பாட்டி சாவை ஏன் இவ்ளோ அவசரப்பட்டு வெத்தலைப் பாக்கு வச்சு அழைக்றேங்க? அது வரும் போது வரும். ஜாலியா இருங்க.”என்றாள் முத்து.
“அடி செருப்பாலே... ஏன் சொல்லமாட்டே?...தளுக்கி மினுக்கற வயசு உனக்கு..நாங்க சருகுடி...”
“பொறாமையா இருக்கா.?”
“நான் ஏண்டி பொறாமைப்படணும்? நான் என்ன அந்த சாந்தாம்மா மாதிரி கொடுத்து வைக்காதவளா?...அழகு போலே மகன் இருக்கான் கொள்ளி போட.”
முத்தம்மா பெருக்கி முடித்துவிட்டாள். “மணி எட்டாகுது சாப்பிட ஹாலுக்கு வாங்க பாட்டி.” என்று அன்புடன் கூறிவிட்டுச் சென்றாள்.
முத்தம்மா இங்கு வேலைக்கு வந்த பிறகு நிம்மதியாக இருக்கிறாள். இங்கு வந்து சேர்ந்த புதிதில் அவள் கணவன் கோபாலு குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்தான். “ஏய்...முண்டச்சி..இந்த மாதம் சம்பளம் வாங்கி இருப்பே இல்லே....மரியாதையா கொடு..இல்ல நொறுக்கிப் போடுவேன் ..” இவன் எப்பொழுதும் இப்படித்தான்....அவள் வேலை பார்க்கும் வீடுகளில் மாதம் பிறந்ததும் குடித்துவிட்டு வந்து காலாட்டா பண்ணி காசை வாங்கிக்கொண்டு போய்விடுவான். சம்பளத்தில் பாதிய கொடு போதும்....நான் நாணயஸ்தன் என்று பெருமை பீற்றுவான்..இவனிடம் கொடுக்கமுடியாது என்று அவள் வாதாடினால்...முண்டச்சிக்கு அவ்வளவு திமிரா என்று முடியை பிடித்து இழுப்பான்.. கன்னத்தில் அறைவான்...அநியாயமாக அவள் நடத்தையைப் பற்றி அசிங்கமாகப் பேசுவான்..அவள் வைத்துக் கொண்டிருக்கும் காதலர்களுக்குப் போகிறதா காசு என்று கேட்பான். இவன் கலாட்டா தாங்காமல் கொடுத்துவிடுவாள். வீட்டுத் தலைவி முகம் சுளிப்பாள். அடுத்த மாதமும் இதே கதை தான்.....இரெண்டாம் மாதமே அவளை வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். குழந்தைகள் பசியோடு இருப்பதைப் பார்க்க தாங்கமுடியாத வலி வரும். ஒன்றரை வயது பையன் மணிகண்டன் ...மூன்று வயது பெண்குழந்தை தாமரை...பசியில் வாடும் முகங்கள். ”நீயெல்லாம் ஒரு அப்பனா...” என்று அவள் சொல்லி, அவன் அடித்ததில் இடது பக்க இடுப்பு எலும்பு முறிந்து விட்டது. நல்ல வேலை சரியாகிவிட்டது. அது கடவுள் புண்ணியம்.
“பிள்ளைகள் பசியோடு இருக்காங்க...நீ பெத்த பிள்ளைதானே...இப்படி காசைப் புடுங்கினா என்ன பண்ணுவேன்?”
“மைன்ட் இட்...பாதி காசுதானே தாரே...மீதியை வைத்துக் கொண்டு குடித்தனம் பண்ண முடியாது? எவன் கிட்டடி கொடுக்கறே? என் புள்ளைகளை பட்டினி போடறே.?” அதற்கும் இரண்டு அடி சேர்த்து கிடைக்கும். மீனாட்சியம்மா புண்ணியத்தில் இந்த வேலை கிடைத்தது. வேலையில் சேர்ந்து அவள் சம்பளம் வாங்கிய முதல் நாளே மூக்கில் வேர்த்து வந்துவிட்டான் கோபாலு .”எடு எடு...நேரமாவுது காமான் குவிக்...” என்று கலெக்டர் உத்தியோகம் பார்க்கும் ஆள் போல் பந்தாவுடன் கேட்டான். அவள் இங்கும் வேலை போய்விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் பாதி சம்பளத்தைக் கொடுத்தாள். “நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு இங்கலிசு வேறயா?” என்று திட்டினாள்.
“ஏய்...என்னடி முண்டச்சி...ரெண்டாயிரம் தாரே..இங்கு உனக்கு சம்பளம் சாஸ்தி...மரியாதையா இன்னும் ஆயிரம் கொடு ..”
“முடியாதுய்யா...தாமரையை பள்ளியில சேர்க்கணும்.. சீருடை வாங்கணும்...” என்றாள்
“அய்...அப்பனாகிய எனக்கு இல்லாத அக்கறை உனக்கு வந்திடுச்சா? எவன் கிட்ட கொடுக்றதுக்கு பதுக்கி வைக்கிறே ? ராஸ்கோல் ...” அடி உதை குத்து, முத்தம்மா கன்னத்தில் வீக்கம்...நெற்றியில் ரத்தம்...அவள் ஓவென்று அழ...அங்கே மரகதம் வந்தாள். விடுதி தலைவி. ஒல்லியான களையான முகம். முப்பத்திரண்டு வயது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. வயதிற்கு மீறிய முதிர்ச்சியான பக்குவம் உடையவள்.
“என்ன கலாட்டா இங்கே ?”
“ஒண்ணுமில்லேம்மா..” முத்தம்மா மழுப்பப் பார்த்தாள்... இந்த வேலையும் போய்விட்டால்.!
“புரியுது...குடித்துவிட்டு வந்திருக்கியாடா...இனிமே இங்கே வந்து கலாட்டா பண்ணினே போலீசைக் கூப்பிடுவேன்..நீ இப்போ வாங்கின காசை திருப்பி முத்தம்மா கிட்ட கொடுத்திட்டு ஓடிப் போயிடு.” கடுமையாக தலைவி எச்சரிக்க கோபாலு மந்திரத்திற்கு கட்டுப் பட்டது போல் பணத்தை கொடுத்துவிட்டு கீழ் குரலில்....“வருவேல்ல..வச்சுக்கிறேன் ...” என்றபடி போனான். தலைவி அவளை வீட்டுக்குப் போக விடவில்லை .விடுதிக்குப் பக்கத்தில் உள்ள சிறிய அவுட் ஹவுசை அவளுக்குக் கொடுத்து “வசதியா இருக்கா? புள்ளைங்களை அழச்சிட்டு வந்து இங்கேயே இரு” என்று சொல்லிவிட முத்தம்மா நன்றிபெருக்கில் கண்ணில் நீர் மல்க மரகதம் காலில் விழுந்தாள். அது முதல் அவள் வாழ்கையில் வசந்தம் வந்தது. கோபாலு வேறு யாரோ ஒரு பெண்ணுடன் தொடுப்பு வைத்துக் கொண்டு இருப்பதாகக் கேள்வி. அவள் அவனை அடக்கி ஆள்வதாகப் பேச்சு..
“ஏய் ...முத்து என்னடி சிரிப்பு.?” என்று ஒரு பெருசு கேட்க அவள் சொன்னாள் “பட்டக் கடனை என் புருஷன் அடச்சிட்டிருக்கான்..அதை நினைத்தேன் சிரித்தேன். என்னை அடித்து உதைத்தான் ..பதிலுக்கு நான் கொடுக்க வேண்டாம்....என்னால் கொடுக்கமுடியலை. அந்தக் கடனை இன்னொருத்தி வந்து அடச்சிட்டு இருக்கா. அடியும் உதையும் வாங்கிட்டு இருக்கான்.”
“அது சரி...சாமி சும்மா பார்த்திட்டு இருக்குமா? நேரம் வரும்போது பதிலடி கொடுக்கும்.”
இந்த விடுதியில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. அதை பராமரிப்பதும் அவள் வேலைதான். ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும். வாசனை மனசையே அள்ளிக் கொண்டு போகும். செம்பருத்தி பூக்கள் சிவப்பும் மஞ்சளுமாக செடியெல்லாம் நிறைத்து பச்சை இலை தெரியாமல் அழகுடன் மிளிரும். புல்வெளி பச்சைக் கம்பளம் போல் விரிந்து வரவேற்கும். மரகதத்திற்கு அவளை மிகவும் பிடிக்கும். ”முத்து...நீ எதுக்கு கஷ்டப்படறே? தோட்டத்தை கவனிக்க ஆள் போட்ரவா?”
“அதெல்லாம் வேண்டாம்மா...எனக்கு இது ஒண்ணும் கஷ்டமில்லை...செடிகளுக்குத் தண்ணி ஊத்தறேன்...அது பூக்களாய் பூத்து நன்றி சொல்லுது.”
“பலே ...நல்லா பேசறியே. விட்டா கவிதையே எழுதிடுவே போலிருக்கே.”
“நான் ஒரு எழுத்து கூட படிக்காத முட்டாள்...எனக்கு என்ன தெரியும் கவிதை பத்தி?”
மரகதம் கனிவுடன் சிரித்துவிட்டு “நீயே கவிதைதான்...” என்றாள்.
“போங்கம்மா..”.என்று சிணுங்கினாள். அப்பொழுது பரபரப்பாக வந்தான் வேலு .
“அம்மா...இறந்துபோன சந்தாம்மா சொந்தக்காரங்க வராங்க.” என்றான்.
காரிலிருந்து நாலைந்து பேர் இறங்கி வந்தனர். மரகதத்திடம் வணக்கம் தெரிவித்தனர்.
“எல்லா ஏற்படும் பண்ணி இருக்கு. பாடியை எடுக்க வந்தோம்.”
“இவங்க சாவில் ஒரு வித்தியாசம் இருக்கு.” என்று அருகில் நின்ற ஈஸ்வரி முணுமுணுத்தாள்.
அகிலாப் பாட்டிக்கு மாத்திரை கொடுக்கும் நேரம் என்று நியாபகம் வர ஓடினாள் முத்து. சாவில் என்ன வித்தியாசம்...என்று வியந்தாள் முத்து. மூச்சு நின்று விடும் அவ்வளவுதானே....இதில் என்ன அதிசயம்!
அகிலாப் பாட்டி தமாஷாகப் பேசுவார். திருநீர் அணிந்த நெற்றி. முகத்தில் என்பது வயதின் மூப்பு தெரியாது.
மாத்திரைகளை கொடுத்துவிட்டு தயங்கி நன்றாள். ”பாட்டி ஒண்ணு கேக்கலாமா ?”
“என்ன கேக்கப்போறே ? அந்த சாந்தாம்மா பத்தியா ?”
“அட ...எப்படி பாட்டி கண்டுபிடுச்சே...கில்லாடி பாட்டி .”
“கில்லாடி பாட்டி இல்லைடி...அனுபவப்பட்ட பாட்டி. நீ இருபது நான் என்பது ...மனுசங்களைப் பத்தி இது கூட தெரியாதா?”
“சரி சொல்லு ..ஈஸ்வரி கூட சொன்னாங்களே...இவங்க சாவில ஒரு வித்தியாசம் இருக்குன்னு..அது என்னது பாட்டி?”
“ம்க்கும்...அவ்வளவு லேசிலே சொல்லிடுவேனா? எனக்கு என்ன தருவே ?”
“லஞ்சமா கேக்றே....அம்மாக்கிட்டே போட்டுக் கொடுக்றேன்...”
“அடி பாவி.... வந்து ஆறு மாசம் ஆகலை...அதுக்குள்ளே அம்மாவே கணக்கு பண்ணிட்டியா? கில்லாடி நீதான்.”
“அங்கே என்ன அரட்டை...வேலையைப் பாரு முத்து...கௌரி அம்மாவுக்கு ரூம்லே தண்ணி இல்லையாம்...கொண்டு போய் கொடு...இங்க நின்னுக்கிட்டு வாயாட்ற. அதுக்குதான் சம்பளம் தரங்களா?”
என்று ஈஸ்வரியின் குரல் ஓங்கி ஒலிக்க, “மிலிட்டரி வந்திடுத்து ...அப்புறமா வா பேசலாம் .” என்றாள் அகிலாப் பாட்டி. பாட்டி தன்னை அப்படிக் கூப்பிடுவது ஈஸ்வரிக்குத் தெரியும். சிரித்துக் கொள்வாள். அந்த பயம் இருக்கட்டும் இல்ல இவங்களை சமாளிக்க முடியாது. முத்து ஓடிவிட்டாள். ஈஸ்வரியிடம் அவளுக்கு கொஞ்சம் பயம். ஈஸ்வரி நாற்பது வயது தாண்டியவள். திருநங்கை. இவள் மட்டும் அல்ல, இன்னும் சில திருநங்கைகள் இங்கு கௌரவமாக வேலை செய்து பிழைக்கிறார்கள்.
“பாட்டி இவ கிட்ட ஒண்ணு சொன்னா இந்த விடுதி பூரா சொன்ன மாதிரி...நீங்க சாந்தாம்மா பத்தி எதுவும் சொல்லாதீங்க .புரியுதுங்களா. அம்மா காதில விழுந்தா வருத்தப் படுவாங்க.”
என்று ஆடர் போட்டுவிட்டுப் போனாள் ஈஸ்வரி. அவளுக்கே அப்படி ஒன்றும் தெரியாது...ஏதோ ஓரளவு தெரியும். சில புதிர் புதிராகவே இருக்கட்டும், என்று நினைப்பவள்.
அந்த விடுதியில் ஒரு துடிப்பு இருந்தது. முணுமுணுக்கும் பாட்டிகள்...ஆலாபனை செய்யும் பாட்டிகள்...அடம் பிடிக்கும் பாட்டிகள் என்று ரகம் ரகமாக இருந்தார்கள். தொந்தரவு கொடுப்பார்கள். அவர்களே.... மரகதம் வந்து பேசிவிட்டுப் போனால் ...மெல்ல மெல்ல மனம் லேசாகி இந்த சூழலில் வாழக் கற்றுக் கொள்வர். மரகதம் ஒவ்வொரு மாதம் முதல் வெள்ளிக்கிழமை ஒரு சொற்பொழிவு நடத்துவாள். விரும்புகிறவர்கள் வந்து கேட்கலாம். அநேகமாக அனைவரும் வருவர். அகிலாப் பாட்டி “இவ என்ன லெக்சர் பண்ணறது? என்னை விட நாப்பத்தஞ்சு வயசு சின்னவ ...இவ வேதாந்தம் பேசறத நாம கேட்கணுமா?...போகாதீங்க.” என்று பிரசாரம் பண்ணினாள். “போய் தான் பார்ப்போமே என்னதான் சொல்றாங்கன்னு.” என்று போய் விட்டு வந்த சுந்தரி, கீதா, கோமதி பாட்டிகள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள். அப்படி என்னதான் சொல்றா, என்று மறைந்து இருந்து பார்த்தாள் அகிலா. “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?” என்று லெக்சர் பண்ணிக்கொண்டிருந்த மரகதம் பாட ...என்ன அம்மா தீடீர்னு பாடறாங்க என்று புரியாமல் விழித்தார்கள். “என்ன பாடறேன்னு பார்க்றேங்களா... வாலி கதை தானே சொலிட்டிருந்தேன்...மறைந்திருந்து ராமன், வாலியும் சுக்ரீவனும் சண்டை இடுவதை பார்த்தான் இல்லையா ...அதைத்தான் பாடி காண்பித்தேன், என்று பேச்சைத் தொடர்ந்தாள். அகிலாப் பாட்டி மரகதம் தன்னைக் தான் சொல்கிறாள் என்று புரிந்து கொண்டாள். அவள் காட்டிக்கொடுக்கவில்லை என்ற நெகிழ்வில் மரகதத்தை மரியாதையுடன் பார்த்தாள். மனம் லேசானது. மரகதத்தைப் பற்றிய அவள் அபிப்பிராயம் மாறியது. இங்கு வந்த இந்த பத்து வருஷத்தில் அவள் மரகதத்தின் பல நல்ல குணங்களை கண்டு கொண்டாள். அவள் மனதில் பாசம் ஊறியது. எவ்வளவு சின்னப் பெண் இவ்வளவு மன முதிர்ச்சியுடன் இருக்கிறாள் என்று பெருமைப்பட்டாள். அன்று அவளே பேச்சை ரசித்து கேட்டாள். சேரில் வந்து உட்கார்ந்து கொண்டாள். பேச்சை கேட்க கேட்க அப்படியே மரகதத்தின் ரசிகை ஆனாள். மரகதம் சொல்வாள் -
“எல்லாருக்கும், அப்பா பெத்த பாட்டி ,அம்மா பெத்த பாட்டின்னு இரண்டு பாட்டிதான் இருப்பாங்க...நான் கொடுத்து வைத்தவள், ஐம்பது பாட்டிகள் எனக்கு “
அந்த விடுதியே ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் மாதிரி இயங்கிற்று. அதற்குக் காரணம் மரகதத்தின் அன்பு.
பாட்டிகள் அனைவரும் அவளை அம்மா என்று தான் கூப்பிடுவார்கள். தொண்ணூறு வயது பாட்டிக்கும் அவள் அம்மா தான்.
காலை சிற்றுண்டி முடிந்தது. காபி பருகிக்கொண்டே பேப்பர் பார்த்துக்கு கொண்டிருந்த சந்தானத்திடம் விமலா புலம்பினாள்.
“சாந்தா மதனி இறந்த பதினாறாம் நாள் விஷேசம் நல்லா நடந்ததாம்...நமக்குதான் போக முடியலை.”
“இதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லை. அவங்க இருக்கும் போது பாடாப் படுத்திட்டு...செத்த பிறகு ஊரைக் கூட்டி நடத்தற போலி மரியாதைக்கு போகாம இருந்ததுதான் ஓட்டயாப் போச்சாக்கும் ... இவங்கல்லாம் மனுஷங்கதானா .?”
“ம்க்கும்...ரொம்ப இடுக்கிட்டு வராதீங்க. சொந்தப் பிள்ளைகளே பெத்தவங்களை எங்க கவனிக்கறாங்க.? இந்த மட்டில் கொள்ளி வச்சு பதினாறாம் நாள் காரியத்தையும் பண்ணி மொட்டை வேறு போட்டிருக்கானே சொக்கலிங்கம்...அப்புறம் என்ன?”. “அடடா...பெரிய தியாகி தான். ஆமா...அந்த விடுதி தலைவி எதுக்கு கூடவே வந்து தானும் கொள்ளி வச்சா? எனக்கு ஒண்ணும் புரியல்லை. நீ கவனிச்சியா விமலா? சொக்கலிங்கம் எப்படி விட்டான்.?”
“ஆமாங்க ...எனக்கும் ஒண்ணும் பிடிபடலை...யார் நம்மக்கிட்டே யோசனை கேக்றா...தங்கமானவங்க மதனி ...யாருமில்லாத அநாதை மாதிரி விடுதியிலிருந்து நேரே மயானம் கொண்டு போகப் பட்டாங்க.....அங்க நாலைந்துபேர் வந்து இருந்தாங்க.. எப்பேர்ப்பட்ட மனுஷிக்கு வந்த நிலைமையை பார்த்தீங்களா?”
“அந்த மரகதத்தம்மா ஒரு மாதிரியான ஆள் போல தெரியுது...நாட்டமை ஜாஸ்த்தி..தேவை இல்லாம மூக்க நுழைச்சு காரியம் பண்றா. இவ யாரு, சேர்ந்து கொள்ளி வைக்க? பொம்பளப் புள்ள எதுக்கு மயானம் வரை வந்து கொள்ளி வைக்கணும்? அங்கேயே கத்தி கலாட்டா பண்ணி இருப்பேன்.. சரி அக்கா சாவு காரியம் வில்லங்கம் இல்லாமே நடக்கட்டும்னு சும்மா இருந்தேன்.’
“யாருக்கும் பிடிக்கலைதான். சொக்கலிங்கம் அனுமதிக்கிற போது என்ன பண்ண முடியும்.?”
“சரி நடந்தது நடந்து போச்சு. அவங்க தெய்வம் மாதிரி. அவங்க ஆத்மா சாந்தி அடையட்டும்.”
அங்கு விஷால் வர பேச்சு நின்றது. “ என்ன மாநாடு போடறேங்க? சாந்தா அத்தை பத்தியா? அம்மா எனக்கு அன்று வந்த ஆத்திரத்துக்கு அந்த சொக்கலிங்கத்தை அப்படியே வெட்டிப் போட்டிடணும்னு வந்தது. யார் அந்த மரகதம் ? இவளை எதுக்கு கொள்ளி போடுவதில் பங்கு சேர்த்துக் கிட்டான்? .”
“ சொக்கலிங்கம் உன்னை விட வயசில பெரியவன் மரியாதை இல்லாமே பேசாதே. எல்லாரும் அப்ப பேசாம இருந்திட்டு இப்ப குதிச்சு என்ன புண்ணியம்.?”
“சரி விடுங்க...ஏன்டா சாப்பாடு கட்டிக் கொடுக்கவா? எலுமிச்சை சாதம் தான்.”
“வேண்டாம் தாயே ...எங்க கேண்டீன்ல இதை விட நல்லாத்தான் இருக்கும்.” என்று விட்டு ஓடிவிட்டான். கொழுப்பை பார் என்று முறைத்தாள் விமலா. சந்தானம் சிரித்தார் .இறந்த சாந்தா இவருக்கு ஒன்று விட்ட சகோதரி. நல்ல பெண்மணி இப்படி மரனத்திலும் தனிமைப் படுத்தப்பட்ட பரிதாபம் கண்டு அவர் நெஞ்சு வலித்தது. யாரைச்சொல்லி என்ன பயன் அவள் விதி அப்படி...
இரவு நேரம் முத்து மணிகண்டனுக்கு இட்டலி ஊட்டிவிட்டு தூங்க வைத்தாள். தாமரை “அம்மா...சிலேட்லே எழுத்தி இருக்கேன் பாரு.” என்றாள். முத்து அவளை முத்தமிட்டாள் “சமர்த்து” என்றாள். மரகதம் அங்கு வந்தாள். ”யாரு சமர்த்து நானா?”
“அம்மா...வாங்க வாங்க ...” எழுந்து நின்று வாயார வரவேற்றாள் முத்து. மடக்கு சேரை எடுத்துப் போட்டாள்.
சேரில் வசதியாக உட்கார்ந்துகொண்டு மரகதம் பேசினாள் .
“முத்து..சாப்டியா? புள்ளைங்க சாப்டாச்சா?”
“ஆச்சுமா...உங்க புண்ணியத்திலே நாங்க நல்லா இருக்கோம் .”
“அதிருக்கட்டும் முத்து ...அந்த உன் குடிகாரப் புருஷன் என்ன பண்றான்?”
“அம்மா...அவன் என்னை அத்து விட்டிட்டான். பெரிய இடத்திலே சிபாரிசு பிடுச்சிட்டேனாம்...அடங்கமாட்டேனாம்...அதனாலே வேறு ஒரு சிறுக்கியோட வாழ்றான் .”
“ அப்படியா? அய்யோ...என்னாலே உனக்கு இந்த...”
“ரொம்ப நல்லது தான் நடந்திருக்குமா. பெத்த புள்ளங்களை காப்பாத்த துப்பு இல்லாத ஒருத்தனுக்கு கட்டின பொண்டாட்டி மேல தானா அக்கறை வரும்.? இதை ஒரு சாக்கா வச்சு ஓடிட்டான். நிம்மதியா இருக்கேன்.”
“ஏன் முத்து உன்னைப் பார்த்தா புள்ளை பெத்தவ மாதிரி தெரியலையே.! இது உன் பிள்ளைகளா அல்லது ...”
“மூத்தாள் புள்ளங்கம்மா. என் ஆத்தா சாக கிடக்கிற சமயம் என் மவளை தனியா விட்டிட்டுப் போறேனே கோபாலு அப்படின்னு புலம்பிச்சு. நான் கட்டிக்கிறேன் அய்த்தே. எனக்குதான் பொண்டாட்டி செத்துப் போயிட்டாளே...பத்து மாசம் ஆச்சு...என் புள்ளைங்க அனாதையா இருக்கு அப்படின்னான். ஆத்தா, உன்னை நம்பி எப்படிப்பா கட்டி வைக்கறது நீ குடிகாரனாச்சேன்னு சொன்னா. அதுக்கு அவன், பொண்டாட்டி செத்த சோகம் தான் நான் குடிகாறன் ஆனேன்....முத்தைக் கட்டிக்கிட்டா நான் ஏன் குடிக்கப் போறேன் அய்த்தே? ...தங்கமா பார்த்துப்பேன்னு கையில அடிச்சு சத்தியம் பண்ணினான்...அதை அம்மா நம்ப கழுத்தை நீட்டிட்டேன் இப்ப பெத்த புள்ளைங்களை அனாதையா விட்டிட்டு ஓடிட்டான். அவளே வளர்த்துக்கட்டும் என்று வெட்டிட்டுப் போய்ட்டான்.’
“கேள்விப்பட்டேன் முத்து. உனக்கு இந்த புள்ளைங்களுக்கு அம்மாவா இந்த இருபது வயதிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது. உன்னாலே முடியுமா? ஆம்பளைத் துணை இல்லாமே?”
“இந்தப் பிஞ்சுக் குழந்தைகள் என்னையே அம்மான்னு நினச்சி அப்பிக் கொண்டதுகள். எப்படியம்மா விட்டிட்டுப் போக முடியும்?”
“அவன் கட்டின தாலியை கூட கழட்டி போட்டிட்டியாமே! ஈஸ்வரி சொன்னா..”
“ஆமாம்மா...தங்கப்பன் மாமா அன்னைக்கு வந்தார் நீங்க பார்க்கலை... அவர் தான் சொன்னாரு, புள்ள அவன் வேற பொண்ணைக் கட்டிகிட்டான்னு. கேட்டவுடன் தாலிய கழட்டி வீசிட்டேன். இந்தக் குடிகாரனோடு ரெண்டு வருசமா குப்பை கொட்டினதுக்கு காரணம் இந்தக் கொழந்தைகள் தான்மா. அவனே ஓடிட்ட பிறகு அவன் கட்டிய தாலி எதுக்கு? அதன் எறிஞ்சுட்டேன். “
அவள் கண்ணில் லேசாக நீர் துளிர்த்தது. ”கேக்கவே சங்கடமா இருக்கு..மனசு உறுத்துது. நான் இங்கு வந்து இருக்க சொன்னதாலே தானே உன் வாழ்கையே போச்சு...மனசு கேக்கலை அதான் மன்னிப்பு கேக்க வந்தேன். அவன் கிட்ட வேணா பேசி பார்க்கட்டுமா?”
முத்து பலமாக சிரித்தாள்.” அது ஒரு வாழ்க்கையாங்காட்டியும்...அது நரகம்மா. ,உங்க புண்ணியத்தில் தப்பிச்சேன்.”
“இப்படி ஸ்ட்ரிக்டா இருந்தா திருந்திருவான்னு நினைச்சேன்...அவன் இப்படி செய்வான்னு நினைக்கலையே.”
“விடுங்கம்மா...அதான் அந்தாளு தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கான். அவனை கட்டிகிட்டவ சரியான பஜாரியாம் ....பெட்டிப்பாம்பாக அடங்கிட்டானாம்.”
“நல்லதுக்கே காலமில்லைன்னு சொல்வாங்க. சரியாத்தான் இருக்கு. பூ மாதிரி இருக்கிற உன்னை மிதிச்சிட்டு சருகு மாதிரி ஒருத்தியை கட்டிக்கிட்டான் வேடிக்கைதான். முத்து தப்பா நினைக்காதே, ஒரு வேளை உன்னைக் கட்டிக்க ஒரு நல்லவன் முன்வந்தா நீ..”
“அதைப் பத்தி எல்லாம் நான் யோசிக்கலை அம்மா. ஆனா என்ன ஆனாலும்.....இந்தப் பிள்ளைகளை கைவிட மாட்டேன் “
“சந்தோசம் முத்து...அந்த சாந்தாம்மா மாதிரி பண்ணிடாதே...சரி வரட்டுமா..” மரகதம் எழுந்து போய்விட்டாள். முத்து மனம் முழுக்க கேள்வியுடன் நின்றாள்.
மறுபடியும் அந்த சாந்தாம்மா பற்றிய பேச்சு...மரகதம்மா சொன்னது என்னன்னு விளங்கலையே. சந்தாம்மா மாதிரி செய்யாதேன்னு சொல்றாங்க..அப்படி என்னதான் செய்தாங்க அந்தம்மா? யோசித்தப்படி சாப்பிட்டு உறங்கிப் போனாள் முத்து.
மறுநாள் அழகாக விடிந்தது. அங்கு இருந்த சின்னக் குளத்தின் மேல் தாமரைப் பூக்கள் மெல்ல மலர்ந்து சூரியனை வரவேற்ற காட்சி ஓவியம் போல் மிளிர்ந்தது.
முத்து அந்த அதிகாலை நேரத்திலேயே எழுந்து பெரிய கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். .ஈஸ்வரி வாசலில் நின்றிருந்த வேனிலிருந்து பழக் கூடைகள் இறங்குவதை மேற்பார்வை பார்த்தபடி நின்றிந்தாள். பாட்டிகளுக்கு தினமும் பழம் கொடுக்க வேண்டும் என்பது மரகதத்தின் கட்டளை. சமையல் அறை பக்கத்திலே இருக்கிற ஸ்டோர் ரூமில் வைக்கச்சொல்லி உத்தரவு கொடுத்து விட்டு வந்தாள் ஈஸ்வரி.
“என்ன முத்து...இவ்வளவு பெரிய கோலம் போடுறே? சின்னக் கோலம் போட்டா போதாதா? கோலப் பொடிய இப்படி வேஸ்ட் பண்ணலாமா?”
“ம்க்கும்...மாமியார் இல்லாத குறைய தீர்க்க வந்துட்டீங்களா?”
“ஆமாடி...ஓவரா செலவு ஆனா நீயா பதில் சொல்லணும்? நான்தானே சொல்லணும்?” இவர்கள் இப்படி எசலிக் கொண்டடிருந்த போது கவிதா ஓடிவந்தாள் .
“ஈஸ்வரி அக்கா...சாம்பு பாட்டிக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குது. பயமா இருக்குக்கா “
அடுத்த அரைமணியில் அந்த இடமே பரபரப்பானது. அருகிலேயே குடி இருந்த டாக்டர் உமா சந்தர் வந்தாள். நர்ஸ் நளினி உதவி செய்ய சாம்பு பாட்டி இயல்பாக மூச்சு விட்டார். “என்பது வயது ஆகிவிட்டது...நுரையிரல் பாதிக்கப் பட்டிருக்கு..மாத்திரைகள் எழுத்தித் தரேன்...சரியா கொடுத்திட்டு வாங்க..
அப்பப்ப இப்படிதான் வரும். இன்ஹலேர் உபயோகிக் பழக்கணும்” சொல்லிவிட்டு டாக்டர் விடை பெற்றாள். மரகதம் குனிந்து பாட்டியிடம் பேசினாள்.
“பாட்டிம்மா..இப்ப எப்படி இருக்கு?” பாட்டி தலை ஆட்டினார். தன் மகனைப் பார்க்கவேண்டும் என்று மெல்லிய குரலில் சொன்னார். மரகதம் உடனே அவர் மகனுக்கு போன் போட்டாள். விஷயத்தை சொன்னாள். பிறகு “பாட்டிம்மா..அவர் வெளியூர் போயிருக்காராம்..வந்ததும் வராராம்..” என்று தகவல் சொன்னாள்.
பாட்டி முகத்தில் ஏமாற்றம். “கவலைபடாதேங்க பாட்டி நாங்க எல்லாம் இருக்கோம்லே...நல்லா ரெஸ்ட் எடுங்க. மனசப் போட்டு உழப்பிக்க வேண்டாம் .உங்க மகன் வேலை வேலைன்னு அலையறார். வருவார்.
நாங்களும் உங்க புள்ளங்க மாதிரித்தான்...சரியா?” வற்புறுத்தி சிறிது கஞ்சி குடிக்க வைத்து ஆறுதல் சொல்லி..நளினியிடம் “வேளா வேளைக்கு மருந்து கொடுத்துடு..ஏதாவது சிக்கல்னா டாக்டர் கைலாஷைக் கூப்பிடு. டாக்டர் உமா டியுட்டியா தன் ஆஸ்பத்ரிக்கு போய்டுவாங்க. சரியா? உன் பொறுப்பிலே விடறேன் பத்திரம். என்று விட்டுப் போனாள் மரகதம். அவளை வியப்புடன் பார்த்தாள் முத்து. பாட்டி முகத்தில் தெளிவு வந்ததை பார்த்தாள். தேவதைகள் சிலர் பூமியில் இறங்கி
வந்து விட்டது போல் சில மனிதர்கள் கருணையை மனதிலும் கண்ணிலும் தேக்கி வைத்தபடி வருவார்களோ.! மரகதம் ஒரு தேவதை தான். இந்த இல்லத்திற்கு “பனி வீடு “ என்று வைத்திருப்பது எவ்வளவு பொருத்தம் என்று நினைத்தாள் முத்து. உருகி ஓடும் பனி போல் இங்கு அன்பும் கவனிப்பும் உருகி ஓடுகிறது. இதமான பனி குளிர்ச்சியும் வீட்டின் கதகதப்பும் உடைய கூடாரம். ”என்ன மலைச்சு நிக்கறே முத்து?. போய் வேலையப் பாரு.” என்று யாரோ சொல்ல முத்து தன் வேலையை கவனிக்கச் சென்றாள். அகிலாப் பாட்டிக்கு வெந்நீர் கொண்டு கொடுத்தபடி “ பாட்டி மரகதம்மா எவ்வளவு நல்லவங்க..சாம்பு பாட்டிக்கு எப்படி ஆறுதல் சொன்னாங்க தெரியுமா? மனித தெய்வம்.” என்று புகழ்ந்தாள் முத்து.
“சரிதான்...ஆனா அந்த சாந்தாம்மா கிட்ட மட்டும் அப்படி ஒரு கடுமையா நடந்துக்கிட்டாங்க. ஏன்னு புரியலை. சில நேரங்களில் சில மனிதர்கள்”
...என்று பாட்டி சொல்லவும் முத்து ஆவல் கொண்டாள். அந்த சாந்தம்மா பத்தி ஏதோ மர்மம் இருக்கே..என்னவாக இருக்கும்.? மரகதத்தம்மா ஏன் சாந்தாம்மா கிட்ட மட்டும் கடுமையா நடக்கணும்...பிறகு கொள்ளி போடணும்? அவங்களுக்கும் இவங்களுக்கும் என்ன உறவு ?
“முடிய பிச்சுக்காதேடி...சில விடைகளுக்கு பதில் கிடைக்காது...பதில் கிடைச்சாலும் அது அதிர்ச்சியைத் தரும்.. விடு ரிலாக்ஸ்..” என்றாள் அகிலாப் பாட்டி. அவளுக்குள் பல எண்ணங்கள் ஓடியது.
நதி ஓடும்.
ஒரு அழகான முதியோர் இல்லத்தை நடத்தும் தலைவி. அவள் ஏன் அதை நடத்துகிறாள்? அவள் அம்மாவுக்கும் அவளுக்குமான மன பேதம் என்ன? தங்கையை பிரிந்து அப்பாவை பிரிந்து அவள் வாழ்கிற வாழ்கைக்கு என்ன அர்த்தம்? அவள் யாரை சந்திக்கிறாள்? அவள் வாழ்க்கையை புரட்டிப் போடும் அவனை அவள் நெருங்க விடுகிறாளா? அப்படி ஒரு புதிர் பெண் தான் நம் கதாநாயகி. அவளை உங்களுக்கு பிடிக்கும். வாங்க அவளை நீரோட்டத்தில் சந்தியுங்கள்... நீரோட்டம்
அத்தியாயம் --1
அந்த முதியோர் இல்லத்தில் ஒரு மரணம். அது அந்த இல்லத்திற்கு புதிது இல்லை. சாவின் விளிம்பில் வாழ்க்கையை தொற்றிக்கொண்டு இருக்கும் அங்கிருந்த பலரின் கனவு தான் மரணம். எப்போ எனக்கு சாவு வரும், கனவு நிஜமாகும் என்று தவிக்கும் மனசுகள். எழுபதை தாண்டியவரும் இருந்தனர். தொண்ணுத்தாறு தொடும் வயதினரும் இருந்தனர். பலரும் விடுதலை வேண்டி காத்திருக்கும் காலம் இது. அதுவரை இது சிலருக்கு ஒருவித சிறைச்சாலை. சிலருக்கு ஓய்வு நேரம்...சிலருக்கு அமைதி கிடைத்த நேரம்...இன்னும் சிலருக்கு வேதாந்தம் பற்றி உணரும் நேரம்.
“சாந்தாம்மா போய்விட்டாள். மகராசி...இனி எனக்கு எப்பவோ ?” என்று பிரலாபித்தாள் பார்வதியம்மா.
“பாட்டி சாவை ஏன் இவ்ளோ அவசரப்பட்டு வெத்தலைப் பாக்கு வச்சு அழைக்றேங்க? அது வரும் போது வரும். ஜாலியா இருங்க.”என்றாள் முத்து.
“அடி செருப்பாலே... ஏன் சொல்லமாட்டே?...தளுக்கி மினுக்கற வயசு உனக்கு..நாங்க சருகுடி...”
“பொறாமையா இருக்கா.?”
“நான் ஏண்டி பொறாமைப்படணும்? நான் என்ன அந்த சாந்தாம்மா மாதிரி கொடுத்து வைக்காதவளா?...அழகு போலே மகன் இருக்கான் கொள்ளி போட.”
முத்தம்மா பெருக்கி முடித்துவிட்டாள். “மணி எட்டாகுது சாப்பிட ஹாலுக்கு வாங்க பாட்டி.” என்று அன்புடன் கூறிவிட்டுச் சென்றாள்.
முத்தம்மா இங்கு வேலைக்கு வந்த பிறகு நிம்மதியாக இருக்கிறாள். இங்கு வந்து சேர்ந்த புதிதில் அவள் கணவன் கோபாலு குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்தான். “ஏய்...முண்டச்சி..இந்த மாதம் சம்பளம் வாங்கி இருப்பே இல்லே....மரியாதையா கொடு..இல்ல நொறுக்கிப் போடுவேன் ..” இவன் எப்பொழுதும் இப்படித்தான்....அவள் வேலை பார்க்கும் வீடுகளில் மாதம் பிறந்ததும் குடித்துவிட்டு வந்து காலாட்டா பண்ணி காசை வாங்கிக்கொண்டு போய்விடுவான். சம்பளத்தில் பாதிய கொடு போதும்....நான் நாணயஸ்தன் என்று பெருமை பீற்றுவான்..இவனிடம் கொடுக்கமுடியாது என்று அவள் வாதாடினால்...முண்டச்சிக்கு அவ்வளவு திமிரா என்று முடியை பிடித்து இழுப்பான்.. கன்னத்தில் அறைவான்...அநியாயமாக அவள் நடத்தையைப் பற்றி அசிங்கமாகப் பேசுவான்..அவள் வைத்துக் கொண்டிருக்கும் காதலர்களுக்குப் போகிறதா காசு என்று கேட்பான். இவன் கலாட்டா தாங்காமல் கொடுத்துவிடுவாள். வீட்டுத் தலைவி முகம் சுளிப்பாள். அடுத்த மாதமும் இதே கதை தான்.....இரெண்டாம் மாதமே அவளை வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். குழந்தைகள் பசியோடு இருப்பதைப் பார்க்க தாங்கமுடியாத வலி வரும். ஒன்றரை வயது பையன் மணிகண்டன் ...மூன்று வயது பெண்குழந்தை தாமரை...பசியில் வாடும் முகங்கள். ”நீயெல்லாம் ஒரு அப்பனா...” என்று அவள் சொல்லி, அவன் அடித்ததில் இடது பக்க இடுப்பு எலும்பு முறிந்து விட்டது. நல்ல வேலை சரியாகிவிட்டது. அது கடவுள் புண்ணியம்.
“பிள்ளைகள் பசியோடு இருக்காங்க...நீ பெத்த பிள்ளைதானே...இப்படி காசைப் புடுங்கினா என்ன பண்ணுவேன்?”
“மைன்ட் இட்...பாதி காசுதானே தாரே...மீதியை வைத்துக் கொண்டு குடித்தனம் பண்ண முடியாது? எவன் கிட்டடி கொடுக்கறே? என் புள்ளைகளை பட்டினி போடறே.?” அதற்கும் இரண்டு அடி சேர்த்து கிடைக்கும். மீனாட்சியம்மா புண்ணியத்தில் இந்த வேலை கிடைத்தது. வேலையில் சேர்ந்து அவள் சம்பளம் வாங்கிய முதல் நாளே மூக்கில் வேர்த்து வந்துவிட்டான் கோபாலு .”எடு எடு...நேரமாவுது காமான் குவிக்...” என்று கலெக்டர் உத்தியோகம் பார்க்கும் ஆள் போல் பந்தாவுடன் கேட்டான். அவள் இங்கும் வேலை போய்விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் பாதி சம்பளத்தைக் கொடுத்தாள். “நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு இங்கலிசு வேறயா?” என்று திட்டினாள்.
“ஏய்...என்னடி முண்டச்சி...ரெண்டாயிரம் தாரே..இங்கு உனக்கு சம்பளம் சாஸ்தி...மரியாதையா இன்னும் ஆயிரம் கொடு ..”
“முடியாதுய்யா...தாமரையை பள்ளியில சேர்க்கணும்.. சீருடை வாங்கணும்...” என்றாள்
“அய்...அப்பனாகிய எனக்கு இல்லாத அக்கறை உனக்கு வந்திடுச்சா? எவன் கிட்ட கொடுக்றதுக்கு பதுக்கி வைக்கிறே ? ராஸ்கோல் ...” அடி உதை குத்து, முத்தம்மா கன்னத்தில் வீக்கம்...நெற்றியில் ரத்தம்...அவள் ஓவென்று அழ...அங்கே மரகதம் வந்தாள். விடுதி தலைவி. ஒல்லியான களையான முகம். முப்பத்திரண்டு வயது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. வயதிற்கு மீறிய முதிர்ச்சியான பக்குவம் உடையவள்.
“என்ன கலாட்டா இங்கே ?”
“ஒண்ணுமில்லேம்மா..” முத்தம்மா மழுப்பப் பார்த்தாள்... இந்த வேலையும் போய்விட்டால்.!
“புரியுது...குடித்துவிட்டு வந்திருக்கியாடா...இனிமே இங்கே வந்து கலாட்டா பண்ணினே போலீசைக் கூப்பிடுவேன்..நீ இப்போ வாங்கின காசை திருப்பி முத்தம்மா கிட்ட கொடுத்திட்டு ஓடிப் போயிடு.” கடுமையாக தலைவி எச்சரிக்க கோபாலு மந்திரத்திற்கு கட்டுப் பட்டது போல் பணத்தை கொடுத்துவிட்டு கீழ் குரலில்....“வருவேல்ல..வச்சுக்கிறேன் ...” என்றபடி போனான். தலைவி அவளை வீட்டுக்குப் போக விடவில்லை .விடுதிக்குப் பக்கத்தில் உள்ள சிறிய அவுட் ஹவுசை அவளுக்குக் கொடுத்து “வசதியா இருக்கா? புள்ளைங்களை அழச்சிட்டு வந்து இங்கேயே இரு” என்று சொல்லிவிட முத்தம்மா நன்றிபெருக்கில் கண்ணில் நீர் மல்க மரகதம் காலில் விழுந்தாள். அது முதல் அவள் வாழ்கையில் வசந்தம் வந்தது. கோபாலு வேறு யாரோ ஒரு பெண்ணுடன் தொடுப்பு வைத்துக் கொண்டு இருப்பதாகக் கேள்வி. அவள் அவனை அடக்கி ஆள்வதாகப் பேச்சு..
“ஏய் ...முத்து என்னடி சிரிப்பு.?” என்று ஒரு பெருசு கேட்க அவள் சொன்னாள் “பட்டக் கடனை என் புருஷன் அடச்சிட்டிருக்கான்..அதை நினைத்தேன் சிரித்தேன். என்னை அடித்து உதைத்தான் ..பதிலுக்கு நான் கொடுக்க வேண்டாம்....என்னால் கொடுக்கமுடியலை. அந்தக் கடனை இன்னொருத்தி வந்து அடச்சிட்டு இருக்கா. அடியும் உதையும் வாங்கிட்டு இருக்கான்.”
“அது சரி...சாமி சும்மா பார்த்திட்டு இருக்குமா? நேரம் வரும்போது பதிலடி கொடுக்கும்.”
இந்த விடுதியில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. அதை பராமரிப்பதும் அவள் வேலைதான். ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும். வாசனை மனசையே அள்ளிக் கொண்டு போகும். செம்பருத்தி பூக்கள் சிவப்பும் மஞ்சளுமாக செடியெல்லாம் நிறைத்து பச்சை இலை தெரியாமல் அழகுடன் மிளிரும். புல்வெளி பச்சைக் கம்பளம் போல் விரிந்து வரவேற்கும். மரகதத்திற்கு அவளை மிகவும் பிடிக்கும். ”முத்து...நீ எதுக்கு கஷ்டப்படறே? தோட்டத்தை கவனிக்க ஆள் போட்ரவா?”
“அதெல்லாம் வேண்டாம்மா...எனக்கு இது ஒண்ணும் கஷ்டமில்லை...செடிகளுக்குத் தண்ணி ஊத்தறேன்...அது பூக்களாய் பூத்து நன்றி சொல்லுது.”
“பலே ...நல்லா பேசறியே. விட்டா கவிதையே எழுதிடுவே போலிருக்கே.”
“நான் ஒரு எழுத்து கூட படிக்காத முட்டாள்...எனக்கு என்ன தெரியும் கவிதை பத்தி?”
மரகதம் கனிவுடன் சிரித்துவிட்டு “நீயே கவிதைதான்...” என்றாள்.
“போங்கம்மா..”.என்று சிணுங்கினாள். அப்பொழுது பரபரப்பாக வந்தான் வேலு .
“அம்மா...இறந்துபோன சந்தாம்மா சொந்தக்காரங்க வராங்க.” என்றான்.
காரிலிருந்து நாலைந்து பேர் இறங்கி வந்தனர். மரகதத்திடம் வணக்கம் தெரிவித்தனர்.
“எல்லா ஏற்படும் பண்ணி இருக்கு. பாடியை எடுக்க வந்தோம்.”
“இவங்க சாவில் ஒரு வித்தியாசம் இருக்கு.” என்று அருகில் நின்ற ஈஸ்வரி முணுமுணுத்தாள்.
அகிலாப் பாட்டிக்கு மாத்திரை கொடுக்கும் நேரம் என்று நியாபகம் வர ஓடினாள் முத்து. சாவில் என்ன வித்தியாசம்...என்று வியந்தாள் முத்து. மூச்சு நின்று விடும் அவ்வளவுதானே....இதில் என்ன அதிசயம்!
அகிலாப் பாட்டி தமாஷாகப் பேசுவார். திருநீர் அணிந்த நெற்றி. முகத்தில் என்பது வயதின் மூப்பு தெரியாது.
மாத்திரைகளை கொடுத்துவிட்டு தயங்கி நன்றாள். ”பாட்டி ஒண்ணு கேக்கலாமா ?”
“என்ன கேக்கப்போறே ? அந்த சாந்தாம்மா பத்தியா ?”
“அட ...எப்படி பாட்டி கண்டுபிடுச்சே...கில்லாடி பாட்டி .”
“கில்லாடி பாட்டி இல்லைடி...அனுபவப்பட்ட பாட்டி. நீ இருபது நான் என்பது ...மனுசங்களைப் பத்தி இது கூட தெரியாதா?”
“சரி சொல்லு ..ஈஸ்வரி கூட சொன்னாங்களே...இவங்க சாவில ஒரு வித்தியாசம் இருக்குன்னு..அது என்னது பாட்டி?”
“ம்க்கும்...அவ்வளவு லேசிலே சொல்லிடுவேனா? எனக்கு என்ன தருவே ?”
“லஞ்சமா கேக்றே....அம்மாக்கிட்டே போட்டுக் கொடுக்றேன்...”
“அடி பாவி.... வந்து ஆறு மாசம் ஆகலை...அதுக்குள்ளே அம்மாவே கணக்கு பண்ணிட்டியா? கில்லாடி நீதான்.”
“அங்கே என்ன அரட்டை...வேலையைப் பாரு முத்து...கௌரி அம்மாவுக்கு ரூம்லே தண்ணி இல்லையாம்...கொண்டு போய் கொடு...இங்க நின்னுக்கிட்டு வாயாட்ற. அதுக்குதான் சம்பளம் தரங்களா?”
என்று ஈஸ்வரியின் குரல் ஓங்கி ஒலிக்க, “மிலிட்டரி வந்திடுத்து ...அப்புறமா வா பேசலாம் .” என்றாள் அகிலாப் பாட்டி. பாட்டி தன்னை அப்படிக் கூப்பிடுவது ஈஸ்வரிக்குத் தெரியும். சிரித்துக் கொள்வாள். அந்த பயம் இருக்கட்டும் இல்ல இவங்களை சமாளிக்க முடியாது. முத்து ஓடிவிட்டாள். ஈஸ்வரியிடம் அவளுக்கு கொஞ்சம் பயம். ஈஸ்வரி நாற்பது வயது தாண்டியவள். திருநங்கை. இவள் மட்டும் அல்ல, இன்னும் சில திருநங்கைகள் இங்கு கௌரவமாக வேலை செய்து பிழைக்கிறார்கள்.
“பாட்டி இவ கிட்ட ஒண்ணு சொன்னா இந்த விடுதி பூரா சொன்ன மாதிரி...நீங்க சாந்தாம்மா பத்தி எதுவும் சொல்லாதீங்க .புரியுதுங்களா. அம்மா காதில விழுந்தா வருத்தப் படுவாங்க.”
என்று ஆடர் போட்டுவிட்டுப் போனாள் ஈஸ்வரி. அவளுக்கே அப்படி ஒன்றும் தெரியாது...ஏதோ ஓரளவு தெரியும். சில புதிர் புதிராகவே இருக்கட்டும், என்று நினைப்பவள்.
அந்த விடுதியில் ஒரு துடிப்பு இருந்தது. முணுமுணுக்கும் பாட்டிகள்...ஆலாபனை செய்யும் பாட்டிகள்...அடம் பிடிக்கும் பாட்டிகள் என்று ரகம் ரகமாக இருந்தார்கள். தொந்தரவு கொடுப்பார்கள். அவர்களே.... மரகதம் வந்து பேசிவிட்டுப் போனால் ...மெல்ல மெல்ல மனம் லேசாகி இந்த சூழலில் வாழக் கற்றுக் கொள்வர். மரகதம் ஒவ்வொரு மாதம் முதல் வெள்ளிக்கிழமை ஒரு சொற்பொழிவு நடத்துவாள். விரும்புகிறவர்கள் வந்து கேட்கலாம். அநேகமாக அனைவரும் வருவர். அகிலாப் பாட்டி “இவ என்ன லெக்சர் பண்ணறது? என்னை விட நாப்பத்தஞ்சு வயசு சின்னவ ...இவ வேதாந்தம் பேசறத நாம கேட்கணுமா?...போகாதீங்க.” என்று பிரசாரம் பண்ணினாள். “போய் தான் பார்ப்போமே என்னதான் சொல்றாங்கன்னு.” என்று போய் விட்டு வந்த சுந்தரி, கீதா, கோமதி பாட்டிகள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள். அப்படி என்னதான் சொல்றா, என்று மறைந்து இருந்து பார்த்தாள் அகிலா. “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?” என்று லெக்சர் பண்ணிக்கொண்டிருந்த மரகதம் பாட ...என்ன அம்மா தீடீர்னு பாடறாங்க என்று புரியாமல் விழித்தார்கள். “என்ன பாடறேன்னு பார்க்றேங்களா... வாலி கதை தானே சொலிட்டிருந்தேன்...மறைந்திருந்து ராமன், வாலியும் சுக்ரீவனும் சண்டை இடுவதை பார்த்தான் இல்லையா ...அதைத்தான் பாடி காண்பித்தேன், என்று பேச்சைத் தொடர்ந்தாள். அகிலாப் பாட்டி மரகதம் தன்னைக் தான் சொல்கிறாள் என்று புரிந்து கொண்டாள். அவள் காட்டிக்கொடுக்கவில்லை என்ற நெகிழ்வில் மரகதத்தை மரியாதையுடன் பார்த்தாள். மனம் லேசானது. மரகதத்தைப் பற்றிய அவள் அபிப்பிராயம் மாறியது. இங்கு வந்த இந்த பத்து வருஷத்தில் அவள் மரகதத்தின் பல நல்ல குணங்களை கண்டு கொண்டாள். அவள் மனதில் பாசம் ஊறியது. எவ்வளவு சின்னப் பெண் இவ்வளவு மன முதிர்ச்சியுடன் இருக்கிறாள் என்று பெருமைப்பட்டாள். அன்று அவளே பேச்சை ரசித்து கேட்டாள். சேரில் வந்து உட்கார்ந்து கொண்டாள். பேச்சை கேட்க கேட்க அப்படியே மரகதத்தின் ரசிகை ஆனாள். மரகதம் சொல்வாள் -
“எல்லாருக்கும், அப்பா பெத்த பாட்டி ,அம்மா பெத்த பாட்டின்னு இரண்டு பாட்டிதான் இருப்பாங்க...நான் கொடுத்து வைத்தவள், ஐம்பது பாட்டிகள் எனக்கு “
அந்த விடுதியே ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் மாதிரி இயங்கிற்று. அதற்குக் காரணம் மரகதத்தின் அன்பு.
பாட்டிகள் அனைவரும் அவளை அம்மா என்று தான் கூப்பிடுவார்கள். தொண்ணூறு வயது பாட்டிக்கும் அவள் அம்மா தான்.
காலை சிற்றுண்டி முடிந்தது. காபி பருகிக்கொண்டே பேப்பர் பார்த்துக்கு கொண்டிருந்த சந்தானத்திடம் விமலா புலம்பினாள்.
“சாந்தா மதனி இறந்த பதினாறாம் நாள் விஷேசம் நல்லா நடந்ததாம்...நமக்குதான் போக முடியலை.”
“இதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லை. அவங்க இருக்கும் போது பாடாப் படுத்திட்டு...செத்த பிறகு ஊரைக் கூட்டி நடத்தற போலி மரியாதைக்கு போகாம இருந்ததுதான் ஓட்டயாப் போச்சாக்கும் ... இவங்கல்லாம் மனுஷங்கதானா .?”
“ம்க்கும்...ரொம்ப இடுக்கிட்டு வராதீங்க. சொந்தப் பிள்ளைகளே பெத்தவங்களை எங்க கவனிக்கறாங்க.? இந்த மட்டில் கொள்ளி வச்சு பதினாறாம் நாள் காரியத்தையும் பண்ணி மொட்டை வேறு போட்டிருக்கானே சொக்கலிங்கம்...அப்புறம் என்ன?”. “அடடா...பெரிய தியாகி தான். ஆமா...அந்த விடுதி தலைவி எதுக்கு கூடவே வந்து தானும் கொள்ளி வச்சா? எனக்கு ஒண்ணும் புரியல்லை. நீ கவனிச்சியா விமலா? சொக்கலிங்கம் எப்படி விட்டான்.?”
“ஆமாங்க ...எனக்கும் ஒண்ணும் பிடிபடலை...யார் நம்மக்கிட்டே யோசனை கேக்றா...தங்கமானவங்க மதனி ...யாருமில்லாத அநாதை மாதிரி விடுதியிலிருந்து நேரே மயானம் கொண்டு போகப் பட்டாங்க.....அங்க நாலைந்துபேர் வந்து இருந்தாங்க.. எப்பேர்ப்பட்ட மனுஷிக்கு வந்த நிலைமையை பார்த்தீங்களா?”
“அந்த மரகதத்தம்மா ஒரு மாதிரியான ஆள் போல தெரியுது...நாட்டமை ஜாஸ்த்தி..தேவை இல்லாம மூக்க நுழைச்சு காரியம் பண்றா. இவ யாரு, சேர்ந்து கொள்ளி வைக்க? பொம்பளப் புள்ள எதுக்கு மயானம் வரை வந்து கொள்ளி வைக்கணும்? அங்கேயே கத்தி கலாட்டா பண்ணி இருப்பேன்.. சரி அக்கா சாவு காரியம் வில்லங்கம் இல்லாமே நடக்கட்டும்னு சும்மா இருந்தேன்.’
“யாருக்கும் பிடிக்கலைதான். சொக்கலிங்கம் அனுமதிக்கிற போது என்ன பண்ண முடியும்.?”
“சரி நடந்தது நடந்து போச்சு. அவங்க தெய்வம் மாதிரி. அவங்க ஆத்மா சாந்தி அடையட்டும்.”
அங்கு விஷால் வர பேச்சு நின்றது. “ என்ன மாநாடு போடறேங்க? சாந்தா அத்தை பத்தியா? அம்மா எனக்கு அன்று வந்த ஆத்திரத்துக்கு அந்த சொக்கலிங்கத்தை அப்படியே வெட்டிப் போட்டிடணும்னு வந்தது. யார் அந்த மரகதம் ? இவளை எதுக்கு கொள்ளி போடுவதில் பங்கு சேர்த்துக் கிட்டான்? .”
“ சொக்கலிங்கம் உன்னை விட வயசில பெரியவன் மரியாதை இல்லாமே பேசாதே. எல்லாரும் அப்ப பேசாம இருந்திட்டு இப்ப குதிச்சு என்ன புண்ணியம்.?”
“சரி விடுங்க...ஏன்டா சாப்பாடு கட்டிக் கொடுக்கவா? எலுமிச்சை சாதம் தான்.”
“வேண்டாம் தாயே ...எங்க கேண்டீன்ல இதை விட நல்லாத்தான் இருக்கும்.” என்று விட்டு ஓடிவிட்டான். கொழுப்பை பார் என்று முறைத்தாள் விமலா. சந்தானம் சிரித்தார் .இறந்த சாந்தா இவருக்கு ஒன்று விட்ட சகோதரி. நல்ல பெண்மணி இப்படி மரனத்திலும் தனிமைப் படுத்தப்பட்ட பரிதாபம் கண்டு அவர் நெஞ்சு வலித்தது. யாரைச்சொல்லி என்ன பயன் அவள் விதி அப்படி...
இரவு நேரம் முத்து மணிகண்டனுக்கு இட்டலி ஊட்டிவிட்டு தூங்க வைத்தாள். தாமரை “அம்மா...சிலேட்லே எழுத்தி இருக்கேன் பாரு.” என்றாள். முத்து அவளை முத்தமிட்டாள் “சமர்த்து” என்றாள். மரகதம் அங்கு வந்தாள். ”யாரு சமர்த்து நானா?”
“அம்மா...வாங்க வாங்க ...” எழுந்து நின்று வாயார வரவேற்றாள் முத்து. மடக்கு சேரை எடுத்துப் போட்டாள்.
சேரில் வசதியாக உட்கார்ந்துகொண்டு மரகதம் பேசினாள் .
“முத்து..சாப்டியா? புள்ளைங்க சாப்டாச்சா?”
“ஆச்சுமா...உங்க புண்ணியத்திலே நாங்க நல்லா இருக்கோம் .”
“அதிருக்கட்டும் முத்து ...அந்த உன் குடிகாரப் புருஷன் என்ன பண்றான்?”
“அம்மா...அவன் என்னை அத்து விட்டிட்டான். பெரிய இடத்திலே சிபாரிசு பிடுச்சிட்டேனாம்...அடங்கமாட்டேனாம்...அதனாலே வேறு ஒரு சிறுக்கியோட வாழ்றான் .”
“ அப்படியா? அய்யோ...என்னாலே உனக்கு இந்த...”
“ரொம்ப நல்லது தான் நடந்திருக்குமா. பெத்த புள்ளங்களை காப்பாத்த துப்பு இல்லாத ஒருத்தனுக்கு கட்டின பொண்டாட்டி மேல தானா அக்கறை வரும்.? இதை ஒரு சாக்கா வச்சு ஓடிட்டான். நிம்மதியா இருக்கேன்.”
“ஏன் முத்து உன்னைப் பார்த்தா புள்ளை பெத்தவ மாதிரி தெரியலையே.! இது உன் பிள்ளைகளா அல்லது ...”
“மூத்தாள் புள்ளங்கம்மா. என் ஆத்தா சாக கிடக்கிற சமயம் என் மவளை தனியா விட்டிட்டுப் போறேனே கோபாலு அப்படின்னு புலம்பிச்சு. நான் கட்டிக்கிறேன் அய்த்தே. எனக்குதான் பொண்டாட்டி செத்துப் போயிட்டாளே...பத்து மாசம் ஆச்சு...என் புள்ளைங்க அனாதையா இருக்கு அப்படின்னான். ஆத்தா, உன்னை நம்பி எப்படிப்பா கட்டி வைக்கறது நீ குடிகாரனாச்சேன்னு சொன்னா. அதுக்கு அவன், பொண்டாட்டி செத்த சோகம் தான் நான் குடிகாறன் ஆனேன்....முத்தைக் கட்டிக்கிட்டா நான் ஏன் குடிக்கப் போறேன் அய்த்தே? ...தங்கமா பார்த்துப்பேன்னு கையில அடிச்சு சத்தியம் பண்ணினான்...அதை அம்மா நம்ப கழுத்தை நீட்டிட்டேன் இப்ப பெத்த புள்ளைங்களை அனாதையா விட்டிட்டு ஓடிட்டான். அவளே வளர்த்துக்கட்டும் என்று வெட்டிட்டுப் போய்ட்டான்.’
“கேள்விப்பட்டேன் முத்து. உனக்கு இந்த புள்ளைங்களுக்கு அம்மாவா இந்த இருபது வயதிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது. உன்னாலே முடியுமா? ஆம்பளைத் துணை இல்லாமே?”
“இந்தப் பிஞ்சுக் குழந்தைகள் என்னையே அம்மான்னு நினச்சி அப்பிக் கொண்டதுகள். எப்படியம்மா விட்டிட்டுப் போக முடியும்?”
“அவன் கட்டின தாலியை கூட கழட்டி போட்டிட்டியாமே! ஈஸ்வரி சொன்னா..”
“ஆமாம்மா...தங்கப்பன் மாமா அன்னைக்கு வந்தார் நீங்க பார்க்கலை... அவர் தான் சொன்னாரு, புள்ள அவன் வேற பொண்ணைக் கட்டிகிட்டான்னு. கேட்டவுடன் தாலிய கழட்டி வீசிட்டேன். இந்தக் குடிகாரனோடு ரெண்டு வருசமா குப்பை கொட்டினதுக்கு காரணம் இந்தக் கொழந்தைகள் தான்மா. அவனே ஓடிட்ட பிறகு அவன் கட்டிய தாலி எதுக்கு? அதன் எறிஞ்சுட்டேன். “
அவள் கண்ணில் லேசாக நீர் துளிர்த்தது. ”கேக்கவே சங்கடமா இருக்கு..மனசு உறுத்துது. நான் இங்கு வந்து இருக்க சொன்னதாலே தானே உன் வாழ்கையே போச்சு...மனசு கேக்கலை அதான் மன்னிப்பு கேக்க வந்தேன். அவன் கிட்ட வேணா பேசி பார்க்கட்டுமா?”
முத்து பலமாக சிரித்தாள்.” அது ஒரு வாழ்க்கையாங்காட்டியும்...அது நரகம்மா. ,உங்க புண்ணியத்தில் தப்பிச்சேன்.”
“இப்படி ஸ்ட்ரிக்டா இருந்தா திருந்திருவான்னு நினைச்சேன்...அவன் இப்படி செய்வான்னு நினைக்கலையே.”
“விடுங்கம்மா...அதான் அந்தாளு தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கான். அவனை கட்டிகிட்டவ சரியான பஜாரியாம் ....பெட்டிப்பாம்பாக அடங்கிட்டானாம்.”
“நல்லதுக்கே காலமில்லைன்னு சொல்வாங்க. சரியாத்தான் இருக்கு. பூ மாதிரி இருக்கிற உன்னை மிதிச்சிட்டு சருகு மாதிரி ஒருத்தியை கட்டிக்கிட்டான் வேடிக்கைதான். முத்து தப்பா நினைக்காதே, ஒரு வேளை உன்னைக் கட்டிக்க ஒரு நல்லவன் முன்வந்தா நீ..”
“அதைப் பத்தி எல்லாம் நான் யோசிக்கலை அம்மா. ஆனா என்ன ஆனாலும்.....இந்தப் பிள்ளைகளை கைவிட மாட்டேன் “
“சந்தோசம் முத்து...அந்த சாந்தாம்மா மாதிரி பண்ணிடாதே...சரி வரட்டுமா..” மரகதம் எழுந்து போய்விட்டாள். முத்து மனம் முழுக்க கேள்வியுடன் நின்றாள்.
மறுபடியும் அந்த சாந்தாம்மா பற்றிய பேச்சு...மரகதம்மா சொன்னது என்னன்னு விளங்கலையே. சந்தாம்மா மாதிரி செய்யாதேன்னு சொல்றாங்க..அப்படி என்னதான் செய்தாங்க அந்தம்மா? யோசித்தப்படி சாப்பிட்டு உறங்கிப் போனாள் முத்து.
மறுநாள் அழகாக விடிந்தது. அங்கு இருந்த சின்னக் குளத்தின் மேல் தாமரைப் பூக்கள் மெல்ல மலர்ந்து சூரியனை வரவேற்ற காட்சி ஓவியம் போல் மிளிர்ந்தது.
முத்து அந்த அதிகாலை நேரத்திலேயே எழுந்து பெரிய கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். .ஈஸ்வரி வாசலில் நின்றிருந்த வேனிலிருந்து பழக் கூடைகள் இறங்குவதை மேற்பார்வை பார்த்தபடி நின்றிந்தாள். பாட்டிகளுக்கு தினமும் பழம் கொடுக்க வேண்டும் என்பது மரகதத்தின் கட்டளை. சமையல் அறை பக்கத்திலே இருக்கிற ஸ்டோர் ரூமில் வைக்கச்சொல்லி உத்தரவு கொடுத்து விட்டு வந்தாள் ஈஸ்வரி.
“என்ன முத்து...இவ்வளவு பெரிய கோலம் போடுறே? சின்னக் கோலம் போட்டா போதாதா? கோலப் பொடிய இப்படி வேஸ்ட் பண்ணலாமா?”
“ம்க்கும்...மாமியார் இல்லாத குறைய தீர்க்க வந்துட்டீங்களா?”
“ஆமாடி...ஓவரா செலவு ஆனா நீயா பதில் சொல்லணும்? நான்தானே சொல்லணும்?” இவர்கள் இப்படி எசலிக் கொண்டடிருந்த போது கவிதா ஓடிவந்தாள் .
“ஈஸ்வரி அக்கா...சாம்பு பாட்டிக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குது. பயமா இருக்குக்கா “
அடுத்த அரைமணியில் அந்த இடமே பரபரப்பானது. அருகிலேயே குடி இருந்த டாக்டர் உமா சந்தர் வந்தாள். நர்ஸ் நளினி உதவி செய்ய சாம்பு பாட்டி இயல்பாக மூச்சு விட்டார். “என்பது வயது ஆகிவிட்டது...நுரையிரல் பாதிக்கப் பட்டிருக்கு..மாத்திரைகள் எழுத்தித் தரேன்...சரியா கொடுத்திட்டு வாங்க..
அப்பப்ப இப்படிதான் வரும். இன்ஹலேர் உபயோகிக் பழக்கணும்” சொல்லிவிட்டு டாக்டர் விடை பெற்றாள். மரகதம் குனிந்து பாட்டியிடம் பேசினாள்.
“பாட்டிம்மா..இப்ப எப்படி இருக்கு?” பாட்டி தலை ஆட்டினார். தன் மகனைப் பார்க்கவேண்டும் என்று மெல்லிய குரலில் சொன்னார். மரகதம் உடனே அவர் மகனுக்கு போன் போட்டாள். விஷயத்தை சொன்னாள். பிறகு “பாட்டிம்மா..அவர் வெளியூர் போயிருக்காராம்..வந்ததும் வராராம்..” என்று தகவல் சொன்னாள்.
பாட்டி முகத்தில் ஏமாற்றம். “கவலைபடாதேங்க பாட்டி நாங்க எல்லாம் இருக்கோம்லே...நல்லா ரெஸ்ட் எடுங்க. மனசப் போட்டு உழப்பிக்க வேண்டாம் .உங்க மகன் வேலை வேலைன்னு அலையறார். வருவார்.
நாங்களும் உங்க புள்ளங்க மாதிரித்தான்...சரியா?” வற்புறுத்தி சிறிது கஞ்சி குடிக்க வைத்து ஆறுதல் சொல்லி..நளினியிடம் “வேளா வேளைக்கு மருந்து கொடுத்துடு..ஏதாவது சிக்கல்னா டாக்டர் கைலாஷைக் கூப்பிடு. டாக்டர் உமா டியுட்டியா தன் ஆஸ்பத்ரிக்கு போய்டுவாங்க. சரியா? உன் பொறுப்பிலே விடறேன் பத்திரம். என்று விட்டுப் போனாள் மரகதம். அவளை வியப்புடன் பார்த்தாள் முத்து. பாட்டி முகத்தில் தெளிவு வந்ததை பார்த்தாள். தேவதைகள் சிலர் பூமியில் இறங்கி
வந்து விட்டது போல் சில மனிதர்கள் கருணையை மனதிலும் கண்ணிலும் தேக்கி வைத்தபடி வருவார்களோ.! மரகதம் ஒரு தேவதை தான். இந்த இல்லத்திற்கு “பனி வீடு “ என்று வைத்திருப்பது எவ்வளவு பொருத்தம் என்று நினைத்தாள் முத்து. உருகி ஓடும் பனி போல் இங்கு அன்பும் கவனிப்பும் உருகி ஓடுகிறது. இதமான பனி குளிர்ச்சியும் வீட்டின் கதகதப்பும் உடைய கூடாரம். ”என்ன மலைச்சு நிக்கறே முத்து?. போய் வேலையப் பாரு.” என்று யாரோ சொல்ல முத்து தன் வேலையை கவனிக்கச் சென்றாள். அகிலாப் பாட்டிக்கு வெந்நீர் கொண்டு கொடுத்தபடி “ பாட்டி மரகதம்மா எவ்வளவு நல்லவங்க..சாம்பு பாட்டிக்கு எப்படி ஆறுதல் சொன்னாங்க தெரியுமா? மனித தெய்வம்.” என்று புகழ்ந்தாள் முத்து.
“சரிதான்...ஆனா அந்த சாந்தாம்மா கிட்ட மட்டும் அப்படி ஒரு கடுமையா நடந்துக்கிட்டாங்க. ஏன்னு புரியலை. சில நேரங்களில் சில மனிதர்கள்”
...என்று பாட்டி சொல்லவும் முத்து ஆவல் கொண்டாள். அந்த சாந்தம்மா பத்தி ஏதோ மர்மம் இருக்கே..என்னவாக இருக்கும்.? மரகதத்தம்மா ஏன் சாந்தாம்மா கிட்ட மட்டும் கடுமையா நடக்கணும்...பிறகு கொள்ளி போடணும்? அவங்களுக்கும் இவங்களுக்கும் என்ன உறவு ?
“முடிய பிச்சுக்காதேடி...சில விடைகளுக்கு பதில் கிடைக்காது...பதில் கிடைச்சாலும் அது அதிர்ச்சியைத் தரும்.. விடு ரிலாக்ஸ்..” என்றாள் அகிலாப் பாட்டி. அவளுக்குள் பல எண்ணங்கள் ஓடியது.
நதி ஓடும்.