உன்னுள் உறைந்தேனே பிரியசகி 7
இருந்து இருந்து உமா காத்திருந்த அந்த பௌர்ணமி தினமும் வந்தே விட்டது. ஆனாலும் இன்று வரை சத்யன் கூறிய படி, அவளின் காட்சிகளும் நிற்கவில்லை, அந்த காட்சிகள் கூற வரும் அர்த்தத்தையும் அவளால் முழுதாக புரிந்து கொள்ள முடியவில்லை.
சத்யனிடம் இதை பற்றி கேட்டால், பௌர்ணமி வரை அமைதி காக்கவே சொல்கிறானே தவிர, அவன் பதிலில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை.
இதற்கிடையில் உமா, முகுந்தன் திருமணம் பற்றிய பேச்சுக்கள் தான் அடிக்கடி எழ துவங்கி இருந்தது.
அதுவும் உமா, சத்யனை ஒரு சேர காண , காண திருமண பேச்சுக்கள் வீரியம் அடையவே செய்கிறது.
ஆனால் உமா தான், எனக்கு எதுவும் நியாபகம் வர வில்லை, கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று காலத்தை கடத்தி கொண்டு வருகிறாள்.
நாயகி கூட உமாவை ஆதரித்தே பேச, முகுந்தனும், அவனின் தந்தை வேதவாளும் கூட எதுவும் செய்ய முடியவில்லை.
வேதாவை காணும் போது எல்லாம் தன் காட்சியில் கண்ட அந்த கோர முகமே அவளுக்கு கண் முன் வர, அவரிடம் அதிகம் பேசி கொள்வதும் கூட இல்லை உமா.
இதுவே வேதாவை எதோ உறுத்த, திருமணம் வரை அமைதி காப்போம் என்று அவர் இருக்க, இதுவே பின்னாளில் வேதாவில் இருந்து ஒலிவேந்தனை வெளியே கொண்டு வர போகிறது என்பதை அறியாமல் இருந்து விட்ட மடந்தை அவள்.
கடந்த ஒரு வாரமாகவே இதே குழப்பங்கள் அவளுள் ஓடி கொண்டு இருக்க,
இன்று பௌர்ணமி தினத்தன்று, அனைத்து குழப்பமும் தீர, மன நிம்மதி வேண்டும் என்று எண்ணியவளை, தங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று வரும் படி நாயகி தான் கூறி அனுப்பி வைத்தார்.
அதன் படி கொல்லிமலையில் இருக்கும் "அறப்பளீஸ்வரர் திருக்கோவில்" சென்று அங்கு இருக்கும் அறப்பளீஸ்வரரான சிவனை வழிபட்டவள் மனதில் எதோ தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது.
அங்கு இருந்த பாறை ஒன்றில், கூரிய வெட்டு அடையாளம் இருக்க, அது உமாவின் கண்ணையும் மனதையும் உறுத்தவே செய்தது. சத்யனிடம் கேட்டு கொள்ளலாம் என்று எண்ணியவன் அதை தன் கைபேசியில் அதை படம் பிடித்து கொள்ள தவறவில்லை.
திரும்பும் வேளையில் வந்த பாதையில் மழையில் காரணமாக மரம் ஒன்று விழுந்து இருக்க, வேறு பாதையில் வண்டியை திருப்பினாள் உமா.
வழி தோறும் இருக்கும் மரங்களும், செடிகளும் அவளிடம் கதை பேச அழைப்பது போலவும், திடீரென மரங்களுக்கு கண்ணும், வாயும் தோன்றி மறைவது ஒன்றும் தோன்ற துவங்கியது.
இதுவும் கூட தன் மன பிரம்மை என்று எண்ணியவள், எண்ணத்தை தடை செய்யும் படி, வண்டியும் கூட நின்றே விட்டது.
இறங்கி 'என்ன' என்று பார்த்தவளுக்கு, அப்போது தான் புரிந்தது வண்டி பழுதாகி விட்டது என்று.
'என்ன செய்வது' என்பது புரியாமல், உதவியும் கூட கேட்க முடியாத அந்த அடர்ந்த காட்டில் மாட்டி கொண்டவளுக்கு உள்ளூர பயமும், படபடப்பும் அதிகரிக்கவே செய்தது.
கைபேசியில் உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று எண்ணியவள், யாருக்கு முயற்சித்தாலும் அழைப்பு துண்டித்து போக, சத்யனுக்கு மட்டுமே அழைப்பு இணைக்கபட்டது.
"சொல்லு உமா, எங்க இருக்க? காலைல இருந்து ஆளே காணோம்" என்றான் சாதரணமாக.
"சத்யா, நான் இங்க கோவில் ஒன்னுக்கு வந்தேன்...." என்றவள் அனைத்தையும் பதட்டமாக கூற.
"நீ எதுக்குடி கொல்லிமலைக்கு போன...யார கேட்டு போன" என்றான் அவன் பதப்பட்டபடி, மேலும் தொடர்ந்தவன்.,
"சரி நீ அங்கேயே இரு... முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் நான் அங்க வரேன்" என்றவன் உடனே அழைப்பை துண்டித்தும் விட்டான்.
அந்த அடர்ந்த காட்டினால் நடுவில்நின்று கொண்டு, "என்ன செய்வது" என்பது புரியாமல் அவள் இருக்க.,
தூரத்தில் இருந்து ஒரு கழுகு அவளை வட்டம் இட்ட படி இருந்தது, அவளின் கவனத்தை ஈர்த்தது அந்த பச்சை நிறத்தில் இருந்த கழுகு, இமைக்கும் நொடியில் அசுர வேகத்தில் அது அவளை நெருங்க,
பயந்து போய் கைகளால் முகத்தை மூடி கொண்டு நின்று விட்டாள் உமா.
அவளை நெருங்கிய கழுகு, அவளின் முன் அமர்ந்து, தன் மூக்கால் அவளின் பாதத்தை பணிவது போல் லேசாக வருடி விட்டு,
"வாருங்கள் தேவதையே!! உங்கள் இடம் வர இத்துணை தாமதமோ" என்றது அதன் கரகர குரலில்.
கழுகு ஒன்று தன்னை தாக்காமல் இருப்பதே வியப்பு என்றால், அது பேசவும் வேறு செய்வது உமாவை மிரளவே வைத்தது.
அதிலும் சத்யன் அழைப்பது போல, 'தேவதை' என்று அது அழைக்க, சற்று அதிர்ந்து தான் போனால் உமா.
அவளின் மிரட்சியை கண்ட கழுகு,
"பயப்பட வேண்டாம் தேவியே, நாங்கள் அனைவரும் உங்கள் காவலாளிகள்", என்ற கழுகு வானை நோக்கி தன் கீச் குரலால் ஒளி ஒன்றை எழுப்ப.,
சில பருந்துகளும், கிளிகளும், கழுகுகளும் அவள் முன் வந்து நின்றன.. வந்த அத்தனையும் அவள் பாதம் பணிந்து அவளை வணங்க.,
இது அனைத்துமே அவளுக்கு புதிதாக இருந்தாலும், பேசும் பறவையை வாழ்வில் முதன் முறை பார்ப்பவளுக்கு தான் கனவில் இருக்கிறோமோ என்றே தோன்றியது.
தன் தலைக்கு மேல் அனைத்தும் வட்டம் இட, அதிலும் அனைத்தும் ஒரு சேர்ந்து ஒலி ஒன்றை எழுப்ப, அது எப்போதும் அவர்களிடம் இருந்து வரும் ஒலியை போல் இல்லாமல்,
எதோ வரவேற்பு பறை போல் அனைத்தும் ஆனந்தமாய் அவளின் தலையை சுற்றி வட்டம் இட்ட படி ஆடிக்கொண்டு இருக்க.,
முதலில் இருந்த பயம் அவளுக்கு சற்று குறைந்தே இருந்தது, அவைகளின் மகிழ்ச்சி உமாவையும் தொற்றி கொள்ள, சிரித்த படி நின்று இருந்தாள் அவள்.
அந்த பச்சை கழுகு மட்டும், தன் ஆட்டத்தை நிறுத்தி கொண்டு, அவள் முன் வந்து காற்றில் நின்று,
"நாம் இடம் செல்வோம் வாருங்கள் ராணியே" என்றது படு பவ்யமாக தன் சிறகுகளை தாழ்த்திய படி.,
"அதற்கு என்ன கூறுவது" என்று விழித்து கொண்டு நின்றவளை நெருங்கிய கருப்பு கிளி ஒன்று.,
"வா உமா... நாம் இடம் தான்.. ஆபத்து இல்லை" என்றது இனிமையான அதன் குரலில்.
சத்யனிடம் பேசியதையும், அவன் வருவதையும் கூறியவளை பார்த்த அந்த பறவைகள் அனைத்தும்.,
"காட்டின் தொலைந்த வாரிசுகள் திரும்புகிறார்கள்" என்று மத்தளம் கொட்டி அறிவிக்க,
"சத்யன் வருவான் உமா... நீ உள்ளேவா.. அவனுக்கா இந்த காட்டில் வழியா தெரியாது!!!" என்றது அந்த பச்சை கழுகு.
ஏனோ இவைகளை சந்தேகிக்க தோன்றவில்லை உமாவிற்கு 'சரி' என்ற படி அவைகளுடன் காட்டில் தன் முதல் அடியை எடுத்து வைத்தவளுக்கு தோன்றியது அதே காட்சியான பிம்பங்கள்.
வெண்பட்டு முழுவதும் கருப்பு சாயம் பூச பட்டபடி, சில இடங்கள் கிழிந்து, களைத்தும் கிடக்க, மூச்சு திணறினாலும் யாரிடமோ இருந்து பயந்து ஓடி கொண்டு இருந்தனர் உமையாலும், சத்யசீலனும்.
தன் கையை இறுகி பற்றி இருந்தவன் மேல் தன் பார்வையை ஓட விட்டவள்,
கைமுழுதும் கீறல்களும், ரத்த கசிவுகளை நிறைந்து இருக்க, முகத்தில் கூட ஒரு சில கீறல்கள் இருக்க, அதை எதையும் பொருட்படுத்தாதவன் உமையாளின் கரத்தை பிடித்த படி அந்த அடர்ந்த இருண்ட காட்டிற்குள் ஓடி கொண்டு இருந்தான் சத்தியசீலன்.
அவர்களை துரத்தும் குதிரை படை சத்தம் மிக அருகில் கேட்க, இதய துடிப்பும் கூட வெளியில் கேட்கும் அளவிற்கு படபடப்பு இருந்தது இருவருக்குள்ளும்.
ஓடியவர்களின் ஓட்டம் அந்த மலையின் இறுதிக்கு சென்று நிற்க, அங்கிருந்து நீர் ஊற்று எடுத்து அருவியாய் பொங்கி ஓடி கொண்டு இருக்க,
பின்னால் தங்களை கொள்ளவே துரத்தும் படையும், முன்னால் நீர் பெருகும் அருவியுமாய்.
மனதில் காதல் பொங்க, உயிர் காக்க தன்னுடன் வந்த தன் மனையாளையும் கண்ட சத்தியசீலன்.
"உமையாள், என் மீது நம்பிக்கை கொள். வாழ்விலும் சாவிலும் துணை நிற்போம்" என்றவனின் பேச்சு புரியும் முன்பே உமையலுடன் அந்த அருவியில் குதித்தான் சத்தியசீலன்.
அருவியில் குதித்த அடுத்த சில கணங்களில், எங்கோ மிதப்பது போன்று உமையலுக்கு தோன்ற, சத்யசீலனின் கையை இருக பற்றியவள் மயங்கி விட,
அதில் பதை பதைத்த சத்தியசீலன் அவளை தன் கைகளால் ஏந்தியபடி, ஏதோமுடிவற்ற பாதையில் பயணம் ஆனான்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்தவள், சிரம பட்டு கண்களை திறக்க,
இரு மரத்திற்கும் இடையில் ஆலம் விழுதுகளை கொண்டு தொங்கும் ஊஞ்சல் படுக்கையில் அவள் படுத்து இருக்க,
அந்த அடர்ந்த காட்டினால் குளுமை கூட அவளுக்கு போதாமல் போய் விடுமோ என்று இனியவன், அவள் மேனி வருந்தி வியர்வை சிந்தும் முன் அவளின் தலைக்கு மேல் தென்னங்கீற்றை தொங்க விட்டு, அதை காற்றில் மேலும் அசைக்க இரண்டு குரங்குகளை நியமித்து இருந்தான் சத்தியசீலன்.
கண்விழித்தவள் எழுந்து அந்த ஊஞ்சலில் அமர்ந்தவள், சுற்றும் முற்றும் பார்க்க, இவள் கண் விழித்ததை அறிவிக்க,
மத்தளத்தை தன் இரு கால்களாலும் கொட்டிய படி இரண்டு வெள்ளை கரடிகள் அமர்ந்து இருந்தன.
அதன் ஒலி கேட்டு சத்தியசீலன் எங்கு இருந்தோ வர,
"குடிக்க தண்ணீர் வேண்டுமா ராணியே" என்றான் கண்ணில் குறும்பு மின்ன.
வெட்க புன்னகையில் 'வேண்டாம்' என்றவளின் கண்ணில் இருக்கும் மிரட்சியை பார்த்தவன் என்ன என்று வினவ.
"இவை அனைத்தும்... அதிசயமாக உள்ளது" என்றாள் வியந்த படி.
"இவை மற்றவர்களுக்கு தான் விலங்குகள்.. எனக்கு உடன் பிறவா சகோதரர்கள்.. இவர்கள் உடன் தானே நான் வளர்ந்தேன்" என்றான் பெருமையாக.
அதற்குள் பருந்து நான்கு, உணவு பரிமாற பட்ட இலைகளை ஒரு துணியில் வைத்து, அதில் தன் வாயால் கவ்விய படி பறந்து வர, அதையே ஆச்சரியமாக பார்த்தவளை மேலும் திகைக்க வைக்கும் வண்ணம்,
"தங்கள் உணவு இதோ ராணியாரே" என்றன அவை.
பேசும் பருந்துகளை பற்றி கேள்வியும் படாமல் இருக்க, இங்கு அவைகளை பார்த்தவள் மிரள.
தங்க நிறத்தில் பாம்பொன்று மலர்களால் தொடுக்க பட்ட மாலையுடன், உமையாளை நெருங்கி அவள் பாதத்தில் அதை வைத்து விட்டு, சத்தியசீலன் மேல் ஊர்ந்த படி ஏறி அவளின் தலையில் உச்சியில் இருக்கும் கிரீடத்தில் வைரம் போல் மின்னும் ஒரு வெள்ளை கல்லை கக்கி,
"எங்கு சென்றாலும் எங்கள் நினைவுகள் உன்னை பிரியாது" என்றுரைத்து கீழே இறங்கியும் கொண்டது.
பேசும் பம்பை விட, கழுகும் பாம்பும் சண்டையிடாமல் இருப்பது இங்கு மட்டும் தான் போல என்று எண்ணியவள் சத்யசீலனை பார்க்க, அவனோ,
"இங்கு இருக்கும் அனைத்து விலங்குகளுமே பேசும், சிரிக்கும், சிந்திக்கும்.. இந்த மலையின் அதிசயமும் இது தான்".
அதிலும் மயில் ஒன்று, உமையாலுக்கு ஆடைகளை கொண்டு வந்து இருக்க, குரங்கு இன்று அவளுக்கு தேவை படும் மற்ற ஆபரணங்களையும், உடையையும் கொண்டு வந்தது.
"அங்கு இருக்கும் அருவியில் நீராடி விட்டு வா உமையாள்" என்றவனின் பேச்சிற்கு ஏற்ப அவள் எழுந்து செல்ல, அவளை தொடர்ந்த படி நான்கு நரிகள் கையில் வால் ஒன்றுடன் பின் தொடர
"காவலோ" என்றவள் உளம் மகிழ்ந்து சிரித்து, அருவியை அடைய.
அங்கு யானை குட்டி ஒன்று தன் காதுகளை சிறகாக பயன் படுத்தி, அருவியில் பறந்து கொண்டே குளித்து முடித்து, மேலும் அந்த காட்டை பறந்து வருவதை பார்த்தவள்,
"பறக்கும் யானையோ!!, இதுவும் இந்த அதிசய காட்டின் சொத்து போல" என்று எண்ணியவள் குளிக்க அருவியில் கால் வைக்க,
அவள் தோள் தொட்டு, காட்சியில் இருந்து வெளியே கொண்டு வந்தான் சத்யன்... அவனை கண்டதும் தான் இவை அனைத்தும் தான் ஏற்கனவே வாழ்ந்த வாழ்க்கை பிம்பம் என்பது புரிந்தது உமாவிற்கு.
"உனக்கு ஒன்னும் இல்லை தானேடி?" என்றான் பதட்டமாக.
அவள் பதில் ஏதும் கூறும் முன்,
"நாங்கள் இருக்கும் போது எங்கள் ராணிக்கு என்ன நேரும்" என்றது பச்சை கழுகு பெருமையாய்.
அதோடு அந்த கருப்பு கிளி ஒன்று அவனின் தோள் மேல் அமர்ந்து கொண்டு,
"இப்போது தான் இங்கு வர நேரம் கிடைத்ததா சத்யா" என்றது சற்று முக வாட்டத்துடனே.
அதற்குள் பாம்பும், நரியும் என்று அவர்களின் காட்டு குடும்பம் ஒன்று சேர்ந்திட,
இவைகளை பார்த்து முதல் முறை தோன்றிய பிரமிப்பு குறையாமல், இன்றும் இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள் உமா.
நேரமும் மலையை கடந்து இரவை நெருங்கி கொண்டு இருக்க, கிளம்பலாம் என்று சத்யன் முடிவெடுத்து,
"உமா நீ போய் கார்ல உக்காரு... நான் இதோ வந்துடுறேன்" என்றவன் தன் விலங்கு படை சூழல் இருப்பதை கண்டு, லேசாய் சிரித்தவள், 'சரி' என்ற படி காரை நோக்கி நடக்கவும் செய்தாள்.
கிட்ட தட்ட காரை நெருங்கி, அதன் கதவை திறக்க முற்பட்ட நேரம்,
அவள் முன் கிட்டத்தட்ட பன்னிரெண்டு அடி உயரம் உள்ள நாகம் ஒன்று படம் எடுக்க, அதன் ஆக்ரோஷம் அதன் கண்ணிலேயே தெரிய,
அதன் உயரமும், அதன் கோவமும் உமாவை நடுங்கவே வைக்க, பயத்தில் காரை பிடித்த படி அவள் நின்று கொள்ள,
கோவ கனலில் இருந்த அது உமாவை அதே வீரியத்தில் அதை தாக்க முயன்று, தன் வாயை திறந்து, தன் விஷத்தை கக்க நாவை வெளியே எடுத்த நேரம்,
"நிலவேந்தா, உமா இன்னும் எதையும் அறியாதவள். நிறுத்து உன் தாக்குதலை" என்றான் சத்யன் அதே ஆக்ரோஷம் மாறாமல்.
அதற்குள் அவனின் அதிசய விலங்கு படை உமாவை சூழ்ந்து நின்று கொள்ள,
சத்யனும், உமாவை தன் பின்னால் பாதுகாத்து விட்டு, மேலும் தொடர்ந்தான்
"உண்மை நிலவேந்தா, உமா இன்னும் பல விஷயத்தை அறியவில்லை. அறிவதற்குள் அவளுக்கு விபத்தும் ஏற்பட்டு விட, என்னால் எதுவும் செய்ய இயலாமல் போய்விட்டது. என்னை மன்னித்து விடு" என்றான் வருத்தம் தேய்ந்த குரலில்.
அவன் பேச்சின் உண்மை உணர்த்த அந்த சிவப்பு நாகமும், உமாவையும், சத்யனையும் மாறி மாறி பார்த்து விட்டு,
கோவம் கொண்ட கண்ணில் நீர் கோர்த்து கொள்ள, முகமும் கூட வாடி சோகத்தை வெளிக்காட்ட,
உமையாளை நெருங்கி, தன் வாலால் அவளை அணைத்த படி இரண்டு துளி கண்ணீர் சிந்தி விட்டு, மறுபடியும் அந்த அடர்ந்த காட்டிற்குள் மறைந்து கொண்டது.
பின் உமாவை கூட்டிக்கொண்டு கிளம்பினான் சத்யன். நடந்த அனைத்தையும் அசை போட்ட படியே வந்தாள் உமா.. அவளுக்கு தோன்றும் கட்சியும், இங்கு அவள் கண்ட காட்சிகளையும் சேர்த்து வைத்து யோசித்தவளுக்கு,
சில விஷயம் புரிந்தாலும், பல மர்மமாகவே இருந்தது
பேசும் விலங்குகள் இருக்கும் அந்த காட்டில், அந்த சிவப்பு நாகம் மட்டும் ஏன் பேசவே இல்லை... அழுகை கூட வந்து அழுததே தவிர, ஏன் பேச வில்லை? என்று ஒரு மனம் யோசிக்க,
இந்த யுகத்திலும் பேசும் விலங்குகளா... அதுவும் அவள் கண்ட கருப்பு கிளி, சிவப்பு கழுகு என்று இயற்கைக்கு மாறாக இருக்கும் அவைகளின் வண்ணமும் அவளை மேலும் யோசனையில் ஆழ்த்தவே செய்தது.
இவை அனைத்திற்கும் பதில் சத்யனிடமே இருக்கும் என்று அவள் அவனை பார்க்க,
அந்த கல்லுளிமங்கனோ, சாலையில் கண்ணாய் காரை செலுத்தி கொண்டு இருந்தான்.
வீட்டை அடைந்தும் கூட வாய் திறக்காமல் இருக்கும் அவனை கண்டவள், நேரே அவளின் அறைக்கு செல்ல,
இப்போது தான் தன் அறையில் இருக்கும் அந்த விலங்குளின் பொம்மையும், பறக்கும் யானையும் என்று அனைத்தையும் தன் அறையில் வைத்து இருப்பதின் காரணத்தை புரிந்து கொண்டாள் அவள்.. புரிந்தவளுக்கு லேசான புன்னகை எட்டி பார்க்க,
அப்போது விசில் அடித்து கொண்டு ஒரு கையில் கார் சாவியை ஆட்டிய படி வரும் சத்யன் பட,
இவன் தான் இனி பேச வேண்டும். இவன் வாய் திறந்தால் தான் என் குழப்பங்கள் தீரும் என்று எண்ணி உமா காத்திருக்க,
சத்யன் இனியாவது பேசுவானா??!!!"
தொடரும்......
-அர்பிதா
இருந்து இருந்து உமா காத்திருந்த அந்த பௌர்ணமி தினமும் வந்தே விட்டது. ஆனாலும் இன்று வரை சத்யன் கூறிய படி, அவளின் காட்சிகளும் நிற்கவில்லை, அந்த காட்சிகள் கூற வரும் அர்த்தத்தையும் அவளால் முழுதாக புரிந்து கொள்ள முடியவில்லை.
சத்யனிடம் இதை பற்றி கேட்டால், பௌர்ணமி வரை அமைதி காக்கவே சொல்கிறானே தவிர, அவன் பதிலில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை.
இதற்கிடையில் உமா, முகுந்தன் திருமணம் பற்றிய பேச்சுக்கள் தான் அடிக்கடி எழ துவங்கி இருந்தது.
அதுவும் உமா, சத்யனை ஒரு சேர காண , காண திருமண பேச்சுக்கள் வீரியம் அடையவே செய்கிறது.
ஆனால் உமா தான், எனக்கு எதுவும் நியாபகம் வர வில்லை, கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று காலத்தை கடத்தி கொண்டு வருகிறாள்.
நாயகி கூட உமாவை ஆதரித்தே பேச, முகுந்தனும், அவனின் தந்தை வேதவாளும் கூட எதுவும் செய்ய முடியவில்லை.
வேதாவை காணும் போது எல்லாம் தன் காட்சியில் கண்ட அந்த கோர முகமே அவளுக்கு கண் முன் வர, அவரிடம் அதிகம் பேசி கொள்வதும் கூட இல்லை உமா.
இதுவே வேதாவை எதோ உறுத்த, திருமணம் வரை அமைதி காப்போம் என்று அவர் இருக்க, இதுவே பின்னாளில் வேதாவில் இருந்து ஒலிவேந்தனை வெளியே கொண்டு வர போகிறது என்பதை அறியாமல் இருந்து விட்ட மடந்தை அவள்.
கடந்த ஒரு வாரமாகவே இதே குழப்பங்கள் அவளுள் ஓடி கொண்டு இருக்க,
இன்று பௌர்ணமி தினத்தன்று, அனைத்து குழப்பமும் தீர, மன நிம்மதி வேண்டும் என்று எண்ணியவளை, தங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று வரும் படி நாயகி தான் கூறி அனுப்பி வைத்தார்.
அதன் படி கொல்லிமலையில் இருக்கும் "அறப்பளீஸ்வரர் திருக்கோவில்" சென்று அங்கு இருக்கும் அறப்பளீஸ்வரரான சிவனை வழிபட்டவள் மனதில் எதோ தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது.
அங்கு இருந்த பாறை ஒன்றில், கூரிய வெட்டு அடையாளம் இருக்க, அது உமாவின் கண்ணையும் மனதையும் உறுத்தவே செய்தது. சத்யனிடம் கேட்டு கொள்ளலாம் என்று எண்ணியவன் அதை தன் கைபேசியில் அதை படம் பிடித்து கொள்ள தவறவில்லை.
திரும்பும் வேளையில் வந்த பாதையில் மழையில் காரணமாக மரம் ஒன்று விழுந்து இருக்க, வேறு பாதையில் வண்டியை திருப்பினாள் உமா.
வழி தோறும் இருக்கும் மரங்களும், செடிகளும் அவளிடம் கதை பேச அழைப்பது போலவும், திடீரென மரங்களுக்கு கண்ணும், வாயும் தோன்றி மறைவது ஒன்றும் தோன்ற துவங்கியது.
இதுவும் கூட தன் மன பிரம்மை என்று எண்ணியவள், எண்ணத்தை தடை செய்யும் படி, வண்டியும் கூட நின்றே விட்டது.
இறங்கி 'என்ன' என்று பார்த்தவளுக்கு, அப்போது தான் புரிந்தது வண்டி பழுதாகி விட்டது என்று.
'என்ன செய்வது' என்பது புரியாமல், உதவியும் கூட கேட்க முடியாத அந்த அடர்ந்த காட்டில் மாட்டி கொண்டவளுக்கு உள்ளூர பயமும், படபடப்பும் அதிகரிக்கவே செய்தது.
கைபேசியில் உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று எண்ணியவள், யாருக்கு முயற்சித்தாலும் அழைப்பு துண்டித்து போக, சத்யனுக்கு மட்டுமே அழைப்பு இணைக்கபட்டது.
"சொல்லு உமா, எங்க இருக்க? காலைல இருந்து ஆளே காணோம்" என்றான் சாதரணமாக.
"சத்யா, நான் இங்க கோவில் ஒன்னுக்கு வந்தேன்...." என்றவள் அனைத்தையும் பதட்டமாக கூற.
"நீ எதுக்குடி கொல்லிமலைக்கு போன...யார கேட்டு போன" என்றான் அவன் பதப்பட்டபடி, மேலும் தொடர்ந்தவன்.,
"சரி நீ அங்கேயே இரு... முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் நான் அங்க வரேன்" என்றவன் உடனே அழைப்பை துண்டித்தும் விட்டான்.
அந்த அடர்ந்த காட்டினால் நடுவில்நின்று கொண்டு, "என்ன செய்வது" என்பது புரியாமல் அவள் இருக்க.,
தூரத்தில் இருந்து ஒரு கழுகு அவளை வட்டம் இட்ட படி இருந்தது, அவளின் கவனத்தை ஈர்த்தது அந்த பச்சை நிறத்தில் இருந்த கழுகு, இமைக்கும் நொடியில் அசுர வேகத்தில் அது அவளை நெருங்க,
பயந்து போய் கைகளால் முகத்தை மூடி கொண்டு நின்று விட்டாள் உமா.
அவளை நெருங்கிய கழுகு, அவளின் முன் அமர்ந்து, தன் மூக்கால் அவளின் பாதத்தை பணிவது போல் லேசாக வருடி விட்டு,
"வாருங்கள் தேவதையே!! உங்கள் இடம் வர இத்துணை தாமதமோ" என்றது அதன் கரகர குரலில்.
கழுகு ஒன்று தன்னை தாக்காமல் இருப்பதே வியப்பு என்றால், அது பேசவும் வேறு செய்வது உமாவை மிரளவே வைத்தது.
அதிலும் சத்யன் அழைப்பது போல, 'தேவதை' என்று அது அழைக்க, சற்று அதிர்ந்து தான் போனால் உமா.
அவளின் மிரட்சியை கண்ட கழுகு,
"பயப்பட வேண்டாம் தேவியே, நாங்கள் அனைவரும் உங்கள் காவலாளிகள்", என்ற கழுகு வானை நோக்கி தன் கீச் குரலால் ஒளி ஒன்றை எழுப்ப.,
சில பருந்துகளும், கிளிகளும், கழுகுகளும் அவள் முன் வந்து நின்றன.. வந்த அத்தனையும் அவள் பாதம் பணிந்து அவளை வணங்க.,
இது அனைத்துமே அவளுக்கு புதிதாக இருந்தாலும், பேசும் பறவையை வாழ்வில் முதன் முறை பார்ப்பவளுக்கு தான் கனவில் இருக்கிறோமோ என்றே தோன்றியது.
தன் தலைக்கு மேல் அனைத்தும் வட்டம் இட, அதிலும் அனைத்தும் ஒரு சேர்ந்து ஒலி ஒன்றை எழுப்ப, அது எப்போதும் அவர்களிடம் இருந்து வரும் ஒலியை போல் இல்லாமல்,
எதோ வரவேற்பு பறை போல் அனைத்தும் ஆனந்தமாய் அவளின் தலையை சுற்றி வட்டம் இட்ட படி ஆடிக்கொண்டு இருக்க.,
முதலில் இருந்த பயம் அவளுக்கு சற்று குறைந்தே இருந்தது, அவைகளின் மகிழ்ச்சி உமாவையும் தொற்றி கொள்ள, சிரித்த படி நின்று இருந்தாள் அவள்.
அந்த பச்சை கழுகு மட்டும், தன் ஆட்டத்தை நிறுத்தி கொண்டு, அவள் முன் வந்து காற்றில் நின்று,
"நாம் இடம் செல்வோம் வாருங்கள் ராணியே" என்றது படு பவ்யமாக தன் சிறகுகளை தாழ்த்திய படி.,
"அதற்கு என்ன கூறுவது" என்று விழித்து கொண்டு நின்றவளை நெருங்கிய கருப்பு கிளி ஒன்று.,
"வா உமா... நாம் இடம் தான்.. ஆபத்து இல்லை" என்றது இனிமையான அதன் குரலில்.
சத்யனிடம் பேசியதையும், அவன் வருவதையும் கூறியவளை பார்த்த அந்த பறவைகள் அனைத்தும்.,
"காட்டின் தொலைந்த வாரிசுகள் திரும்புகிறார்கள்" என்று மத்தளம் கொட்டி அறிவிக்க,
"சத்யன் வருவான் உமா... நீ உள்ளேவா.. அவனுக்கா இந்த காட்டில் வழியா தெரியாது!!!" என்றது அந்த பச்சை கழுகு.
ஏனோ இவைகளை சந்தேகிக்க தோன்றவில்லை உமாவிற்கு 'சரி' என்ற படி அவைகளுடன் காட்டில் தன் முதல் அடியை எடுத்து வைத்தவளுக்கு தோன்றியது அதே காட்சியான பிம்பங்கள்.
வெண்பட்டு முழுவதும் கருப்பு சாயம் பூச பட்டபடி, சில இடங்கள் கிழிந்து, களைத்தும் கிடக்க, மூச்சு திணறினாலும் யாரிடமோ இருந்து பயந்து ஓடி கொண்டு இருந்தனர் உமையாலும், சத்யசீலனும்.
தன் கையை இறுகி பற்றி இருந்தவன் மேல் தன் பார்வையை ஓட விட்டவள்,
கைமுழுதும் கீறல்களும், ரத்த கசிவுகளை நிறைந்து இருக்க, முகத்தில் கூட ஒரு சில கீறல்கள் இருக்க, அதை எதையும் பொருட்படுத்தாதவன் உமையாளின் கரத்தை பிடித்த படி அந்த அடர்ந்த இருண்ட காட்டிற்குள் ஓடி கொண்டு இருந்தான் சத்தியசீலன்.
அவர்களை துரத்தும் குதிரை படை சத்தம் மிக அருகில் கேட்க, இதய துடிப்பும் கூட வெளியில் கேட்கும் அளவிற்கு படபடப்பு இருந்தது இருவருக்குள்ளும்.
ஓடியவர்களின் ஓட்டம் அந்த மலையின் இறுதிக்கு சென்று நிற்க, அங்கிருந்து நீர் ஊற்று எடுத்து அருவியாய் பொங்கி ஓடி கொண்டு இருக்க,
பின்னால் தங்களை கொள்ளவே துரத்தும் படையும், முன்னால் நீர் பெருகும் அருவியுமாய்.
மனதில் காதல் பொங்க, உயிர் காக்க தன்னுடன் வந்த தன் மனையாளையும் கண்ட சத்தியசீலன்.
"உமையாள், என் மீது நம்பிக்கை கொள். வாழ்விலும் சாவிலும் துணை நிற்போம்" என்றவனின் பேச்சு புரியும் முன்பே உமையலுடன் அந்த அருவியில் குதித்தான் சத்தியசீலன்.
அருவியில் குதித்த அடுத்த சில கணங்களில், எங்கோ மிதப்பது போன்று உமையலுக்கு தோன்ற, சத்யசீலனின் கையை இருக பற்றியவள் மயங்கி விட,
அதில் பதை பதைத்த சத்தியசீலன் அவளை தன் கைகளால் ஏந்தியபடி, ஏதோமுடிவற்ற பாதையில் பயணம் ஆனான்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்தவள், சிரம பட்டு கண்களை திறக்க,
இரு மரத்திற்கும் இடையில் ஆலம் விழுதுகளை கொண்டு தொங்கும் ஊஞ்சல் படுக்கையில் அவள் படுத்து இருக்க,
அந்த அடர்ந்த காட்டினால் குளுமை கூட அவளுக்கு போதாமல் போய் விடுமோ என்று இனியவன், அவள் மேனி வருந்தி வியர்வை சிந்தும் முன் அவளின் தலைக்கு மேல் தென்னங்கீற்றை தொங்க விட்டு, அதை காற்றில் மேலும் அசைக்க இரண்டு குரங்குகளை நியமித்து இருந்தான் சத்தியசீலன்.
கண்விழித்தவள் எழுந்து அந்த ஊஞ்சலில் அமர்ந்தவள், சுற்றும் முற்றும் பார்க்க, இவள் கண் விழித்ததை அறிவிக்க,
மத்தளத்தை தன் இரு கால்களாலும் கொட்டிய படி இரண்டு வெள்ளை கரடிகள் அமர்ந்து இருந்தன.
அதன் ஒலி கேட்டு சத்தியசீலன் எங்கு இருந்தோ வர,
"குடிக்க தண்ணீர் வேண்டுமா ராணியே" என்றான் கண்ணில் குறும்பு மின்ன.
வெட்க புன்னகையில் 'வேண்டாம்' என்றவளின் கண்ணில் இருக்கும் மிரட்சியை பார்த்தவன் என்ன என்று வினவ.
"இவை அனைத்தும்... அதிசயமாக உள்ளது" என்றாள் வியந்த படி.
"இவை மற்றவர்களுக்கு தான் விலங்குகள்.. எனக்கு உடன் பிறவா சகோதரர்கள்.. இவர்கள் உடன் தானே நான் வளர்ந்தேன்" என்றான் பெருமையாக.
அதற்குள் பருந்து நான்கு, உணவு பரிமாற பட்ட இலைகளை ஒரு துணியில் வைத்து, அதில் தன் வாயால் கவ்விய படி பறந்து வர, அதையே ஆச்சரியமாக பார்த்தவளை மேலும் திகைக்க வைக்கும் வண்ணம்,
"தங்கள் உணவு இதோ ராணியாரே" என்றன அவை.
பேசும் பருந்துகளை பற்றி கேள்வியும் படாமல் இருக்க, இங்கு அவைகளை பார்த்தவள் மிரள.
தங்க நிறத்தில் பாம்பொன்று மலர்களால் தொடுக்க பட்ட மாலையுடன், உமையாளை நெருங்கி அவள் பாதத்தில் அதை வைத்து விட்டு, சத்தியசீலன் மேல் ஊர்ந்த படி ஏறி அவளின் தலையில் உச்சியில் இருக்கும் கிரீடத்தில் வைரம் போல் மின்னும் ஒரு வெள்ளை கல்லை கக்கி,
"எங்கு சென்றாலும் எங்கள் நினைவுகள் உன்னை பிரியாது" என்றுரைத்து கீழே இறங்கியும் கொண்டது.
பேசும் பம்பை விட, கழுகும் பாம்பும் சண்டையிடாமல் இருப்பது இங்கு மட்டும் தான் போல என்று எண்ணியவள் சத்யசீலனை பார்க்க, அவனோ,
"இங்கு இருக்கும் அனைத்து விலங்குகளுமே பேசும், சிரிக்கும், சிந்திக்கும்.. இந்த மலையின் அதிசயமும் இது தான்".
அதிலும் மயில் ஒன்று, உமையாலுக்கு ஆடைகளை கொண்டு வந்து இருக்க, குரங்கு இன்று அவளுக்கு தேவை படும் மற்ற ஆபரணங்களையும், உடையையும் கொண்டு வந்தது.
"அங்கு இருக்கும் அருவியில் நீராடி விட்டு வா உமையாள்" என்றவனின் பேச்சிற்கு ஏற்ப அவள் எழுந்து செல்ல, அவளை தொடர்ந்த படி நான்கு நரிகள் கையில் வால் ஒன்றுடன் பின் தொடர
"காவலோ" என்றவள் உளம் மகிழ்ந்து சிரித்து, அருவியை அடைய.
அங்கு யானை குட்டி ஒன்று தன் காதுகளை சிறகாக பயன் படுத்தி, அருவியில் பறந்து கொண்டே குளித்து முடித்து, மேலும் அந்த காட்டை பறந்து வருவதை பார்த்தவள்,
"பறக்கும் யானையோ!!, இதுவும் இந்த அதிசய காட்டின் சொத்து போல" என்று எண்ணியவள் குளிக்க அருவியில் கால் வைக்க,
அவள் தோள் தொட்டு, காட்சியில் இருந்து வெளியே கொண்டு வந்தான் சத்யன்... அவனை கண்டதும் தான் இவை அனைத்தும் தான் ஏற்கனவே வாழ்ந்த வாழ்க்கை பிம்பம் என்பது புரிந்தது உமாவிற்கு.
"உனக்கு ஒன்னும் இல்லை தானேடி?" என்றான் பதட்டமாக.
அவள் பதில் ஏதும் கூறும் முன்,
"நாங்கள் இருக்கும் போது எங்கள் ராணிக்கு என்ன நேரும்" என்றது பச்சை கழுகு பெருமையாய்.
அதோடு அந்த கருப்பு கிளி ஒன்று அவனின் தோள் மேல் அமர்ந்து கொண்டு,
"இப்போது தான் இங்கு வர நேரம் கிடைத்ததா சத்யா" என்றது சற்று முக வாட்டத்துடனே.
அதற்குள் பாம்பும், நரியும் என்று அவர்களின் காட்டு குடும்பம் ஒன்று சேர்ந்திட,
இவைகளை பார்த்து முதல் முறை தோன்றிய பிரமிப்பு குறையாமல், இன்றும் இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள் உமா.
நேரமும் மலையை கடந்து இரவை நெருங்கி கொண்டு இருக்க, கிளம்பலாம் என்று சத்யன் முடிவெடுத்து,
"உமா நீ போய் கார்ல உக்காரு... நான் இதோ வந்துடுறேன்" என்றவன் தன் விலங்கு படை சூழல் இருப்பதை கண்டு, லேசாய் சிரித்தவள், 'சரி' என்ற படி காரை நோக்கி நடக்கவும் செய்தாள்.
கிட்ட தட்ட காரை நெருங்கி, அதன் கதவை திறக்க முற்பட்ட நேரம்,
அவள் முன் கிட்டத்தட்ட பன்னிரெண்டு அடி உயரம் உள்ள நாகம் ஒன்று படம் எடுக்க, அதன் ஆக்ரோஷம் அதன் கண்ணிலேயே தெரிய,
அதன் உயரமும், அதன் கோவமும் உமாவை நடுங்கவே வைக்க, பயத்தில் காரை பிடித்த படி அவள் நின்று கொள்ள,
கோவ கனலில் இருந்த அது உமாவை அதே வீரியத்தில் அதை தாக்க முயன்று, தன் வாயை திறந்து, தன் விஷத்தை கக்க நாவை வெளியே எடுத்த நேரம்,
"நிலவேந்தா, உமா இன்னும் எதையும் அறியாதவள். நிறுத்து உன் தாக்குதலை" என்றான் சத்யன் அதே ஆக்ரோஷம் மாறாமல்.
அதற்குள் அவனின் அதிசய விலங்கு படை உமாவை சூழ்ந்து நின்று கொள்ள,
சத்யனும், உமாவை தன் பின்னால் பாதுகாத்து விட்டு, மேலும் தொடர்ந்தான்
"உண்மை நிலவேந்தா, உமா இன்னும் பல விஷயத்தை அறியவில்லை. அறிவதற்குள் அவளுக்கு விபத்தும் ஏற்பட்டு விட, என்னால் எதுவும் செய்ய இயலாமல் போய்விட்டது. என்னை மன்னித்து விடு" என்றான் வருத்தம் தேய்ந்த குரலில்.
அவன் பேச்சின் உண்மை உணர்த்த அந்த சிவப்பு நாகமும், உமாவையும், சத்யனையும் மாறி மாறி பார்த்து விட்டு,
கோவம் கொண்ட கண்ணில் நீர் கோர்த்து கொள்ள, முகமும் கூட வாடி சோகத்தை வெளிக்காட்ட,
உமையாளை நெருங்கி, தன் வாலால் அவளை அணைத்த படி இரண்டு துளி கண்ணீர் சிந்தி விட்டு, மறுபடியும் அந்த அடர்ந்த காட்டிற்குள் மறைந்து கொண்டது.
பின் உமாவை கூட்டிக்கொண்டு கிளம்பினான் சத்யன். நடந்த அனைத்தையும் அசை போட்ட படியே வந்தாள் உமா.. அவளுக்கு தோன்றும் கட்சியும், இங்கு அவள் கண்ட காட்சிகளையும் சேர்த்து வைத்து யோசித்தவளுக்கு,
சில விஷயம் புரிந்தாலும், பல மர்மமாகவே இருந்தது
பேசும் விலங்குகள் இருக்கும் அந்த காட்டில், அந்த சிவப்பு நாகம் மட்டும் ஏன் பேசவே இல்லை... அழுகை கூட வந்து அழுததே தவிர, ஏன் பேச வில்லை? என்று ஒரு மனம் யோசிக்க,
இந்த யுகத்திலும் பேசும் விலங்குகளா... அதுவும் அவள் கண்ட கருப்பு கிளி, சிவப்பு கழுகு என்று இயற்கைக்கு மாறாக இருக்கும் அவைகளின் வண்ணமும் அவளை மேலும் யோசனையில் ஆழ்த்தவே செய்தது.
இவை அனைத்திற்கும் பதில் சத்யனிடமே இருக்கும் என்று அவள் அவனை பார்க்க,
அந்த கல்லுளிமங்கனோ, சாலையில் கண்ணாய் காரை செலுத்தி கொண்டு இருந்தான்.
வீட்டை அடைந்தும் கூட வாய் திறக்காமல் இருக்கும் அவனை கண்டவள், நேரே அவளின் அறைக்கு செல்ல,
இப்போது தான் தன் அறையில் இருக்கும் அந்த விலங்குளின் பொம்மையும், பறக்கும் யானையும் என்று அனைத்தையும் தன் அறையில் வைத்து இருப்பதின் காரணத்தை புரிந்து கொண்டாள் அவள்.. புரிந்தவளுக்கு லேசான புன்னகை எட்டி பார்க்க,
அப்போது விசில் அடித்து கொண்டு ஒரு கையில் கார் சாவியை ஆட்டிய படி வரும் சத்யன் பட,
இவன் தான் இனி பேச வேண்டும். இவன் வாய் திறந்தால் தான் என் குழப்பங்கள் தீரும் என்று எண்ணி உமா காத்திருக்க,
சத்யன் இனியாவது பேசுவானா??!!!"
தொடரும்......
-அர்பிதா