கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Sspriya

Well-known member
Ks≈110 காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

ஸ்லோகன்

"பிஞ்சி பருவத்திலே என் இதய கூட்டினுள் உன் இதயம் கோர்க்க ஆசை கொண்டேன் பொன்மணியே"!

"இன்று என் வாழ்வில் உன் வாழ்வையும் சேர்த்து வசந்தம் காண கை கோர்ப்போம் வா கண்மணியே "!
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks**46 காதல் கணக்கே வித்தியாசம்

காதலர்கள் சம்யுக்தா மற்றும் சித்

பிரபல அரசியல்வாதி மகள் சம்யுக்தா கல்லூரி மாணவி. நட்பு வட்டத்தில் உள்ள ஒருவன் சித். கல்லூரி கால காதல் கதை என்று நினைக்கிறேன் .

அரசியல் கணக்கு எதிர் கட்சியின் சூழ்ச்சியை அறிய உதவும். அது போல காதலில் வெற்றி பெறவும் காதலை உணரவும் சில காதல் கணக்கு உதவும் என எண்ணி 😍😍காதல் கணக்கே வித்தியாசம் 😍😍என தலைப்பு வைத்து இருக்கலாம்.

((ஒரு ud தான் இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள் எழுத்தாளரே 👍👍🙏🙏🙏)))
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks**47 நெஞ்சம் நிறைந்த காதலே

நாயகி தேஜஸ்வி, வசீகரமான பெயர். ஏதோ ஒரு காரணத்தினால் காதலனை பிரிந்து போக்கிடம் தெரியாமல் அலையும் தேஜா. பேத்தியுடன் தவிக்கும் தாத்தாவிடம் தஞ்சம் அடைகிறாள்.

காதலர்கள் இருவரும் காதல் கீதம் கேட்கும் போது தங்கள் இணையை எண்ணி கவலை கொள்கின்றனர்.. இரு வருடங்களாக பிரிந்து வாழும் போதும் நெஞ்சம் நிறைந்த காதலுடன் தன் இணையின் நினைவிலே தவிப்பதால் 😍😍நெஞ்சம் நிறைந்த காதல் 😍😍என தலைப்பு வைத்து இருக்கலாம். 🙏🙏🙏

((கான்செப்ட் நல்லா இருக்கு கதையை தொடர்ந்து எழுதுங்கள் சகோ, ஒரு ud தான் இருக்கு 🙏🙏🙏)))
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-54 காதலின் மாயவொளி

காதலர்கள் ஆஷ்னா ஆதீஸ்வரன் (குப்பத்து காதலன் கோபுரத்தில் காதலி )

கல்லூரி படிக்க முடியாமல் வேலைக்கு செல்லும் ஆதி, காரில் மாட்டிக்கொண்ட சிறு பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைகிறான். அது முதலே ஆஷ்னாவின் ஆஷ்டான பாதுகாவலனாக இருக்கிறான் ஆதி. நாயகனின் தேவதை ஆகி போனால் ஆஷ்னா. இருவரும் உற்ற தோழர்களாக மாறினர். வாலிப வயதில் இருவரும் காதலை உணர்ந்த நிலையிலும் விசுவாசம் காரணம் எனக்காட்டி மறுக்கும் ஆதி.

அவன் வாழ்வில் உயர வேண்டும் என எண்ணி ஸ்டேட்டஸ் பார்க்கும் தாய்க்காக அவனை ஒதுக்குகிறாள் ஆஷு . விளைவு மனித மிருகத்துக்கு மனைவியாக போகிறாள். பெற்ற தாயின் சூழ்ச்சியால் ஒரு மாத காலம் நரக வாசம். காதலின் மாயவொலி அப்போது கூக்குரல் இட்டதோ என்னவோ, அவளின் நாயகன் வந்தான் மிருக பிடியில் இருந்து மீட்டான்.

அடியாலும் வார்த்தையாலும் காயப்பட்ட அவளின் உள்ளதை மாற்ற முடியாமல் அவதி படுகிறான் ஆதி . இனி அவளின்றி இருப்பது கடினம் என்று உணர்ந்து திருமணம் புரிகிறான்.

விதி செய்த சதியால் துவண்ட காதலியை தன் தூய காதல் கொண்டு மாற்றுகிறான். காதலர்கள் மனதில் கேட்கும் காதலின் மாயவொலியை அலட்சியம் செய்தால் விளைவு அதிபயங்கரம் என எண்ணி கதைக்கு 😍😍காதலின் மாயவொளி 😍😍என்று தலைப்பு வைத்து இருக்கலாம்

((பெண்கள் சந்திக்கும் அவலங்கள் பற்றி அதிகமா பேசி இருகாங்க எழுத்தாளர் 👍👍))
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-2 வரமாய் வந்த காதலே

காதல் ஜோடி அருண் பல்லவி

Arranged marriage ஜோடி இவங்க. நாயகனுக்கு இருட்டுனா பயம், பெண்கள் மேல ஒரு வெறுப்பு காரணம் அவங்கலாம் சுயநலம் உள்ளவர்கள் என நினைக்குறார்., முக்கியமான விஷயம் என்னனா இந்த பயத்தினால் அவனுக்கு நார்மல் feelings வும் வர மாட்டேங்குது. அதனால அவர், தான் திருமணத்திற்கு தகுதி அற்றவன்னு நெனைச்சு கவுன்சிலிங் போறார் .

Dr குடுத்த அறிவுரை படி பொண்ணு கிட்ட தன்னோட பிரச்சனை full ஹா சொல்லிடுறான். நம்ம நாயகி தான் செம mass பா. கதை கேட்டு வேணாம் சொல்லிடுவானு பார்த்தால் அவ அவனுக்காக ரொம்ப பீல் பண்ணுறாள்.

உண்மையான அன்புக்கு ஏங்கும் நாயகனை காக்க வரமாய் வந்தவள் நம் நாயகி எனவே கதைக்கு 😍😍வரமாய் வந்த காதலே😍😍என்று தலைப்பு வைத்து இருக்கலாம்.

(((🤔 அருமையான கதைகளம் எழுத்தாளரே !! தொடர்ந்து எழுதுங்கள் 4ud தான் இருக்கு all the best )))
 
Top